Thursday, April 29, 2004

விடுப்பு விண்ணப்பம்

வசந்தகாலத்தில் வருகிற ஒவ்வாமைக்கு (Spring time allergies) என்னை அதிகம் பிடித்துப் போய் விட்டதால் - எரிகிற கண்களை தேய்த்துக் கொண்டும், மூக்கை உறிஞ்சிக் கொண்டும், தொண்டையைக் கனைத்துக் கொண்டும், மூக்கடைத்துக் கொண்டும் - கனமழை பெய்து Pollenஐ அடித்துக் கொண்டு போகக் கடவது என்று வேண்டிக் கொண்டும் - இருக்கிறேன். எனவே, தினமும் வலைப்பதியாமல் வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு முறை பதிவது என்று தற்காலிகமாக முடிவு.

No comments: