Sunday, May 16, 2004

நதிப்புறக் காட்சி

கண்களை விழுங்கி
கரைகள் விரிந்து
நுரையுடன் சுழித்து
சங்கீத லயத்துடன்
முனகல்கள் இன்றி
நடக்கிறது புண்ணியநதி
முக்கி எழுபவரின்
பாவங்களைக் கழுவிச்
சுமப்பதறிந்த
வருத்தங்கள் இல்லாதபடி

கண்களை மூடிக்கொண்டு
மந்திரங்கள் உச்சரித்தபடி
முக்கியெழும் தந்தையின்
பாவங்கள் அறிந்த நதி
தந்தையைப் பார்த்தபடி
சிரத்தையாய்
அவர் செய்வதைச் செய்யும்
பாலகனின் பால்நெஞ்சத்தையும்
அறிந்திருக்க வேண்டுமென்று
வேண்டிநிற்கிறது மனம்

எழுதப்பட்ட நாள்: மே 16, 2004

No comments: