ரோட் ஐலேண்ட் மாநிலத்து குடியரசு கட்சியின் செனட்டர் லிங்கன் ச்சாபி புஷ்ஷ¤க்கு வாக்களிக்கப் போவதில்லை.
மின்னசோட்டா மாநிலத்தின் முன்னாள் கவர்னரும், குடியரசு கட்சியைச் சேர்ந்தவருமான எல்மர் ஆண்டர்சன் கெர்ரிக்கு வாக்களிக்கச் சொல்கிறார்.
குடியரசு கட்சியைச் சார்ந்த முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஐஸ்னோவரின் மகன் ஜான் ஐஸ்னோவரும் புஷ்ஷ¤க்கு வாக்களிக்கப் போவதில்லை. கெர்ரியை ஆதரிக்கிறார்.
மிச்சிகன் மாநிலத்தின் முன்னாள் கவர்னரும் குடியரசு கட்சியைச் சார்ந்தவருமான வில்லியம் மில்லிக்கனும் புஷ்ஷை எதிர்க்கிறார்.
இப்படிக் குடியரசு கட்சியின் பல முக்கியப் பிரமுகர்கள் புஷ்ஷை எதிர்க்கிறார்கள். ஆனால், முக்கிய ஊடகங்களில் இத்தகைய செய்திகள் முக்கியத்துவம் பெறுவதில்லை.
இவ்விவரங்களையும் இன்னும் பல விவரங்களையும் நான் அறிய உதவிய ஜான் நிக்கோல்ஸின் கட்டுரையை முழுமையாக இங்கே காணலாம்.
Sunday, October 31, 2004
தமிழின் மறுமலர்ச்சி - 4
(தமிழின் மறுமலர்ச்சி - நூற்களஞ்சியம்: தொகுதி - 2 - பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை - வையாபுரிப்பிள்ளை நினைவு மன்றம், 'வையகம்', 2, 4-வது குறுக்குச் சாலை, இராஜா அண்ணாமலைபுரம், சென்னை - 28.)
"பாரதி யுகம்" என்ற கட்டுரையிலிருந்து...
தேசீய கவி:
தமிழ்நாட்டில் தேசபக்தியை விதைத்து வளரச்செய்தவர்களில் பாரதியும் ஒருவர். நாட்டுப்பற்றைப் பல பெரியவர்கள் பலவிதமாக வளர்த்தார்கள். கற்றவர், கல்லாதவர், செல்வர், வறிஞர், முதியர், இளையர், ஆண், பெண் அனைவரையும் வசீகரிக்கச் செய்த தன் கவிதை மூலம் பாரதி தேசபக்தியை வளர்த்தார். எனவே, தேசிய கவியென்று அவரை அழைத்துவருவது பொருத்தமே.
பாரதியின் கனவு பலிக்கும் காலம் வந்துவிட்டது. நாமே நம்மை ஆளத் தொடங்கிவிட்டோம். வறுமையைப் போக்க முயல்கிறோம். பொதுமக்கள் நன்மை ஒன்றையே அரசாங்கம் போற்ற வேண்டும் என்ற கொள்கை வேரூன்றி விட்டது.
வையம் மன்னுயி
...ராக அவ் வையகம்
உய்யத் தாங்கும்
...உடலன்ன மன்னவன்
என்ற கம்பன் வாக்கு பலித்துவிட்டது.
அரசியலில் மட்டுமின்றி இலக்கிய உலகிலும் பாரதி கனவு நனவாகிறது. முன்னர் தெய்வம், அரசர், சிற்றரசர், பிரபுக்கள் மீது கவிதை புனையப்பட்டது. சொற்களும் பொருளற்று கவிதைகள் உயிரற்றுக் கிடந்தன. சன்மானம் பெறுவதே முதல் நோக்கமாக இருந்தது. கலையுணர்ச்சி, கவிதையுணர்ச்சி முதலியன இரண்டாம்பட்சமாக இருந்தன. இக்குறைகளை நீக்க பாரதி முயன்றார். வெற்றியும் பெற்றுவிட்டார். யாசகத்தின் பொருட்டுப் பாடும் கவிஞர்கள் இக்காலத்தில் பெரும்பாலும் இல்லை.
கவிதைப் பொருள்:
பாரதி கவிப்பொருளாகப் புது விஷயங்களைக் கண்டார். பழம்பொருள்களையும் புதிய முறையில், கலைநயம் தோன்ற கவித்துவத்தோடும் உணர்ச்சி வேகத்தோடும் பாடியுள்ளார். உதாரணமாக, ஸரஸ்வதி ஸ்தோத்திரத்தை எடுத்துக் கொள்வோம். இதற்குப் பழம்பெருமை உண்டு.
சொல்லின் கிழத்தி
.....மெல்லியல் இணையடி
சிந்தை வைத்து இயம்புவல்
.....செய்யுட்கு அணியே
என்று தண்டியலங்காரம் தொடங்குகிறது.
தவளத் தாமரை
.....தாதார் கோயில்
அவளைப் போற்றுதும்
.....அருந்தமிழ் குறித்தே
எனச் சேனாவரையர் தம் உரையைத் தொடங்குகின்றனர். கம்பராமாயணத் தனியன்களில் "பொத்தம் படிக மாலை" என்று தொடங்கும் செய்யுளொன்று உளது. கம்பர், ஸரஸ்வதய்யந்தாதி ஒன்று பாடினரென்றும் கட்டுரைப்பர். அதில்,
ஆய கலைகள்
.....அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும்
.....என்னம்மை - தூய
உருப் பளிங்கு போல்வாள் என்
.....உள்ளத்தினுள்ளே
இருப்பள் இங்கு
.....வாராது இடர்
என்பதும் உள்ளது. குமரகுருபர சுவாமிகளும் சகலகலாவல்லி மாலை ஒன்று பாடினார். ஸரஸ்வதி தேவியைக் குறித்துப் பலத் தனிப்பாடல்களும் உள்ளன. அவற்றில் ஒன்று.
கடிமலர்கள் கொய்திட்டுக் கையிரண்டும் கூப்பி
அடிபணிய வேண்டிற் றளிக்கும் - நொடிவரையின்
வண்டார் கருங் கூந்தல் வஞ்சியிடைக் கிஞ்சுகவாய்
வெண்டா மரைமேல் விளக்கு
மேற்கண்ட பாடல்களில் உயிரும் ஆற்றலும் காண்பது அரிது.
வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
.....வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
கொள்ளை இன்பம் குலவு கவிதை
.....கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்
உள்ள தாம்பொருள் தேடி உணர்ந்தே
.....ஓதும் வேதத்தின் உள்நின்று ஒளிர்வாள்
கள்ளம் அற்ற முனிவர்கள் கூறும்
.....கருணை வாசகத்து உட்பொருள் ஆவாள்
என்ற பாரதி பாடலின் இனிமையும், புதுமையும், கருத்து நயமும், உண்மை உணர்ச்சியும், கவித்துவப் பெருமையும், முற்காலத்து ஸரஸ்வதி ஸ்தோத்திரங்களில் சிறிதும் இல்லை. ஸரஸ்வதி தேவியின் மனம் பாரதி எழுதியது போன்ற கவிதைகளாலேயே கனியும்.
இவ்வகைப் பாடக்களைப் பாடிய பாரதி கவிதை உலகில் ஒரு நூதன யுகத்தைத் தொடங்கி வைத்தார். அதை, 'பாரதி யுகம்' என்று அழைக்கலாம். பாரதி கனவும், கவிதையும் கவிஞர்கள் உள்ளத்தில் தூண்டா விளக்காக நின்று ஒளிர்க.
இத்துடன் 'பாரதி யுகம்' என்ற கட்டுரை நிறைவுற்றது.
அடுத்த கட்டுரை 'பாரதியும் தமிழும்' என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது. இதில் பாரதி தமிழுக்கு எவ்விதம் புத்துயிர் அளித்தார் என்பதை உதாரணங்களுடன் விளக்குகிறார் பேராசிரியர்.
(தொடரும்)
"பாரதி யுகம்" என்ற கட்டுரையிலிருந்து...
தேசீய கவி:
தமிழ்நாட்டில் தேசபக்தியை விதைத்து வளரச்செய்தவர்களில் பாரதியும் ஒருவர். நாட்டுப்பற்றைப் பல பெரியவர்கள் பலவிதமாக வளர்த்தார்கள். கற்றவர், கல்லாதவர், செல்வர், வறிஞர், முதியர், இளையர், ஆண், பெண் அனைவரையும் வசீகரிக்கச் செய்த தன் கவிதை மூலம் பாரதி தேசபக்தியை வளர்த்தார். எனவே, தேசிய கவியென்று அவரை அழைத்துவருவது பொருத்தமே.
பாரதியின் கனவு பலிக்கும் காலம் வந்துவிட்டது. நாமே நம்மை ஆளத் தொடங்கிவிட்டோம். வறுமையைப் போக்க முயல்கிறோம். பொதுமக்கள் நன்மை ஒன்றையே அரசாங்கம் போற்ற வேண்டும் என்ற கொள்கை வேரூன்றி விட்டது.
வையம் மன்னுயி
...ராக அவ் வையகம்
உய்யத் தாங்கும்
...உடலன்ன மன்னவன்
என்ற கம்பன் வாக்கு பலித்துவிட்டது.
அரசியலில் மட்டுமின்றி இலக்கிய உலகிலும் பாரதி கனவு நனவாகிறது. முன்னர் தெய்வம், அரசர், சிற்றரசர், பிரபுக்கள் மீது கவிதை புனையப்பட்டது. சொற்களும் பொருளற்று கவிதைகள் உயிரற்றுக் கிடந்தன. சன்மானம் பெறுவதே முதல் நோக்கமாக இருந்தது. கலையுணர்ச்சி, கவிதையுணர்ச்சி முதலியன இரண்டாம்பட்சமாக இருந்தன. இக்குறைகளை நீக்க பாரதி முயன்றார். வெற்றியும் பெற்றுவிட்டார். யாசகத்தின் பொருட்டுப் பாடும் கவிஞர்கள் இக்காலத்தில் பெரும்பாலும் இல்லை.
கவிதைப் பொருள்:
பாரதி கவிப்பொருளாகப் புது விஷயங்களைக் கண்டார். பழம்பொருள்களையும் புதிய முறையில், கலைநயம் தோன்ற கவித்துவத்தோடும் உணர்ச்சி வேகத்தோடும் பாடியுள்ளார். உதாரணமாக, ஸரஸ்வதி ஸ்தோத்திரத்தை எடுத்துக் கொள்வோம். இதற்குப் பழம்பெருமை உண்டு.
சொல்லின் கிழத்தி
.....மெல்லியல் இணையடி
சிந்தை வைத்து இயம்புவல்
.....செய்யுட்கு அணியே
என்று தண்டியலங்காரம் தொடங்குகிறது.
தவளத் தாமரை
.....தாதார் கோயில்
அவளைப் போற்றுதும்
.....அருந்தமிழ் குறித்தே
எனச் சேனாவரையர் தம் உரையைத் தொடங்குகின்றனர். கம்பராமாயணத் தனியன்களில் "பொத்தம் படிக மாலை" என்று தொடங்கும் செய்யுளொன்று உளது. கம்பர், ஸரஸ்வதய்யந்தாதி ஒன்று பாடினரென்றும் கட்டுரைப்பர். அதில்,
ஆய கலைகள்
.....அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும்
.....என்னம்மை - தூய
உருப் பளிங்கு போல்வாள் என்
.....உள்ளத்தினுள்ளே
இருப்பள் இங்கு
.....வாராது இடர்
என்பதும் உள்ளது. குமரகுருபர சுவாமிகளும் சகலகலாவல்லி மாலை ஒன்று பாடினார். ஸரஸ்வதி தேவியைக் குறித்துப் பலத் தனிப்பாடல்களும் உள்ளன. அவற்றில் ஒன்று.
கடிமலர்கள் கொய்திட்டுக் கையிரண்டும் கூப்பி
அடிபணிய வேண்டிற் றளிக்கும் - நொடிவரையின்
வண்டார் கருங் கூந்தல் வஞ்சியிடைக் கிஞ்சுகவாய்
வெண்டா மரைமேல் விளக்கு
மேற்கண்ட பாடல்களில் உயிரும் ஆற்றலும் காண்பது அரிது.
வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
.....வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
கொள்ளை இன்பம் குலவு கவிதை
.....கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்
உள்ள தாம்பொருள் தேடி உணர்ந்தே
.....ஓதும் வேதத்தின் உள்நின்று ஒளிர்வாள்
கள்ளம் அற்ற முனிவர்கள் கூறும்
.....கருணை வாசகத்து உட்பொருள் ஆவாள்
என்ற பாரதி பாடலின் இனிமையும், புதுமையும், கருத்து நயமும், உண்மை உணர்ச்சியும், கவித்துவப் பெருமையும், முற்காலத்து ஸரஸ்வதி ஸ்தோத்திரங்களில் சிறிதும் இல்லை. ஸரஸ்வதி தேவியின் மனம் பாரதி எழுதியது போன்ற கவிதைகளாலேயே கனியும்.
இவ்வகைப் பாடக்களைப் பாடிய பாரதி கவிதை உலகில் ஒரு நூதன யுகத்தைத் தொடங்கி வைத்தார். அதை, 'பாரதி யுகம்' என்று அழைக்கலாம். பாரதி கனவும், கவிதையும் கவிஞர்கள் உள்ளத்தில் தூண்டா விளக்காக நின்று ஒளிர்க.
இத்துடன் 'பாரதி யுகம்' என்ற கட்டுரை நிறைவுற்றது.
அடுத்த கட்டுரை 'பாரதியும் தமிழும்' என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது. இதில் பாரதி தமிழுக்கு எவ்விதம் புத்துயிர் அளித்தார் என்பதை உதாரணங்களுடன் விளக்குகிறார் பேராசிரியர்.
(தொடரும்)
Thursday, October 28, 2004
கங்கவரம் - பி.ச. குப்புசாமி
[1943ல் பிறந்த பி.ச.குப்புசாமி அறுபதுகளில் நிறைய எழுதியவர். அப்போது சந்திரமௌலி, குயிலி முதலிய புனைப்பெயர்களிலும் எழுதியிருக்கிறார். ஆனந்த விகடன் அறுபதுகளில்(?) மாவட்டவாரியாக சிறப்பிதழ்கள் வெளியிட்டு வந்தது. வையவனுடன் இணைந்து அந்தக் காலத்தில் வடாற்காடு மாவட்ட விகடன் சிறப்பிதழைத் தயாரித்திருக்கிறார். இவர் கதைகளை நட்சத்திரக் கதைகளாக தினமணி கதிர் வெளியிட்டது. இவர் 1960களில் எழுதி வார இதழ் ஒன்றில் வெளியான கதை கங்கவரம். (எந்த இதழில் எப்போது வெளியானது என்கிற விவரங்களை இனிமேல்தான் தேட வேண்டும்.) இருபதாம் நூற்றாண்டின் நூறு சிறந்த சிறுகதைகளைப் பல தொகுதிகளாகத் தொகுத்து எழுத்தாளர் விட்டல்ராவ் கொடுக்க, கலைஞன் பதிப்பகம் "இந்த நூற்றாண்டுச் சிறுகதைகள்" என்ற வரிசையை வெளியிட்டது. (விட்டல்ராவைப் பற்றி வெங்கடேஷ் அவ்வபோது எழுதியிருக்கிறார். அவற்றுக்கான இணைப்புகளைத் தேடித் தர இயலவில்லை. மன்னிக்கவும்.) விட்டல்ராவின் இந்த நூற்றாண்டுச் சிறுகதைகளின் தொகுப்பொன்றில் - நூறு கதைகளுள் ஒன்றாக - இடம் பெற்றது கங்கவரம்.
பி.ச.குப்புசாமி சங்க இலக்கியத்திலும், பக்தி இலக்கியத்திலும் ஆழ்ந்த ஈடுபாடு உடையவர். டாக்டர் மு.வ.வுடன் சேர்ந்து தமிழ் பயின்ற தமிழ் வித்வானான தன் பெரியாப்பாவால் சிறுவயது முதலே பண்டைத் தமிழ் இலக்கியங்களுடன் பரிச்சயம் ஏற்படுத்திக் கொண்டவர். மரபுக் கவிஞர். "எங்கள் வடாற்காட்டில் வானாதி பூதங்கள் வரையாது பொழிவதில்லை" என்று தொடங்குகிற மரபுக்கவிதை விகடன் வடாற்காடு மாவட்ட மலரில் பிரசுரமானது. நீதிக் கட்சியிலும் திராவிட இயக்கங்களிலும் தோய்ந்த குடும்பத்திலிருந்து எழுந்த முதலாவது தேசிய, இடதுசாரிக் குரல் இவருடையது. ஏப்ரல் 1974 கண்ணதாசன் மாத இதழில் வெளியான இவரின் "ஜெயகாந்தன் - என் குறிப்புகள்" ஜெயகாந்தனை வெகுஅருகில் இருந்து அவதானித்த ஒரு நண்பரின் தேர்ந்த டயரிக் குறிப்புகளாகும். ஜெயகாந்தனையும் அவர் எழுத்துகளையும் நன்கறிந்த, சரியாகப் புரிந்து கொண்ட நான்கு நண்பர்களுல் ஒருவராக இவரை, "ஜெயகாந்தன் ஒரு பார்வை" தொகுப்பின் ஆசிரியர் கே.எஸ்.சுப்ரமணியன் குறிப்பிடுகிறார். எழுத்தின் மீது இருக்கிற மதிப்பினால் 1970களுக்குப் பிறகு எழுதுவதைக் குறைத்துக் கொண்டார். 1990-களில் வாரம் ஒரு பிரபலம் ஆசிரியராக இருந்து குமுதம் வார இதழைத் தயாரித்தார்கள். ஜெயகாந்தன் தயாரித்த குமுதம் வார இதழில், ஜெயகாந்தன் கேட்டு வாங்கி பிரசுரித்த இவரின் சிறுகதை "விருது" ஒரு நல்லாசிரியரைப் பற்றியது.
ஓர் ஆரம்பப் பள்ளியின் தலைமையாசிரியராக - தமிழ்நாட்டு மூலைகளில் முடங்கிக் கிடந்தாலும் அடையாளமும் சுவாசமும் இழந்துவிடாத கிராமங்களிலும் மலையடிவாரங்களிலும் - 35 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர். பாரதி சொன்ன புண்ணியத்திலும் புண்ணியமென்ற ஆசிரியப் பணியை அதே உற்சாகத்துடனும் அர்பணிப்புணர்வுடனும் கடைசிவரை செய்தவர். தன் மகனின் திருமணத்தைக் கூட முன்வரிசைகளில் உட்கார்ந்திருந்த தன் மாணவக் குழந்தைகளின் நடுவில் சப்பணமிட்டு அமர்ந்து பார்த்தவர். இடதுசாரி ஆசிரியர் இயக்கங்களில் பங்கெடுத்துக் கொண்டவர். ஆசிரியர்கள் போராட்டத்தில் சிறைகள் சென்றவர். ஒவ்வொரு முறையும் சிறையில் பலநாட்கள் இருந்தவர். சிறை வாழ்க்கையைக் கூட எவ்வளவு இன்பமாய் அனுபவிக்க முடியுமோ அப்படி அனுபவித்து வாழ்ந்தவர். வாழ்க்கை கொணர்கிற வாய்ப்புகளையும் தருணங்களையும் அவை எப்படிப்பட்டதாயினும் ரசிக்கவும் அவற்றில் திளைத்து மகிழவும் முனைபவர் இவர் என்பதற்கு இது உதாரணம். ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் போராடுவதை ஒரு வழக்கமாக ஆக்கிக் கொண்டபோது, அதுபற்றிய ஆக்கபூர்வமான விமர்சனத்தையும் முன்வைக்கத் தயங்காதவர்.
இவர் தேர்ந்த இலக்கிய ரசிகரும், புகழ்பெற்ற மேடைப் பேச்சாளரும் ஆவார். அவருக்கும் எனக்குமான உறவை நான் பொதுவில் சொல்லிக் கொண்டதில்லை. அவர் எழுத்துகளை விமர்சிக்க விரும்புபவர்களுக்குத் தடையாக இருக்கக் கூடாது என்பதாலும், அவர் ஒளியில் நான் பிரகாசிக்கிற அபிப்பிராயம் ஏற்படுத்தக் கூடாது என்பதாலும். என் வாழ்க்கையில் நான் அதிகம் இணங்கிப்போகிற மற்றும் அதிகம் முரண்டு பிடிக்கிற - இணங்கினாலும் முரண்டினாலும் நெருக்கம் தவறவிடாத - என் நண்பர்களுள் ஒருவர்.
இச்சிறுகதையைப் பல பதிவுகளாகப் பிரித்துப் போடுவது வாசிப்பு அனுபவத்தை பாதிக்கக்கூடும் என்பதால் முழுவதையும் இந்தப் பதிவிலேயே தருகிறேன். இனி கதைக்குள்...]
அவன் பெயர் சாரங்கன்.
படிப்பை முடித்துவிட்டு, முதன்முதலாக உத்தியோகத்தில் சேர்ந்து அந்த ஊருக்கு வருவதற்கு முன், அவனுக்குக் கங்கவரத்தைப் பற்றி எதுவும் தெரியாது. வீட்டையும் பெற்றோரையும் விட்டுவிட்டு ஓர் அயலூரில் வந்து வசிக்க வேண்டியிருக்கிற முதற்சந்தர்ப்பம் அவனுக்கு அதுதான். அந்த மாறுபாடான உணர்ச்சியுடனும், 'வாழ்க்கையை மேற்கொள்கிறோம், அதை எதிரிடுகிறோம்' என்கிற குறுகுறுப்புடனும் அவன் கங்கவரத்துக்கு வந்து சேர்ந்தான்.
கங்கவரம் ஒன்றும் பெரிய ஊர் அல்ல. ஆனால், அங்கு சற்றுப் பிரசித்தி பெற்ற ஒரு கோயில் ஒன்று இருந்தது. வருஷந்தோறும் அதில் நடக்கும் விழாக்களுக்கு அக்கம் பக்கங்களில் இருந்து நிறைய ஜனங்கள் வந்து கொண்டிருந்தனர். எனவே, அது ஒரு கிராமம் என்கிற நிலையிலிருந்து தப்பிப் பிழைத்துக் கொண்டு, தபாலாபீஸ், ஆஸ்பத்திரி மற்றும் சில அரசாங்கக் காரியாலங்களோடு கூடிய ஓர் சுமாரான சிற்றூராக விளங்கியது.
ஊரைச் சுற்றிலும் கழனிகள். சற்று தூரத்தில், எங்கோ புறப்பட்டு எங்கோ போய் முடிகிற ஓர் ஆறு. ஜாமம் தவறாது முழங்குகிற மலைக்கோயிலின் மணியோசை. கால மாற்றங்கள் சீக்கிரம் வந்து கலந்து விடாததோர் மூலைத் தனிமை. இவற்றால், கங்கவரம் வாழ்க்கையின் வேகத்தையன்றி அதன் ஆழத்தைக் காட்டுவதாய் அமைந்திருந்தது.
அதிலும் அதன் அக்ரஹாரம்...
அமைதி என்பதை அங்குதான் பார்க்க வேண்டும். இரண்டே தெருக்கள்தான்; வீடுகளும் எண்ணிக் கச்சிதமாக இருந்தன; புழக்கடைகளில் தென்னை, வாதா மரங்களின் நிழல் கவிந்திருக்கும். மத்தியான நேரத்தில்கூட, அந்த நிழலில், ஆத்ம சுகத்தின் அனுபவம் போன்று பட்சிகள் கூவிக் கொண்டிருக்கும். ஒவ்வொரு வீட்டிற்கும் வழிவழி வந்த மானியங்களும், அல்லது புதிய பரம்பரையினர் தலையெடுத்துச் சேர்த்த சொத்துக்களும் உண்டு. அவ்விதமின்றி, கற்பூரம் போலக் காலக் காற்றில் இருந்ததே தெரியாமல் போன வீடுகளும் சில உண்டு.
இரண்டு தெருக்களிலும் பெரிய தெரு தென்னண்டைத் தெருதான். அங்கு சுமார் நாற்பது வீடுகள் இருக்கும். அந்தத் தெருவின் மேல்முனையிலுள்ள ஒரு வீட்டின் அறையில்தான் சாரங்கனும், அவனோடு அவன் காரியாலயத்தில் வேலை பார்க்கும் இன்னொரு நண்பனுமாகக் குடி வந்தார்கள்.
வெகு சீக்கிரமே சாரங்கனுக்கு அந்த வாசம் பிடித்துப்போய் விட்டது. ஆற்று நீரில் ஸ்நானம், கழனிகளிலிருந்து வீசும் குளிர்ந்த காற்று, உற்சவங்களின்போது அங்கு வருகிற புதிய புதிய மனித முகங்கள், அவற்றில் தென்படுகிற மனித வாழ்க்கையின் விதவிதமான அழகுகள் - இவ்வாறாகக் கங்கவரத்தை அனுபவித்துக் கொண்டு வந்தான்.
கொஞ்ச நாட்கள் கழிந்தன.
கங்கவரத்து அக்ரஹாரத்தில் இருள் சூழ்ந்து, வீடுகளிலெல்லாம் விளக்குகள் எரியத் தொடங்கி விட்டன. நாற்புறங்களிலும் வானத்தின் எல்லைகள் உலகின் மீது கவிய வருவன போன்றும், வாழ்வின் சோகத்தால் இறுகியவை போன்றும் தோற்றங் கொண்டன. எதையோ அலுத்துக் கொள்வதற்காகவோ, இன்ப மிகுதியால் கலகலவெனச் சிரிப்பதாகவோ அவ்வப்பொழுது சில மனிதக் குரல்கள் உணர்ச்சியின் ரஸம் மிகுந்து ஒலிப்பதைத் தவிர மற்றபடி எங்கும் மௌனமே குடி கொண்டுவிட்டது.
வழக்கமாக அந்த நேரத்தில்தான் சாரங்கன் சிறிது தொலைவிலுள்ள ஆற்றங்கரையில் உலாவி விட்டு வந்து தென்னண்டைத் தெருவில் நுழைவான். அதுவரை எதிரே ஆள் தெரியாத சிந்தனையில் கவிழ்ந்து வருகின்ற அவன் முகமும் அப்பொழுதுதான் நிமிரும். வீதியின் இரு மருங்கிலும் ஜன்னல்களிலும், அன்றைய வாழ்க்கை அவர்களுக்குத் தந்த இன்பத்தின் பிரதிபலிப்பு போன்ற சாயல் கொண்ட மக்களின் முகங்களையும் காட்சிகளையும் அவன் காண்பான். அதோடு அந்த வீடுகள் தங்கள் வெற்றியின் சின்னமாக வெளியே அனுப்புகிற மின்சார வெளிச்சத்தையும், இதுவரை இருட்டில் பழகிய தன் கண்கள் கூசக் கடப்பான்.
அந்த வீடுகளெல்லாம் புதிய முயற்சிகளினால் ஓங்கி எழுந்துள்ள, ஓரளவு செல்வத்தின் பசையும் அதனால் களிப்பின் துள்ளலும் நிறைந்து விளங்குகிற வீடுகள்.
ஆயினும் அவன் மனம் அவற்றில் அதிகமாகச் சஞ்சரிப்பதில்லை. அவற்றில் எந்த வீட்டையும் பொதுவாயன்றி வேறு எவ்வித விசேஷ உணர்ச்சியுடனும் அவன் நோக்குவதில்லை. ஆனால், பதினைந்து வீடுகள் தாண்டி, அதோ, அந்த வீடு வரும்பொழுதுதான் அவனது முழுக்கவனமும் அங்கு பறிபோய் விடும்.
அந்த வீடு, அந்தத் தெருவிலிருக்கும் மற்ற எல்லா வீடுகளிலிருந்தும் வித்தியாசப்பட்டு, விதியெனும் நம்பிக்கையின் சமாதியின் மீது இயங்குவதைப் போலத் தோற்றமளித்தது. அதன் இரண்டு ஜன்னல்களும் அங்கு மனங்கள் மகிழ்ச்சியற்றுப் போனதைப் புலப்படுத்தின. அவ்வீட்டினுள் நுழைந்து விட்ட இருளே அதன் வாசலிலும் தேங்கி நின்றது. அதை அணுகுகிற போதெல்லாம், அவன் தன் நடையை மிகவும் மெதுவாக்கிக் கொண்டு, முகத்தைத் திருப்பி, அந்த வீட்டு வாழ்வின் பிரதான சோகமாகிய ஓர் உருவத்தைத் தனது கண்களால் தேடுவான்.
அதுதான் காமு!
அவள் ராகவைய்யங்காரின் மகள். அவனுடைய அன்றாட அனுதாபம். அந்த வீட்டின் சபிக்கப்பட்ட அழகு.
பெரும்பாலும் அந்நேரங்களில், அவள் முன்கூடத்தில் உட்கார்ந்திருப்பாள். வீதியிலிருந்து பார்த்தாலே அது அவனுக்கு நன்கு தெரியும். பார்த்த சில விநாடிகளுக்கெல்லாம் அவளையும் அவ்வீட்டையும் அவன் கடந்து விடுவான். ஆனால் அதற்குள்ளாகவே அவள் முகத்தின் உணர்ச்சி பாவங்கள் தங்களுக்குரிய முழுவேகத்தோடு வந்து தாக்கி, அவன் மனத்தில் பதிந்து விடும். அதிலும் அந்தக் கண்கள்... அவற்றைப் பார்த்த பிறகு அவனது சிந்தனையின் கிளர்ச்சி வெகுநேரம்வரை ஓய்வதில்லை.
உயிரின் நிராசையை அவன் அந்தக் கண்களில் பார்த்தான். தன் வாழ்க்கையின் விதியையே அறிந்து கொண்டுவிட்டு, 'சரி, இனி இதையன்றி வேறில்லை' என்கிற நிலையில் உலக இயக்கங்களில் ஒப்புக்குப் பங்கு கொள்கிற ஒரு பாவனையை அவளது பார்வையில் கண்டான்.
அவை அவனை வெகுவாகப் பாதிக்கும்.
அதற்குப் பிறகு, தெருக்கோடியிலிருக்கும் தனது அறைக்கு அவன் சென்று சேரும்வரை, வாழ்வின் இயல்புகளோடு திமிறி முரண்டு கொள்வதும், அது ஏன் அவ்வாறு என்று தவிப்பதும், இரண்டுமின்றி இதை எவ்விதத்திலும் தீர்க்க முடியாதோ என்கிற தனியானதோர் ஊமைச் சோகமான போக்குகளில் அவன் மனம் சென்று மீளும். அவனது அறை நண்பன் அவனை எதிர்ப்பட்டு அவனோடு ஏதாவது விவகாரங்களைப் பேசிக் கல்லெறிந்த பிறகுதான், அவன் தன்னிலை கலைந்து வேறு காரியங்களில் ஈடுபடுவான்.
அவளை முதன்முதலில் பார்த்த ஆரம்ப நாட்களில் அவனுக்கு இவ்விதமெல்லாம் ஏற்படவில்லை. சாதாரணமாகப் பெண்ணின் அழகு அவனை எவ்விதம் தாக்குமோ, அப்படித்தான் அவனுக்கும் இருந்தது. அதிலும் இளைஞனென்றாலும் அவன் இருபது வயதுக்கும் குறைந்தவன் ஆதலால், அவள் அழகின் இன்பத் தோற்றங்களையே தனது வியப்பு மாறாத கண்களால் கண்டு கொண்டு வந்தான்.
அப்படியிருக்கையில் போகப் போக அவள் அழகு மங்கிப்போய், அவள் வாழ்க்கையின் அர்த்தமே அவனுக்கு ஓங்கித் தெரிந்தது, அவன் சற்று வித்தியாசமானதோர் இளைஞனாக இருந்ததால்தானோ என்னவோ?
உண்மை அதுதான். அவனுக்கு வயது பத்தொன்பது இருக்கும். கற்பனாவஸ்தை நிறைந்த பருவமொன்றின் சரியான மாதிரியாய் இருந்தான். அதில் அவனது இயல்பின் கவிதையும் சற்றுக் கலந்திருந்தது. உணர்ச்சிகளில் இளகுவதற்கு இது போதும். ஆனால் அதோடு அவன், சுக துக்கங்கள் என்கிற உலக அனுபவங்களின் உரமேறி மரத்துப் போகாதவனாய், வாழ்க்கையையும் அதன் ஒவ்வோர் அம்சத்தையும் மிகவும் அபூர்வமானதாய்க் கருதிக் கரைந்து போகிறவனாய் வேறு இருந்தான்.
காமுவையும் அவ்வாறே கருதினான்.
காமுவுக்கு வயது இருபத்தைந்து - ஏன் இருபத்தாறோ, இருபத்தேழோகூட இருக்கும். பூரிப்போடு இருந்தால் அது யௌவனம் இன்னும் ஆட்சி செய்கிற பருவம்தான். ஆனால் இவளோ, தன் கவலைகளால் சாம்பியது போல் தோன்றினாள். பூத்து வாடிய காம்போடு தலை சாய்த்ததோர் கனவு மலர் போல இருந்தாள். தன் வாழ்க்கையின் விதியை அங்கீகரித்து, பெண் மனத்தின் சஞ்சலங்களை அடக்கிக் கொண்டது போன்ற விழிகள். வார்த்தைகள் உறைந்தது போன்ற உதடுகள். மத்தியான நேரத்தில் வெறுந்தரையில், புறங்கையைத் தலைக்கு வைத்துக் கொண்டு தூங்கி எழுந்தாளானால் முகமெல்லாம் சிவந்து குழம்பிப் போகுமளவுக்கு உடல் நிறம். ஆசைகளால் விம்மி, பின் அவை அழிந்ததனால் சோர்ந்தது போன்ற அவயங்கள்.
முதன்முதலில் அவளை ஆற்று நீரில் ஈரப்புடவையோடு பார்த்தபொழுது 'வெட வெட'வென்று நீண்டு மெலிந்த அவள் சிவந்த உடலில் ஒருவிதமான காட்சியின் வேகம் கமழ்ந்ததையும் அவன் உணர்ந்தான்.
ஆனால் நாளடைவில், அவள் அழகின் அந்தச் சிறு போதையுங்கூட அவன் பார்வைக்கு அற்றுப்போயிற்று. அவளது வேறு தன்மைகளை எல்லாம் அவன் சரிவர உணரத் தலைப்பட்டான்.
அவன் குடியிருந்த தெருவிலேயே காமுவின் வீடும் இருந்தது, ஒருநாளைக்கு அவன் அவளைப் பலமுறையும் பாக்கச் சந்தர்ப்பமளித்தது...
தன் வீட்டுத் திண்ணையில் தூணோரம் அமர்ந்து, எதிர்வரிசை வீடுகளில் யாரையாவது, எந்தக் காட்சியையாவது பார்த்துக் கொண்டிருப்பாள். கூடத்தில் உட்கார்ந்து, ஆலிலைகளையோ, கிழிந்துபோன பழைய துணிகளையோ தைத்துக் கொண்டிருப்பாள். அல்லது பேசாமல் எதிர்வீட்டுக் கூரையையோ, அதைக் கவிந்திருக்கும் வானத்தையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பாள். பொழுது சாய்ந்து இருட்டிய பிறகு, அதே கூடத்தில் அவளைச் சுற்றி அக்கம்பக்கத்துப் பிள்ளைகள் மூன்று நான்குபேர் இருப்பார்கள். எல்லோருக்கும் மத்தியில் ஒரு லாந்தர் விளக்கு இருக்கும். அவர்களுக்கு அவள் பாடம் சொல்லிக் கொண்டிருப்பாள். சில்லென்று ஜலம் தெளித்தது போன்ற குரல். சற்றுக் குனிந்தாளானால், நெருங்கி வந்த அவள் முகத்தில் விளக்கின் ஒளி பட்டு கன்னங்கள் செவ்வொளி கொள்ளும்.
அப்பொழுதெல்லாம் சாரங்கன் அவளைப் பார்த்தான். காமுவும் அவன் தன்னைப் பார்ப்பதைப் பலமுறை பார்த்தாள். அவனையும் பிற ஆடவர்களையும் காணும்போது, சில பெண்களின் பொய்க்கூச்சம்போல் அவள் தன் குணங்களைக் கொச்சைப்படுத்திக் கொள்ளவில்லை. அவர்களை நேர்கொண்டு பார்த்தாள். ஆனால், ஒரு நிலையிலிருந்து பிறழாததுபோல் அவள் கண்களில் சலனமிருக்காது. யாராவது தன்னை அதிகம் கவனிக்கிறார்கள் என்று தெரிந்தால் மௌனமாகவும் மெதுவாகவும் தன் முகத்தை மறுபுறம் திருப்பிக் கொள்வாள். அவ்வளவுதான்.
அவளுடைய அந்தக் கௌரவம் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.
இடையில், அவளைப்பற்றிய பிற விவரங்களையும் அவன் அறிந்தான்.
காமுவின் தந்தை ராகவைய்யங்காருக்கு ஒரு பௌராணிகர் போலவும், பண்டிகை நாட்களில் அந்தந்த ஊர்களுக்கு சென்று பஜனை, கதாகாலட்சேபம் முதலியவற்றில் கலந்து கொள்கிற ஒரு பாகவதர் போலவும் ஏதோ தொழிலென்று அறிந்தான். ஆனால், அதில் பிரமாதமாக ஏதும் இல்லாவிட்டாலும் சுமாராகக் கூட வருவாய் இல்லை என்று தெரிய வந்தது. அவரது முதுமையும், அத்தொழிலுக்கொவ்வாததோர் மெலிந்த சுபாவமும் அதற்குக் காரணமாயிருக்கலாம். அவரைப் பார்க்கும்பொழுது தன்னுடைய இத்தனை வருட வாழ்க்கையில் அவர் ஆடிக் கலகலத்துப்போன அந்த வீட்டைக் காப்பாற்றி வைத்திருப்பதே ஒரு பெரிய காரியம் என எண்ணத் தோன்றிற்று. மனிதர் அவ்வளவு பலவீனமாயிருந்தார்.
இப்படிப்பட்டவர், தான், தன் மனைவி, மகள் காமு, ஒரு பையன் ஆகிய நால்வரின் அன்றாட வாழ்க்கையை வழிநடத்திக் கொண்டு வருவதே பாராட்ட வேண்டியதாயிருக்கும்பொழுது, காமுவை இங்ஙனம் கனவுகளின் சருகாய், அவளையே அவளுக்கு வதையாய் இன்னும் அந்த வீட்டில் வைத்திருப்பது குறித்து யாரும் அவரைக் குறை சொல்ல முடியாது.
காமுவுக்கேகூட அவர்மேல் அந்த ஆதங்கம் இல்லை போலிருந்தது. தன் தகப்பனாரோடும் குடும்பத்தாரோடும் அவள் பழகுகிற பல காட்சிகளைச் சாரங்கன் பார்த்திருக்கிறான். அவள் தன் உறவுகளின் மீது கொண்டுள்ள உருக்கமான அன்பு அவற்றில் வெளிப்படும்.
ஒரு சமயம் ஜன்னலண்டை உட்கார்ந்து, தன் தகப்பனார் சொல்லச் சொல்ல அவள் ஏதோ கடிதம் எழுதிக் கொண்டிருந்தாள். அப்பொழுது ராகவைய்யங்கார் "எழுதிட்டியாமா?" என்று கேட்டதும், அதற்குக் காமு, "ஊம்" கொட்டி விட்டு, "என்னமோப்பா, நீங்க அவாளையெல்லாம் மதிக்கிறது எனக்குப் பிடிக்கல்லே" என்று சொன்னதும் சாரங்கன் செவிகளில் விழுந்தன. இவை ஒரு சம்பாஷணையின் சாதாரணத் துணுக்குகள்தான். ஆயினும், பனித்துளியில் பெரிய பெரிய தோற்றங்கள் பிரதிபலிப்பதுபோல, வாழ்க்கையின் பல ஆழ்ந்த விஷயங்கள் இவ்வித சின்னஞ்சிறு கோணங்களில்தான் வெளிப்படுகின்றன. அன்று காமுவின் குரலில், அவள் தன் தகப்பனாரின் மீது கொண்டிருக்கிற மரியாதையும், அவரிலும் தாழ்ந்த ஓர் உலகத்திலிருந்து அவள் அவரது கௌரவத்தைக் காப்பாற்ற விரும்புவது போன்ற ஒரு முயற்சியும் தென்பட்டன. தன் வாழ்க்கை இவ்வாறு தடைபட்டு நிற்பது குறித்து, அவளுக்குத் தன் தகப்பனாரின்மீது வருத்தமிருக்கும் என்று அன்றிலிருந்து அவனால் நம்ப முடியவில்லை.
இன்னொரு சம்பவமும் இதேபோல யதேச்சையாக நடந்ததுதான். அவளது தம்பி ஐந்தாவதோ என்னவோ படிப்பவன். ஒரு நாள் இவள் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவன் வந்து அவள் கால்மாட்டில் வீட்டு வாசற்படிகளில் உட்கார்ந்தான். அவன் முகம் சற்றுப் பரிதாபகரமாக இருந்தது. அவன் முகத்தைத் தன் மடிமேல் சாய்த்து, காதோரத்துக் கிராப்பை விரல்களால் கோதிவிட்ட வண்ணம் கிட்டக் குனிந்து, "பழையது இருக்கு. நல்ல மோராட்டம் கரைச்சுத் தரேன். சாப்பிடறியா?" என்று கேட்டாள். அதைப் பார்த்தபொழுது சாரங்கன் மனமிளகிப் போனான். அவனுக்கு உணர்ச்சிக் கண்ணீர் ததும்பியது. அன்று காமுவின் குரலும் பரிவும், துன்பங்களின்போது மனித இதயம் அடைய வேண்டிய பேரன்பின் உருவமாக அவனுக்குத் தோன்றின.
எனவே, அந்தக் கங்கவரத்து அக்ரஹாரத்திலேயே இவ்வளவு வயதாகியும் இன்னும் திருமணமாகாமலிருக்கிறவள் காமு ஒருத்திதான் என்கிற விஷயத்தை அவனால் சகிக்க முடியவில்லை. அழகின் பூர்ணம் அவ்வாறு கூடி வந்தவளும் பேதலிப்பற்ற அறிவின் அம்சங்களை வாய்த்தவளுமான அத்தகைய ஒரு பெண் எவ்வாறு ஒருவராலும் அங்கீகரிக்கப்படாமல் போனாள் என்று அவன் ஆச்சரியப்பட்டான். இந்த இடத்தில் அவன் சமூகத்தில் வாழ்க்கை முறைகள் அமைந்திருக்கும் முரண்பாடுகளைப் பற்றிய அறிவுத் தெளிவின் அமைதியோடின்றி, தனது கனவுப் போக்கான இளமனதில் உந்தியெழும் சொந்த உணர்வுகளின் வேகத்தோடு காமுவின் சோகத்தை நோக்கினான். அதனால் அவள் அவனுக்கு ஓர் பெரிய சமூகக் கொடுமையாகத் தோன்றினாள்.
ஒவ்வொரு முறை அவளைப் பார்க்கும் பொழுதும் அவனுக்கு இந்த உணர்வு வலுத்து, நாளடைவில் அவளைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் அவன் மனத்தில் "ப்சப்" என்று ஓர் ஆழ்ந்த பரிதாப உணர்ச்சி உண்டாகத் தோன்றியது.
அது, அவள் என்றைக்கும் தன்னை நல்லபடி அலங்காரம் செய்து கொள்வதில்லை, அவளை யத்த நாலு பெண்கள் சிரித்துப் பேசிச் சந்தோஷமாயிருக்கும் கும்பலில் கலந்து கொள்வதில்லை. பொதுவாக விவாகமாகாத இளம்பெண்கள் கண்களில் ஒரு கனவின் ஆவலோடு காண்பதாகிய எந்தக் காட்சியிலும் அவ்வளவாக லயிப்பதில்லை என்கிற சிறு விஷயங்களை யெல்லாம் கவனித்து அதனாலெல்லாம் மேன்மேலும் வளர்ந்தது.
இவற்றை யெல்லாம், மனம் தாங்காத சில வேளைகளில், தன் அறை நண்பன் சிதம்பரத்திடம் மிகவும் வருத்தப்பட்டுத் தெரிவித்துக் கொள்வான்.
தனக்குச் சம்பந்தமில்லாத ஒரு பெண்ணைக் குறித்த இவனது அதிகப்படியான அக்கறையைச் சிதம்பரம் ஆரம்பத்தில் வேறுவிதமாகத்தான் நினைத்தான். ஆனால் இருவரும் நெருங்கிப் பழகி அவர்களுக்கிடையே திரைகள் அகன்ற பிறகு, சாரங்கனின் தவிப்புக்கு அவனால் போதிய நியாயத்தை உணர முடியாவிட்டாலும், காமுவைப் பற்றிய அவனது மனோபாவங்களில் இரகசியமாகவேனும் ஏதும் சந்தேகங் கொள்ளாதவனானான்.
பல சமயங்களில் இருவரும் பேசிக் கொள்வதுண்டு.
"உண்மைதான். அதைப் பார்த்தால் கொஞ்சம் பரிதாபமாய்த்தான் இருக்கிறது!" என்று சிதம்பரம் ஒப்புக் கொள்வான். எனினும், அடுத்தாற்போல, "ஆனால், உலகத்தில் இதைப் போல் இன்னும் எத்தனையோ பேர் இல்லையா?" என்பான்.
சாரங்கன், அதை மறுத்ததோ உணராமல் இருந்ததோ கிடையாது.
ஆனால், பிரச்னை பொது என்பதால், அப்பிரச்னையின் சாட்சிபோல் பிரத்தியட்சமாக நிற்கும் ஒரு தனிப் பாரத்தின் மீது சார்ந்து செல்கிறவன் உணர்ச்சிகளை அவனால் விலக்கிக் கொள்ள முடியவில்லை.
"அது சரி சிதம்பரம்! ஆனால், இது சாதாரணம் என்று சும்மா இருக்க முடியவில்லையே! நேற்றுக்கூட பார்! மாடத்தில் அகல்விளக்கை வைத்துவிட்டுத் திரியைத் தூண்டிக் கொண்டிருந்தது. முகம் எப்படி யிருந்தது தெரியுமா? அதுவும் ஏற்றப்பட வேண்டிய ஒரு விளக்கு போலவே இருந்தது! அதற்கு மட்டும் மணவாழ்க்கை என்று ஒன்று நேராவிட்டால்... பாவம், அது ரொம்பக் கொடுமை!" என்றான்.
"ஏன் நேராமல்? இப்பொழுது இல்லாவிட்டாலும் இன்னும் ஐந்து வருடம் கழித்தாவது எவனாவது வருவான்!"
சாரங்கனுக்கு இதைத்தான் சகிக்க முடியவில்லை. இவ்வளவு அருமையான பெண் - இப்பொழுதே அதிக காலமாகி விட்டது - இன்னும் ஐந்து வருடம் கழித்து - அதுவும் எவனாவது...
வாழ்க்கையில் அருமைகளெல்லாம், எவ்வளவு அற்பமாகி விடுகின்றன!
அவன் இலட்சியங்களும் கனவுகளுமே வாழ்க்கையென்று கருதியவன். ஏடுகளால் மட்டுமே உலகத்தைப் பார்த்தவன். அவனுக்கு அவன் உணர்ச்சிகளே உலகம்.
ஆகையால், காமுவும், காமுவின் வாழ்வும் அவனை இயல்புக்கு மீறித் தொட்டன.
அந்தத் தெருவிலிருக்கும் வீடுகளின் ஆசாபாசங்களை அவன் போகிற போக்கில் காதிலே கேட்க நேரும். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில், அவ்வீடுகளின் திண்ணைகளிலே பூத்துச் சிரிக்கின்ற புகழ் வெளிச்சத்தில் பெண்களின் உற்சாகம் போட்டியிடும். புக்ககம் போகிறவர்களும் பிறந்தகம் வருகிறவர்களுமாக அவ்வப்பொழுது பெண்கள் அவ்வீடுகளின் காட்சிகளை இன்பமும் சோகமுமாகச் செய்வார்கள்.
அந்நேரங்களில் எல்லாம் சாரங்கனின் நினைவுகள் கடைசியில் காமுவிடம் சென்று முடிந்தன.
கடைசியில் ஒருநாள் அவன் கங்கவரத்தை விட்டுப் பிரிய வேண்டியவனானான். உத்தியோகம் வெகுதூரத்தில் வேறோர் ஊருக்கு மாறிவிட்டது.
புறப்பட்டுப் போகுமுன்பு கங்கவரத்தின் பல அம்சங்கள் அவன் கவனத்துக்கு வந்து அவனை மிகவும் வேதனைப்படுத்தியது.
காமு கூடத்தான்.
அவள் இன்னும் அவ்வாறே இருந்தாள். வீட்டுத் திண்ணையிலும் கூடத்திலும் இவனுக்குக் காட்சிப் பொருளாக இருந்தாள். தினந்தினமும், ஒரேமாதிரி, தேங்கிய வாழ்க்கையன்றின் சின்னம்போல் இருந்தாள்.
அது அவனுக்கு ரொம்ப அநியாயமாகப் பட்டது. அறிமுகம் முதல் கடைசிவரை தான் அவளை அதே மாதிரி பார்க்குமாறு இருக்க நேர்ந்ததே என்று பச்சாதாபங் கொண்டான். அவளைப் பற்றிய தனது உணர்ச்சிகளும் நினைவுகளும், அவளுக்கு உதவும் பொருட்டோ அலல்து அவளுக்குச் சிறிதேனும் ஆறுதல் தரும் பொருட்டோ , அதுவுமின்றி அவள் அருமையை அவளுக்கு உணர்த்தும் பொருட்டோ கடைசி வரையில் அவளுக்குத் தெரியாமலே போய்விட்டதே என்றும் ஒரு தனிவித வருத்தமடைந்தான்.
அவ்வருத்தம், 'நாம் பிரிகிறோம். இனி கங்கவரத்துக்கும் நமக்கும் சம்பந்தமில்லை' என்கிற நிலை வந்த பிறகு, அவனுள் மிகவும் தீர்மானமாக எழுந்து பாதித்தது. ஏன் இந்த உணர்ச்சி என்றும், இதை எவ்வளவு தூரம் பொருட்படுத்துவது என்றும் அவன் முன்பின் யோசிக்கவில்லை.
எனவே ஒரு மனோவேகத்தில் தான் கங்கவரத்திலிருந்து புறப்படுவதற்கு முந்தின நாள் சாயங்காலம் அந்தக் காரியத்தைச் செய்தான்.
கோயில் நந்தவனத்தின் வடமேற்கு மூலையில், அம்மன் சந்நிதியில் அது நடந்தது.
சாரங்கன் போன பொழுது, உள்ளே அகல் விளக்கிற்குத் திரி போட்டுவிட்டு வெளியே வந்தாள் காமு. அவளுக்கு அவனைப் பார்த்ததும் சாதாரணமாயிருந்திருக்கலாம். ஆனால் அவனுக்கு அவளை அங்கு தனியாய்ச் சந்தித்தது ஆச்சரியமாயிருந்ததோடல்லாமல், ஏதோ முக்கிய சம்பவம் போலவும் உடம்பு படபடத்துக் கொண்டது.
கழுத்தில் கருகமணியும், கைகளில் கருவளையுமாக, பார்த்தவுடனே மதிக்கத் தோன்றுகிற எளிய முகபாவத்துடன், வாழ்க்கை விலங்கிட்ட தேவமகள் போல் நின்று, மூடிய கண்ணும் முன் நெற்றியில் குங்குமமுமாய் நமஸ்கரித்துக் கொண்டிருக்கும் அவள் முகத்தையே சற்று நேரம் பார்த்தான்.
அப்படிப் பார்க்கிற ஏதோ ஒரு கணத்தில், ஏதோ ஒன்றின் தன்மையையும் மனம் ஓர் ஆவேச நிலையில் அதிகமாய் உணரும்படி நேர்கிற அபூர்வக் கணத்தில், திடீரென்று, இருதயத்துள் தொட்டால் தாங்காத ஓர் இடத்தை அவள் முகம் வந்து தொட்டு விட்டது போல், ஒரு பேருருக்கத்தில் அவன் நெகிழ்ந்து போனான்...
வாழ்வின் ரஸம் ஊறித் ததும்ப வேண்டிய இந்த முகம்... ஆசைகளால் நிறம் பெற வேண்டிய இந்த அதரங்கள்... காதலால் ஒளி கொள்ள வேண்டிய இந்தக் கண்கள்... கணவனும் குழந்தைகளும் என்கிற குதூகலமான நந்தவனத்தில் துள்ளிக் குதிக்க வேண்டிய இந்த உயிர்...
'...த்சௌ, என்ன பரிதாபம்!'
இங்ஙனம் எண்ணி வருகிற இதே வேகத்தில், அவன் அந்த வார்த்தைகளைச் சொன்னான்.
"உங்களைப் பார்க்க ரொம்ப வருத்தமாயிருக்கு! உங்களுக்குச் சீக்கிரம் கல்யாணமாகனும்!"
சொல்லி முடிகிற வரையிலும் அவன் அவள் முகத்தைப் பார்த்தான். பிறகு துணிவிழந்தான். தலை கவிழ்ந்தான். உணர்வானதோர் சக்தியின் இயக்கம் தணிந்தவனாய், எல்லோரையும்போல் சாமான்யவனானான். எனவே அங்கே நிற்கவும் இயலாதவனாய் அவசர அவசரமாய், கட்டிய வேட்டி கால்களில் தடுக்க வெளியே வந்தான்.
வெளியே நன்றாக இருட்டியிருந்தது. எல்லாம் உலக இயல்பு என்றும், அதை மனித மனத்தின் மிகையான உணர்ச்சிகள் மறித்து நிற்பது எத்தகைய சிறுமுயற்சி என்பதற்கு உதாரணம்தான் அவன் அப்பொழுது செய்த காரியம் என்றும், ஒரு பூஞ்சைத் தத்துவத்தை அவன் 'வெலவெலத்த' மனத்தில் பார்க்கப் பார்க்க உணர்த்துவதாய் ஆகாயம் விரிந்து பரந்து காட்சியளித்தது. நட்சத்திரங்கள் லேசாய் ஒளி வீசின. காற்று ஆறுதலாய் வந்தது. ஆயினும், ஒரு நிலைப்படாமல் அவன் சிந்தனை வெருண்டு திரிந்தது.
கங்கவரம் இவ்வாறாக அவ்விளைஞனின் வாழ்வில் பங்கு கொண்டது. தன் வாழ்வின் பல்வேறு காலகட்டங்களைக் கடந்துவிட்ட பிறகும், மனித அனுபவங்களென்னும் மாபெரும் அலைகளெல்லாம் அவன் அறிவை மோதி முடிந்த பிறகும், காமு அவனுக்கு மறக்கவில்லை. ஆரம்பம் முதல் அன்றைய நிகழ்ச்சியின் உறுத்தல் வரை, அவளுடைய சித்திரம் அவனுக்கு இருந்து கொண்டே இருந்தது.
அவ்வப்பொழுது பல பெண்கள் அவளை அவனுக்கு ஞாபகப்படுத்தினர். அந்த மாதிரிப் பெண்கள் உலகில் இன்னும் எத்தனை பேரோ என்று அவன் வருத்தப்பட்டான்.
அவர்கள் நிராசை தெரிந்த கண்களோடிருந்தனர். கோயிலில் கற்பூரத் தட்டின்மேல் சிலைபோலக் குனிந்தனர். இரயில் பெட்டியின் ஜன்னலோரத்தில் கன்னத்தில் கையையூன்றி அமர்ந்து 'ஹோவென்ற' ஜன சந்தடியின் நடுவே தனித்த சிந்தையோடு வானத்தை வெறித்தனர். அவசரமாய்ப் போகும்போது அரை நொடி எதிர்ப்பட்டு அப்புறம் மறைந்தனர்.
அப்பொழுதெல்லாம் அவன் காமுவைக் கவனங் கொண்டான். அவளுக்கு விவாகமாயிற்றா இல்லையா என்கிற விடை தெரியாக் கேள்வி அவனுக்கு விடுபடவே இல்லை. அதோடு கூட, அன்றைக்குக் கோயிலில் நடந்ததைப் பற்றிய எண்ணங்கள் வேறு!
'அது அவள் காதில் விழுந்ததா? என்ன நினைத்திருப்பாள்? அந்த வார்த்தைகளைக் கேட்டதும் அவள் முகபாவம் எப்படியாயிற்று? அவை அவளுக்கு ஆறுதலாயிருந்திருக்குமோ? அல்லது முகத்திலடித்ததுபோல் அவமானமாய்ப் பட்டிருக்குமோ? நாம் அங்கேயே இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? ஏதாவது பேசியிருப்பாளோ? அல்லது ஆத்திரப்பட்டிருப்பாளோ? நம்மை எவ்வாறு உணர்ந்திருப்பாள்? முதலில், நாம் அவ்வாறு செய்தது சரியா? அதனால் என்ன பிரயோசனம்? முன்பின் தெரியாத அந்தக் கங்கவரத்தில், அப்பெண்ணுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்?'
இவ்வாறாய் அவ்விளைஞன் தெளிவற்ற எண்ணங்களோடும் தீராத நினைவுகளோடும் வெகுகாலம் வாழ்ந்து கொண்டிருந்தான்.
அப்புறம் கங்கவரம் ஒரு கனவு போலாயிற்று.
(முற்றும்)
பி.ச.குப்புசாமி சங்க இலக்கியத்திலும், பக்தி இலக்கியத்திலும் ஆழ்ந்த ஈடுபாடு உடையவர். டாக்டர் மு.வ.வுடன் சேர்ந்து தமிழ் பயின்ற தமிழ் வித்வானான தன் பெரியாப்பாவால் சிறுவயது முதலே பண்டைத் தமிழ் இலக்கியங்களுடன் பரிச்சயம் ஏற்படுத்திக் கொண்டவர். மரபுக் கவிஞர். "எங்கள் வடாற்காட்டில் வானாதி பூதங்கள் வரையாது பொழிவதில்லை" என்று தொடங்குகிற மரபுக்கவிதை விகடன் வடாற்காடு மாவட்ட மலரில் பிரசுரமானது. நீதிக் கட்சியிலும் திராவிட இயக்கங்களிலும் தோய்ந்த குடும்பத்திலிருந்து எழுந்த முதலாவது தேசிய, இடதுசாரிக் குரல் இவருடையது. ஏப்ரல் 1974 கண்ணதாசன் மாத இதழில் வெளியான இவரின் "ஜெயகாந்தன் - என் குறிப்புகள்" ஜெயகாந்தனை வெகுஅருகில் இருந்து அவதானித்த ஒரு நண்பரின் தேர்ந்த டயரிக் குறிப்புகளாகும். ஜெயகாந்தனையும் அவர் எழுத்துகளையும் நன்கறிந்த, சரியாகப் புரிந்து கொண்ட நான்கு நண்பர்களுல் ஒருவராக இவரை, "ஜெயகாந்தன் ஒரு பார்வை" தொகுப்பின் ஆசிரியர் கே.எஸ்.சுப்ரமணியன் குறிப்பிடுகிறார். எழுத்தின் மீது இருக்கிற மதிப்பினால் 1970களுக்குப் பிறகு எழுதுவதைக் குறைத்துக் கொண்டார். 1990-களில் வாரம் ஒரு பிரபலம் ஆசிரியராக இருந்து குமுதம் வார இதழைத் தயாரித்தார்கள். ஜெயகாந்தன் தயாரித்த குமுதம் வார இதழில், ஜெயகாந்தன் கேட்டு வாங்கி பிரசுரித்த இவரின் சிறுகதை "விருது" ஒரு நல்லாசிரியரைப் பற்றியது.
ஓர் ஆரம்பப் பள்ளியின் தலைமையாசிரியராக - தமிழ்நாட்டு மூலைகளில் முடங்கிக் கிடந்தாலும் அடையாளமும் சுவாசமும் இழந்துவிடாத கிராமங்களிலும் மலையடிவாரங்களிலும் - 35 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர். பாரதி சொன்ன புண்ணியத்திலும் புண்ணியமென்ற ஆசிரியப் பணியை அதே உற்சாகத்துடனும் அர்பணிப்புணர்வுடனும் கடைசிவரை செய்தவர். தன் மகனின் திருமணத்தைக் கூட முன்வரிசைகளில் உட்கார்ந்திருந்த தன் மாணவக் குழந்தைகளின் நடுவில் சப்பணமிட்டு அமர்ந்து பார்த்தவர். இடதுசாரி ஆசிரியர் இயக்கங்களில் பங்கெடுத்துக் கொண்டவர். ஆசிரியர்கள் போராட்டத்தில் சிறைகள் சென்றவர். ஒவ்வொரு முறையும் சிறையில் பலநாட்கள் இருந்தவர். சிறை வாழ்க்கையைக் கூட எவ்வளவு இன்பமாய் அனுபவிக்க முடியுமோ அப்படி அனுபவித்து வாழ்ந்தவர். வாழ்க்கை கொணர்கிற வாய்ப்புகளையும் தருணங்களையும் அவை எப்படிப்பட்டதாயினும் ரசிக்கவும் அவற்றில் திளைத்து மகிழவும் முனைபவர் இவர் என்பதற்கு இது உதாரணம். ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் போராடுவதை ஒரு வழக்கமாக ஆக்கிக் கொண்டபோது, அதுபற்றிய ஆக்கபூர்வமான விமர்சனத்தையும் முன்வைக்கத் தயங்காதவர்.
இவர் தேர்ந்த இலக்கிய ரசிகரும், புகழ்பெற்ற மேடைப் பேச்சாளரும் ஆவார். அவருக்கும் எனக்குமான உறவை நான் பொதுவில் சொல்லிக் கொண்டதில்லை. அவர் எழுத்துகளை விமர்சிக்க விரும்புபவர்களுக்குத் தடையாக இருக்கக் கூடாது என்பதாலும், அவர் ஒளியில் நான் பிரகாசிக்கிற அபிப்பிராயம் ஏற்படுத்தக் கூடாது என்பதாலும். என் வாழ்க்கையில் நான் அதிகம் இணங்கிப்போகிற மற்றும் அதிகம் முரண்டு பிடிக்கிற - இணங்கினாலும் முரண்டினாலும் நெருக்கம் தவறவிடாத - என் நண்பர்களுள் ஒருவர்.
இச்சிறுகதையைப் பல பதிவுகளாகப் பிரித்துப் போடுவது வாசிப்பு அனுபவத்தை பாதிக்கக்கூடும் என்பதால் முழுவதையும் இந்தப் பதிவிலேயே தருகிறேன். இனி கதைக்குள்...]
அவன் பெயர் சாரங்கன்.
படிப்பை முடித்துவிட்டு, முதன்முதலாக உத்தியோகத்தில் சேர்ந்து அந்த ஊருக்கு வருவதற்கு முன், அவனுக்குக் கங்கவரத்தைப் பற்றி எதுவும் தெரியாது. வீட்டையும் பெற்றோரையும் விட்டுவிட்டு ஓர் அயலூரில் வந்து வசிக்க வேண்டியிருக்கிற முதற்சந்தர்ப்பம் அவனுக்கு அதுதான். அந்த மாறுபாடான உணர்ச்சியுடனும், 'வாழ்க்கையை மேற்கொள்கிறோம், அதை எதிரிடுகிறோம்' என்கிற குறுகுறுப்புடனும் அவன் கங்கவரத்துக்கு வந்து சேர்ந்தான்.
கங்கவரம் ஒன்றும் பெரிய ஊர் அல்ல. ஆனால், அங்கு சற்றுப் பிரசித்தி பெற்ற ஒரு கோயில் ஒன்று இருந்தது. வருஷந்தோறும் அதில் நடக்கும் விழாக்களுக்கு அக்கம் பக்கங்களில் இருந்து நிறைய ஜனங்கள் வந்து கொண்டிருந்தனர். எனவே, அது ஒரு கிராமம் என்கிற நிலையிலிருந்து தப்பிப் பிழைத்துக் கொண்டு, தபாலாபீஸ், ஆஸ்பத்திரி மற்றும் சில அரசாங்கக் காரியாலங்களோடு கூடிய ஓர் சுமாரான சிற்றூராக விளங்கியது.
ஊரைச் சுற்றிலும் கழனிகள். சற்று தூரத்தில், எங்கோ புறப்பட்டு எங்கோ போய் முடிகிற ஓர் ஆறு. ஜாமம் தவறாது முழங்குகிற மலைக்கோயிலின் மணியோசை. கால மாற்றங்கள் சீக்கிரம் வந்து கலந்து விடாததோர் மூலைத் தனிமை. இவற்றால், கங்கவரம் வாழ்க்கையின் வேகத்தையன்றி அதன் ஆழத்தைக் காட்டுவதாய் அமைந்திருந்தது.
அதிலும் அதன் அக்ரஹாரம்...
அமைதி என்பதை அங்குதான் பார்க்க வேண்டும். இரண்டே தெருக்கள்தான்; வீடுகளும் எண்ணிக் கச்சிதமாக இருந்தன; புழக்கடைகளில் தென்னை, வாதா மரங்களின் நிழல் கவிந்திருக்கும். மத்தியான நேரத்தில்கூட, அந்த நிழலில், ஆத்ம சுகத்தின் அனுபவம் போன்று பட்சிகள் கூவிக் கொண்டிருக்கும். ஒவ்வொரு வீட்டிற்கும் வழிவழி வந்த மானியங்களும், அல்லது புதிய பரம்பரையினர் தலையெடுத்துச் சேர்த்த சொத்துக்களும் உண்டு. அவ்விதமின்றி, கற்பூரம் போலக் காலக் காற்றில் இருந்ததே தெரியாமல் போன வீடுகளும் சில உண்டு.
இரண்டு தெருக்களிலும் பெரிய தெரு தென்னண்டைத் தெருதான். அங்கு சுமார் நாற்பது வீடுகள் இருக்கும். அந்தத் தெருவின் மேல்முனையிலுள்ள ஒரு வீட்டின் அறையில்தான் சாரங்கனும், அவனோடு அவன் காரியாலயத்தில் வேலை பார்க்கும் இன்னொரு நண்பனுமாகக் குடி வந்தார்கள்.
வெகு சீக்கிரமே சாரங்கனுக்கு அந்த வாசம் பிடித்துப்போய் விட்டது. ஆற்று நீரில் ஸ்நானம், கழனிகளிலிருந்து வீசும் குளிர்ந்த காற்று, உற்சவங்களின்போது அங்கு வருகிற புதிய புதிய மனித முகங்கள், அவற்றில் தென்படுகிற மனித வாழ்க்கையின் விதவிதமான அழகுகள் - இவ்வாறாகக் கங்கவரத்தை அனுபவித்துக் கொண்டு வந்தான்.
கொஞ்ச நாட்கள் கழிந்தன.
கங்கவரத்து அக்ரஹாரத்தில் இருள் சூழ்ந்து, வீடுகளிலெல்லாம் விளக்குகள் எரியத் தொடங்கி விட்டன. நாற்புறங்களிலும் வானத்தின் எல்லைகள் உலகின் மீது கவிய வருவன போன்றும், வாழ்வின் சோகத்தால் இறுகியவை போன்றும் தோற்றங் கொண்டன. எதையோ அலுத்துக் கொள்வதற்காகவோ, இன்ப மிகுதியால் கலகலவெனச் சிரிப்பதாகவோ அவ்வப்பொழுது சில மனிதக் குரல்கள் உணர்ச்சியின் ரஸம் மிகுந்து ஒலிப்பதைத் தவிர மற்றபடி எங்கும் மௌனமே குடி கொண்டுவிட்டது.
வழக்கமாக அந்த நேரத்தில்தான் சாரங்கன் சிறிது தொலைவிலுள்ள ஆற்றங்கரையில் உலாவி விட்டு வந்து தென்னண்டைத் தெருவில் நுழைவான். அதுவரை எதிரே ஆள் தெரியாத சிந்தனையில் கவிழ்ந்து வருகின்ற அவன் முகமும் அப்பொழுதுதான் நிமிரும். வீதியின் இரு மருங்கிலும் ஜன்னல்களிலும், அன்றைய வாழ்க்கை அவர்களுக்குத் தந்த இன்பத்தின் பிரதிபலிப்பு போன்ற சாயல் கொண்ட மக்களின் முகங்களையும் காட்சிகளையும் அவன் காண்பான். அதோடு அந்த வீடுகள் தங்கள் வெற்றியின் சின்னமாக வெளியே அனுப்புகிற மின்சார வெளிச்சத்தையும், இதுவரை இருட்டில் பழகிய தன் கண்கள் கூசக் கடப்பான்.
அந்த வீடுகளெல்லாம் புதிய முயற்சிகளினால் ஓங்கி எழுந்துள்ள, ஓரளவு செல்வத்தின் பசையும் அதனால் களிப்பின் துள்ளலும் நிறைந்து விளங்குகிற வீடுகள்.
ஆயினும் அவன் மனம் அவற்றில் அதிகமாகச் சஞ்சரிப்பதில்லை. அவற்றில் எந்த வீட்டையும் பொதுவாயன்றி வேறு எவ்வித விசேஷ உணர்ச்சியுடனும் அவன் நோக்குவதில்லை. ஆனால், பதினைந்து வீடுகள் தாண்டி, அதோ, அந்த வீடு வரும்பொழுதுதான் அவனது முழுக்கவனமும் அங்கு பறிபோய் விடும்.
அந்த வீடு, அந்தத் தெருவிலிருக்கும் மற்ற எல்லா வீடுகளிலிருந்தும் வித்தியாசப்பட்டு, விதியெனும் நம்பிக்கையின் சமாதியின் மீது இயங்குவதைப் போலத் தோற்றமளித்தது. அதன் இரண்டு ஜன்னல்களும் அங்கு மனங்கள் மகிழ்ச்சியற்றுப் போனதைப் புலப்படுத்தின. அவ்வீட்டினுள் நுழைந்து விட்ட இருளே அதன் வாசலிலும் தேங்கி நின்றது. அதை அணுகுகிற போதெல்லாம், அவன் தன் நடையை மிகவும் மெதுவாக்கிக் கொண்டு, முகத்தைத் திருப்பி, அந்த வீட்டு வாழ்வின் பிரதான சோகமாகிய ஓர் உருவத்தைத் தனது கண்களால் தேடுவான்.
அதுதான் காமு!
அவள் ராகவைய்யங்காரின் மகள். அவனுடைய அன்றாட அனுதாபம். அந்த வீட்டின் சபிக்கப்பட்ட அழகு.
பெரும்பாலும் அந்நேரங்களில், அவள் முன்கூடத்தில் உட்கார்ந்திருப்பாள். வீதியிலிருந்து பார்த்தாலே அது அவனுக்கு நன்கு தெரியும். பார்த்த சில விநாடிகளுக்கெல்லாம் அவளையும் அவ்வீட்டையும் அவன் கடந்து விடுவான். ஆனால் அதற்குள்ளாகவே அவள் முகத்தின் உணர்ச்சி பாவங்கள் தங்களுக்குரிய முழுவேகத்தோடு வந்து தாக்கி, அவன் மனத்தில் பதிந்து விடும். அதிலும் அந்தக் கண்கள்... அவற்றைப் பார்த்த பிறகு அவனது சிந்தனையின் கிளர்ச்சி வெகுநேரம்வரை ஓய்வதில்லை.
உயிரின் நிராசையை அவன் அந்தக் கண்களில் பார்த்தான். தன் வாழ்க்கையின் விதியையே அறிந்து கொண்டுவிட்டு, 'சரி, இனி இதையன்றி வேறில்லை' என்கிற நிலையில் உலக இயக்கங்களில் ஒப்புக்குப் பங்கு கொள்கிற ஒரு பாவனையை அவளது பார்வையில் கண்டான்.
அவை அவனை வெகுவாகப் பாதிக்கும்.
அதற்குப் பிறகு, தெருக்கோடியிலிருக்கும் தனது அறைக்கு அவன் சென்று சேரும்வரை, வாழ்வின் இயல்புகளோடு திமிறி முரண்டு கொள்வதும், அது ஏன் அவ்வாறு என்று தவிப்பதும், இரண்டுமின்றி இதை எவ்விதத்திலும் தீர்க்க முடியாதோ என்கிற தனியானதோர் ஊமைச் சோகமான போக்குகளில் அவன் மனம் சென்று மீளும். அவனது அறை நண்பன் அவனை எதிர்ப்பட்டு அவனோடு ஏதாவது விவகாரங்களைப் பேசிக் கல்லெறிந்த பிறகுதான், அவன் தன்னிலை கலைந்து வேறு காரியங்களில் ஈடுபடுவான்.
அவளை முதன்முதலில் பார்த்த ஆரம்ப நாட்களில் அவனுக்கு இவ்விதமெல்லாம் ஏற்படவில்லை. சாதாரணமாகப் பெண்ணின் அழகு அவனை எவ்விதம் தாக்குமோ, அப்படித்தான் அவனுக்கும் இருந்தது. அதிலும் இளைஞனென்றாலும் அவன் இருபது வயதுக்கும் குறைந்தவன் ஆதலால், அவள் அழகின் இன்பத் தோற்றங்களையே தனது வியப்பு மாறாத கண்களால் கண்டு கொண்டு வந்தான்.
அப்படியிருக்கையில் போகப் போக அவள் அழகு மங்கிப்போய், அவள் வாழ்க்கையின் அர்த்தமே அவனுக்கு ஓங்கித் தெரிந்தது, அவன் சற்று வித்தியாசமானதோர் இளைஞனாக இருந்ததால்தானோ என்னவோ?
உண்மை அதுதான். அவனுக்கு வயது பத்தொன்பது இருக்கும். கற்பனாவஸ்தை நிறைந்த பருவமொன்றின் சரியான மாதிரியாய் இருந்தான். அதில் அவனது இயல்பின் கவிதையும் சற்றுக் கலந்திருந்தது. உணர்ச்சிகளில் இளகுவதற்கு இது போதும். ஆனால் அதோடு அவன், சுக துக்கங்கள் என்கிற உலக அனுபவங்களின் உரமேறி மரத்துப் போகாதவனாய், வாழ்க்கையையும் அதன் ஒவ்வோர் அம்சத்தையும் மிகவும் அபூர்வமானதாய்க் கருதிக் கரைந்து போகிறவனாய் வேறு இருந்தான்.
காமுவையும் அவ்வாறே கருதினான்.
காமுவுக்கு வயது இருபத்தைந்து - ஏன் இருபத்தாறோ, இருபத்தேழோகூட இருக்கும். பூரிப்போடு இருந்தால் அது யௌவனம் இன்னும் ஆட்சி செய்கிற பருவம்தான். ஆனால் இவளோ, தன் கவலைகளால் சாம்பியது போல் தோன்றினாள். பூத்து வாடிய காம்போடு தலை சாய்த்ததோர் கனவு மலர் போல இருந்தாள். தன் வாழ்க்கையின் விதியை அங்கீகரித்து, பெண் மனத்தின் சஞ்சலங்களை அடக்கிக் கொண்டது போன்ற விழிகள். வார்த்தைகள் உறைந்தது போன்ற உதடுகள். மத்தியான நேரத்தில் வெறுந்தரையில், புறங்கையைத் தலைக்கு வைத்துக் கொண்டு தூங்கி எழுந்தாளானால் முகமெல்லாம் சிவந்து குழம்பிப் போகுமளவுக்கு உடல் நிறம். ஆசைகளால் விம்மி, பின் அவை அழிந்ததனால் சோர்ந்தது போன்ற அவயங்கள்.
முதன்முதலில் அவளை ஆற்று நீரில் ஈரப்புடவையோடு பார்த்தபொழுது 'வெட வெட'வென்று நீண்டு மெலிந்த அவள் சிவந்த உடலில் ஒருவிதமான காட்சியின் வேகம் கமழ்ந்ததையும் அவன் உணர்ந்தான்.
ஆனால் நாளடைவில், அவள் அழகின் அந்தச் சிறு போதையுங்கூட அவன் பார்வைக்கு அற்றுப்போயிற்று. அவளது வேறு தன்மைகளை எல்லாம் அவன் சரிவர உணரத் தலைப்பட்டான்.
அவன் குடியிருந்த தெருவிலேயே காமுவின் வீடும் இருந்தது, ஒருநாளைக்கு அவன் அவளைப் பலமுறையும் பாக்கச் சந்தர்ப்பமளித்தது...
தன் வீட்டுத் திண்ணையில் தூணோரம் அமர்ந்து, எதிர்வரிசை வீடுகளில் யாரையாவது, எந்தக் காட்சியையாவது பார்த்துக் கொண்டிருப்பாள். கூடத்தில் உட்கார்ந்து, ஆலிலைகளையோ, கிழிந்துபோன பழைய துணிகளையோ தைத்துக் கொண்டிருப்பாள். அல்லது பேசாமல் எதிர்வீட்டுக் கூரையையோ, அதைக் கவிந்திருக்கும் வானத்தையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பாள். பொழுது சாய்ந்து இருட்டிய பிறகு, அதே கூடத்தில் அவளைச் சுற்றி அக்கம்பக்கத்துப் பிள்ளைகள் மூன்று நான்குபேர் இருப்பார்கள். எல்லோருக்கும் மத்தியில் ஒரு லாந்தர் விளக்கு இருக்கும். அவர்களுக்கு அவள் பாடம் சொல்லிக் கொண்டிருப்பாள். சில்லென்று ஜலம் தெளித்தது போன்ற குரல். சற்றுக் குனிந்தாளானால், நெருங்கி வந்த அவள் முகத்தில் விளக்கின் ஒளி பட்டு கன்னங்கள் செவ்வொளி கொள்ளும்.
அப்பொழுதெல்லாம் சாரங்கன் அவளைப் பார்த்தான். காமுவும் அவன் தன்னைப் பார்ப்பதைப் பலமுறை பார்த்தாள். அவனையும் பிற ஆடவர்களையும் காணும்போது, சில பெண்களின் பொய்க்கூச்சம்போல் அவள் தன் குணங்களைக் கொச்சைப்படுத்திக் கொள்ளவில்லை. அவர்களை நேர்கொண்டு பார்த்தாள். ஆனால், ஒரு நிலையிலிருந்து பிறழாததுபோல் அவள் கண்களில் சலனமிருக்காது. யாராவது தன்னை அதிகம் கவனிக்கிறார்கள் என்று தெரிந்தால் மௌனமாகவும் மெதுவாகவும் தன் முகத்தை மறுபுறம் திருப்பிக் கொள்வாள். அவ்வளவுதான்.
அவளுடைய அந்தக் கௌரவம் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.
இடையில், அவளைப்பற்றிய பிற விவரங்களையும் அவன் அறிந்தான்.
காமுவின் தந்தை ராகவைய்யங்காருக்கு ஒரு பௌராணிகர் போலவும், பண்டிகை நாட்களில் அந்தந்த ஊர்களுக்கு சென்று பஜனை, கதாகாலட்சேபம் முதலியவற்றில் கலந்து கொள்கிற ஒரு பாகவதர் போலவும் ஏதோ தொழிலென்று அறிந்தான். ஆனால், அதில் பிரமாதமாக ஏதும் இல்லாவிட்டாலும் சுமாராகக் கூட வருவாய் இல்லை என்று தெரிய வந்தது. அவரது முதுமையும், அத்தொழிலுக்கொவ்வாததோர் மெலிந்த சுபாவமும் அதற்குக் காரணமாயிருக்கலாம். அவரைப் பார்க்கும்பொழுது தன்னுடைய இத்தனை வருட வாழ்க்கையில் அவர் ஆடிக் கலகலத்துப்போன அந்த வீட்டைக் காப்பாற்றி வைத்திருப்பதே ஒரு பெரிய காரியம் என எண்ணத் தோன்றிற்று. மனிதர் அவ்வளவு பலவீனமாயிருந்தார்.
இப்படிப்பட்டவர், தான், தன் மனைவி, மகள் காமு, ஒரு பையன் ஆகிய நால்வரின் அன்றாட வாழ்க்கையை வழிநடத்திக் கொண்டு வருவதே பாராட்ட வேண்டியதாயிருக்கும்பொழுது, காமுவை இங்ஙனம் கனவுகளின் சருகாய், அவளையே அவளுக்கு வதையாய் இன்னும் அந்த வீட்டில் வைத்திருப்பது குறித்து யாரும் அவரைக் குறை சொல்ல முடியாது.
காமுவுக்கேகூட அவர்மேல் அந்த ஆதங்கம் இல்லை போலிருந்தது. தன் தகப்பனாரோடும் குடும்பத்தாரோடும் அவள் பழகுகிற பல காட்சிகளைச் சாரங்கன் பார்த்திருக்கிறான். அவள் தன் உறவுகளின் மீது கொண்டுள்ள உருக்கமான அன்பு அவற்றில் வெளிப்படும்.
ஒரு சமயம் ஜன்னலண்டை உட்கார்ந்து, தன் தகப்பனார் சொல்லச் சொல்ல அவள் ஏதோ கடிதம் எழுதிக் கொண்டிருந்தாள். அப்பொழுது ராகவைய்யங்கார் "எழுதிட்டியாமா?" என்று கேட்டதும், அதற்குக் காமு, "ஊம்" கொட்டி விட்டு, "என்னமோப்பா, நீங்க அவாளையெல்லாம் மதிக்கிறது எனக்குப் பிடிக்கல்லே" என்று சொன்னதும் சாரங்கன் செவிகளில் விழுந்தன. இவை ஒரு சம்பாஷணையின் சாதாரணத் துணுக்குகள்தான். ஆயினும், பனித்துளியில் பெரிய பெரிய தோற்றங்கள் பிரதிபலிப்பதுபோல, வாழ்க்கையின் பல ஆழ்ந்த விஷயங்கள் இவ்வித சின்னஞ்சிறு கோணங்களில்தான் வெளிப்படுகின்றன. அன்று காமுவின் குரலில், அவள் தன் தகப்பனாரின் மீது கொண்டிருக்கிற மரியாதையும், அவரிலும் தாழ்ந்த ஓர் உலகத்திலிருந்து அவள் அவரது கௌரவத்தைக் காப்பாற்ற விரும்புவது போன்ற ஒரு முயற்சியும் தென்பட்டன. தன் வாழ்க்கை இவ்வாறு தடைபட்டு நிற்பது குறித்து, அவளுக்குத் தன் தகப்பனாரின்மீது வருத்தமிருக்கும் என்று அன்றிலிருந்து அவனால் நம்ப முடியவில்லை.
இன்னொரு சம்பவமும் இதேபோல யதேச்சையாக நடந்ததுதான். அவளது தம்பி ஐந்தாவதோ என்னவோ படிப்பவன். ஒரு நாள் இவள் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவன் வந்து அவள் கால்மாட்டில் வீட்டு வாசற்படிகளில் உட்கார்ந்தான். அவன் முகம் சற்றுப் பரிதாபகரமாக இருந்தது. அவன் முகத்தைத் தன் மடிமேல் சாய்த்து, காதோரத்துக் கிராப்பை விரல்களால் கோதிவிட்ட வண்ணம் கிட்டக் குனிந்து, "பழையது இருக்கு. நல்ல மோராட்டம் கரைச்சுத் தரேன். சாப்பிடறியா?" என்று கேட்டாள். அதைப் பார்த்தபொழுது சாரங்கன் மனமிளகிப் போனான். அவனுக்கு உணர்ச்சிக் கண்ணீர் ததும்பியது. அன்று காமுவின் குரலும் பரிவும், துன்பங்களின்போது மனித இதயம் அடைய வேண்டிய பேரன்பின் உருவமாக அவனுக்குத் தோன்றின.
எனவே, அந்தக் கங்கவரத்து அக்ரஹாரத்திலேயே இவ்வளவு வயதாகியும் இன்னும் திருமணமாகாமலிருக்கிறவள் காமு ஒருத்திதான் என்கிற விஷயத்தை அவனால் சகிக்க முடியவில்லை. அழகின் பூர்ணம் அவ்வாறு கூடி வந்தவளும் பேதலிப்பற்ற அறிவின் அம்சங்களை வாய்த்தவளுமான அத்தகைய ஒரு பெண் எவ்வாறு ஒருவராலும் அங்கீகரிக்கப்படாமல் போனாள் என்று அவன் ஆச்சரியப்பட்டான். இந்த இடத்தில் அவன் சமூகத்தில் வாழ்க்கை முறைகள் அமைந்திருக்கும் முரண்பாடுகளைப் பற்றிய அறிவுத் தெளிவின் அமைதியோடின்றி, தனது கனவுப் போக்கான இளமனதில் உந்தியெழும் சொந்த உணர்வுகளின் வேகத்தோடு காமுவின் சோகத்தை நோக்கினான். அதனால் அவள் அவனுக்கு ஓர் பெரிய சமூகக் கொடுமையாகத் தோன்றினாள்.
ஒவ்வொரு முறை அவளைப் பார்க்கும் பொழுதும் அவனுக்கு இந்த உணர்வு வலுத்து, நாளடைவில் அவளைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் அவன் மனத்தில் "ப்சப்" என்று ஓர் ஆழ்ந்த பரிதாப உணர்ச்சி உண்டாகத் தோன்றியது.
அது, அவள் என்றைக்கும் தன்னை நல்லபடி அலங்காரம் செய்து கொள்வதில்லை, அவளை யத்த நாலு பெண்கள் சிரித்துப் பேசிச் சந்தோஷமாயிருக்கும் கும்பலில் கலந்து கொள்வதில்லை. பொதுவாக விவாகமாகாத இளம்பெண்கள் கண்களில் ஒரு கனவின் ஆவலோடு காண்பதாகிய எந்தக் காட்சியிலும் அவ்வளவாக லயிப்பதில்லை என்கிற சிறு விஷயங்களை யெல்லாம் கவனித்து அதனாலெல்லாம் மேன்மேலும் வளர்ந்தது.
இவற்றை யெல்லாம், மனம் தாங்காத சில வேளைகளில், தன் அறை நண்பன் சிதம்பரத்திடம் மிகவும் வருத்தப்பட்டுத் தெரிவித்துக் கொள்வான்.
தனக்குச் சம்பந்தமில்லாத ஒரு பெண்ணைக் குறித்த இவனது அதிகப்படியான அக்கறையைச் சிதம்பரம் ஆரம்பத்தில் வேறுவிதமாகத்தான் நினைத்தான். ஆனால் இருவரும் நெருங்கிப் பழகி அவர்களுக்கிடையே திரைகள் அகன்ற பிறகு, சாரங்கனின் தவிப்புக்கு அவனால் போதிய நியாயத்தை உணர முடியாவிட்டாலும், காமுவைப் பற்றிய அவனது மனோபாவங்களில் இரகசியமாகவேனும் ஏதும் சந்தேகங் கொள்ளாதவனானான்.
பல சமயங்களில் இருவரும் பேசிக் கொள்வதுண்டு.
"உண்மைதான். அதைப் பார்த்தால் கொஞ்சம் பரிதாபமாய்த்தான் இருக்கிறது!" என்று சிதம்பரம் ஒப்புக் கொள்வான். எனினும், அடுத்தாற்போல, "ஆனால், உலகத்தில் இதைப் போல் இன்னும் எத்தனையோ பேர் இல்லையா?" என்பான்.
சாரங்கன், அதை மறுத்ததோ உணராமல் இருந்ததோ கிடையாது.
ஆனால், பிரச்னை பொது என்பதால், அப்பிரச்னையின் சாட்சிபோல் பிரத்தியட்சமாக நிற்கும் ஒரு தனிப் பாரத்தின் மீது சார்ந்து செல்கிறவன் உணர்ச்சிகளை அவனால் விலக்கிக் கொள்ள முடியவில்லை.
"அது சரி சிதம்பரம்! ஆனால், இது சாதாரணம் என்று சும்மா இருக்க முடியவில்லையே! நேற்றுக்கூட பார்! மாடத்தில் அகல்விளக்கை வைத்துவிட்டுத் திரியைத் தூண்டிக் கொண்டிருந்தது. முகம் எப்படி யிருந்தது தெரியுமா? அதுவும் ஏற்றப்பட வேண்டிய ஒரு விளக்கு போலவே இருந்தது! அதற்கு மட்டும் மணவாழ்க்கை என்று ஒன்று நேராவிட்டால்... பாவம், அது ரொம்பக் கொடுமை!" என்றான்.
"ஏன் நேராமல்? இப்பொழுது இல்லாவிட்டாலும் இன்னும் ஐந்து வருடம் கழித்தாவது எவனாவது வருவான்!"
சாரங்கனுக்கு இதைத்தான் சகிக்க முடியவில்லை. இவ்வளவு அருமையான பெண் - இப்பொழுதே அதிக காலமாகி விட்டது - இன்னும் ஐந்து வருடம் கழித்து - அதுவும் எவனாவது...
வாழ்க்கையில் அருமைகளெல்லாம், எவ்வளவு அற்பமாகி விடுகின்றன!
அவன் இலட்சியங்களும் கனவுகளுமே வாழ்க்கையென்று கருதியவன். ஏடுகளால் மட்டுமே உலகத்தைப் பார்த்தவன். அவனுக்கு அவன் உணர்ச்சிகளே உலகம்.
ஆகையால், காமுவும், காமுவின் வாழ்வும் அவனை இயல்புக்கு மீறித் தொட்டன.
அந்தத் தெருவிலிருக்கும் வீடுகளின் ஆசாபாசங்களை அவன் போகிற போக்கில் காதிலே கேட்க நேரும். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில், அவ்வீடுகளின் திண்ணைகளிலே பூத்துச் சிரிக்கின்ற புகழ் வெளிச்சத்தில் பெண்களின் உற்சாகம் போட்டியிடும். புக்ககம் போகிறவர்களும் பிறந்தகம் வருகிறவர்களுமாக அவ்வப்பொழுது பெண்கள் அவ்வீடுகளின் காட்சிகளை இன்பமும் சோகமுமாகச் செய்வார்கள்.
அந்நேரங்களில் எல்லாம் சாரங்கனின் நினைவுகள் கடைசியில் காமுவிடம் சென்று முடிந்தன.
கடைசியில் ஒருநாள் அவன் கங்கவரத்தை விட்டுப் பிரிய வேண்டியவனானான். உத்தியோகம் வெகுதூரத்தில் வேறோர் ஊருக்கு மாறிவிட்டது.
புறப்பட்டுப் போகுமுன்பு கங்கவரத்தின் பல அம்சங்கள் அவன் கவனத்துக்கு வந்து அவனை மிகவும் வேதனைப்படுத்தியது.
காமு கூடத்தான்.
அவள் இன்னும் அவ்வாறே இருந்தாள். வீட்டுத் திண்ணையிலும் கூடத்திலும் இவனுக்குக் காட்சிப் பொருளாக இருந்தாள். தினந்தினமும், ஒரேமாதிரி, தேங்கிய வாழ்க்கையன்றின் சின்னம்போல் இருந்தாள்.
அது அவனுக்கு ரொம்ப அநியாயமாகப் பட்டது. அறிமுகம் முதல் கடைசிவரை தான் அவளை அதே மாதிரி பார்க்குமாறு இருக்க நேர்ந்ததே என்று பச்சாதாபங் கொண்டான். அவளைப் பற்றிய தனது உணர்ச்சிகளும் நினைவுகளும், அவளுக்கு உதவும் பொருட்டோ அலல்து அவளுக்குச் சிறிதேனும் ஆறுதல் தரும் பொருட்டோ , அதுவுமின்றி அவள் அருமையை அவளுக்கு உணர்த்தும் பொருட்டோ கடைசி வரையில் அவளுக்குத் தெரியாமலே போய்விட்டதே என்றும் ஒரு தனிவித வருத்தமடைந்தான்.
அவ்வருத்தம், 'நாம் பிரிகிறோம். இனி கங்கவரத்துக்கும் நமக்கும் சம்பந்தமில்லை' என்கிற நிலை வந்த பிறகு, அவனுள் மிகவும் தீர்மானமாக எழுந்து பாதித்தது. ஏன் இந்த உணர்ச்சி என்றும், இதை எவ்வளவு தூரம் பொருட்படுத்துவது என்றும் அவன் முன்பின் யோசிக்கவில்லை.
எனவே ஒரு மனோவேகத்தில் தான் கங்கவரத்திலிருந்து புறப்படுவதற்கு முந்தின நாள் சாயங்காலம் அந்தக் காரியத்தைச் செய்தான்.
கோயில் நந்தவனத்தின் வடமேற்கு மூலையில், அம்மன் சந்நிதியில் அது நடந்தது.
சாரங்கன் போன பொழுது, உள்ளே அகல் விளக்கிற்குத் திரி போட்டுவிட்டு வெளியே வந்தாள் காமு. அவளுக்கு அவனைப் பார்த்ததும் சாதாரணமாயிருந்திருக்கலாம். ஆனால் அவனுக்கு அவளை அங்கு தனியாய்ச் சந்தித்தது ஆச்சரியமாயிருந்ததோடல்லாமல், ஏதோ முக்கிய சம்பவம் போலவும் உடம்பு படபடத்துக் கொண்டது.
கழுத்தில் கருகமணியும், கைகளில் கருவளையுமாக, பார்த்தவுடனே மதிக்கத் தோன்றுகிற எளிய முகபாவத்துடன், வாழ்க்கை விலங்கிட்ட தேவமகள் போல் நின்று, மூடிய கண்ணும் முன் நெற்றியில் குங்குமமுமாய் நமஸ்கரித்துக் கொண்டிருக்கும் அவள் முகத்தையே சற்று நேரம் பார்த்தான்.
அப்படிப் பார்க்கிற ஏதோ ஒரு கணத்தில், ஏதோ ஒன்றின் தன்மையையும் மனம் ஓர் ஆவேச நிலையில் அதிகமாய் உணரும்படி நேர்கிற அபூர்வக் கணத்தில், திடீரென்று, இருதயத்துள் தொட்டால் தாங்காத ஓர் இடத்தை அவள் முகம் வந்து தொட்டு விட்டது போல், ஒரு பேருருக்கத்தில் அவன் நெகிழ்ந்து போனான்...
வாழ்வின் ரஸம் ஊறித் ததும்ப வேண்டிய இந்த முகம்... ஆசைகளால் நிறம் பெற வேண்டிய இந்த அதரங்கள்... காதலால் ஒளி கொள்ள வேண்டிய இந்தக் கண்கள்... கணவனும் குழந்தைகளும் என்கிற குதூகலமான நந்தவனத்தில் துள்ளிக் குதிக்க வேண்டிய இந்த உயிர்...
'...த்சௌ, என்ன பரிதாபம்!'
இங்ஙனம் எண்ணி வருகிற இதே வேகத்தில், அவன் அந்த வார்த்தைகளைச் சொன்னான்.
"உங்களைப் பார்க்க ரொம்ப வருத்தமாயிருக்கு! உங்களுக்குச் சீக்கிரம் கல்யாணமாகனும்!"
சொல்லி முடிகிற வரையிலும் அவன் அவள் முகத்தைப் பார்த்தான். பிறகு துணிவிழந்தான். தலை கவிழ்ந்தான். உணர்வானதோர் சக்தியின் இயக்கம் தணிந்தவனாய், எல்லோரையும்போல் சாமான்யவனானான். எனவே அங்கே நிற்கவும் இயலாதவனாய் அவசர அவசரமாய், கட்டிய வேட்டி கால்களில் தடுக்க வெளியே வந்தான்.
வெளியே நன்றாக இருட்டியிருந்தது. எல்லாம் உலக இயல்பு என்றும், அதை மனித மனத்தின் மிகையான உணர்ச்சிகள் மறித்து நிற்பது எத்தகைய சிறுமுயற்சி என்பதற்கு உதாரணம்தான் அவன் அப்பொழுது செய்த காரியம் என்றும், ஒரு பூஞ்சைத் தத்துவத்தை அவன் 'வெலவெலத்த' மனத்தில் பார்க்கப் பார்க்க உணர்த்துவதாய் ஆகாயம் விரிந்து பரந்து காட்சியளித்தது. நட்சத்திரங்கள் லேசாய் ஒளி வீசின. காற்று ஆறுதலாய் வந்தது. ஆயினும், ஒரு நிலைப்படாமல் அவன் சிந்தனை வெருண்டு திரிந்தது.
கங்கவரம் இவ்வாறாக அவ்விளைஞனின் வாழ்வில் பங்கு கொண்டது. தன் வாழ்வின் பல்வேறு காலகட்டங்களைக் கடந்துவிட்ட பிறகும், மனித அனுபவங்களென்னும் மாபெரும் அலைகளெல்லாம் அவன் அறிவை மோதி முடிந்த பிறகும், காமு அவனுக்கு மறக்கவில்லை. ஆரம்பம் முதல் அன்றைய நிகழ்ச்சியின் உறுத்தல் வரை, அவளுடைய சித்திரம் அவனுக்கு இருந்து கொண்டே இருந்தது.
அவ்வப்பொழுது பல பெண்கள் அவளை அவனுக்கு ஞாபகப்படுத்தினர். அந்த மாதிரிப் பெண்கள் உலகில் இன்னும் எத்தனை பேரோ என்று அவன் வருத்தப்பட்டான்.
அவர்கள் நிராசை தெரிந்த கண்களோடிருந்தனர். கோயிலில் கற்பூரத் தட்டின்மேல் சிலைபோலக் குனிந்தனர். இரயில் பெட்டியின் ஜன்னலோரத்தில் கன்னத்தில் கையையூன்றி அமர்ந்து 'ஹோவென்ற' ஜன சந்தடியின் நடுவே தனித்த சிந்தையோடு வானத்தை வெறித்தனர். அவசரமாய்ப் போகும்போது அரை நொடி எதிர்ப்பட்டு அப்புறம் மறைந்தனர்.
அப்பொழுதெல்லாம் அவன் காமுவைக் கவனங் கொண்டான். அவளுக்கு விவாகமாயிற்றா இல்லையா என்கிற விடை தெரியாக் கேள்வி அவனுக்கு விடுபடவே இல்லை. அதோடு கூட, அன்றைக்குக் கோயிலில் நடந்ததைப் பற்றிய எண்ணங்கள் வேறு!
'அது அவள் காதில் விழுந்ததா? என்ன நினைத்திருப்பாள்? அந்த வார்த்தைகளைக் கேட்டதும் அவள் முகபாவம் எப்படியாயிற்று? அவை அவளுக்கு ஆறுதலாயிருந்திருக்குமோ? அல்லது முகத்திலடித்ததுபோல் அவமானமாய்ப் பட்டிருக்குமோ? நாம் அங்கேயே இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? ஏதாவது பேசியிருப்பாளோ? அல்லது ஆத்திரப்பட்டிருப்பாளோ? நம்மை எவ்வாறு உணர்ந்திருப்பாள்? முதலில், நாம் அவ்வாறு செய்தது சரியா? அதனால் என்ன பிரயோசனம்? முன்பின் தெரியாத அந்தக் கங்கவரத்தில், அப்பெண்ணுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்?'
இவ்வாறாய் அவ்விளைஞன் தெளிவற்ற எண்ணங்களோடும் தீராத நினைவுகளோடும் வெகுகாலம் வாழ்ந்து கொண்டிருந்தான்.
அப்புறம் கங்கவரம் ஒரு கனவு போலாயிற்று.
(முற்றும்)
Wednesday, October 27, 2004
புஷ் உறவினர் ஆதரவு கெர்ரிக்கு
இதைப் பற்றி "Family Feud" என்று தலைப்பிடப்பட்ட நியூஸ்வீக் கட்டுரையை இங்கே காணலாம்.
புஷ் உறவினர் கெர்ரிக்கு ஆதரவாக ஏற்படுத்தியுள்ள இணைய தளத்தை இங்கே காணலாம்.
பி.கு.: அமெரிக்க அதிபர் தேர்தல் முடியும்வரை முக்கியத் தொலைகாட்சி ஊடகங்களில் அதிகம் வெளிவராத அல்லது குறைந்த அளவே தெரிகிற அல்லது வித்தியாசமான செய்திகளை இங்கே தர முயல்கிறேன்.
புஷ் உறவினர் கெர்ரிக்கு ஆதரவாக ஏற்படுத்தியுள்ள இணைய தளத்தை இங்கே காணலாம்.
பி.கு.: அமெரிக்க அதிபர் தேர்தல் முடியும்வரை முக்கியத் தொலைகாட்சி ஊடகங்களில் அதிகம் வெளிவராத அல்லது குறைந்த அளவே தெரிகிற அல்லது வித்தியாசமான செய்திகளை இங்கே தர முயல்கிறேன்.
கெர்ரியை ஆதரிக்கும் குடியரசு கட்சியினர்
அமெரிக்காவின் முக்கிய தொலைகாட்சி ஊடகங்களில் புஷ்ஷை ஆதரிக்கிற சில ஜனநாயகக் கட்சிப் பிரமுகர்களைப் பற்றிய செய்திகள் முக்கியத்துவம் பெறுவதை கவனித்து வந்திருக்கிறேன். குடியரசு கட்சியின் நியூ யார்க் மாநாட்டில் பேசிய ஜார்ஜியா மாநிலத்து ஜனநாயகக் கட்சியின் செனட்டரின் கோபாவேச உரைக்குத் தொலைகாட்சிகளும் பிற ஊடகங்களும் நிறையவே முக்கியத்துவம் தந்தன. ஆனாலும், புஷ்ஷை ஆதரிக்கிற ஜனநாயகக் கட்சியினர் ஒரு சிலரே என்று அறிந்திருந்தேன்.
குடியரசு கட்சியினர் தம் கொள்கைகளில் ஆழ்ந்த நம்பிக்கையும் மாற்ற இயலாத ஈடுபாடும் கொண்டவர்கள் என்பதால் அவர்களில் யாரும் கெர்ரியை ஆதரிக்கவில்லை போலும் என்றும் நினைத்திருந்தேன். ஆனால், குடியரசு கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் பலர் கெர்ரியை ஆதரிக்கிற விஷயம் சமீப காலமாக மாற்று ஊடகத்தின் வழியே வெளியே தெரிய ஆரம்பித்திருக்கிறது. குடியரசு கட்சியை பலமாக ஆதரிக்கிற என் அமெரிக்க நண்பர்கள் சிலர் கூட ஈராக் விஷயத்தில் இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகள் கேள்விக்குரியதென்றே சொல்கிறார்கள்.
2000 தேர்தலில் புஷ்ஷை ஆதரித்த சில பத்திரிகைகள் இந்தத் தேர்தலில் அவரை ஆதரிக்காமலோ, கெர்ரியை ஆதரித்தோ வருகிற செய்திகளையும் பார்த்து வருகிறேன். நான் ஓரளவு நம்பிக்கை வைத்திருந்த ஜான் மெக்யெய்ன் போன்றவர்கள் கூட கட்சி சார்ந்த நிர்ப்பந்தத்தால் புஷ் புகழ் பாடி வருகிறார்கள்.
அந்த வகையில் கெர்ரியை ஆதரிக்கிற குடியரசு கட்சியினர் பற்றிய விவரத்தை இந்த இடுகையில் கண்டபோது அது எனக்கு புதிய செய்தியாகவே இருந்தது.
பி.கு: நான் ஜனநாயகக் கட்சியை ஆதரிப்பவனோ, குடியரசு கட்சியை எதிர்ப்பவனோ இல்லை. பொதுமக்களில் ஒருவனாக என்னுடைய கருத்துகளைச் சுதந்திரமாக வெளியிட கட்சி சார்ந்த அணுகுமுறைகள் உதவாது என்று உணர்ந்தவன்.
குடியரசு கட்சியினர் தம் கொள்கைகளில் ஆழ்ந்த நம்பிக்கையும் மாற்ற இயலாத ஈடுபாடும் கொண்டவர்கள் என்பதால் அவர்களில் யாரும் கெர்ரியை ஆதரிக்கவில்லை போலும் என்றும் நினைத்திருந்தேன். ஆனால், குடியரசு கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் பலர் கெர்ரியை ஆதரிக்கிற விஷயம் சமீப காலமாக மாற்று ஊடகத்தின் வழியே வெளியே தெரிய ஆரம்பித்திருக்கிறது. குடியரசு கட்சியை பலமாக ஆதரிக்கிற என் அமெரிக்க நண்பர்கள் சிலர் கூட ஈராக் விஷயத்தில் இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகள் கேள்விக்குரியதென்றே சொல்கிறார்கள்.
2000 தேர்தலில் புஷ்ஷை ஆதரித்த சில பத்திரிகைகள் இந்தத் தேர்தலில் அவரை ஆதரிக்காமலோ, கெர்ரியை ஆதரித்தோ வருகிற செய்திகளையும் பார்த்து வருகிறேன். நான் ஓரளவு நம்பிக்கை வைத்திருந்த ஜான் மெக்யெய்ன் போன்றவர்கள் கூட கட்சி சார்ந்த நிர்ப்பந்தத்தால் புஷ் புகழ் பாடி வருகிறார்கள்.
அந்த வகையில் கெர்ரியை ஆதரிக்கிற குடியரசு கட்சியினர் பற்றிய விவரத்தை இந்த இடுகையில் கண்டபோது அது எனக்கு புதிய செய்தியாகவே இருந்தது.
பி.கு: நான் ஜனநாயகக் கட்சியை ஆதரிப்பவனோ, குடியரசு கட்சியை எதிர்ப்பவனோ இல்லை. பொதுமக்களில் ஒருவனாக என்னுடைய கருத்துகளைச் சுதந்திரமாக வெளியிட கட்சி சார்ந்த அணுகுமுறைகள் உதவாது என்று உணர்ந்தவன்.
Tuesday, October 26, 2004
எது கவிதை?
கவிதையைப் பற்றிப் பலர் பலவாறான கருத்துகளை மொழிந்துள்ளார்கள். அக்கருத்துகளில் பலவும் கவித்துவமுடையனவே. வேர்ட்ஸ்வொர்த் சொல்லிய கவிதைக்கான இலக்கணத்தை உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். (Poetry is the spantaneous overflow of powerful feelings which takes its origin from emotion recollected in tranquility) இன்றளவும் நெஞ்சில் பசுமரத்தாணி போன்று தங்கிவிட்டது அது. கவிதையைப் பற்றி யோசிக்கும்போதெல்லாம் முந்திக் கொண்டு முன்வந்தும் நிற்கிறது. வாழ்க்கையிலும் இலக்கியத்திலும் உண்டான பல்வேறு வகையான போக்குகளையத்து கவிதைக்கு வெவ்வேறு வரையறைகள் இருக்கக் கூடும்.
தமிழில் எடுத்துக் கொண்டால், "தெளிவுறவே அறிந்திடுதல், தெளிவு தர மொழிந்திடுதல்" என்கிற பாரதியின் வரிகள் நினைவுக்கு வருகின்றன. பாரதியின் கவிதைகள் அவன் நினைத்தபடியெல்லாம் இருந்தது தமிழ் பெற்ற வரம். "கவிதை மனதிற்குள் ஓர் அசைவை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும்" என்றார் ந.பிச்சமூர்த்தி. என் கல்லூரி காலத்தில் நான் படித்த இவரின் சில கவிதைகள் எனக்கு அப்போது சுத்தமாகப் புரியவில்லை. வாய்ப்பு கிடைக்கும்போது இவர் கவிதைகளைத் தேடி அவை இவர் வரையறையைப் பூர்த்தி செய்கிறதா என்றறியப் படிக்க வேண்டும்.
கவிதை "சிக்கலும் சிடுக்கும் உள்ளதாக இருக்க வேண்டும்" என்று க.நா.சுப்ரமண்யம் சொல்லியிருக்கிறாராம். சொல்லக் கூடியவர்தான். உலக இலக்கியங்களை எல்லாம் உற்றுப் பார்த்து அத்தகைய முயற்சிகள் தமிழில் வரவேண்டும் என்று அவர் விரும்பியதாகவே அவர் எழுத்துகளைப் (இலக்கியக் கருத்துகளை என்றும் வாசித்துக் கொள்ளலாம்) படிக்கும்போது உணர்ந்திருக்கிறேன். அவரும் கவிதைகள் எழுதியிருக்கிறார். மயன் என்ற புனைப்பெயரில் புதுக்கவிதைகள் புனைந்திருக்கிறார். என் சிற்றறிவை ஈர்க்கும் வண்ணம் அவை இல்லை. அப்புறம் எப்படி, அதில் சிக்கலும் சிடுக்கும் இருக்கிறதா என்று தேடிப் பார்ப்பது. பரிசோதனை முயற்சிகளாகவே அவரின் படைப்புகள் தோற்றமளிப்பதுண்டு. என் வாசகப் பார்வையின் குறையாக இது இருக்கலாம்.
கவிதை குறித்து இன்னார் இன்ன சொன்னார் என்றோ, சொல்லிவிட்டு இப்படிக் கவிதை எழுதிப் போனார் என்றோ நான் பட்டியலிடப் போகிறேன் என்ற எதிர்பார்ப்பில் இன்னமும் இருப்பீர்களேயானால் கடைசியில் ஏமாந்து போகக்கூடும்.
வலைப்பதிவு எழுதுகிற வேகத்திலும், அவசர உலகம் வெளிக்கொணர்கிற எக்ஸ்பிரஸ் சிந்தனைகளின் தாக்கத்திலும் கவிதை என்றதும், நினைவுக்கு வந்ததை மேலே கொட்டி வைத்திருக்கிறேன்.
கவிதைக்கு ஆயிரம் வரையறைகள் இருக்கின்றன. கவிதையியல் குறித்து அதே அளவுக்குப் பார்வைகள் வைக்கப்படுகின்றன. ஆனால், ஒரு கவிதையை முதன்முறையாகப் படிக்கும்போதும், அது நல்ல கவிதையா இல்லையா என்ற முடிவுக்கு மனம் உடனடியாக வரும்போதும், இத்தகைய வரையறைகள் எந்தவிதமான நேடியான பங்களிப்பும் ஆற்றுவதில்லை என்றே சொல்லலாம். இத்தகைய வரையறைகளை முன்னரே படித்திருந்தால், அவை அடிமனதின் ஆழத்தில் தேங்கிப் போய், கவிதை நன்றாக இருக்கிறதா இல்லையா என்ற முடிவெடுக்க மறைமுகக் காரணமாக இயங்கக் கூடும். கவிதை தருகிற அனுபவம், அது வாசகரின் மனத்துள் கிளர்த்துகிற பிற அனுபவங்கள், நினைவலைகள், பார்வைகள், பாதிப்புகள் என்று வாசகருக்கே உரித்தான பல அந்தரங்கக் காரணிகளின் அடிப்படையில் ஒரு கவிதையை நல்ல கவிதையா இல்லையா என்று வாசகர் தீர்மானிக்கிறார். வாசகரின் அறிவும், அனுபவமும் அவற்றின் விரிவும் இன்னொரு காரணமாகவும் இருக்கும். அறிவும் அனுபவமும் கவிதையை கவிதையியலில் பல்வேறு பார்வைகளை வைத்து அளவிட உதவுகின்றன. ஆனால், ஒரு கவிதையைப் படிக்கும்போது ஒருவர் எப்போதும் இத்தகைய பார்வைகளுடன் உட்காருவதில்லை. ஒரு வாசகராகவே உட்காருகிறார் என்று நேர்மறையாகவே - என் அனுபவத்தின் அடிப்படையில் - நான் நம்புகிறேன்.
ஒரு கவிதையை நல்ல கவிதை என்று எப்படிச் சொல்வது என்ற கேள்விக்கு விவரமான விடை கிடைக்குமா? புதுக்கவிதையோ மரபுக்கவிதையோ எந்தக் கவிதையானாலும் அது நல்ல கவிதை என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?
ஜனவரி 1959, சரஸ்வதி இதழில் க.நா.சுப்ரமண்யம் புதுக்கவிதை என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்? அதில் பின்வருமாறு எழுதுகிறார். (வாசிக்கச் சுலபமாக, ஒரு பத்தியில் தொடர்ந்த வாக்கியங்களாக இருந்ததை, நான் உடைத்துத் தந்திருக்கிறேன்.)
"பொதுவாக ஒரு நான்கு விஷயங்கள் சொல்லலாம் - புதுக்கவிதைக்கும் பழங்கவிதைக்குக் பொதுவான விஷயங்கள் இவை.
வார்த்தைச் சேர்க்கைகள் காதில் ஒருதரம் ஒலித்து, உள்ளத்தில் மீண்டும் எதிரொலி எழுப்புகிறதா என்பது முதல் கேள்வி.
இரண்டாவதாக, எந்தக் காலத்திலுமே வாழ்க்கை எந்தக் காலத்து மனிதனுக்கும் சிக்கலானதாகத்தான் இருந்து வந்திருக்கிறது. அந்தந்தக் காலத்துக் கவிதை - நல்ல கவிதை - அந்தக் காலத்துச் சிக்கலை அப்படியே தருகிறது நமக்கு. அப்படி இன்றையப் புதுக்கவிதை இன்றைய வாழ்க்கைச் சிக்கல் தொனிக்க அமைந்திருக்கிறதா என்பது இரண்டாவது கேள்வி.
இன்றைய வாழ்க்கைச் சிக்கலையும் புதிரையும் போலவே முதலில் புரியாததுபோல இருந்து, படிக்கப் படிக்கப் புரியத் தொடங்குகிறதா என்பது மூன்றாவது கேள்வி.
கடைசியாகக் கேட்டுக் கொள்ள வேண்டிய நான்காவது கேள்வி இது. நள்ளிரவில் விழித்துக் கொள்ளும்போது, இந்தக் கவிதையில் ஒரு அடியாவது திடுதிப்பென்று காரண காரியமே இல்லாமல் மனதில் தானே தோன்றிப் புது அர்த்தம் தருகிற மாதிரி இருக்கிறதா?
எந்தக் கவிதையைப் படித்துவிட்டு இந்த நான்கு கேள்விகளுக்கும் ஆம், ஆம், ஆம், ஆம் என்று பதிலளிக்க முடிகிறதோ, அந்தக் கவிதை - நல்ல கவிதை - உயர் கவிதை என்று நாம் முடிவு கட்டி விடலாம்."
(நன்றி: சரஸ்வதி களஞ்சியம், தொகுப்பாசிரியர்: வ.விஜயபாஸ்கரன், கலைஞன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை - 17)
நல்ல படைப்புகளைக் காலந்தோறும் பட்டியலிட்டு வந்தவர் க.நா.சு. ஆனால், ஒரு படைப்பு அவர் பட்டியலில் இடம் பெறுவதற்கான அல்லது இடம் பெறாமல் போனதற்கான காரண காரியங்களை அவர் போதுமான அளவுக்கு விளக்கியது இல்லை என்று எழுத்தாளர்களுக்கும் பிற விமர்சகர்களுக்கும் அவர் மீது ஒரு குறை உண்டு. அப்படிப்பட்ட க.நா.சு, எது நல்ல கவிதை என்பது குறித்து இவ்வளவு விளக்கமாக எழுதியிருக்கிறார் என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
க.நா.சு கேட்கச் சொல்கிற நான்கு கேள்விகளில் மூன்றாவது கேள்வியின் முதற்பகுதி "முதலில் புரியாததுபோல இருந்து" என்பது மட்டுமே எனக்குக் கேள்விக்குறி. முதலில் இருந்து கடைசிவரை முதல்தடவையே புரிகிற பல நல்ல கவிதைகளை நான் வாசித்திருக்கிறேன். க.நா.சு. சொல்கிற மற்ற விஷயங்கள் எனக்கு உடன்பாடானவையே.
ஆனால், எது நல்ல கவிதை என்று நிர்ணயிக்க நான் வேறு ஏதேனும் கேள்விகளும் கேட்பேனோ என்று யோசிக்க வேண்டிய அவசியத்தையும் உணர்கிறேன். கொஞ்சம் அவகாசமும் நேரமும் எடுத்துக் கொண்டு அதைப் பற்றி நிதானமாக யோசிக்கப் போகிறேன். உடனடியாகத் தோன்றுவது இது. எல்லாப் படைப்புகளுக்கும் இருக்க வேண்டியதுபோலவே, சொந்த அனுபவத்தைச் சொல்வதாக இருந்தாலும், ஒரு புள்ளியில் அந்த அனுபவம் பிரபஞ்சத்துக்கும் ஒத்த பொதுவிஷயமாக வாசகரால் பார்க்கப்படுகிற தன்மை கொண்டிருக்க வேண்டும். உதாரணமாக, பல கவிதைகளைச் சொல்ல முடியும். ஆனாலும், தவிர்க்கிறேன். இன்னமும் யோசிக்கும்போது இன்னமும் தோன்றலாம்.
இந்த நேரத்தில் ஒரு நல்ல கவிதையின் லட்சணம் என்று நீங்கள் எதெதைச் சொல்வீர்கள் என்று யோசித்து இங்கு பகிர்ந்து கொள்ளுங்களேன். நல்ல கவிதையில் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிற எதிர்பார்ப்புக்கு (லட்சணத்துக்கு) ஒரு யுனிவர்சல் தன்மை (பிரபஞ்சத்துவம்) இருக்க வேண்டும் என்று சொல்லி வைப்பது உதவக் கூடும். உதாரணமாக, நல்ல கவிதை என்றால் தனித்தமிழில் இருக்க வேண்டும் என்பது ஒரு யுனிவர்சல் எதிர்பார்ப்பு ஆக முடியாது. ஏனெனில் மொழி கவிதைக்கான ஊடகம்தான். மேலும், நல்ல கவிதை தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதில்லையே.
தமிழில் எடுத்துக் கொண்டால், "தெளிவுறவே அறிந்திடுதல், தெளிவு தர மொழிந்திடுதல்" என்கிற பாரதியின் வரிகள் நினைவுக்கு வருகின்றன. பாரதியின் கவிதைகள் அவன் நினைத்தபடியெல்லாம் இருந்தது தமிழ் பெற்ற வரம். "கவிதை மனதிற்குள் ஓர் அசைவை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும்" என்றார் ந.பிச்சமூர்த்தி. என் கல்லூரி காலத்தில் நான் படித்த இவரின் சில கவிதைகள் எனக்கு அப்போது சுத்தமாகப் புரியவில்லை. வாய்ப்பு கிடைக்கும்போது இவர் கவிதைகளைத் தேடி அவை இவர் வரையறையைப் பூர்த்தி செய்கிறதா என்றறியப் படிக்க வேண்டும்.
கவிதை "சிக்கலும் சிடுக்கும் உள்ளதாக இருக்க வேண்டும்" என்று க.நா.சுப்ரமண்யம் சொல்லியிருக்கிறாராம். சொல்லக் கூடியவர்தான். உலக இலக்கியங்களை எல்லாம் உற்றுப் பார்த்து அத்தகைய முயற்சிகள் தமிழில் வரவேண்டும் என்று அவர் விரும்பியதாகவே அவர் எழுத்துகளைப் (இலக்கியக் கருத்துகளை என்றும் வாசித்துக் கொள்ளலாம்) படிக்கும்போது உணர்ந்திருக்கிறேன். அவரும் கவிதைகள் எழுதியிருக்கிறார். மயன் என்ற புனைப்பெயரில் புதுக்கவிதைகள் புனைந்திருக்கிறார். என் சிற்றறிவை ஈர்க்கும் வண்ணம் அவை இல்லை. அப்புறம் எப்படி, அதில் சிக்கலும் சிடுக்கும் இருக்கிறதா என்று தேடிப் பார்ப்பது. பரிசோதனை முயற்சிகளாகவே அவரின் படைப்புகள் தோற்றமளிப்பதுண்டு. என் வாசகப் பார்வையின் குறையாக இது இருக்கலாம்.
கவிதை குறித்து இன்னார் இன்ன சொன்னார் என்றோ, சொல்லிவிட்டு இப்படிக் கவிதை எழுதிப் போனார் என்றோ நான் பட்டியலிடப் போகிறேன் என்ற எதிர்பார்ப்பில் இன்னமும் இருப்பீர்களேயானால் கடைசியில் ஏமாந்து போகக்கூடும்.
வலைப்பதிவு எழுதுகிற வேகத்திலும், அவசர உலகம் வெளிக்கொணர்கிற எக்ஸ்பிரஸ் சிந்தனைகளின் தாக்கத்திலும் கவிதை என்றதும், நினைவுக்கு வந்ததை மேலே கொட்டி வைத்திருக்கிறேன்.
கவிதைக்கு ஆயிரம் வரையறைகள் இருக்கின்றன. கவிதையியல் குறித்து அதே அளவுக்குப் பார்வைகள் வைக்கப்படுகின்றன. ஆனால், ஒரு கவிதையை முதன்முறையாகப் படிக்கும்போதும், அது நல்ல கவிதையா இல்லையா என்ற முடிவுக்கு மனம் உடனடியாக வரும்போதும், இத்தகைய வரையறைகள் எந்தவிதமான நேடியான பங்களிப்பும் ஆற்றுவதில்லை என்றே சொல்லலாம். இத்தகைய வரையறைகளை முன்னரே படித்திருந்தால், அவை அடிமனதின் ஆழத்தில் தேங்கிப் போய், கவிதை நன்றாக இருக்கிறதா இல்லையா என்ற முடிவெடுக்க மறைமுகக் காரணமாக இயங்கக் கூடும். கவிதை தருகிற அனுபவம், அது வாசகரின் மனத்துள் கிளர்த்துகிற பிற அனுபவங்கள், நினைவலைகள், பார்வைகள், பாதிப்புகள் என்று வாசகருக்கே உரித்தான பல அந்தரங்கக் காரணிகளின் அடிப்படையில் ஒரு கவிதையை நல்ல கவிதையா இல்லையா என்று வாசகர் தீர்மானிக்கிறார். வாசகரின் அறிவும், அனுபவமும் அவற்றின் விரிவும் இன்னொரு காரணமாகவும் இருக்கும். அறிவும் அனுபவமும் கவிதையை கவிதையியலில் பல்வேறு பார்வைகளை வைத்து அளவிட உதவுகின்றன. ஆனால், ஒரு கவிதையைப் படிக்கும்போது ஒருவர் எப்போதும் இத்தகைய பார்வைகளுடன் உட்காருவதில்லை. ஒரு வாசகராகவே உட்காருகிறார் என்று நேர்மறையாகவே - என் அனுபவத்தின் அடிப்படையில் - நான் நம்புகிறேன்.
ஒரு கவிதையை நல்ல கவிதை என்று எப்படிச் சொல்வது என்ற கேள்விக்கு விவரமான விடை கிடைக்குமா? புதுக்கவிதையோ மரபுக்கவிதையோ எந்தக் கவிதையானாலும் அது நல்ல கவிதை என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?
ஜனவரி 1959, சரஸ்வதி இதழில் க.நா.சுப்ரமண்யம் புதுக்கவிதை என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்? அதில் பின்வருமாறு எழுதுகிறார். (வாசிக்கச் சுலபமாக, ஒரு பத்தியில் தொடர்ந்த வாக்கியங்களாக இருந்ததை, நான் உடைத்துத் தந்திருக்கிறேன்.)
"பொதுவாக ஒரு நான்கு விஷயங்கள் சொல்லலாம் - புதுக்கவிதைக்கும் பழங்கவிதைக்குக் பொதுவான விஷயங்கள் இவை.
வார்த்தைச் சேர்க்கைகள் காதில் ஒருதரம் ஒலித்து, உள்ளத்தில் மீண்டும் எதிரொலி எழுப்புகிறதா என்பது முதல் கேள்வி.
இரண்டாவதாக, எந்தக் காலத்திலுமே வாழ்க்கை எந்தக் காலத்து மனிதனுக்கும் சிக்கலானதாகத்தான் இருந்து வந்திருக்கிறது. அந்தந்தக் காலத்துக் கவிதை - நல்ல கவிதை - அந்தக் காலத்துச் சிக்கலை அப்படியே தருகிறது நமக்கு. அப்படி இன்றையப் புதுக்கவிதை இன்றைய வாழ்க்கைச் சிக்கல் தொனிக்க அமைந்திருக்கிறதா என்பது இரண்டாவது கேள்வி.
இன்றைய வாழ்க்கைச் சிக்கலையும் புதிரையும் போலவே முதலில் புரியாததுபோல இருந்து, படிக்கப் படிக்கப் புரியத் தொடங்குகிறதா என்பது மூன்றாவது கேள்வி.
கடைசியாகக் கேட்டுக் கொள்ள வேண்டிய நான்காவது கேள்வி இது. நள்ளிரவில் விழித்துக் கொள்ளும்போது, இந்தக் கவிதையில் ஒரு அடியாவது திடுதிப்பென்று காரண காரியமே இல்லாமல் மனதில் தானே தோன்றிப் புது அர்த்தம் தருகிற மாதிரி இருக்கிறதா?
எந்தக் கவிதையைப் படித்துவிட்டு இந்த நான்கு கேள்விகளுக்கும் ஆம், ஆம், ஆம், ஆம் என்று பதிலளிக்க முடிகிறதோ, அந்தக் கவிதை - நல்ல கவிதை - உயர் கவிதை என்று நாம் முடிவு கட்டி விடலாம்."
(நன்றி: சரஸ்வதி களஞ்சியம், தொகுப்பாசிரியர்: வ.விஜயபாஸ்கரன், கலைஞன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை - 17)
நல்ல படைப்புகளைக் காலந்தோறும் பட்டியலிட்டு வந்தவர் க.நா.சு. ஆனால், ஒரு படைப்பு அவர் பட்டியலில் இடம் பெறுவதற்கான அல்லது இடம் பெறாமல் போனதற்கான காரண காரியங்களை அவர் போதுமான அளவுக்கு விளக்கியது இல்லை என்று எழுத்தாளர்களுக்கும் பிற விமர்சகர்களுக்கும் அவர் மீது ஒரு குறை உண்டு. அப்படிப்பட்ட க.நா.சு, எது நல்ல கவிதை என்பது குறித்து இவ்வளவு விளக்கமாக எழுதியிருக்கிறார் என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
க.நா.சு கேட்கச் சொல்கிற நான்கு கேள்விகளில் மூன்றாவது கேள்வியின் முதற்பகுதி "முதலில் புரியாததுபோல இருந்து" என்பது மட்டுமே எனக்குக் கேள்விக்குறி. முதலில் இருந்து கடைசிவரை முதல்தடவையே புரிகிற பல நல்ல கவிதைகளை நான் வாசித்திருக்கிறேன். க.நா.சு. சொல்கிற மற்ற விஷயங்கள் எனக்கு உடன்பாடானவையே.
ஆனால், எது நல்ல கவிதை என்று நிர்ணயிக்க நான் வேறு ஏதேனும் கேள்விகளும் கேட்பேனோ என்று யோசிக்க வேண்டிய அவசியத்தையும் உணர்கிறேன். கொஞ்சம் அவகாசமும் நேரமும் எடுத்துக் கொண்டு அதைப் பற்றி நிதானமாக யோசிக்கப் போகிறேன். உடனடியாகத் தோன்றுவது இது. எல்லாப் படைப்புகளுக்கும் இருக்க வேண்டியதுபோலவே, சொந்த அனுபவத்தைச் சொல்வதாக இருந்தாலும், ஒரு புள்ளியில் அந்த அனுபவம் பிரபஞ்சத்துக்கும் ஒத்த பொதுவிஷயமாக வாசகரால் பார்க்கப்படுகிற தன்மை கொண்டிருக்க வேண்டும். உதாரணமாக, பல கவிதைகளைச் சொல்ல முடியும். ஆனாலும், தவிர்க்கிறேன். இன்னமும் யோசிக்கும்போது இன்னமும் தோன்றலாம்.
இந்த நேரத்தில் ஒரு நல்ல கவிதையின் லட்சணம் என்று நீங்கள் எதெதைச் சொல்வீர்கள் என்று யோசித்து இங்கு பகிர்ந்து கொள்ளுங்களேன். நல்ல கவிதையில் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிற எதிர்பார்ப்புக்கு (லட்சணத்துக்கு) ஒரு யுனிவர்சல் தன்மை (பிரபஞ்சத்துவம்) இருக்க வேண்டும் என்று சொல்லி வைப்பது உதவக் கூடும். உதாரணமாக, நல்ல கவிதை என்றால் தனித்தமிழில் இருக்க வேண்டும் என்பது ஒரு யுனிவர்சல் எதிர்பார்ப்பு ஆக முடியாது. ஏனெனில் மொழி கவிதைக்கான ஊடகம்தான். மேலும், நல்ல கவிதை தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதில்லையே.
தமிழின் மறுமலர்ச்சி - 3
(தமிழின் மறுமலர்ச்சி - நூற்களஞ்சியம்: தொகுதி - 2 - பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை - வையாபுரிப்பிளளை நினைவு மன்றம், 'வையகம்', 2, 4-வது குறுக்குச் சாலை, இராஜா அண்ணாமலைபுரம், சென்னை - 28.)
தமிழும் சுதந்திரமும் என்ற தலைப்பிலான கட்டுரையிலிருந்து...
இந்தியா சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் பேராசிரியர் இந்தக் கட்டுரையை எழுதியிருக்கிறார். சுதந்தித்தால் அந்நியரின் தொடர்பு முற்றிலும் நீங்கவில்லை என்று காந்திஜி கருதுவதைச் சொல்கிற பேராசிரியர், பூரண சுதந்திரம் அடைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார். அதற்கு ஒற்றுமை ஒன்றே வழி என்று சொல்கிறார். சுதந்திரம் அடைந்தபோது நாட்டில் நடைபெற்ற இந்து-முஸ்லீம் கலவரம் பேராசிரியரைப் பாதித்திருக்கிறது. இந்தியா பூரண வெற்றியடைய இந்துக்களும் முஸ்லீம்களும் இணக்கமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். அதேபோல, தமிழ்நாட்டில் ஒருபிரிவினர் தனிப்பட்ட வாழ்க்கையை (பிரிவினையை) சுயநலத்தின் பொருட்டு ஊக்குவிப்பதையும் (அந்தக் காலத்தில் பிரிவினைவாதம் பேசிய திராவிட இயக்கத்தைப் பேராசிரியர் சொல்கிறார் என்று நான் எடுத்துக் கொள்கிறேன்.) பேராசிரியர் குறிப்பிடுகிறார். வட இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் எத்தகைய தொடர்பும் இல்லையென்று அப்பிரிவினைவாதிகள் சொல்லி வருகிறார்கள். அதிலே உண்மையில்லை.
நமது சமயமும் தெய்வங்களும் வட இந்தியாவுக்கும் உரியவையே. உதாரணமாக,
புறநானூற்றில் கடவுள் வணக்கச் செய்யுளில் சிவபெருமானது நீலகண்டம்,
மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே
என்று குறிக்கப்படுகிறது.
நீல மணிமிடற்றொருவன் போல
என்று பிற இடங்களிலும் வந்துள்ளது.
நற்றிணையில்,
வேத முதல்வன் என்ப
தீதற விளங்கிய திகிரியோனே
என்று திருமால் வணக்கம் சொல்லப்படுகறட்து. இப்படியே இந்திரன், வருணன் முதலிய தெய்வங்களும் தமிழ்நாட்டுக்கும் உரியவை என்று தொல்காப்பியம் கூறுகிறது. உயிர், மறுபிறப்பு, நல்வினை, தீவினை, பந்தம், வீடு, பேறு முதலிய நம் சமயக் கொள்கைகள் வடநாட்டினருக்கும் உரியவையாகும். பஞ்ச பூதங்கள், இவை தோன்றிய வரலாறு முதலிய பௌதிக சாஸ்திரக் கொள்கைகளும், கிரஹண வரலாறு முதலிய கொள்கைகளும், நால்வகை வருணம் எண்வகை மணம் முதலிய சமூகக் கொள்கைகளும், இந்திர விழா முதலிய உற்சவங்களும், இன்னும் கலைப் பண்பிற்குரிய பல அம்சங்களும் சங்க காலம்தொட்டே வட நாட்டிலும் தென்னாட்டிலும் ஒன்றாய் இருந்ததை சங்க இலக்கியங்களால் அறியலாம். அதுமட்டுமில்லாமல், பாரத தேசம் முழுமையும் ஒன்று என்ற கொள்கையும் பழங்காலந்தொட்டே இருந்து வந்திருக்கிறது.
புறநானூற்றில் 'பொற்கோட்டி மயமும் பொதியமும் போன்றே' என்று நமது தேசத்தின் வடகோடியையும் தென்கோடியையும் இணைத்துக் கூறுகிறார் ஒரு புலவர். இரு பேரெல்லைகளுக்குள்ளும் அகப்பட்ட நிலம் முழுவதும் ஆட்சி புரிந்த தமிழ் மன்னர் ஒரு சிலர் உளரெனச் சிலப்பதிகாரம் தெரிவிக்கிறது.
குமரியடு வட இமயத்து
ஒரு மொழி வைத்து உலகு ஆண்ட
சேரலாதற்கு...
என்று வாழ்த்துக் காதையில் வருகின்றது.
ஆகவே, வடநாட்டினரும் தென்னாட்டினரும் வெவ்வேறு மனித வர்க்கத்தினர் (different races) என்ற கொள்கை பிற்காலத்ததே என்று அறியப்படும். இலக்கியங்களாலும் சரித்திரங்களாலும் எட்ட முடியாத பழங்காலத்தில் இவ்விரு நாட்டினரும் வெவ்வேறு வர்க்கத்தினராக இருந்திருக்கலாம். ஆனால் இரண்டு வர்க்கங்களும் ஒன்றாய்க் கலந்து பல நூற்றாண்டுகளாகிவிட்டன. சிலர் தம்மை ஆரியரென்றும், சிலர் தம்மை திராவிடரென்றும் கூறிக் கொள்வது இப்போது பொருளற்றது. இப்படிக் கூறிக் கொண்டு தென்னாட்டவருக்குத் தனிப்பட்ட ஒரு ஸ்தானம் வேண்டுமென்று வாதிப்பது சரித்திர விரோதமும், மனித வர்க்க சாஸ்திர விரோதமுமாகும். ஆனால், மொழி பற்றிய மாகாணப் பிரிவினை அவசியமாகும். அது வேறு பிரச்னை.
பேராசிரியர் இந்தக் கட்டுரையில் பிரிவினை மனப்பான்மையைப் பற்றி மேலும் விவரமாகப் பேசுகிறார். தேசப்பிரிவினைக்கு ஒவ்வாத சிலர் கூட வடமொழிச் சொற்களைத் தவிர்த்து எழுதச் சொல்வது சரியில்லை. வடமொழிச் சொற்கள் நூல்களிலும், மேற்குடியிலும், படித்தவர்கள் இடையிலும் மட்டும் இருக்கிறது என்பதும் தவறு. நம் மக்களில் எல்லாப் பகுதியினரிடமும் வடமொழிச் சொற்கள் பல காலமாகத் தமிழ் சொற்களாகவே புழங்கி வருகின்றன. சில உதாரணங்கள், அச்சு, அதிகாரம், அதிட்டம், அன்னம், ஆதி, இட்டம், இயக்கி, இந்திரன், ஈயம், ஈனசாதி, உத்தரவு, உருவம், உட்டணம், ஊசி, எசமான், எமன், எந்திரம், ஏலம், ஒட்டகம், கலியாணம், காரியம், குடும்பம், சந்திரன், சனி, சாதி, சூரியன், தண்டம், தந்திரம், நகம், நாயன், பக்கம், பாவம், புதன், மந்திரம், மாசம், முகம், முக்கியம், முழுத்தம், யமன், ரத்தம், ராசா, லச்சை, லாபம், வசியம், வஞ்சனை.
அதேபோல வடமொழி சாஸ்திரக் கலை போன்றவற்றை அந்தணர் மட்டுமே இயற்றினர் என்று கருதுவதும் தவறு. பிற சமயத்தினரும், அந்தணர் அல்லாதாரும், இந்திய தேசத்தில், தமிழ்நாட்டினர் உள்படப் பல நாட்டினரும் வடமொழி சாஸ்திரங்களையும் கலைகளையும் இயற்றியுள்ளார்கள். எனவே, அந்தணர் மீது கொண்டுள்ள வெறுப்பை வடமொழி மீது செலுத்துவது தவறாகும். இம்மொழி இந்தியப் பொதுமொழியாகும். இம்மொழியை இழப்பது தமிழர்கள் பூர்வார்ஜிதத்தை இழப்பது போலாகும். சமுதாய உலகத்தில் தமிழ் மக்களாகிய நாம் எப்படித் தனித்து வாழ்தல் இயலாதோ, அப்படியே மொழியுலகில் தமிழ் தனித்து வாழ்தல் இயலாது. வடமொழியை நன்றாகப் பயன்படுத்துவதற்குத் தமிழுக்குப் பூரண சுதந்திரம் உண்டு. இதைச் சொல்வதால் வடமொழிக்கு நாமும் தமிழும் அடிமையாக வேண்டுமென்ற அர்த்தமில்லை. தமிழ்தான் தென்னாட்டில் தலைமை வகிக்க வேண்டும். வடமொழி வழக்கொழிந்த மொழி. தமிழ் உயிர்த்தத்துவமுடைய மொழி. இவ்வாறு சொல்கிற ஆசிரியர் செழித்துக் கொண்டிருக்கிற தமிழின் சிறப்புகளை விவரித்து இன்னும் ஆறு காரணங்கள் சொல்கிறார். அக்காரணங்களால் தமிழ் தமிழ்நாட்டில் தலைமை பெற உரியதென்று விளக்குகிறார்.
இப்படித் தமிழ்மொழியை முதற்கடமையாகப் போற்ற வேண்டிய நாம், அடுத்து அன்பு பூண்டு பேண வேண்டியது வடமொழியாகும் என்கிறார் பேராசிரியர். இருமொழிகளுக்கும் இடையிலான உறவையும், வரலாற்றையும் அதற்குக் காரணமாகப் பேராசிரியர் சொல்கிறார்.
தமிழ்ப் பேரிலக்கியங்கள் பற்றி அடுத்துப் பேசுகிறார் பேராசிரியர். தமிழ்ப் பேரிலக்கியங்கள் நிலைத்த மதிப்புடையன. அவை தவிர்த்த பிறநூல்கள் பெரும்பாலும் வடமொழியைப் பின்பற்றியவை. விஞ்ஞான அறிவு பரவுவதற்கு இவை பயன்படா. அதனால்தான் சர்.சி.வி.ராமன் நமது தேசத்தின் நூல் நிலையங்களிலுள்ள நூல்களில் பெரும்பாலனவற்றை எரித்துவிட வேண்டுமென்று ஒருமுறை சொன்னார். அப்படிச் செய்வது பிழையாகும். ஆனால் சர்.சி.வி.ராமனின் உட்கருத்து போற்றத்தக்கது. விஞ்ஞான அறிவுதான் சிறந்த அறிவு. அதை வளர்ப்பதற்கும், மக்களிடம் பரப்புவதற்கும் உரிய வல்லயையைத் தமிழ் பெற வேண்டும்.
தமிழ் தெய்வத்தன்மை உடையது என்றும், ஆங்கிலத்தின் துணை விரும்பத்தக்கது இல்லை என்றும், தமிழில் எல்லா அறிவு நூல்களும் நிரம்பியுள்ளன என்றும், தமிழுக்கு இனி வளர்ச்சி வேண்டாமென்றும் ஒரு சாரார் கருதுகிறார்கள். இது கேடு விளைவிக்கக் கூடியது. என்று நமது மொழி பரிபூரணமடைகிறதோ அன்று அதனுடைய இறப்பு திண்ணம். ஆனால், பரிபூரண நிலையை அது என்றும் அடைய முடியாது. மனித அறிவு வளர்ச்சிக்கு எல்லையில்லை. அதைப் போன்றதுதான் மொழியின் வளர்ச்சியும். ஓடிக்கொண்டிருக்கும் ஜீவநதி போன்றது மொழி. அது பரிபூரணமடைந்துவிட்டது என்பது, நதியை அணைபோட்டுத் தடுப்பது போலாகும்.
தேசத்தின் சுதந்திரத்தை புறத்தே தெரியும் ஆட்சி முறைகளால் அறியலாம். மொழியின் சுதந்திரம் அப்படி எளிதில் அறியப்படுவதன்று. மொழியின் ஆற்றலைக் கொண்டே அதை ஊகித்துணர முடியும். ஆகவே, நமது மொழியும் சுதந்திர நெறியில் செல்லத் தமிழ் மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
இத்துடன் இந்தக் கட்டுரை நிறைவுறுகிறது.
அடுத்த கட்டுரை, பாரதி யுகம் என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது. மஹாகவி பாரதி மீது பேராசிரியருக்குப் பெரும் மதிப்பும் மரியாதையும் இருக்கிறது என்பதை அவர் எழுத்துகளிலிருந்து அறிய முடிகிறது. பல இடங்களில் பாரதியை மேற்கோள் காட்டுகிறார். பாரதியைப் பற்றிய கட்டுரைகளும் உள்ளன.
(தொடரும்)
தமிழும் சுதந்திரமும் என்ற தலைப்பிலான கட்டுரையிலிருந்து...
இந்தியா சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் பேராசிரியர் இந்தக் கட்டுரையை எழுதியிருக்கிறார். சுதந்தித்தால் அந்நியரின் தொடர்பு முற்றிலும் நீங்கவில்லை என்று காந்திஜி கருதுவதைச் சொல்கிற பேராசிரியர், பூரண சுதந்திரம் அடைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார். அதற்கு ஒற்றுமை ஒன்றே வழி என்று சொல்கிறார். சுதந்திரம் அடைந்தபோது நாட்டில் நடைபெற்ற இந்து-முஸ்லீம் கலவரம் பேராசிரியரைப் பாதித்திருக்கிறது. இந்தியா பூரண வெற்றியடைய இந்துக்களும் முஸ்லீம்களும் இணக்கமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். அதேபோல, தமிழ்நாட்டில் ஒருபிரிவினர் தனிப்பட்ட வாழ்க்கையை (பிரிவினையை) சுயநலத்தின் பொருட்டு ஊக்குவிப்பதையும் (அந்தக் காலத்தில் பிரிவினைவாதம் பேசிய திராவிட இயக்கத்தைப் பேராசிரியர் சொல்கிறார் என்று நான் எடுத்துக் கொள்கிறேன்.) பேராசிரியர் குறிப்பிடுகிறார். வட இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் எத்தகைய தொடர்பும் இல்லையென்று அப்பிரிவினைவாதிகள் சொல்லி வருகிறார்கள். அதிலே உண்மையில்லை.
நமது சமயமும் தெய்வங்களும் வட இந்தியாவுக்கும் உரியவையே. உதாரணமாக,
புறநானூற்றில் கடவுள் வணக்கச் செய்யுளில் சிவபெருமானது நீலகண்டம்,
மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே
என்று குறிக்கப்படுகிறது.
நீல மணிமிடற்றொருவன் போல
என்று பிற இடங்களிலும் வந்துள்ளது.
நற்றிணையில்,
வேத முதல்வன் என்ப
தீதற விளங்கிய திகிரியோனே
என்று திருமால் வணக்கம் சொல்லப்படுகறட்து. இப்படியே இந்திரன், வருணன் முதலிய தெய்வங்களும் தமிழ்நாட்டுக்கும் உரியவை என்று தொல்காப்பியம் கூறுகிறது. உயிர், மறுபிறப்பு, நல்வினை, தீவினை, பந்தம், வீடு, பேறு முதலிய நம் சமயக் கொள்கைகள் வடநாட்டினருக்கும் உரியவையாகும். பஞ்ச பூதங்கள், இவை தோன்றிய வரலாறு முதலிய பௌதிக சாஸ்திரக் கொள்கைகளும், கிரஹண வரலாறு முதலிய கொள்கைகளும், நால்வகை வருணம் எண்வகை மணம் முதலிய சமூகக் கொள்கைகளும், இந்திர விழா முதலிய உற்சவங்களும், இன்னும் கலைப் பண்பிற்குரிய பல அம்சங்களும் சங்க காலம்தொட்டே வட நாட்டிலும் தென்னாட்டிலும் ஒன்றாய் இருந்ததை சங்க இலக்கியங்களால் அறியலாம். அதுமட்டுமில்லாமல், பாரத தேசம் முழுமையும் ஒன்று என்ற கொள்கையும் பழங்காலந்தொட்டே இருந்து வந்திருக்கிறது.
புறநானூற்றில் 'பொற்கோட்டி மயமும் பொதியமும் போன்றே' என்று நமது தேசத்தின் வடகோடியையும் தென்கோடியையும் இணைத்துக் கூறுகிறார் ஒரு புலவர். இரு பேரெல்லைகளுக்குள்ளும் அகப்பட்ட நிலம் முழுவதும் ஆட்சி புரிந்த தமிழ் மன்னர் ஒரு சிலர் உளரெனச் சிலப்பதிகாரம் தெரிவிக்கிறது.
குமரியடு வட இமயத்து
ஒரு மொழி வைத்து உலகு ஆண்ட
சேரலாதற்கு...
என்று வாழ்த்துக் காதையில் வருகின்றது.
ஆகவே, வடநாட்டினரும் தென்னாட்டினரும் வெவ்வேறு மனித வர்க்கத்தினர் (different races) என்ற கொள்கை பிற்காலத்ததே என்று அறியப்படும். இலக்கியங்களாலும் சரித்திரங்களாலும் எட்ட முடியாத பழங்காலத்தில் இவ்விரு நாட்டினரும் வெவ்வேறு வர்க்கத்தினராக இருந்திருக்கலாம். ஆனால் இரண்டு வர்க்கங்களும் ஒன்றாய்க் கலந்து பல நூற்றாண்டுகளாகிவிட்டன. சிலர் தம்மை ஆரியரென்றும், சிலர் தம்மை திராவிடரென்றும் கூறிக் கொள்வது இப்போது பொருளற்றது. இப்படிக் கூறிக் கொண்டு தென்னாட்டவருக்குத் தனிப்பட்ட ஒரு ஸ்தானம் வேண்டுமென்று வாதிப்பது சரித்திர விரோதமும், மனித வர்க்க சாஸ்திர விரோதமுமாகும். ஆனால், மொழி பற்றிய மாகாணப் பிரிவினை அவசியமாகும். அது வேறு பிரச்னை.
பேராசிரியர் இந்தக் கட்டுரையில் பிரிவினை மனப்பான்மையைப் பற்றி மேலும் விவரமாகப் பேசுகிறார். தேசப்பிரிவினைக்கு ஒவ்வாத சிலர் கூட வடமொழிச் சொற்களைத் தவிர்த்து எழுதச் சொல்வது சரியில்லை. வடமொழிச் சொற்கள் நூல்களிலும், மேற்குடியிலும், படித்தவர்கள் இடையிலும் மட்டும் இருக்கிறது என்பதும் தவறு. நம் மக்களில் எல்லாப் பகுதியினரிடமும் வடமொழிச் சொற்கள் பல காலமாகத் தமிழ் சொற்களாகவே புழங்கி வருகின்றன. சில உதாரணங்கள், அச்சு, அதிகாரம், அதிட்டம், அன்னம், ஆதி, இட்டம், இயக்கி, இந்திரன், ஈயம், ஈனசாதி, உத்தரவு, உருவம், உட்டணம், ஊசி, எசமான், எமன், எந்திரம், ஏலம், ஒட்டகம், கலியாணம், காரியம், குடும்பம், சந்திரன், சனி, சாதி, சூரியன், தண்டம், தந்திரம், நகம், நாயன், பக்கம், பாவம், புதன், மந்திரம், மாசம், முகம், முக்கியம், முழுத்தம், யமன், ரத்தம், ராசா, லச்சை, லாபம், வசியம், வஞ்சனை.
அதேபோல வடமொழி சாஸ்திரக் கலை போன்றவற்றை அந்தணர் மட்டுமே இயற்றினர் என்று கருதுவதும் தவறு. பிற சமயத்தினரும், அந்தணர் அல்லாதாரும், இந்திய தேசத்தில், தமிழ்நாட்டினர் உள்படப் பல நாட்டினரும் வடமொழி சாஸ்திரங்களையும் கலைகளையும் இயற்றியுள்ளார்கள். எனவே, அந்தணர் மீது கொண்டுள்ள வெறுப்பை வடமொழி மீது செலுத்துவது தவறாகும். இம்மொழி இந்தியப் பொதுமொழியாகும். இம்மொழியை இழப்பது தமிழர்கள் பூர்வார்ஜிதத்தை இழப்பது போலாகும். சமுதாய உலகத்தில் தமிழ் மக்களாகிய நாம் எப்படித் தனித்து வாழ்தல் இயலாதோ, அப்படியே மொழியுலகில் தமிழ் தனித்து வாழ்தல் இயலாது. வடமொழியை நன்றாகப் பயன்படுத்துவதற்குத் தமிழுக்குப் பூரண சுதந்திரம் உண்டு. இதைச் சொல்வதால் வடமொழிக்கு நாமும் தமிழும் அடிமையாக வேண்டுமென்ற அர்த்தமில்லை. தமிழ்தான் தென்னாட்டில் தலைமை வகிக்க வேண்டும். வடமொழி வழக்கொழிந்த மொழி. தமிழ் உயிர்த்தத்துவமுடைய மொழி. இவ்வாறு சொல்கிற ஆசிரியர் செழித்துக் கொண்டிருக்கிற தமிழின் சிறப்புகளை விவரித்து இன்னும் ஆறு காரணங்கள் சொல்கிறார். அக்காரணங்களால் தமிழ் தமிழ்நாட்டில் தலைமை பெற உரியதென்று விளக்குகிறார்.
இப்படித் தமிழ்மொழியை முதற்கடமையாகப் போற்ற வேண்டிய நாம், அடுத்து அன்பு பூண்டு பேண வேண்டியது வடமொழியாகும் என்கிறார் பேராசிரியர். இருமொழிகளுக்கும் இடையிலான உறவையும், வரலாற்றையும் அதற்குக் காரணமாகப் பேராசிரியர் சொல்கிறார்.
தமிழ்ப் பேரிலக்கியங்கள் பற்றி அடுத்துப் பேசுகிறார் பேராசிரியர். தமிழ்ப் பேரிலக்கியங்கள் நிலைத்த மதிப்புடையன. அவை தவிர்த்த பிறநூல்கள் பெரும்பாலும் வடமொழியைப் பின்பற்றியவை. விஞ்ஞான அறிவு பரவுவதற்கு இவை பயன்படா. அதனால்தான் சர்.சி.வி.ராமன் நமது தேசத்தின் நூல் நிலையங்களிலுள்ள நூல்களில் பெரும்பாலனவற்றை எரித்துவிட வேண்டுமென்று ஒருமுறை சொன்னார். அப்படிச் செய்வது பிழையாகும். ஆனால் சர்.சி.வி.ராமனின் உட்கருத்து போற்றத்தக்கது. விஞ்ஞான அறிவுதான் சிறந்த அறிவு. அதை வளர்ப்பதற்கும், மக்களிடம் பரப்புவதற்கும் உரிய வல்லயையைத் தமிழ் பெற வேண்டும்.
தமிழ் தெய்வத்தன்மை உடையது என்றும், ஆங்கிலத்தின் துணை விரும்பத்தக்கது இல்லை என்றும், தமிழில் எல்லா அறிவு நூல்களும் நிரம்பியுள்ளன என்றும், தமிழுக்கு இனி வளர்ச்சி வேண்டாமென்றும் ஒரு சாரார் கருதுகிறார்கள். இது கேடு விளைவிக்கக் கூடியது. என்று நமது மொழி பரிபூரணமடைகிறதோ அன்று அதனுடைய இறப்பு திண்ணம். ஆனால், பரிபூரண நிலையை அது என்றும் அடைய முடியாது. மனித அறிவு வளர்ச்சிக்கு எல்லையில்லை. அதைப் போன்றதுதான் மொழியின் வளர்ச்சியும். ஓடிக்கொண்டிருக்கும் ஜீவநதி போன்றது மொழி. அது பரிபூரணமடைந்துவிட்டது என்பது, நதியை அணைபோட்டுத் தடுப்பது போலாகும்.
தேசத்தின் சுதந்திரத்தை புறத்தே தெரியும் ஆட்சி முறைகளால் அறியலாம். மொழியின் சுதந்திரம் அப்படி எளிதில் அறியப்படுவதன்று. மொழியின் ஆற்றலைக் கொண்டே அதை ஊகித்துணர முடியும். ஆகவே, நமது மொழியும் சுதந்திர நெறியில் செல்லத் தமிழ் மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
இத்துடன் இந்தக் கட்டுரை நிறைவுறுகிறது.
அடுத்த கட்டுரை, பாரதி யுகம் என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது. மஹாகவி பாரதி மீது பேராசிரியருக்குப் பெரும் மதிப்பும் மரியாதையும் இருக்கிறது என்பதை அவர் எழுத்துகளிலிருந்து அறிய முடிகிறது. பல இடங்களில் பாரதியை மேற்கோள் காட்டுகிறார். பாரதியைப் பற்றிய கட்டுரைகளும் உள்ளன.
(தொடரும்)
Friday, October 22, 2004
தேர்தல் கணிப்புக்கு இன்னொரு தளம்
நண்பர் துக்காராம் எனக்குச் சொன்ன இந்த இணையதளத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Predicted Final Results என்கிற சுட்டி தருகிற கணிப்பு கவனிக்கத்தக்கது.
இத்தளத்திலே பலவிதமான தினசரி கணிப்புகளும், பலவிதமான ஆய்வுகளும், வரைபடங்களும் இருக்கின்றன. கண்டு களியுங்கள்!
இத்தளத்திலே பலவிதமான தினசரி கணிப்புகளும், பலவிதமான ஆய்வுகளும், வரைபடங்களும் இருக்கின்றன. கண்டு களியுங்கள்!
Thursday, October 21, 2004
தலாய் லாமா பேசுகிறார்
டைம் பத்திரிகையில் எனக்குப் பிடித்த பகுதிகளில் இந்த "10 கேள்விகள்" பகுதியும் ஒன்று. பத்தில் குறிப்பிடத்தக்க அளவுக்கு நச்சென்ற ஆனால் ஆழமான கேள்விகளும், அதற்கேற்ற சுவாரஸ்யமான பதில்களும் பெரும்பாலும் காணக் கிடைக்கும். இந்தக் கேள்வி-பதில் பெரும்பாலும் டைம் பத்திரிகையில் ஒரு முழுபக்கத்தைத் தாண்டாது. ஆனால் பல விஷயங்களை உள்ளடக்கியிருக்கும் என்பதும் இதை உடனடியாகவும் விரைவாகவும் படித்துவிடத் தூண்டுவன. அக்டோபர் 25, 2004 தேதியிட்ட டைம் பத்திரிகையில் தலாய் லாமாவிடம் 10 கேள்விகள் பகுதியில் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன. அதை இங்கே காணலாம்.
சீனா திபெத்தை பல்லாண்டுகளாக ஆக்ரமித்து இருப்பதும், தலாய் லாமா தலைமையில் சுதந்திரத்துக்காகவும் சுயநிர்ணயத்துக்காகவும் திபெத்தியர்கள் போராடி வருவதும் பலர் அறிந்த விஷயங்கள். சீனாவின் ஆளுகைக்குட்பட்ட திபெத்தில் சுதந்திரமாக இயங்க இயலாது என்றும், அச்சுறுத்தல்கள் நேருமென்றும் தலாய் லாமா பல்லாண்டுகளாக இந்தியாவில் வசித்து வருகிறார் என்பதும் நாம் அறிந்ததே.
"சீனாவின் ஆளுகையால் சில பொருளாதார மற்றும் பிற வளர்ச்சிகள் ஏற்பட்டிருந்தும், திபெத்தியர்களின் கலாசார மரபு, மதரீதியான சுதந்திரம், சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்குக் கடுமையான அச்சுறுத்தல் இருப்பதாகவே" தலாய் லாமா இந்த பதில்களில் சொல்கிறார். புரட்சியும், பொதுவுடைமையும் கூட சமத்துவத்தையோ மனித உரிமைகளையோ கொண்டு வராமல், அரசு மேலாண்மைவாதத்தைக் கொண்டுவர முடியும் என்பதற்கு இது ஒரு உதாரணம். அரசு மேலாண்மைவாதத்துக்கு எல்லாரும் உடைந்துபோன சோவியத் யூனியனின் முடிந்துபோன ஸ்டாலின் நாள்களைக் குறிப்பிடுகிறார்கள். ஆனால், நிஜவாழ்க்கையின் நிகழ்கால உதாரணம் திபெத். இது பொதுவுடைமைக் கொள்கையின் தவறல்ல என்று இந்தியாவின் மனித உரிமைக் காவலர்களான இடதுசாரிகள் சப்பைக்கட்டு கட்டலாம். நான் கூட இது பொதுவுடைமைக் கொள்கையின் தவறல்ல. அது செயல்படுத்தப்பட்ட விதத்தின் தவறே என்று நம்புகிறேன். எனவே, விஷயம் என்னவென்றால் - ஆட்சிமுறை ஜனநாயகமாக இருந்தாலும், புரட்சி வழி பூக்கிற பொதுவுடைமையாக இருந்தாலும், அமெரிக்கா போதிக்கிற முதலாளித்துவ ஜனநாயகமாக இருந்தாலும் குறைகள் ஆள்பவர்களிடமும், சித்தாந்தங்கள் செயல்படுத்தப்படுகிற விதத்திலும் இருக்குமானால், அதற்காக அந்த அமைப்போ வழியோ முற்றிலும் சரியல்ல என்று சொல்லிவிட முடியாது என்பதுதான். இருக்கிற எல்லாவிதமான ஆட்சிமுறைகளையும் எடுத்துக் கொள்ளும்போது, ஜனநாயகம் என்கிற ஆட்சி முறையிலே இக்குறைகளைக் களைகிற அதிகாரம் நேரடியாக மக்களிடமும், குறைகளைக் களைவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகவும் இருக்கின்றன. ஜனநாயகத்தின் பயங்கரவாதம், மனித உரிமை மீறல்கள் குறித்த பெருங்கதையாடல்கள் இணையத்தில் நிகழ்வதால் (இத்தகைய விவாதங்கள் கண்டிப்பாக நிகழத்தான் வேண்டும்) இதைச் சொல்கிறேன்.
இது மட்டுமல்ல. இதைவிட முக்கியமான ஒரு விஷயத்தை தலாய் லாமா பேசுகிறார். என்னவென்றால், சீனாவிடமிருந்து திபெத்துக்கும் அதன் கலாசாரத்துக்கும் தீவிரமான அச்சுறுத்தல் இருக்கிறபோதும், தனித்துப் போகாமல், சீனாவுக்குள்ளிருந்தே திபெத் மிகப்பெரிய அனுகூலங்களை அடைய வேண்டுமென்றும் அடையக்கூடுமென்றும் அவர் விரும்புகிறார். திபெத் தனித்து சுதந்திர நாடாக இருக்க வேண்டும் என்கிற கொள்கையைக் கைவிட வேண்டியதன் அனுகூலங்களை விளக்குகிறார். போனால் வந்தால் மொழிவாரியான மக்களுக்கு அவர்களின் சுதந்திரத்தை அவர்களே நிர்ணயித்துக் கொள்கிற சுவாதீனமும், தனித்து வாழ்கிற உரிமையும் வேண்டுமென்று குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறவர்களுக்கிடையே, 1950லிருந்து சீனாவின் ஆளுகைக்குட்பட்டு அடக்குமுறைக்கு உள்ளாகி இருந்தாலும், சீன ஒன்றியத்துள் இணைந்து இருப்பதுவே திபெத்துக்கும் திபெத்தியர்களுக்கும் நல்லது என்று நம்புகிற தலாய் லாமாவின் கருத்துகள் மிகவும் முக்கியத்துவமுடையன. தலாய் லாமாவின் இந்தக் கருத்து ஒரு மாற்றுப் பார்வை என்ற அளவிலேயும், தன் மக்களும் நாடும் தனித்திருக்க வேண்டுமென்று முன்னர் விரும்பியவரின் முக்கிய மனமாற்றம் என்ற அளவிலும் மிகவும் கவனிக்கவும் ஆராயவும் தக்கது. ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் அடக்குமுறைக்கும் எதேச்சதிகாரத்துக்கும் ஆளான ஒரு நாட்டின் - பெரும்பான்மையான மக்களின் - பிரதிநிதி இத்தகைய மனமாற்றம் அடைய என்ன காரணங்கள் இருக்க வேண்டும் என்று சிந்தனாவாதிகள் கட்டாயம் ஆராய்வர். மற்ற சிலர் தலாய் லாமாக்குத் துரோகி பட்டம் அளித்து மகிழக் கூடும்.
பின்லாந்து(?) தனித்துப் போக விரும்பியபோது அனுமதித்தவர் லெனின் என்று பால்ய பருவத்தில் படித்த நினைவிருக்கிறது. பல நேரங்களின் பல வருடங்களுக்கு முன் படித்ததை நினைவில் வைத்தும், என் ஞாபகங்களின் அடிப்படையிலுமே எழுத வேண்டியிருக்கிறது. எனவே, இவற்றில் தவறிருந்தால், அதைச் சுட்டிக் காட்டுங்கள். ஆனால், வரலாற்றுத் தகவல்களின் பிழைக்காக கட்டுரையின் அடிப்படையைத் தூக்கி எறிந்து அவசரப்பட வேண்டாமென்று வேண்டுகிறேன். ஆனால், பின்னாளில் பொதுவுடைமை அரசாங்கங்களே இனக்குழுக்களின் சுதந்திரத்தையும் சுயநிர்ணய உரிமையையும் மதிக்காமல் அவர்களை அடக்கியாள்கிற புரட்சிகள் செய்ய ஆரம்பித்தன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளில்தான் இடதுசாரிகள் மிகவும் உரத்த குரலில் மனித உரிமைகள் பற்றிப் பேச முடிகிறது. மாநில சுயாட்சி குறித்து குரல் கொடுக்க முடிகிறது. மத்தியில் கூட்டணி அரசை நிர்ணயிக்கிற சக்தியாக பரிணமளிக்க முடிகிறது. மதச்சார்புடைய நாடுகளிலோ அரசு மேலாண்மைவாதமோ பயங்கரவாதமோ ஆளுகின்ற நாடுகளிலோ இயக்கங்களிலோ இவற்றைப் பற்றிப் பேசுவது குறித்து கனவும் காண முடியாது.
அதனாலேயே, எந்தக் கதையாடுபவர்களும் அவர்கள் முன்வைக்கிற மாற்று முறைகளின் பெருமைகளைப் பேசுகிற அதே நேரத்தில் அந்த மாற்று முறைகள் ஏற்படுத்தியிருக்கிற வரலாற்று வடுக்களையும் ஒப்புக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் குறிப்பிட்ட கொள்கைக்குத் தாலி கட்டிக் கொண்டு அதன் பொருட்டு அரசியல் ஜல்லி அடிப்பவர்களுக்கும் சிந்தனாவாதிகளுக்கும் வித்தியாசம் இல்லையென்றாகிவிடும்.
இதைப் படித்துவிட்டு காகிதப் போராளிகளிடமிருந்து தலாய் லாமாவுக்குக் கிடைக்கப் போகிற வசைகளுக்கு அவர் என்னை மன்னிப்பாராக.
பி.கு.: தலாய் லாமா இத்தகைய கருத்துகளை ஏற்கனவே சொல்லியிருக்கக் கூடும். ஆனால், அவற்றை என் சிற்றறிவு இப்போதுதான் கவனிக்கிறது என்பதையும் சொல்லி வைக்கிறேன்.
சீனா திபெத்தை பல்லாண்டுகளாக ஆக்ரமித்து இருப்பதும், தலாய் லாமா தலைமையில் சுதந்திரத்துக்காகவும் சுயநிர்ணயத்துக்காகவும் திபெத்தியர்கள் போராடி வருவதும் பலர் அறிந்த விஷயங்கள். சீனாவின் ஆளுகைக்குட்பட்ட திபெத்தில் சுதந்திரமாக இயங்க இயலாது என்றும், அச்சுறுத்தல்கள் நேருமென்றும் தலாய் லாமா பல்லாண்டுகளாக இந்தியாவில் வசித்து வருகிறார் என்பதும் நாம் அறிந்ததே.
"சீனாவின் ஆளுகையால் சில பொருளாதார மற்றும் பிற வளர்ச்சிகள் ஏற்பட்டிருந்தும், திபெத்தியர்களின் கலாசார மரபு, மதரீதியான சுதந்திரம், சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்குக் கடுமையான அச்சுறுத்தல் இருப்பதாகவே" தலாய் லாமா இந்த பதில்களில் சொல்கிறார். புரட்சியும், பொதுவுடைமையும் கூட சமத்துவத்தையோ மனித உரிமைகளையோ கொண்டு வராமல், அரசு மேலாண்மைவாதத்தைக் கொண்டுவர முடியும் என்பதற்கு இது ஒரு உதாரணம். அரசு மேலாண்மைவாதத்துக்கு எல்லாரும் உடைந்துபோன சோவியத் யூனியனின் முடிந்துபோன ஸ்டாலின் நாள்களைக் குறிப்பிடுகிறார்கள். ஆனால், நிஜவாழ்க்கையின் நிகழ்கால உதாரணம் திபெத். இது பொதுவுடைமைக் கொள்கையின் தவறல்ல என்று இந்தியாவின் மனித உரிமைக் காவலர்களான இடதுசாரிகள் சப்பைக்கட்டு கட்டலாம். நான் கூட இது பொதுவுடைமைக் கொள்கையின் தவறல்ல. அது செயல்படுத்தப்பட்ட விதத்தின் தவறே என்று நம்புகிறேன். எனவே, விஷயம் என்னவென்றால் - ஆட்சிமுறை ஜனநாயகமாக இருந்தாலும், புரட்சி வழி பூக்கிற பொதுவுடைமையாக இருந்தாலும், அமெரிக்கா போதிக்கிற முதலாளித்துவ ஜனநாயகமாக இருந்தாலும் குறைகள் ஆள்பவர்களிடமும், சித்தாந்தங்கள் செயல்படுத்தப்படுகிற விதத்திலும் இருக்குமானால், அதற்காக அந்த அமைப்போ வழியோ முற்றிலும் சரியல்ல என்று சொல்லிவிட முடியாது என்பதுதான். இருக்கிற எல்லாவிதமான ஆட்சிமுறைகளையும் எடுத்துக் கொள்ளும்போது, ஜனநாயகம் என்கிற ஆட்சி முறையிலே இக்குறைகளைக் களைகிற அதிகாரம் நேரடியாக மக்களிடமும், குறைகளைக் களைவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகவும் இருக்கின்றன. ஜனநாயகத்தின் பயங்கரவாதம், மனித உரிமை மீறல்கள் குறித்த பெருங்கதையாடல்கள் இணையத்தில் நிகழ்வதால் (இத்தகைய விவாதங்கள் கண்டிப்பாக நிகழத்தான் வேண்டும்) இதைச் சொல்கிறேன்.
இது மட்டுமல்ல. இதைவிட முக்கியமான ஒரு விஷயத்தை தலாய் லாமா பேசுகிறார். என்னவென்றால், சீனாவிடமிருந்து திபெத்துக்கும் அதன் கலாசாரத்துக்கும் தீவிரமான அச்சுறுத்தல் இருக்கிறபோதும், தனித்துப் போகாமல், சீனாவுக்குள்ளிருந்தே திபெத் மிகப்பெரிய அனுகூலங்களை அடைய வேண்டுமென்றும் அடையக்கூடுமென்றும் அவர் விரும்புகிறார். திபெத் தனித்து சுதந்திர நாடாக இருக்க வேண்டும் என்கிற கொள்கையைக் கைவிட வேண்டியதன் அனுகூலங்களை விளக்குகிறார். போனால் வந்தால் மொழிவாரியான மக்களுக்கு அவர்களின் சுதந்திரத்தை அவர்களே நிர்ணயித்துக் கொள்கிற சுவாதீனமும், தனித்து வாழ்கிற உரிமையும் வேண்டுமென்று குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறவர்களுக்கிடையே, 1950லிருந்து சீனாவின் ஆளுகைக்குட்பட்டு அடக்குமுறைக்கு உள்ளாகி இருந்தாலும், சீன ஒன்றியத்துள் இணைந்து இருப்பதுவே திபெத்துக்கும் திபெத்தியர்களுக்கும் நல்லது என்று நம்புகிற தலாய் லாமாவின் கருத்துகள் மிகவும் முக்கியத்துவமுடையன. தலாய் லாமாவின் இந்தக் கருத்து ஒரு மாற்றுப் பார்வை என்ற அளவிலேயும், தன் மக்களும் நாடும் தனித்திருக்க வேண்டுமென்று முன்னர் விரும்பியவரின் முக்கிய மனமாற்றம் என்ற அளவிலும் மிகவும் கவனிக்கவும் ஆராயவும் தக்கது. ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் அடக்குமுறைக்கும் எதேச்சதிகாரத்துக்கும் ஆளான ஒரு நாட்டின் - பெரும்பான்மையான மக்களின் - பிரதிநிதி இத்தகைய மனமாற்றம் அடைய என்ன காரணங்கள் இருக்க வேண்டும் என்று சிந்தனாவாதிகள் கட்டாயம் ஆராய்வர். மற்ற சிலர் தலாய் லாமாக்குத் துரோகி பட்டம் அளித்து மகிழக் கூடும்.
பின்லாந்து(?) தனித்துப் போக விரும்பியபோது அனுமதித்தவர் லெனின் என்று பால்ய பருவத்தில் படித்த நினைவிருக்கிறது. பல நேரங்களின் பல வருடங்களுக்கு முன் படித்ததை நினைவில் வைத்தும், என் ஞாபகங்களின் அடிப்படையிலுமே எழுத வேண்டியிருக்கிறது. எனவே, இவற்றில் தவறிருந்தால், அதைச் சுட்டிக் காட்டுங்கள். ஆனால், வரலாற்றுத் தகவல்களின் பிழைக்காக கட்டுரையின் அடிப்படையைத் தூக்கி எறிந்து அவசரப்பட வேண்டாமென்று வேண்டுகிறேன். ஆனால், பின்னாளில் பொதுவுடைமை அரசாங்கங்களே இனக்குழுக்களின் சுதந்திரத்தையும் சுயநிர்ணய உரிமையையும் மதிக்காமல் அவர்களை அடக்கியாள்கிற புரட்சிகள் செய்ய ஆரம்பித்தன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளில்தான் இடதுசாரிகள் மிகவும் உரத்த குரலில் மனித உரிமைகள் பற்றிப் பேச முடிகிறது. மாநில சுயாட்சி குறித்து குரல் கொடுக்க முடிகிறது. மத்தியில் கூட்டணி அரசை நிர்ணயிக்கிற சக்தியாக பரிணமளிக்க முடிகிறது. மதச்சார்புடைய நாடுகளிலோ அரசு மேலாண்மைவாதமோ பயங்கரவாதமோ ஆளுகின்ற நாடுகளிலோ இயக்கங்களிலோ இவற்றைப் பற்றிப் பேசுவது குறித்து கனவும் காண முடியாது.
அதனாலேயே, எந்தக் கதையாடுபவர்களும் அவர்கள் முன்வைக்கிற மாற்று முறைகளின் பெருமைகளைப் பேசுகிற அதே நேரத்தில் அந்த மாற்று முறைகள் ஏற்படுத்தியிருக்கிற வரலாற்று வடுக்களையும் ஒப்புக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் குறிப்பிட்ட கொள்கைக்குத் தாலி கட்டிக் கொண்டு அதன் பொருட்டு அரசியல் ஜல்லி அடிப்பவர்களுக்கும் சிந்தனாவாதிகளுக்கும் வித்தியாசம் இல்லையென்றாகிவிடும்.
இதைப் படித்துவிட்டு காகிதப் போராளிகளிடமிருந்து தலாய் லாமாவுக்குக் கிடைக்கப் போகிற வசைகளுக்கு அவர் என்னை மன்னிப்பாராக.
பி.கு.: தலாய் லாமா இத்தகைய கருத்துகளை ஏற்கனவே சொல்லியிருக்கக் கூடும். ஆனால், அவற்றை என் சிற்றறிவு இப்போதுதான் கவனிக்கிறது என்பதையும் சொல்லி வைக்கிறேன்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் - ஒரு மாற்றுப் பார்வை
(எச்சரிக்கை: அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் குறித்து இடதுசாரி பார்வை கொண்ட ஒருவரின் கட்டுரை பற்றியது இது. அவரின் இடதுசாரி பார்வையை மட்டும் எடுத்துக் கொள்ளாமல், அவர் கட்டுரையில் இருக்கிற உண்மைகள், தகவல்கள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு பின்வரும் கட்டுரையை மதிப்பிடுவது குடியரசு கட்சியை ஆதரிப்பவர்களுக்கும் உதவும். இந்த எச்சரிக்கையில் நம்பிக்கை இல்லாதவர்கள், கருத்துகள் பகுதியில் என்னைத் திட்டலாம். :-) )
கட்டுரையைப் படிக்க இங்கே சுட்டவும்.
ஜான் நிக்கோல்ஸின் மேற்கண்ட கட்டுரையில் எனக்குப் பிடித்த, சிந்திக்கத்தக்க கருத்துகள் பின்வருமாறு:
1. இந்த அளவுக்குக் கடும்போட்டியும் நிச்சயமின்மையும் நிலவுகிற தேர்தல்கள் கடைசியில் ஆட்சியில் இருப்பவர்க்கு எதிரான முடிவைத் தருவதாக அமைகின்றன.
2. தேர்தல் கணிப்புகளைச் சொல்லும் கேலப் (Gallup) நிறுவனம் குடியரசு கட்சிக்கு ஆதரவானது என்று ஒரு கருத்து நிலவுகிறது. சில வாரங்களுக்கு முன்னர் (நியூயார்க் டைம்ஸில் என்று நினைக்கிறேன்) கேலப் நிறுவனத்தின் கணிப்புகளை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் ஒரு பெரிய விளம்பரம் வெளிவந்த நினைவு. 2000 வருட தேர்தலின்போது கேலப் சொல்லியதைச் சுட்டி கட்டுரையாசிரியரும் கேலப் நிறுவனக் கணிப்புகளின் துல்லியத்தைக் கேள்வி கேட்கிறார்.
3. பாரம்பரியமாக ஓரளவு நம்பத்தகுந்த கருத்துக் கணிப்பென்று Wall Street Journal/NBC News கருத்துக் கணிப்பைச் சொல்கிறார். எந்தப் புள்ளிவிவரமும் எடுக்காமல், பழைய கருத்துக் கணிப்புகளின் உண்மையை ஆராயாமல், வாசகப் பார்வையிலும் என் மனமும் அறிவும் சார்ந்த மதிப்பீட்டின் அடிப்படையிலும் Newyork Times/CBS News கருத்துக் கணிப்பும் தேவலாம் என்பேன்.
4. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தேசிய அளவிலான கருத்துக் கணிப்புகள் அதிகம் பயன்தராது என்கிறார் கட்டுரையாசிரியர். இது முக்கியமான கருத்தாகும். ஏனெனில் பாரம்பரியமாக குடியரசு கட்சிக்கும், ஜனநாயக கட்சிக்கும் என்றே வாக்களிக்கிற மாநிலங்கள் உள்ளன. இச்சூழ்நிலையில் Swing States எனப்படுகிற முடிவு தெரியாத மாநிலங்களின் மக்களின் மனநிலையைக் கணிப்பது உபயோகமாக இருக்கும் என்கிற கட்டுரையாளரின் கருத்து மிகவும் நிஜம்.
5. பெண்கள் கெர்ரியை அதிக அளவில் ஆதரிக்கிறார்கள் என்று கட்டுரையாசிரியர் எழுதுகிறார். 9/11க்குப் பிறகு தாய்மார்கள் எல்லாம், "கால்பந்து தாய்மார்களில்" (soccer moms) இருந்து "பாதுகாவல் தாய்மார்களாக" (security moms) மாறிவிட்டார்கள் என்கிற பிரச்சாரம் முக்கிய ஊடகங்களில் நிகழ்ந்து கொண்டிருக்கும்போது, கட்டுரையாசிரியர் கணிப்புகளின் அடிப்படையில் பெண்கள் இன்னமும் ஜனநாயகக் கட்சியையே ஆதரிக்கிறார்கள் என்று சொல்வது குறிப்பிடத்தக்கது. க்ளோரியா ஸ்டெய்னம் போன்ற அமெரிக்க பெண்ணியத்தின் முன்னோடிகளும், 2000 தேர்தலில் ரால்ப் நாடருக்குத் துணையாக துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட வினோனா லாட்யூக்கும் ஜான் கெர்ரியை ஆதரிக்கிறார்கள் என்கிற விவரம் ஜனநாயகக் கட்சிக்கு வயிற்றில் பால் வார்க்கலாம்.
6. வழக்கமாகக் குடியரசு கட்சியை ஆதரிக்கிற பல பத்திரிகைகள் இந்த முறை புஷ்ஷ¥க்கு ஆதரவு தர முன்வரவில்லை. மொத்தம் 8.7 மில்லியர் பேர் படிக்கிற 45 பத்திரிகைகள் ஜான் கெர்ரியை ஆதரிப்பதாக இதுவரை அறிவித்துள்ள நேரத்தில், மொத்தம் 3.3 மில்லியன் பேர் படிக்கிற 30 பத்திரிகைகளே புஷ்ஷை ஆதரிக்கின்றன. இந்த நாட்டு தொலைகாட்சி ஊடகங்களுடன் ஒப்பிடும்போது அச்சுப் பத்திரிகைகள் மீது எனக்கு இருக்கிற நம்பிக்கையை இது அதிகமூட்டியது. தொலைகாட்சி அளவுக்குப் பத்திரிகைகள் இன்னும் ஆட்சியில் இருப்பவர்களுக்கு முழு ஜால்ராவாக மாறிவிடவில்லை. கண்ணை மூடிக் கொள்ளவில்லை.
7. இக்கட்டுரையாசிரியர் ஜான் நிக்கொல்ஸ் Dick: The man who is president என்ற சமீபத்திய நூலின் ஆசிரியர். இடதுசாரி பத்திரிகைகளில் அதிகம் எழுதுபவர். இடதுசாரி கருத்தாக்கம் உடையவர்.
கட்டுரையைப் படிக்க இங்கே சுட்டவும்.
ஜான் நிக்கோல்ஸின் மேற்கண்ட கட்டுரையில் எனக்குப் பிடித்த, சிந்திக்கத்தக்க கருத்துகள் பின்வருமாறு:
1. இந்த அளவுக்குக் கடும்போட்டியும் நிச்சயமின்மையும் நிலவுகிற தேர்தல்கள் கடைசியில் ஆட்சியில் இருப்பவர்க்கு எதிரான முடிவைத் தருவதாக அமைகின்றன.
2. தேர்தல் கணிப்புகளைச் சொல்லும் கேலப் (Gallup) நிறுவனம் குடியரசு கட்சிக்கு ஆதரவானது என்று ஒரு கருத்து நிலவுகிறது. சில வாரங்களுக்கு முன்னர் (நியூயார்க் டைம்ஸில் என்று நினைக்கிறேன்) கேலப் நிறுவனத்தின் கணிப்புகளை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் ஒரு பெரிய விளம்பரம் வெளிவந்த நினைவு. 2000 வருட தேர்தலின்போது கேலப் சொல்லியதைச் சுட்டி கட்டுரையாசிரியரும் கேலப் நிறுவனக் கணிப்புகளின் துல்லியத்தைக் கேள்வி கேட்கிறார்.
3. பாரம்பரியமாக ஓரளவு நம்பத்தகுந்த கருத்துக் கணிப்பென்று Wall Street Journal/NBC News கருத்துக் கணிப்பைச் சொல்கிறார். எந்தப் புள்ளிவிவரமும் எடுக்காமல், பழைய கருத்துக் கணிப்புகளின் உண்மையை ஆராயாமல், வாசகப் பார்வையிலும் என் மனமும் அறிவும் சார்ந்த மதிப்பீட்டின் அடிப்படையிலும் Newyork Times/CBS News கருத்துக் கணிப்பும் தேவலாம் என்பேன்.
4. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தேசிய அளவிலான கருத்துக் கணிப்புகள் அதிகம் பயன்தராது என்கிறார் கட்டுரையாசிரியர். இது முக்கியமான கருத்தாகும். ஏனெனில் பாரம்பரியமாக குடியரசு கட்சிக்கும், ஜனநாயக கட்சிக்கும் என்றே வாக்களிக்கிற மாநிலங்கள் உள்ளன. இச்சூழ்நிலையில் Swing States எனப்படுகிற முடிவு தெரியாத மாநிலங்களின் மக்களின் மனநிலையைக் கணிப்பது உபயோகமாக இருக்கும் என்கிற கட்டுரையாளரின் கருத்து மிகவும் நிஜம்.
5. பெண்கள் கெர்ரியை அதிக அளவில் ஆதரிக்கிறார்கள் என்று கட்டுரையாசிரியர் எழுதுகிறார். 9/11க்குப் பிறகு தாய்மார்கள் எல்லாம், "கால்பந்து தாய்மார்களில்" (soccer moms) இருந்து "பாதுகாவல் தாய்மார்களாக" (security moms) மாறிவிட்டார்கள் என்கிற பிரச்சாரம் முக்கிய ஊடகங்களில் நிகழ்ந்து கொண்டிருக்கும்போது, கட்டுரையாசிரியர் கணிப்புகளின் அடிப்படையில் பெண்கள் இன்னமும் ஜனநாயகக் கட்சியையே ஆதரிக்கிறார்கள் என்று சொல்வது குறிப்பிடத்தக்கது. க்ளோரியா ஸ்டெய்னம் போன்ற அமெரிக்க பெண்ணியத்தின் முன்னோடிகளும், 2000 தேர்தலில் ரால்ப் நாடருக்குத் துணையாக துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட வினோனா லாட்யூக்கும் ஜான் கெர்ரியை ஆதரிக்கிறார்கள் என்கிற விவரம் ஜனநாயகக் கட்சிக்கு வயிற்றில் பால் வார்க்கலாம்.
6. வழக்கமாகக் குடியரசு கட்சியை ஆதரிக்கிற பல பத்திரிகைகள் இந்த முறை புஷ்ஷ¥க்கு ஆதரவு தர முன்வரவில்லை. மொத்தம் 8.7 மில்லியர் பேர் படிக்கிற 45 பத்திரிகைகள் ஜான் கெர்ரியை ஆதரிப்பதாக இதுவரை அறிவித்துள்ள நேரத்தில், மொத்தம் 3.3 மில்லியன் பேர் படிக்கிற 30 பத்திரிகைகளே புஷ்ஷை ஆதரிக்கின்றன. இந்த நாட்டு தொலைகாட்சி ஊடகங்களுடன் ஒப்பிடும்போது அச்சுப் பத்திரிகைகள் மீது எனக்கு இருக்கிற நம்பிக்கையை இது அதிகமூட்டியது. தொலைகாட்சி அளவுக்குப் பத்திரிகைகள் இன்னும் ஆட்சியில் இருப்பவர்களுக்கு முழு ஜால்ராவாக மாறிவிடவில்லை. கண்ணை மூடிக் கொள்ளவில்லை.
7. இக்கட்டுரையாசிரியர் ஜான் நிக்கொல்ஸ் Dick: The man who is president என்ற சமீபத்திய நூலின் ஆசிரியர். இடதுசாரி பத்திரிகைகளில் அதிகம் எழுதுபவர். இடதுசாரி கருத்தாக்கம் உடையவர்.
Tuesday, October 19, 2004
வீரப்பன் - ஒரு முற்றுப் புள்ளி
இன்று காலை. மழை தூறியபடியிருந்தது. மேகமூட்டம். போக்குவரத்து நெரிசல். ஒன்றரை மணி நேரமாய் இஞ்ச் இஞ்ச்சாய் கார் நகர, வேகத்தடைக்கும் (break) வேக முடுக்கிக்கும் (accelerator) இடையே சில நொடிகளுக்கொரு முறை கால் மாற்றுகிற வாழ்க்கை. NPR வானொலியில் பிபிஸி செய்தி அறிக்கையில் ஆரகன் மாநிலத்தைச் சேர்ந்த குடியரசு கட்சியை ஆதரிக்கிற மக்களுடன் நேர்காணல். ஓர் அம்மா, பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் புஷ் மென்மையாக இருக்கிறார் என்று ஒரு போடு போட்டார். அத்துடன் நிற்கவில்லை. 9/14/2001 அன்றே ஈராக் மீது படையெடுத்திருக்க வேண்டும். பூமிப்பந்தை விட்டு ஈராக்கை வெளியேற்றியிருக்க வேண்டும் என்று உணர்ச்சி வசப்பட்டார். நாம் அவர்களைத் தாக்கவில்லை, அவர்கள்தான் நம்மைத் தாக்கினார்கள் என்று தீர்ப்பு வழங்கினார். அமெரிக்காவைத் தாக்கியது ஈராக் அல்ல, அல்கொய்தா என்று பேட்டியாளர் சொன்னதும், "எனக்குக் கவலையில்லை. போய் அவர்களைக் (ஈராக்கியரைக்) கொல்லுங்கள்" என்றார். அதைக் கேட்டு, ஏறக்குறைய பாதி அமெரிக்கர்களின் மனநிலை இப்படியிருக்க என்ன காரணம். கல்வி, வாழ்க்கைத் தரம், பொது அறிவு எதுவுமே இந்த மாதிரியான மக்களிடம் அலசலும் அறிவும்பூர்வமான மனநிலையைக் கொண்டு வரவில்லையே என்று நொந்து போயிருந்தேன். (பின்னர் அலுவலகத்தில் நான் சந்தித்த சக அமெரிக்கர் அத்தகைய மனநிலைக்குக் காரணம் xenophobia என்றார். இதைப் பற்றி யோசிக்க வேண்டும் இனிமேல். ஆனால், அப்போது எதுவும் தோன்றவில்லை.) வானொலியை நிறுத்திவிட்டேன். எவ்வளவு நேரம் முன் கண்ணாடியின் மீது விழுகிற மழைத்துளியையும், திடீரென்று வீறு கொண்டெழுந்து அதைத் துடைக்கும் வைப்பரையும் பார்த்துக் கொண்டிருப்பது?
கைத்தொலைபேசி எடுத்து நண்பரை அழைத்தேன். நல்லவேளையாக அலுவலகத்தில் இருந்தார். பரஸ்பர குசல விசாரிப்புகள். கொஞ்சம் இலக்கியம். அப்புறம் அமெரிக்க இந்திய அரசியல். என்ன விசேடம் என்றேன். ஒன்றுமில்லை என்றவர் வீரப்பன் செத்துப்போனது தெரியும்தானே என்றார். வீரப்பன் பிடிபடுகிற சந்தர்ப்பம் நேர்ந்தால் அவர் சிக்காமலிருக்க தற்கொலை செய்து கொள்ளக் கூடும் என்று எங்கோ படித்தது நினைவில் ஓடியது. எந்த மரணமும் கணநேரம் என்னை நிறுத்தி "ச்சொ" கொட்ட வைக்கிறது. அப்படி நேரும் தருணங்களில், அறிவு செயல்பட ஆரம்பிக்காமல், மரணம் என்கிற துயரச் செய்தி கொண்டுவரும் அனுதாபம் எழும் கணங்களில் என்னுள் மனிதம் இருப்பதாக உணர்கிறேன். வீரப்பனால் கொல்லப்பட்டவர்களை அறிந்த காலங்களிலும் அவர்கள்பால் அனுதாபமும் பரிவும் அக்கொலைகள் நியாயமில்லை என்ற உணர்வும் ஏற்பட்டது. ஏனோ வீரப்பன்பால் அனுதாபத்தை மீறி எதுவும் எழவில்லை. நினைவை நிறுத்தி நண்பரிடம் எப்படி என்றேன். நண்பர் "என்ன இது! பழைய செய்தியாச்சே இது. வலைப்பதிவுதான் ஒழுங்காகச் செய்வதில்லை என்று நினைத்தேன். வலைக்கே வருவதில்லை போலிருக்கிறதே" என்று வாரினார். பின்னர் விவரங்கள் சொன்னார்.
அலுவலகம் வந்ததும் இணைய இதழ்கள், வலைப்பதிவுகள் எல்லாம் மேய்ந்தாகி விட்டது. நேர்ப்பார்வை, எதிர்ப்பார்வை விமர்சனங்கள், யூகங்கள் எல்லாம் படித்து முடித்து விட்டேன். இந்த விஷயம் குறித்து பா.ராகவன் எழுதிய வலைப்பதிவு விஷயத்தை பல வழிகளிலும் அலசுவதாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. பா.ராகவனுக்குள் ஒரு பத்திரிகையாளரும் ரிப்போர்ட்டரும் (ரிப்போர்ட்டருக்குத் தமிழில் என்ன? செய்தியாளரா?) இருக்கிறார்கள் என்ற எண்ணத்தை அவரின் பதிவு வலுப்படுத்தியது.
வீரப்பன் மரணம் பற்றிப் பலவிதமான கேள்விகள், யூகங்கள் ஆகியன எழுப்பப்படுகின்றன. அம்மாவுக்குப் பிடித்த ஒன்பது கூட்டுத் தொகை வருகிற நாளில் இது நடந்திருப்பதை ஒரு நண்பர் எழுதியிருந்தார். அதைப் படித்தவுடன் யோசிக்க வேண்டிய விஷயம்தான் என்று தோன்றியது. ஆனால் ஒன்று சொல்ல முடியும். இந்தியா மாதிரியான ஜனநாயக நாட்டில்தான் இப்படிக் கொலைகாரர்களின் மரணம் பற்றியும்கூட கேள்வி எழுப்பவும், அவர்கள் விஷயத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டிருந்தால் குரல் கொடுக்கவும் முடியும். அது ஜனநாயகத்தின் சிறப்பு. வீரப்பன் ராஜ்ஜியத்திலோ பயங்கரவாதத்திலோ ஏகாதிபத்யத்திலோ இது சாத்தியமில்லை. வீரப்பன் சொல்வது, கமிஷனர் விஜயகுமார் சொல்வது இரண்டில் எதை நம்புவீர்கள் என்று யாரேனும் என்னைக் கேட்டால், அவர்களின் வாழ்க்கை, விழுமியங்கள், அவர்கள் பொதுவாழ்வில் செய்திருக்கிற பங்களிப்புகள் உள்ளிட்ட பலவற்றைக் கணக்கில் கொண்டு கமிஷனர் விஜயகுமார் சொல்வதை நம்புகிறேன் என்பேன் நான். (தமிழ்நாட்டுக் காவல்துறை மீது எனக்கு விமர்சனங்களும் உண்டு. உதாரணம், ஜெயலட்சுமி விவகாரம்.) ஆகையால், இந்த நேரத்தில் கமிஷனர் விஜயகுமார் சொவ்வதை நான் நம்புகிறேன். அவர் சொல்வதில் முன்னுக்குப் பின்னான தகவல்கள், மாற்றுக் கருத்துகள் இருக்கிற பட்சத்தில் அவற்றை எதிர்க்கட்சிகளும், மனித உரிமை குறித்து குரல் கொடுக்கிற மனிதர்களும் அமைப்புகளும் நிரூபிக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. எல்லாத் தகவல்களையும் வடிகட்டி உண்மை எந்த அளவுக்கு இருக்கும் என்று உற்றுப் பார்த்தால் கூட, வீரப்பனோ அவருக்குக் கொடிபிடிப்பவர்களோ சொல்வதைவிட **இப்போதைக்கு** கமிஷனர் விஜயகுமார் சொல்வதை நான் அதிகம் நம்புகிறேன். நான் மேற்கொண்டு அறிய நேர்கிற தகவல்கள் என் நம்பிக்கைக்கு மாறாக இருக்கும்பட்சத்தில் என் கருத்தை மாற்றிக் கொள்வதில் எனக்குத் தயக்கமும் இல்லை.
இந்திய ஜனநாயகம் வழங்குகிற வழிமுறைகள், நீதிமன்ற வாய்ப்புகள், பத்திரிகை சுதந்திரம் ஆகியவற்றின் மூலம் வீரப்பன் மரணம் குறித்து எழுப்பப்படும் கேள்விகள் அலசவும் விடையளிக்கவும் படும் என்றும் நம்புகிறேன். பல கொலைகள் செய்தவர் (தினமலரில் வீரப்பனால் கொல்லப்பட்டவர்களின் பட்டியல் பார்த்தேன். மனம் கனத்துப் போனது.) சட்டத்தையோ சட்டத்தை மதிக்கிற மக்களையோ கிஞ்சித்தும் மதிக்காத ஒரு காட்டுமிராண்டி மாதிரியான வாழ்க்கை வாழ்ந்த மனிதர், சரணடைவதற்கு தி.மு.க ஆட்சி காலத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டபோதும் அவர் சாவதற்கு முன் கடைசி முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டபோதும் பயன்படுத்திக் கொள்ளாதவர், காவல்துறையுடனான துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்படும்போது மட்டும் நாம் மனித உரிமைகள் பேசுவதும் காவல் துறையை மட்டும் குறை சொல்வதும் எப்படிச் சரியாகும் என்ற கேள்வியும் எழுகிறது. சட்டத்தையும் அதன் வழிமுறைகளையும் திரும்பத் திரும்பப் பயன்படுத்திக் கொள்ள மூர்க்கத்துடன் மறுத்துவிட்ட, தன் கொலைகளையும் குற்றங்களையும் தவறாக எண்ணாத ஒரு மனிதரின் மரணத்தில் குறை காண்பது எப்படி சரியாகும் என்றும் தோன்றுகிறது. எல்லாரும் சொல்வதுபோல, கத்தி யெடுத்தவர் கத்தியால் சாகிற வாழ்க்கையின் சாசனம் இது.
ஒரு சிலர் இணையத்தில் எதற்கெடுத்தாலும் திராவிட இயக்கங்களைச் சாடுவது, தமிழ் தீவிரவாதத்துடன் முடிச்சு போடுவது நடக்கிறது என்றும் குறைபட்டுக் கொள்கிறார்கள். வீரப்பனுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இருக்கிறது என்றும், வீரப்பனுக்கும் தமிழ்த் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருக்கிறது என்றும் பத்திரிகைகள் எழுதியபோது இவர்கள் எங்கிருந்தார்கள் என்று தெரியவில்லை. 1996 தேர்தலில் (நான் அப்போது இந்தியாவில் இருந்தேன். ஆகையால் அறிவேன்) ஜெயலலிதாவை எதிர்க்க வீரப்பன் பேட்டியைத் திரும்பத் திரும்ப ஒளிபரப்பு செய்கிற புண்ணிய காரியம் செய்கிற நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தது சன் டிவி. வீரப்பனை அரசியல் ஆயுதமாக பாட்டாளி மக்கள் கட்சியும், திராவிட முன்னேற்றக் கழகமும் பல நேரங்களில் பயன்படுத்த முனைந்துள்ளதையும் பத்திரிகைகளின் வாயிலாக அறிவோம். இந்திராகாந்தி பிந்தரன்வாலேயை வளர்த்து விட்டார், இந்திய அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு உதவியது ஆகிய விமர்சனங்கள் எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை வீரப்பனை வைத்து திராவிட அரசியல் கட்சிகள் ஆடிய கண்ணாமூச்சி. எனவே, திராவிட இயக்கங்களுக்கும் மனித உரிமைகளுக்கும் கொடி பிடிக்கிற இடதுசாரி நண்பர்கள் இவற்றையெல்லாமும் மனதில் வைத்துக் கொள்வது நல்லது. இந்திரா காந்தியைப் பற்றியோ விடுதலைப் புலிகளுக்கு இந்திய தமிழ்நாட்டு அரசாங்கங்கள் உதவியது பற்றியோ மட்டும் யாரேனும் எழுதும்போது இடதுசாரி நண்பர்கள் அமைதி காத்து விடுகிறார்கள். ஏனென்றால், அது உண்மை. அதே அளவுக்கு உண்மை, பிரிவினை வாதக் கோஷத்துடன் பிறந்த திராவிட இயக்கமும் அவை உடைந்து பலவான பின் அவற்றின் அரசியல் செயல்பாடுகளின் சந்தர்ப்பவாதமும் நேர்மையின்மையும். முழுநேர கட்சி சார்ந்த இடதுசாரிகளான எம்.கல்யாணசுந்தரம், ஜீவானந்தம், பி.ராமமூர்த்தி, தா.பாண்டியன் உள்ளிட்டப் பலருக்கு திராவிட இயக்கங்கள் மீது பலத்த விமர்சனம் இருந்திருக்கிறது. அதனாலேயே, திராவிட இயக்கங்களுக்கும் அவற்றின் அரசியலுக்கும் நற்சான்றிதழ் அளிக்கிற வேலையை தற்போதைய இடதுசாரிகள் செய்யும்போது வருத்தமாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது.
மேலும், இணையத்தில் திராவிட இயக்கங்கள் மற்றும் தமிழ்த் தீவிரவாதம் பேசுகிற பிரிவினைவாதிகளுக்கெதிராக கோஷம் கிளம்புகிறதா? அப்படியெனில், பேஷ் பேஷ் நல்ல காரியம் என்று சொல்லத் தோன்றுகிறது. எண்பது ஆண்டுகளாக திராவிட இயக்கத்தினர் பேசி வருவது கேட்டுப் புளித்துப் போகாத சில இடதுசாரி நண்பர்களுக்குத் திடீரென்று திராவிட இயக்கங்களின் மீதும் பிரிவினைவாதக் கோஷங்களின் மீதும் இணையத்தில் பரவலாக சிலகாலமாக வைக்கப்படுகிற விமர்சனம் புளித்துப் போய்விட்டது ஆச்சர்யம்தான். என்னையும் இடதுசாரி என்று நான் சிலநேரம் நினைத்துக் கொள்வதுண்டு. ஆனால், லேபிள்களில் ஒட்டிக் கொள்ள நேர்கிற நிர்ப்பந்தத்தால் வறட்டுத்தனமான கொள்கைவாதி ஆகிவிடக் கூடாதென்பதில் உஷாராக இருக்கிறேன்.
காவல்துறையோ, நீதி மன்றமோ, அரசாங்கமோ, அதிரடிப் படைகளோ செய்கிற அத்துமீறல்களுக்கும் தவறுகளுக்கும் குற்றங்களுக்கும் வீரப்பன் போன்றவர்களின் செயல்கள் பரிகாரம் அல்ல. அத்தகைய குறைகளைக் களைய அரசாங்கத்திடம் போராடுகிற அதே நேரத்தில் கொள்கைப் பிடிப்புள்ள நான் நேசிக்கிற என் இடதுசாரி நண்பர்கள், வீரப்பன் போன்றவர்களுக்கு வக்காலத்து வாங்குவதைப் பார்க்கும்போது கவலையாக இருக்கிறது. சமீபத்தில் நடந்த ரஷ்ய நாட்டு பள்ளிச் சம்பவத்துக்குக் கூட ரஷ்ய அரசின் ஒடுக்குமுறை காரணம் என்று சொல்லப்படுகிறது. அதற்காக இடதுசாரி நண்பர்கள் அப்பள்ளிக் குழந்தைகளின் படுகொலைகளை ஆதரிப்பார்களா என்ன?
எனவே, வீரப்பன் மரணத்துக்காகக் காவல்துறையை மட்டும் குற்றம் சொல்கிற காரியத்தை விட்டுவிட்டு, வீரப்பன் குறித்த அனைத்து உண்மைகளும் வெளிவர இடதுசாரிகள் செயல்பட வேண்டும். வீரப்பனின் வாழ்க்கைமுறை, அவரால் ஆதாயமடைந்தவர்கள், அவருக்கும் பிற இயக்கங்களுக்கும் எப்படி எந்தவிதத்தில் தொடர்பு இருந்தது/இல்லை, அவர் மரணம் எழுப்புகிற கேள்விகளில் மனித உரிமை மீறப்பட்டிருக்கிறதா, வீரப்பனால் கொல்லப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எத்தகைய நிவாரணம் வழங்கப்பட்டிருக்கிறது இன்னும் எவ்வளவு வழங்கப்பட வேண்டும், அதிரடிப் படையின் அத்துமீறல்களுக்கு ஆளானவர்களுக்கு எத்தகைய நிவாரணம் வழங்கப்பட்டிருக்கிறது இன்னும் எவ்வளவு வழங்கப்பட வேண்டும் போன்றவற்றை ஆராய்வதும் வெளிக்கொணர்வதும் உருப்படியான விஷயமாக இருக்கும். இல்லையென்றால் மனித உரிமைகள் என்ற பெயரில் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அரசாங்கத்தையும் காவல்துறையையும் பழி சொல்கிற பத்தாம்பசலிகளாக இடதுசாரி நண்பர்கள் பார்க்கப்படுகிற வாய்ப்பு இருக்கிறது. அது இடதுசாரி நண்பர்களை மக்களிடம் இருந்து இன்னமும் அந்நியப்படுத்தவே செய்யும்.
கைத்தொலைபேசி எடுத்து நண்பரை அழைத்தேன். நல்லவேளையாக அலுவலகத்தில் இருந்தார். பரஸ்பர குசல விசாரிப்புகள். கொஞ்சம் இலக்கியம். அப்புறம் அமெரிக்க இந்திய அரசியல். என்ன விசேடம் என்றேன். ஒன்றுமில்லை என்றவர் வீரப்பன் செத்துப்போனது தெரியும்தானே என்றார். வீரப்பன் பிடிபடுகிற சந்தர்ப்பம் நேர்ந்தால் அவர் சிக்காமலிருக்க தற்கொலை செய்து கொள்ளக் கூடும் என்று எங்கோ படித்தது நினைவில் ஓடியது. எந்த மரணமும் கணநேரம் என்னை நிறுத்தி "ச்சொ" கொட்ட வைக்கிறது. அப்படி நேரும் தருணங்களில், அறிவு செயல்பட ஆரம்பிக்காமல், மரணம் என்கிற துயரச் செய்தி கொண்டுவரும் அனுதாபம் எழும் கணங்களில் என்னுள் மனிதம் இருப்பதாக உணர்கிறேன். வீரப்பனால் கொல்லப்பட்டவர்களை அறிந்த காலங்களிலும் அவர்கள்பால் அனுதாபமும் பரிவும் அக்கொலைகள் நியாயமில்லை என்ற உணர்வும் ஏற்பட்டது. ஏனோ வீரப்பன்பால் அனுதாபத்தை மீறி எதுவும் எழவில்லை. நினைவை நிறுத்தி நண்பரிடம் எப்படி என்றேன். நண்பர் "என்ன இது! பழைய செய்தியாச்சே இது. வலைப்பதிவுதான் ஒழுங்காகச் செய்வதில்லை என்று நினைத்தேன். வலைக்கே வருவதில்லை போலிருக்கிறதே" என்று வாரினார். பின்னர் விவரங்கள் சொன்னார்.
அலுவலகம் வந்ததும் இணைய இதழ்கள், வலைப்பதிவுகள் எல்லாம் மேய்ந்தாகி விட்டது. நேர்ப்பார்வை, எதிர்ப்பார்வை விமர்சனங்கள், யூகங்கள் எல்லாம் படித்து முடித்து விட்டேன். இந்த விஷயம் குறித்து பா.ராகவன் எழுதிய வலைப்பதிவு விஷயத்தை பல வழிகளிலும் அலசுவதாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. பா.ராகவனுக்குள் ஒரு பத்திரிகையாளரும் ரிப்போர்ட்டரும் (ரிப்போர்ட்டருக்குத் தமிழில் என்ன? செய்தியாளரா?) இருக்கிறார்கள் என்ற எண்ணத்தை அவரின் பதிவு வலுப்படுத்தியது.
வீரப்பன் மரணம் பற்றிப் பலவிதமான கேள்விகள், யூகங்கள் ஆகியன எழுப்பப்படுகின்றன. அம்மாவுக்குப் பிடித்த ஒன்பது கூட்டுத் தொகை வருகிற நாளில் இது நடந்திருப்பதை ஒரு நண்பர் எழுதியிருந்தார். அதைப் படித்தவுடன் யோசிக்க வேண்டிய விஷயம்தான் என்று தோன்றியது. ஆனால் ஒன்று சொல்ல முடியும். இந்தியா மாதிரியான ஜனநாயக நாட்டில்தான் இப்படிக் கொலைகாரர்களின் மரணம் பற்றியும்கூட கேள்வி எழுப்பவும், அவர்கள் விஷயத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டிருந்தால் குரல் கொடுக்கவும் முடியும். அது ஜனநாயகத்தின் சிறப்பு. வீரப்பன் ராஜ்ஜியத்திலோ பயங்கரவாதத்திலோ ஏகாதிபத்யத்திலோ இது சாத்தியமில்லை. வீரப்பன் சொல்வது, கமிஷனர் விஜயகுமார் சொல்வது இரண்டில் எதை நம்புவீர்கள் என்று யாரேனும் என்னைக் கேட்டால், அவர்களின் வாழ்க்கை, விழுமியங்கள், அவர்கள் பொதுவாழ்வில் செய்திருக்கிற பங்களிப்புகள் உள்ளிட்ட பலவற்றைக் கணக்கில் கொண்டு கமிஷனர் விஜயகுமார் சொல்வதை நம்புகிறேன் என்பேன் நான். (தமிழ்நாட்டுக் காவல்துறை மீது எனக்கு விமர்சனங்களும் உண்டு. உதாரணம், ஜெயலட்சுமி விவகாரம்.) ஆகையால், இந்த நேரத்தில் கமிஷனர் விஜயகுமார் சொவ்வதை நான் நம்புகிறேன். அவர் சொல்வதில் முன்னுக்குப் பின்னான தகவல்கள், மாற்றுக் கருத்துகள் இருக்கிற பட்சத்தில் அவற்றை எதிர்க்கட்சிகளும், மனித உரிமை குறித்து குரல் கொடுக்கிற மனிதர்களும் அமைப்புகளும் நிரூபிக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. எல்லாத் தகவல்களையும் வடிகட்டி உண்மை எந்த அளவுக்கு இருக்கும் என்று உற்றுப் பார்த்தால் கூட, வீரப்பனோ அவருக்குக் கொடிபிடிப்பவர்களோ சொல்வதைவிட **இப்போதைக்கு** கமிஷனர் விஜயகுமார் சொல்வதை நான் அதிகம் நம்புகிறேன். நான் மேற்கொண்டு அறிய நேர்கிற தகவல்கள் என் நம்பிக்கைக்கு மாறாக இருக்கும்பட்சத்தில் என் கருத்தை மாற்றிக் கொள்வதில் எனக்குத் தயக்கமும் இல்லை.
இந்திய ஜனநாயகம் வழங்குகிற வழிமுறைகள், நீதிமன்ற வாய்ப்புகள், பத்திரிகை சுதந்திரம் ஆகியவற்றின் மூலம் வீரப்பன் மரணம் குறித்து எழுப்பப்படும் கேள்விகள் அலசவும் விடையளிக்கவும் படும் என்றும் நம்புகிறேன். பல கொலைகள் செய்தவர் (தினமலரில் வீரப்பனால் கொல்லப்பட்டவர்களின் பட்டியல் பார்த்தேன். மனம் கனத்துப் போனது.) சட்டத்தையோ சட்டத்தை மதிக்கிற மக்களையோ கிஞ்சித்தும் மதிக்காத ஒரு காட்டுமிராண்டி மாதிரியான வாழ்க்கை வாழ்ந்த மனிதர், சரணடைவதற்கு தி.மு.க ஆட்சி காலத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டபோதும் அவர் சாவதற்கு முன் கடைசி முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டபோதும் பயன்படுத்திக் கொள்ளாதவர், காவல்துறையுடனான துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்படும்போது மட்டும் நாம் மனித உரிமைகள் பேசுவதும் காவல் துறையை மட்டும் குறை சொல்வதும் எப்படிச் சரியாகும் என்ற கேள்வியும் எழுகிறது. சட்டத்தையும் அதன் வழிமுறைகளையும் திரும்பத் திரும்பப் பயன்படுத்திக் கொள்ள மூர்க்கத்துடன் மறுத்துவிட்ட, தன் கொலைகளையும் குற்றங்களையும் தவறாக எண்ணாத ஒரு மனிதரின் மரணத்தில் குறை காண்பது எப்படி சரியாகும் என்றும் தோன்றுகிறது. எல்லாரும் சொல்வதுபோல, கத்தி யெடுத்தவர் கத்தியால் சாகிற வாழ்க்கையின் சாசனம் இது.
ஒரு சிலர் இணையத்தில் எதற்கெடுத்தாலும் திராவிட இயக்கங்களைச் சாடுவது, தமிழ் தீவிரவாதத்துடன் முடிச்சு போடுவது நடக்கிறது என்றும் குறைபட்டுக் கொள்கிறார்கள். வீரப்பனுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இருக்கிறது என்றும், வீரப்பனுக்கும் தமிழ்த் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருக்கிறது என்றும் பத்திரிகைகள் எழுதியபோது இவர்கள் எங்கிருந்தார்கள் என்று தெரியவில்லை. 1996 தேர்தலில் (நான் அப்போது இந்தியாவில் இருந்தேன். ஆகையால் அறிவேன்) ஜெயலலிதாவை எதிர்க்க வீரப்பன் பேட்டியைத் திரும்பத் திரும்ப ஒளிபரப்பு செய்கிற புண்ணிய காரியம் செய்கிற நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தது சன் டிவி. வீரப்பனை அரசியல் ஆயுதமாக பாட்டாளி மக்கள் கட்சியும், திராவிட முன்னேற்றக் கழகமும் பல நேரங்களில் பயன்படுத்த முனைந்துள்ளதையும் பத்திரிகைகளின் வாயிலாக அறிவோம். இந்திராகாந்தி பிந்தரன்வாலேயை வளர்த்து விட்டார், இந்திய அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு உதவியது ஆகிய விமர்சனங்கள் எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை வீரப்பனை வைத்து திராவிட அரசியல் கட்சிகள் ஆடிய கண்ணாமூச்சி. எனவே, திராவிட இயக்கங்களுக்கும் மனித உரிமைகளுக்கும் கொடி பிடிக்கிற இடதுசாரி நண்பர்கள் இவற்றையெல்லாமும் மனதில் வைத்துக் கொள்வது நல்லது. இந்திரா காந்தியைப் பற்றியோ விடுதலைப் புலிகளுக்கு இந்திய தமிழ்நாட்டு அரசாங்கங்கள் உதவியது பற்றியோ மட்டும் யாரேனும் எழுதும்போது இடதுசாரி நண்பர்கள் அமைதி காத்து விடுகிறார்கள். ஏனென்றால், அது உண்மை. அதே அளவுக்கு உண்மை, பிரிவினை வாதக் கோஷத்துடன் பிறந்த திராவிட இயக்கமும் அவை உடைந்து பலவான பின் அவற்றின் அரசியல் செயல்பாடுகளின் சந்தர்ப்பவாதமும் நேர்மையின்மையும். முழுநேர கட்சி சார்ந்த இடதுசாரிகளான எம்.கல்யாணசுந்தரம், ஜீவானந்தம், பி.ராமமூர்த்தி, தா.பாண்டியன் உள்ளிட்டப் பலருக்கு திராவிட இயக்கங்கள் மீது பலத்த விமர்சனம் இருந்திருக்கிறது. அதனாலேயே, திராவிட இயக்கங்களுக்கும் அவற்றின் அரசியலுக்கும் நற்சான்றிதழ் அளிக்கிற வேலையை தற்போதைய இடதுசாரிகள் செய்யும்போது வருத்தமாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது.
மேலும், இணையத்தில் திராவிட இயக்கங்கள் மற்றும் தமிழ்த் தீவிரவாதம் பேசுகிற பிரிவினைவாதிகளுக்கெதிராக கோஷம் கிளம்புகிறதா? அப்படியெனில், பேஷ் பேஷ் நல்ல காரியம் என்று சொல்லத் தோன்றுகிறது. எண்பது ஆண்டுகளாக திராவிட இயக்கத்தினர் பேசி வருவது கேட்டுப் புளித்துப் போகாத சில இடதுசாரி நண்பர்களுக்குத் திடீரென்று திராவிட இயக்கங்களின் மீதும் பிரிவினைவாதக் கோஷங்களின் மீதும் இணையத்தில் பரவலாக சிலகாலமாக வைக்கப்படுகிற விமர்சனம் புளித்துப் போய்விட்டது ஆச்சர்யம்தான். என்னையும் இடதுசாரி என்று நான் சிலநேரம் நினைத்துக் கொள்வதுண்டு. ஆனால், லேபிள்களில் ஒட்டிக் கொள்ள நேர்கிற நிர்ப்பந்தத்தால் வறட்டுத்தனமான கொள்கைவாதி ஆகிவிடக் கூடாதென்பதில் உஷாராக இருக்கிறேன்.
காவல்துறையோ, நீதி மன்றமோ, அரசாங்கமோ, அதிரடிப் படைகளோ செய்கிற அத்துமீறல்களுக்கும் தவறுகளுக்கும் குற்றங்களுக்கும் வீரப்பன் போன்றவர்களின் செயல்கள் பரிகாரம் அல்ல. அத்தகைய குறைகளைக் களைய அரசாங்கத்திடம் போராடுகிற அதே நேரத்தில் கொள்கைப் பிடிப்புள்ள நான் நேசிக்கிற என் இடதுசாரி நண்பர்கள், வீரப்பன் போன்றவர்களுக்கு வக்காலத்து வாங்குவதைப் பார்க்கும்போது கவலையாக இருக்கிறது. சமீபத்தில் நடந்த ரஷ்ய நாட்டு பள்ளிச் சம்பவத்துக்குக் கூட ரஷ்ய அரசின் ஒடுக்குமுறை காரணம் என்று சொல்லப்படுகிறது. அதற்காக இடதுசாரி நண்பர்கள் அப்பள்ளிக் குழந்தைகளின் படுகொலைகளை ஆதரிப்பார்களா என்ன?
எனவே, வீரப்பன் மரணத்துக்காகக் காவல்துறையை மட்டும் குற்றம் சொல்கிற காரியத்தை விட்டுவிட்டு, வீரப்பன் குறித்த அனைத்து உண்மைகளும் வெளிவர இடதுசாரிகள் செயல்பட வேண்டும். வீரப்பனின் வாழ்க்கைமுறை, அவரால் ஆதாயமடைந்தவர்கள், அவருக்கும் பிற இயக்கங்களுக்கும் எப்படி எந்தவிதத்தில் தொடர்பு இருந்தது/இல்லை, அவர் மரணம் எழுப்புகிற கேள்விகளில் மனித உரிமை மீறப்பட்டிருக்கிறதா, வீரப்பனால் கொல்லப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எத்தகைய நிவாரணம் வழங்கப்பட்டிருக்கிறது இன்னும் எவ்வளவு வழங்கப்பட வேண்டும், அதிரடிப் படையின் அத்துமீறல்களுக்கு ஆளானவர்களுக்கு எத்தகைய நிவாரணம் வழங்கப்பட்டிருக்கிறது இன்னும் எவ்வளவு வழங்கப்பட வேண்டும் போன்றவற்றை ஆராய்வதும் வெளிக்கொணர்வதும் உருப்படியான விஷயமாக இருக்கும். இல்லையென்றால் மனித உரிமைகள் என்ற பெயரில் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அரசாங்கத்தையும் காவல்துறையையும் பழி சொல்கிற பத்தாம்பசலிகளாக இடதுசாரி நண்பர்கள் பார்க்கப்படுகிற வாய்ப்பு இருக்கிறது. அது இடதுசாரி நண்பர்களை மக்களிடம் இருந்து இன்னமும் அந்நியப்படுத்தவே செய்யும்.
Sunday, October 17, 2004
நியூயார்க் டைம்ஸின் ஓட்டு ஜான் கெர்ரிக்கு
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜான் கெர்ரியை ஆதரிப்பதற்கான காரணங்களைச் சொல்கிற நியூயார்க் டைம்ஸின் தலையங்கத்தை இங்கே காணலாம்.
ஜான் கெர்ரிக்கு ஆதரவு தெரிவிக்கிற பிற பத்திரிகைகள் பற்றிய விவரத்தை இங்கே காணலாம்.
ஜான் கெர்ரியை ஏன் இப்பத்திரிகைகள் ஆதரிக்கின்றன என்பதற்கான காரணங்களை இங்கே காணலாம்.
மேற்கண்ட இடுகைகளில் கடைசி இரண்டு ஜான் கெர்ரியின் வலைத்தளத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. எனவே, அக்கட்டுரைகளின் ஆசிரியர்கள் ஜான் கெர்ரிக்கு ஆதரவாக முழங்கியுள்ளதை விடுத்து, பத்திரிகைகள் எதற்காக அவரை ஆதரிக்கின்றன என்கிற விவரங்களை மட்டும் எடுத்துக் கொள்ளுமாறு வேண்டுகிறேன்.
இந்தியாவிலும் முக்கியப் பத்திரிகைகள் ஒவ்வொரு தேர்தலிலும் இப்படித் தங்கள் ஆதரவை ஆதரவுக்கான காரணங்களுடன் சொல்ல வேண்டும். அல்லது, ஏற்கனவே சில பத்திரிகைகள் செய்து, மற்றவை செய்யாமல் இருந்தால் எல்லாப் பத்திரிகைகளும் இதைச் செய்வது நல்லது.
ஜான் கெர்ரிக்கு ஆதரவு தெரிவிக்கிற பிற பத்திரிகைகள் பற்றிய விவரத்தை இங்கே காணலாம்.
ஜான் கெர்ரியை ஏன் இப்பத்திரிகைகள் ஆதரிக்கின்றன என்பதற்கான காரணங்களை இங்கே காணலாம்.
மேற்கண்ட இடுகைகளில் கடைசி இரண்டு ஜான் கெர்ரியின் வலைத்தளத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. எனவே, அக்கட்டுரைகளின் ஆசிரியர்கள் ஜான் கெர்ரிக்கு ஆதரவாக முழங்கியுள்ளதை விடுத்து, பத்திரிகைகள் எதற்காக அவரை ஆதரிக்கின்றன என்கிற விவரங்களை மட்டும் எடுத்துக் கொள்ளுமாறு வேண்டுகிறேன்.
இந்தியாவிலும் முக்கியப் பத்திரிகைகள் ஒவ்வொரு தேர்தலிலும் இப்படித் தங்கள் ஆதரவை ஆதரவுக்கான காரணங்களுடன் சொல்ல வேண்டும். அல்லது, ஏற்கனவே சில பத்திரிகைகள் செய்து, மற்றவை செய்யாமல் இருந்தால் எல்லாப் பத்திரிகைகளும் இதைச் செய்வது நல்லது.
பி.ச.குப்புசாமி கவிதைகள்
சந்திரிகை:
இந்த முகம் அன்றொருநாள்
......என்னருகே வந்தமுகம்
மந்தநகை யோடென்றன்
......மார்பினில்பு தைந்தமுகம் !
இந்த முகம் நான்சொன்ன
......இன்மொழிகள் கேட்டமுகம்
சிந்தனைகள் பிறிதின்றிச்
......சிரித்தருகி ருந்தமுகம் !
இந்தமுகம் காதலெனும்
.....எழில் வானம் கண்டமுகம்
நொந்தமனம் அன்றாடம்
......நூறுதரம் எண்ணும்முகம் !
இந்தமுகம் பேரன்பின்
......இன்பங்கள் கொண்டமுகம்
முந்தியொரு நாளென்னை
......முத்தங்கள் இட்டமுகம் !
இந்தமுகம் பிரிவாகி
......எனைவிட்டுச் சென்றமுகம்
விந்தைமுகம் காலத்தை
......வென்றுதினம் நின்றமுகம் !
* * *
வான்விளிம்பில் சந்திரிகை
......வந்தொளிசெய் கின்றாள்
நான்விரும்பும் முகமொன்றை
......நனவிற்கொணர்கின்றாள்
*****************************
காலடிகள்:
காலமெனும் பெரும்பரப்பில்
......காதல்மகள் நடக்கின்றாள்
கோலமெலாம் தனதாகக்
......கொண்டமகள் நடக்கின்றாள்!
ஞாலமெனும் பெரும்பரப்பில்
......ஞானமகள் நடக்கின்றாள்
மூலமெனும் பொருளறிய
......முனைந்தமகள் நடக்கின்றாள்!
அளவில்லாப் பெரும்பரப்பில்
......ஆசைமகள் நடக்கின்றாள்
வளர்கின்ற துன்பமெலாம்
......மறந்தமகள் நடக்கின்றாள்!
உள்ளமெனும் பெரும்பரப்பில்
......உணர்வுமகள் நடக்கின்றாள்
வெள்ளமெனப் பிரவாகம்
......விந்தைமகள் நடக்கின்றாள்!
விதியென்னும் பெரும்பரப்பில்
......விட்டமகள் நடக்கின்றாள்
எதிர்காலம் குறிக்கோளாய்
......இந்தமகள் நடக்கின்றாள்!
* * *
நடந்துசெல்லும் மகளிர்தம்
......நடையழகே என்வாழ்க்கை
கடந்து செலும் அவர்தமது
.....காலடிகள் என்கவிதை!
***************************
பொய்...பொய்...பொய்:
நின்றதுபொய் பார்த்ததுபொய் நெஞ்சைமெலத் தொட்டுவிட்டுச்
சென்றதுபொய் ஆனால் செகமும்பொய் - இன்றுமுதல்
தெய்வமும் பொய்யாம் தெரிந்துகொண் டேனெல்லாம்
பொய்யிலும் பொய்யாகும் போ!
சொன்னவை பொய்உன் சுடர்விழி வீசிய
மின்னலும் பொய்உன்றன் மென்னடை - இன்முகம்
கன்னிகை நாணம் கருத்தை அறிவித்த
புன்னகை யாவுமே பொய்!
வாழ்வுபொய் நீயதில் வந்ததுபொய் நம்பிய
ஊழ்வினைப் புண்ணியம் ஓர்பொய்யே - ஏழேழ்
பிறவிக்கும் பற்றாகும் பேரன் பெனும்சொல்
வெறும்பொய்யே அன்றிவேறு என் ?
நன்றி: பல பத்து ஆண்டுகளுக்கு முன் பத்திரிகைகளில் பிரசுரமான இக்கவிதைகளைப் பத்திரமாய் வைத்திருந்து தந்துதவிய வே.சபாநாயகம் அவர்களுக்கு.
இந்த முகம் அன்றொருநாள்
......என்னருகே வந்தமுகம்
மந்தநகை யோடென்றன்
......மார்பினில்பு தைந்தமுகம் !
இந்த முகம் நான்சொன்ன
......இன்மொழிகள் கேட்டமுகம்
சிந்தனைகள் பிறிதின்றிச்
......சிரித்தருகி ருந்தமுகம் !
இந்தமுகம் காதலெனும்
.....எழில் வானம் கண்டமுகம்
நொந்தமனம் அன்றாடம்
......நூறுதரம் எண்ணும்முகம் !
இந்தமுகம் பேரன்பின்
......இன்பங்கள் கொண்டமுகம்
முந்தியொரு நாளென்னை
......முத்தங்கள் இட்டமுகம் !
இந்தமுகம் பிரிவாகி
......எனைவிட்டுச் சென்றமுகம்
விந்தைமுகம் காலத்தை
......வென்றுதினம் நின்றமுகம் !
* * *
வான்விளிம்பில் சந்திரிகை
......வந்தொளிசெய் கின்றாள்
நான்விரும்பும் முகமொன்றை
......நனவிற்கொணர்கின்றாள்
*****************************
காலடிகள்:
காலமெனும் பெரும்பரப்பில்
......காதல்மகள் நடக்கின்றாள்
கோலமெலாம் தனதாகக்
......கொண்டமகள் நடக்கின்றாள்!
ஞாலமெனும் பெரும்பரப்பில்
......ஞானமகள் நடக்கின்றாள்
மூலமெனும் பொருளறிய
......முனைந்தமகள் நடக்கின்றாள்!
அளவில்லாப் பெரும்பரப்பில்
......ஆசைமகள் நடக்கின்றாள்
வளர்கின்ற துன்பமெலாம்
......மறந்தமகள் நடக்கின்றாள்!
உள்ளமெனும் பெரும்பரப்பில்
......உணர்வுமகள் நடக்கின்றாள்
வெள்ளமெனப் பிரவாகம்
......விந்தைமகள் நடக்கின்றாள்!
விதியென்னும் பெரும்பரப்பில்
......விட்டமகள் நடக்கின்றாள்
எதிர்காலம் குறிக்கோளாய்
......இந்தமகள் நடக்கின்றாள்!
* * *
நடந்துசெல்லும் மகளிர்தம்
......நடையழகே என்வாழ்க்கை
கடந்து செலும் அவர்தமது
.....காலடிகள் என்கவிதை!
***************************
பொய்...பொய்...பொய்:
நின்றதுபொய் பார்த்ததுபொய் நெஞ்சைமெலத் தொட்டுவிட்டுச்
சென்றதுபொய் ஆனால் செகமும்பொய் - இன்றுமுதல்
தெய்வமும் பொய்யாம் தெரிந்துகொண் டேனெல்லாம்
பொய்யிலும் பொய்யாகும் போ!
சொன்னவை பொய்உன் சுடர்விழி வீசிய
மின்னலும் பொய்உன்றன் மென்னடை - இன்முகம்
கன்னிகை நாணம் கருத்தை அறிவித்த
புன்னகை யாவுமே பொய்!
வாழ்வுபொய் நீயதில் வந்ததுபொய் நம்பிய
ஊழ்வினைப் புண்ணியம் ஓர்பொய்யே - ஏழேழ்
பிறவிக்கும் பற்றாகும் பேரன் பெனும்சொல்
வெறும்பொய்யே அன்றிவேறு என் ?
நன்றி: பல பத்து ஆண்டுகளுக்கு முன் பத்திரிகைகளில் பிரசுரமான இக்கவிதைகளைப் பத்திரமாய் வைத்திருந்து தந்துதவிய வே.சபாநாயகம் அவர்களுக்கு.
Saturday, October 16, 2004
சின்ன விளக்குடன் -பி.ச.குப்புசாமி
(ஏப்ரல் 1965-ல் தீபம் இதழில் வெளியான பி.ச.குப்புசாமியின் கவிதை இது. கண்டெடுத்தும் தட்டச்சு செய்தும் உதவிய வே.சபாநாயகம் அவர்களுக்கு நன்றிகள்.)
வையம் அனைத்தும் ஒளியுற
......வைத்த விளக்குகள் பாடிடுவோம்
மெய்யை இருளினில் துலக்கிட
.....விளைந்த சுடர்களைப் பாடிடுவோம்
செய்யவள் வந்து புகுந்திடச்
.....செம்மை நலங்கள் மிகுந்திட
நெய்யில் எரித்திடும் விளக்குகள் - நம்
.....நெஞ்சில் எரிந்திடப் பாடிடுவோம்!
சொந்த அறிவில் மனதினில்
.....சூழ்ந்த இருட்டுகள் யாவுமே
இந்த ஒளியில் விலகிடும்
.....இன்புற ஓங்கி விளங்கிடும்
சிந்துரச் செவ்வொளி சிந்திடும்
.....சின்ன விளக்குடன் உங்கள்
சிந்தை விளக்கையும் தூண்டிடுவீர் - அதில்
.....தெய்வ நிலைகளை வேண்டிடுவீர்!
- பி.ச.குப்புசாமி
வையம் அனைத்தும் ஒளியுற
......வைத்த விளக்குகள் பாடிடுவோம்
மெய்யை இருளினில் துலக்கிட
.....விளைந்த சுடர்களைப் பாடிடுவோம்
செய்யவள் வந்து புகுந்திடச்
.....செம்மை நலங்கள் மிகுந்திட
நெய்யில் எரித்திடும் விளக்குகள் - நம்
.....நெஞ்சில் எரிந்திடப் பாடிடுவோம்!
சொந்த அறிவில் மனதினில்
.....சூழ்ந்த இருட்டுகள் யாவுமே
இந்த ஒளியில் விலகிடும்
.....இன்புற ஓங்கி விளங்கிடும்
சிந்துரச் செவ்வொளி சிந்திடும்
.....சின்ன விளக்குடன் உங்கள்
சிந்தை விளக்கையும் தூண்டிடுவீர் - அதில்
.....தெய்வ நிலைகளை வேண்டிடுவீர்!
- பி.ச.குப்புசாமி
Monday, October 04, 2004
தமிழ்ச்சாரல்
இந்தப் பதிவை விளம்பரம் என்று வகைப்படுத்த இயலக் கூடும். ஆனால், இந்த விளம்பரத்தால் எனக்கோ என் குடும்பத்துக்கோ எந்தவிதமான ஆதாயமும் இல்லை என்றும் சொல்லி வைக்கிறேன் :-)
தமிழ் எழுத்துலகில் பரவலாக அறியப்பட்ட பெயர் வையவன். கல்கியில் நிறைய எழுதியிருக்கிறார். எனவே, கல்கி வாசகர்களுக்குப் பரிச்சயமான பெயராகக் கூட இருக்கலாம். அவர் தம் நண்பர்களுடன் இணைந்து தமிழ்ச்சாரல் என்கிற இணையதளத்தைத் தொடங்கி இருக்கிறார். இணையதளத் தொடக்க விழா செப்டம்பர் 11 அன்று, வடாற்காடு மாவட்டம் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி அரங்கில் நடைபெற்றது என்று அறிகிறேன். இணையதளத்தின் முகவரி http://www.tamilchaaral.com
நான் சென்று பார்த்தபோது ஆசிரியர் குழு, குறிக்கோள்கள், முன்னுரை என்று சில பக்கங்களே இருக்கின்றன. நாளாக நாளாக கனமான அல்லது கவனம் ஈர்க்கிற உள்ளடக்கம் வருமென்று உங்களைப் போலவே நானும் எதிர்பார்க்கிறேன். எனவே, இணைய உலா வரும் நண்பர்கள் இந்தப் பக்கமும் எட்டிப் பார்க்கலாம் என்பது என் அபிப்பிராயம்.
பின்குறிப்பு: வையவன் எங்கள் குடும்ப நண்பர். அதைத் தவிர இத்தளத்துக்கும் எனக்கும் வேறெந்தத் தொடர்பும் இல்லை என்ற Disclosureம் பின்னால் எனக்கு உதவக்கூடும் என்பதால் இப்போதே முன்ஜாக்கிரதையுடன் சொல்லி வைக்கிறேன் :-)
தமிழ் எழுத்துலகில் பரவலாக அறியப்பட்ட பெயர் வையவன். கல்கியில் நிறைய எழுதியிருக்கிறார். எனவே, கல்கி வாசகர்களுக்குப் பரிச்சயமான பெயராகக் கூட இருக்கலாம். அவர் தம் நண்பர்களுடன் இணைந்து தமிழ்ச்சாரல் என்கிற இணையதளத்தைத் தொடங்கி இருக்கிறார். இணையதளத் தொடக்க விழா செப்டம்பர் 11 அன்று, வடாற்காடு மாவட்டம் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி அரங்கில் நடைபெற்றது என்று அறிகிறேன். இணையதளத்தின் முகவரி http://www.tamilchaaral.com
நான் சென்று பார்த்தபோது ஆசிரியர் குழு, குறிக்கோள்கள், முன்னுரை என்று சில பக்கங்களே இருக்கின்றன. நாளாக நாளாக கனமான அல்லது கவனம் ஈர்க்கிற உள்ளடக்கம் வருமென்று உங்களைப் போலவே நானும் எதிர்பார்க்கிறேன். எனவே, இணைய உலா வரும் நண்பர்கள் இந்தப் பக்கமும் எட்டிப் பார்க்கலாம் என்பது என் அபிப்பிராயம்.
பின்குறிப்பு: வையவன் எங்கள் குடும்ப நண்பர். அதைத் தவிர இத்தளத்துக்கும் எனக்கும் வேறெந்தத் தொடர்பும் இல்லை என்ற Disclosureம் பின்னால் எனக்கு உதவக்கூடும் என்பதால் இப்போதே முன்ஜாக்கிரதையுடன் சொல்லி வைக்கிறேன் :-)
Subscribe to:
Posts (Atom)