Wednesday, April 14, 2004

அம்மா

சித்திரை அமாவாசையில்
நான் பிறந்தேன் என்றார்

புதன்கிழமை
சாயங்காலம் என்றார்

ஆபரேஷன் செய்து
வெளியில் எடுத்ததார்கள் என்றார்

நல்ல எடையும்
உயரமும் கொண்டிருந்தேனென்றார்

பிறக்கும்போதே
கருகருவென்று
நிறையமுடி என்றார்

பிறந்தவுடன்
கணீரென்று அழுதேனென்றார்

அப்பாக்கும்
தாத்தா பாட்டிகளுக்கும்
அளவிலாத சந்தோஷமென்றார்

நர்சுகள் தூக்கி
என்னைக் கொஞ்சுவர் என்றார்

தொந்தரவு செய்யாமல்
தூங்கிக் கொண்டிருப்பேன் என்றார்

குழந்தையில்
என்ன செய்தேன் என்றால்
பலர் ரசிக்கக்
குறும்புகள் செய்தேன் என்றார்

கர்ப்பக் காலமும்
ஆபரேஷனும் கொணர்ந்த
வலிகளைச் சொன்னதுமில்லை
நான் கேட்டதுமில்லை

Written On: Apr 14, 2004

No comments: