Monday, June 14, 2004

அனுமதிக்காததும் அனுமதித்ததும்

நமக்கிடையே
நம் பெற்றோரையும்
அனுமதிக்க மறுக்கிற
அறிவு பெற்றிருந்தோம்
குடும்பத்தையும்
குழந்தைகளையும்
நண்பர்களையும் கூட

பணமும்
வாழ்க்கைச் சூழலும்
நம்மைப் பிரித்துப் பார்க்க
அனுமதித்ததில்லை

எந்தப் பிரிவினையும்
எழுந்துவிடக்கூடாதென்று
நமக்கிடையே எதையும்
அனுமதிக்காமல்
கறாராக பார்த்துக் கொண்டோம்

நமக்கிடையே
நம்மை நாமே
அனுமதித்துக் கொண்டதற்கு
அன்பென்று பெயர் வைத்தோம்

No comments: