Monday, March 13, 2006

காலமென்ன காலம்?

1970-இல் ஞானரதம் இதழொன்றில் வெளியான சித்ர (ஞானரதத்தின் பொறுப்பாசிரியராக இருந்த தேவ. சித்ர பாரதியா இவர்?)வின் கவிதை ஒன்று.

காலமென்ன காலம்?
- சித்ர

கற்றதெல்லாம் மூடமாக்கும்
.....காலமென்ன காலம்;
கற்கக்கற்கத் தெளிவுகாட்டும்
.....காலமென்ன காலம்!

கண்ட உண்மை கனவாய்ப்போகும்
.....காலமென்ன காலம்;
காணக்காண உண்மையூட்டும்
.....காலமென்ன காலம்!

கொண்டதெல்லாம் கழியச்செய்யும்
.....காலமென்ன காலம்;
கொள்ளக்கொள்ளத் தந்துவைக்கும்
.....காலமென்ன காலம்!

அறிந்தமட்டில் வியந்து நிற்க
.....மனிதன் என்ன மாடா?
வாழ்ந்தவழியில் தொடர்ந்துசெல்ல
.....வாழ்க்கை ஒரே கோடா?

வாழ்ந்துசென்ற மனிதர்க் கெலாம்
.....வணக்கம்பல கோடி;
வாழப்போகும் என்னைத் தேக்க
.....எவருக்குண்டு நீதி?

காலமென்ன காலம்!
கருணைமிக்க காலம்!
கோலமென்ன கோலம்;
கோட்டைத் தாண்டின் எங்கும்!

நன்றி: சித்ர, ஞானரதம்

No comments: