Friday, June 11, 2004

ஞானம்

எழுத வேண்டும் என்று
நினைத்திருந்த மனிதர்
பட்டியல் இருந்தது

எழுதக் கூடாது என்று
நினைத்திருந்த
மனிதர் பட்டியலும் இருந்தது

இரண்டு பட்டியலிலும்
தம் பெயர் இருந்தவர் பட்டியல்
பெரியதென்று அறிந்த கணம்
எல்லாரைப் பற்றியும்
எழுத கற்றுத் தந்தது

No comments: