Tuesday, April 20, 2004

கற்றுக் கொடுக்கும் குழந்தைகள்

கற்றுக் கொடுக்கும் குழந்தைகள்

- பி.கே. சிவகுமார்

நண்பர் வீட்டில் வாங்கி
நட்டுவைத்த ரோஜாச் செடி
எப்போது பூக்கு மென்ற
ஏக்கம் போச்சு

எத்தனை இலை
துளிர்க்கிறதென தினம்
எண்ணி மகிழ்கின்ற
குழந்தைகளைப் பார்த்தபின்னே

(2003 கோடையில் எழுதப்பட்டது)

No comments: