Sunday, August 14, 2005

இந்தியச் சுதந்திர தின நல்வாழ்த்துகள்

நாட்டு வணக்கம்

சுதேச வந்தனம்

ராகம்: காம்போதி தாளம்: ஆதி

எந்தையுந் தாயு மகிழ்ந்து குலாவி
.....யிருந்தது மிந்நாடே - அதன்
முந்தைய ராயிர மாண்டுகள் வாழ்ந்து
.....முடிந்தது மிந்நாடே - அவர்
சிந்தையி லாயிர மெண்ணம் வளர்ந்து
.....சிறந்தது மிந்நாடே - இதை
வந்தனை கூறி மனதி லிருத்தியென்
.....வாயுற வாழ்த்தேனோ - இதை
வந்தே மாதரம், வந்தே மாதரம்
.....என்று வணங்கேனோ?

இன்னுயிர் தந்தெமை யீன்று வளர்த்தரு
.....ளீந்தது மிந்நாடே - எங்கள்
அன்னையர் தோன்றி மழலைகள் கூறி
.....அறிந்தது மிந்நாடே - அவர்
கன்னிய ராகி நிலவினி லாடிக்
.....களித்தது மிந்நாடே - தங்கள்
பொன்னுட லின்புற நீர்விளை யாடியில்
.....போந்தது மிந்நாடே - இதை
வந்தே மாதரம், வந்தே மாதரம்
.....என்று வணங்கேனோ?

மங்கைய ராயவர் இல்லற நன்கு
.....வளர்த்தது மிந்நாடே - அவர்
தங்க மதலைக ளீன்றமு தூட்டித்
.....தழுவிய திந்நாடே - மக்கள்
துங்க முயர்ந்து வளர்கெனக் கோயில்கள்
.....சூழ்ந்தது மிந்நாடே - பின்னர்
அங்கவர் மாய அவருடற் பூந்துகள்
.....ஆர்ந்தது மிந்நாடே - இதை
வந்தே மாதரம், வந்தே மாதரம்
.....என்று வணங்கேனோ?

- மஹாகவி பாரதியார்

இந்தியச் சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகள்!

2 comments:

PKS said...

Thanks for your wishes Avatharam.

Regards, PK Sivakumar

குழலி / Kuzhali said...

விரும்பினால் தங்கள் மின் அஞ்சல் முகவரி தரவும், அல்லது kuzhali140277 (AT) yahoo (DOT) com ற்கு தொடர்பு கொள்ளவும், சில விடயங்கள் தெரிவிக்க வேண்டும்

நன்றி