Showing posts with label அ.மார்க்ஸ். Show all posts
Showing posts with label அ.மார்க்ஸ். Show all posts

Tuesday, October 30, 2007

அ.மார்க்ஸின் இரண்டு புத்தகங்கள்

அ.மார்க்ஸ் எழுதிய பின்வரும் இரண்டு புத்தகங்களைச் சமீபத்தில் படித்தேன். அதுபற்றி நண்பர்களுடன் பேசினேன். பேசியவற்றை எழுதுகிற நேரமும் ஆர்வமும் இப்போதைக்கு இல்லை. எப்போதாவது முடியுமா என்றும் தெரியவில்லை. படித்தவற்றைப் பற்றி நல்ல நண்பர்களுடன் பேசிக் கொள்வதோடு இப்போதெல்லாம் மனம் சந்தோஷமடைந்து விடுகிறது. நல்ல உரையாடல்கள் தருகிற சுகத்தில் அடுத்த விஷயம், அடுத்த புத்தகம், அடுத்த சினிமா என்று மனம் சமீபத்து விஷயத்தைத் தாண்டிச் சென்று விடுகிறது. அதைமீறி எழுதுகிற ஆர்வங்கள் அரிதாகவே எழுகின்றன. சோம்பேறித்தனமும் விட்டேற்றித்தனமும் புகுந்துவிட்டிருக்கலாம். நான் எழுதாதது எனக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் நிம்மதி தரலாம் என்று அறிந்திருப்பதால் இது நல்லதுதான்.

1. காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும் - அ. மார்க்ஸ்
2. ஆரியக் கூத்து - அ. மார்க்ஸ்