Saturday, April 24, 2004

எழுத்தாளர் கந்தர்வன் மறைவு

திரு.கந்தர்வன் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன். இந்தச் செய்தியை மின்மடல் மூலம் தெரியப்படுத்திய ஜெயமோகனுக்கு நன்றி. கந்தர்வன் குறித்து ஜெயமோகன் எழுதிய குறிப்புகளைக் கீழே காணலாம்.

"முற்போக்கு எழுத்தாளர்களில் முக்கியமானவராக இருந்த கந்தர்வன் 23-4-04 அ·ன்று விடிகாலையில் அவரது மகள் வீட்டில் மாரடைப்பில் காலமானார். ஏற்கனவே நோயுற்று சிகிழ்ச்சையில் இருந்தபோதும்கூட தொடர்ந்து இலக்கியக்கூட்டங்களில் கலந்துகொண்டும் எழுதிக் கொண்டும் இருந்தார்.

அரசு ஊழியர் சங்கத்தில் தீவிரமாகப் பணியார்றி பலவிதமான போராட்டங்களில் ஈடுபட்டு பழிவாங்கல்களுக்கு ஆளான கந்தர்வனின் வாழ்வின் பெரும்பகுதி தொழிற்சங்கவாதத்திலேயே கழிந்தது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முக்கியமான வழிகாட்டிகளில் ஒருவராக இருந்தார்.

கந்தர்வன் அதிகமும் சிறுகதைகளே எழுதினார். குறைவாக கவிதைகள். பூவுக்கு கீழே , ஒவ்வொரு கல்லாய் ஆகிய கதைத்தொகுப்புகள் பரவலாகக் கவனிக்கப்பட்டவை. அவரது இறுதிக் காலத்தில் எழுதிய கதைகள் தமிழ்ச்சிறுகதைவரலாற்றில் அவருக்கு முக்கிய இடத்தை உருவாக்கியளிப்பவை.

- ஜெயமோகன்"

No comments: