Wednesday, June 01, 2005

தி.நகரில் AnyIndian.com புத்தகக் கடை

இணையத்தில் புத்தகங்களை விற்பதற்கென்று மார்ச் 2005-ல் தொடங்கப்பட்ட AnyIndian.com, சென்னை தி.நகரில் ஒரு புத்தகக் கடையையும் திறந்திருக்கிறது என்பதை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

கடையின் முகவரி பின்வருமாறு:

# 102, No. 57, PMG Complex
South Usman Road
T. Nagar, Chennai - 17

AnyIndian.com புத்தகக் கடை தி.நகர் பஸ் நிலையத்திற்கு அருகில் உள்ளது. ரத்னா பவனுக்கும், கிருஷ்ணவேணி தியேட்டருக்கும் எதிரில் அமைந்துள்ளது.

புத்தகக் கடையின் திறப்பு விழா ஜூன் 1, 2005 (புதன்) மாலை நடைபெற்றது. AnyIndian.com-ன் பங்குதாரரும் தலைமைச் செயல் இயக்குநருமான (CEO) கோபால் ராஜாராம் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் பல பதிப்பாளர்களும் எழுத்தாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழா ஏற்பாடுகளை வெளி ரங்கராஜனும், AnyIndian.com-ன் இந்தியப் பிரிவின் இயக்குநருமான ஹரன் பிரசன்னாவும் செய்திருந்தார்கள்.

சீனி. விசுவநாதன், மனுஷ்ய புத்திரன், காலச்சுவடு அரவிந்தன், தளவாய் சுந்தரம், அம்ஷன் குமார், வெளி ரங்கராஜன், "நிழல்" திருநாவுக்கரசு, பத்ரி சேஷாத்ரி, சங்கரராம சுப்ரமணியன், ஆ.ரா.வேங்கடாசலபதி, மருதா பாலகுருசாமி உள்ளிட்ட பல எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனர். (கலந்து கொண்டவர்களின் முழுமையான பெயர்ப் பட்டியல் கிடைத்ததும் அதை இங்கே சேர்க்கப் பார்க்கிறேன்.)

கோபால் ராஜாராம் வந்தவர்களை வரவேற்று AnyIndian.com பற்றிய அறிமுகத்தைத் தந்தார்.

அடுத்து வெளி ரங்கராஜன் பேசினார். தன் பேச்சில் இணையப் புத்தகக் கடைகளின் தேவையை விளக்கினார். பின்னர் வெளி ரங்கராஜன் புத்தக விற்பனையைத் தொடங்கி வைக்கும் முகமாக சீனி. விசுவநாதன் அவர்களுக்கு முதல் புத்தகத்தை வழங்கினார். சீனி. விசுவநாதன் அவர்கள் முதல் புத்தகத்தைப் பெற்றுக் கொண்டு சிறப்பித்தார்.

கோபால் ராஜாராமும் ஹரன் பிரசன்னாவும் வந்திருந்தவர்களுக்கு நன்றி சொல்ல, விழா இனிதே முடிவுற்றது. விழா தொடக்கத்திற்கு முன்னரும், நிறைவுற்ற பின்னரும், வந்திருந்த நண்பர்கள் ஒருவருடன் ஒருவர் பேசி அளவளாவும் வாய்ப்பையும் இவ்விழா ஏற்படுத்தித் தந்தது.

விழாவில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களுக்கான சுட்டிகளைக் கீழே காணலாம். அனைத்துப் புகைப்படங்களும் இன்னும் கைக்குக் கிடைக்கவில்லை. எனவே, சில புகைப்படங்களை மட்டுமே வலையேற்றியிருக்கிறோம்.

கடையின் பெயர்ப் பலகை

விழாவுக்கு வந்தவர்கள் 1

விழாவுக்கு வந்தவர்கள் 2

விழாவுக்கு வந்தவர்கள் 3

விழாவுக்கு வந்தவர்கள் 4

விற்பனையைத் தொடங்கும் முகமாக வெளி ரங்கராஜன் முதல் புத்தகத்தை சீனி. விசுவநாதனிடம் வழங்குகிறார்

கோபால் ராஜாராமுடன் சீனி.விசுவநாதனும் அவர் புதல்வரும்

பத்ரி சேஷாத்ரியும் சீனி.விசுவநாதனும்

(இடமிருந்து வலமாக) வெளி ரங்கராஜன், தளவாய் சுந்தரம், கோபால் ராஜாராம், அம்ஷன் குமார்

AnyIndian.com-ன் தி.நகர் புத்தகக் கடையில் நேரடியாகப் புத்தகங்களை வாங்குகிற அன்பர்களுக்கு புத்தகத்தின் விலையிலிருந்து 5% சிறப்புத் தள்ளுபடி அளிக்கப்படும். இந்தச் சலுகை எங்களிடம் இருக்கிற புத்தகங்களுக்கு மட்டுமே.

3 comments:

பிச்சைப்பாத்திரம் said...

Congrats & all the best sivakumar.

- suresh kannan

Boston Bala said...

போத்தீஸுக்கு சென்னை சில்க்ஸ் சரியான போட்டி போல நியு புக்லேண்ட்ஸுக்கு நிகரான வளர்ச்சி பெற வாழ்த்துக்கள்.

PKS said...

Friends, Thank you very much for your wishes. Regards, PK Sivakumar