Saturday, May 22, 2010

டிவிட்டுவம்


தினம் சில வரிகள் - 20

கவிதை என்றாலே பிடிக்காமல் போகும் தருணம் காதலில் நம்பிக்கை போய் புணர்ச்சியில் நம்பிக்கையுடவராக மாறும் தருணம்.

என்ன வித்தியாசம்.தொலைகாட்சித் தொடரில் நடிப்பவர், பார்ப்பவர் இருவருமே அழுகிறார்கள். வலைப்பதிவில் வாசிப்பவர் மட்டும் அழுகிறார்.

டிவிட்டரை என் இலக்கிய ஆயுதமாகப் பயன்படுத்த முடிவெடுத்துவிட்டேன். மேற்குலகில் அதைத்தான் செய்கிறார்களாம்.

நாள் முழுக்கக் குழந்தைகளின் கர்நாடக சங்கீதக் கச்சேரி. கேட்டபோது புரிந்தமாதிரி இருந்தது. வெளிவந்தவுடன் ஒன்றும் புரியாத மாதிரி இருக்கிறது.

சங்கீதக் கச்சேரியில் நிகழ்ச்சி அறிவிப்பாளரின் அறிவிப்புப் பேச்சு என்ன ராகம் என்று கேட்டால் பக்கத்து இருக்கைக்காரர் ஏன் முறைக்கிறார்.

கச்சேரிக்கு வரும் இளவயது மாமிகளின் சேலைகளெங்கும் சங்கீதத் துகள்கள் பூத்திருக்கின்றன.

கச்சேரிக்கு இடையில் ஒலியின் அளவைக் கூட்டிக் குறைத்து வெறுப்பேற்றும் ஒலியமைப்பாளரை அடுத்தபடியாக மேடையேற்றிப் பாடச் சொல்ல வேண்டும்.