Thursday, July 03, 2008

ஜூலை 2008 வார்த்தை இதழில்...




  • தாய்நாட்டன்புறு தனையர் இங்கிருமின் (அமெரிக்க இந்திய அணுசக்தி ஒப்பந்தம்) - கோபால் ராஜாராம்
  • சரஸ்வதி வ. விஜயபாஸ்கரன், ஜெயகாந்தன், கே.எம். விஜயன் உள்ளிட்ட பலர் எழுதிய வாசகர் கடிதங்கள்
  • சென்ற இதழில் வெளியான கே.எம். விஜயன் கட்டுரைக்குப் ப. திருமாவேலனின் எதிர்வினை
  • தொலைவெளி நெருக்கம்: கவிதையின் கை - சுகுமாரன்
  • சு. வெங்கடேசனின் 'உ.வே.சா. சமயங் கடந்த தமிழ்' - கோ.ந. முத்துக்குமாரசுவாமி
  • மே தெல்மிசானியின் துன்யாசத் - தமிழில்: அ. கிரிதரன் ராஜகோபாலன்
  • எதைப்பற்றியும் (அல்லது) இது மாதிரியும் தெரிகிறது - வ. ஸ்ரீனிவாசன்
  • தமிழில் தோன்றிய புதுவகை இயக்கமும், சில விமர்சனங்களும் தாத்பரியங்களும் - தமிழவன்
  • பெ.சு. மணியின் நீதிக்கட்சியின் திராவிடன் நாளிதழ் ஓர் ஆய்வு - கல்பனாதாசன்
  • சொப்பு விருந்து - எஸ். ஷங்கர நாராயணன்
  • சுதந்திரப் போராட்டக் களத்திலிருந்து: பாரதியின் பாஞ்சாலி சபதம் சுதேசிப் போராட்டத்தின் புரட்சிக்களம் - வி. வெங்கட்ராமன்
  • விஞ்சை விலாஸின் சுவை - சுகா
  • கலாப்ரியா, தாராகணேசன், கே. பாலமுருகன், பா. சத்தியமோகன், முத்துக்குமார் கவிதைகள்
  • ஆபிதினின் 'உயிர்த்தலம்': பொங்கிவழியும் அங்கதமும் நீண்டு செல்லும் கதையாடலும் - கீரனூர் ஜாகீர் ராஜா
  • பாலரிஷி - சுப்ரபாரதிமணியன்
  • வேணுகோபால் Vs அன்புமணி: தனிமனித அடிப்படை உரிமையும் யதேச்சதிகார ஜனநாயகமும் - கே.எம். விஜயன்
  • நேபாளம் - எச்சரிக்கை இணைந்த எதிர்பார்ப்பு - கோபால் ராஜாராம்
  • ஆர். வைத்தியநாதனின் ஜாதி என்னும் சமூக மூலதனம் (ஏன் கவுண்டர்கள், நாடார்கள், மார்வாரிகள், கச்சிகள் ஆகியோர் சிறப்புடன் வாழ்கிறார்கள்?) - தமிழில்: துகாராம் கோபால்ராவ்
  • குட்டப்பன் கார்னர் ஷோப் - இரா. முருகன்
  • இசையின் விதையும் விதையின் இசையும் - சேதுபதி அருணாசலம்
  • தேடலின் தடங்கள் (பாவண்ணனின் 'துங்கபத்திரை') - எஸ். ஜெயஸ்ரீ
  • ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் - பி.ச. குப்புசாமி

இவற்றோடு-

  • கார்ட்டூன்
  • புதிதாய்ப் படிக்க
  • மாவோயிஸ்டு தியாகு சமீபத்தில் ஜெயகாந்தனைப் பற்றிச் சொன்ன கருத்துகள் தொடர்பான கேள்விகளுக்கு ஜெயகாந்தனின் பதில்கள்

Tuesday, May 27, 2008

வார்த்தை ஜூன் 2008 இதழில்



  • வாசகர் கடிதங்கள்
  • மே இதழில் வெளியான வெளி ரங்கராஜனின் கட்டுரைக்கான கோ.ந. முத்துகுமார சுவாமியின் எதிர்வினை
  • மொசுறு - நாஞ்சில் நாடன்
  • தொலைவெளி நெருக்கம்: சொல்லுக்குள் பாயும் எரிமலைக் குழம்பு - சுகுமாரன்
  • இரண்டே அறைகள் கொண்ட வீடு - யுவன் சந்திரசேகர்
  • சுதந்திரப் போராட்டக் களத்திலிருந்து: தேசியம் வளர்த்த 'சங்கு'வின் எழுச்சியும் வீழ்ச்சியும் - வி. வெங்கட்ராமன்
  • கிரீமி லேயர் பட்டியல் - தமிழில்: ஹரன் பிரசன்னா
  • இடஒதுக்கீடு: மாயைகளால் மறைக்கப்படும் உண்மை - சாவித்திரி கண்ணன்
  • இடஒதுக்கீடு அரசியல் - கே.எம். விஜயன்
  • நோவா (அறிவியல் புனைகதை) - தமிழ்மகன்
  • சாலை விபத்துகளும் தமிழ் சினிமாவும் - வெளி ரங்கராஜன்
  • ·பிரான்சில் என்ன நடக்கிறது - நாகரத்தினம் கிருஷ்ணா
  • ஊடுருவிப் பார்க்கும் கண்கள் (பாவண்ணனின் நதியின் கரையில்) - எஸ். ஜெயஸ்ரீ
  • எதைப் பற்றியும் அல்லது இதுமாதிரியும் தெரிகிறது. வ. ஸ்ரீனிவாசன்
  • அனிதா. ச. முத்துவேல், வே. முத்துக்குமார், மதுமிதா, க. அம்சப்பிரியா, செந்தமிழ் மாரி கவிதைகள்
  • மாற்றம் - பொன்னையன்
  • குட்டப்பன் கார்னர் ஷோப் - இரா. முருகன்
  • ஒலிம்பிக் பந்தம்: அரசியலும் தேசப்பற்றும் - மு. இராமனாதன்
  • ஏ.ஜே.பி. தைலரின் மார்க்சியம் ஒரு மீள்நோக்கு - தமிழில்: மணி வேலுப்பிள்ளை
  • ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் - பி.ச. குப்புசாமி

இவற்றோடு -

  • "அகண்ட பாரதம், ஒரே கலாசாரம், ஹிந்துத்துவம் கொண்டு எழுதிய விஷ்ணுபுரம், உலகத்திலேயே உயர்ந்த கொள்கைகளைத் தந்த பொதுவுடைமையைக் கீழ்த்தரமாக விமர்சித்து எழுதிய பின்தொடரும் நிழலின் குரல் என்ற புத்தகம் - இவற்றை எழுதிய ஜெயமோகனுக்கு ரூபாய் இரண்டு லட்சம் கொடுத்து உதவியது தவறு என்பது என் கருத்து. தங்கள் கருத்து என்ன?"

    "இந்தியாவில் கம்யூனிச ஆட்சி ஏற்பட்டால் எப்படி இருக்கும்?"

    "தங்களுக்குப் பிடித்த கதையான குருபீடம் எழுத நேர்ந்ததன் பின்னணி என்ன?"


    - உள்ளிட்ட பல கேள்விகளுக்கு ஜெயகாந்தனின் கூர்மையான நேர்படப் பேசும் பதில்கள்.

  • நிகழ்வு: தமிழ்சேவைக்கு இயல்விருது - அ. முத்துலிங்கம்
  • புதிதாய்ப் படிக்க - நூல் அறிமுகங்கள்
  • கார்ட்டூன்
  • தலையங்கம் - இடஒதுக்கீடு குறித்து பி.கே. சிவகுமார் எழுதிய விரிவான கட்டுரை

Saturday, May 03, 2008

வார்த்தை மே-2008 இதழில்


ஹொகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்: நடிகர் சங்கக் கூச்சலும் சட்டத்தின் நடைமுறையும் - கே.எம். விஜயன்

நகரும் கண்டத்தில் தமிழை நகர்த்தும் தமிழர் - முருகபூபதி

பழைய பட்டணத்தின் மனிதக் குறிப்புகள் - கே. பாலமுருகன்

தமிழில் தேவாரம்: பின்தொடரும் நிழல்கள் - வெளி ரங்கராஜன்

ஆர்தர் சி. கிளார்க்: அறிவியல் புனைவும் முன்னோக்கிய பார்வையும் - துகாராம் கோபால்ராவ்

கட்டியங்காரன் - ஆர்தர் சி. கிளார்க் (தமிழில்: துகாராம் கோபால்ராவ்)

அரவக்கோனின் இந்திய மண்ணில் ஓவிய நிகழ்வுகள்: புத்தக விமர்சனம் - மோனிகா

கவிஞர் கல்பற்றா நாராயணன்: ஆளுமையும் கவிதைகளும் - ஜெயமோகன்

சுகுமாரன், தமிழச்சி தங்கபாண்டியன், வா. மணிகண்டன், பிரபாகரன் ஆகியோரின் கவிதைகள்

உயிர்சுழி - சுப்ரபாரதி மணியன்

வார்த்தை இதழ் வெளியீட்டுவிழா: குறிப்புகளும் புகைப்படங்களும் - ரா. பிரகாஷ்

வார்த்தை இதழை வெளியீட்டு ஜெயகாந்தன் ஆற்றிய உரை

எதைப் பற்றியும் அல்லது இதுமாதிரியும் தெரிகிறது - வ. ஸ்ரீனிவாசன்

யுகசந்தி - சுகா

குட்டப்பன் கார்னர் ஷோப் - இரா. முருகன்

நிழலின் குரல் - ஜெயந்தி சங்கர்

அமெரிக்கா என்றொரு அற்புதம் (ஒரு தேர்தல், ஒரு மதத்தலைவர், ஒரு திரைப்படம்) - கோபால் ராஜாராம்

ஏ.ஜே.பி. தைலர் எழுதிய மார்க்சியம் ஒரு மீள்நோக்கு - தமிழில்: மணி வேலுப்பிள்ளை

ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் - பி.ச. குப்புசாமி

- இவற்றோடு

ஜெயகாந்தன் பதில்கள்
வாசகர் கடிதங்கள்
புதிதாய்ப் படிக்க
காலச்சுவடு நூறு
கார்ட்டூன்
வியனுலகு அனைத்தையும் அமுதென நுகர்வோம் - தலையங்கம்

Thursday, April 03, 2008

வார்த்தை ஏப்ரல் 2008 இதழ் - ஒரு முன்னோட்டம்


"உடன்படாதோரை வெறுக்காத மரபு, மாற்றுக் கருத்துகளை மதிக்கிற நாகரீகம், கண்ணியமான உரையாடல்கள் மூலமே நெருங்க முடியுமென்ற புரிதல், பொதுநோக்கத்திற்கான சமரசங்கள் மூலமே முன்னகர முடியுமென்ற ஜனநாயகப் பண்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட எவரும் 'வார்த்தை'யில் எழுதலாம்." - தலையங்கத்தில் அழைக்கிறார் இணையாசிரியர் பி.கே. சிவகுமார்.

"ஒருகாலத்தில் உங்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட 'திராவிட இயக்கங்களோடு' தற்போது சமரசமாகிவிட்டீர்களா? தமிழக முதல்வரோடு உங்களை ஒரே மேடையில் பார்க்க முடிகிறதே? இது காலத்தின் கட்டாயமா அல்லது முதுமையில் அனைவரோடும் 'சஹிருதயமாக' இருப்போம் என்பதாலா?"

உங்களோடு சமகாலத்தில் வாழ்ந்து மறைந்துள்ள எழுத்தாளர் சுஜாதா பற்றி உங்களது கருத்து?


- உள்ளிட்ட பல கேள்விகளுக்கு ஜெயகாந்தனின் பதில்கள்.

"எங்களது போராட்டம் எங்களுடைய மக்களின் துயரத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்குத்தானே தவிர, மற்றவர்களுக்குத் துயரத்தை விளைவிக்க அல்ல." - பொருத்தமான நேரத்தில் துகாராம் கோபால்ராவின் மொழிபெயர்ப்பில் வெளியாகியிருக்கும் தலாய்லாமாவின் நோபல் பரிசு ஏற்புரை.

"நின்று கால் நனைத்தால் குனிந்து செம்பவள நகம் பார்க்கலாம். மேலும் குனிந்தால் முகம் பார்க்கலாம். காவிரிக்குக் கொள்ளிடம் போல, பழையாற்றுக்கு நாகர்கோவில்" - ஐயம் இட்டு உண் சிறுகதையில் நாஞ்சில் நாடன்.

"புதிய படத்தொகுப்பு முறை வேலைச் சிரமத்தை எளிதாக்கியிருக்கின்றதே அன்றி கதைசொல்லலில் நேரியலற்ற (Non-linear) தன்மையை அறிமுகப்படுத்தவில்லை. ஒளிப்பதிவிலும் வெளிப்புறப் படப்பிடிப்பு என்பது அரங்கத்தின் இன்னொருவிதமான தன்மையையே முன்வைத்தது. யதார்த்தமான வாழ்க்கையும் அதன் சூழலும் அரிதாகவே பதிவாயின. இலக்கத் தொழில் நுட்பம் (Digital Technology) எதையும் திரையில் நிகழ்த்தும் மாயத்தன்மை கொண்டிருந்தும் அது சண்டைக் காட்சிகளில் நடிகர்கள் தொங்கி பல்டியடிக்கும் கயிறுகளை அழிப்பதற்கே அதிகம் பயன்பட்டு வருகிறது. நுட்பங்கள் எப்போதும் அதனை இயக்குபவரின் கட்டளைகளையே செய்து முடிக்கின்றன. அந்தவகையில் திரைப்படத்துறையில் நுட்பரீதியாக நமக்கு இருக்கிற சாத்தியங்கள் முழுமையாகப் பயன்வேண்டுமெனில் மாற்றம் கதையின் மூலத்தில் நிகழ வேண்டும்" - அண்மைக் காட்சிகளின் முக்கியத்துவத்தையும் அது பிற மொழிகளிலும் தமிழிலும் பயன்படுத்தப்படும் விதத்தையும் ஆராய்கிற அறிவுபூர்வமான "முகங்களின் திரைப்படம் - காட்சிமொழிக் குறிப்புகள்" என்கிற ஒளிப்பதிவாளர் செழியனின் கட்டுரை.

"இடை அசைய நடந்து வந்து வாசலைப் பார்த்தாள். அவள் அழகு முழுக்க வெளிப்படுவது அப்போதுதான். அது அவளுக்குத் தெரியும். அவள் உடுத்தியிருந்த கறுப்பு பூப்போட்ட மஞ்சள் சேலை தனியாக உயிர்பெற்றதுபோல சரசரவென்று ஆடியது." - மன்மதன் சிறுகதையில் அ. முத்துலிங்கம்.

"இப்படிப்பட்ட கண்காட்சிக் கொடுமைகளின் உச்சம், 1906-ஆம் ஆண்டு ஓடா பெங்கா (Ota Benga) என்ற ஒரு காங்கோ பிக்மி, நியூயார்க் நகரின் ப்ராங்க்ஸ் (Bronx) மிருகக்காட்சி சாலையில் ஒரு காட்சிப்பொருளாக ஓர் உராங் உட்டான் குரங்குடன் ஒரே கூண்டில் அடைத்து வைக்கப்பட்டதுதான்." - இசையில் நனையும் காடு கட்டுரையில் சேதுபதி அருணாசலம்.

"அம்மா தன்விரலால் புழுதியில் எதையோ ரகசியமாகக் கிறுக்கி நான் அறியாமல் அழித்துக் கொண்டிருந்தாள். அம்மாவிற்கு எழுபது வயது முடிந்துவிட்டிருக்கிறது. அவள் தன் வயதை மறந்து சிறுமியைப் போலத் தெருவில் உட்கார்ந்து, விரலால் கோலம் எழுதி அழிப்பது வியப்பாக இருந்தது. அம்மாவின் விரல்கள் புழுதியை ஆசையோடு கோதிக் கொண்டிருந்தன." - திரும்பிச் செல்லும் மலைகள் சிறுகதையில் எஸ். ராமகிருஷ்ணன்.

சமீபத்தில் மலேஷியாவில் நடந்து முடிந்த தேர்தல் குறித்தும், இனம் சார்ந்த மலேஷிய அரசியல் கட்சிகளின் வரலாற்றையும் விரிவாக அறிமுகப்படுத்தும் ரெ. கார்த்திகேசுவின் மலேசியாவில் புதிய தொடக்கங்கள் என்ற முக்கியமான கட்டுரை.

"முருங்கையில இருக்கற அழகே தனிம்மா. எப்ப பார்த்தாலும் பச்சைப் பசேல்னு அழகான இலைகள். பூக்கற சமயத்தில் கிளைமுழுக்க வெள்ளித்தோடுகள் தொங்கறமாதிரி இருக்க்கும். அந்தப் பூ எவ்வளவு மணமா இருக்கும் தெரியுமா? காய் புடிச்சி தொங்க ஆரம்பிச்சிட்டா, பாக்க பாக்க கண்ணுக்கே குளிர்ச்சியாக இருக்கும். இதுக்காக ரொம்ப நாள் காத்திருக்கணும்னு இல்ல. ஒரு ரெண்டு வருஷத்துல மடமடன்னு வளர்ந்து நின்னுடும்." - கூடு சிறுகதையில் பாவண்ணன்.

"சுஜாதாவிற்கு பொருத்தமில்லாத ஒரு பாப்புலாரிடி இருக்கிறது. ஆனால் பொருத்தமான பாப்புலாரிடி மறுக்க்கப்படுகிறது. ஜெயமோகன் ஒருவர்தான் அவர்பற்றி சீரியஸ் தளங்களில் எழுதுகிறார்." - எதைப் பற்றியும் (அல்லது) இதுமாதிரியும் தெரிகிறது என்ற தலைப்பில் பல விஷயங்களைத் தொட்டுப் பேசும் வ. ஸ்ரீனிவாசன் கட்டுரை.

"எனது சிந்தனைகளை வரிசைப்படுத்தி எழுதவேண்டுமென்று நினைப்பதில்லை, அப்படிச் சொல்வதால் ஒழுங்கின்றி எதையாவது சொல்ல நினைக்கிறேன் என்று பொருளல்ல. அதாவது ஒழுங்கற்ற வரிசையில் என் சிந்தனைகளை நிறுத்துவதேகூட, ஒருவித ஒழுங்கின் அடிப்படையிலேயே ஆகும்." - ப்லேஸ் பஸ்க்காலின் சிந்தனாவாத ஆளுமையை அறிமுகப்படுத்தும் நாகரத்தினம் கிருஷ்ணாவின் கட்டுரை.

தமிழச்சி தங்கபாண்டியன், சல்மா, நிர்மலா, வ.ஐ.ச. ஜெயபாலன், ஹரன் பிரசன்னா, பி.கே. சிவகுமார் எழுதிய கவிதைகள்.

கவிதைத் தொகுப்புகள் நூலகங்களுக்கு வாங்கப்படாதது குறித்தும் அவை வாங்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் கவிஞர்கள் சார்பாக வலியுறுத்தும் "கவிதைக்குக் குரல் கொடுப்போம்" என்ற லதா ராமகிருஷ்ணன் கட்டுரை.

பா. விசாலம் எழுதிய மெல்லக் கனவாய்ப் பழங்கதையாய் நாவலுக்கு வே. சபாநாயகம் எழுதிய புத்தக விமர்சனம்.

"ராஜேஸ்வரி அக்கா இல்லாத சமயத்தில் ஆகாயப் பந்தலிலே பாடல் ஒலிபரப்பானால் அம்மா உடனே என்னிடம் டிரான்ஸிஸ்டரைக் கொடுத்து, 'போ... போயி ராஜேஸ்வரி அக்காட்ட கொண்டு குடு, சந்தோஷப்படுவா' என்பாள். நான் உற்சாகமாக ஓடிப்போய, 'அக்கா... பந்தல் போடுது பந்தல் போடுது' என்பேன். ராஜேஸ்வரி அக்கா முகமெல்லாம் மலர்ந்து என்னையும் டிரான்ஸிஸ்டரையும் வாரியணைத்துப் பாடலைக் கேட்டு மகிழ்வாள்." - சில மனிதர்கள், சில பாடல்கள் கட்டுரையில் சுகா.

"ரமேஷ் தன் மனதிற்குள் 'நான் ராஜாளி! நான் ராஜாளி..." என்று திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்த்துக் கொண்டான். அவனுக்கு வானத்தில் பறப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது." - இழப்பீடு சிறுகதையில் இறையன்பு.

ஜெயமோகன் மீதான நடிகர் சங்கம் தடை சரியா? - சட்ட வல்லுனர் கே.எம். விஜயனின் கட்டுரை.

"சாவு விஷயத்தில் அதீத உற்சாகம் காட்டுவதில் மலையாளிகளை அடித்துக் கொள்ள வேறே ஆள்கூட்டம் உலகமெங்கிலும் தேடினாலும் கிட்டாது." - குட்டப்பன் கார்னர் ஷோப் கட்டுரையில் இரா. முருகன்.

பொருள் பதிந்த சமரசம் என்ற தலைப்பில் சுஜாதாவுக்கு கோபால் ராஜாராம் எழுதிய அஞ்சலி.

தமிழ் தமிழர் தமிழவேள் என்ற தலைப்பில் சிங்கப்பூரில் தமிழின் நிலை குறித்து எம்.கே. குமார் எழுதிய கட்டுரை.

ஏ.ஜே.பி. தைலர் எழுதி மணி வேலுப்பிள்ளை மொழிபெயர்க்கும் "மார்க்சியம் ஒரு மீள்நோக்கு".

"முடிந்தால் நமது மாணவர்களை மகாத்மா காந்தி மாதிரியும் மகாகவி பாரதி மாதிரியும் அமரத்துவம் வாய்ந்தவர்களாக ஆக்கிவிடுவது; அது இயலாத பட்சத்தில், குறைந்தபட்சம் அந்த மாணவர்கள் மீது அன்பாவது செலுத்துவது!" - "ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியரின் குறிப்புகள்" கட்டுரையில் வார்த்தை இதழின் ஆசிரியர் பி.ச. குப்புசாமி.

Tuesday, April 01, 2008

வார்த்தை மாதஇதழ்

படித்துவிட்டீர்களா? உங்களின் ஒளிவுமறைவற்ற விமர்சனங்களை எதிர்பார்க்கிறோம்.

Thursday, March 27, 2008

எனிஇந்தியனின் வார்த்தை இதழ், நான்கு புதிய புத்தகங்கள் வெளியீடு - அழைப்பிதழ்

அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்!


நாள்:
ஏப்ரல் 6, 2008 (ஞாயிறு) மாலை ஆறு மணி

இடம்:
தக்கர்பாபா வித்யாலயா,
58, வெங்கட் நாராயணா சாலை,
தி. நகர், சென்னை - 17.


வரவேற்புரை:
பி.கே. சிவகுமார்

அரவக்கோன் எழுதிய "இந்திய மண்ணில் ஓவிய நிகழ்வுகள்" புத்தக வெளியீடு
வெளியிட்டு உரையாற்றுபவர்: இரா. முருகன்
பெற்றுக் கொள்பவர்: ஒளிப்பதிவாளர் செழியன்

பாவண்ணன் எழுதிய "துங்கபத்திரை" புத்தக வெளியீடு
வெளியிடுபவர்: பாலசுப்ரமணியன்
பெற்றுக் கொண்டு உரையாற்றுபவர்: மணா

வெங்கட் சாமிநாதன் எழுதிய "தமிழகக் கலைகளின் இன்றைய முகங்கள்" புத்தக வெளியீடு
வெளியிட்டு உரையாற்றுபவர்: கே.எஸ். சுப்ரமணியன்
பெற்றுக் கொள்பவர்: சுகா (சுரேஷ் கண்ணன்)

ந. முருகானந்தம் தொகுத்த "அமெரிக்காவில் ஜெயகாந்தன்" புத்தக வெளியீடு
வெளியிட்டு உரையாற்றுபவர்: நாஞ்சில் நாடன்
பெற்றுக் கொள்பவர்: தொகுப்பாசிரியரின் தாயார் ஞானாம்பாள் நடராஜன்

வார்த்தை மாத இதழ் வெளியீடு
வெளியிட்டு உரையாற்றுபவர்: ஜெயகாந்தன்
பெற்றுக் கொள்பவர்: பி.ச. குப்புசாமி

நன்றியுரை:
ஹரன் பிரசன்னா

தொடர்புக்கு:
எனிஇந்தியன்.காம்
பதிப்பாளர் - புத்தக விற்பனையாளர்
எண் 102, பி.எம்.ஜி. காம்ப்ளெக்ஸ்
57, தெற்கு உஸ்மான் சாலை,
தி. நகர்,
சென்னை - 600 017.
தொலைபேசி: (91)-44-24329284
மின்னஞ்சல்: customerservice [at] anyindian [dot] com

Thursday, March 20, 2008

வார்த்தை - ஏப்ரல் 2008 இதழில்...

தெளிவுற அறிந்திட, தெளிவுபெற மொழிந்திட "வார்த்தை". ஏப்ரல் 2008 முதல் புதிய மாத இதழ். எனிஇந்தியன்.காம் குழும வெளியீடு.

முதல் இதழை அலங்கரிப்பவர்கள்:

  • லதா ராமகிருஷ்ணன்
  • நிர்மலா
  • தமிழச்சி தங்கபாண்டியன்
  • சல்மா
  • ஜெயகாந்தன்
  • வே. சபாநாயகம்
  • நாஞ்சில் நாடன்
  • அ. முத்துலிங்கம்
  • ரெ. கார்த்திகேசு
  • வ.ஐ.ச. ஜெயபாலன்
  • வ. ஸ்ரீனிவாசன்
  • எஸ். ராமகிருஷ்ணன்
  • பாவண்ணன்
  • இரா. முருகன்
  • நாகரத்தினம் கிருஷ்ணா
  • கே.எம். விஜயன்
  • செழியன்
  • இறையன்பு
  • சுகா
  • துகாராம் கோபால்ராவ்
  • மணி வேலுப்பிள்ளை
  • ஜீவா (ஓவியங்கள்)
  • சேதுபதி அருணாசலம்
  • எம்.கே. குமார்
  • ஹரன் பிரசன்னா
  • பி.ச. குப்புசாமி
  • கோபால் ராஜாராம்
  • பி.கே. சிவகுமார்

"வார்த்தை" வெளிவருவதை முன்னிட்டுச் சிறப்புச் சலுகையாக சந்தா விலைகள் குறிப்பிட்ட காலத்திற்குக் குறைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றின் விவரங்களைக் கீழே காணலாம்.

வார்த்தை இதழுக்கு ஏற்கனவே சந்தா செலுத்தியவர்களுக்கும் இச்சலுகை கொடுக்கப்படும்.

சந்தாவை எனிஇந்தியன்.காம் இணையதளம் வழியாக, கடனட்டை (கிரிடிட் கார்டு), வங்கி வழியாகப் பணம் செலுத்துதல் (பாங்க் ட்ரான்ஸ்ஷபர்), மணியார்டர், வரைவோலை (டிமாண்ட் டிராப்ட்) ஆகிய முறைகளில் செலுத்த இயலும்.

வார்த்தை மாத இதழ் - ஓராண்டு இந்தியச் சந்தா:

200 இந்திய ரூபாய் மதிப்புள்ள இந்தச் சந்தா, சிறப்புச் சலுகையாக, ஏப்ரல் 30, 2008 வரை இந்திய ரூபாய் 100-க்கும், மே 2008 முழுவதும் இந்திய ரூபாய் 125-க்கும், ஜூன்-2008 முழுவதும் இந்திய ரூபாய் 150-க்கும் கிடைக்கும். ஜூன் 2008க்கு அப்புறம் சந்தாவில் சிறப்புச் சலுகைகள் இல்லை.

இச்சலுகையைப் பெற, http://www.anyindian.com/product_info.php?products_id=104521 என்னும் முகவரிக்குச் செல்லவும்.

வார்த்தை மாத இதழ் - இரண்டு ஆண்டுகள் இந்தியச் சந்தா:

375 இந்திய ரூபாய் மதிப்புள்ள இந்தச் சந்தா, சிறப்புச் சலுகையாக, ஏப்ரல் 30, 2008 வரை இந்திய ரூபாய் 200-க்கும், மே 2008 முழுவதும் இந்திய ரூபாய் 240-க்கும், ஜூன்-2008 முழுவதும் இந்திய ரூபாய் 275-க்கும் கிடைக்கும். ஜூன் 2008க்கு அப்புறம் சந்தாவில் சிறப்புச் சலுகைகள் இல்லை.

இச்சலுகையைப் பெற, http://www.anyindian.com/product_info.php?products_id=104522 என்னும் முகவரிக்குச் செல்லவும்.

வார்த்தை மாத இதழ் - ஓராண்டு வெளிநாட்டுச் சந்தா:

1000 இந்திய ரூபாய் மதிப்புள்ள இந்தச் சந்தா, சிறப்புச் சலுகையாக, ஏப்ரல் 30, 2008 வரை இந்திய ரூபாய் 500-க்கும், மே 2008 முழுவதும் இந்திய ரூபாய் 625-க்கும், ஜூன்-2008 முழுவதும் இந்திய ரூபாய் 750-க்கும் கிடைக்கும். ஜூன் 2008க்கு அப்புறம் சந்தாவில் சிறப்புச் சலுகைகள் இல்லை.

இச்சலுகையைப் பெற, http://www.anyindian.com/product_info.php?products_id=104523 என்னும் முகவரிக்குச் செல்லவும்.

வார்த்தை மாத இதழ் - இரண்டு ஆண்டுகள் வெளிநாட்டுச் சந்தா:

1900 இந்திய ரூபாய் மதிப்புள்ள இந்தச் சந்தா, சிறப்புச் சலுகையாக, ஏப்ரல் 30, 2008 வரை இந்திய ரூபாய் 1000-க்கும், மே 2008 முழுவதும் இந்திய ரூபாய் 1250-க்கும், ஜூன்-2008 முழுவதும் இந்திய ரூபாய் 1500-க்கும் கிடைக்கும். ஜூன் 2008க்கு அப்புறம் சந்தாவில் சிறப்புச் சலுகைகள் இல்லை.

இச்சலுகையைப் பெற, http://www.anyindian.com/product_info.php?products_id=104524 என்னும் முகவரிக்குச் செல்லவும்.

எனிஇந்தியன்.காமுக்கும் "வார்த்தை" இதழுக்கும் ஆதரவு அளித்துவரும் நண்பர்களுக்கு நன்றிகள்.