Tuesday, May 11, 2010

தினம் சில வரிகள் - 10


”இணைய தளத்தில் இருக்கும் மிகப் பெரிய ஆபத்தே இதுதான். எடுத்த எடுப்பில் எழுத ஆரம்பித்து விடும் சாத்தியத்தை இது அளிக்கிறது. ஆண் குழந்தைகளுக்கு சமயங்களில் குறி விறைத்துக் கொண்டு விடும். பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். மூன்று வயதுக் குழந்தைக்குக் கூட சமயத்தில் அப்படி விறைக்கும். அதற்காக அந்தக் குழந்தை நான் வாலிபத்தை அடைந்து விட்டேன், எனக்குத் திருமணம் செய்து வை என்று சொல்லாது அல்லவா? அதேதான் இதுவும்.”

- சாரு நிவேதிதா.காம் இணையதளத்தில் சாரு தன் வாசகர் கடிதத்துக்கு விபரீத ஆசை (2) என்ற தலைப்பில் எழுதிய பதிலில் இருந்து.

படித்தவுடன் ரசித்துச் சிரித்துவிட்டேன். எதிர்பாரா நேரங்களில் சாரு அடிக்கிற இப்படிப்பட்ட சிக்ஸர்களுக்காக பெரும்பாலான நேரங்களில் அவர் மொக்கையையும், சுயபுராணத்தையும், அறிவுரைகளையும் சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.