Tuesday, May 04, 2010

தினம் சில வரிகள் - 5


புறம்காண அகம்காணப் பொதுமுகத்தின் அருள்நோக்கம்
இறங்காத தாமரைக்கண் எம்பெருமாஅன் இயம்புதியால்
அறம்காத்தற்கு உனக்கொருவர் ஆரும்ஒரு துணையின்றி
கறங்குஆகும் எனத்திரிய நீயேயோ க்டவாய்தான்?

செந்தாமரை கண்களுடன் அருட்பார்வை நீங்காமல் நடுநிலையில் நின்றருளும் பெருமானே! காற்றாடிபோல சுற்றித் திரிந்து,உனக்கு வேறெந்த சிறுதுணையும் இல்லாமல், ஒவ்வொன்றின் உள்ளும் புறமும் கண்டு, தர்மத்தைப் பாதுகாக்க, நீ கடமைப்பட்டாயோ. எனக்குச் சொல்வாயா?

(கம்பராமாயணம்)