Monday, October 02, 2006

வாழ்க நீ எம்மான்

தமிழ்.சி·பி.காமில் வெளியான கண்டுணர்ந்த காந்தி - 3 கட்டுரையின் சுட்டி: http://tamil.sify.com/fullstory.php?id=14302582

மஹாத்மா காந்தி பஞ்சகம் - மஹாகவி பாரதியார்

வாழ்கநீ! எம்மான், இந்த
..... வையத்து நாட்டி லெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி
..... விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாமோர்
..... பாரத தேசந் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி
..... மஹாத்மா!நீ வாழ்க! வாழ்க!

அடிமைவாழ் வகன்றிந் நாட்டார்
..... விடுதலை யார்ந்து செல்வம்
குடிமையி லுயர்வு, கல்வி,
..... ஞானமும் கூடி யோங்கிப்
படிமிசைத் தலைமை யெய்தும்
..... படிக்கொரு சூழ்ச்சி செய்தாய்
முடிவிலாக் கீர்த்தி பெற்றாய்
...... புவிக்குளே முதன்மை யுற்றாய்!

வேறு

கொடியவெந் நாக பாசத்தை மாற்ற
..... மூலிகை கொணர்ந்தவ னென்கோ?
இடிமினல் காக்கும் குடைசெய்தா னென்கோ?
..... என்சொலிப் புகழ்வதிங் குனையே?
விடிவிலாத் துன்பஞ் செயும் பராதீன
..... வெம்பிணி யகற்றிடும் வண்ணம்
படிமிசைப் புதிதாச் சாலவு மெளிதாம்
..... படிக்கொரு சூழ்ச்சிநீ படைத்தாய்!

தன்னுயிர் போலே தனக்கழிவெண்ணும்
..... பிறனுயிர் தன்னையுங் கணித்தல்
மன்னுயி ரெல்லாங் கடவுளின் வடிவம்
..... கடவுளின் மக்களென் றுணர்தல்;
இன்னமெய்ஞ் ஞானத் துணிவினை மற்றாங்
..... கிழிபடு போர், கொலை, தண்டம்
பின்னியே கிடக்கும் அரசிய லதனிற்
...... பிணைத்திடத் துணிந்தனை, பெருமான்!

பெருங்கொலை வழியாம் போர்வழி யிகழ்ந்தாய்.
..... அதனிலுந் திறன்பெரி துடைத்தாம்
அருங்கலை வாணர் மெய்த்தொண்டர் தங்கள்
..... அறவழி யென்றுநீ யறிந்தாய்.
நெருங்கிய பயன்சேர் ஒத்துழையாமை
..... நெறியினால் இந்தியா விற்கு
வருங்கதி கண்டு பகைத்தொழில் மறந்து
..... வையகம் வாழ்கநல் லறத்தே.

2 comments:

சீமாச்சு.. said...

இப்பத்தான் உங்க 'கண்டுணர்ந்த காந்தி - 3' படிச்சு முடிச்சேன். நல்லா எழுதியிருக்கீங்க.

எனக்கும் நிறைய இஸ்லாமிய நண்பர்கள் இருக்காங்க.. நானும் 'இன்ஷா அல்லாஹ்' சொல்றவன் தான். அது சவுதியிலிருந்து கத்துக்கிட்டது.

தொடர்ந்து எழுதுங்கள்.
பாராட்டுக்கள்.
அன்புடன்,
சீமாச்சு...

மதுமிதா said...

பதிவில் போட்ட உடன் பார்த்தேன் சிவா
http://madhumithaa.blogspot.com/2006/10/blog-post.html

பதிவிற்கு நன்றி
'கண்டுணர்ந்த காந்தி' சிறப்பாய் வர வாழ்த்துகள்.