Friday, May 07, 2010

தினம் சில வரிகள் - 7


நண்பரும் எழுத்தாளருமான இரா.முருகன் இணையத்தில் முன்பொருமுறை இப்பாடலில் முதலிரண்டு பத்திகளை நினைவிலிருந்து எடுத்தெழுதிய ஞாபகம். இப்பாடலைப் பார்க்கும்போதெல்லாம் இப்போது இரா.முருகனும் நினைவுக்கு வருகிறார். முழுமையான பாடலைப் பார்த்ததும், இங்கே பகிரத் தோன்றியது.

சென்று நீராடிய துறைகளெலாம் - நான்
...திரும்பிவந் தாட விரும்புகின்றேன்!
அன்று கட்டிய சிறுமணல் வீட்டினை
...ஆற்றின் கரையெலாம் தேடுகிறேன்.

என்னோ டாடிய சிறுவர் சிறுமியர்
...எங்கே எனநான் தேடுகிறேன் - அவர்
அன்னையர் தந்தையர் ஆன கதைகளை
...அறிந்து மகிழ்ந்து பாடுகிறேன்!

நண்பர்கள் செய்த நல்லவைக் கெல்லாம்
...நன்றிகள் கூறத் திரும்புகிறேன்.
பெண்களின் வாழ்வில் என் பேதைமையால் செய்த
...பிழைகள் பொறுத்திட வேண்டுகிறேன்.

- ஜெயகாந்தன்