Monday, December 24, 2007

இன்னொரு கவிதை முயற்சி

உயிர் வந்து ஒளிர்ந்தது
தொலைகாட்சித் திரை
பிரிந்து சென்ற காதலி
திரும்பிவந்தது போல

உயிர் பெற்றோடி
கரைந்தனர் குழந்தைகள்
முலைக்காம்புகள் கண்ட குட்டிகள்
தாய்ப்பன்றி வயிற்றுள் இறங்குவதுபோல

யாருமற்று நின்ற அறை
எதிரொலித்தது சத்தத்தை
கூடலைப் பார்த்தேங்கி
குரலெழுப்புகிற சுவர்களைப் போல

(எழுத்தும் எண்ணமும் குழுமத்தில் எழுதியது.)

No comments: