Friday, December 31, 2004

பக்தனாய்ப் பாட மாட்டேன்

ஒரு புத்தாண்டுப் பிரார்த்தனை:

பேசாப் பொருளைப் பேசநான் துணிந்தேன்.
கேட்கா வரத்தைக் கேட்கநான் துணிந்தேன்.
மண்மீ துள்ள மக்கள், பறவைகள்,
விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள்-
யாவுமென் வினையா லிடும்பை தீர்ந்தே
இன்பமுற் றன்புட னிணங்கிவாழ்ந் திடவே
செய்தல் வேண்டும். தேவ தேவா!
ஞானா காசத்து நடுவே நின்றுநான்
"பூமண் டலத்தில் அன்பும் பொறையும்
விளங்குக. துன்பமு மிடிமையு நோவுஞ்
சாவு நீங்கிச் சார்ந்தபல் லுயிரெலாம்
இன்புற்று வாழ்க!" என்பேன்! இதனைநீ
திருச்செவிக் கொண்டு திருவுள மிரங்கி
"அங்ஙனே யாகுக" என்பாய், ஐயனே!
இந்நாள், இப்பொழு தெனக்கிவ் வரத்தினை
அருள்வாய்; ஆதி மூலமே! அநந்த
சக்தி குமாரனே! சந்திர மவுலீ!
நித்தியப் பொருளே சரணம்
சரணம் சரணம் சரணமிங் குனக்கே!

- மஹாகவி பாரதியார்.

பி.கு.: பக்தனாய்ப் பாட மாட்டேன் என்பது தேவாரப் பாடலொன்றின் ஆரம்ப வரி.

Thursday, December 30, 2004

T.R.O.வுக்கு நன்கொடை

TRO-வின் நியூ ஜெர்ஸி தொடர்பு எண் 609-779-7746 உபயோகத்தில் இல்லை என்று சொல்கிறது. டாக்டர் ஸ்ரீஹரனுடன் தொடர்பு கொண்டு தொலைபேசியில் பேசினேன். அவர் தொலைபேசி எண் 301-320-6344. TRO இணையதளம் மூலம் பணம் அளிப்பதற்கு Paypal கணக்குத் தேவை என்று நினைக்கிறேன். சிலர் paypal கணக்கை உருவாக்கிப் பணம் தர சுணக்கம் காட்டுகிறார்கள். எனவே, அவர்களிடம் T.R.O என்ற பெயருக்குக் காசோலை வாங்கி டாக்டர் ஸ்ரீஹரனுக்குத் தபாலில் அனுப்பி வைத்து விடலாம் என்று இருக்கிறேன். அலுவலகம், அருகில் வசிக்கும் நண்பர்கள் ஆகியோர் நன்கொடை அளிக்க விரும்பினால், அக்காசோலைகளை வாங்கி நான் அனுப்பி வைத்துவிட முடியும். இதைவிடச் சுலபமான விஷயம் நன்கொடையாளர்கள் T.R.O. முகவரிக்கே காசோலைகளை நேரடியாக அனுப்பி வைப்பது. T.R.O.வின் அமெரிக்க முகவரி பின்வருமாறு: 517 Old Town Road Cumberland Maryland 21502, USA. அமெரிக்காவில் T.R.O.வுக்கு அளிக்கப்படும் நன்கொடைகளுக்கு வரிவிலக்கு உண்டு என்று அதன் இணையதளம் சொல்கிறது.

Wednesday, December 29, 2004

பிணம் தின்னும் அரசியல்

நண்பர் இராம.கி அவருடைய வலைப்பதிவில் "எங்கள் யாருக்கும் வெட்கமில்லை" என்று எழுதியிருந்தார். அரசியல்வாதிகள்தான் அப்படியென்றால் வலைப்பதிவாளர்கள் அதையும் மிஞ்சி விடுவார்கள் போலிருக்கிறது. பிணம் தின்னும் அரசியலுக்கு இங்கேயும் குறைச்சலில்லை.

வலைப்பதிவாளர்கள் தங்கள் நம்பிக்கை, சிந்தனை, அறிவுத்திறன் சார்ந்து கடல் கொந்தளிப்புக் குறித்த எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். அவற்றில் சில அபத்தமாகவும், மூடநம்பிக்கையாகவுமே இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். யாருடையதை யார் அபத்தம் என்று சொல்வது? யார் நம்பிக்கையை யார் மூடநம்பிக்கை என்று சொல்வது? யாருடைய மனிதாபிமானத்தையும் காருண்யத்தையும் யார் அளப்பது? கடவுளின் செயலென்றும் விதியின் செயலென்றும் நம்புபவர்களின் எண்ணம் தவறென்றால், அதைக் கண்டுபிடித்துச் சொல்ல வந்திருப்பவர்கள் நவீனக் கடவுள்களா? புண்ணாக்கு. இப்படி வெட்டியாக வம்பு பேசிக்கொண்டிருப்பதற்குப் பதில் மூடநம்பிக்கையோ, அபத்தமோ சுனாமி பற்றிய தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறவர்கள் மேல் என்று எனக்குத் தோன்றுகிறது.

சிலப்பதிகாரத்தின் நோக்கத்தில் ஒன்றே, "ஊழ்வினை உறுத்து வந்தூட்டும்" என்று சொல்வதுதான். அதற்காகச் சிலப்பதிகாரத்தைத் தூக்கி வீசிவிட முடியுமா என்ன? பக்தி இலக்கியங்களில் நாயினுக்கும் அடியேனாகத் தன்னை உருவகத்துப் பாடியுள்ளனர். அவற்றைத் தூக்கி எறிந்துவிட முடியுமா? குன்றக்குடி அடிகளார் கொடுத்த பூரண கும்ப மரியாதையை அச்சடங்கில் நம்பிக்கையில்லை என்றபோதிலும் பெரியார் மறுக்காமல் ஏற்றுக் கொண்டார். பெரியாரின் பெயரைச் சொல்பவர்கள் என்று சொல்லிக் கொள்கிற சிலர் பிராமணர்களையும் மற்றும் அவர்களின் கொள்கைகளுக்கு எதிரானவர்களையும் தாக்குவதற்கு எப்போது வாய்ப்பு கிடைக்குமோ என்று காத்துக் கொண்டிருப்பதுபோல தெரிகிறது. சுனாமிக்கு நன்றி சொல்லி எழுதுவதைவிட மோசமானது சுனாமியைப் பயன்படுத்தி இப்படி அரசியல் செய்வது. கலிங்கப் போருக்குப் பின் அசோகர் மனம் மாறியதைப் பற்றியும், துயரச் சம்பவங்களுக்குப் பின் அமெரிக்காவில் நடைபெறும் பிரார்த்தனைகள், candle light vigil ஆகியன பற்றியும் வலைப்பதிவுகளின் கமெண்ட்டுகளில் நண்பர்கள் ஏற்கனவே எழுதிவிட்டனர். அவரவருக்கு இருக்கிற நம்பிக்கையை வைத்து அவரவர் தத்தம் துயரத்தையும் எண்ணத்தையும் வெளிப்படுத்துகின்றனர். பெரியாரில் நம்பிக்கையிருப்பவர்கள் மூடநம்பிக்கையால் இது நிகழ்ந்தது என்று சொல்லிவிட்டுப் போகலாமே. யார் தடுத்தது?

எனவே, இந்தப் பிணம் தின்னும் அரசியலை நான் கண்டிக்கிறேன். இந்தியா வெளிநாட்டு உதவி வேண்டாம் என்று சொல்லியிருக்கிறது. அதுபற்றி எனக்குப் பெருமையாகவே இருக்கிறது. நம் பிரச்னைகளை நாம் தீர்த்துக் கொள்கிற தன்னிறைவின் ஓர் அம்சமாக இதைப் பார்க்கலாம். மேலும் இந்தியாவைவிட மோசமாகப் பாதிக்கப்பட்ட இலங்கை போன்ற நாடுகளுக்கு இதனால் அதிக உதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். TRO போன்ற அமைப்புகள் பற்றி நண்பர் ஸ்ரீகாந்த் மீனாட்சி போன்றவர்கள் நல்லவிதமாகச் சொல்லியிருக்கிறார்கள். இம்மாதிரி விஷயங்களில் ஸ்ரீகாந்த் மீனாட்சி போன்றோரின் அபிப்பிராயங்களை நான் மிகவும் மதிக்கிறேன். எனவே, TRO மூலம் முடிந்தவரை இலங்கைக்கு உதவுவது பற்றி யோசிக்கலாம். பொதுவாகவே பிற மக்களிடையே இலங்கைத் தமிழர் சார்ந்த விஷயங்களுக்குப் பணம் தருவதிலும், பணம் வசூலிப்பதிலும் பல பிரச்னைகள் இருக்கின்றன. அப்பிரச்னைகள் பல நேரங்களில் என்னைப் போன்றவர்களுக்கு நியாயமானவையாகத் தோன்றும். அப்பிரச்னைகளுள் நான் இப்போது போகப் போவதில்லை. ஆனால், இந்த மாதிரித் துயரமான நேரங்களில் TRO போன்ற அமைப்புகள் மூலம் உதவி செய்ய வேண்டியதன் கட்டாயத்தை அனைவருக்கும் நாம் வலியுறுத்தலாம்.

இவ்வளவு விஷயங்கள் செய்ய இருக்கும்போது - வெறுமே சண்டை போட்டு தன் ஈகோவின் அரிப்பைத் தீர்த்துக் கொள்வதில் என்ன சந்தோஷம் இருக்க முடியும். எனவே, வேலை இருக்கிறது. அதைப் பார்க்கப் போவோம் வாருங்கள்.

போர்வைகள் வாங்கித் தந்த முடிவெடுத்தபின் இன்னும் சிலரும் பணம் தர முன்வந்துள்ளனர். வலைப்பதிவு நண்பர்கள் சம்மதம் தந்தால், அவர்கள் அப்பணத்தை TRO மூலம் இலங்கைத் தமிழர்களுக்குக் கொடுக்கச் சொல்லிக் கேட்கிறேன். தனிப்பட்ட முறையில் நான் இதைச் சொல்ல உத்தேசித்திருக்கிறேன். அல்லது வடஅமெரிக்காவில் இருக்கிற இலங்கைத் தமிழர்கள் யாரும் இதற்குப் பொறுப்பேற்றுக் கொண்டால், என்னை அணுகுபவர்களை அவரிடம் அனுப்பி வைக்கிறேன்.

இந்தப் பதிவை மனம் வெறுத்துப்போய் நான் பொதுவாகவே எழுதியுள்ளேன். எனவே, தன்னைக் குறிப்பதாக யாரும் வருந்தினால், மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இதுகுறித்த விவாதங்களில் ஈடுபட எனக்கு நேரமும், ஆர்வமும், மனமும் இல்லை. கோபப்படுபவர்கள் சுனாமியை வைத்து வலைப்பதிவாளர்களிடையே வெறுப்பை வளர்க்காமல், இதை எழுதியதற்காக, என்னைத் திட்டிக் கோபத்தை ஆற்றிக் கொள்ளுமாறு வேண்டுகிறேன்.

Blankets for the Tsunami Affected - I

Many friends - who have generously donated for this "Blanket Drive for the Tsunami Affected" - do not know Tamil. For their convenience this post is in English.

Friends from Internet, Friends from Work, Personal Friends and Friends' Friends have voluntarily come forward and donated for this drive. I thank all of them profoundly. I am sure, all of the contributors here have also donated money through other means already. So, they coming forward again to do this is a noble and wonderful gesture.

I thank Ms. Bhama Ananthakrishnan and Ms.Viji who have donated all the excess money from the Diwali Celebration Lunch at our work, for this cause. Though I am one of the Diwali Lunch organizers, Bhama and Viji donated the excess money without me asking for it. I also did not know there is excess money since I don't handle money matters there. Bhama caught Viji on her plane to vacation to get her approval for the donation. Gestures like this made this fundraising drive a success. Some of my Indian friends at work are on vacation now due to the holidays season. So, they could not contribute for this. However, this excess money from the Diwali Lunch represents all Indians at my work place. So, I thank all of them.

My classmate Karunakaran Palanisamy - who also served as Vice President for Bay Area Tamil Mandram until recently - took charge of contacting my other classmate friends and his other friends for contributions. I thank him for everything he has done.

My colleagues Swami Natarajan and SakthiKanesan Kali who sit in the other building - helped to get contributions from their friends in their building. I thank them very much.

I have not asked for donation from any of my American colleagues here. However, knowing this, two American colleagues from my team have voluntarily come forward to donate. I thank them too.

I thank my wife's uncle Mr. Kandasamy and his friends for their help in procuring the blankets. Each blanket costs more than 100 Rupees if we purchase them through other means. He said the blankets cost normally from 125 Rupees to 150 Rupees each. However, he has agreed to talk to his co-operative society friends/sellers to get them for hundred rupees each. I told him that we could pay only Hundred Rupees for each blanket and not anything more. He assured me not to worry about the price and quality and he would take care of it. To all my wife's relatives, I am always a "Maapillai" (son-in-law of the family) and I don't feel ashamed to use them for good causes like this. They never complain about it. I ask for things with them which I would not ask even my parents. They always volunteer happily to do whatever they can. I have to thank my wife and her relatives a lot for this.

My wife normally does not loan me any money since she thinks I am spendthrift. However, to buy the blankets immediately she voluntarily loaned me the money from her savings in India. I thank her for the same.

Its amazing to know that within 24 hours, we collected commitment for 1737 blankets from friends. I told my wife's uncle to get 1740 blankets to round it off. Without help and support from all of you, it would not have been possible. So, I thank everyone profoundly. By mistake, if I have missed out anyone who helped me on this, I sincerely apologize.

Fundraising is always relatively an easy part. Being a volunteer in the field is worth more. We all could not be there in person to do our service in the rescue operations. Rajni Ramki and his friends are working for this greater cause. I am so happy that these blankets are going to be distributed through Rajni Ramki and his friends. I normally don't get involved in any fundraising until I am sure that all the money raised will go to the needy. This is one such occasion where all the money raised will go to the needy directly in the form of blankets. This was possible only through Rajni Ramki and his friends. So, I thank all of them. May God bless them.

My classmate Sivagnanakumar is thinking of a project wherein he would be adopting atleast 50 children who lost their parents in this tragedy. It means, taking care of accommodation expenses like hostel fees, education and other expenses of the children until they finish their studies. If he decides to do the project and needs help on that, I may come back to you all later seeking some help.

The blankets will be ready by Sunday. Rajni Ramki will pick it up from Karur anytime after Sunday. I will come back to all the donors for the money once I ensure the blankets are distributed. Until then, please hold your cheques. I will contact the donors through email for the money later. I have used today's exchange rate from Bank of India, New York to enter the amount in dollars. Bank of India, New York's exchange rate for today is 1 dollar = 43 Rupees.

The following is the list of donors in alphabetical order. Once again, I thank all the donors and friends who have helped me out in this cause. Without all of you, it would not have been possible. God bless you all.

Due to the time constraints in displaying the donors in a html table, I have displayed the info. in the format, Name--Amt inUSD--# of Blankets. I have the information as a MS-EXCEL File. I will send it to the needy as an email. If you need the excel file, please email me. I will try to convert the info. below as a html table later.

Name--Amt in USD--# of Blankets
AbyVarghese--69.77--30
Anand Muruganandham--69.77--30
Ananda P. Ramasubramoni--69.77--30
Arun Vaidyanathan--69.77--30
Ashok Dev--23.26--10
Ayyadurai Thiruvalluvan--69.77--30
Balachandran V.--25.58--11
Balaji C.R.--69.77--30
Bhaskar Viswanathan--23.26--10
Daniel Toma--30.24--13
Deepak Patra--69.77--30
Devanshi Parikh--69.77--30
Diwali Lunch Fund of the Indians at my Firm--253.49--109
Dr. P. Sundaram--69.77--30
Dushar Joshi--51.16--22
Ganesh Chandra--69.77--30
Ganesh Shankar Raman--58.14--25
Gopal Rajaram--69.77--30
Hari Matta--23.26--10
Jayaraman Venkatramani--116.28--50
Jim Deichmeister--30.24--13
John Sakkariyas--69.77--30
Karunakaran Palanisamy--69.77--30
Kasi Arumugam--23.26--10
Krishnaswamy Saranathan--23.26--10
Kumaresan Veramani--116.28--50
Meyyappan--30.24--13
Murali Dharmavarapu--58.14--25
Narendran P.S--100.00--43
Pandiyan Sethuraj--46.51--20
Panneer Mudaliar--100.00--43
Pari Boopalan--69.77--30
Parimelazhagar--69.77--30
PK Sivakumar--69.77--30
Pratheepa Rajan--51.16--22
Priya Sivaramakrishnan--58.14--25
Raghuraman Natarajan--69.77--30
Rajeswari Subramaniam--9.30--4
Sakthikanesan Kali--69.77--30
Sakthivel Balasubramanian--58.14--25
Saravana P. Govindasamy--69.77--30
Shabir Ahmed--46.51--20
Shankar Prayaga--69.77--30
Sivagnanakumar Elangovan--69.77--30
Sivakumar Cinnasamy--465.12--200
Srikanth Meenakshi--100.00--43
Srikanth Reddy--69.77--30
Sundar Pasupathy--100.00--43
Suneetha Pothi Reddy--69.77--30
Suranjoy Hazarika--69.77--30
Suresh Ramadoss--58.14--25
Swaminathan Natarajan--69.77--30
Thukaram Gopalrao--69.77--30
Udhayakumar Ratnasamy--69.77--30
Uma Ramanathan--23.26--10
Vasan Pillai--30.24--13
Venkat Sreenivasan--23.26--10

TOTAL--4039.66--1737

Thanks again to all of you for giving me an opportunity to be the co-ordinator for this noble cause. This ends the Part I of this drive. If anyone donates more money for the blankets hereafter, I will keep it as a separate list and will use it for blankets or for other causes that Rajni Ramki identifies.

Tuesday, December 28, 2004

பெட்ஷீட்கள் வாங்கித்தர விருப்பமா?

ரஜினி ராம்கியுடன் சற்றுமுன் தொலைபேசினேன்.

என்னுடைய மனைவியின் ஊர் பெட்ஷீட் உற்பத்திக்குப் பேர்போனது. எனவே, புதிய பெட்ஷீட்கள் வாங்கியும் ராம்கி மூலம் நிவாரண உதவியாகத் தரலாம் என்று நினைத்தேன். மொத்த விலையாக ஒரு பெட்ஷீட் நூறு ரூபாய்க்குக் கிடைக்கும் என்று அறிகிறேன். நான், என் நண்பர்கள் இன்னும் நான்கு பேர் சேர்ந்து மொத்தம் 150 பெட்ஷீட்கள் வாங்கித் தரலாம் என்று இருக்கிறோம். அமெரிக்காவில் இருக்கிற நண்பர்கள் யாரும் இப்படி உதவ முன்வந்தால் என்னைத் தொடர்பு கொள்ளவும். ஒருவர் முப்பது பெட்ஷீட்கள் வாங்கித் தந்தால் கூட ஒருவருக்கு மூவாயிரம் ரூபாய்தான் செலவாகும். என் மனைவியின் மாமாவை அழைத்து நாளைக்குள் மொத்தம் எவ்வளவு பெட்ஷீட்கள் வேண்டும் என்று சொல்லலாம் என இருக்கிறேன். அமெரிக்க நண்பர்கள் யாரும் இதில் கலந்து கொண்டு பெட்ஷீட்கள் வாங்கித்தர விரும்பினால் என்னைத் தொடர்பு கொள்ளவும். பணத்தை நான் பின்னர் வாங்கிக் கொள்கிறேன். எனவே, சேர விரும்புபவர் பெயரும், எத்தனை பெட்ஷீட்கள் வாங்கித்தர விருப்பம் என்றும் சொன்னால், ஆர்டர் செய்துவிட வசதியாக இருக்கும். என்னை மெசஞ்சர், மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

இந்தப் பெட்ஷீட்கள் ரஜினி ராம்கி மூலம் பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்படும்.

தி ஹிந்து வழியாக கடனட்டையைப் பயன்படுத்தி நிதியளிக்கலாம்

பிரபல ஆங்கில செய்தி இதழான "The Hindu", சுனாமி நிவாரண/மீட்பு பணிகளுக்கு உதவ The Hindu Relief Fund-ஐத் தொடங்கியுள்ளது. இணையம் மூலம் கடனட்டைகளைப் பயன்படுத்தி (using credit cards) இதற்கு நன்கொடை அளிக்க முடியும். என் நண்பர் முரளி எனக்கு அனுப்பிய மின்னஞ்சல் மூலம் இத்தகவலை நான் அறிந்தேன். வெளிநாட்டிலிருந்து கடனட்டை மூலம் நன்கொடை வழங்க விரும்புவர்களுக்கு இது உதவியாக இருக்கும். ஹிந்து போன்ற பெயரும் புகழும் பெற்ற நிறுவனம் இதில் ஈடுபட்டிருப்பதால், அளிக்கப்படுகிற நன்கொடை சரியாகப் பயன்படுத்தப்படுகிற வாய்ப்புகளும் அதிகம். இது குறித்த விவரங்களைப் பின்வரும் சுட்டியில் காணலாம்:

http://pay.hindu.com/thrfpay/thrfpay.jsp

நான் "The Hindu" மூலமாகவே நிதி அளிக்கப் போகிறேன்.

Monday, December 27, 2004

டிசம்பர் 28, 2004 - செவ்வாய்

வார்த்தை: காடுவசாதியாய்த்திரிதல். பொருள்: 1. விகாரமான கோலத்தோடு திரிதல், 2. அநாதையாகத் திரிதல். உதாரணம்: கவனிப்பார் யாருமின்றியும் சரியான நடையுடை பாவனையின்றியும் அவன் காடுவசாதியாய்த் திரிந்தான். (காடுவசாதி என்பது காடுவாழ்சாதி என்பதன் திரிபாகும்.)

வேற்றுமைத் தொடர்களில் ஒற்றுமிகும் இடங்கள்:

வேற்றுமைத் தொடர்களுக்கான பயிற்சியை அளித்த ஜெயஸ்ரீக்கு மீண்டும் நன்றிகள். அப்பயிற்சிகள் உதவிகரமாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன். இனி வேற்றுமைத் தொடர்களில் ஒற்று மிகும் இடங்களை நாளுக்கு ஒன்றாய்ப் பார்ப்போம்.

இரண்டாம் வேற்றுமை விரித்தொடரில் (இது இரண்டாம் வேற்றுமை தொகாநிலைத் தொடர் எனவும் அழைக்கப்படுகிறது என்பது நாமறிந்ததே.) வல்லின ஒற்று மிகும்.

அதாவது, இரண்டாவது வேற்றுமை உருபான "ஐ" வெளிப்படையாகப் புலப்படுமாறு அமைந்து வருகிற தொடர்களில் வல்லின ஒற்று மிகும். இதற்கு நிறைய உதாரணங்கள் சொல்ல முடியும் என்றாலும் 4 உதாரணங்கள் கீழே தரப்பட்டுள்ளன. இதுவும் மிகவும் சுலபமான விதியாகும். இணையக் குழுக்களில், நிறைய இடங்களில் பலர் (சில நேரங்களில் நான் கூட அவசரத்தில்) இரண்டாம் வேற்றுமை விரியில் வல்லின ஒற்று மிகுவதைக் கவனித்துப் பயன்படுத்துவதில்லை. எனவே, இதை நினைவில் வைத்துக் கொள்வது நல்லது.

உதாரணங்கள். சீதையைக் கண்டேன், உண்மையைச் சொன்னான், திருடனைத் திருத்தினார், வீட்டைப் பூட்டினார்.

Saturday, December 25, 2004

சாகித்ய அகாடமி எதிர்வினைகள்

என் பதிவு குறித்த எதிர்வினைகளை நேரடியாகக் கேட்பது ரஸமாக இருக்கிறது. நான் உடன்படுகிறேனோ இல்லையோ, பின்வரும் எதிர்வினைகளை நான் மிகவும் ரசித்தேன். அவற்றில் இருக்கிற அங்கதமும் தர்க்கமும் புறக்கணிக்க முடியாதவை. ஆதலால், அவற்றை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்.

என் நண்பர்கள் என்னுடைய "தமிழ் சாகித்ய அகாடமி" பதிவைப் படித்துவிட்டுச் சொன்னவை பின்வருமாறு:

1. அடுத்த வருட சாகித்ய அகாடமியைக் கருணாநிதிக்குக் கொடுத்தால் வாங்கிக் கொள்ள விரும்ப மாட்டார். "என்னுடைய ஜால்ராக்களான வைரமுத்து, அப்துல் ரகுமான், தமிழன்பன் ஆகியோர் வாங்கிய பரிசையே நானும் வாங்க வேண்டுமா" என்றே அவரின் ஈகோ சிந்திக்கும். அதனால், சாகித்ய அகாடமிக்குப் பதில் அதைவிட மேலான ஞானபீடம் அல்லது புதிதாய் ஒரு பரிசை உருவாக்கி அதை முதலில் பெறவே அவர் முயல்வார். அப்படி அவர் உருவாக்குகிற பரிசின் பெயரில், வள்ளுவர், பெரியார், அண்ணா ஆகியோரின் பெயர்கள் இருக்குமாறு அவர் பார்த்துக் கொள்வார் - இப்படி ஒரு நண்பர் சொன்னார்.

2. அகாடமி பரிசு என்னைப் போன்றவர்களுக்கும் நான் விரும்புவர்களுக்கும் கிடைக்காததால் நான் அந்தப் பதிவை எழுதியிருக்கிறேன் என்றும் காழ்ப்புணர்ச்சியாலும் நான் இதை எழுதியிருக்கிறேன் என்றும் விமர்சனம் வரும் என்று ஒரு நண்பர் சொன்னார்.

3. "சிவகுமார் முன்னோர்கள் செய்த புண்ணியம், சிவகுமார், ஈரோடு தமிழன்பன் போன்றோர் மாதிரி கவிதை எழுதாமல் இருப்பது" என்று அதற்கு ஒரு நண்பர் பதில் சொன்னார். இப்படிச் சொன்ன நண்பர் தமிழன்பன் அமெரிக்கா வந்தபோது அவரையும், அவர் கவிதைகளையும் அறிகிற வாய்ப்பு பெற்ற தமிழர்களில் ஒருவர்.

4. பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமனைப் பற்றி உலவுகிற கதையன்று இருக்கிறது. (ஒரே பட்டத்தில் மூன்று பொய்கள் சொல்ல முடியும் என்பதற்கு உதாரணம் பெருங்கவிக்கோ என்ற பட்டம் என்று என் நண்பர் ஒருவர் ஹாஸ்யமாகச் சொல்வது வழக்கம்!). நோபல் பரிசு அலுவலகத்திற்கு அவர் எழுதிய புத்தகங்களின் மூட்டையுடன் பெருங்கவிக்கோ ஒருமுறை சென்றாராம். சென்றதும், மூட்டையைப் பிரித்து உதறி, "இவ்வளவு அருமையாக இத்தனை எழுதியிருக்கிறேன். எனக்கு நோபல் பரிசு கொடுங்கள்" என்று கேட்டாராம். இந்தக் கதை உண்மையா என்று எனக்குத் தெரியாது. ஆனால், பெருங்கவிக்கோ அப்படிச் செய்கிற அளவுக்குத் தன் படைப்புகள் மீது நம்பிக்கையுடையவர் என்று நான் அறிவேன். அப்படிப்பட்ட பெருங்கவிக்கோவே சாகித்ய அகாடமி அலுவலகத்துக்குச் சென்று மூட்டையைப் பிரித்து உதறாமல், நோபல் பரிசு அலுவலகத்திற்குச் சென்றிருக்கிறார் என்றால், சாகித்ய அகாடமிக்கு இருக்கிற மதிப்பு தெரிகிறதல்லவா என்று அதிரடியாகப் பேசுகிற இன்னொரு நண்பர் சொன்னார்.

5. காமராஜரின் புகழ்பாடும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ள, காமராஜரைப் புனிதப் பிம்பமாகச் சித்தரிக்கிற திரைப்படம் எனக்குப் பிடித்திருப்பது போல, (சற்று முன் காமராஜ் திரைப்படத்தை நண்பர்களுடன் மீண்டும் பார்த்தேன். அதுகுறித்த விவாதம் ஓடிக் கொண்டிருக்கிறது.) தமிழன்பனின் கவிதைகளைப் பிடித்தவர்களும், அவற்றால் ஊக்கம் பெற்றவர்களும் இருக்கக் கூடுமல்லவா என்று பெரியாரிஸ்டான, திரைப்படத்தில் முனைவர் பட்டத்திற்கு ஆய்வு செய்கிற ஒரு நண்பர் கேட்கிறார். (இது ஒரு பெரிய விவாதம். இதற்கு நான் சொன்ன பதில்களையும், இவ்விவாதம் குறித்துப் பிறர் சொன்ன கருத்துகளையும் தொகுத்து எழுதுவதற்கென்றே ஒரு தனிப்பட்ட பதிவு வேண்டும். ஆனாலும், நண்பரின் கருத்தைப் பதிவு செய்ய வேண்டுமென்று அவர் கருத்தை மட்டும் எழுதுகிறேன்.)

6. எழுத்துகளில் எழுதும்போது தவறாகவும் தாக்குதலாகவும் புரிந்து கொள்ளப்படக் கூடிய கருத்துகளைக் கூட நேரடிப் பேச்சில் அன்பாகவும், நாகரீகமாகவும், நட்புச்சூழலிலும் சொல்ல முடிகிறது என்பதால் இத்தகைய நேரடி உரையாடல்கள் எனக்குப் பிடித்திருக்கின்றன. இத்தகைய உரையாடல்கள் எனக்கு உற்சாகமாகவும், பயனுள்ளவையாகவும் அமைகின்றன என்பதால் இவ்வுரையாடல்களை நான் எப்போதும் விரும்புகிறேன்.

தமிழ் சாகித்ய அகாடமி விருது

வருடாவருடம் தமிழில் சாகித்ய அகாடமி தமிழ் விருது அறிவிக்கப்பட்டபின் அதைப் பற்றி எழுதுவதற்கும், விருது பெற்றவர் அதற்குத் தகுதியானவரா என்று அலசுவதற்கும் நிறைய பேர் இருக்கிறார்கள். சாகித்ய அகாடமி விருதுகள் அந்தக் காலத்திலிருந்தே சர்ச்சைக்குள்ளானவையாகவே இருந்து வந்திருக்கின்றன. இடையிடையே நிஜமாகவே தகுதியானவர்களும் அவ்விருதைத் தமிழில் பெற்றிருக்கிறார்கள் என்பது ஓர் ஆறுதல். சரஸ்வதி களஞ்சியத்தில் கூட சரஸ்வதி வந்தக் காலத்தில் சாகித்ய அகாடமி குறித்து எழுந்த சர்ச்சைகள் பற்றிப் படித்த ஞாபகம். அதுபற்றி சரஸ்வதி சார்பாக எழுதப்பட்ட கடிதம் ஒன்றுக்கு, "வரப்பெற்றோம். உங்கள் கருத்துகளை அறிகிறோம்" என்ற ரீதியில் சாகித்ய அகாடமி செயலர் பதிலும் எழுதியிருந்தார் என்று நினைக்கிறேன். (கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக நண்பர் வீட்டில் இருக்கிறேன். சரஸ்வதி களஞ்சியம் வீட்டில் இருக்கிறது. எனவே, நினைவிலிருந்து எழுதுகிறேன்.)

அந்தக் காலத்து அகாடமி, "அரசாங்க தொனியிலாவது நாகரீகமாகப் பதில் சொல்லிப் பின் புகாரைக் குப்பைத் தொட்டியில் எறிந்துவிடுகிற" பண்பாட்டைப் பயன்படுத்தியது என்று இதன் மூலம் அறிகிறேன். இப்போதெல்லாம் சாகித்ய அகாடமி குறித்து எழுப்பப்படுகிற கேள்விகளுக்கு சாகித்ய அகாடமியிலிருந்து யாரும் பதில் சொல்கிறார்களா என்று தெரியவில்லை. தமிழிலிருந்து அகாடாமியில் அங்கம் வகிக்கிறவர்கள் இந்தக் கூக்குரல்களை எல்லாம் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. "உங்கள் கத்தல்கள் எல்லாம் எங்களை ஒன்றும் செய்துவிட முடியாது" என்ற அலட்சியமான பதிலைத் தங்கள் மௌனத்தின் மூலம் தருகிறார்களா என்றும் தோன்றுகிறது.

இந்த வருட அகாடமி ஈரோடு தமிழன்பனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஈரோடு தமிழன்பனின் கவிதை ஒன்று என்னுடைய இளங்கலைப் பட்டப்படிப்பில் தமிழ்ப் பாடத்தில் இருந்தது. என்ன கவிதை அது என்பதே எனக்கு மறந்துபோய்விட்டது. என்னை ஈர்க்கும்படி அது அப்போது இல்லை என்பது உண்மை. அதற்கு என் ரசனைக்குறைவைவிட அந்தக் கவிதையின் மோசமான தன்மையே காரணமாக இருந்தது என்று நினைக்கிறேன். ஈரோடு தமிழன்பனின் ரசிகர்கள் benefit of doubt-ஐ அவருக்குக் கொடுத்து என் ரசனைக்குறைவே காரணம் என்று முடிவு கட்டினாலும் அதை என்னால் புரிந்துகொள்ள முடியும். மற்றபடிக்கு ஈரோடு தமிழன்பனைக் கவிஞராக அறிந்ததைவிடத் தொலைகாட்சியில் செய்தி வாசித்தவராகவே நான் அதிகம் அறிந்திருக்கிறேன். திராவிட இயக்கச் சார்பு உடையவர் என்று விஷயமறிந்தவர்களால் அடையாளம் காணப்படுபவர் ஈரோடு தமிழன்பன். எனவே, அவர் கவிதைகளை அதிகம் படிக்காத நான் ஈரோடு தமிழன்பனின் தகுதி பற்றிச் சொல்வது சரியில்லை.

ஈரோடு தமிழன்பனுக்குச் சாகித்ய அகாடமி வழங்கப்பட்டது சரியா தவறா என்று தமிழ்கூறும் நல்லுலகு முரசறைந்து விவாதிக்கப் போகிறது. எனவே, அதற்குள் நுழைவது என் நோக்கமில்லை. (யாருக்கு விருது கொடுக்க வேண்டும் என்கிற பட்டியலும் என்னிடம் இல்லை. அந்தக் காரணத்தினாலேயே, இது பற்றிப் பேச எனக்குத் தகுதியிருக்கிறது என்று நம்புகிறேன். அதன் அடிப்படையிலேயே இதை எழுதுகிறேன்.) தமிழ்ச் சிற்றிதழ்கள் இந்த வருட விருதுபற்றிக் காரசாரமான கட்டுரைகளை வெளியிடும் என்ற வாசக எதிர்பார்ப்பு நான் உட்பட பலருக்கு இருக்கிறது. சாகித்ய அகாடமியின் தமிழ் விருதுத் தேர்வுகள் குறித்து குரல்கள் எழுப்புமளவுக்கே அதன் தேர்வுகள் - தொடர்ந்து இல்லையென்றாலும் அவ்வப்போதாவது - இருந்து வந்திருக்கின்றன என்று எனக்குத் தோன்றுகிறது. எனவே, சாகித்ய அகாடமியை விமர்சிப்பவர்கள் தனிப்பட்ட காழ்ப்புணர்வு, விருப்பு வெறுப்பு, தனக்குக் கிடைக்கவில்லையே என்ற வருத்தம் ஆகியவற்றின் அடிப்படையில் விமர்சிக்கிறார்கள் என்ற வாதத்தில் ஏதோ ஒரு சதவீதம் உண்மை இருக்குமென்றாலும், அவர்கள் எழுப்புகிற கேள்விகளிலும் ஏதோ ஒரு சதவீதம் உண்மையும் நியாயமும் இருக்கிறதென்பதை நான் ஒத்துக் கொள்ளவே செய்கிறேன்.

ஓர் உண்மையான எழுத்தாளன் பரிசுக்காக எழுதுவதில்லை. பரிசுகள் தகுதியற்றவருக்குப் போகும்போது அவற்றைப் பற்றிக் கவலைப்படுவதும் இல்லை. இந்த அடிப்படையில் சாகித்ய அகாடமி விருதுகள் குறித்து தமிழ் எழுத்துலகில் பலரும் மௌனம் சாதிக்கிறார்கள். அந்த மௌனத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. சாகித்ய அகாடமியின் தமிழ்க் குழுவில் இருப்பவர்களும் அந்த மௌனத்தைப் புரிந்து கொண்டிருப்பதாலேயே தங்கள் விருப்பப்படி செயல்பட்டு வருகிறார்களோ என்றும் எனக்குத் தோன்றுகிறது.

சாகித்ய அகாடமியின் தமிழ் விருதுகள் மீது பெருமதிப்பும் மரியாதையும் இருந்த காலம் போய்விட்டது என்றே நான் நினைக்கிறேன். இது குறித்து எனக்கு ஆழ்ந்த வருத்தமும் கவலையும் இருக்கிறது. அகாடமி என்கிற தன்னாட்சி அமைப்பு, தமிழில், அரசியல், கருத்தியல், தனிப்பட்ட நட்பு சார்ந்த சிபாரிசுகள் ஆகியவற்றில் சிக்கிச் சீரழிகிறதோ என்றும் தோன்றுகிறது. நோபல் பரிசுத் தேர்விலும் கூட அரசியல், சிபாரிசு ஆகியன உண்டு என்பது கேள்விப்படுகிற விஷயம்தான். அவற்றை முற்றிலும் தவிர்த்துவிட முடியாதுதான். ஆனால், அரசியல், மற்றும் சிபாரிசின் அடிப்படையில்கூட நோபல் பரிசுகள் முற்றிலும் தகுதியற்றவர்களுக்குப் போவதில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். எந்த சிபாரிசும், அரசியல் செல்வாக்கின் பிரயோகமும் தகுதியானவர்களுக்குச் செய்யப்பட்டால் அதை வரவேற்கலாம். எந்த அரசு ஆட்சியில் இருந்தாலும், எவர் விருது தேர்வுக் குழுவில் அல்லது அந்த மொழிசார்ந்த குழுவில் இருந்தாலும் மலையாளம் போன்ற பிற மொழிகளில் அகாடமியின் விருதுக்கான தேர்வுகள் விஷயமறிந்தவர் ஏற்றுக் கொள்ளத் தக்கதாகவே இருக்கின்றன என்று அறியும்போது ஏக்கமாக இருக்கிறது. எல்லாச் சாபக்கேடுகளும் தமிழுக்கே வாய்க்க வேண்டும் என்பது விதியோ?

இனிவரும் வருடங்களில் இதுவரை சாகித்ய அகாடமி வாங்காத, திராவிட இயக்கம் சார்ந்தவர்களுக்கும் வானம்பாடியுடன் ஏதோ ஒருவிதத்தில் தொடர்புடையவர்களுக்கும் சாகித்ய அகாடமி வழங்கப்பட்டால் நான் ஆச்சரியமடைய மாட்டேன். இனிவரும் வருடங்களில் ஒருவருடம் கருணாநிதிக்குச் சாகித்ய அகாடமி கிடைக்கச் செய்து அவரை இலக்கியவாதியென்று அதன்மூலம் யாரும் நிரூபித்தாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன். அப்துல் ரகுமானும், வைரமுத்துவும், ஈரோடு தமிழன்பனும் சாகித்ய அகாடமிக்குத் தகுதியானவர்களாக இருக்கும்போது, அவர்கள் வியந்து மதிக்கிற தமிழ்க்கடல் கருணாநிதியும் தகுதியுடையவரே. கருணாநிதிக்கு சாகித்ய அகாடமி கிடைத்தால் சாகித்ய அகாடமியின் செயல்பாடுகளை எதிர்க்கிற சிற்றிதழ்(கள்) கூட அதை வரவேற்று அறிக்கை விடுகிற சாத்தியம் இருக்கிறது. எனவே, அடுத்த வருட சாகித்ய அகாடமியைக் கருணாநிதிக்கு அளித்து அவரை இலக்கியவாதியாக நிறுவவேண்டுமென்று நான் முன்மொழிகிறேன். கருணாநிதிக்குக் கொடுப்பதை யாரும் கேள்வியும் கேட்க முடியாமல், ராஜாஜிக்குக் கொடுக்கப்பட்ட முன்னுதாரணத்தைக் காட்டி விடலாம்.

இன்னொன்று செய்யலாம். திராவிட இயக்கம் சார்ந்தவர்கள், பிற செல்வாக்குடைய அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள் ஆகியோர் யார் யாருக்குத் தமிழில் அகாடமி விருதுகள் தரவிரும்புகிறார்கள் என்று 50 பெயர்கள் கொண்ட ஒரு பட்டியல் எடுக்கலாம். அந்த 50 பேர்களுக்கும் ஒரே வருடத்தில் 50 சாகித்ய அகாடமி விருதுகள் கொடுத்துவிட்டு, அதற்கடுத்த வருடத்திலிருந்து விருதை நிஜமாகவே தகுதியானவர்களுக்குக் கொடுக்கலாம். 50 வருட வலியை ஒரே வருடத்தில் ஜீரணித்துவிட்டு, விருதுகளைக் கொஞ்சம் நம்பிக்கையுடன் என்னைப் போன்ற தமிழ்மக்கள் எதிர்நோக்க இது உதவும். தமிழ் சாகித்ய அகாடமி இந்த யோசனையை ஆக்கபூர்வமாகப் பரிசீலிக்க வேண்டுகிறேன்.

எனவே, இந்த வருடம் சாகித்ய அகாடமி வாங்கியதற்காக ஈரோடு தமிழன்பனை வாழ்த்துகிற அதே நேரத்தில் - சாகித்ய அகாடமி வாங்காததற்காக எஸ்.ராமகிருஷ்ணனையும், அவரைப் போன்ற இன்னும் பலரையும் அதிகம் வாழ்த்துகிறேன்.

Friday, December 24, 2004

வேற்றுமைத் தொடர்கள் - பயிற்சி 2

ஜெயஸ்ரீக்கு நன்றி சொல்லி, அவர் கொடுத்த இரண்டாவது பயிற்சியைத் தருகிறேன்.

1) பால்ப்பாயசம்
2) மனைவியை விலக்கினான்.
3) கண்ணுக்கு மையழகு
4) தலைகீழ்ப் பாடம்
5) யாருக்குத் தெரியும்?
6) கவிதைசொல்லி
7) மீனாட்சி கிளி
8) அவன்கண் மாற்றமில்லை.
9) படி ஏறினான்
10) பெரியாரால் ஈர்க்கப்பட்டான்.
11) வயோதிகச் சாவு
12) லஞ்சம் வாங்கினான்.
13) பாதம் தாங்கினான்.
14) காதல் பைத்தியம்
15) நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்
16) அஞ்சன மைவிழி
17) பனிச்சிலை
18) சகுந்தலையின் மோதிரம்.
19) கருங்கல்
20) உடன்பிறப்பே! விழித்துக்கொள் :)
21) கற்புக்கனல்
22) சத்சங்கம்
23) பச்சைவயல்
24) பண் இசைத்தனர்
25) துளசி தளம்

Thursday, December 23, 2004

வலைப்பதிவில் விளம்பரம்

Blogger-ல் நுழைந்தவுடன் பல நாட்களாக (மாதங்களாக) நிரந்தரமாக Googleன் Adsense-க்கான அழைப்பு என்னை வரவேற்கிறது. அதை வைப்பதில் எனக்கு முதலில் ஆர்வமில்லை என்றாலும் நண்பர்கள் சிலர் அதைப் பயன்படுத்தி வந்தது அது குறித்து யோசிக்க வைத்தது. நண்பர் ஒருவர் Adsense வழியாக விளம்பரங்களைத் தன் வலைப்பதிவில் போட்டு ஒரு மாதம் இருக்கும் அப்போது. அவரிடம் எவ்வளவு பணம் வந்தது என்று ஜாலியாகக் கேட்டேன். 25 சென்ட்டுகள் என்றார் சிரித்தபடி. எனவே, Adsense உபயோகப்படுத்துகிற நண்பர்களுக்கு எல்லாம் அதில் வருகிற வருமானத்தை வைத்து மில்லியனர் ஆகிவிடக் கூடிய சாத்தியம் உடனடியாக இல்லை என்பது தெரிந்ததுதான்.

ஆனால், அவர்கள் அதைப் பயன்படுத்துவதற்குப் பணத்தைத் தவிர பிற காரணங்கள் உள்ளன. உதாரணமாக, என் நண்பர் ஒருவர் Google-ன் Adsense மூலம் கிடைக்கிற வலைப்பதிவுக்கு வருகிறவர்கள் பற்றிய புள்ளிவிவரம் counterகள் தருகிற புள்ளி விவரங்களைவிடத் துல்லியமாக இருப்பதாகச் சொன்னார். மேலும், Google போன்ற Search Engine-களில் ஒரு தளத்தைத் தேர்வு செய்வதற்கு, அத்தளம் எத்தனை பேரால் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது, எத்தனை பேருக்கு லிங்க் கொடுத்துள்ளது என்பது போன்ற விவரங்களைக் கணக்கில் கொள்கிறார்கள். (Page Rank Philosophy. Google தேடுதல் எந்திரம் எப்படி வேலை செய்கிறது என்பது பற்றி டொரண்டோ வெங்கட் அவர் பதிவில் முன்னர் எழுதியிருக்கிறார். அதை இங்கே காணலாம். சுட்டியைக் கொடுத்த வெங்கட்டுக்கு நன்றி.) Adsense வைத்துக் கொள்வது இப்படிப்பட்ட பிற காரணங்களுக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ உதவும்.

சில நாட்களுக்கு முன் வலைப்பதிவுகளை வைத்து நடத்தப்படும் Fantacy Stock Market தளம் ஒன்றைப் பார்த்தேன். தளத்தின் பெயர் சட்டென்று நினைவுக்கு வரவில்லை. மன்னிக்கவும். நவன் பகவதிக்குத் தெரியும் என்று நம்புகிறேன். நவன் பகவதியை எனக்குத் தெரியாது என்றாலும், அவருக்குத் தெரியும் என்பது எனக்கு எப்படித் தெரியும் என்று கேட்காதீர்கள் :-) அதில் ஒரு வலைப்பதிவை மதிப்பிட அதற்கு வருகிற வருகையாளர்கள், அதற்கு எத்தனை லிங்க்குகள் பிறரால் கொடுக்கப்பட்டுள்ளன, அது எத்தனை லிங்க்குகளைக் கொண்டுள்ளது என்று பல விவரங்களைக் கணக்கில் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட விளையாட்டுத் தளங்களில் வலைப்பதிவின் மதிப்பை உயர்த்த Adsense நேரிடையாகவோ மறைமுகமாகவோ உதவலாம்.

எனவே, Adsense-ஐ என் வலைப்பதிவில் பயன்படுத்தினால் என்ன என்ற கேள்வி சமீபகாலங்களில் எழ ஆரம்பித்துள்ளது. கடவுளின் கிருபையாலும், போதுமென்ற மனம் இயற்கையாகவே கிடைக்கப் பெற்றுள்ள நல்லூழாலும் என் லௌகீக வாழ்க்கை சந்தோஷத்துடனும் திருப்தியுடனுமே எப்போதும் சென்று வருகிறது. இன்ஷா அல்லாஹ். எனவே, பிற காரணங்களுக்காக Adsense-ஐப் பயன்படுத்தினால் என்ன என்ற எண்ணமே இது குறித்து இவ்வளவு எழுதச் சொல்கிறது.

என் வலைப்பதிவில் என்னுடைய எழுத்துகள் இல்லாமல் - பிறர் எழுதியதையும் அவர்களுக்கும் அவர்களின் பதிப்பகங்களுக்கும் நன்றி சொல்லிப் பகிர்ந்து கொள்கிறேன். பெருந்தன்மையுடன் இதுவரை யாரும் எந்தக் கேள்வியும் எழுப்பாமல் அதை அனுமதித்து வருகிறார்கள். 75% என் எழுத்தென்றால், 25% பிறர் எழுதி ஏற்கனவே வெளியானதைப் பகிர்ந்து கொள்கிறேன் என்று தோராயமாகச் சொல்லலாம். எனவே, Adsense பயன்படுத்தினால், பிறர் எழுத்துகளைப் போட்டு அதன் மூலம் காசு பார்க்கிறேன் என்ற கேள்வி எழுமோ என்று தோன்றியது. அதனாலும் இவ்வளவு நாட்கள் தயங்கினேன்.

இன்றைக்குத் தமிழ்மணத்தைப் பார்த்தேன். அதில் Adsense இருக்கிறது என்று நினைக்கிறேன். Advertisements by Google என்று இருந்ததை Adsense வழி வந்தது என்று நான் புரிந்து கொள்கிறேன். தவறெனில் திருத்தவும். தமிழ்மணம் தளத்தை நடத்துவதற்கும் நிர்வகிப்பதற்கும் செலவுகள் இருக்கும். அவற்றை ஓரளவு ஈடுகட்டவாவது இப்படி விளம்பரங்கள் வைப்பது உதவும். அதனால் இது வரவேற்கத்தக்கது. இதுவும் நானும் ஏன் Adsense வைக்கக் கூடாது என்ற கேள்வியை மீண்டும் எழுப்பியது. தமிழ்மணம் போன்ற பிறரின் வலைப்பதிவுகளைப் பட்டியலிடுகிற தளம் Adsense-ஐ வைப்பது புரிந்து கொள்ளக் கூடியது என்னும்போது, நான் வைப்பதில் என்ன பிரச்னை இருக்க முடியும் என்றும் தோன்றியது.

Adsense பயன்படுத்துவதால் நான் ரசிக்கிற பிற எழுத்துகளை என் வலைப்பதிவில் பகிர்ந்து கொள்ள முடியாது என்றால், Adsense பயன்படுத்த எனக்கு விருப்பமில்லை. ஆனால், முயற்சித்துப் பார்ப்பதில் தவறில்லை என்று தோன்றுகிறது. எனவே, இனிவரும் நாட்களின் என் வலைப்பதிவில் Adsenseஐப் பயன்படுத்தி விளம்பரங்கள் வரலாம்.

பிறரின் எழுத்துகள் என் வலைப்பதிவில் 25 சதவீத அளவுக்கு இடம் பெறுகிறது என்கிற என்னுடைய "தாராளமான" கணிப்பின்படி, Adsenseன் மூலம் எனக்குக் கிடைக்கிற பணத்தில்(!) 25 சதவீதத்தை அறக்கட்டளைகளுக்கும், பொதுக் காரியங்களுக்கும் தந்துவிடுகிற உறுதியுடன் Adsenseஐப் பயன்படுத்தப் போகிறேன்.

நான் யோசிக்கத் தவறிய பிரச்னைகள் ஏதும் இதனால் ஏற்படக் கூடும் என்பது விஷயமறிந்த நண்பர்களுக்குத் தெரிந்தால், தயவுசெய்து சொல்லுங்கள்.

வேறு வேலை இல்லாமல், பிறரின் நோக்கங்களிலும் செய்கைகளிலும் குறை மட்டுமே காணுகிற வீணர்கள் எதிர்காலத்தில் நான் Adsense பயன்படுத்துவது பற்றிக் கேள்விகள் எழுப்பக் கூடும் என்ற எதிர்பார்ப்பிலும் இப்பதிவு இடப்படுகிறது. :-)

வேற்றுமைத் தொடர்கள் - பயிற்சி 1

என்னுடைய வேண்டுகோளுக்கிணங்க ஜெயஸ்ரீ வேற்றுமைத் தொடர்களுக்கான பயிற்சிகளைத் தர முன் வந்திருக்கிறார். அவருக்கு நன்றிகள்.

முதல் நாளுக்கான 25 பயிற்சிகள் கீழே தரப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் எந்த வேற்றுமைத் தொடர் (உதாரணம், இரண்டாம் வேற்றுமைத் தொகை) என்ற பதிலை, கருத்துகள் பகுதியில் விரும்புவோர் இடலாம். இப்பயிற்சியில் நானும் மாணவனே. எனவே, நானும் பதில்கள் இட முயல்கிறேன்.

கருத்துகள் பகுதியில் பதில்கள் இடுவது ஒருவரின் விடையை இன்னொருவர் அறிந்து கொள்ள உதவும். தெரியாத கேள்விகளுக்கு இன்னொருவர் என்ன பதில் சொல்கிறார் என்று இதன்மூலம் கண்டுபிடித்துவிட முடியலாம். எனவே, கருத்துகள் பகுதியில் பதில்களை இட விரும்பாதோர் அவற்றை pksivakumar@yahoo.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்தால், அடுத்த நாள் அல்லது பயிற்சிகள் முடிந்தபின்னர் எல்லாரின் பதில்களையும் நான் ஒரு பதிவாக இடுகிறேன்.

இப்பயிற்சிக்கு ஆசிரியை ஜெயஸ்ரீதான். முந்தைய நாளின் பயிற்சிக்கான விடைகளை அடுத்த நாள் பயிற்சி வினாக்களுடன் கொடுப்பதா அல்லது எல்லா பயிற்சிகளும் முடிந்தபின் விடைகளை மொத்தமாகக் கொடுப்பதா என்கிற முடிவை ஆசிரியையின் வசதிக்கு விட்டு விடுகிறேன்.

இப்பயிற்சிகள் மிகவும் உதவும் என்று நம்புகிறேன். எந்த நல்ல விஷயத்தையுமே எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதிலேயே அதன் வெற்றி இருக்கிறது. ஜெயஸ்ரீயின் நேரத்தையும், முயற்சியையும், அறிவையும் நல்ல விதத்தில் பயன்படுத்திக் கொள்வோம் என்று நம்புகிறேன்.

1) வல்லமை தாராயோ
2) மழைச்சாரல்
3) கட்டித்தயிர்
4) கருணைக் கடல்
5) கட்சி தாவினான்
6) பெரியார் கொள்கை
7) நேர மாற்றம்
8) நேர்த்திக் கடன்.
9) பால் அபிஷேகம்
10) பட்டுப்புடவை
11) கல் சிலை
12) அம்பு எய்தான்
13) மரபுக் கவிதை
14) பேசாப் பொருள்
15) கந்தல் துணி
16) கல்யாணக் கனவுகள்
17) கண் நிறைந்த காட்சி
18) பதவி சுகம்
19) பல்வலி
20) வட்டிக்கடன்
21) பாட்டில் மூடி
22) திரைப் பாடல்கள்
23) கலாசார சிலுவை
24) தமிழ் இலக்கணம்
25) பயிற்சி முடித்தேன். :)

Wednesday, December 22, 2004

டிசம்பர் 22, 2004 - புதன்

வார்ததை: கெங்காதீரம். பொருள்: கங்கைக்கரை. உதாரணம்: கங்காதீரத்தில் அலைந்து திரிந்து ஞானம் தேடுகிற முனிவர்கள் உண்டு.

வேற்றுமைகளின் வகைகள்:

நிலைமொழி, வருமொழி என்றால் என்னவென்று குற்றியலுகரம் பற்றிப் பார்க்கும்போதே பார்த்தோம். இன்னொரு முறை வேகமாகப் பார்ப்போம்.

அவரைப் பார்த்ததும் கைகுவவித்து வணங்கினான் என்ற வாக்கியத்தை எடுத்துக் கொள்வோம்.

முதல் இரண்டு வார்த்தைகளில் அவரைப் என்பது நிலைமொழி. பார்த்ததும் என்பது வழிமொழி. இரண்டாம் மூன்றாம் வார்த்தைகளை எடுத்துக் கொண்டால் பார்த்ததும் நிலைமொழி, கைகுவித்து வருமொழி. மூன்றாம் நான்காம் வார்த்தைகளை எடுத்துக் கொண்டால், கைகுவித்து நிலைமொழி, வணங்கினான் என்பது வருமொழி.

ஒரு வாக்கியத்தின் நிலைமொழிகளையும் வழிமொழிகளையும் இவ்வாறே கணக்கிட வேண்டும்.

ஒரு சொற்றொடர் என்ன வேற்றுமை என்பதைக் கண்டுபிடிக்க எப்போதும் நிலைமொழியைத் தான் நோக்க வேண்டும். வருமொழியைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.

நிலைமொழி என்ன வேற்றுமைத் தொடர்புடையதோ, அச்சொற்றொடர் அவ்வேற்றுமைத் தொடர்புடையது எனப்படும்.

சொற்றொடர்கள் அமையும் விதத்தைப் பொறுத்து வேற்றுமைத் தொடர்கள் நான்கு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவை,

1. வேற்றுமை விரி அல்லது தொகநிலைத் தொடர்
2. வேற்றுமைத் தொகை அல்லது தொகைநிலைத் தொடர்
3. உருபும் பயனும் உடன்தொக்க தொகை
4. அல்வழித் தொடர்

வேற்றுமை விரி அல்லது தொகாநிலைத் தொடர்:

இத்தொடர்களில் வேற்றுமை உருபு கண்ணுக்குப் புலப்படுமாறு வெளிப்படையாக அமைந்து வரும்.

உதாரணங்கள்:

அவரைப் பார்த்தான், அவரால் உந்தப்பட்டான், தசரதனுக்கு மகன், மலையின் வீழருவி, ராமனது வில், நீர்க்கண் குளித்தான்.

மேற்கண்ட உதாரணங்களில், ஐ, ஆல், கு, இன், அது, கண் ஆகிய வேற்றுமை உருபுகள் வெளிப்படையாக வந்திருப்பதைக் காணலாம். முதல் உதாரணம், இரண்டாம் வேற்றுமை விரி என்றும், இரண்டாம் உதாரணம், மூன்றாம் வேற்றுமை விரி என்றும் இப்படியாக அழைக்கப்படும்.

வேற்றுமைத் தொகை அல்லது தொகைநிலைத் தொடர்:

இத்தொடர்களில் வேற்றுமை உருபு தொக்கி (மறைந்து) வரும்.

உதாரணங்கள்:

நீர்க் குடித்தான் (இது நீர் + ஐ + குடித்தான் என்ற பொருள்படும், ஐ என்ற வேற்றுமை உருபு மறைந்து வந்திருக்கிறது.)

கல்லெறிந்தான் (இது கல் + ஆல் + எறிந்தான் என்ற பொருள்படும். ஆல் என்ற வேற்றுமை உருபு மறைந்து வந்திருக்கிறது.)

தசரதன் மகன் (இது தசரதனுக்கு மகன் என்ற பொருள்படும். கு என்ற வேற்றுமை உருபு மறைந்து வந்திருக்கிறது.)

மலைவீழருவி (இது மலை + இன் + வீழருவி என்ற பொருள்படும். இன் என்ற வேற்றுமை உருபு மறைந்து வந்திருக்கிறது.)

இராமன் வில் (இது இராமன் + அது + வில் என்ற பொருள்படும். அது என்ற வேற்றுமை உருபு மறைந்து வந்திருக்கிறது.)

நீர்க்குளித்தான் (இது நீர் + கண் + குளித்தான் என்ற பொருப்படும். கண் என்ற வேற்றுமை உருபு மறைந்து வந்திருக்கிறது.)

வேற்றுமை விரி அல்லது தொகாநிலைத் தொடர்களில் வேற்றுமை உருபுகள் வெளிப்படையாகத் தெரிவதால் அவற்றைச் சுலபமாகக் கண்டுபிடித்து விடலாம். ஆனால், வேற்றுமைத் தொகை அல்லது தொகைநிலைத் தொடர்களை இப்படிப் பிரித்துப் பார்த்தே கண்டுபிடிக்க முடியும். எனவே, வேற்றுமைத் தொகைகளைக் கண்டுபிடிக்க சற்று அதிகப்படியான முயற்சி தேவை.

உருபும் பயனும் உடன் தொக்க தொகை:

சில சொற்றொடர்களில் பொருள் நிறைவு பெறும் பொருட்டு வேற்றுமை உருபுடன் வேறு சொல்லும் தொக்கி (மறைந்து) வரலாம். அச்சொற்றொடர்கள் உருபும் பயனும் உடன் தொக்க தொகை எனப்படும்.

உதாரணங்கள்:

நீர்க்குடம். இது நீர் + ஐ + உடைய + குடம் என்று விரியும். எனவே இது இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை.

பொன் குடம். (பொன் + ஆல் + செய்யப்பட்ட + குடம்)
தக்கோர் பண்பு (தக்கோர் + கு + தகுந்த + பண்பு)
கள்ளிப்பால் (கள்ளி + இல் + இருந்து வரும் + பால்)

ஆறாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகைக்கு எடுத்துக்காட்டாகச் சொற்றொடர் இல்லை.

நீர்ப்பாம்பு (நீர் + கண் + வாழும் + பாம்பு)

வேற்றுமைத் தொகை அல்லது தொகைநிலைத் தொடர்களை விட உருபும் பயனும் உடன் தொக்க தொகைகளைக் கண்டுபிடிக்க நிறைய முயற்சி தேவை.

ஒவ்வொரு வேற்றுமைத் தொகைக்கும், உருபும் பயனும் உடன் தொக்க தொகைக்கும் பல உதாரணங்களை எழுதிப் பார்ப்பது உதவும். (நானே, இதை இன்னும் செய்யவில்லை :-). இந்த மாதிரி பயிற்சிகள் கொடுப்பதற்கு ஜெயஸ்ரீ சிறந்த நபர். அவர் விரும்பினால், இந்தப் பயிற்சி கொடுக்கிற பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.)

அல்வழித் தொகை:

சில சொற்றொடர்களில் வேற்றுமை உருபுகள் இல்லாமல், பண்பு முதலான சொற்கள் அமைந்து வரும். இஅவற்றை அல்வழி என்பர். அல்வழியில் ஐந்து தொகைநிலைத் தொடர்களும் ஒன்பது தொகாநிலைத் தொடர்களும் உண்டு. அல்வழிப் புணர்ச்சியைப் பார்க்கும்போது இவற்றை விரிவாக ஆராயலாம்.

உதாரணங்கள்: செந்தாமரை, கருங்குதிரை, பனைமரம்.

வேற்றுமைத் தொடர்களின் வகைகளை நன்றாகப் புரிந்து கொள்ளுதல் வேற்றுமை உருபுகள் வரும்போது ஒற்று மிகும் மிகா இடங்களை அறிய உதவும். இந்தப் புரிதல் இல்லாமல் வேற்றுமைத் தொடர்களில் ஒற்றுமிகும் மிகா இடங்கள் பற்றிய விதிகள் புரியா. எனவே, வேற்றுமைத் தொகை அல்லது தொகைநிலைத்தொடர் மற்றும் உருபும் பயனும் உடன் தொக்க தொகை என்று சிந்தனையும் முயற்சியும் தேவைப்படுகிற தொடர்களை நன்றாக அறிந்து வைத்துக் கொள்வது நல்லது. வேற்றுமை விரித் தொடரில் வேற்றுமை உருபு வெளிப்படையாக வருவதால் சுலபமாகக் கண்டுபிடித்து விடலாம்.

நாளைக்கு வேற்றுமைத் தொடர்களில் ஒற்று மிகும் இடங்களைப் பார்ப்போம். ஜெயஸ்ரீ வேற்றுமைத் தொடர்களுக்குப் பயிற்சி அளிக்க விரும்பினால், ஒற்று மிகும் இடங்களைப் பார்ப்பதை டிசம்பர் 27 வரை தள்ளியும் போடத் தயார். உதாரணமாக, தினமும் 25 வேற்றுமைத் தொடர்களைத் தந்து அவை எந்த வகையான வேற்றுமைத் தொடர் (உ-ம், இரண்டாம் வேற்றுமை விரி, மூன்றாம் வேற்றுமைத் தொகை) என்று கண்டுபிடிக்கச் சொல்வது நல்ல பயிற்சியாக இருக்கும்.

Tuesday, December 21, 2004

டிசம்பர் 21, 2004 - செவ்வாய்

வார்த்தை: கைகடத்தல். பொருள்: 1. வசப்படாமல் மீறுதல் (to pass beyond one's control), 2. கைக்கு எட்டாமல் போதல் (to escape; to pass out of one's hands). உதாரணம்: காரியம் கைகடந்து போய்விட்டது.

வேற்றுமை உருபுகள்:

மொழியில் சொற்கள் ஒன்றோடு ஒன்று கூடிச் சேருவதை புணர்ச்சி என்று அழைக்கிறார்கள். இப்படிச் சொற்கள் கூடித் தொடர்ந்து அமைவதுதான் வாக்கியம். அப்படிச் சொற்கள் தொடரும்போது அவற்றைச் சொற்றொடர் என்கிறோம். சொற்றொடர்கள் அமையும்போது அவற்றுக்கு இடையே பொருளைத் தெரிவிக்க சில உருபுகள் வருவதுண்டு.

உதாரணமாக, அவர் என்ற சொல்லை எடுத்துக் கொள்ளலாம். அவரை, அவரால், அவருக்கு, அவரின், அவரது, அவரிடம் என்று இச்சொல் வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு பொருள்களைத் தரும்விதத்தில் பயன்படுத்தப்படலாம். இப்படி ஒரு சொல் அடைகிற வேறுபாடே வேற்றுமை எனப்படுகிறது.

வேற்றுமை என்றால் பெயரின் (அல்லது சொல்லின்) பொருளை வேறுபடுத்துவது என்று இங்கே பொருள். அவ்வாறு வேறுபடுத்திக் காண உதவும் எழுத்தை/எழுத்துகளை வேற்றுமை உருபு என்று அழைக்கலாம்.

தமிழில் எட்டு வேற்றுமைகள் உண்டு. முதல் வேற்றுமைக்கும் எட்டாம் வேற்றுமைக்கும் உருபுகள் இல்லை.
பின்வருவன இதர வேற்றுமை உருபுகளாகும்:

இரண்டாம் வேற்றுமை உருபு: ஐ.
உதாரணம்: அருணைப் பார்த்தேன்

மூன்றாம் வேற்றுமை உருபு: ஆல், ஆன், ஒடு, ஓடு
உதாரணம்: பத்ரியால் முடியும்.

நான்காம் வேற்றுமை உருபு: கு
உதாரணம்: தேசிகனுக்குப் பாராட்டுகள் குவிந்தன.

ஐந்தாம் வேற்றுமை உருபு: இல், இன்
உதாரணம்: சிவகுமாரின் பேச்சுத் திறனை வெல்ல யாரால் முடியும்.

ஆறாம் வேற்றுமை உருபு: அது, ஆது, அ
உதாரணம்: அவரது எழுத்துகள் படிக்க உகந்தன.

ஏழாம் வேற்றுமை உருபு: கண்
உதாரணம்: நீர்க்கண் குளித்தார்.

இவற்றைச் சுருக்கமாக, ஐ-ஆல்-கு-இல்-அது-கண் என்று பள்ளி நாட்களில் மனப்பாடம் செய்தது நினைவுக்கு வருகிறது அல்லவா?

முதலாம் வேற்றுமைக்கு உருபு இல்லை. முதலாம் வேற்றுமை என்று அழைக்கப்படுவதற்குப் பதிலாக அது பெரும்பாலும் எழுவாய்த் தொடர் என்று அழைக்கப்படுகிறது.

உதாரணமாக, மூக்கர் கோபப்பட்டார் என்ற சொற்றொடரை எடுத்துக் கொள்வோம். மூக்கர் என்ற பெயர்ச்சொல்லில் வேற்றுமை உருபு எதுவும் இல்லை. அதாவது, எந்த வேற்றுமை உருபும் வெளிப்படையாகவும் இல்லை. மறைமுகமாகவும் இல்லை. எனவே, வேற்றுமை உருபு ஏற்காத பெயர்ச்சொல் முதல் வேற்றுமை ஆகும். ஆனால், அதை முதல் வேற்றுமைத் தொடர் என்று அழைக்கிற பழக்கம் இல்லை. மாறாக, எழுவாய்த் தொடர் என்று அழைக்கிறோம். முதல் வேற்றுமைக்கு எழுவாய் வேற்றுமை என்ற பெயரும் உண்டு. சிவகுமார் எழுதினார், முருகன் வந்தார், அனானிமஸ் திட்டினார் ஆகியன எழுவாய்த் தொடர்களுக்கு இன்னும் உதாரணங்களாகும்.

எட்டாம் வேற்றுமைக்கும் உருபு இல்லை. எட்டாம் வேற்றுமை என்று அழைக்கப்படுவதற்குப் பதிலாக அது விளித்தொடர் என்று அழைக்கப்படுகிறது. இதனை விளி வேற்றுமை என்றும் அழைக்கலாம். உதாரணமாக, கண்ணா வா என்ற தொடரை எடுத்துக் கொள்வோம். (இதன் எழுவாய்த் தொடர் கண்ணன் வந்தார் என்பது.) இதில் கண்ணன் என்ற பெயர்ச் சொல் கண்ணா என்று ஆகி, வா என்கிற வினைச்சொல் கட்டளை வடிவத்தில் வந்துள்ளது. மூக்கரின் உதாரணத்தைப் பார்க்கப் போனால், அது விளித்தொடரில், மூக்கா கோபப்படு என்று ஆகும். இப்படி மூக்கரைச் சொல்வது மரியாதை இல்லையென்பதால் கண்ணா வா என்ற உதாரணத்தை எடுத்துக் கொண்டேன். :-) விளித்தொடருக்கும் வேற்றுமை உருபு இல்லை என்பதைக் காணலாம். தொடரில் வருகிற பெயர்ச்சொல் விளியேற்கிறது. வினைச்சொல் கட்டளை வடிவத்தில் வருகிறது. அவ்வளவுதான்.

இது வரை வேற்றுமை என்றால் என்ன, வேற்றுமை உருபுகள் யாவை, அவற்றுக்கான உதாரணங்கள் ஆகியவற்றைப் பார்த்தோம். நாளைக்கு வேற்றுமைத் தொடர்களின் வகைகளைப் பார்க்கலாம்.

இரு புத்தகங்கள்

2004-ல் படித்தவற்றில் சிறந்த புத்தகங்கள் எவை என்று யோசிக்கிறேன். புத்தகம் தவிர சினிமா, பாடல், பத்திரிகை என்று பிற துறைகளைப் பட்டியலிட எனக்கு அத்துறைகளில் பாண்டித்யம் இல்லை. புத்தகங்களில் கூட பாண்டித்யம் இல்லையென்றாலும், தொடர்ந்து படிக்கிற வழக்கத்தை 2004 முழுக்க கைக்கொண்டிருந்தேன் என்ற எண்ணம் படித்தவற்றில் சிறந்த புத்தகங்கள் பற்றிச் சிந்திக்கச் சொல்கிறது.

ஜெயமோகனின் இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள், சுஜாதாவின் ஆழ்வார்கள் - ஓர் எளிய அறிமுகம், பி.ஏ. கிருஷ்ணனின் புலிநகக் கொன்றை, Richard A. Clarke-ன் Aganist all enemies, Dan Brown-ன் The Da Vinci Code, வையாபுரிப் பிள்ளையின் தமிழின் மறுமலர்ச்சி, மு.வ. வின் தமிழ் இலக்கிய வரலாறு, பலரின் கவிதைத் தொகுதிகள் என்று 2004-ல் படித்த பல புத்தகங்களின் பெயர்கள் உடனடி நினைவுக்கு வருகின்றன. அதே மாதிரி - பல புத்தகங்களை பாதி மட்டும் படித்து வைத்திருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது மீதியைத் தொடரலாம் என்ற எண்ணம். Barnes & Noble சென்று படித்த பல புத்தகங்களை முடிக்காமல் திரும்பியிருக்கிறேன். பெஞ்சமின் பிராங்க்ளினின் சுயசரிதை (இது இணையத்திலும் இலவசமாகக் கிடைக்கிறது.), மால்கம் எக்ஸ்ஸின் சுயசரிதை (இதைத் தமிழில் ரவிக்குமார் மொழி பெயர்த்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.) ஆகியன அப்படி ஆங்கிலத்தில் படிக்க ஆரம்பித்து, இன்னும் முடிக்காமல் வைத்திருப்பவை. புதிய வீட்டுக்கு வந்த பின்னர், வீடு சார்ந்த வேலைகளினால், வார இறுதிகளில் Barnes & Noble போக முடிவதில்லை. புத்தாண்டிலோ வசந்த காலத்திலோ அந்தப் பழக்கத்துக்கு மீண்டும் உயிரூட்ட வேண்டும். ஆங்கிலத்தில் நான் படிப்பது மிகவும் சொற்பம். அதை அதிகரிக்கவே புத்தகக் கடைகளுக்குச் சென்று படிக்கிற வழக்கத்தை ஆரம்பித்தேன். அதை விடாமல் தொடர வேண்டும்.

எல்லாப் புத்தகங்களும் எனக்கு ஏதோவொன்றைக் கற்றே தருகின்றன. எனவே, படித்தவற்றில் இரண்டை மட்டும் சுட்டிச் சொல்வது கடினமான செயல்தான். ஆனால், சந்தோஷ் குரு தன் வலைப்பதிவில் இந்த வருடத்தில் அவர் படித்த இரண்டு புத்தகங்களைப் பற்றி எழுதியிருந்ததைப் படித்ததும், எனக்கும் அது குறித்து யோசிக்கத் தோன்றியது.

வீட்டுக்குச் சென்று புத்தக அலமாரியை மீண்டும் ஒரு நோட்டம் விட்டால், படித்தவற்றில் உடனடி நினைவுக்கு வராத சில புத்தகங்களையும் பார்க்கக் கூடும். ஆனால், நான் படித்ததில் எனக்கு மிகவும் பிடித்த இரண்டு புத்தகங்களின் முடிவை அது மாற்றிவிடாது என்று நிச்சயமாக என் உள்மனதுக்குத் தோன்றுகிறது. எனவே, 2004-ல் நான் படித்த புத்தகங்களில் என்னை மிகவும் கவர்ந்த இரண்டு புத்தகங்களை இப்போதே சொல்லி விடுகிறேன்.

1. புலிநகக் கொன்றை - பி.ஏ. கிருஷ்ணன் - தமிழ்
2. The Da Vinci Code - Dan Brown - ஆங்கிலம்

இவை ஏன் மிகவும் பிடித்தன என்பது பற்றி என்றைக்காவது வாசக அனுபவத்தை நான் எழுதக் கூடும் என்பதால் இப்போது ஒன்றும் சொல்லப் போவதில்லை.

குளிர்காலம்

அமெரிக்க வடகிழக்கு மாகாணங்களில் குளிர்காலம் இன்று முதல் முறைப்படி தொடங்குகிறது. நேற்று வரைக்கும் இலையுதிர் காலம்தான். ஆனால், குளிர்காலம் முறைப்படித் தொடங்கிய பின்தான் வருவேனென்று குளிர் எப்போதும் காத்திருப்பதில்லை. செப்டம்பர்/அக்டோபர் முதற்கொண்டே சீதோஷ்ண நிலை குறைந்து கொண்டே வர ஆரம்பித்துவிடுகிறது. குளிர்காலம் ஆரம்பிப்பதற்கு முன்னேயே பனிப்பொழிவுகள் நிகழ்வது இங்கே சாதாரணம். நேற்று கூட இங்கே வெப்பநிலை 11 டிகிரி பாரன்ஹீட்டிலிருந்து 19 டிகிரி பாரன்ஹீட்வரைதான் இருந்தது. குளிருடன் சேர்ந்து அடிக்கிற காற்று வெப்பநிலையை இன்னும் பல டிகிரிகள் குறைத்துக் காட்டும். என்னைப் பொறுத்தவரை காற்று இல்லாவிட்டால், எந்தக் குளிரையும் தாங்கிக் கொள்வேன். காற்று மிதமான குளிரைக் கூட மோசமானதாக உணர வைக்கும்.

இந்தியா என்ற உஷ்ண நாட்டிலிருந்து வந்ததால் குளிர்காலம் எனக்கு அவ்வளவாகப் பிடிப்பதில்லை. இன்னொரு காரணம், துணிகளின் பொதி கொண்டு உடலைக் குளிரிலிருந்து காத்துக் கொள்கிற வழியை நான் கடைபிடிப்பதில்லை என்பதும். எப்போதுமே லேசான உடைகள் அணியவே எனக்குப் பிடிக்கும். குளிர்காலத்திலும் கூட டிசம்பர் ஜனவரி வரை லெதர் ஜாக்கெட்டுடன் ஓட்டி விடுவேன். காற்றும் குளிரும் நிறைய இருக்கிற நாள்களிலேயே குளிர்காலத்துக்கான உடைகள், தொப்பி, கையுறை அணிவது வழக்கம். எப்போதுமே உடைக்குள் அணிகிற உடலை சூடாக வைத்திருக்க உதவுகிற தெர்மல் உடையை அணியப் பிடிக்காது. ஆனால், குளிர்காலத்துக்கு ஏற்ற உடைகளையும் உபகரணங்களையும் பயன்படுத்திக் கொண்டு, பனிப்பொழிகிற காலங்களிலும், குளிர் உறைகிற காலங்களிலும் கூட இங்குள்ள மக்கள் இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வாழ்வின் சந்தோஷங்களை பொழுதுபோக்குகளை விடாமல் அனுபவித்து வருகிறார்கள்.

பனிப்பொழிவுகளை நான் பொதுவாக விரும்புவதில்லை. அதற்குக் காரணம் தினமும் பல மைல்கள் (நிஜமாகவே பல) காரோட்டி அலுவலகத்துக்குப் போய்வருகிற என் நேரத்தைப் பனிப்பொழிகள் பல மடங்கு அதிகரித்துவிடுகின்றன என்பது. மூன்று இஞ்ச்சுகளுக்கு மேல் பனிப் பொழிந்தால் வீட்டிலிருந்து வேலை செய்வேன். அதற்குக் குறைவென்றால் அலுவலகம் செல்லவே முயல்வேன். என் மேலாளர் உட்பட அலுவலக நண்பர்களும் அப்படியே செய்வர் என்பதால். ஆனால், சிறுதூறலோ பனிப்பொழிவோ என்றால் போக்குவரத்துத் தாமதமும் நெரிசலும் பைத்தியம் பிடிக்க வைத்துவிடும். விபத்துகளிலிருந்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய கட்டாயம் வேறு இன்னொரு புறம். சாதாரண நாட்களிலேயே நியூ ஜெர்ஸிதான் அமெரிக்காவிலேயே போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள மாநிலம். மழையோ பனிப்பொழிவோ என்றால் கேட்கவே வேண்டாம்.

விடுமுறை நாட்களில் பனிப் பொழிந்தால் வீட்டிலிருந்தபடி ரசிக்கப் பிடிக்கும். குழந்தைகளைப் பனிமனிதன் செய்யவும், பனியில் விளையாட விட்டும் வேடிக்கை பார்க்கப் பிடிக்கும். பின்னர், குளிருக்கென்று சூடாக வடை, பஜ்ஜி, சமோசா, மசாலா பொரி என்று ஏதேனும் செய்து சாப்பிட்ட பின்னர், தொலைகாட்சியில் ஏதேனும் விளையாட்டையோ சினிமாவையோ பார்க்கப் பிடிக்கும். கூடவே, ஒயினோ பியரோ இருந்துவிட்டால், வேறொன்றும் தேவையில்லை.

வாடகை வீட்டில் இருந்தபோது, பனிப்பொழிவு நின்றவுடன், வெளியே சென்று, பனியில் மூழ்கிப் போயிருக்கிற காரைச் சுத்தம் செய்து, மீட்க வேண்டிய வேலையும் இருக்கும். நானும் மனைவியும் சேர்ந்து இதைச் செய்வோம். குழந்தைகளைப் பனியில் விளையாடவோ தொலைகாட்சி பார்க்கவோ விட்டுவிட்டு. காரை இப்படி உடனடியாக சுத்தம் செய்யாவிட்டால், பனியுறைந்து ஐஸ் ஆகிவிட்டால், பின்னர் சுத்தம் செய்வது கடினம்.

இப்போது சொந்த வீட்டுக்கு வந்தாகிவிட்டது. கார்களை நிறுத்த கராஜ் இருக்கிறது. வழக்கம்போல பொருள்களைப் போட்டுவைக்கிற இடமாக அது ஆகிவிட்டது. ஒரு கார் உள்ளே நிற்க முடியும். இரண்டாவது கார் வெளியேதான் நிற்கிறது. இரண்டாவது காரின் இடத்தைத் தட்டுமுட்டு சாமான்கள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. பனிப்பொழிவுக்குப் பின் காரைச் சுத்தம் செய்கிற வேலை இங்கேயும் தொடரும் என்று நினைக்கிறேன். கராஜில் இருக்கிற பொருட்களை ஏறக்கட்டி இடம் உண்டாக்க சோம்பேறித்தனப்பட்டுக் கொண்டு, என் காரை வெளியே நிறுத்திக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன். பனிப்பொழியும் போது கராஜை ஏறக்கட்டிக் காரை உள்ளே நிறுத்தியிருக்கலாமோ என்று தோன்றப்போவது தவிர்க்க இயலாதது.

பனிப் பொழிந்தால் காரை மட்டும் சுத்தம் செய்கிற வேலை இல்லாமல், டிரைவ் வே, பேவ்மெண்ட் ஆகியவற்றையும் சுத்தம் செய்கிற (பனியை நீக்குகிற) வேலையும் புதுவீட்டில் சேர்ந்துவிட்டது. கடவுளின் கிருபையால் இதுவரை பனிப்பொழிவு ஒன்றும் இல்லை. ஒரு snow blower வாங்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், பக்கத்தில் வசிக்கிற நண்பர்கள் இவ்வளவு சிறிய டிரைவ் வேக்கு snow blower எதற்கு என்று இரண்டு வருடங்களாக இருக்கிறார்கள். அதனால், அவர்கள் வீட்டில் விழுகிற பனியை அவர்களே showel வைத்து சுத்தம் செய்ய முடியும்போது நம்மால் முடியாதா என்ற நம்பிக்கையில் இருக்கிறேன். இந்த அசட்டு நம்பிக்கைதான் பல நேரங்களில் என் பலமும் பலவீனமும்.

குளிர்காலத்தில் குளிரும் பனியும் மட்டும்தான் பிரச்னை. வசந்த கோடைகாலங்களில் வருகிற pollen allergey அல்லது seasonal allergy ஆகிய தொல்லைகள் இருக்காது. flu வரலாம். ஆனாலும், குளிர்காலம் எனக்கு அவ்வளவாகப் பிடிப்பதில்லை. பலருக்கும் பிடிப்பதில்லை என்றே நினைக்கிறேன்.

என் நண்பர்கள் பலர் டெக்ஸாஸ், கலிபோர்னியா, ப்ளோரிடா மாகாணங்களில் ஏறக்குறைய இந்தியாவின் தட்பவெப்பச் சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், நான் நியூ ஜெர்ஸியின் குளிர்காலத்தை விரும்பாமலேயே இங்கே 8 குளிர்காலங்களைச் சந்தித்து விட்டேன். பனிப்பொழிவுகளும் பனிப்புயல்களும் இங்கே வருகிற காலகட்டங்களில் தவறாமல் தொலைபேசியில் நண்பர்கள் அனுதாபம் விசாரிக்கிறார்கள். அவர்கள் இருக்கிற மாநிலத்துக்கு மாறி வந்துவிடச் சொல்கிறார்கள். ஆனால், தட்பவெப்பத்தின் சாதகத்துக்காகக் கூட நியூ ஜெர்ஸியை விட்டுப் போவதற்கு ஏனோ மனம் வரவில்லை. இங்கிருந்து போவதென்றால், பேசாமல் இந்தியா போய்விடலாம் என்று தோன்றும்.

நியூ ஜெர்ஸி அவ்வளவு பிடித்துப் போனதற்குக் காரணம் என்னவென்று தெரியவில்லை. மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு தொழில் பெயர்வதிலும் இடம் பெயர்வதிலும் எனக்கு இருக்கிற ஆர்வமின்மையும் சோம்பேறித்தனமும் நிச்சயமாக ஒரு காரணமாக இருக்கும் என்று சொல்லத் தேவையில்லை.

பி.கு.: தினம் ஒரு தமிழ்ச் சொல்லையும், இலக்கணக் குறிப்பையும் இரவு தருகிறேன்.

Monday, December 20, 2004

திண்ணை தொகுப்பு

திண்ணையில் சிறுகதைகள், கவிதைகள், அரசியலும் சமூகமும், அறிவியல் கட்டுரைகள் மேலும் இலக்கியக் கட்டுரைகள் என்று பல பிரிவுகளில் படைப்புகள் வெளியாகின்றன. (வாசகர் கடிதம் மற்றும் அறிவிப்புகளை நான் இங்கே கணக்கில் கொள்ளவில்லை.) மேற்கண்ட பிரிவுகளில் வந்திருக்கிற நல்ல படைப்புகளையெல்லாம் தொகுத்து ஒரு புத்தகமாகக் கொண்டுவர வேண்டும். ஒவ்வொரு பிரிவிலுமிருந்து குறைந்தபட்சம் 30 படைப்புகளைத் தேர்ந்தெடுத்தால் மொத்தம் 150 படைப்புகள் ஒரு நல்ல தொகுதியில் அடங்கும். சில பிரிவுகளில் 30 தேறவில்லையெனில், மீதமுள்ள எண்ணிக்கையை நிறைய தேறுகிற பிரிவொன்றுக்குக் கொடுத்துத் தேர்வு செய்யலாம். இல்லையெனில், ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு தொகுப்பு என்று ஆரம்பித்து, ஒவ்வொரு பிரிவிலும் 50 படைப்புகளைத் தேற்றப் பார்க்கலாம். அப்போது ஒரு புத்தகத்துக்குப் பதில் ஐந்து புத்தகங்கள் என்று ஆகிவிடும். திண்ணை கவிதைகள், திண்ணை சிறுகதைகள், திண்ணை இலக்கியக் கட்டுரைகள் இத்யாதி என்று.

இப்படி தொகுக்கப்படுகிற படைப்புகள், தொகுப்பவரின் ரசனையை ஒத்தே இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. படைப்புகளைத் தொகுப்பவர் தன் ரசனை சார்ந்து அவற்றைத் தேர்ந்தெடுத்தாலும், எல்லா வகையான படைப்புகளுக்கும் பிரதிநிதித்துவம் தர முயல்வார். இது உலக வழக்கு. ஒருவேளை இப்படித் தொகுக்கப்படுகிற படைப்புகளில் திருப்தியில்லாதவர்கள் தங்கள் ரசனைப்படி இன்னொரு தொகுதி கொண்டு வரலாம். நிறைய பேர் இப்படித் தொகுக்க தொகுக்க எல்லா ரசனைகளும் இடம் பெறும். மேலும், எல்லாத் தொகுப்புகளிலும் இடம் பெறுகிற பொதுப் படைப்புகளை அடையாளம் கண்டு கொள்ளவும் முடியும். எனவே, இப்படி திண்ணை தொகுப்பொன்றைக் கொண்டு வரவேண்டும் என்பது என் விருப்பம்.

இதைப் பற்றி திண்ணை ஆசிரியர் குழுவிடம் சொல்லிக் கொண்டே வருகிறேன். இப்படி திண்ணைத் தொகுப்பை யாரும் கொண்டுவருவதில் தங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்று சொன்ன அவர்கள், அத்தகைய முயற்சிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள இயலாதென்று தெரிவித்து விட்டனர். மேலும், அப்படிப்பட்ட தொகுப்பைக் கொண்டு வருபவர்கள் அத்தொகுப்பில் இடம்பெறும் படைப்புகளின் ஆசிரியர்களிடம் அனுமதி பெற்றுச் செய்ய வேண்டும் என்றும் சொல்லிவிட்டார்கள். என்னைப் போலவே, இன்னும் சிலரும் இத்தகைய தொகுப்பொன்றைக் கொண்டு வர வேண்டும் என்ற ஆலோசனையைச் சொன்னதாகவும் சொன்னார்கள்.

கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக மூன்று நாட்கள் நண்பர்களைச் சந்திக்கப் போகிறேன். பணி நிமித்தத்தால் மடிக்கணினியையும் உடன் எடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறையின் போதும், புத்தாண்டு விடுமுறையின் போதும் கிடைக்கிற நேரத்தை வைத்து என் ரசனையின் அடிப்படையிலான திண்ணை தொகுப்பைக் கொடுக்கலாம் என்று ஆசை. ஒவ்வொரு பிரிவிலும் நான் தேர்ந்தெடுக்கிற படைப்புகளின் பெயர்கள், ஆசிரியர், படைப்பின் சுட்டி ஆகியவற்றை என் வலைப்பதிவில் கொடுக்கலாம் என்று இருக்கிறேன். இந்த இரண்டு விடுமுறைகளின் போதும் இரண்டு பிரிவுகளையாவது தொகுக்க வேண்டும் என்று திட்டம். முதலில் இலக்கியக் கட்டுரைகள், பின்னர் கவிதைகள், பின்னர் அரசியலும் சமூகமும், பின்னர் சிறுகதைகள், கடைசியாக அறிவியல் கட்டுரைகள் (இதற்கு நான் பொருத்தமான ஆளா என்று தெரியவில்லை. ஆனாலும் முயற்சிக்கிறேன்) என்று வைத்துக் கொள்ள விருப்பம். ஆனால், நேரம் கருதியும் என் வசதி கருதியும் இந்த வரிசை மாறலாம்.

இத்தொகுப்பில் தொடர்களைச் சேர்ப்பதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். தொடர்களைச் சேர்க்காமல் இருப்பது நல்லதாக இருக்கும் என்று தோன்றுகிறது. தொடர்கள் தனியே பிரசுரம் காண அவை உதவும். உதாரணமாக, பாவண்ணன் எழுதிய அவருக்குப் பிடித்த சிறுகதைகள் தொடர் ஏற்கனவே நூல் வடிவம் பெற்றிருக்கிறது. ஆனாலும், என் ரசனையை கட்டி நிறுத்துகிற பகுதிகள் தொடரில் இருக்குமானால், அவ்வாரத்தை மட்டுமாவது கொடுக்க முயல்கிறேன்.

அதேபோல, பிற பத்திரிகைகளில் ஏற்கனவே பிரசுரம் கண்டு திண்ணையில் மறுபிரசுரம் ஆனவற்றைக் கணக்கில் கொள்வதா வேண்டாமா என்பது இன்னொரு கேள்வி. அத்தகையவற்றைக் கணக்கில் கொண்டாலும் தேர்ந்தெடுக்கும்போது அவற்றுக்கு முன்னுரிமை வழங்குவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன். உதாரணமாக, திண்ணையில் மட்டுமே பிரசுரமான படைப்பு ஒன்று, திண்ணையில் மறுபிரசுரம் ஆன படைப்பு ஒன்று இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற நிலை வரும்போது, திண்ணையில் மட்டுமே பிரசுரமான படைப்புக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இத்தொகுப்பை வலைப்பதிவில் பகிர்ந்து கொள்வதன் சௌகர்யம் - படைப்பின் பெயர், ஆசிரியர், படைப்புக்கான சுட்டி ஆகியன மட்டுமே கொடுக்கப் போவதால் - புத்தகம் போடும்போது தேவையாயிருக்கிற படைப்பாசிரியர்களின் அனுமதி - இதற்குத் தேவையில்லை.

திண்ணையில் தாங்கள் ரசித்த படைப்புகளை விருப்பமுள்ளவர்கள் எனக்குப் பொதுவிலோ தனிமடலிலோ சொன்னால், தொகுக்கும் பொருட்டு, அவற்றை ஊன்றிப் படிக்க எனக்கு உதவும். மேலும் - இத்தொகுப்பு குறித்த பிற கருத்துகளும் ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன.

இந்தத் தொகுப்பு முழுக்க முழுக்க என் வாசிப்பு, ரசனை சார்ந்தது. அதே நேரத்தில், பிறரின் கருத்துகளுக்கும், ரசனைகளுக்கும் இயன்றவரை மதிப்பளிக்க முயல்வேன். எல்லா எழுத்தாளர்களுக்கும் எல்லா வகையான எழுத்துகளுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கவும் முயல்வேன். ஆனாலும், இது எல்லாரையும் திருப்தி படுத்துமா என்று எனக்குத் தெரியாது. எனவே, இதில் திருப்தியில்லாதவர்கள் இதைக் குறை சொல்வதைவிட இதைவிட ஒரு நல்ல தொகுப்பை தங்கள் ரசனையின் அடிப்படையில் கொண்டு வருவது மேலான காரியமாக இருக்கும்.

டிசம்பர் 20, 2004 - திங்கள்

வார்த்தை: குமுகுமுத்தல். பொருள்: மணம் வீசுதல் (to spread fragrance, to send whiffs of odour). உதாரணம்: பசுமஞ்சள் குமுகுமுக்கிறது. குமுகுமுவென என்பது கமகமவென மருவியதா? கமகம-வென என்பது குமுகுமுவென மருவியதா என்று எனக்குத் தெரியவில்லை.

வல்லின ஒற்று மிகும் இடம்: வன்றொடர்க் குற்றியலுகரத்துக்குப் பின்னால் வல்லின ஒற்று மிகும். உதாரணம்: கணக்குக் கேட்டார். எழுத்துச் சிதைந்தது, பாக்குக் கடை, விழித்துப் பார்த்தார்.

எட்டுத் தொகை, பத்துப் பாட்டு ஆகிய சொற்களும் வன்றொடர்க் குற்றியலுகரங்களே. அந்தக் காரணத்தினாலும் அவற்றில் ஒற்று மிகுமென்று இப்போது அறிகிறோம் அல்லவா?

இதுவரை பார்த்த வல்லின ஒற்று மிகும் இடங்களை இங்கே தொகுப்போம்:

1. அ, இ என்னும் சுட்டெழுத்துகளுக்குப் பின்னாலும், எ என்ற வினாவெழுத்துக்குப் பின்னாலும் வல்லின ஒற்று மிகும்.

2. அந்த, இந்த, எந்த ஆகிய வார்த்தைகளுக்குப் பின்னால் வல்லின ஒற்று மிகும்.

3. அப்படி, இப்படி, எப்படி ஆகிய வார்த்தைகளுக்குப் பின்னால் வல்லின ஒற்று மிகும்.

4. அதற்கு, இதற்கு, எதற்கு ஆகிய வார்த்தைகளுக்குப் பின்னால் வல்லின ஒற்று மிகும்.

5. அங்கு, இங்கு, எங்கு, ஆங்கு, ஈங்கு, யாங்கு, ஆண்டு, ஈண்டு, யாண்டு என்னும் இடப்பெயர்களின் பின்னால் - அவை மென்றொடர்க் குற்றியலுகரங்களாக இருந்தாலும் - வல்லின ஒற்று மிகும்.

6. எட்டு, பத்து ஆகிய வார்த்தைகளுக்குப் பின்னால் வல்லின ஒற்று மிகும்.

7. வன்றொடர்க் குற்றியலுகரத்துக்குப் பின்னால் வல்லின ஒற்று மிகும்.

மேற்கண்ட ஏழு விதிகளும் எளிமையானவை. இவற்றில் நினைவில் வைத்துக் கொள்வதும் சுலபம் என்று நினைக்கிறேன்.

அடுத்து, வேற்றுமை உருபுகள் வரும்போது, ஒற்று மிகும் இடங்களைப் பார்க்கப் போகிறோம். அதற்கு முன்னர் வேற்றுமை உருபுகளைப் பற்றிச் சிறிது பார்த்துவிட்டுத் தொடர்வோம்.

Friday, December 17, 2004

என் பன்னிரண்டு

முன்குறிப்பு: பெரியாரைப் பற்றியும், இந்து மதம், பிற மதங்களைச் சிலர் பார்க்கிற பார்வை பற்றியுமான பரஸ்பர சாடல்கள் மரத்தடியில் களைகட்டிக் கொண்டிருக்கின்றன. என் பங்குக்குக் கீழே இருக்கிற மடலைப் போட்டேன். அதை இங்கும் பகிர்ந்து கொள்கிறேன்.

(சொரங்கு பிடித்த கை சும்மா இருக்காது என்று எங்கள் ஊர்ப் பக்கத்தில் சொல்வார்கள். அந்த மாதிரிதான் பேனா எடுத்த கையும். துறுதுறுவென்று நமைச்சல் எடுக்கிற கைகளை எவ்வளவு நேரம் கட்டிப் போடுவது? :-) அதனால், ஒரே ஒரு மடலாவது எழுதி வைப்போம் என்று ஆரம்பித்தேன்.

"என் பத்து" என்ற தலைப்பில் எழுத ஆரம்பித்து, பன்னிரண்டாகி விட்டது. இதில் இருக்கிற ஒவ்வொரு பாயிண்ட்டையும் விரிவாக விரித்து விவரமாக எழுதவும் முடியும். இன்னும் சில பாயிண்டுகளை விட்டிருக்கலாம். என் நோக்கம் எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து, எவரையும் போட்டுத் தாக்குவதில்லை. ஒன்றுமே சொல்லாமல் போவதைவிட, ஒன்றிரண்டு வரிகளில் என் சிந்தனையைத் தொகுக்கலாம் என்று ஆரம்பித்தேன். அதுவே இவ்வளவு பெரிதாகி விட்டது.

இந்த மடலுக்காக இந்துத்துவவாதிகள், பெரியார் ஆதரவாளர்கள், இடதுசாரி நண்பர்கள், முஸ்லீம் நண்பர்கள், மற்ற நண்பர்களால் பதில் மடல்களாலும் அல்லது நேரிடையான/மறைமுகமான விமர்சனங்களாலும் நான் பலமாகத் தாக்கப்படலாம். அவரவர் விரும்புவதை அவரவர் செய்வதை யார் தடுக்க முடியும்? ஆனாலும், என் கருத்துகள் இவை என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு வெட்கமில்லை. சுயேச்சையான கருத்துகள் இருந்தால் மட்டும் போதாது. அவை வலுவுள்ளவையாகவும் இருக்க வேண்டும். ஜெயகாந்தன் அப்படிப்பட்ட சுயேச்சையான, வலுவான கருத்துகளுக்கான உதாரணம். என் சுயேச்சையான கருத்துகளில் வலுவிருக்கிறதா இல்லையா என்பதைவிட நியாயமும், என் குறையைப் பார்ப்பதுபோல பிறர் குறையைப் பார்க்கிறேனா என்ற எண்ணமும் இருக்கின்றன என்று தெளிவாகச் சொல்ல முடியும்.

இந்த மடலுக்கு வரும் பதில்களுக்கு பதில் சொல்லவும், அவை குறித்தான விவாதங்களில் ஈடுபடவும் முடியாமல் போவதற்காக இந்த மடலை ஆதரிப்பவர்களும், விமர்சிப்பவர்களும் மன்னிக்கவும். இன்ஷா அல்லா?, இறைவன் எல்லாருக்கும் பெருந்தன்மையையும், நல்ல புத்தியையும் கொடுக்கட்டும். இதைப் படித்துவிட்டு, குழம்பிப் போகிறவர்களையும், கோபம் கொள்கிறவர்களையும் அதே இறைவன் காப்பாற்றட்டும்.

அன்புடன், பி.கே. சிவகுமார்.)

1. எல்லா மதங்களைப் பற்றிய விவாதமும் விமர்சனமும் தேவைதான். ஆனால், பாதி அல்லது அதற்கு மேற்பட்ட வாசகர்களுக்கு இருக்கிற கேள்வி (இவர்களில் மௌனமாக வாசிப்பவர்களும் அடக்கம்) நேச குமார், அரவிந்தன் நீலகண்டன், ஆசாரகீனன் போன்றோர் "வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தர்ம அடி போடு" என்கிற மாதிரி, இஸ்லாத்தை மட்டுமே குறிவைத்து விமர்சிப்பது ஏன் என்பதுதான். பாதி அல்லது அதற்கு மேற்பட்ட என்று எந்த அடிப்படையில் சொல்கிறாய், ஏதேனும் ஆய்வு செய்தாயா என்று கேட்காதீர்கள். இதை நம்ப விருப்பமில்லையென்றால், இந்தக் கேள்வி எனக்கும் என்னைப் போன்ற "அற்ப அறிவுஜீவமற்ற சில பதர்களுக்கும்" இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், இந்தக் கேள்வியை ஒருவர் கேட்டாலும் கோடானுகோடி கேட்டாலும், இந்தக் கேள்வியில் இருக்கிற நியாயத்தை யாரும் மறுத்துவிட முடியாது.

2. பெரியாரின் பிரச்னை சமூகத்தில் புரையோடிப் போயிருந்த புண்களுக்கும் ஜாதிக் கொடுமைகளுக்கும் காரணமாக பிராமணர்களை மட்டுமே குற்றம் சாட்டியது. அதனாலேயே பெரியாரின் நோக்கம் (ஜாதிகளை ஒழிப்பது, மூடநம்பிக்கைகளை ஒழிப்பது முதலியன) நல்லதாக இருந்தாலும், அவர் சொன்ன வழிமுறைகளும் தீர்வுகளும் என்னைப் போன்றவர்களுக்கு ஏற்புடையதாக இருந்ததில்லை. இந்தக் கருத்தை இன்றைக்குப் பிராமணர்களில் பலரும், இடதுசாரிகளில் பலரும்கூட சொல்கிறார்கள். ஏன் நேசகுமாருக்கும், ஆசாரகீனனுக்கும், அரவிந்தன் நீலகண்டனுக்கும் கூட இந்தக் கருத்து ஏற்புடையதாக இருக்கக் கூடும். இதே தர்க்கத்தை வைத்து - எல்லா மதங்களிலும் புண்களும் விமர்சிக்கப்பட வேண்டியவையும் இருக்கின்றன. ஆனால், நீங்கள் இஸ்லாத்தை மட்டுமே குறிவைத்துத் தாக்கிப் பெரியார் செய்த அதே தவறைச் செய்கிறீர்களே என்பதுதான் நேசகுமார்களுக்கு என் கேள்வி. பெரியாரை எந்தக் கருத்தின் அடிப்படையில் ஒதுக்குகிறேனோ, அதே கருத்தின் அடிப்படையில்தான் நேசகுமார்களையும் நான் ஒதுக்குகிறேன். அதுதான் கன்சிட்டன்ஸி மற்றும் நேர்மையான செயலாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

3. இந்துத்துவா சக்திகள் அடிக்கடி மேற்கோள் காட்டுகிற நபராக விவேகானந்தர் இருக்கிறார். (இதெல்லாம் விபத்துதான். இப்படி நேரவிட்டுவிட்டு வேடிக்கை பார்ப்பதில் நான் உட்பட மதச்சார்பின்மை பேசுகிற அனைவருக்கும் பங்குண்டு. இப்படியே போனால் ம?¡த்மா காந்தி உட்பட அனைவரும் இந்துத்துவாவை ஆதரித்தார்கள் என்ற ஒரு பிம்பம் இந்துத்துவவாதிகளால் கட்டமைக்கப்படலாம். இதற்குப் பின்னர் வருகிறேன்.) விவேகானந்தரை இந்தியாவின் துறவியாக நான் பார்க்கிறேன். இந்துத்துவ துறவியாகப் பார்க்கவில்லை. (சிறுவயதில் படித்தது. எனவே, நினைவிலிருந்து எழுதுகிறேன்.) பிராமணர்களை விமர்சிப்பதற்கு முன் அவர்களிடமிருக்கிற கற்றுக் கொள்ளத் தகுந்த, தேவையான விஷயங்களைக் கற்றுக் கொள்ளலாம் என்று விவேகானந்தர் சொன்னதாகப் படித்திருக்கிறேன். இந்த மேற்கோள் பிராமணர்களுக்கும், இந்துத்துவா சக்திகளுக்கும் பிடித்தமான மேற்கோளாக இருக்கும். இதே தர்க்கத்தை நேசகுமார்கள் ஏன் இஸ்லாத்துக்குப் பயன்படுத்துவதில்லை. இஸ்லாத்தை விமர்சிப்பதற்கு முன், இஸ்லாத்தில் இருக்கிற நல்ல விஷயங்களைக் கற்றுக் கொள்ளலாம். அவற்றைப் பற்றிப் பேசலாம். அதன்பிறகு இஸ்லாத்தை விமர்சித்தாலாவது அவர்களின் நோக்கம், நேர்மை குறித்து நம்ப முடியும்.

4. பிராமணர்களை விமர்சிப்பதன் மூலமும், பிராமணர்களை ஒழித்துக் கட்டுவதன் மூலமும் சமூக மாற்றம் வந்துவிடும் என்று பெரியார் நினைத்தது எவ்வளவு சரியில்லையோ, அவ்வளவு சரியில்லை, முஸ்லீம்களை விமர்சிப்பதன் மூலமும், பயங்கரவாதத்தை நம்புகிற இஸ்லாமியர்கள் சிலரை மேற்கோள்களில் காட்டிப் பேசுவதன் மூலமும், பயங்கரவாதத்தை ஒழித்துவிடலாம் என்பதும். பயங்கரவாதம் என்ற நோய் தான் பற்றிப் படர பல்வேறு வழிகளைக் கையாளும். சில நேரங்களில் அது மதம் என்ற பெயரில் வரும். சில நேரங்களில் அது விடுதலை என்ற பெயரில் வரும். சில நேரங்களில் அது மொழிப்பற்று, நாட்டுப் பற்று என்ற பெயர்களில் கூட வரும். அந்த மாதிரி நேரங்களில் பயங்கரவாதம் எந்தக் காரணத்தைப் பயன்படுத்துகிறதோ, அந்தக் காரணத்தைப் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து விடுவிப்பதுதான் பயங்கரவாதத்தைத் தோற்கடிக்கிற வியூகமாக இருக்க முடியும். ஆனால், இந்துத்துவா நண்பர்கள் அதற்கு மாறாக இஸ்லாம் என்றாலே பயங்கரவாதம் என்ற பிரசாரத்தை மிகவும் சாமர்த்தியமாகவும் புத்திசாலித்தனமாகவும் செய்து வருகிறார்கள். இது பயங்கரவாதத்தை முறியடிக்க உதவாது. மாறாக, பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கையுடையவர்களை இன்னமும் அந்நியப்படுத்தவே இது உதவும்.

5. இந்து மதத்தில் குறைகளும் உண்டு. நிறைகளும் உண்டு. ஆனால், இந்து மதம் இந்துத்துவவாதிகளுக்குச் சொந்தமானதல்ல. நாத்திகர்கள் கூட இந்துக்கள்தான். இந்து மதம், மதமே கூட இல்லை. அது வாழ்ககை முறை அல்லது ஒரு கலாசாரம். அதனால்தான், ஸாரே ஜ?¡ன் ஸே அச்சா (பாடல் வரிகள் தவறெனில் மன்னிக்கவும்) எழுதிய இஸ்லாமியக் கவிஞர் கூட அல்லாமா இக்பால் அந்தப் பாடலில் - "?¢ந்துஸ்தான் அமாரா" (மறுபடியும் வரியில் தவறெனில் மன்னிக்கவும்) எழுதியிருக்கிறார். எனவே, இந்தியாவில் வாழ்கிற எந்த முஸ்லீமுக்கும் கூட இது அவர்களுடைய இந்துஸ்தான் தான். இதை நீ சொல்லலாம், இக்பால் போன்ற சிலர் சொல்லலாம். எல்லா முஸ்லீம்களும் சொல்கிறார்களா என்று இந்துத்துவவாதிகள் கேள்வி எழுப்பலாம். எப்படி பாரதிக்குப் பின் வந்தவர்கள் அனைவரும் - அவர்கள் பாரதியை ஏற்றுக் கொண்டாலும் இல்லையென்றாலும் - பாரதியின் வாரிசுகள் தான் என்கிறோமோ, அப்படித்தான் இதையும் பார்க்க வேண்டும். மேலும் தேசப்பற்று, மதச் சார்பின்மை, பெருந்தன்மை போன்றவற்றுக்கு வியாக்கியானங்கள் ஆளுக்கு ஆள் மாறுபடும். எனவே, இந்துத்துவ சக்திகளின் வியாக்கியானப்படி முஸ்லீம்களை அளப்பதில் எனக்கு உடன்பாடில்லை. மாறாக, பிறரிடமிருந்து முஸ்லீம்களை விமர்சித்து எழுகிற விமர்சனங்களை நான் மதிக்கிறேன், படிக்கிறேன். யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்தான். ஆனால், விமர்சிப்பவர் எத்தகைய அளவுகோல்களை எல்லாருக்கும் பயன்படுத்துகிறார் என்பதை வைத்தே விமர்சகரைப் பற்றிய மதிப்பீடு எனக்கு உருவாகிறது.

6. நாகூர் ரூமியை எடுத்துக் கொள்வோம். சூபியிஸத்தில் அவருக்கு நம்பிக்கை இருந்தது/இருக்கிறது என்று அறிகிறேன். அவர் பெண்களைப் பற்றியும், பிற விஷயங்களைப் பற்றியும் முன்வைக்கிற கருத்துகள் பிற்போக்கானவை. அவற்றை நான் ஆதரிக்கவில்லை. கண்டிக்கிறேன். ஆனால், இணையத்தில் எழுதுகிற நாகூர் ரூமி போன்றவர்கள் இஸ்லாத்தின் பேரால் நடக்கிற குற்றங்களைக் கண்டிக்கிறார்கள். நாகூர் ரூமி போன்றவர்களை, தன் மதத்தில் நம்பிக்கையுடைய மிதவாதிகள் எனலாம். அப்படிப்பட்டவர்களின் நம்பிக்கையைப் பெற்று, அவர்களுடன் ஓர் ஆரோக்கியமான விவாதத்தை நடத்துவதன் மூலம், அவர்கள் மதம் குறித்த விமர்சனங்களை அவர்களை உணரச் செய்யலாம். அல்லது, முஸ்லீம் மதம் குறித்த ஒரு விவாதத்தை முஸ்லீம்களிடையேகூட தொடங்க உதவலாம். ஆனால், பெரியார் எப்படி எல்லா பிராமணர்களும் மோசம் என்ற ரீதியில் எல்லாரையும் போட்டுத் தாக்கினாரோ, அப்படி, நாகூர் ரூமி போன்றவர்கள் ஏதேனும் கருத்துச் சொன்னாலே, அவரை வ?¡பிஸ்டு என்றும் தீவிரவாதி என்றும் சித்தரிக்கவே முயற்சிகள் நடைபெறுகின்றன. எந்தச் சமூகத்தையும் அல்லது இனக்குழுவையும் சீர்படுத்த முயல்கிற எவரும் முதலில் அந்தச் சமூகத்தின், இனக்குழுவின் நம்பிக்கையைச் சம்பாதிக்க வேண்டும். இஸ்லாமைப் பற்றி விமர்சனங்கள் வைக்கிற நேசகுமார்களும் அந்த நம்பிக்கையைச் சம்பாதிக்க முயலவில்லை. பிராமணர்களை மட்டுமே பெரிதும் விமர்சித்த பெரியாரும் முயலவில்லை. இது தவறான வழிமுறை. இந்துத்துவ சக்திகள் முஸ்லீம்களைப் பற்றிய வெறுப்பைப் பரப்புவதன் மூலம் அவர்களை ஆக்கபூர்வமாக விமர்சிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டால், அது பம்மாத்து தவிர வேறில்லை.

குரானிலிருந்து மேற்கோள்கள் காட்டி இஸ்லாம் மோசமென்று நிரூபிக்க நண்பர்கள் முயல்கின்றனர். இந்து மதத்திலிருந்து மேற்கோள்கள் காட்டி இந்து மதம் மோசமானது என்று நிரூபிப்பது அதைவிடச் சுலபம். எந்த ஒரு கருத்தையும், அது வெளிவந்த காலம், அப்போதைய வாழ்க்கைமுறை, சூழல் ஆகியவற்றைக் கொண்டே மதிப்பிட வேண்டும். அப்படி மதிப்பிட்ட பின்னரே கொள்ள வேண்டியதைக் கொண்டு தள்ள வேண்டியதைத் தள்ள வேண்டும். பெண்கள் ஜாக்கெட் போட ஆரம்பித்துவிட்டதால்தான் துணி விலை உயர்ந்து விட்டது என்று பெரியார் ஒருமுறை சொன்னாராம். இந்தக் கருத்தை அதன் பொருள் அளவில் ஒதுக்கிவிடுவது மேம்போக்கான புத்திக்குக் கூட சுலபமானது. ஆனால், பெரியார் எந்தச் சூழ்நிலையில், எதற்காக அப்படிச் சொன்னார் என்று அறிந்த பிறகு, அந்தச் சூழ்நிலையிலும் அப்படிச் சொல்வது சரியில்லை என்று உணர்ந்தபின்னே இக்கருத்தை நான் தூக்கி எறிவேன். இந்து மதத்தை விமர்சித்த பெரியாரும், இஸ்லாமை விமர்சிக்கிற இந்துத்துவவாதிகளும் இப்படிப்பட்ட ஆக்கபூர்வமான விமர்சனம்தான் செய்தார்களா, செய்கிறார்களா என்பதை அவரவர் முடிவுக்கு விட்டு விடுகிறேன். மனு சாஸ்திரத்தில் மோசமான விஷயங்கள் இருக்கின்றன என்றால், எல்லா இந்துக்களும் அதைப் பயன்படுத்துகிறார்கள், அவர்கள் அதனால் மோசமானவர்கள் என்று ஆகிவிடாது. வேதத்திலும் மோசமான விஷயங்கள் உள்ளன. அதை மீறி அவற்றின் நல்ல விஷயங்களூக்காக வேதத்தை நாம் கொண்டாடுகிறோம். வேதத்தைத் திருத்தி எழுது என்று எந்த இந்துத்துவவாதியும் சொன்னதாகத் தெரியவில்லை. ஆனால், இவர்களுக்காக முதலில் குரானை திருத்திவிட வேண்டுமாம். குரானில் இருக்கிற பிற நல்ல விஷயங்களுக்காகக் குரானைக் கொண்டாடுதல் தவறாம். நல்ல நியாயம்தான்.

7. சமூகத்தில் வாழ்கிற மக்களிடையே விதவிதமான கருத்துகள் இருக்கலாம். விதவிதமான நம்பிக்கைகள் இருக்கலாம். விதவிதமான மூடநம்பிக்கைகளும் இருக்கலாம். விதவிதமான கருத்து வேறுபாடுகளும் இருக்கலாம். ஆனால், எந்தக் கருத்து வேறுபாட்டையும் முன்வைக்கிற அல்லது விவாதிக்கிற எந்த முயற்சியும் சமூக நல்லிணக்கத்தைக் கெடுப்பதாகவோ, ஒரு குறிப்பிட்ட சாராரை மட்டுமே குறிவைத்துத் தாக்குவதாகவோ இருக்கக் கூடாது. அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட இப்படிப்பட்ட காரியம் நடந்தால் அதைப் Profiling என்று சொல்லி மனித உரிமை அமைப்புகள் போராடுகின்றன. ஆனால், இந்தியாவிலும் இணையத்திலும்தான் இப்படி ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கையுடையோரின் மதத்தில் நடக்கிற குறைபாடுகளை மட்டும் பூதக் கண்ணாடி வைத்துப் பார்த்துத் தாக்குகிற காரியத்தையே முழுநேர அரசியலாகவும், தொழிலாகவும் செய்பவர்கள் இருக்கிறார்கள். கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் திண்ணை போன்ற இதழ்களும் இவற்றுக்கு இடம் கொடுத்து வருகின்றன. கருத்துச் சுதந்திரத்தை ஒருவர் இப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்று முடிவு செய்துவிட்டால், பத்திரிகைகளும் இணையக் குழுக்களும் வேறு என்னதான் செய்யும் பாவம்! இலக்கியத்தின், பத்திரிகை நடத்துவதின், இணையக்குழு நடத்துவதின், வாழ்க்கையின் நோக்கம் harmonization ஆக இருக்க வேண்டும். ஆனால், விமர்சனம் என்ற பெயரிலும் நகைச்சுவை என்ற பெயரிலும் இடதுசாரிகளையும் பிற மதத்தினரையும் முகமூடிகளுக்குள் புகுந்து கொண்டு தாக்குகிற வீரர்களை அனுமதிப்பது எந்தவகையான பத்திரிகை தர்மமும் இல்லை. உதாரணமாக, திண்ணையில் சில மாதங்களூக்கு முன் இஸ்லாமியப் பெயரில் ஒருவர் இஸ்லாமை ஆதரித்து, அபத்தமான கருத்துகளை வைத்திருந்தார். இஸ்லாமின் பெயரைக் கெடுக்க விரும்புகிற இந்துத்துவவாதி ஒருவரே இஸ்லாமியரின் பெயரில் அக்கடித்தத்தை ஏன் எழுதியிருக்க முடியாது? இத்தகைய சந்தேகங்களைக் களைய இணைய பத்திரிகைகளூம், இணையக் குழுக்களூம் முயற்சி எடுக்க வேண்டும். அதற்கு ஒரே வழி, சென்சிடிவான தலைப்புகள் சார்ந்த விவாதத்தில் எழுத விரும்புவோர், தங்களைப் பற்றிய முழுவிவரங்களைப் பொதுவில் சொல்ல விருப்பமில்லை என்றாலும், அவர்கள் எழுதுகிற பத்திரிகை ஆசிரியருக்கோ இணையக் குழுக்களின் மட்டுறுத்துனர்களுக்கோ மட்டுமாவது சொல்ல வேண்டும் என்ற முறையைப் பின்பற்றலாம்.

8. பெரியார் போன்றவர்கள் எப்படி இந்து மதத்தில் இருந்த நல்லவற்றைக் கூட ஏறெடுத்துப் பார்க்க விரும்பாமல் அதைத் தூக்கி எறிய விரும்பினார்களோ, இந்து மதத்தின் மீது வெறுப்பைப் பரப்பினார்களோ, அப்படி நேசகுமார் போன்றவர்கள் இஸ்லாத்தில் இருக்கிற நல்லவற்றைப் பார்க்காமல் (நல்லவை என்று ஒருசில கூட இல்லாமல் ஒரு மதம் இவ்வளவு நாள் தாக்குப் பிடிக்க முடியாது. இவ்வளவு மக்களால் மனமுவந்து பின்பற்றுவதாக இருக்க முடியாது என்று நான் நம்புகிறேன்.) இஸ்லாத்தின் குறைகளை விமர்சிக்கிறேன் என்ற போர்வையில் இஸ்லாத்தின் மீது வெறுப்பைப் பரப்புகிறார்கள். பெரியாரின் இயக்கம் அறிவியக்கம் இல்லை. நேசகுமார் போன்றவர்கள் தங்கள் வாதத்தை அறிவுபூர்வமானதாகக் காட்டிக் கொள்ள முயல்கிறார்கள். ஆனால், அவர்கள் தங்கள் அறிவு, வாதத்திறன், பொறுமை, விழுமியம், அனைத்தையும் ஒரு மதத்துக்கு எதிரான கருத்துகளைப் பரப்புவதிலேயே காட்டுகிறார்கள். எனவே, இன்றைய இடதுசாரிகளுக்கு பெரியாரியத்தைப் பின்பற்றுபவர்களை எதிர்ப்பதைவிட முக்கியமான கடமை இந்துத்துவவாதிகளை எதிர்ப்பதில் இருக்கிறது. இந்துத்துவத்தைப் பெரியாரைக் கொண்டு எதிர்க்க வேண்டியதில்லை. இந்துத்துவத்தை இந்து மதத்தைக் கொண்டே எதிர்க்க முடியும். அதை இடதுசாரிகள் செய்ய வேண்டும். நாராயண குரு, விவேகானந்தர், மற்றும் இந்து மதத்தில் இருக்கிற நல்ல விஷயங்கள், ஞானிகள் துணை கொண்டே இந்து மதத்தை இடதுசாரிகள் மீட்டெடுக்க வேண்டும். உதாரணமாக, ஆரம்பத்தில் பார்ப்பனர் என்ற ஒரே காரணத்துக்காக ம?¡கவி பாரதியைத் திராவிட இயக்கங்கள் கண்டு கொள்ளவில்லை. இன்றைக்கு திராவிட இயக்கத்தினர் மட்டுமல்ல, பாரதியைப் பிடிக்காதவர்கள் கூட அவரைக் கொண்டாடுகிற ஒரு சூழல் ஏற்பட்டிருக்கிறதென்றால், அதற்கு இடதுசாரிகளின் பங்கு மிகவும் பெரியது. எப்படி பாரதியை இடதுசாரிகள் மீட்டெடுத்தார்களோ அப்படி இந்து மதத்தையும் இந்துத்துவா சக்திகளிலிருந்து மீட்டெடுக்கிற கடமை இடதுசாரிகளுக்கு இருக்கிறது.

9. நேசகுமார் ஆரம்பிக்கும்போது மிகவும் பொறுமையாக இஸ்லாத்தின் மீது கரிசனம் காட்டுபவராக ஆரம்பித்தார். இன்றும் சொல்கிறேன். எல்லா மதங்களும் விவாதிக்கவும் விமர்சிக்கவும் படத்தக்கவையே. அதனாலேயே, புனைபெயரில் ஒளிந்து கொண்டு நேசகுமார் எழுதினாலும், அவர் கருத்துகள்தான் முக்கியமென்று மரத்தடியில் அவர் எழுத வேண்டுமென்று நான் விரும்பினேன். ஆனால், போகப் போக பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என்பதுபோல, லலைப்பதிவில் அவர் கூட்டணி வைத்திருக்கிற சில பெயர்களைப் பார்க்கும்போது அவர் நோக்கத்தையும், அவர் செய்ய விரும்புகிற அரசியலையும் சந்தேகிக்கவே வேண்டியிருக்கிறது. இஸ்லாத்தில் இருக்கிற - முக்கியமாக மதச்சார்புடைய இஸ்லாம் நாடுகளில் இருக்கிற பிற்போக்கு மற்றும் கண்டிக்கத்தக்க நடவடிக்கைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிற நண்பர்கள், மதச்சார்பற்ற நாடான இந்தியாவில் அரசியலும் ஆட்சியும் புரிந்த/புரிகிற இந்துத்துவா சக்திகளின் பிற்போக்கு மற்றும் கண்டிக்கத்தக்க மதம் சார்பான நடவடிக்கைகளைப் பற்றி எப்போது எழுதப் போகிறார்கள். ஜெயேந்திரர் என்ற இந்துத்துவத் துறவி கைதானதற்கு வாயைத் திறக்காத அல்லது அவர் பழிவாங்கப்படுகிறார் என்று புலம்புகிற அல்லது அவருக்கு சந்தேகத்தின் பலனை அளிக்க விரும்புகிற நண்பர்கள், ஜெயேந்திரருக்குப் பதில் அத்தகைய கொலை குற்றச்சாட்டொன்றில் முஸ்லீம் மதத் தலைவரோ, கிறித்துவ மதத் தலைவரோ சம்பந்தப்பட்டிருந்தால், எத்தனைக் கட்டுரைகள் எழுதிக் கொண்டாடியிருப்பார்கள் என்பது தெரிந்ததுதானே. ( இன்னொரு பக்கம், ஜெயேந்திரர் இந்து மதத்தின் பிரதிநிதி என்றும் பிராமணர்களின் பிரதிநிதி என்றும் நினைத்துக் கொண்டு, ஜெயேந்திரரைத் தாக்குவது இந்து மதத்தைத் தாக்குவது என்று நினைத்துப் பெரியாரின் சீடர்கள் புளகாங்கிதமடைந்து கொண்டிருக்கிறார்கள். முதலில், ஜெயேந்திரரை இந்து மதத்தின் பிரதிநிதி என்றெல்லாம் பெரியாரின் சீடர்கள் போல் அழைத்து அவருக்கு முக்கியத்துவம் தர நான் விரும்பவில்லை. ஜெயேந்திரன் இந்து மதத்தின் பிரதிநிதி என்று வைத்துக் கொண்டாலும், ஒரு இந்து செய்கிற தவறு எப்படி இந்து மதத்தின் தவறாக முடியும். கம்யூனிஸ்டு தவறு செய்தால் அது கம்யூனிசத்தின் தவறு இல்லை என்பதைப் போலத்தானே இதையும் பார்க்க வேண்டும்! கருணாநிதியும் அண்ணாதுரையும் செய்த தவறுகளுக்கெல்லாம் பெரியார் பொறுப்பாகிவிட முடியுமா என்ன? இது வேறு விஷயம். அதனால் இதற்குள் இங்கு அதிகம் நுழைய விரும்பவில்லை. இந்த அடிப்படையில் பார்த்தோமானால், இஸ்லாமின் பெயரைச் சொல்லி நடைபெறுகிற பயங்கரவாத காரணங்களுக்குக்கூட இஸ்லாமைக் காரணம் சொல்ல முடியாது என்றும் புரிந்து கொள்ளலாம்.)

10. சூர்யாவின் எழுத்தை நான் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் படிப்பதுண்டு. இலக்கியம் குறித்த அவர் கருத்துகளை நான் மதித்து வாசிக்கிறேன். உடன்படுகிறேனா இல்லையா என்றெல்லாம் பார்ப்பதில்லை. என் கருத்தில் மாறுபடுபவர்களைப் படிப்பது கூட என்னைக் கூர்மையாக்கிக் கொள்ள எனக்கு உதவும். அதனால், முடிந்தவரை எனக்கு ஆர்வம் உண்டாக்குகிற பொருள் தொடர்பான எல்லா எழுத்துகளையும் படிக்க முயல்கிறேன். ஆனால், இந்தியாவில் முஸ்லீம்கள் main stream-ல் கலப்பதில்லை. தனித்தனி குழுவாகவே இருக்கிறார்கள் என்று முஸ்லீம்கள் மீது கரிசனம் பொங்க சூர்யா திண்ணையில் ஒருமுறை எழுதியிருந்தார். இந்தியா சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து இன்றுவரை நடைபெற்று வருகிற முஸ்லீம்களூக்கு எதிரான கலவரங்களையும், கோஷங்களையும் பார்க்கும்போது அவர்கள் குழுவாக இருப்பதில் என்ன தவறு? அவர்கள் main stream-ல் கலப்பதில்லை என்றால் அது அவர்களின் தவறு மட்டுமே தானா? சொல்லப் போனால், இப்படிக் குழுவாக இருப்பது முஸ்லீம்களின் குணாதிசயம் அல்ல. அது எல்லா மைனாரிட்டி மக்களின் குணாதிசயம்தான். அமெரிக்கா பொன்ற வெளிநாடுகளில் இதை நான் இந்தியர்களிடமே பார்க்கிறென். நியூ யார்க், நியூ ஜெர்ஸி உள்ளிட்ட வடகிழக்கு மாகாணங்கள், கலிபோர்னியா, டெக்ஸாஸ் என்று இந்தியர்கள் அதிகமாக இருக்கிற மாநிலங்களில் இந்தியர்கள் - இங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள் கூட - இந்தியர்கள் அதிகம் வசிக்கிற இடங்களிலேயே வசிக்க விரும்புகிறார்கள். கறுப்பின மக்கள் அவர் இனத்தவர் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும், சீனர்கள் சீனா டவுன் எனப்படும் பகுதிகளிலும் வசிப்பதைச் சொல்ல முடியும். Main Stream-ல் கலப்பதில்லை என்ற குற்றச்சாட்டை இவர்கள் மீதும் வீச முடியும். தாங்கள் மைனாரிட்டியாக இருக்கிற ஒரு சூழலில், பாதுகாப்பாகவும், சுமூகமாகவும் உணர எல்லா மைனாரிட்டிகளும் செய்வதுதான் இது. இதையெல்லாம் வைத்து முஸ்லீம்கள் மீது குற்றம் சாட்டுவது சரியில்லை. அமெரிக்காவில் இருந்து எழுதுகிற எத்தனை இந்துத்துவா நண்பர்கள், main stream-ல் கலக்கிற சமூக நோக்கத்துடன், இந்தியர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் வசிக்காமல், வெள்ளையர்கள், கறுப்பர்கள், சீனர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் வசிக்கிறார்கள்? அமெரிக்க இந்துக்களுக்கு ஒரு நியாயம், இந்திய முஸ்லீம்களுக்கு ஒரு நியாயமா? அரசாங்கத்தின் மறைமுக ஆதரவில் மதக் கலவரங்கள் நிகழாத அமெரிக்காவிலேயே, மைனாரிட்டிகள் தனியாகவும், குழுவாகவும், தம்மினத்தவர் வாழும் பகுதிகளிலும் வசிக்க விரும்புகிறபோது, குஜராத் போன்ற மாநிலங்களில் அரசாங்கத்தின் மறைமுக ஆதரவுடன் மதக் கலவரங்கள் நடந்த வரலாறு இருக்கிற இந்தியாவில், அப்படி இருப்பதில் என்ன தவறு?

11. இந்துத்துவ சக்திகளை எதிர்க்க இன்னொரு பெரியார் தேவை என்பது சரியில்லை. இந்துத்துவ சக்திகளும், பெரியாரும், அவர்கள் ஆதரவாளர்களூம் அடிப்படையில் ஒரே தவறைச் செய்பவர்கள்தான். தங்கள் கொள்கை என்று நம்புகிற ஒன்றைத் தூக்கிப் பிடிக்க இன்னொன்றின் மீது வெறுப்பைப் பரப்புவது. ஒன்றைப் பழிப்பது மட்டுமே விமர்சனம் இல்லை. ஒன்றைப் பழிப்பதே புரட்சி என்ற சித்தாந்தத்தைப் பெரியார் தமிழ்நாட்டில் தொடங்கி வைத்தார். அதை இப்போது தேசிய அளவில், பிற மதங்களைப் பழிப்பதே பயங்கரவாத எதிர்ப்பு, கருத்துச் சுதந்திரம் என்ற பெயர்களில் இந்துத்துவவாதிகள் செய்கிறார்கள். பெரியாரிடம் திட்டவட்டமான கொள்கை, கொள்கைகளை அடைய வழி என்று எதுவும் இல்லை. பெரியாரின் கருத்துகள் - உரிக்க உரிக்க ஒன்றுமில்லாமல் அவர் அடிக்கடிப் பயன்படுத்திய சொல்லான - வெங்காயமாகப் போய்விடக் கூடியவைதான். ஆனால், இந்துத்துவம் அப்படியில்லை. அவர்களுக்கு ஒரு நோக்கம் இருக்கிறது. அந்த நோக்கம், இந்தியாவை ஓர் இந்து நாடாக ஆக்குவது. அதற்கான விரிவான செயல்திட்டமும் வரைமுறையும் அவர்களிடம் இருக்கிறது. எதைப் பயன்படுத்தி வேண்டுமானாலும் அவர்கள் தங்கள் கருத்தை நிரூபிக்கவே முயல்வார்கள். அந்தக் காரணத்தினாலேயே, இந்துத்துவ சக்திகள், தாரிக் அலி போன்ற இடதுசாரிகளைக் கூடப் பயன்படுத்திக் கொள்ளத் தயங்குவதில்லை. ஒரு பக்கம் இடதுசாரிகளை தரம் தாழ்ந்த வகையில் திட்டிக் கொண்டே, இன்னொரு பக்கம், இப்போது தாரிக் அலியைப் பயன்படுத்திக் கொள்கிறேன். நாளைக்கு வேறொருவரை வைத்துத் தேவைப்பட்டால் தாரிக் அலியையும் அடிப்பேன் என்று வெட்கமின்றிச் சொல்லிக் கொள்கிற அரசியலை அவர்கள் செய்ய முயல்கிறார்கள் என்றால், அவர்களுக்கு இஸ்லாம் என்கிற மதத்தின் மீது எத்தகைய வெறுப்பு இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். தகவல் யுகத்தில், எந்தத் தகவலையும் செய்தியையும் தனக்கேற்ற விதத்தில் திரிக்கிற, பயன்படுத்திக் கொள்கிற உத்தி அது. அதைத் தடுக்க இடதுசாரிகளால் முடியும். அதை இந்துத்துவவாதிகள் அறிந்திருக்கிற காரணத்தினாலேயே, இடதுசாரிகளையும் வெகுவாக எதிர்க்கிறார்கள். ஏனென்றால், இந்துத்துவவாதிகள் தலையெடுப்பதற்கு முன் காலம் காலமாகவே அறிவுஜீவிகள் என்று அறியப்பட்டு வருபவர்கள் இடதுசாரி சிந்தனையாளர்கள். இந்துத்துவவாதிகள் அறிவுபூர்வமான வாதம் என்ற பெயரில் பரப்பி வரும் விஷமங்களுக்கு, இடதுசாரிகள் உண்மையாகவே அறிவுபூர்வமான பதிலைத் தரமுடியும். ஆனால், அவர்கள் அந்தப் பதிலுக்குப் பெரியாரைத் துணைக்கழைக்கிற அந்தக் கணத்தில் வீரியமிழந்து போகிறார்கள். எனவே, இந்தியாவை இந்துத்துவவாதம் என்கிற பேராபத்திலிருந்தும், பெரியார் என்கிற வெங்காயத்திலிருந்தும் காப்பாற்ற வேண்டிய கடமை இடதுசாரிகளுக்கு இருக்கிறது. தமிழ்ச் சூழலில் இடதுசாரிகள் இன்னும் முனைப்பாக - இணையம் போன்ற ஊடகங்களில் - இதைச் செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து செய்கிற அளவுக்கான அறிவுத் திறனோ, புத்தகங்களோ, நேரமோ, பிற resources-ஓ என்னிடம் இல்லை என்பதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்.

12. பிராமணர்கள் மீது பெரியார் வைத்த விமர்சனங்கள் சமூகத்துக்கு உதவியதோ இல்லையோ பிராமணர்களுக்கு ஓரளவு உதவியது என்று சொல்லலாம். பிராமணர்களின் குறைபாடுகள் என்று பெரியார் பட்டியலிட்டவை தம்மிடம் இருந்தால் அவற்றைப் பெரும்பாலான பிராமணர்கள் களையவோ குறைத்துக் கொள்ளவோ முயன்றார்கள். உதாரணமாகப் பெண் விடுதலையைப் பற்றி எடுத்துக் கொள்வோம். பெரியாரிடம் ஆழ்ந்த நம்பிக்கை வைத்திருக்கிற பிராமணரல்லாத என் நண்பர் ஒருமுறை சொன்னார்: "தற்காலத்தில் பிராமணர்கள் தங்கள் மனைவிமார்களுக்கு எந்த அளவுக்குச் சுதந்திரம் தருகிறார்களோ அந்த அளவுக்குப் பிற ஜாதியினர் தங்கள் மனைவிகளுக்குச் சுதந்திரம் தந்தால் பெண் விடுதலை வந்துவிடும்." மேலும், தங்கள் குறைகளைக் களைய விரும்பாத பிராமணர்கள் கூட, அக்குறைகளைத் தனிவாழ்வில் வைத்துக் கொண்டு, பொதுவாழ்வில் அவை தெரியாத வண்ணம் பார்த்துக் கொண்டனர். அமெரிக்காவில், நிறவெறியில் நம்பிக்கையுள்ளவர்கள் கூட அது ஒரு குற்றம் என்று ஆகிவிட்ட சூழ்நிலையில் பொதுவாழ்வில் அவற்றைப் பின்பற்றாமல் பார்த்துக் கொள்வதுபோல. ஆனால், பெரியாரின் கருத்துகளைக் கேட்டப் பிற ஜாதியினர், அவர் பிராமணர்களைத்தான் திட்டுகிறார், நம்மையல்ல என்று எடுத்துக் கொண்டார்கள். அதன் விளைவு, இன்றும் இரட்டை டம்ளர் முறையும், பாப்பாப் பட்டியும், கீரிப்பட்டியும் இன்னபிற பிற ஜாதியினர் செய்கிற ஜாதிக் கொடுமைகளும். பிராமணர்கள் பெரியாரைப் பயன்படுத்திக் கொண்டு பெரியாரைத் தோற்கடித்த இம்மாதிரி, முஸ்லீம் நண்பர்களும் இந்துத்துவ சக்திகள் முன்வைக்கிற விமர்சனங்களில் இருக்கிற வெறுப்பை ஒதுக்கிவிட்டு, தங்களை சுயதரிசனம் செய்து கொண்டால், தங்கள் குறையென்று தாங்களாகவே உணர்வதைத் திருத்திக் கொண்டால், இந்துத்துவ சக்திகளை வைத்தே அவர்களைத் தோற்கடித்த பெருமை முஸ்லீம் நண்பர்களுக்கும் கிட்டும்.

வணக்கத்துடனும், ஒரு காலைப் பொழுதை இதை எழுதுவதில் செலவளித்தது சரிதானா என்ற விசனத்துடனும்,
பி.கே. சிவகுமார்

Thursday, December 16, 2004

டிசம்பர் 17, 2004 - வெள்ளி

இன்றைய வார்த்தை: காலாறுதல். பொருள்: 1. நடை ஓய்ந்திருத்தல் (to rest from walking), 2. காலில் ரத்த ஓட்டம் உண்டாக உலாவுதல் (to walk about for overcoming numbness of feet). உதாரணம்: ஓடிக் களைத்த அவன் காலாற சற்று நின்றான். சாப்பிட்ட பின் சற்று காலாற நடப்பது நல்லது.

வல்லின ஒற்று மிகும் இடம்: எட்டு, பத்து ஆகிய வார்த்தைகளின் பின்னால் வல்லின ஒற்று மிகும். இந்த வார்த்தைகளின் பின்னால் வல்லின ஒற்று வேறொரு விதியின் அடிப்படையிலும் மிகும். அதை அடுத்தமுறை பார்ப்போம்.

உதாரணம்: எட்டுத் தொகை, பத்துப் பாட்டு

பின் குறிப்பு: சனி, ஞாயிறு ஆகிய வார விடுமுறை நாள்களில் இந்தப் பகுதிக்கும் ஓய்வு கொடுக்கலாம் என்று எண்ணியிருக்கிறேன். திங்கள் முதல் வெள்ளி வரை வாரத்துக்கு ஐந்து நாட்கள் இப்பகுதி தொடர்ந்து இடம்பெறும்.

Wednesday, December 15, 2004

டிசம்பர் 16, 2004 - வியாழன்

இன்றைய வார்த்தை: காந்தல். பொருள்: 1. காந்துகை (Burning), 2. உமி, ஓலை ஆகியவற்றின் எரிந்த கருகல் (burning flakes of straw, palm leaves, paper, chaff etc), 3. காய்ந்த பயிர் (Growing crop scorched by the sun), 4. சினம் (Anger). உதாரணம்: சமைக்கும்போது அடிபிடித்துத் தீய்ந்துபோன உணவைக் காந்தல் என்றும் அழைப்பர்.

வல்லின ஒற்று மிகும் இடம்: அதற்கு, இதற்கு, எதற்கு ஆகிய வார்த்தைகளுக்குப் பின்னால் வல்லின ஒற்று மிகும்.

உதாரணம்: அதற்குக் கொடுத்தான், இதற்குக் கொடுத்தான், எதற்குக் கொடுத்தான், அதற்குச் செய்தான், இதற்குச் செய்தான், எதற்குச் செய்தான், அதற்குத் தரவேண்டும், இதற்குத் தரவேண்டும், எதற்குத் தரவேண்டும், அதற்குப் படி, இதற்குப் படி, எதற்குப் படி.

Tuesday, December 14, 2004

டிசம்பர் 15, 2004 - புதன்

இன்றைய வார்த்தை: காந்துதல். பொருள். 1. எரிவெடுத்தல் (to burn, smart, as a sore). உதாரணம்: கைப்புண் காந்துகின்றது. 2. வெப்பங்கொள்ளுதல் (to feel burning sensation in the body) 3. கருகுதல் (to be scorched, charred, reduced to cinder) உதாரணம்: சோறு காந்திப் போயிற்று. 4. மனங்கொதித்தல் (to be hot with indignation) உதாரணம்: புத்திபோய்க் காந்துகின்றது. 5. பிரகாசித்தல் 6. பொறாமை கொள்ளுதல். உதாரணம்: அவளைக் கண்டு காந்துகிறாள். 7. வீணாய் எரிதல், 8. கோபித்தல்

குற்றியலுகரம்:

குற்றியலுகரத்தைப் பற்றி இப்போதே தெரிந்து வைத்துக் கொள்வது பின்னாலும் உதவும் என்பதால் அதைப் பார்த்துவிட்டு, ஒற்று மிகும் இடத்துக்குச் செல்வோம்.

ஓர் எழுத்தை உச்சரிக்க ஆகும் கால அளவுக்கு மாத்திரை என்று பெயர். கண்ணை ஒரு முறை நொடித்தல் அல்லது கண்ணை ஒருமுறை இமைத்தல் ஒரு மாத்திரை எனப்படும். தமிழில் குறில் எழுத்துகளை (அ, இ, உ, எ, ஒ மற்றும் க, கி, கு, கெ, கொ, ச, சி, சு, செ, சொ, ... முதலியன) உச்சரிக்க ஆகும் கால அளவு ஒரு மாத்திரையாகும். நெடில் எழுத்துகளை (ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ, மற்றும் கா, கீ, கூ, கே, கை,கோ, கௌ, சா, சீ, சூ, சே, சை, சோ, சௌ, ... முதலியன) உச்சரிக்கும் கால அளவு இரண்டு மாத்திரைகளாகும். அளபெடைகளை (இன்னிசை அளபெடை முதலியன) உச்சரிக்கும் கால அளவு மூன்று மாத்திரைகளாகும்.

ஒரு சொல் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட எழுத்துகளைக் கொண்டிருந்து, சொல்லின் இறுதியில் கு, சு, டு, து, பு, று ஆகிய ஆறு வார்த்தைகளில் ஒன்று வந்து, அந்த இறுதியெழுத்து தன் மாத்திரை அளவில் குறைந்து ஒலித்தால் அதைக் குற்றியலுகரம் எனலாம். இந்த இறுதியெழுத்து தன் மாத்திரை அளவான ஒரு மாத்திரையிலிருந்து அரை மாத்திரையாகக் குறைந்து ஒலிக்கும்.

(இரண்டு எழுத்துகளைக் கொண்ட குற்றியலுகரமும் உண்டு. அதற்குப் பெயர் நெடில்தொடர்க் குற்றியலுகரம். அதைப் பற்றி இப்போது கவலைப்பட வேண்டாம்.)

உதாரணமாக, நோக்கு, பாக்கு, கொக்கு, கச்சு, மச்சு, வீச்சு, நோட்டு, பாட்டு, கேட்டு, பாதுகாப்பு, நேற்று, அங்கு, இங்கு, எங்கு முதலியன குற்றியலுகரங்களாகும்.

குற்றியலுகரம் ஆறு வகைப்படும். ஒரு குற்றியலுகரத்தில் அதன் இறுதி எழுத்துக்கு முன்னுள்ள சொல் எந்த இனத்தைச் சார்ந்ததோ, அந்தச் சொல்லும் அந்த இனத்தைச் சார்ந்த குற்றியலுகரம் எனப்படும்.

1. வன்றொடர்க் குற்றியலுகரம். உதாரணம்: கச்சு, மச்சு, பாட்டு, கேட்டு, நேற்று

2. மென்றொடர்க் குற்றியலுகரம். உதாரணம்: நுங்கு, பஞ்சு, பண்டு, அங்கு, இங்கு

3. இடைத்தொடர்க் குற்றியலுகரம். உதாரணம்: சால்பு, சார்பு, வீழ்து, போழ்து, கொய்து

4. உயிர்த்தொடர்க் குற்றியலுகரம். இவற்றில் இறுதி எழுத்துக்கு முந்தைய எழுத்து உயிர்மெய்யெழுத்துகளாக இருக்கும். அந்த உயிர்மெய்யைப் பிரித்தால், இறுதி எழுத்துக்கு முந்தைய எழுத்து உயிரெழுத்தாகும். எனவே, இது உயிர்த்தொடர்க் குற்றியலுகரம். உதாரணம்: வரகு (வ ர்+அ கு), வறிது (வ ற்+இ து), பாலாறு (பா ல்+ஆ று)

5. நெடில்தொடர்க் குற்றியலுகரம். இறுதியெழுத்துக்கு முன்னெழுத்து நெடிலாகவும், இரண்டெழுத்துச் சொல்லாகவும் இருக்கும். உதாரணம்: நாகு, காசு, ஆடு, தூது

6. ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்: இறுதியெழுத்துக்கு முன்னெழுத்து ஆய்த எழுத்தாக இருக்கும். உதாரணம்: அ·து, எ·கு

இந்த முன்னுரையை நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. ஒற்று மிகும், மிகா இடங்களில் குற்றியலுகர வகைகளைப் பற்றிப் பேசப் போகிறோம்.

வல்லின ஒற்று மிகும் இடம்: அங்கு, இங்கு, எங்கு, ஆங்கு, ஈங்கு, யாங்கு, ஆண்டு, ஈண்டு, யாண்டு என்னும் இடப்பெயர்களின் பின்னால் வல்லின ஒற்று மிகும். இந்த இடப்பெயர்களைப் பார்த்தீர்களேயானால், இவை மென்றொடர்க் குற்றியலுகரங்களாகும். ஆனால், இவை இடப்பெயர்களாக இருப்பதால் வல்லின ஒற்று மிகும். ஆனால், பொதுவாக மென்றொடர்க் குற்றியலுகரங்களில் ஒற்று மிகாது. இதைப் பற்றி ஒற்று மிகா இடங்களைப் பற்றிப் பேசும்போது விவரமாகப் பார்ப்போம்.

உதாரணம்: அங்குப் பார்த்தேன், இங்குப் பார்த்தேன், எங்குப் பார்த்தேன், ஆங்குப் பார்த்தான், ஈங்குப் பார்த்தான், யாங்குப் பார்த்தான், ஆண்டுக் கண்டேன், ஈண்டுக் கண்டேன், யாண்டுத் தந்தான்.

Monday, December 13, 2004

தமிழின் மறுமலர்ச்சி - 8

(தமிழின் மறுமலர்ச்சி - நூற்களஞ்சியம்: தொகுதி - 2 - பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை - வையாபுரிப்பிள்ளை நினைவு மன்றம், 'வையகம்', 2, 4-வது குறுக்குச் சாலை, இராஜா அண்ணாமலைபுரம், சென்னை - 28.)

"தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சி" என்ற கட்டுரையிலிருந்து...

பகுப்பு நெறி, தொகுப்பு நெறி:

செங்கற்களை அடுக்கி, சுவர்களை எழுப்பி வீடு கட்டுகிறோம். இதுபோலவே, எழுத்துக்களை அடுக்கிச் சொற்களை முறைப்படி நிறுத்தி வாக்கியங்கள் அமைக்கிறோம். வீட்டிற்கு செங்கல் மாதிரி, வாக்கியத்துக்கு எழுத்துக்கள். ஆனால், இரண்டிற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. சுவர்களை இடித்துச் செங்கற்களை முதல்முதலில் அமைத்துக் கொள்ளவில்லை. ஆனால், வாக்கியங்களைத் துண்டித்து, சொற்களாக அடையாளம் கண்டு, பின் ஒலிகளை நிர்ணயித்து, பின் எழுத்துகளை முதன்முதலில் அமைத்திருக்கிறோம். இதுவே வரலாற்று முறை.

பகுப்பு நெறி (analysis), தொகுப்பு நெறி (synthesis) என்று நெறிகள் இரண்டு. பகுப்பு நெறியால் வந்தது எழுத்து; பின் தொகுப்பு நெறிக்குப் பயன்பட்டது. பகுப்பு நெறியேயின்றி, தொகுப்பு நெறிக்குப் பயன்படுவது செங்கல்.

'எழுத்துக்களால் ஆகியது சொல். சொற்களால் ஆகியது வாக்கியம்' என முறையை மாற்றி நீண்டகாலமாக நாம் மனப்பயிற்சி செய்து வந்திருப்பதால், உண்மை வரலாற்றை உணர்ந்து கொள்வதுகூட நமக்கு அருமையாய்ப் போய்விட்டது.

ஒலி இலக்கணம்:

இதைப்போலவே, இன்னோர் உண்மையும் நம் மனத்தைவிட்டு நழுவிவிட்டது. ஒவ்வோர் எழுத்தும் ஓர் ஒலியின் பிரதிநிதி என்பதுதான் இவ்வுண்மை. இதனை மறந்துவிட்டதனால், பிற மொழிகளைப் போலத் தமிழ் மொழியையும் முற்றும் ஆட்சி கொள்ளும் ஒலியிலக்கணத்தை உணராது, தமிழின் ஜீவிய சரித்திரத்தையும், அதன் வளர்ச்சி நெறியையும், அதன் ரூபாந்தரங்களையும், அதன் கிளைமொழிகள் தோன்றிய வரலாற்றையும் தெரிந்து கொள்ளாமல் இன்றும் இருக்கிறோம். ஒலியானது ஆளுக்கு ஆள், இனத்திற்கு இனம், இடத்திற்கு இடம், காலத்திற்கு காலம் மாறிவிடுவது. மாறிக்கொண்டே செல்வதுதான் அதன் வாழ்க்கை நெறி. நிரந்தரமாக ஓடிக் கொண்டே இருக்கும் ஜீவநதிக்கு ஒப்பானது அது.

எழுத்து அப்படியில்லை. ஒலியை நோக்கும்போது எழுத்து நிலையாயுள்ளது. அதனாலேயே, அதற்கு அக்ஷரம் (அழிவில்லாதது) என்ற பெயர் வந்தது. எழுத்து எளிதில் பரவிச் செல்லத் தகுவது. இதனால் ஓரளவில் கால தேச நியதியின்றிப் பரந்து வழங்கும் தன்மை பெற்றுள்ளது. கண்ணால் பார்க்கத் தகுவது. இதனால் பேசுவோர் இன்றியும் கருத்துகளை உணர்த்தும் தன்மையுடையது. நமது அறிவு வளர்ச்சிக்கு எழுத்தே காரணமாயுள்ளது. "எழுத்தறித்தவன் இறைவன் ஆகும்" என்பது மிக ஆழ்ந்த உண்மை.

தமிழிலுள்ள எழுத்துகள் அதிலுள்ள ஒலிகள் அனைத்தையும் முற்ற உணர்த்துவன அல்ல. மக்களது கண்டத்தினின்றும் தோன்றக் கூடிய தனியொலிகள் கணக்கிட்டு முடியா. வீணை முதலிய வாத்தியங்கள் எதனாலும், அத்தனை ஒலிகளையும் உண்டுபண்ண முடியாது. இத்தனியொலிகளில் சிலவே மொழிக்கு உரியனவாகும். இவ்வொலிகளின் எண் மொழிதோறும் வேறுபடும். அதிகமாகப் போனால், அறுபது தனியொலிகளுக்கு மேல் ஒரு மொழியிலும் இல்லை. பெரும்பாலும் இதற்கு மிகக்குறைவு பட்டே மொழியொலிகள் காணப்படுகின்றன. இம்மொழி ஒலிகளைக் கூடத் தனித்தனி உணர்த்துவதற்கு எழுத்துக்கள் அமைதல் இல்லை.

ஆகவே, ஒவ்வொரு மொழியிலும், அதிலுள்ள எழுத்துக்களைக் காட்டிலும், அதன் ஒலிகள் மிகுதியாகவே காணப்படும். தமிழ் மொழியிலும் இவ்வாறே. உதாரணமாக, 'ஏன்' என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம். இதன் முதலாவதாகிய ஏகார ஒலியை 'man' என்ற ஆங்கிலச் சொல்லில் உள்ள உயிரொலியைப் போன்று நம்மிற் சிலர் உச்சரிக்கிறார்கள். இவ்வொலியை உணர்த்துவதற்குத் தமிழில் எழுத்தே இல்லை. மகன் என்ற சொல்லை 'மஹன்' என்றே பலரும் சொல்லுகிறார்கள். இடையிலுள்ள மெய் ஒலிக்குத் தமிழில் எழுத்தே இல்லை. இங்ஙனம் பல.

இக்குறைபாடுகளை நீக்குவதற்கு மூன்று வழிகள் கையாளப்பட்டன.

முதலாவது, நெருங்கிய தொடர்புடைய பிற ஒலிகளின் எழுத்துக்களைக் கொண்டு, இடத்தின் ஆற்றலால் சில ஒலிகள் உணர்த்தப்பட்டன. உதாரணமாக, பங்கு, பஞ்சு, பண்டு, பந்து, பண்பு என்பனவற்றைக் காட்டலாம். இச்சொற்களிலுள்ள பகரத்தைக் காட்டிலும், இவற்றிலுள்ள கு, சு, டு, து, பு என்பன மெலிந்து உச்சரிக்கப்படுவதைக் காண்கிறோம். தமிழறிஞர் வகுத்துள்ள மெல்லினங்களை நோக்க, இந்தக் கு, சு, டு, து, பு ஆகியன வல்லின வகையைச் சேர்ந்தவை. இதனால், 'King' என்ற ஆங்கிலச் சொல்லிலும் காவ்யம் என்ற வடசொல்லிலும் காணப்படும் ககர ஒலியே முற்காலத்தில் இருந்ததெனல் தவறாகும். 'go' என்ற ஆங்கிலச் சொல்லிலும், 'குரு' என்ற வடசொல்லிலும் உள்ள மிருதுவான ககர ஒலியும் முற்காலத்தில் இருந்தது. இதுபோன்ற பிற வல்லின எழுத்துக்களுக்கும் மிருதுவான ஒலிகள் உண்டு.

இரண்டாவதாக, வடமொழியிலுள்ள சில ஒலிகள், அவற்றிற்கு இனமான தமிழொலிகளாக மாற்றி உணர்த்தப்பட்டன. உதாரணமாக, வேஷம், வேடம் என்பதைக் காண்க.

மூன்றாவதாக, வடமொழி ஒலிகள் அம்மொழிக்கு உரிய எழுத்துக்களையே கையாண்டு உணர்த்தப்பட்டன. உதாரணமாக, 'வேஷம்' என்ற வடசொல்லை, 'வேஷம்' என்று தமிழில் ஷகரமிட்டு எழுதுவதைக் காணலாம். இம்முறைதான் இப்போது பெருவழக்கமாக உள்ளது. எனினும் மணிப்பிரவாள நடை தோன்றிய 9-ஆம் நூற்றாண்டு முதலே, இம்முறையும் கொள்ளப்பட்டதெனக் கூறலாம்.

இக்குறைகள் அல்லாமல், சில ஒலிகளைக் குறிப்பதற்கு இரண்டு குறியீடுகள் வழங்கவும் இடம் இருக்கிறது. உதாரணமாக, ஐகாரத்தை அகரமும் யகரமும் இட்டு எழுதலாம்.

ஒவ்வொரு மொழியைப் பேசிவரும் ஒவ்வோர் இனத்தவரும் தனிபட்ட இயல்புடைய ஒலிக்கணத்தையே வழங்குவர். ஆரிய மக்கள் ஒலிக்கணம் வேறு; தமிழ் மக்கள் ஒலிக்கணம் வேறு; ஜெர்மானியர் ஒலிக்கணம் வேறு; இப்படி இன்னும் சொல்லலாம். இக்கணத்தின் இயல்பு சொற்களில் ஒலி தொடர்ந்து வரும் முறையில் நன்கு புலப்படும். ஹார்ஸ் (horse) என்ற ஆங்கிலச் சொல்லின் ஒலிக்கணம் தமிழில் வருதலில்லை. இங்ஙனமே, 'குதிரை' என்று பொருள் படும் ப்வெர்ட் (pfred) என்ற ஜெர்மானியச் சொல்லின் ஒலிக்கணம் ஆங்கிலம், பிரெஞ்சு முதலிய மொழிகளிற்கூட வருதலில்லை. ஒலிக்கணத்தின் இயல்பு இவ் உதாரணங்களால் தெளிவாய் விளங்கும். தமிழிலுள்ள ஒலிக்கணத்தின் இயல்பு நமது மூதாதையரின் பேச்சு வழக்கத்தைப் (speech habit) பொருத்துள்ளது. இங்ஙனமே, பிறமொழிகளின் ஒலிக்கணங்களின் இயல்பு, அவ்வம்மொழிக்கு உரியாரின் பேச்சு வழக்கங்களைப் பொருத்ததாம்.

இவ்வழக்கங்களை நுட்பமாய் ஆராய்ந்து, இன்ன இன்ன ஒலிகள் சொற்களைத் தொடங்குவன, இன்ன ஒலிகள் இறுதியில் வருவன, இன்ன ஒலிக்குப் பின் இன்ன ஒலிதான் வரும் என்ற நியதியை அறிந்து இலக்கணம் வகுத்த பெருமை முற்காலத்து ஆசிரியர்களுள் தொல்காப்பியனார் ஒருவருக்கே உரியது. மொழி மரபு முதலிய விஷயங்களில் இவ்விஷயம் கூறப்படுகிறது. இலக்கண உலகில் சக்கரவர்த்தி என்று கூறத்தகும் பாணினியாசிரியர் கூட இங்ஙனம் ஆராய்ந்தாரில்லை.

இக்கட்டுரை இன்னும் வளரும்.

எழுத்து, ஒலி இலக்கணம், எழுத்துக்களின் வளர்ச்சி பற்றி நான் அறியாத பல கருத்துகளை இக்கட்டுரை கூறுவதால், அக்கருத்துகள் மிகவும் முக்கியமானவை என்று நான் நினைப்பதால், இக்கட்டுரையைப் பெரிதும் சுருக்காமல் முடிந்தவரை அப்படியே தந்து வருகிறேன். கட்டுரையின் அடுத்த உபதலைப்பான ஒலிகள் பிறக்கும் வரலாறில் பேராசிரியர் தொல்காப்பியர் ஒலிகளின் பிறப்பைப் பற்றிச் சொல்லியுள்ளதை விளக்குகிறார்.

(தொடரும்)

செவ்வாய் - டிசம்பர் 14, 2004

இன்றைக்கான வார்த்தை: கன்னைபிரித்தல். பொருள்: விளையாட்டில் இருகட்சி வகுத்தல் (to divide a company into two parties for a game). உதாரணம்: அம்பானி சகோதரர்களுக்கிடையேயான பிரச்னையால் ரிலையன்ஸ் நிறுவனமே கன்னைபிரியும் வாய்ப்பிருக்கிறது. (உதாரணம் சரியா என்று தெரியவில்லை.)

வல்லின ஒற்று மிகும் இடம்: அப்படி, இப்படி, எப்படி ஆகியவற்றின் பின்னால் வல்லின ஒற்று மிகும்.

உதாரணங்கள்: அப்படிக் கூறினான், இப்படிக் கூறினான், எப்படிக் கூறினான், அப்படிச் செய்தான், இப்படிச் செய்தான், எப்படிச் செய்தான், அப்படித் திணறினான், இப்படித் திணறினான், எப்படித் திணறினான், அப்படிப் பார்த்தான், இப்படிப் பார்த்தான், எப்படிப் பார்த்தான்

பி.கு: என்னிடம் நன்னூலுக்கு இருவர் எழுதிய உரைகள் உள்ளன. சிங்கப்பூர் சித்தார்த்தன் எழுதிய இலகு தமிழில் இனிக்கும் தமிழ் இலக்கணம் என்ற புத்தகமும் இருக்கிறது. இவைகளைப் பின்னர் வாய்ப்பு கிடைக்கும்போது பயன்படுத்திக் கொள்ள முயல்வேன். இப்போது வல்லின ஒற்று மிகும் இடங்களை விவரிக்க, "பிழையின்றி நல்ல தமிழ் எழுதுவது எப்படி?" (எழுதியவர்: பேராசிரியர் ஜெ. ஸ்ரீசந்திரன்) பயன்படுத்துகிறேன். இந்தப் புத்தகத்தை பற்றி இணையக் குழுவொன்றில் முனைவர் நா. கணேசன் எழுதியதன் மூலம் அறிந்தேன். பின்னர் வாங்கினேன். ஒற்று தொடர்பான விதிகளை இந்தப் புத்தகம் சொல்கிற விதம் எனக்குப் பிடித்திருக்கிறது. ஒற்று மிகும், மிகா இடங்களை அறிய இப்புத்தகத்தை நானும் இணையக் குழு நண்பர்களுக்கு சிபாரிசு செய்திருக்கிறேன்.

Sunday, December 12, 2004

டிசம்பர் 13, 2004 - திங்கள்

இன்றைக்கான வார்த்தை: கமாரிடுதல். பொருள்: மெதுவாய்ச் சத்தஞ் செய்தல் (to cry softly, utter a faint sound). உதாரணம்: அங்கே ஒருவருங் கமாரிடக் கூடாது.

வல்லின ஒற்று மிகும் இடம்: அந்த, இந்த, எந்த ஆகிய வார்த்தைகளுக்குப் பின்னால் வல்லின ஒற்று மிகும்.

உதாரணங்கள்: அந்தக் கூட்டம், இந்தக் கூட்டம், எந்தக் கூட்டம், அந்தச் சிவகுமார், இந்தச் சிவகுமார், எந்தச் சிவகுமார், அந்தப் பீடம், இந்தப் பீடம், எந்தப் பீடம், அந்தத் திருவிழா, இந்தத் திருவிழா, எந்தத் திருவிழா.

Friday, December 10, 2004

இன்னுமொரு முயற்சி

தினம் ஒரு தமிழ்ச்சொல் எத்தனை பேருக்கு உபயோகமாக இருக்கிறது என்று தெரியவில்லை. எனக்கு உபயோகமாக இருக்கிறது. அதில் எனக்குள்ள ஒரே குறை, அந்தந்த நாளுக்கான சொற்களை அன்றே சொல்ல இயலாமல், சேர்த்து வைத்தோ முன்கூட்டியோ சொல்ல வேண்டியிருக்கிற நிலை. நேரமின்மையால் அப்படி நேர்கிறது. மேலும் ஒரு சொல்லுக்காக மட்டும் ஒரு பதிவு போடுவதில் எனக்கு உடன்பாடும் இல்லை.

என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது எனக்கு இன்னொரு தேவையும் உண்டானது. மரத்தடி இணையதளத்தில் ஆர்வலர்களில் ஒருவனாக படைப்புகளை வலையேற்றும் பணி செய்கிறேன். அப்படிச் செய்யும்போது தட்டச்சுப் பிழைகள், இலக்கணப் பிழைகளைத் திருத்தி வலையேற்ற வேண்டும். எது இலக்கணப் பிழை (முக்கியமாக ஒற்று மிகும், மிகா இடங்கள்) பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது என்பதால் அதை நான் செய்வதில்லை. மரத்தடி வேலைகளைச் சளைக்காமல் செய்கிற வரம் பெற்று வந்திருக்கிற ஜெயஸ்ரீ வழக்கம்போல் எனக்காகப் பிழை திருத்தி உதவுகிறார். ஜெயஸ்ரீயின் சிரமத்தைக் குறைப்பதற்காகவாவது நான் இப்போது இலக்கணம் படிக்க முடிவு செய்திருக்கிறேன். மொழியைப் பொருத்தவரை, கருத்துப் பரிமாற்றத்துக்கு உதவினால் போதும், இலக்கணம் எல்லாம் இரண்டாம்பட்சம்தான் என்பதே என் நிலை. அதனாலேயே, பிற விஷயங்களை அறிவதில் காட்டிய ஆர்வத்தை இலக்கணம் அறிவதில் காட்டியதில்லை. இப்போதும் என் நிலை அதுதான்.

ஒற்று மிகும், மிகா இடங்களைப் பற்றி மாணவப் பருவத்தில் படித்திருந்தாலும், முழுவதும் நினைவில்லை. இணையத்தில் எழுத ஆரம்பித்ததும் என்னிடமிருக்கும் புத்தகங்களின் உதவியுடன் பலமுறை படித்துப் பார்த்தேன். மனப்பாடம் செய்கிற, சூத்திரங்களை மனத்தில் நிறுத்திக் கொள்கிற வயதெல்லாம் தாண்டிவிட்டது போலும். அடிக்கடி மறந்து போகிறது. எனவே, இங்கு தினம் ஒரு சொல்லுடன், ஒரு ஒற்று மிகும் இடத்தையும், மிகா இடத்தையும் (அல்லது இரண்டில் ஒன்றையாவது) பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். எப்படி தினம் ஒரு தமிழ்ச் சொல்லை, சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதியைப் பார்த்து பகிர்ந்து கொள்கிறேனோ, அப்படி இதை என்னிடமிருக்கிற இலக்கணப் புத்தகங்களைப் பார்த்து பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.

இணையத்தில் ஒற்று மிகும், மிகா இடங்களைப் பற்றி ஏற்கனவே பலர் விளக்கமாக எழுதியுள்ளார்கள் என்று நான் அறிவேன். முக்கியமாக மரபிலக்கியம் இணையக் குழுவை நடத்தும் திரு. ஹரிகிருஷ்ணன் எழுதியிருக்கிறார். அவை மரத்தடி இணையதளத்தில் வலையேற்றப்பட்டுள்ளன. (சுட்டிகளைப் பின்னர் தேடி இணைக்க முயல்கிறேன்.). அப்புறம், நண்பர் "மரவண்டு" கணேஷ் கூட ஒருமுறை இணையக் குழுவில் ஒற்று மிகும், மிகா இடங்களைத் தொகுத்துத் தந்தார். இன்னும் பிறர் எழுதியிருக்கக் கூடும். எனக்குத் தெரியவில்லை. எனவே, தினம் ஒரு தமிழ்ச் சொல்லைப் போல இது ஒரு புதுமையான பகுதியில்லை. ஆனால், தினம் ஓர் இலக்கண விதியை அறிந்து கொள்வது, நினைவில் நிறுத்திக் கொள்ள எனக்கு உதவும் என்பதால் செய்கிறேன். பிறருக்கும் உதவினால் மகிழ்ச்சியே. இந்தப் பகுதியில் மட்டும் யாருக்கும் சந்தேகம்/கேள்விகள் இருந்தால், அவற்றுக்கு எனக்குப் பதில் தெரியும் என்ற உத்திரவாதம் இல்லை. மேலும், இந்தப் பகுதியில் நான் தவறுகள் செய்ய நிறையவே வாய்ப்புள்ளது. அப்படி நான் இடறும்போதெல்லாம் முடிந்தவர்கள் தூக்கி நிறுத்துமாறு வேண்டுகிறேன். இந்த முன்னுரையுடன் தொடர்கிறேன்.

வல்லின ஒற்று மிகும் இடங்கள் - முன்னுரை

தமிழில் க், ச், ட், த், ப், ற் வல்லின மெய் எழுத்துகள் என்பது நாமறிந்ததே. இவற்றில் ட், ற் ஆகியன சந்தி எழுத்துகளாக வருகிற பழக்கம் இல்லை. இரண்டு வார்த்தைகள் சேரும்போது இடையில் அவற்றை இணைக்கத் (தேவையான நேரங்களில்) உதவுகிற எழுத்தை சந்தி எனலாம். (Euphonic combination of the final letter of a word, root or base with the initial letter of the succeeding word or suffix - OTL).

இரண்டு வார்த்தைகள் சேரும்போது, முதல் வார்த்தை நிலைமொழி என்று அழைக்கப்படுகிறது. இரண்டாவது வார்த்தை வருமொழி எனப்படுகிறது. வருமொழியின் முதல் வார்த்தை க, ச, த, ப இவற்றின் வர்க்க எழுத்துகளில் (க, கா, கி, கீ, ...., ச, சா, சி, சீ, ...., த, தா, தி, தீ, ...., ப, பா, பி, பீ, ... ஆகியன) ஒன்றாக இருக்கும்போது, (தேவையான இடங்களில்) வர்க்க எழுத்துக்கேற்ப அதன் ஒற்று மிகும். வருமொழியின் முதல் எழுத்து இடையினமாகவோ, மெல்லினமாகவோ இருந்தால் ஒற்று மிகாது. எனவே, ஒற்று மிகும் இடங்கள் பெரும்பாலும் (90%-லிருந்து 95% என்று சொல்லலாமா?) வல்லின ஒற்று மிகும் இடங்களாகவே இருக்கும். (இந்தக் கடைசி வரி என் புரிதல். தவறெனில் திருத்தவும்.)

தமிழில் அ, இ, உ ஆகியன சுட்டெழுத்துகளாகும். ஒன்றைச் சுட்ட அவை பயன்படுவதால் இப்பெயர். கேள்வி கேட்கப் பயன்படும் எழுத்துகள் வினாவெழுத்துகள் எனப்படுகின்றன.

அ, இ என்னும் சுட்டெழுத்துகளுக்குப் பின்னாலும், எ என்ற வினாவெழுத்துக்குப் பின்னாலும் ஒற்று மிகும் (வருமொழி க, ச, த, ப ஆகியவற்றின் வர்க்க எழுத்தாக இருந்தால் - இதை ஒவ்வொரு முறையும் இனி சொல்லப் போவதில்லை)

உதாரணங்கள்: அக்காடு, அச்சிவகுமார், அத்தலம், அப்பீடம், இக்காடு, இச்சிவகுமார், இத்தலம், இப்பீடம், எக்காடு, எச்சிவகுமார், எத்தலம், எப்பீடம்

இனி, தினம் ஒரு தமிழ்ச் சொல்லுக்கு -

சென்ற செவ்வாய்க்கான வார்த்தை: சள்ளிடுதல். பொருள்: குரைத்தல் (to howl as a jackal, to growl). உதாரணம்: அந்தத் தெருநாயைப் பார்த்த இந்த வீட்டு நாய் கதவுக்குப் பின்னிருந்து சள்ளிட்டு எழும்பியது.

புதனுக்கான வார்த்தை: சள்ளுச்சள்ளெனல். பொருள்: நாய் குரைக்கும் ஒலிக்குறிப்பு, கோபங்காட்டிப் பேசுதல். உதாரணம்: "ஏன் என்மீது சள்ளுச்சள்ளுனு விழறீங்க" என்று கணவனைக் கேட்டார் மனைவி.

வியாழனுக்கான வார்த்தை: சுசுரூஷை. பொருள்: பணிவிடை. உதாரணம்: "உங்களுக்கு சுசுரூஷை பண்றத்துக்குனே பகவான் என்னை அனுப்பியிருக்கார்னு நெனைச்சிட்டீங்களா" என்று கணவரிடம் சள்ளென விழுந்தார் மனைவி.

இன்றைக்கான வார்த்தை: தலைபிணங்குதல். பொருள்: ஒன்றோடொன்று மாறுபடுதல் (to contend, compete, strive). உதாரணம்: கவிதை பற்றிய கருத்துகளில் அண்ணாச்சியும் தாசில்தாரும் தலைபிணங்குவார்கள்.

சனிக்கான வார்த்தை: சோபித்தல். பொருள்: பிரகாசித்தல், அலங்காரமாயிருத்தல், மேம்படுதல். உதாரணம்: என் எழுத்துகள் சோபிக்காவிட்டாலும், சோடைபோக மாட்டா.

ஞாயிறுக்கான வார்த்தை: தடபுடல். பொருள்: விரைவு, சந்தடி, ஆடம்பரம். உதாரணம்: 1. வளர்ப்பு மகனின் திருமணம் தடபுடலாக நடந்தது. 2. செய்தி கேட்டதும் மாடியிலிருந்து தடபுடலென்று இறங்கி வந்தார்.

(திங்களிலிருந்து, அன்றன்றைக்கான வார்த்தையையும், இலக்கணத்தையும் அன்றன்றே ஒரு தனிப்பதிவாகவேனும் போட்டுவிட முயல்கிறேன்.)

Wednesday, December 08, 2004

பாரதி வரலாற்று நூல்கள்

(மஹாகவி பாரதியின் நினைவு நாளான செப்டம்பர் 11க்குள் பின்வரும் கட்டுரையைத் தட்டச்சு செய்து பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்து முடியாமல் போனது. இப்போது பாரதியின் பிறந்த தினமான டிசம்பர் 11 வருவதை முன்னிட்டு இதைப் பகிர்ந்து கொள்கிறேன். பாரதிக்கும் பாரதியை முன்னெடுத்துச் சென்ற செல்கிற செல்லப் போகிற சாரதிகளுக்கும் பாரதி பிறந்த நாளில் வணக்கம் செலுத்தும்முகமாக இதைப் பகிர்ந்து கொள்கிறேன்.

பாரதி அன்பரும், பாரதி குறித்த ஆய்வுகளில் தன் வாழ்க்கையைச் செலவழிப்பதை ஒரு பாக்கியமாகக் கருதுபவருமான சீனி. விசுவநாதன் "மகாகவி பாரதி வரலாறு" என்ற நூலை 1996ல் வெளியிட்டார். அந்த நூலுக்கு அவர் எழுதியுள்ள முன்னுரை ஓர் அரிய ஆய்வுக் களஞ்சியமாகும். அம்முன்னுரையில் "பாரதிக்கு வரலாற்று நூல்கள் உருவெடுத்த சரித்திரத்தை" விவரமாகவும், காலவரிசையிலும் கொடுக்கிறார். பாரதியின் பதாகையை உயர்த்திப் பிடித்த பாரதி அன்பர்களைப் பற்றியும் அவர்கள் எழுத்துகள் பற்றியும் நல்ல அறிமுகம் செய்கிற விதமாக அத்தகவல்கள் அமைந்துள்ளன. இத்தகவல்களைத் திரட்டுவதே ஒரு பெரிய ஆய்வாக சீனி. விசுவநாதனுக்கு இருந்திருக்கும். இந்நூல் வெளிவந்தபோது, தமிழக அரசின் முதல் பரிசைப் பெற்றது. சீனி. விசுவநாதனின் பாரதி பணிகளுக்காகத் தமிழக அரசு சமீபத்தில் அவருக்குப் பாரதியார் விருது வழங்கி கௌரவித்திருக்கிறது. இவ்விருது பாராட்டுப் பத்திரமும், ஒரு லட்ச ரூபாய் பரிசும் அடங்கியது என்று நினைக்கிறேன்.

அவர் நூல்களில் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் நான் தாராளமாகப் பயன்படுத்திக் கொள்கிற அனுமதியைப் பெருந்தன்மையுடனும் அன்புடனும் எனக்கு வழங்கியுள்ள, என் நண்பர் என்று சொல்லிக் கொள்வதில் நான் பெருமைப்படுகிற சீனி. விசுவநாதனுக்கு நன்றிகள் சொல்லி அவர் நூலிலிருந்து எடுத்த "பாரதி வரலாற்று நூல்கள் உருவெடுத்த சரித்திரத்தை" உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இதை மறுபிரசுரம் செய்ய விரும்புவோர் சீனி. விசுவநாதனிடம் அனுமதி பெற்றுச் செய்யுமாறு வேண்டுகிறேன். இதிலுள்ள தட்டச்சுப் பிழைகள் என்னுடையவை. - அன்புடன், பி.கே. சிவகுமார்)

பாரதிக்கு வரலாற்று நூல்கள் உருவெடுத்த சரித்திரம்
('மகாகவி பாரதி வரலாறு' நூலின் முன்னுரையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள்)

- சீனி விசுவநாதன்

பாரதிக்குப் பற்பலரும் வரலாறுகள் எழுதியுள்ளனர்.

பாரதி வாழ்ந்த காலத்தில், அவருக்கு உற்றுழி உதவி, உறுபொருள் கொடுத்த உத்தமர்களில் பலரும் தங்கள் சொந்தப் பாங்கான அனுபவங்களைப் பின்னொரு காலப்பகுதியில் கட்டுரைகளாக வடித்தனர்; நேர் உரைகளாகப் பேட்டி கண்டவர்களிடம் சிலவற்றைப் பதிவும் செய்தனர்.

வேறு சிலர், பாரதியின் கவிதா சக்தியைப் பற்றியும், கவிதையின் அழகு, இனிமை, எளிமை ஆகியவற்றைப் பற்றி மட்டுமே வியந்து போற்றி எழுதினர்.

பாரதிக்கு மிக அணுக்கமானவர்கள் எல்லோருமே வரலாற்று நூல்கள் எழுதாமல், துண்டு துணுக்குகளாகவோ, கட்டுரைகளாகவோ, கவிதைகளாகவோ வரலாற்றுத் தொடர்பான செய்திகள் சிலவற்றை வழங்கினர்.

பாரதியை நன்கு புரிந்துகொண்டவர்களும், தெரிந்து வைத்திருந்தவர்களுங்கூட ஓரளவே வரலாற்றுக் குறிப்புக்களை வரைந்தனர்.

பாரதிக்கு அவர் வாழ்ந்த காலத்திலேயே அவருடைய புலமைக்கும் இலக்கியப் படைப்புகளுக்கும் உரிய - உயரிய புகழும், பாராட்டுதல்களும் கிடைக்கவே செய்திருக்கின்றன.

அவர் காலத்தில் மூன்று கட்டுரைகள் அவரைப் பற்றிப் பிரசும்மாயிருப்பதாக நான் அறிகிறேன். கர்மயோகி (1910), தேசபக்தன் வருஷ மலர் (சித்தார்த்தி - தை மாதம் 30 ஆம் தேதி - 1919) ஆகிய தமிழ்ப் பத்திரிகைகளிலும், New India (1919) என்னும் ஆங்கில நாளிதழிலும் பாரதி பற்றிய கட்டுரைகள் பிரசுரமாகியுள்ளன.

பாரதியின் கர்மயோகி மாதப் பத்திரிகையில் திரு.லக்ஷ்மண சங்கரன் என்பவர் தமிழ் ஸாஹித்யத்தில் நவமார்க்கம் என்கிற கட்டுரையில் பாரதியின் பாவன்மையை வியந்து பாராட்டியும், கதை நூலைப் புகழ்ந்து பேசியும் எழுதி உள்ளார்.

தமிழ்த் தென்றல் திரு. வி.க. அவர்களை ஆசிரியராகக் கொண்டிருந்த தேசபக்தன் வருஷ மலரில் திரு. எ.எஸ். நாகரத்தினம் என்பவர் தமிழ்நாடும் ஸ்ரீமான் ஸி.சுப்பிரமணிய பாரதியாரும் - ஓர் ஆராய்ச்சி என்னும் தலைப்பில் ஓர் அரிய கட்டுரையே எழுதி இருக்கின்றார்.

நியூ இண்டியா (New India) என்னும் ஆங்கில நாளிதழில் திரு. ஏ.வி. சுப்பிரமணிய ஐயர் அவர்கள் Subramania Bharati and his genius என்னும் தலைப்பில் கட்டுரை ஒன்றை வழங்கியுள்ளார்.

இப்படி இன்னும் பல கட்டுரைகள் அக்காலத்தில் வெளிவந்திருக்கலாம்.

நானறிந்தவரை, அக்கட்டுரைகள் பாரதியின் கவித்திறத்தையும், மேதைமையையும், அவர் கையாண்ட புதிய உத்திகளையும் சிறப்பித்துப் பேசும் தன்மையனவாகவே அமைந்துவிட்டன என்பேன்.

ஆம்; அவை வாழ்க்கைச் சரிதக் குறிப்புகளாகவோ வாழ்க்கைச் செய்திகளை இனங்காட்டுவனவாகவோ அமையவில்லை.

பாரதி தன் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புக்களைத் தனியே எழுதாவிட்டாலுங்கூட கனவு என்ற காதற்கவிதையிலும், பாரதி அறுபத்தாறு என்னும் முற்றுப் பெறாத பாடல் தொகுதியிலும், சின்னச் சங்கரன் கதை என்னும் முற்றுப் பெறாத கதைப்பகுதியிலும், சித்தக் கடல் என்ற வசனப் பகுதியிலும், கவிதா தேவி அருள்வேண்டல் போன்ற சில பாக்களிலும் தம் வாழ்வுத் தொடர்பான சில பயனுள்ள செய்திகளை ஆங்காங்கே குறிப்பிட்டுள்ளார் என்பதும் நம் கவனத்துக்குரியது.

பாரதி 1921 செப்டம்பர் 12இல் (செப்டம்பர் 12, 1921 அதிகாலை 1 மணிக்கு பாரதி உயிர் நீத்தார். - பி.கே. சிவகுமார்) மரணம் அடைந்த பின்னரே சரிதச் சுருக்கங்களும், வாழ்க்கைக் குறிப்புக்களும், வரலாற்று நூல்களும் வெளிவரலாயின.

பாரதி 'விண்ணவருக்கு விருந்தானார்' என்ற செய்தியை 13-9-1921ஆம் தேதிய இதழில் வெளியிட்ட சுதேச மித்திரன் பத்திரிகையானது பாரதியைப் பற்றிய விவரங்களைத் தந்ததுடன் 'அவரது சரித்திரச் சுருக்கம் வேறிடத்தில் பிரசுரம் செய்யப்படுகிறது' என்றும் குறிப்பிட்டிருந்தது.

ஆனால், அப்படியரு சரித்திரச் சுருக்கம் சுதேச மித்திரன் இதழில் நான் பரிசோதித்துப் பார்த்த அளவில் கண்ணில் படவில்லை.

சுதேச மித்திரனில் தனியே பாரதியின் சரித்திரச் சுருக்கம் பிரசுரமானதை அறிந்துகொள்ள முடியாத காரணத்தால், அவரது சரித்திரம் எந்தமாதிரியான செய்திகளைக் கொண்டு இருந்தது என்பதை அறிய முடியாமலே போய்விட்டது.

பாரதி அமரரானவுடனேயே முதன்முதலாகத் திரு.எஸ்.ஜி. ராமாநுஜலு நாயுடு அவர்கள் ஸ்ரீமான் சுப்பிரமணிய பாரதி - சில குறிப்புகள் என்ற தலைப்பில் சுதேச மித்திரன் 17-9-1921ஆம் தேதியிட்ட இதழின் வழியாக அரிய கருத்துச் செல்வங்களை வழங்கினார்.

இப்பெருமகனாரைத் தொடர்ந்து பாரதி பற்றிய வரலாற்றுச் செய்திகளை வழங்கியவர்களில் நாவலர் சோமசுந்தர பாரதியார், சக்கரைச் செட்டியார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.

1922 ஜனவரியில் பாரதி ஆச்ரமத்தார் பாரதியின் கவிதைச் செல்வங்களைத் தொகுத்து, சுதேச கீதங்கள் என்னும் தலைப்பெயருடன் இரு பகுதிகளாக வெளியிட்டனர். முதல் பகுதியில், நாவலர் சோமசுந்தர பாரதியார் ஸ்ரீ சி. சுப்பிரமணிய பாரதியார் - சரித்திரச் சுருக்கம் என்றும், இரண்டாம் பகுதியில் திரு.சக்கரை செட்டியார் The Political Life of Sri Subramania Bharathi என்றும் தம் நினைவுக் குறிப்புக்களை ஒழுங்குபடுத்திக் கோவையாக எழுத்தில் வடித்துக் கொடுத்தனர்.

நாவலர் சோமசுந்தர பாரதியார் தம் கட்டுரையில் பாரதியின் வாழ்க்கைக் குறிப்புக்களையும் நிகழ்ச்சிகளையும் சுருக்கமாகத் தந்ததுடன், பாரதியின் புலமை, ஒருசில கவிகள் எழுந்த சூழல், குணநலன்கள், தமக்கிருந்த நட்புமுறை ஆகியவை பற்றியும் விரித்துரைத்தார்.

திரு. சக்கரை செட்டியாரோ மிக விரிவாகப் பாரதியின் அரசியல் பிரவேசம், அரசியல் ஈடுபாடு ஆகியன குறித்து எழுதியதோடும் நில்லாமல், தமிழ்மக்கள் அமர கவி பாரதிக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் பற்றியும் எடுத்துரைத்தார்.

ஆக, நமக்கு 1921 செப்டம்பரிலிருந்து 1922 ஜனவரிக்கும் உள்ளாகப் பாரதி வாழ்க்கை பற்றிய குறிப்புகளும், சரித்திரச் சுருக்கங்களும், அரசியல் ஈடுபாடு பற்றிய செய்திகளும் ஓரளவு கிடைக்கத் தொடங்கி விட்டன.

இந்த வகையில் திருவாளர்கள் ராமாநுஜலு நாயுடு, சோமசுந்தர பாரதியார், சக்கரை செட்டியார் ஆகியோரை முன்னோடிகள் என்றே கொள்ளல் வேண்டும்.

இச் சான்றோர்களுக்குப் பின்னர்தான் மண்டயம் சீனிவாஸாச்சாரியார், குவளையூர் கிருஷ்ணமாச்சாரியார், சுந்தரேச ஐயர், சாம்பசிவ ஐயர், நீலகண்ட பிரமச்சாரி, நாராயண ஐயங்கார், நாகசாமி, பாவேந்தர் பாரதிதாசன், பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரும் இன்ன பிறரும் பாரதியைப் பற்றிப் பத்திரிகைகளில் எழுதினர்; தம் நண்பர்களிடமும் பாரதி பற்றிய பசுமை நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

மேற்குறித்த பெருமக்களின் கருத்துரைகள் எல்லாம் பாரதி வரலாற்றுக்குப் பேருதவியாய் அமைந்தன என்று சொல்லும் போழ்தில், அவை தனி நபர்களின் இளமைக்காலப் பசுமை நினைவுகள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.

துரதிருஷ்டவசமாகப் பாரதியின் கவிதா மண்டலத்தைச் சார்ந்த பாவேந்தர் பாரதிதாசன் அவர்களும் பாரதியைப் பற்றிய செய்திகளைப் பின்னிட்டுத்தான் பதிவு செய்திருக்கிறார்; அதே போல, பாரதியின் முதற் பதிப்பாளராகிய பரலி நெல்லையப்பரும் தம் நினைவுக் குறிப்புக்களைப் பிற்காலத்தில்தான் பத்திரிகைகளில் எழுதி வெளியிட்டார்.

பாரதியிடம் நெருங்கிய உறவு கொண்டு பாரதிக்குத் தாசனாக வாய்த்தவரும், பாரதியாலே மிக்க அன்புடன் 'தம்பி' என்று அழைக்கப்பட்ட பேறு பெற்றவரும் சுருங்கிய முறையில்கூட வரலாற்று நூல் வரையாமல் போனது நம்முடைய பாக்கியக் குறைவே.

1928ஆம் ஆண்டில் பாரதி பாடல்களில் ராஜத் துரோகக் கருத்துக்கள் இருப்பதாகச் சொல்லி, பிரிட்டிஷ் அரசு சுதேச கீதங்கள் என்னும் கவிதை நூல் தொகுதிகளைப் பறிமுதல் செய்தது. இதனால் நாட்டில் கிளர்ச்சிகள் எழுந்தன.

அச்சமயம் மீண்டும் திரு. எஸ்.ஜி. ராமாநுஜலு நாயுடு அவர்கள் தாம் அப்போது ஆசிரியர் பொறுப்பு வகித்த அமிர்த குண போதினி மாத இதழில் சென்றுபோன நாட்கள் என்ற பொதுத் தலைப்பில் ஸ்ரீமான் ஸி. சுப்பிரமணிய பாரதி என்று குறுந்தலைப்பு அமைத்துத் தொடர் கட்டுரைகள் எழுதி வெளியிடலானார்.

இத்தொடர் கட்டுரைகளில் முன்னர் - அதாவது, பாரதி மரணமடைந்தபோது, தாம் எழுதிய குறிப்புக்களுடன், அந்த நாள் வரை எவரும் சொல்லாத - எழுத்துருவில் வடிக்காத பற்பல புதிய செய்திகளை எழுதி, பாரதி வாழ்க்கை வரலாற்று ஆய்வுப் பரப்பை ராமானுஜலு நாயுடு விரிவாக்கினார்.

திரு.நாயுடு அவர்கள் எழுதியளித்த அரிய செய்திக் குறிப்புகளில் பலவும் 1928 தொடக்கம் 1947 வரையிலான கால எல்லையில் பிரசுரமான பாரதி வரலாற்று நூல்களில் போதிய அளவு இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாரதியின் மூத்த மகள் தங்கம்மாளும், இளைய மகள் சகுந்தலாவும் மற்றும் பலரும் அவ்வப்போது பத்திரிகைகளில் பாரதி பற்றி எழுதவே செய்தனர். என்றாலும், இவையெல்லாம் சற்று காலங்கடந்த நிலையில் வெளிப்பட்டனவாகும். தமிழ்ப் பத்திரிகைகளும் பல்வேறு சந்தர்ப்பங்களில் பாரதி தொடர்புடைய செய்திகளை வெளியிடவே செய்தன.

காலப்போக்கில், கட்டுரை வடிவில் வெளிவந்த செய்திகளையும், நினைவுக் குறிப்புக்களையும், சொந்தப்பாங்கான அனுபவங்களையும் கொண்டு பற்பலர் நூல்களை எழுத முனைந்தனர்.

1928இல் பாரதி பிரசுராலயத்தார் பாரதியார் சரித்திரம் என்ற பெயரால் சிறிய நூல் ஒன்றை வெளியிட்டனர். இது புதிய நூல் அன்று; என்றாலும் பாரதியார் சரித்திரம் என்ற தலைப்பில் வெளியான முதல் தொகுப்பு நூல் இதுவேயாகும்.

1922இல் பாரதி ஆச்ரமத்தார் பிரசுரித்திருந்த சுதேச கீதங்கள் கவிதைத் தொகுதிகளில் இடம் பெற்றிருந்த நாவலர் சோமசுந்தர பாரதியார் எழுதிய பாரதியாரின் சரித்திரச் சுருக்கமும், சக்கரை செட்டியார் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கமான 'ராஜீய வாழ்வும்', பரலி நெல்லையப்பர் எழுதிய 'பாரதியாரின் தமிழ்ப் புலமை' என்னும் கட்டுரை ஒன்று சேர்க்கப்பட்டு இந்தப் பிரசுரம் வெளியானது.

1929ஆம் ஆண்டிலே பாரதியின் இளைய சகோதரர் திரு. சி. விசுவநாதன் ஆங்கிலத்தில் Bharati and his works என்றொரு நூலைப் பாரதியின் வாழ்க்கைக் குறிப்புக்களும், பாரதி நூல்களின் மதிப்பீடும் சேர்ந்திருந்த முறையில் எழுதி வெளியிட்டார். இந்த நூலானது, பெரும்பகுதி பாரதி படைப்பு இலக்கியங்களுக்கான கருவி நூலாகவே அமைந்துவிட்டது.

1936இல் ஆக்கூர் அனந்தாச்சாரி என்ற தேசபக்தர் கவிச்சக்கரவர்த்தி சுப்ரமணிய பாரதி சரிதம் என்ற நூலை வெளிப்படுத்தினார்.

இதனிடையில் வ.ரா. என்று சுருக்கப் பெயரால் அழைக்கப்பெறும் வ. ராமஸ்வாமி அவர்கள் காந்தி இதழில் 1935-1936 இல் பாரதி வாழ்க்கைத் தொடர்பான தொடர் கட்டுரைகளை எழுதினார். அக்கட்டுரைகளே 1944இல் மகாகவி பாரதியார் என்ற பெயருடன் நூலாக உருப்பெற்றன.

1937இல் கவியோகி சுத்தானந்த பாரதியார் அவர்கள் பாரதி விளக்கம் என்ற நூலை ஆக்கி அளித்தார்.

இந்த நூலின் முற்பகுதியில் பாரதி வாழ்வும், பிற்பகுதியில் பாரதி பாடல்களின் அருமை பெருமைகளும் விளக்கப்பட்டன.

1938இல் சக்திதாசன் சுப்பிரமணியன் அவர்கள் பாரதி லீலை என்றவொரு நூலை எழுதி வெளியிட்டார். (இந்த நூல் 1950இல் மறு அச்சாக வெளியானபோது, பாரதியார் என்று தலைப்புப் பெயர் மாற்றங் கண்டது.) இந்த நூலில் பாரதி சரித்திரச் சுருக்கத்துடன், அவருடைய வாழ்வில் நிகழ்ந்தனவாகக் கருதப்பட்ட நிகழ்ச்சிகளும் சொல்லப்பட்டன.

1940இல் தி.ஜ.ர. அவர்களின் புதுமைக்கவி பாரதியார் என்னும் நூல் வெளிவந்தது. (இந்த நூல் 1946இல் மறுபதிப்பான நிலையில், அதில் சில தகவல்கள் சேர்க்கப்பட்டன.)

1941இல் பாரதியின் மூத்த மகள் தங்கம்மாள் அவர்கள் பாரதியின் மனைவி செல்லம்மாள் அவர்கள் கூறுகிற மாதிரியில் தவப்புதல்வர் பாரதியார் சரித்திரம் என்னும் பெயரில் அமரகவியின் வரலாற்றைச் சமைத்தளித்தார். (இந்த நூலின் இரண்டாம் பதிப்பு 1945இல் வெளிவந்த சமயத்தில் பாரதியார் சரித்திரம் என்றே நூல் தலைப்பு மாற்றங் கண்டது; சில புதிய செய்திகளும் கொண்டமைந்தது.)

1942இல் நாரண துரைக்கண்ணன் அவர்கள் எழுதிய தமிழ்நாட்டுத் தேசிய கவிஞர் ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார் என்ற சிறுநூல் வெளிவந்தது.

1946இல் கவியோகி சுத்தானந்த பாரதியார் எழுதிய கவிக்குயில் பாரதியார் என்ற நூல் வெளிவந்தது.

இதே 1946இல் கப்பலோட்டிய தமிழர் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்பெறும் வ.உ. சிதம்பரனார் அவர்கள் எழுதி வைத்திருந்த குறிப்புக்களைக் கொண்டு வி.ஓ.சி. கண்ட பாரதி என்ற தலைப்பில் சிறுநூல் ஒன்றை திரு. வ.உ.சி. சுப்பிரமணியம் பதிப்பித்து வெளியிட்டார்.

தங்கம்மாள் எழுதிய அமரன் கதை (1946), பாரதியும் கவிதையும் (1947), பிள்ளைப் பிராயத்திலே (1947) ஆகிய நூல்களும், திரு. ரா. கனகலிங்கம் அவர்கள் எழுதிய என் குருநாதர் பாரதியார் (1947) என்ற நூலும் பாரதியின் வாழ்க்கை வரலாற்றை விரிவாக அமைக்கத் துணைபுரிவனவாகும். இந்த நூல்கள் யாவும் பாரதியின் குணச்சித்திரத்தையும், கவிதை பிறந்த கதையையும் தெரிவிக்கின்றன.

ஆக, உண்மையில் 1928-1947க்கும் உட்பட்ட காலப்பகுதியில் விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய நூல்களே வெளிவந்தன.

இது பாரதிக்கு வரலாறு எழுந்த பின்னணிச் சரித்திரமாகும்.

பாரதி அமரரான 1921ஆம் ஆண்டிலிருந்து 1947ஆம் ஆண்டு முடிய வெளியிடப்பட்ட பாரதி வரலாற்று நூல்களிலும், வரலாற்றுத் தொடர்பான நூல்களிலும் காணப்பெறும் செய்திகள், குறிப்புக்கள் ஆகியன சற்றே குழப்பத்தை உண்டுபண்ணக் கூடிய அளவில் சிக்கல்கள் நிறைந்தனவாக உள்ளன; முன்னுக்குப் பின் முரண்பட்டனவாகவும் உள்ளன. நூலுக்கு நூல் மாறுபாடு கொண்டனவாகவும் உள்ளன. இன்னும் சொல்லப்போனால், காலப்பிழைகளும், கருத்துக் குழப்பங்களும் மேற்குறித்த நூல்களிலே இடம் பெற்றுள்ளன.

பாரதிக்கு வரலாற்றை எழுதிய ஆசிரியர்களில் பெரும்பாலோர், தெரிந்த செய்திகளுடன் சில நண்பர்கள் வழியாக அறிந்து கொண்டவற்றையும், பாரதி குடும்பத்தவர் தெரிவித்த சம்பவங்களையும், நினைவுக் குறிப்புக்களை வைத்துக் கொண்டும், பத்திரிகைகளில் வெளிவந்த கட்டுரைச் செய்திகளை ஆதாரமாகக் கொண்டும், சொந்தப்பாங்கான அனுபவங்களைக் கொண்டும், சிற்சில நூல்களில் இடம் பெற்றிருந்த செய்திக் குறிப்புக்களை அடிப்படையாகக் கொண்டும் நூல்களை எழுதினர்.

வெளிவந்த நூல்களில் சந்தேக நிவர்த்தி செய்து கொள்ள நினைத்தும், சந்தேகத்துக்கான விளக்கம் கிடைக்காத நிலையில், வருடக்கணக்கைத் தெரிவிக்கும் செய்திகளில் தவறுகள் நேர்ந்துவிட்டன. குறிப்பிட்ட நிகழ்ச்சிகளையோ, நிகழ்ச்சி ஆண்டுகளையோ உறுதி செய்து தெரிவிக்கக்கூடிய நிலையில் பலரும் அந்த நாளில் இல்லை என்பதும் வேதனை தரக்கூடிய செய்தியாகும்.

இத்துணைக்கும் மேலாக அந்தக் காலத்திலேயே - பாரதிக்கு மிக நெருக்கமானவர்களும், உள்ளன்புடன் பழகியவர்களும், உறவினர்களும் வாழ்ந்த காலத்திலேயே - பாரதியைப் புகழ வேண்டும் என்ற நோக்கத்தில் பற்பல கற்பனைக் கதைகள், கட்டுக்கதைகள், தவறான செய்திகள், வருஷப் புள்ளிகளில் தவறுகள் ஆகியன எல்லாம் பத்திரிகைகளிலும், நூல்களிலும் இழைய முற்பட்டுவிட்டன என்கிற பேருண்மையையும் முன்கூறிய நூல்களின் முகவுரை - பதிப்புரைகளால் அறிந்து கொள்கிறோம்.

பாரதியையே அறியாதவர்கள், அவரைப் பார்ப்பதற்கே பயந்தவர்கள் உட்படப் பற்பலரும் "புரளிக் கதை"களைக் கடைவிரிக்க ஆரம்பித்துவிட்ட கொடுமையையும் உணர்ந்துகொள்ள முடிகின்றது.

ஆக, ஆரம்ப நாளில் பாரதிக்கு வரலாறு கண்ட யாவரும் சான்றுகளின் துணைகொண்டோ, பாரதி ஆசிரியராய் இருந்த - தொடர்பு கொண்டிருந்த - நடத்திய பத்திரிகைகளின் துணைக்கொண்டோ, பாரதியே அவ்வப்போது பலருக்கு எழுதிய கடிதங்களின் உதவி கொண்டோ, ஆவணச் செய்திகளின் தன்மையை உறுதி செய்துகொண்டோ நூல்கள் எழுத முற்படவில்லை என்பது வெளிப்படை.

ஒவ்வொரு நூலாசிரியரும், ஒவ்வொரு கோணத்தில் பாரதியைக் கண்டு, தெளிந்து, தத்தம் படைப்புகளைப் படைத்தளித்தனர். இதன் காரணமாக, அந்நூல்களில் வரலாற்றுச் செய்திக் குழப்பங்களும், காலக்குறிப்புப் பிழைகளும் நேர்ந்தன.

மற்றும், காலந்தாழ்ந்து சம்பவங்களை நினைவுபடுத்தி எழுதுவதில் ஏற்படும் தவறுகளும் வரலாற்று நூல்களில் இடம்பெற்று விட்டன.

பாரதிக்கு வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புக்களோ, வரலாற்றுச் சுருக்க நூல்களோ இல்லாத நிலையிலும், இன்றுள்ள நவீன வசதிகள் எவையும் வாய்க்கப் பெறாத சூழ்நிலையிலும், தத்தமக்குக் கிடைத்த செய்திகளையும், குறிப்புக்களையும் திரட்டி, நினைவுகூர்ந்து பாரதிக்கு வரலாறு உருவாக வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் ஈடுபட்ட பெருமக்களுக்கு நாம் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்; மதிப்பும் மரியாதையும் செலுத்த வேண்டுவது நமது நன்றிக் கடன் ஆகும். 'நன்றி மறப்பது நன்றன்று'.

ஆகவே, பாரதிக்கு வரலாறு கண்ட முன்னோர்களின் பணிகளுக்கு நாம் தலைவணங்குவோமாக!

முன்னாளில் உருவான நூல்களில் கண்டுள்ள மாறுபட்டனவும், முரண்பட்டனவுமான செய்திகளைக் களைந்தும், காலக்கணக்கீட்டுப் பிழைகளை நீக்கியும், 'புரளிக்கதை'களைப் புகவிடாமலும், கற்பனை வளத்திற்கு இடங்கொடாமலும் இயன்றவரை ஆதாரபூர்வமான நூலைப் பாரதிக்கு ஆக்கி அளிக்க வேண்டும் என்று சி.விசுவநாத ஐயர் துடியாய்த் துடித்தார்.

அவ்வப்போது பாரதி வரலாற்று நூலுக்குத் துணைசெய்யும் வகையில் ஆதாரபூர்வமான - நம்பகமான - பல பயனுள்ள செய்திகளைத் தாங்கி ஒருசில நூல்கள் வெளிவரத்தான் செய்தன.

'உலகம் சுற்றிய தமிழர்' என்ற பெயரால் அழைக்கப்படும் திரு.ஏ.கே. செட்டியார் தமது குமரிமலர் இதழ் வழியாகச் செய்த பாரதிசேவையை யாரும் மறக்க முடியாது.

குறிப்பாகவும், சிறப்பாகவும், பாரதி வாழ்க்கை வரலாற்றுக்குத் துணைசெய்யும் நூல்கள் எழுதிய திருவாளர்கள் ரா.அ. பத்மநாபன், பெ. தூரன், தொ.மு.சி. ரகுநாதன், பெ.சு. மணி, கோ. கேசவன் ஆகியோர் பாரதீய உலகின் நன்றிக்குரியவர்கள் ஆவர்.

ஆனாலுங்கூட, திருத்தமான வரலாறு என்று கூறும்படி நூல் ஒன்று வரவில்லை என்ற குறை இருந்து வந்தது.

என் அளவில் நான் பாரதிக்கு முழுமையான ஆதாரங்களோடு கூடிய வரலாற்றை எழுதி முடிக்கும் பணியைப் புனிதமான தேசியத் திருப்பணி என்பதாக உணர்ந்தேன்.

பாரதியின் வரலாற்றை எழுதி முடிக்கும் பணியை நான் தேசியத் திருப்பணியாக எண்ணிய காலத்தில், நானே வரலாற்றை எழுதி முடிப்பேன் என்று கனவிலும் கருதவில்லை.

நன்றி: மகாகவி பாரதி வரலாறு - சீனி. விசுவநாதன் - 2, மாடல் ஹவுஸ் லேன், சி.ஐ.டி. நகர், சென்னை - 600 035.

பின்குறிப்பு: சீனி. விசுவநாதனை தொடர்புகொள்ள விரும்புபவர்கள் மேற்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.