Tuesday, May 25, 2004

வேள்விக் கேள்வி

ஒவ்வொருமுறையும்
புதிதாய் எழுத அமர்கிறேன்

கைபடாத தாள்களை
தேடியெடுக்கிறேன்

மையொழுகாத
புதிய பேனாவின்
மூடி திறக்கிறேன்

புதிய வஸ்திரங்கள்போல
புதிய இஸங்களில்
பெயர் பதிக்கத் துணிகிறேன்

கண்களை மூடியும்
கன்னத்தில் கைவைத்தும்
தூக்கம் தொலைத்தும்
மாலைகளில் நடந்தும்
போதையில் வெறித்தும்
சம்பாஷணைகளில் தொலைந்துபோயும்
தவம்போல யோசிக்கிறேன்

இடம் மாற்றி இடம்
இருந்து பார்க்கிறேன்
முறைமாற்றி தினமொரு
சிரம் மாற்றி
சிந்திக்க முயலுகிறேன்

எழுத உட்கார்ந்தபின்
வாழ்ந்தும் பழகியும் போன
வாழ்க்கையே
வீறிட்டெழுந்து வந்து
விழுவதெப்படி

No comments: