Wednesday, May 21, 2014

நம்பிக்கை

கிளையொடிந்த‌ செடிபோல‌
நம்பிக்கை தோற்றாலென்ன‌
வேர்கிளைத்த வாழ்விருக்க‌

நம்பிக்கை நம்மை விடலாம்
நாமதை விட்டோமில்லையென‌
வாழ்ந்திருந்து பார்ப்பதற்கே
தோல்விகள் தேவையன்றோ?

விழுந்தோம்தான்
புண்ணாற்றித் தாய்ம‌டியில்
விழுதுக‌ளாய் எழுவோம்
அதுவ‌ரை கொண்டாடு
உம் வெற்றியை
எம் கைத்த‌ட்ட‌லில்.

No comments: