Thursday, May 27, 2010

தினம் சில வரிகள் - 26

நூலகத்தில் புத்தக அடுக்குகளில் ஒருவரையொருவர் இடித்துக்கொண்டு அமர்ந்தபடி வாசகர்களை எதிர்நோக்கித் தவம் செய்யும் எழுத்தாளர்களைப் பார்க்கிறேன்.

மகன் ரோபாட்டுகளுடன் விளையாடிக் கொண்டிருக்கிறான். மனிதர்களைவிடச் சொல்வதை அப்படியே கேட்கும் ரோபாட்டுகள் எனக்கும் பிடித்துதான் இருக்கின்றன.

குடியிருப்பில் ஒரு பெண் குழந்தை சைக்கிள் பழகுகிறது. சைக்கிள் தந்தையிடம் பதறாதே,நான் பார்த்துக் கொள்கிறேன் என்றதைக் கேட்டேன்.

3D போர்ன் வரவிருப்பதாகப் படித்தேன். சந்தோஷம்.போர்ன்ல் வரும் பெண் திரையிலிருந்து நேரடியாக இறங்கி நம்மிடம் வராதவரை இது முன்னேற்றமில்லை.

கச்சேரிக்குச் சென்று வந்ததில் பெற்ற கேள்வி. ஏன் எல்லா ராகங்களின் பெயர்களையும் பெண்களுக்கு வைப்பதில்லை.