Tuesday, May 25, 2004

புனைவும் நிஜமும்

தனக்கென எழுதுவதாய்
சொல்லிக்கொண்ட எழுத்தாளர்
கொஞ்சம்
மெனக்கெட வேண்டுமென்றார்
தன்னைப் புரிந்து கொள்ள

நுகர்ந்தாலே சுவைமணக்கும்
அறுசுவைக்கு
அடுக்களையில்
அல்லாடிக் கொண்டிருக்கிறார்
அவர் மனைவி
அவருக்காக

No comments: