Saturday, June 12, 2010

ஒரு போஸ்டர்

தினம் சில வரிகள் - 35

தனிப்பட்ட கடிதங்களையும் போஸ்டர் ஒட்டினால்தான் தமிழ் எழுத்தாளன் ஆக முடியும். எழுத்தும் எண்ணமும் குழுமத்தில் நண்பர் அருணாசலம் வெற்றிவேல் என் டிவிட்டுகளைப் படித்துவிட்டுக் குழுமத்தில் எழுதிய கடிதங்கள்.

கடிதம் - 2:

மற்ற ட்விட்டுகள் பற்றி தெரியவில்லை..ஆனால்..தங்களுக்கு இந்த form இயல்பாகவே , எளிதாகவே வருகிறது என்று நினைக்கிறேன்..ஆகவே தான் அற்புதமான வரிகள் அடிக்கடி தென்படுகிறது.. வாழ்த்துக்கள்.

- அருணாசலம் வெற்றிவேல்

கடிதம் - 1:

ட்விட்டர் என்றால் என்னவென்று எனக்குத் தெரியாது..பி.கே.எஸ்ஸின் ட்விட்டுக்கள் தான் எனக்கு முதல் அறிமுகம்.

பி.கே.எஸ்ஸின் ட்விட்டுகள் அருமை என்றால் சுகா கொடுத்த பின்னூட்டம் மிக அருமை..

என்னைப் போன்ற அரைகுறைகளுக்கு ட்விட் என்றால் என்ன என்று விரிவாக சொல்லவும்.

- அ.வெற்றிவேல்

என் பதில்

அருண் வெற்றிவேல் தமிழின் இலக்கியத்தையும் அரசியலையும் நன்கு அறிந்தவர். திறமை எங்கிருந்தாலும் பாரட்டக்கூடியவர். அவருக்கு என் அருமை தெரிவதில் ஆச்சரியமில்லை. அவரைப்போல, மனதில் நினைப்பதோடு நின்றுவிடாமல், இந்த மாதிரி நிறைய கடிதங்களை எனக்கு எழுதுகிறவர்களே நுட்பமான வாசகர்கள். அவர்களுக்காகவே நான் பல வேலைகளுக்கிடையிலும் விடாமல் எழுதுகிறேன்.