Wednesday, October 26, 2005

சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் - I

சுந்தர ராமசாமியுடன் இரண்டு கலந்துரையாடல்கள் நடைபெற்றன. சென்ற வருடம் 2004 செப்டம்பரில் ஒன்று. இந்த வருடம் 2005 செப்டம்பரில் ஒன்று. இரண்டும் கனெக்டிகட் மாநிலத்தில் திண்ணை.காம் ஆசிரியர் கோபால் ராஜாராம் இல்லத்தில் நடைபெற்றன. இந்த இரண்டு கலந்துரையாடல்களையும் இங்கே தருகிறேன். சு.ரா.வும் பிறரும் பேசிய தனிப்பட்ட விஷயங்கள், சு.ரா. பகிர்ந்து கொண்ட அவரின் உடல்நலம் பற்றிய தகவல்கள், கலந்து கொண்ட மற்றவர்கள் தமக்குள் பேசிக் கொண்டவை, கலந்துரையாடல் பதிவானபோது தெளிவாகப் பதிவாகாத சில வாக்கியங்கள் இவற்றைத் தவிர மற்றவை அனைத்தும் இங்கே இடம்பெறும். முதலில் 2004 ஆம் ஆண்டு கலந்துரையாடலும் அதற்கடுத்து இந்த ஆண்டு கலந்துரையாடலும் பிரசுரமாகும். இறுதியில் இந்த இரண்டு சந்திப்புகளின் அடிப்படையில் சு.ரா. பற்றிய என் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன். இன்ஷா அல்லாஹ்!

19 செப்டம்பர் 2004 (ஞாயிறு) அன்று சுந்தர ராமசாமியுடன் நடைபெற்ற முதல் கலந்துரையாடலில் பேராசிரியர் E. அண்ணாமலை, பார்னி பெய்ட், ராஜன் குறை, மோனிகா, டெக்ஸன், முருகானந்தம், சாரதா முருகானந்தம், கோபால் ராஜாராம், துக்காராம், தஞ்சை சாமிநாதன், சந்திரா ராஜாராம், பி.கே. சிவகுமார் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டார்கள். காலை பதினொன்றரை மணி சுமாரிலிருந்து மாலை 7 மணியைத் தாண்டி நடைபெற்ற அந்தக் கலந்துரையாடலில் இருந்து:

அண்ணாமலை: அடுத்தமுறை எப்போது கனெக்டிகட் வருவீர்கள்?

சு.ரா.: இன்னும் ஆறுமாதத்தில் வருவேன்.

அண்ணாமலை: அடுத்த முறை வரும்போது Yale-க்கு வாங்க. மாணவர்களிடையே உங்கள் கதை வாசிப்பு மாதிரி ஒன்று வைத்துக் கொள்ளலாம்.

சு.ரா.: நீங்க அங்கே வொர்க் பண்றேளா?

அண்ணாமலை: ஆமாம்

சு.ரா.: என்ன பண்றீங்க அங்கே?

அண்ணாமலை: அங்கே புரபொஸரா வந்திருக்கேன்.

சு.ரா.: உங்களைப் பலமுறை க்ரியா ராமகிருஷ்ணன் வீட்டில் பார்த்திருக்கேன். ஆனால் உங்களை இங்கே பார்ப்பேன்னு எதிர்ப்பார்க்கலை. அதான்... (கொஞ்சம் நிறுத்தி) காலச்சுவடுலகூட சமீபத்துல உங்க பேட்டி வந்ததே...

அண்ணாமலை: பரவாயில்லை. நான் இங்கே இப்போதான் வந்தேன். நான் வந்தது கண்ணனுக்குத் தெரியும்.

சாமிநாதன்: இங்கே இருக்கிற மாணவர்களுக்கு நவீன தமிழில் ஆர்வம் உண்டா இல்லை கிளாசிகல் லிட்டரேச்சர் மட்டும்தானா?

அண்ணாமலை: அது சில பேருக்கு இருக்கு. ஆரம்ப ஸ்டேஜுல இருக்கோம் தமிழ் டீச்சிங்கில்.

சாமிநாதன்: ஹார்ட் கம்பரைவிட்டு வர மாதிரி தெரியலை.

அண்ணாமலை: அவர் மொழிபெயர்ப்பில் போய்விட்டார்.

சு.ரா.: வெளியே விட்டு வரலை என்பதால் மாடர்னிடி தெரியலைன்னு இருக்கா? அவங்களோட டேஸ்ட் அது.

சாமிநாதன்: ஒண்ணு ரெண்டு பேர் இருப்பதால் அவர் அதுலதான் போகஸ் பண்றார். அதனால சொல்றேன். அதை நான் தப்புன்னு சொல்லலே.

சு.ரா.: தப்புன்னு சொல்லலே என்பதைவிட தப்புதான்னு சொல்லணும். ஏன்னா, ஒரு தமிழ் ஸ்காலர் வந்து - அவர் தமிழ் ஸ்காலரா இருந்தார்னா - அவருக்கு எல்லா sides-ம் தெரிஞ்சிருக்கணும். அட்லீஸ்ட் முக்கியமான sides தெரிஞ்சிருக்கணும். எல்லாம் அவருக்குத் தெரிந்திருக்க இயலாது. நம்மை மாதிரி மாடர்னிடி தெரியும்னு எதிர்பார்க்க முடியாது. ஆனால் முக்கியமானவை தெரிஞ்சிருக்கணும்.

சாமிநாதன்: நான் என்ன நினைக்கிறேன்னா - வாட் ஈஸ் செந்தமிழ் வாட் ஈஸ் சாதாரண தமிழ்னு க்ளியரா distinguish பண்ணனும். ஹார்ட் மாதிரியானவர்கள் classical tamil people-னுதான் சொல்ல முடியும்.

அண்ணாமலை: ஒவ்வொருவரும் ஒவ்வொண்ணுல ஸ்பெஷலைஸ் பண்றாங்க. ஆங்கிலத்திலும் இது இருக்கு. சில பேருக்கு பழையதில் ஸ்பெஷலைசேசன், சிலருக்கு மாடர்ன்.

பார்னி: The thing in our approach is to find Tamil as classical language is subordinate to other problems. It is important language to trade. So, we look into it as good citizenship. Notion of classical language is important. But it is not most important. The help of Tamil sangams is very important in taking Tamil forward here. When your kid has to choose a university, they have to say, "let me go to Yale. They have Tamil too which I can learn along with my major." Our objective is in 4 years, they could read Tolkapiyam.

சாமிநாதன்: நான் என்ன நினைக்கிறேன்னா, மாடர்ன் லிட்டரேச்சர் தெரிஞ்சால் போதும் அவங்களுக்கு. I am not interested in classical Tamil.

பார்னி: sure, through this programme, they can pick up newspapers and read. If they are fluent, they can read anything.

சு.ரா.: (அண்ணாமலையைப் பார்த்து) ஸாரி, உங்களை நான் வந்தவுடனே அடையாளம் கண்டு கொள்ள முடியலை.

அண்ணாமலை: பரவாயில்லை.

சாமிநாதன்: அடுத்த நாவல் எழுதறீங்களா?

சு.ரா: ஷார்ட் ஸ்டோரி எழுதறேன். நாவல் கொஞ்சம் continuous-ஆ வொர்க் பண்ணனும். நிறைய வொர்க் பண்ணனும். ஷார்ட் ஸ்டோரியும் டிப்பிகல்ட்தான். சில நேரங்களில் நாவலைவிட டிப்பிகல்ட். பட் ஒரு ஒன் மன்த்ல ஒரு கதை முடிஞ்சிடும். அப்கோர்ஸ், இந்த கன்ட்ரிக்கு வந்தபிறகு - ஒரு டென் இயர்ஸா என் டிரீம்ஸ் எல்லாம் ஜாஸ்தியாயிடுச்சு. பட், ரொம்ப லேட்டா - எல்லாமே லேட்டா லைப்ல - இந்தியால பிறந்தததுல (பார்வையாளர்கள் சிரிப்பு) - ரொம்ப லேட்டா வருது. அறுபது வயசுல கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசை வர மாதிரி (பார்வையாளர்கள் சிரிப்பு).

சாமிநாதன்: அறுபது வயசுல எத்தனையாவது கல்யாணம்? (பார்வையாளர்கள் சிரிப்பு)

சு.ரா: ஆனா, இங்க வந்து - இங்கே இருக்கிறா ஓல்ட் புக் ஸ்டோர்ஸ் - யூஸ்ட் புக் ஸ்டோர்ஸ்ல - அலைஞ்சி - ஹவர்ஸ் ஸ்பெண்ட் பண்ணி - ரொம்ப வொண்டர்புல் புக்ஸ் - physical sciences-ல - வாங்கி வச்சிருக்கேன். எனக்கு இன்னும் அறுபது எழுபது வயசு ஆயுசு இருந்தால்தான் அதையெல்லாம் படிக்க முடியும். பார்ட்சுனேட்டா கண்ணனின் குழந்தைகள் - 2 குழந்தைகள் கண்ணனுக்கு - ரெண்டு பேரும் வொரோஷியஸ் ரீடர்ஸ். அவங்க படிப்பாங்க என்ற நம்பிக்கையில அந்த புக்ஸ் உட்கார்ந்திட்டிருக்கு. அவ்ளோ அற்புதமா எழுதறாங்க. சயின்ஸ் எனக்கு முன்னும் பின்னும் தெரியாது. எனக்குப் புரியும்படி ஒரு லீடிங் சயிண்டிஸ்ட் எழுதணும் என்றால் எவ்ளோ பெரிய எப்பர்ட் வேணும் பாருங்க. அவர் மேல எவ்வளவு மரியாதை வரும் பாருங்க. நீங்க ஒரு புக் அப்படி கிரியேட் பண்ணியிருக்கீங்களா உங்க லாங்வேஜில.

துக்காராம்: தி. ஜானகிராமன் ஒரு புக் எழுதியிருக்கார்.

சு.ரா.: எதைப் பத்தி?

துக்காராம்: அறிவியல் பற்றி.

சு.ரா.: அறிவியல் பற்றி அவர் எழுதியிருக்கிறாரா டிரான்ஸ்லேட் பண்ணியிருக்காரா?

துக்காராம்: இல்லையில்லை, அவர் எழுதியிருக்கிறார்.

சு.ரா.: புத்தகத்தின் தலைப்பு என்ன?

துக்காராம்: தலைப்பு ஞாபகம் இல்லை. நியூக்ளியர் இன்ஜினியரிங் அப்புறம் நிறைய விஷயம் பற்றி எழுதியிருக்கிறார்.

சு.ரா.: ஜானகிராமன் எனக்குத் தெரிஞ்சி ஒரு சயின்ஸ் புக் ட்ரான்ஸ்லேட் பண்ணியிருக்கார். அவர் ஒரிஜினலா சயின்ஸ் புக் பண்ண விஷயம் எனக்குத் தெரியாது. அப்படி பண்ணாக்கூட குழந்தைகளுக்கு - எழுதறமாதிரி பண்ணிடுவாங்க. அதனோட complexity எல்லாம் போயிடும். இவங்க அதையெல்லாம் விடமாட்டாங்க. அந்த complexity-ஐ விடவே மாட்டாங்க. ஒருநாளும், "விமானம் வானத்துல பறக்கக் கூடியது" அப்படிங்கற செண்டன்ஸ் இவங்க ஒருநாளும் எழுதவே மாட்டாங்க. (பார்வையாளர்கள் சிரிப்பு) நம்மாளுங்க அப்படித்தான் புத்தகத்தையே ஆரம்பிப்பாங்க (பார்வையாளர்கள் சிரிப்பு) எனவே, அதுக்குள்ளே போய், complexity-ஐயும் விடாமல் உங்களுக்கும் புரியற மாதிரியும் எழுதறது ஒரு பெரிய... ஆர்ட். அதை இந்த கன்ட்ரிலே சர்வசாதாரணமா செய்யறாங்க.

சாரதா: சிலபேரு புரியாத மாதிரி எழுதறது பெரிய இன்டலக்சுவல் திங்னு நெனைச்சிட்டு - they fool themselves.

சு.ரா: பட், இந்த மாதிரி பெரிய ரீச் இருக்குமென்றால், அவன் fool பண்றான் என்பது expose ஆயிடும். நம்ம நாட்டுல, fool பண்றான் பண்றான் என்கிறோம். அதைவிட்டா அவனுக்கு வழியே இல்லையே. இந்த நாடு மாதிரி எழுதலியே.

அண்ணாமலை: இந்த நாட்டுல science communication ஒரு துறையாவே வளர்ந்திருக்கு. நம்ம நாட்டுல political communication எவ்ளோ வளர்ந்திருக்கு. அந்த அளவு science communication அல்லது வேறு எதுவோ வரலை. பாமரர்களுக்குத் தெரியற மாதிரி ஒண்ணும் இல்லை. தமிழை எளிமைப்படுத்துவது என்றால் கொச்சைப்படுத்துவது என்று ஆகிவிட்டது. நான் linguist. ஒரு linguist எழுதற linguist புக் non-linguist-க்கும் புரியறமாதிரி இருக்கணும். MIT-லே ஒருத்தர் இருக்கார். (பெயர் சொல்கிறார். சரியாகப் பதிவாகவில்லை.சோம்ஸ்கியைச் சொல்லவில்லை.) பெரிய linguist. மத்தவங்களுக்கும் புரியற மாதிரி எழுதுவார். இந்தியாவிலே மராத்தி கொஞ்சம் பரவாயில்லை.

சு.ரா.: political communication ஸ்ட்ராங்கா இருக்குன்னு, நீங்க சொன்னாலும் என்னால் அதை ஒத்துக் கொள்ள முடியாது. ஏன்னா - ஒரு புக் - ஒரு பீரியடைப் படிக்க ஆரம்பிக்கறீங்கனு வச்சிக்கோங்க - காங்கிரஸோட பீரியட் போய், டி.எம்.கே.வோட பீரியட் வருது. இந்த டிரான்ஸ்பர்மேஷன் தமிழ்நாட்டின் மாடர்ன் ஹிஸ்டரில முக்கியமான விஷயம். அதை ஸடடி பண்ணப் போனிங்கனா - உங்களுக்குப் புத்தகம் கிடைக்காது. கிடைத்தாலும், ஏதாவது கூட்டங்களில் பேசியிருப்பான் இல்லையா - அந்த அளவுதான் புஸ்தகங்கள் இருக்கும். நீங்க திரும்ப என்ன பண்றீங்க - இந்த கன்ட்ரில இருந்து வந்து அதை யாரும் ரிசர்ச் பண்ணியிருக்காங்களான்னு தேடிப் போக வேண்டியிருக்கு.

அண்ணாமலை: நீங்க சொல்றது அரிதான். இந்த துறைல. மேடைப்பேச்சு மாதிரிதான் பல புக்ஸ் இருக்கு. இந்தத் துறைல எழுதறதுக்காவது ராஜதுரை மாதிரி சிலபேரு இருக்காங்க - விரல்விட்டு எண்ணற அளவு. ஆனா, சயின்ஸ் மாதிரி துறைல அப்படி யாருமே இல்லை.

சு.ரா.: யாருமே இல்லை அப்கோர்ஸ். ஏன்னா, இவ்வளவு - 7 கோடி தமிழர்கள் இருக்காங்க. டூ தவுசண்ட் இயர்ஸ் tradition இருக்குன்னா, இன்னிக்கு வேர்ல்டை பெரிய அளவு லீட் பண்ணக்கூடிய force-ஆ இருக்கணும். ஏன்னா, நமக்கு அந்த அளவு தகுதியிருக்கு. அந்த அளவு பேக்கிரவுண்ட் இருக்கு. ஆனா, நம்மோட பேர் சொன்னா உலகத்துலே யாருக்குமே தெரியாது. அப்படித்தான் நம்மோட கண்டிஷன் இருக்கு. நீங்க எந்த போயட்டை வேண்டுமானாலும் சொல்லுங்க - அங்கே சவுத் ஆப்பிரிக்காவிலே ஒருத்தரைப் பார்த்தேன். கம்பனைப் பற்றிச் சொன்னார் என்பார்கள். ஆனால், பரவலா, இன்பாக்ட் உலகத்திலே, நம்ம போயட்ஸ் பத்தி, கான்ட்ரிபியூஷன் பத்தி, டிரெடிஷன் பத்தி தெரியாது.

டெக்ஸன்: You have a point. இன்னிக்கி எங்கப் பசங்ககிட்டேயே Tamil is older than Latin or Greek-னு யாராவது ஸ்கூல்ல சொல்றாங்களா என்ன? One of the three spoken classical languagesனு யாரும் சொல்லித் தராங்களா என்ன?

சு.ரா.: அதுகூட பெருமை இல்லை சார். தமிழ்லே continous-ஆ லிட்டரேச்சர் இருந்துட்டு இருக்கே. பெரிய பெரிய மாஸ்டர்ஸ் இருக்காங்களே.

பார்னி: We have to explain this to language faculty community at Yale. They dont know it. We have to explain to them, Tamil is a world language.

சாரதா: What is the definition for world language?

பார்னி: Something that goes beyond their own region. It also transcends its own time. I am making it. Trying to sell a thing. If you take the archives of India, most history is shallow. That does not go beyond few hundred years. Tamil is not like that.

சாரதா: Do you think in India everybody knows about Tamil? Then you have not done it in your own country.

பார்னி: Instead of learning Tamil as Tamil everywhere, the rich content has to be translated in other languages and others should know about Tamil.

சு.ரா.: (சாரதாவைப் பார்த்து) இல்லைம்மா. இது இன்னும்கூட காம்ப்ளெக்ஸ் ஆன பிராப்ளமா இருக்கு. நீங்க அவுட்ஸ்டேண்டிங்கான புக் ட்ரான்ஸ்லேட் பண்றீங்க. லத்தீன் அமெரிக்கால இருக்கிற ஒரு முக்கியமான புக்கையும் ட்ரான்ஸ்லேட் பண்றாங்க. அது வேர்ல்ட் லெவல்ல ரீச் ஆகும். உங்க புக் ஆகாது. அந்தப் பாயிண்டை நீங்க யோசிச்சுப் பாருங்க.

சாரதா: It will not reach for sometime. But if we....

சு.ரா: சிலப்பதிகாரத்தைப் பார்த்தசாரதின்னு ஒருத்தர் மொழிபெயர்த்திருக்கிறார். ரொம்ப எபர்ட் போட்டுத்தான் செஞ்சிருக்கார். செவன் டூ எய்ட் இயர்ஸ் வொர்க் பண்ணியிருக்கார். ரீச் பண்ணலையே. வேர்ல்ட்ல இருக்கற முக்கியமான எத்தனை ஸ்காலர்ஸ் - இங்லீஸ் ஸ்காலர்ஸ் - அதை ரீட் பண்ணியிருக்காங்க. அது முக்கியமான கொஸ்சன்.

பார்னி: exactly this point. There are scholars here. They sometimes look at Ramayana or Mahabaratha. But not Silapathikara.

சாரதா: Silapathikara is next to only those two anyway.

சு.ரா: வேர்ல்ட்ல இருக்கிற பெஸ்ட் புக்ஸ்ல எப்பவுமே மகாபாரதத்துக்கு இடம் கிடையாது. உங்களுடைய கன்ட்ரிலே நிறைய பேரு புக்ஸ் செலக்ட் பண்றாங்க. 100 புக்ஸ் செலக்ட் பண்ணுவாங்க. எங்கிட்டே நிறைய புக்ஸ் இருக்கு. உடனடியா இப்போ ஞாபகத்துக்கு வரது - Fadiman சொல்றான் - Lifetime Reading Plan-னு ஒரு புக் எழுதியிருக்கான். அவன் சொல்றான். அவன் மகாபாரதத்தை include பண்ணலை என்பது மட்டுமில்லை. என்னால் அதை அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்க முடியலைன்னு இங்லீஸ்ல கிளியரா சொல்றான். அவ்ளோ காம்ப்ளிகேட்டடா எனக்கு இருக்குதுனு சொல்றான்.

பார்னி: மகாபாரதம் ஒரு பெரிய ஆலமரம்.

சு.ரா.: எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. அட்லீஸ்ட் ஏன் include பண்ணலைன்னு ஒரு ரீஸன் சொல்றானேன்னு. மத்த authorsக்கு அதனோட existence-ஏ தெரியாதே. இப்ப நான் ரீசன்ட்டா ஒரு புக் வாங்கினேன். அதுல அமெரிக்கன் ரைட்டர்ஸ் ஒரு அறுபது எழுபது பேர் அவங்களை influence பண்ண புக்ஸ் சொல்றாங்க. அதுல ஒருத்தன்கூட மகாபாரதத்தைச் சொல்லலை. ஆனால், பாரின் லாங்க்வேஜஸ்ல உள்ள பல புக்ஸை சொல்றான்.

துக்காராம்: அது வந்து தேவையில்லைன்னு நினைக்கிறேன். இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் இருக்கிற எல்லா ரைட்டர்சுமே influenced by மகாபாரதா அண்ட் ராமாயணா. இல்லையா?

சு.ரா: அதுபத்தி நான் சொல்லலை. தமிழோட பொஸிஸன் வேர்ல்ட்ல எப்படியிருக்கு....

துக்காராம்: அது கரெக்ட். அதுக்கு நம்ம நாடு ஒரு வெல்த்தி கன்ட்ரி ஆகணும்னு நினைக்கிறேன்.

முருகானந்தம்: Economic Power.

சு.ரா.: கரெக்ட்.

சாரதா: இந்தியால இருக்கற மத்த லாங்க்வெஜஸ¤ம் இப்படித்தானா?

சு.ரா.: எல்லாருக்கும் இருக்குனா அவங்க எல்லாம் ரொம்ப கல்ச்சுரலி ஏழைங்க. நாம பெரிய பணக்காரங்க. நம்ம கல்ச்சர் என்ன? கேரளாக்கு என்ன இருக்கு. நம்மை கம்பேர் பண்ணும்போது, சொல்றதுக்கு ஒண்ணுமே இல்லை. உலகத்துலே எல்லாருக்கும் பயன்படற புக் திருக்குறள். அதை உலக அளவில் கொண்டு போயிருக்கிறோமா? திருக்குறளில் சில முடநம்பிக்கை இருக்கலாம். ஆனால், எல்லாருக்கும் பயன்படறமாதிரியான குறள்கள் திருக்குறளில் இருக்கே.

ராஜாராம்: அதுல மெயின் ரீசன் - it has to be sold. அதை விக்கறதுக்கு ஒரு ஆள் வேண்டும். அதை நாம யாரும் பண்ண முடியலை.

சு.ரா.: அம்மா சொன்னாங்க. ட்ரான்ஸ்லேஷன் கொண்டு வரணும்னு. ட்ரான்ஸ்லேட் பண்ணனும். ஆனா இன்னிக்கு பெஸ்ட் ட்ரான்ஸ்லேஷன் கொண்டு வந்தால்கூட, அதை வேர்ல்ட் லெவல்ல கொண்டுவர முடியாது.

முருகானந்தம்: பார்ன்ஸ் அண்ட் நோபள் போனால், words of wisdom-னு நூறு புக்ஸ் இருக்கு. But we never seen Tirukural.

சு.ரா.: அந்த புக்ஸ் எல்லாம் பாத்தீங்கனா, நம்ம திருக்குறளைவிட இன்பீரியரா இருக்கு.

முருகானந்தம்: ரைட். லாட் இன்பீரியர்.

சு.ரா.: Arabian Nights இருக்கு இல்ல. இப்ப நான் சொன்ன ரைட்டர்ஸ் குறைந்தது 4 பேராவது அரேபியன் நைட்ஸைக் குறிப்பிடுகிறார்கள். அரேபியன் நைட்ஸால் influence-ஆனவன் ஏன் மகாபாரதத்தால் influence ஆகலை. இது ஒரு பெர்டினண்ட் கொஸ்சன்தான்.

துக்காராம்: இங்கே Hare Rame, Hare Krishna இயக்கத்தில் இருக்கிற ஒரு பிரிட்டிஷ்காரர் Lord of the Rings மாதிரி - ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் நவீன வடிவத்தில் இங்லீசில் எழுதியிருக்கிறார்.

அண்ணாமலை: quality of text ஒண்ணு. இன்னொண்ணு, Marketing Cultural products. Its a separate area.

துக்காராம்: மார்க்கெட்டிங் சரியா இருந்தால் ரஜினி படத்தைக்கூட ஜப்பானில் விற்றுவிடலாம். இல்லிங்களா?

அண்ணாமலை: அது ஒருவகையான மார்க்கெட்டிங். நாம நினைக்கறது இன்டலக்சுவல் மார்க்கெட். We have to make people aware of it first. அந்த மாதிரி ஒரு மார்க்கெட்டிங் தேவை. இப்போ குழந்தைகளுக்கு நிறைய ஸ்டோரிஸ் தமிழில் இருக்கு. ஆங்கிலம் நல்லாத் தெரிஞ்ச ஒருவர் இவற்றைத் தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எழுதலாம்.

சாரதா: மகாபாரதத்தை முழுமையா எழுதாமல் - அதிலிருக்கிற few stories எடுத்து எழுதலாம். Nobel Prize winner Chandrasekar uses to teach stories from Mahabaratha in his classes. Two of other Nobel Prize winners also started quoting it from him.

அண்ணாமலை: The children here are good readers. Now their reading is restricted to what is available in the market. So, if the content and production quality match here - those who are rich - instead of Tamils donating money to construct temple, if they give money to produce quality books, that is good.

சு.ரா.: இன்டெலக்சுவல்ஸ் இருக்காங்களே. தமிழ்நாட்டில் உள்ள இன்டெலக்சுவல்ஸ் வேர்ல்ட்ல் உள்ள இன்டெலக்சுவல்ஸ்கூட ஒப்பிடத் தகுந்தவர்களே அல்ல. (பார்வையாளர்கள் சிரிப்பு.) பர்ஸ்ட் ஆப் ஆல், ஒரு சின்ன விஷயம் சொல்றேன். தமிழ்நாட்டில் சுற்றிவரும்போது, டாக்டர்ஸ், பொலிடிசியன்ஸ், ரிலிஜியஸ் பீபள் எல்லாரையும் பார்க்கிறேன். ஒரு முக்கியமான விஷயம் என் மனசுல பட்டிருக்கு. நாம எந்தக் காலகட்டத்துஅல் வாழறோம் என்ற உணர்வு அவங்களுக்கு இல்லே. நான் இன்டெலக்சுவல் என்று அதைத்தான் சொல்றேன். அந்தாளு - ரஸ்ஸல் மாதிரி படிப்பாளியா இருக்கணும்னு நான் நினைக்கறது இல்லை. நீங்க வாழக்கூடிய காலம் 2004 அப்படிங்கற உணர்வு தமிழனுக்கு இல்லை. தமிழ்நாட்டுல அவ்வளவு பேரும் குடிச்சவன் மாதிரித்தான் இருக்கான். எக்கச்சக்கமா குடிச்சவன் எப்படி இருப்பான்ன். Time-க்கும் அவனுக்கும் contact போயிடும் இல்லையா? அதேமாதிரிதான் தமிழ்நாட்டுல இருக்காங்க. இதை நான் கொஞ்சம் exaggerate பண்ணி சொல்றேன்.

துக்காராம்: ஒரு ஸ்பெசிபிக்கான உதாரணம் சொல்லுங்க.

(தொடரும்)

3 comments:

Srikanth Meenakshi said...

உழைத்து உள்ளிட்டிருக்கிறீர்கள், நன்றிகள் பல.

Raj Chandra said...

Dear PKS,

Thank you for the effort. In some SuRa's views, I am able to agree with him especially, the last one.

The discussion about how Tamil should be a world language is a thought provoking.

Regards,
Rajesh

Boston Bala said...

Thanks for the painstaking & fruitful work.

எனக்குப் பிடித்த மேற்கோள்கள்:

சாமிநாதன்: ஹார்ட் கம்பரைவிட்டு வர மாதிரி தெரியலை.

அண்ணாமலை: அவர் மொழிபெயர்ப்பில் போய்விட்டார்.

சு.ரா.: வெளியே விட்டு வரலை என்பதால் மாடர்னிடி தெரியலைன்னு இருக்கா? அவங்களோட டேஸ்ட் அது.

சாமிநாதன்: ஒண்ணு ரெண்டு பேர் இருப்பதால் அவர் அதுலதான் போகஸ் பண்றார். அதனால சொல்றேன். அதை நான் தப்புன்னு சொல்லலே.

சு.ரா.: தப்புன்னு சொல்லலே என்பதைவிட தப்புதான்னு சொல்லணும். ஏன்னா, ஒரு தமிழ் ஸ்காலர் வந்து - அவர் தமிழ் ஸ்காலரா இருந்தார்னா - அவருக்கு எல்லா sides-ம் தெரிஞ்சிருக்கணும். அட்லீஸ்ட் முக்கியமான sides தெரிஞ்சிருக்கணும். எல்லாம் அவருக்குத் தெரிந்திருக்க இயலாது. நம்மை மாதிரி மாடர்னிடி தெரியும்னு எதிர்பார்க்க முடியாது. ஆனால் முக்கியமானவை தெரிஞ்சிருக்கணும்.

சு.ரா: சிலப்பதிகாரத்தைப் பார்த்தசாரதின்னு ஒருத்தர் மொழிபெயர்த்திருக்கிறார். ரொம்ப எபர்ட் போட்டுத்தான் செஞ்சிருக்கார். செவன் டூ எய்ட் இயர்ஸ் வொர்க் பண்ணியிருக்கார். ரீச் பண்ணலையே. வேர்ல்ட்ல இருக்கற முக்கியமான எத்தனை ஸ்காலர்ஸ் - இங்லீஸ் ஸ்காலர்ஸ் - அதை ரீட் பண்ணியிருக்காங்க. அது முக்கியமான கொஸ்சன்.


--------------------------

தட்டச்சுப் பிழைகள்:
1. அண்ணாமலை: நீங்க சொல்றது அரிதான்.
2. எந்தக் காலகட்டத்துஅல் வாழறோம்