Friday, July 23, 2004

பத்தாண்டுகள்

நேற்றைய கனவைப் போலிருக்கிறது
நாம் முதலில் சந்தித்தது

இன்றைய தென்றலின்
வாசமிருக்கிறது நம் சுவாசத்தில்

நாளைய சுவடுகளின்
நிச்சயமிருக்கிறது நம் நம்பிக்கையில்

வறட்சியிலும் மழையிலும்
கோடையிலும் குளிரிலும்
பத்தாண்டுகளாக
நாம் மலர்ந்திருப்பதை
வேறெப்படிச் சொல்வது

No comments: