Monday, December 24, 2007

ஒரு கவிதை முயற்சி

சோப்பு போட்டபின்
தண்ணீர் ஊற்றிக் குளிக்க மறந்த
பனிவெண்மையில்
நிர்வாணம் காட்டும்
இறகுகள் உதிர்ந்த மரம்
குளிரில் உடல் விறைத்து

சருகுகள் கொணர்ந்து அமரும்
இடம்தேடியலையும் பறவை
ஸ்பரிசம் தந்த கதகதப்பில்
சிறகுகள் முளைத்து மரம்
சிரிக்கும் கொஞ்சமாய் அசைந்து

(எழுத்தும் எண்ணமும் குழுமத்தில் எழுதியது.)

No comments: