Tuesday, September 25, 2007

நண்பர் ஓசை செல்லாவுக்கு...

முன்னாள் பதிவர் மூர்த்திக்கு நன்றி என்ற உங்கள் பதிவில் பின்னூட்டங்களை இனி அனுமதிப்பதில்லை என்று நீங்கள் சொல்லிவிட்டதால் என் பதிவில் இதை எழுதுகிறேன். இல்லையென்றால் அந்தப் பதிவிற்கான பின்னூட்டமாகவே இட்டிருப்பேன்.

அவசரப்படுகிறீர்களோ என்று தோன்றுகிறது. டூண்டு என்ற வலைப்பதிவை மட்டும்தான் அழித்திருக்கிறார். மாயவரத்தான் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட போலி வலைப்பதிவு, தமிழ்கோமணம் என்ற பெயரில் காசியைத் தாக்க ஆரம்பிக்கப்பட்ட வலைப்பதிவு என்று பல வலைப்பதிவுகள் இன்னும் நீக்கப்படாமல் அப்படியே இருக்கின்றன. அதற்குள் சம்பந்தப்பட்டவர் மனமாற்றம் அடைந்துவிட்டதாக நினைப்பது என்னைப் பொருத்தவரை சரியில்லை. போலி தான் ஆரம்பித்த அத்தனை போலி வலைப்பதிவுகளையும் நீக்காத வரை, எனக்கு நம்பிக்கையில்லை.

1 comment:

Anonymous said...

மூர்த்தி அந்த வலைப்பதிவை நீக்கவில்லை. எழுதியவற்றை டிராப்டாக மாற்றியுள்ளார். இந்த கண்டனம் மறந்ததும் மீண்டும் அவை போஸ்ட்டுகளாக ஆகும்.

அவசரப்பட்டு நன்றி கூறுவது சரியல்ல