Monday, May 17, 2004

இருவேறு

எழுதுவதற்குமுன்
எழுதவில்லையே
என்று மனபாரம்

எழுதும்போது
எப்படி வருமோ
என்று மனபாரம்

எழுதி முடித்தபின்
எப்படி எதிர்கொள்ளப்படுமோ
என்று மனபாரம்

எவ்வளவுபேர் பாராட்டினாலும்
திருப்தியடையாமல்
தூக்கத்தைக் கெடுத்துத்
தூண்டுகிற மனபாரம்

அடுத்தது எப்படி
வருமோ யென்று
இப்போதிருந்தே
அடைகாக்கிற மனபாரம்

கவனமாய் வீட்டுப்பாடம்
முடித்த மறுகணம்
விட்டுதறி விடுதலையாகி
மகிழ்வுடன்
விளையாட ஓடுகிறான்
குழந்தை.

எழுதப்பட்ட நாள்: மே 17, 2004

No comments: