Sunday, May 02, 2010

தினம் சில வரிகள் - 1

தினம் நாலுவரி எழுத வேண்டும். நாலுவரிக்கு மேலிருந்தால்? நீங்கள் படிக்காமல் விட்டுவிடலாம். டிவிட்டரில் 140 எழுத்துகளுக்குள் பேசுவதை வடிகட்டி உருப்படியானவற்றை இங்கே இட்டால்கூட தினம் நாலுவரி தேறிவிடும். நேரமில்லை என்று எத்தனை நாள் இழுப்பது? முன்னுரை இத்துடன் முற்றும். நாலுவரியில் இவை சேரா.

Run away bride திரைப்படத்தில் Richard Gere பேசுகிற வசனம், “Journalism is literature in hurry." இவ்வசனம் நினைவுக்கு வரும்போதெல்லாம் எனக்குத் தமிழ் வலைப்பதிவு உலகமும் நினைவுக்கு வருகிறது. தமிழ் வலைப்பதிவு உலகின் எழுத்துத் தரம் பற்றி சுஜாதா, ஜெயமோகன், சாரு நிவேதிதா என்று பலர் எழுதி வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார்கள். ஆதலால் அந்தப் பக்கம் போகும் ஆசையில்லை. தமிழ் வலைப்பதிவுகளீல் பெரும்பாலானவை அவசரத்தில் எழுதப்படுவதாலும், எழுதப்படுபவையில் பெரும்பாலும் Journalism என்ற வகைக்குள் அடங்கும் என்பதாலும், “Tamil Blogs are mostly literature in hurry." என்று சொல்லத் தோன்றுகிறது. Tamil blogs are mostly journalism in hurry என்று சொல்கிறவர்களும் இருக்கலாம்.