Friday, April 14, 2006

கடித இலக்கியம் - 1

"கடித இலக்கியம்" என்ற கட்டுரைத் தொடரை வே. சபாநாயகம் அவர்கள் இந்த வாரத் திண்ணையில் தொடங்கியிருக்கிறார். 45 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் நட்பு கொண்டிருக்கும் பி.ச. குப்புசாமி, அவருக்கு எழுதிய கடிதங்களின் ரஸமான பகுதிகளை இத்தொடரில் பகிர்ந்துகொள்ள விரும்புகிறார். பி.ச. குப்புசாமியின் கடிதங்களும் இலக்கியமே என்று அவர் நம்புவதே இத்தொடருக்குக் காரணம். திண்ணை இணைய இதழில் வெளியாகிற அவர் தொடர், அவரின் வலைப்பதிவிலும் இடம்பெறுகிறது. இலக்கியக் காரணம் மட்டுமில்லாமல் என்னுடைய தனிப்பட்ட ஆசாபாசங்களின் பொருட்டும் அத்தொடரின் சுட்டிகள் வாராவாரம் என் வலைப்பதிவில் சேமிக்கப்படும்.

இவ்வாரம் வெளியான கடித இலக்கியம் - 1 பகுதியின் சுட்டி http://ninaivu.blogspot.com/2006/04/1.html

No comments: