Monday, September 27, 2004

ஒருத்தி

சென்னை சத்யம் சினிமாஸ் ஸ்டுடியோ-5ல் அக்டோபர் 2 மற்றும் 3 தேதிகளில் (சனி, ஞாயிறு) காலை 10 மணிக்கு சிறப்பு காலை காட்சியாக ஒருத்தி திரைப்படம் திரையிடப்படும். இது கி.ராஜநாராயணனின் 'கிடை' குறுநாவலை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம். கோபால் ராஜாராம் தயாரிக்க அம்ஷன்குமார் இயக்கியுள்ளார். நியூ ஜெர்ஸியில் சிந்தனை வட்டம் நடத்திய கலைப்படவிழாவில் திரையிடப்பட்டபோது இப்படம் அனைவராலும் மிகவும் ரசிக்கவும் பாராட்டவும் பட்டது. பத்ரி போன்ற நண்பர்கள் தமிழ்நாட்டில் எப்போது எங்கே இப்படம் திரையிடப்படும் என்ற கேள்வியையும் எழுப்பினார்கள். தமிழ்நாட்டு நண்பர்கள் இப்படத்தைப் பார்க்கிற வாய்ப்பாக இம்முயற்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் இருக்கிற நண்பர்கள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு இத்திரைப்படத்தைக் கண்டு தங்கள் எண்ணங்களை எழுத வேண்டுகிறேன். இத்தகைய முயற்சிகளுக்கு நண்பர்கள் தருகிற ஆதரவு தமிழ்ச் சினிமா ஆரோக்கியமடையவும், தமிழில் மாற்று சினிமா வளரவும் உதவும். நன்றி!

1 comment:

Badri Seshadri said...

தகவலுக்கு மிக்க நன்றி பிகேஎஸ். நிச்சயமாக இந்தப் படத்துக்குப் போய்வருவேன்!