Saturday, May 22, 2010

நாளைக்காக எழுதிய இன்றைய டிவிட்டுகள்


தினம் சில வரிகள் - 21

கூட்டங்களில் காலணி அறையைப் பார்க்கும்போது எது எந்தக் காலுக்குப் பொருந்தும் எனக் கற்பனை.

வீட்டருகில் வயலில் ஒரு மானைப் பார்த்தேன். என்ன ஆச்சரியம். அதுவும் என்னைப் பார்த்தது. பின் சாவதானமாக பெண்ணைப்போல தலையைத் திருப்பிக் கொண்டது.

குடிக்கும்போதெல்லாம் நிறைய அமைதி கிடைக்கிறது. அமைதியாக உணரும்போதெல்லாம் அந்தப் பதட்டத்தில் இன்னும் குடிக்கத் தோன்றுகிறது.

நண்பர் பறவையியல் ஆர்வலர். அவர் தொடர்பால் பறவைகளைக் கவனிக்க ஆரம்பித்தேன். சிலநாட்களில் எனக்கு இறக்கைகள் முளைத்திருப்பதை அறிந்தேன்.

வாரக்கடைசியில் பெய்கிற மழை வாரவிடுமுறையில் செய்கிற அலுவலக வேலைபோல என்று வருணபகவானுக்குத் தெரியவில்லை.

பெரிய மார்பகங்களுக்கு ஆசைப்படும் மனநிலை கொண்ட தமிழன், பெரிய கட்டுரைகளைக் கண்டு கேலிசெய்யும் மனநிலை வினோதமானது.