Wednesday, March 01, 2006

தினத்தந்தியில் அட்லாண்டிக்குக்கு அப்பால்

மார்ச் 1, 2006 (புதன்) தினத்தந்தியில் பி.கே. சிவகுமார் எழுதிய அட்லாண்டிக்குக்கு அப்பால் புத்தகத்தைப் பற்றிய விமர்சனம் வெளியாகியுள்ளது.

"தலைப்பைப் பார்த்துவிட்டு இது அட்லாண்டிக் மகாசமுத்திரம் பற்றிய ஆராய்ச்சி நூல் என்று எண்ணிவிட வேண்டாம். பல்வேறு பொருள்கள் பற்றிய கட்டுரைகள் இதில் இடம் பெற்றுள்ளன என்றாலும், நவீன இலக்கியம் பற்றியும், எழுத்தாளர்கள் பற்றியும் விவாதிக்கும் கட்டுரைகளே முக்கிய பங்கு வகிக்கின்றன.

புதுமைப்பித்தன் பற்றியும், ஜெயகாந்தன் பற்றியும் அலசும் கட்டுரை சிந்திக்க வைக்கிறது.

கதை - கட்டுரைகள், எழுத்தாளர்கள் பற்றிய இலக்கிய சர்ச்சைகளில் ஆர்வம் உள்ளவர்களை இந்நூல் பெரிதும் கவரும்."



நன்றி: தினத்தந்தி

No comments: