Wednesday, November 03, 2004

வையாபுரிப் பிள்ளை

வையாபுரிப் பிள்ளை, அவர் நூல் பற்றி என் வலைப்பதிவில் எழுதி வருகிறேன். அவை பின்னர் திண்ணை இணைய தளத்திலும் பிரசுரமாகின்றன. பெயர் பெற்ற எழுத்தாள நண்பர்கள் இரண்டு மூன்று பேர் நன்றாக இருக்கிறது என்று சொன்னது சந்தோஷம் அளித்தது. வலைப்பதிவில் காசியும் தொடர்ந்து அதைப் பற்றி எழுதச் சொன்னார். நான் மதிக்கிற இராம.கி மட்டும் எதற்கு இது இப்போது என்று கேட்டிருந்தார். ஆனாலும், முடிந்தபோது அதைத் தொடர்ந்து எழுத முயன்றே வருகிறேன். இன்றைக்கு உலகத்தமிழ்.காம் திறந்து பார்த்தால் பா.ரா.சுப்ரமணியன் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளையும் தமிழ் அகராதியும் என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். பார்க்கவும் படிக்கவும் சந்தோஷமாக இருக்கிறது.

No comments: