நன்றாக பேசுகிறேன் என்றவர்கள்
எழுதச் சொன்னார்கள்
நன்றாக எழுதுவேன் என்ற நம்பிக்கையில்
என்ன எழுதுவதென்று கேட்டேன்
வாழ்க்கையைக் காட்டினார்கள்
ஆயத்தப்படுத்திக் கொள்ள ஆரம்பித்தேன்
வாழ்க்கையைப் படித்தேன்
மனிதர்களைப் படித்தேன்
புத்தகங்களைப் படித்தேன்
என் மூதாதையரும் சகாக்களும்
எழுதியதைப் படித்தேன்
ஏதென்ஸ் நகரத்துச்
சந்தையைப் பார்த்த சாக்ரடீஸ்
தனக்குத் தேவையற்ற பொருள்கள்
எவ்வளவு மலிந்துள்ளன
என்று நகர்ந்தது போல
என் தேவைக்குதவாத பாரங்களை
நகர்த்தி வைக்கத் தெரியாமல்
சிலுவையாய்ச் சுமந்துகொண்டு
அவதிபட்டேன் கொஞ்சகாலம்
அறிவுச் சுமையுடன்
பேனாவை மூடி வைத்தேன்
காற்று வந்தது
என்னைப் படிக்க ஆரம்பித்தேன்
எழுத்து பின்னால் வரலாம்
வராவிட்டாலும்
பாதிப்பென்று ஏதுமுண்டோ?
எழுதப்பட்ட நாள்: மே 21, 2004
Friday, May 21, 2004
பின்னோக்கி 1986க்குப் போகிறேன்
நான் பன்னிரண்டாம் வகுப்புவரை நகரத்தில் படித்தேன். திருப்பத்தூர். பேருக்குத்தான் நகரம். வடாற்காடு மாவட்டத்தில் வேலூரிலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் சேலம், தருமபுரி செல்லும் வழியில் இருக்கிறது. வானாதி பூதங்கள் வரையாது பொழிவதில்லை என்று வடாற்காட்டைப் பற்றிச் சொல்வார்கள். திருப்பத்தூருக்கும் அது பொருந்தும். அது நாகரீகத்தின் நவீனங்களை உடனுக்குடன் எட்டிப் பிடித்துவிடுகிற நகரம் இல்லை. தொழிற்சாலைகள் நிறைந்த நகரமும் இல்லை. நதிகளும் எதுவும் அருகில் இல்லை. ஒரு 25 கிலோமீட்டர்கள் தள்ளிப் போனால் மணல் தெரிய விரிந்து கிடந்து தோல் பதனிடும் தொழிற்சாலைகளின் கழிவுகள் கொஞ்சம் கொஞ்சமாய் கொன்று கொண்டிருக்கிற பாலாற்றைப் பார்க்கலாம். எட்டு கிலோமீட்டர் தொலைவில் ஜோலார்பேட்டை என்னும் ரயில்வே சந்திப்பு நிலையம் உண்டு. எனவே, உள்ளூர் ரயில் நிலையமும் சோபித்துச் சொல்லக் கூடியதாய் இல்லை. உயர்நிலைப் பள்ளிப் படிப்பின்போதும், கல்லூரி விடுமுறைகளின்போது மாலைப் பொழுதுகளில் நண்பர்களுடன் சென்று அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருக்கவே எங்களூர் ரயில் நிலையம் பிறரைப் போல எனக்கும் உதவியது. பத்து கிலோமீட்டர்கள் தள்ளி ஏலகிரி மலையையும், மறுபுறம் இன்னும் கொஞ்சம் தள்ளிப் போனால் ஜவ்வாது மலைத் தொடரையும் எட்டிப் பிடித்து விடலாம். தேர்தல்கால அரசியல்வாதியின் அன்பைப் போல, மழைகாலங்களில் பெருக்கெடுத்துக் கொட்டிப் பின் பாறைகளின் அனல் பறக்கிற ஜலகாம்பாறை என்கிற நீர்வீழ்ச்சி பத்துகிலோ மீட்டர் தொலைவில் ஏலகிரி மலையையும் ஜவ்வாது மலைத் தொடரையும் இணைத்து நின்றிருக்கும்.
இவை யாவுமே காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு என்ற ரீதியில் சிலாகிக்கத் தக்கவையே தவிர, நகரின் புகழ் சொல்லுகிற அடையாளங்கள் இல்லை. பள்ளியில் படிக்கிற காலங்களில் ஜலகாம்பாறையைச் சுற்றியிருக்கிற காடு மலைகளில் அலைந்து திரிந்திருக்கிறோம். வீட்டுக்குச் சொல்லாமல் - சொன்னால் அனுமதிக்க மாட்டார்கள் என்று - டிரெக்கிங் போயிருக்கிறோம். சைக்கிளில் ஊரிலிருந்து ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஏலகிரிமலை அடிவாரம், ஜலகாம்பாறை என்று பல இடங்களில் நண்பர்களுடன் உற்சாகமாகச் சுற்றியிருக்கிறோம். அந்தக் காலத்தில் - ரிலீசான புதிய திரைப்படங்கள்கூட தாமதமாகவே எங்கள் ஊர் தியேட்டர்கள் எனப்படும் நவீனக் கொட்டகைகளுக்கு வரும். ஆடிக்கொருமுறை எப்போதாவது ஒரு புதுப்படத்தை எங்கள் ஊரிலும் ரிலீஸ் செய்வார்கள். "புதிய ரிலீஸ்" என்கிற பெயரில் ஒற்றை மாட்டுவண்டியில் இருபக்கமும் போஸ்டர் ஒட்டி மைக்கில் அறிவித்துச் செல்வார்கள். வண்டிக்குப் பின்னே ஓடி சினிமா நோட்டீஸ் வாங்குகிற சிறுவனாக இருந்திருக்கிறேன்.
என் நகரத்துக்குப் பெருமைகளே இல்லையா என்றால் பின்வருவனவற்றைச் சொல்லலாம். தூயநெஞ்சக் கல்லூரி என்கிற ஒரு புகழ்பெற்றக் கல்லூரி இருக்கிறது. சென்னை எம்.ஐ.டி.யில் பயின்ற மாணவர்களிடம் கேட்டீர்களேயானால் அதை "வண்டி காலேஜ்" என்று சொல்வார்கள். வண்டி வண்டியாக மாணவர்களை சென்னை எம்.ஐ.டி.க்கு அனுப்பியதால் அந்தப் பெயராம். கிறித்துவ நிர்வாகம் நடத்துகிற அந்தக் கல்லூரி கட்டுப்பாட்டுக்கும் கல்விக்கும் பெயர் போனது. கடின உழைப்புடன் மனப்பாடம் செய்கிற முறையில் மாணவர்களுக்கு அங்கே போதிக்கப்படுகிறது என்று அந்தக் கல்லூரி பற்றியும அந்தக் காலத்தில் விமர்சனங்கள் உண்டு. ஆனாலும், தேர்வுகளில் அக்கல்லூரியில் பயின்ற மாணவர்கள் எடுத்த மதிப்பெண்கள், கல்லூரியின் தேர்ச்சி விகிதம், அக்கல்லூரியிலிருந்து மேற்படிப்புக்குச் செல்கிற மாணவர்கள் என்று பல காரணங்களால் அக்கல்லூரி மிகவும் புகழ்பெற்றது. அக்கல்லூரியின் வாலிபால் அணி தமிழகக் கல்லூரி அணிகளுள் மிகச் சிறந்த ஒன்றாகப் பல ஆண்டுகளாக இருந்து வந்தது. தூய நெஞ்சக் கல்லூரிக்கு அடுத்தபடியாக டான் பாஸ்கோ என்கிற பள்ளியும், மேரி இம்மாகுலேட் கான்வெண்ட் என்கிற பெண்கள் பள்ளியும் எங்கள் ஊரில் இருந்தன. இவையில்லாமல் பிற பள்ளிக் கூடங்களும் இருந்தன. அவற்றுள் ஒன்று நான் படித்த இராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி.
சுற்றியிருக்கிற கிராமங்களுக்கு நகரமாகத் தோன்றினாலும், நுனிநாக்கு ஆங்கிலம், பேஷன் உடைகள் என்று எதுவும் அப்போது புகுந்திராத நகரம் அது. அங்கேதான் நான் பன்னிரண்டாம் வகுப்புவரை தமிழ் மீடியத்தில் படித்தேன். ஆறாம் வகுப்பில் ஒரு வருடம் ஆங்கில மீடியத்தில் படித்துவிட்டுப் பின்னர் அது கடினமாகத் தோன்றவே, நம்மால் தாக்குப் பிடிக்க முடியாது என்று ஏழாம் வகுப்பிலிருந்து தமிழ் மீடியத்துக்கே ஓடிவந்து விட்டேன். எட்டாம் வகுப்பு ஓர் வருடம் ஒரு சுற்றுப்புற கிராமத்தில் படித்தேன் என்பதையும் சொல்ல வேண்டும். உள்ளூர் கல்லூரியில் பி.எஸ்.ஸி. பிஸிக்ஸ் இடம் கிடைத்தது. கோயமுத்தூர் PSG கலை அறிவியல் கல்லூரியில் இருந்தும் அதே பட்டவகுப்புக்கு அனுமதி கிடைத்திருந்தது. எங்கள் ஊர் கல்லூரி கட்டுப்பாடுகளுக்குப் பெயர் போனது. அடிப்படையில் நானோ செய்ய வேண்டாம் என்று யாரேனும் சொன்னால், அதைச் செய்தால் என்ன என்று கேட்கிற துடுக்குத்தனம் நிறைந்தவன். தந்தையின் நண்பர்களும் பிறரும் PSG கல்லூரி குழுமத்தின் அருமைப் பெருமைகளை வேறு எடுத்துச் சொன்னார்கள். வெளியூரில் படித்தால் உலக அனுபவமும் கிடைக்கும் என்பதால் தன் சக்திக்கு மீறி என் தந்தையார் என்னைக் கோவை PSG கலை அறிவியல் கல்லூரியில் பி.எஸ்.ஸி. பிஸிக்ஸ் படிப்பில் சேர்த்து விட்டார். அதுதான் எனக்கு எவ்வளவு உதவியது, என்னை வடிவமைத்துக் கொள்ளவும் என் வாழ்க்கைக் கல்விக்கும் எனக்கு எவ்வளவு துணை புரிந்தது என்பதை இப்போது நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன்.
முதலில் கல்லூரி விடுதியில் இடம் கிடைக்கவில்லை. எனவே, அப்பாவின் நண்பர் வீட்டில் தங்கியபடி சிலமாதங்கள் கல்லூரி சென்று வந்தேன். கோவை போன்ற ஒரு மாநகரின் சுவாசம் எனக்கு ஏற்படுத்திய ஆச்சரிய அலைகள் அநேகம். கல்லூரியோ எடுத்த எடுப்பிலேயே அதன் பிரம்மாண்டத்தில் பயமுறுத்தியது. கோ-எடிகேஷன் வேறு. எந்த சங்கோஜமும் இல்லாமல் ஆண் மாணவர்கள் பெண் மாணவிகளிடம் பேசுவதும் பழகுவதும் என்று மேலைநாட்டு சினிமா பார்ப்பதுபோல இருந்தது. என் கூச்ச சுபாவத்தைவிட்டு வெளிவர எனக்கு நாள்கள், மாதங்கள் பிடித்தன. நுனிநாக்கு ஆங்கிலத்தில் பிளிறுகிற மாணவ மாணவிகள். பட்டிக்காட்டான் மிட்டாய்கடையைப் பார்ப்பதுபோல அந்தக் கலாசார அதிர்ச்சிக்கு என்னைப் பழக்கிக் கொண்டேன். தமிழ் மீடியத்தில் படித்ததால் வகுப்புகள் ஆங்கிலத்தில் இருப்பதும் ஆசிரியர்களும் மாணவர்களும் ஆங்கிலத்திலேயே பேசிக் கொள்வதும் முதல் செமஸ்டரில் மிகவும் கடினமாக இருந்தது. என் வழக்கப்படி நான் கடைசி பெஞ்சில் அமர்ந்திருந்தேன். முதல் மூன்று மாதத்துக்கு ராக்கிங் தொல்லைகள் வேறு. எல்லாமே புதிதாகவும் கண்ணைக் கட்டி வேறு கிரகத்தில் விட்ட மாதிரியும் இருந்தன.
அப்போது வகுப்பில் எனக்கு அடுத்து அமர்ந்திருந்த நண்பர் நாங்கள் விச்சு என்று அழைத்த விஸ்வநாதன். கோவையின் புகழ்பெற்ற பள்ளியான சபர்மன் மேல்நிலைப் பள்ளியில் படித்துவிட்டு வந்திருந்தார். அவர் மேல்நிலைக் கல்வியில் அப்போதே வாங்கியிருந்த மதிப்பெண்கள் வாயைப் பிளக்க வைத்தன. 96%க்கும் மேலாக இயற்பியல், கணிதம் மற்றும் வேதியியல் பாடங்களின் கூட்டுத்தொகையை வைத்திருந்தார். ஏன் இஞ்சினீயரிங் போகவில்லை என்று கேட்டதற்கு, அந்த வருடம் ஐ.ஐ.டி.யில் சீட் கிடைக்கவில்லை என்றும், அடுத்த வருடம் முயலப் போவதாகவும் சொன்ன ஞாபகம். வகுப்பில் நடப்பது எதுவும் புரியாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு பேயடித்ததுபோல் உட்கார்ந்திருந்த என் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்வார் அவர். ஆங்கிலத்தில் பேராசிரியர் நடத்துவது புரியவில்லையென்றால், இவர் தமிழில் எனக்கு உடனடியாக ரன்னிங் கமெண்ட்டரி கொடுப்பார். இவ்வளவு அறிவுடன் ஒருவர் இருக்க முடியுமா என்று எனக்கு அவரைப் பற்றிய ஆச்சரியம். Path of a projectile is a parabola என்று மெக்கானிக்ஸ் பேராசிரியர் எஸ்.பாலசுந்தரம் போர்டில் சமன்பாட்டை எழுதிக் கொண்டிருக்கும்போதே, அதைப் பற்றித் தமிழில் அழகாக விளக்கி, மேல்நிலைப் பள்ளியின்போது அதைப் பற்றி என்ன படித்தோம் என்கிற நினைவூட்டலையும் செய்துவிடுவார் விச்சு. படிப்பு மட்டுமில்லாமல் மாநகர வாழ்வு குறித்த பொது அறிவு, கல்லூரி வாழ்வு குறித்து நான் அறிய வேண்டியவை என்றெல்லாம் நிறைய அவருடன் பேசிக் கற்றுக் கொண்டிருக்கிறேன். என் தமிழ் ஆர்வம் கண்டு அவருக்கு மிகவும் பெருமை. அதுகுறித்து எனக்கு ஒரு நல்ல பட்டப் பெயரை அவர் கல்லூரியில் வழங்கியதும், நண்பர்கள் அந்தப் பெயரில் என்னை அழைக்க ஆரம்பித்ததும் இன்னமும் நினைவில் இருக்கிறது. Internal Exams-களில் நான் எடுக்கிற மார்க்குகள் பார்த்து மகிழ்வார். கஷ்டமாக இருக்கிறது என்றாயே, பார் நீயும் நானும் ஏறக்குறைய ஒரே மார்க்தான் வாங்கியிருக்கிறோம் என்று சுட்டிக் காட்டுவார். கஷ்டம் கஷ்டமென்று புலம்பியே அந்தப் பயத்தில் நன்றாகப் படித்து விடுகிறாய் என்று சுட்டிக் காட்டினார். அறிவுடன் பிறக்கத் தேவையில்லை. கடின உழைப்பால் வெல்ல முடியும் என்கிற ரகசியத்தை நான் அறிந்து கொள்ள எனக்கு உதவியவர் அவர்.
வார விடுமுறைகளில் சில வாரங்கள் அவர் வீட்டுக்குச் சென்றுகூட படித்திருக்கிறேன். முதல் செமஸ்டரில் ஒரு கப்பும் வாங்காமல் நான் எல்லா பேப்பர்களிலும் பிழைத்து எழுந்ததற்கு அவருக்குப் பெரும்பங்கு உண்டு. அறிவின் செருக்கு எதுவுமின்றி இயல்பாய்ப் பழகுவார். மூன்று மாதங்களுக்குப் பின் எனக்கு ஹாஸ்டல் கிடைத்து விட்டது. அவர் வீடு கோவையிலேயே இருந்ததால் அவர் டே ஸ்காலராகவே இருந்தார். ஆனாலும், நட்பின் இறுக்கம் தளராமல் ஒரு வருடம் அவருடன் கழித்த நாள்கள் இன்னும் நினைவில் இருக்கின்றன. அவருக்கு மலேஷியாவில் குடும்பமும் உறவினர்களும் இருந்தனர். வருட விடுமுறையில் மலேஷியா சென்றார். போகும்போது விமானத்திலிருந்து ஒரு வாழ்த்து அட்டை அனுப்பியிருந்தது நினைவில் இருக்கிறது. அப்புறம் அடுத்த வருடம் அவர் சொன்ன மாதிரியே சென்னை ஐ.ஐ.டி.யில் சீட் கிடைத்துச் சேர்ந்தார். அவர் விட்டுப் போனது என்னளவில் எனக்குப் பாதிப்பென்றாலும், அவருக்கு அது மிகவும் நல்லது என்று மகிழ்ந்தேன்.
அதற்கப்புறம் - அவ்வப்போது கடிதங்களில் தொடர்பு இருந்தது. தொடர்பில்லாமலும் போனது. பல வருடங்கள் கழித்து, படித்து முடித்து வெளிவந்ததும் alumni.net இணையதளத்தின் மூலம் அறிந்து தொடர்பு கொண்டார். அப்போது நானும் என் படிப்பையெல்லாம் முடித்துவிட்டு வாழ்க்கையில் செட்டிலாகி விட்டிருந்தேன். அவரும் படித்து முடித்து மலேஷியாவிலேயே ஓர் உலகப் புகழ் பெற்ற நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்ததாகச் சொன்னார். அப்புறம் அவருக்குத் திருமணமாயிற்று. அவர் மனைவியும் நானும் ஒரே நிறுவனத்தில் சென்னையில் பணிபுரிந்திருக்கிறோம் என்று அறிந்தேன். ஆனால், அவர் மனைவியை நான் அப்போது அறிந்திருக்கவில்லை. பின்னர் தொடர்பு விட்டுப் போயிற்று.
திடீரென்று பலநாள்கள் கழித்து இன்றைக்கு என் ஹாட்மெயில் அக்கவுண்ட்டைத் திறந்து பார்த்தேன். நிறைய ஜங்க் மெயில்கள் வருவதால் நான் அந்தப் பக்கம் அடிக்கடி போவதில்லை. பார்த்தால் நண்பர் விஸ்வநாதனிடமிருந்து ஒரு மடல். எதேச்சையாக pksivakumar.blogspot.com என்கிற பதிவைப் பார்க்க நேர்ந்தது. அது நன்றாக இருக்கிறது. அதை வைத்திருப்பது நான்தானா எனக் கேட்டு. இணையத்தின் உதவியால் தொடர்பு விட்டுப் போன நண்பர்கள் எனக்குக் கிடைத்திருக்கிறார்கள். விச்சுவே முன்னர் இணையம்வழியாகவே என்னைக் கண்டறிந்தார்.
மீண்டும் என் வலைப்பதிவைப் பார்த்து அவர் பாராட்டி எழுதியக் கடிதத்தைப் பார்த்ததும் "சில மனிதர்கள் மாறுவதே இல்லை. உற்சாகப்படுத்துவதிலும் நேர்மறையான பாதிப்பாக இருந்து உதவுவதிலும் நட்பை மறவாமல் தொடர்வதிலும் இருந்து" என்று தோன்றியது. என் கல்லூரி வாழ்விலும் பின்னர் நிஜவாழ்விலும் நான் ஏதேனும் சாதித்திருந்தால் அவற்றையெல்லாம் நல்லவிதமாக நான் தொடங்குவதற்கு உடனிருந்து உதவியர் நண்பர் விச்சு. அவரைப் பற்றி இங்கு பதிவதைவிட எனக்கு வேறென்ன மகிழ்ச்சி இருக்க முடியும்?
இவை யாவுமே காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு என்ற ரீதியில் சிலாகிக்கத் தக்கவையே தவிர, நகரின் புகழ் சொல்லுகிற அடையாளங்கள் இல்லை. பள்ளியில் படிக்கிற காலங்களில் ஜலகாம்பாறையைச் சுற்றியிருக்கிற காடு மலைகளில் அலைந்து திரிந்திருக்கிறோம். வீட்டுக்குச் சொல்லாமல் - சொன்னால் அனுமதிக்க மாட்டார்கள் என்று - டிரெக்கிங் போயிருக்கிறோம். சைக்கிளில் ஊரிலிருந்து ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஏலகிரிமலை அடிவாரம், ஜலகாம்பாறை என்று பல இடங்களில் நண்பர்களுடன் உற்சாகமாகச் சுற்றியிருக்கிறோம். அந்தக் காலத்தில் - ரிலீசான புதிய திரைப்படங்கள்கூட தாமதமாகவே எங்கள் ஊர் தியேட்டர்கள் எனப்படும் நவீனக் கொட்டகைகளுக்கு வரும். ஆடிக்கொருமுறை எப்போதாவது ஒரு புதுப்படத்தை எங்கள் ஊரிலும் ரிலீஸ் செய்வார்கள். "புதிய ரிலீஸ்" என்கிற பெயரில் ஒற்றை மாட்டுவண்டியில் இருபக்கமும் போஸ்டர் ஒட்டி மைக்கில் அறிவித்துச் செல்வார்கள். வண்டிக்குப் பின்னே ஓடி சினிமா நோட்டீஸ் வாங்குகிற சிறுவனாக இருந்திருக்கிறேன்.
என் நகரத்துக்குப் பெருமைகளே இல்லையா என்றால் பின்வருவனவற்றைச் சொல்லலாம். தூயநெஞ்சக் கல்லூரி என்கிற ஒரு புகழ்பெற்றக் கல்லூரி இருக்கிறது. சென்னை எம்.ஐ.டி.யில் பயின்ற மாணவர்களிடம் கேட்டீர்களேயானால் அதை "வண்டி காலேஜ்" என்று சொல்வார்கள். வண்டி வண்டியாக மாணவர்களை சென்னை எம்.ஐ.டி.க்கு அனுப்பியதால் அந்தப் பெயராம். கிறித்துவ நிர்வாகம் நடத்துகிற அந்தக் கல்லூரி கட்டுப்பாட்டுக்கும் கல்விக்கும் பெயர் போனது. கடின உழைப்புடன் மனப்பாடம் செய்கிற முறையில் மாணவர்களுக்கு அங்கே போதிக்கப்படுகிறது என்று அந்தக் கல்லூரி பற்றியும அந்தக் காலத்தில் விமர்சனங்கள் உண்டு. ஆனாலும், தேர்வுகளில் அக்கல்லூரியில் பயின்ற மாணவர்கள் எடுத்த மதிப்பெண்கள், கல்லூரியின் தேர்ச்சி விகிதம், அக்கல்லூரியிலிருந்து மேற்படிப்புக்குச் செல்கிற மாணவர்கள் என்று பல காரணங்களால் அக்கல்லூரி மிகவும் புகழ்பெற்றது. அக்கல்லூரியின் வாலிபால் அணி தமிழகக் கல்லூரி அணிகளுள் மிகச் சிறந்த ஒன்றாகப் பல ஆண்டுகளாக இருந்து வந்தது. தூய நெஞ்சக் கல்லூரிக்கு அடுத்தபடியாக டான் பாஸ்கோ என்கிற பள்ளியும், மேரி இம்மாகுலேட் கான்வெண்ட் என்கிற பெண்கள் பள்ளியும் எங்கள் ஊரில் இருந்தன. இவையில்லாமல் பிற பள்ளிக் கூடங்களும் இருந்தன. அவற்றுள் ஒன்று நான் படித்த இராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி.
சுற்றியிருக்கிற கிராமங்களுக்கு நகரமாகத் தோன்றினாலும், நுனிநாக்கு ஆங்கிலம், பேஷன் உடைகள் என்று எதுவும் அப்போது புகுந்திராத நகரம் அது. அங்கேதான் நான் பன்னிரண்டாம் வகுப்புவரை தமிழ் மீடியத்தில் படித்தேன். ஆறாம் வகுப்பில் ஒரு வருடம் ஆங்கில மீடியத்தில் படித்துவிட்டுப் பின்னர் அது கடினமாகத் தோன்றவே, நம்மால் தாக்குப் பிடிக்க முடியாது என்று ஏழாம் வகுப்பிலிருந்து தமிழ் மீடியத்துக்கே ஓடிவந்து விட்டேன். எட்டாம் வகுப்பு ஓர் வருடம் ஒரு சுற்றுப்புற கிராமத்தில் படித்தேன் என்பதையும் சொல்ல வேண்டும். உள்ளூர் கல்லூரியில் பி.எஸ்.ஸி. பிஸிக்ஸ் இடம் கிடைத்தது. கோயமுத்தூர் PSG கலை அறிவியல் கல்லூரியில் இருந்தும் அதே பட்டவகுப்புக்கு அனுமதி கிடைத்திருந்தது. எங்கள் ஊர் கல்லூரி கட்டுப்பாடுகளுக்குப் பெயர் போனது. அடிப்படையில் நானோ செய்ய வேண்டாம் என்று யாரேனும் சொன்னால், அதைச் செய்தால் என்ன என்று கேட்கிற துடுக்குத்தனம் நிறைந்தவன். தந்தையின் நண்பர்களும் பிறரும் PSG கல்லூரி குழுமத்தின் அருமைப் பெருமைகளை வேறு எடுத்துச் சொன்னார்கள். வெளியூரில் படித்தால் உலக அனுபவமும் கிடைக்கும் என்பதால் தன் சக்திக்கு மீறி என் தந்தையார் என்னைக் கோவை PSG கலை அறிவியல் கல்லூரியில் பி.எஸ்.ஸி. பிஸிக்ஸ் படிப்பில் சேர்த்து விட்டார். அதுதான் எனக்கு எவ்வளவு உதவியது, என்னை வடிவமைத்துக் கொள்ளவும் என் வாழ்க்கைக் கல்விக்கும் எனக்கு எவ்வளவு துணை புரிந்தது என்பதை இப்போது நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன்.
முதலில் கல்லூரி விடுதியில் இடம் கிடைக்கவில்லை. எனவே, அப்பாவின் நண்பர் வீட்டில் தங்கியபடி சிலமாதங்கள் கல்லூரி சென்று வந்தேன். கோவை போன்ற ஒரு மாநகரின் சுவாசம் எனக்கு ஏற்படுத்திய ஆச்சரிய அலைகள் அநேகம். கல்லூரியோ எடுத்த எடுப்பிலேயே அதன் பிரம்மாண்டத்தில் பயமுறுத்தியது. கோ-எடிகேஷன் வேறு. எந்த சங்கோஜமும் இல்லாமல் ஆண் மாணவர்கள் பெண் மாணவிகளிடம் பேசுவதும் பழகுவதும் என்று மேலைநாட்டு சினிமா பார்ப்பதுபோல இருந்தது. என் கூச்ச சுபாவத்தைவிட்டு வெளிவர எனக்கு நாள்கள், மாதங்கள் பிடித்தன. நுனிநாக்கு ஆங்கிலத்தில் பிளிறுகிற மாணவ மாணவிகள். பட்டிக்காட்டான் மிட்டாய்கடையைப் பார்ப்பதுபோல அந்தக் கலாசார அதிர்ச்சிக்கு என்னைப் பழக்கிக் கொண்டேன். தமிழ் மீடியத்தில் படித்ததால் வகுப்புகள் ஆங்கிலத்தில் இருப்பதும் ஆசிரியர்களும் மாணவர்களும் ஆங்கிலத்திலேயே பேசிக் கொள்வதும் முதல் செமஸ்டரில் மிகவும் கடினமாக இருந்தது. என் வழக்கப்படி நான் கடைசி பெஞ்சில் அமர்ந்திருந்தேன். முதல் மூன்று மாதத்துக்கு ராக்கிங் தொல்லைகள் வேறு. எல்லாமே புதிதாகவும் கண்ணைக் கட்டி வேறு கிரகத்தில் விட்ட மாதிரியும் இருந்தன.
அப்போது வகுப்பில் எனக்கு அடுத்து அமர்ந்திருந்த நண்பர் நாங்கள் விச்சு என்று அழைத்த விஸ்வநாதன். கோவையின் புகழ்பெற்ற பள்ளியான சபர்மன் மேல்நிலைப் பள்ளியில் படித்துவிட்டு வந்திருந்தார். அவர் மேல்நிலைக் கல்வியில் அப்போதே வாங்கியிருந்த மதிப்பெண்கள் வாயைப் பிளக்க வைத்தன. 96%க்கும் மேலாக இயற்பியல், கணிதம் மற்றும் வேதியியல் பாடங்களின் கூட்டுத்தொகையை வைத்திருந்தார். ஏன் இஞ்சினீயரிங் போகவில்லை என்று கேட்டதற்கு, அந்த வருடம் ஐ.ஐ.டி.யில் சீட் கிடைக்கவில்லை என்றும், அடுத்த வருடம் முயலப் போவதாகவும் சொன்ன ஞாபகம். வகுப்பில் நடப்பது எதுவும் புரியாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு பேயடித்ததுபோல் உட்கார்ந்திருந்த என் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்வார் அவர். ஆங்கிலத்தில் பேராசிரியர் நடத்துவது புரியவில்லையென்றால், இவர் தமிழில் எனக்கு உடனடியாக ரன்னிங் கமெண்ட்டரி கொடுப்பார். இவ்வளவு அறிவுடன் ஒருவர் இருக்க முடியுமா என்று எனக்கு அவரைப் பற்றிய ஆச்சரியம். Path of a projectile is a parabola என்று மெக்கானிக்ஸ் பேராசிரியர் எஸ்.பாலசுந்தரம் போர்டில் சமன்பாட்டை எழுதிக் கொண்டிருக்கும்போதே, அதைப் பற்றித் தமிழில் அழகாக விளக்கி, மேல்நிலைப் பள்ளியின்போது அதைப் பற்றி என்ன படித்தோம் என்கிற நினைவூட்டலையும் செய்துவிடுவார் விச்சு. படிப்பு மட்டுமில்லாமல் மாநகர வாழ்வு குறித்த பொது அறிவு, கல்லூரி வாழ்வு குறித்து நான் அறிய வேண்டியவை என்றெல்லாம் நிறைய அவருடன் பேசிக் கற்றுக் கொண்டிருக்கிறேன். என் தமிழ் ஆர்வம் கண்டு அவருக்கு மிகவும் பெருமை. அதுகுறித்து எனக்கு ஒரு நல்ல பட்டப் பெயரை அவர் கல்லூரியில் வழங்கியதும், நண்பர்கள் அந்தப் பெயரில் என்னை அழைக்க ஆரம்பித்ததும் இன்னமும் நினைவில் இருக்கிறது. Internal Exams-களில் நான் எடுக்கிற மார்க்குகள் பார்த்து மகிழ்வார். கஷ்டமாக இருக்கிறது என்றாயே, பார் நீயும் நானும் ஏறக்குறைய ஒரே மார்க்தான் வாங்கியிருக்கிறோம் என்று சுட்டிக் காட்டுவார். கஷ்டம் கஷ்டமென்று புலம்பியே அந்தப் பயத்தில் நன்றாகப் படித்து விடுகிறாய் என்று சுட்டிக் காட்டினார். அறிவுடன் பிறக்கத் தேவையில்லை. கடின உழைப்பால் வெல்ல முடியும் என்கிற ரகசியத்தை நான் அறிந்து கொள்ள எனக்கு உதவியவர் அவர்.
வார விடுமுறைகளில் சில வாரங்கள் அவர் வீட்டுக்குச் சென்றுகூட படித்திருக்கிறேன். முதல் செமஸ்டரில் ஒரு கப்பும் வாங்காமல் நான் எல்லா பேப்பர்களிலும் பிழைத்து எழுந்ததற்கு அவருக்குப் பெரும்பங்கு உண்டு. அறிவின் செருக்கு எதுவுமின்றி இயல்பாய்ப் பழகுவார். மூன்று மாதங்களுக்குப் பின் எனக்கு ஹாஸ்டல் கிடைத்து விட்டது. அவர் வீடு கோவையிலேயே இருந்ததால் அவர் டே ஸ்காலராகவே இருந்தார். ஆனாலும், நட்பின் இறுக்கம் தளராமல் ஒரு வருடம் அவருடன் கழித்த நாள்கள் இன்னும் நினைவில் இருக்கின்றன. அவருக்கு மலேஷியாவில் குடும்பமும் உறவினர்களும் இருந்தனர். வருட விடுமுறையில் மலேஷியா சென்றார். போகும்போது விமானத்திலிருந்து ஒரு வாழ்த்து அட்டை அனுப்பியிருந்தது நினைவில் இருக்கிறது. அப்புறம் அடுத்த வருடம் அவர் சொன்ன மாதிரியே சென்னை ஐ.ஐ.டி.யில் சீட் கிடைத்துச் சேர்ந்தார். அவர் விட்டுப் போனது என்னளவில் எனக்குப் பாதிப்பென்றாலும், அவருக்கு அது மிகவும் நல்லது என்று மகிழ்ந்தேன்.
அதற்கப்புறம் - அவ்வப்போது கடிதங்களில் தொடர்பு இருந்தது. தொடர்பில்லாமலும் போனது. பல வருடங்கள் கழித்து, படித்து முடித்து வெளிவந்ததும் alumni.net இணையதளத்தின் மூலம் அறிந்து தொடர்பு கொண்டார். அப்போது நானும் என் படிப்பையெல்லாம் முடித்துவிட்டு வாழ்க்கையில் செட்டிலாகி விட்டிருந்தேன். அவரும் படித்து முடித்து மலேஷியாவிலேயே ஓர் உலகப் புகழ் பெற்ற நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்ததாகச் சொன்னார். அப்புறம் அவருக்குத் திருமணமாயிற்று. அவர் மனைவியும் நானும் ஒரே நிறுவனத்தில் சென்னையில் பணிபுரிந்திருக்கிறோம் என்று அறிந்தேன். ஆனால், அவர் மனைவியை நான் அப்போது அறிந்திருக்கவில்லை. பின்னர் தொடர்பு விட்டுப் போயிற்று.
திடீரென்று பலநாள்கள் கழித்து இன்றைக்கு என் ஹாட்மெயில் அக்கவுண்ட்டைத் திறந்து பார்த்தேன். நிறைய ஜங்க் மெயில்கள் வருவதால் நான் அந்தப் பக்கம் அடிக்கடி போவதில்லை. பார்த்தால் நண்பர் விஸ்வநாதனிடமிருந்து ஒரு மடல். எதேச்சையாக pksivakumar.blogspot.com என்கிற பதிவைப் பார்க்க நேர்ந்தது. அது நன்றாக இருக்கிறது. அதை வைத்திருப்பது நான்தானா எனக் கேட்டு. இணையத்தின் உதவியால் தொடர்பு விட்டுப் போன நண்பர்கள் எனக்குக் கிடைத்திருக்கிறார்கள். விச்சுவே முன்னர் இணையம்வழியாகவே என்னைக் கண்டறிந்தார்.
மீண்டும் என் வலைப்பதிவைப் பார்த்து அவர் பாராட்டி எழுதியக் கடிதத்தைப் பார்த்ததும் "சில மனிதர்கள் மாறுவதே இல்லை. உற்சாகப்படுத்துவதிலும் நேர்மறையான பாதிப்பாக இருந்து உதவுவதிலும் நட்பை மறவாமல் தொடர்வதிலும் இருந்து" என்று தோன்றியது. என் கல்லூரி வாழ்விலும் பின்னர் நிஜவாழ்விலும் நான் ஏதேனும் சாதித்திருந்தால் அவற்றையெல்லாம் நல்லவிதமாக நான் தொடங்குவதற்கு உடனிருந்து உதவியர் நண்பர் விச்சு. அவரைப் பற்றி இங்கு பதிவதைவிட எனக்கு வேறென்ன மகிழ்ச்சி இருக்க முடியும்?
Thursday, May 20, 2004
இயல்பாகிப்போகும் இயல்பற்றவை
சுமாராய்ப் படித்து
பார்டரில் பாஸான மகனுக்கு
அரசாங்க உத்தியோகம்
கேட்டார் தந்தை
ஸ்டிரைக் செய்த
காலத்துக்கும்
சம்பளம் வேண்டுமென்று
கேட்டார் யூனியன் தலைவர்
ஊரில் செய்கிற பிஸினஸ்
பாதிக்கப்படாமல் இருக்க
வேறூருக்கு வந்த மாறுதலை
ரத்து பண்ணச் சொல்லிக்
கேட்டார் ஆசிரியர்
சிறுவிவசாயிகளூக்குக்
கிடைக்கிற சலுகைகள்
பண்ணையாளும் டிராக்டரும்
வைத்திருக்கிறவர்களூக்கும்
வேண்டுமென்று கேட்டார்
விவசாய சங்கத் தலைவர்
தன் ஜாதிக்கு
பத்து சதவீதம்
இடஒதுக்கீடு கேட்டார்
ஜாதிசங்கத் தலைவர்
அரசாங்க ஊழியர்
வேலை செய்யாதபோது
நடவடிக்கை எடுக்காமல்
அழைத்துப் பேசவேண்டும்
என்றார் அரசாங்க ஊழியர்
படித்த புதுமைப்பெண்ணுக்கு
சிரமங்கள் இல்லாமல்
வீட்டுக்கருகிலேயே
வேலை வேண்டுமென்றார்
பெண்விடுதலைக்காரர்
கேள்வித்தாள் கடினமென்று
பாஸ் போடச்சொல்லிக்
கேட்டார் மாணவர் தலைவர்
வணிகவரியைக்
குறைக்கச் சொல்லிக்
கேட்டார் வணிகர்சங்கத் தலைவர்
தனக்கு
என்ன வேண்டுமென்று
யோசிக்க ஆரம்பித்தார்
அனைத்துக்கும் தலையாட்டின
புதிதாகப் பதவியேற்ற மந்திரி
எழுதப்பட்ட நாள்: மே 20, 2004.
பார்டரில் பாஸான மகனுக்கு
அரசாங்க உத்தியோகம்
கேட்டார் தந்தை
ஸ்டிரைக் செய்த
காலத்துக்கும்
சம்பளம் வேண்டுமென்று
கேட்டார் யூனியன் தலைவர்
ஊரில் செய்கிற பிஸினஸ்
பாதிக்கப்படாமல் இருக்க
வேறூருக்கு வந்த மாறுதலை
ரத்து பண்ணச் சொல்லிக்
கேட்டார் ஆசிரியர்
சிறுவிவசாயிகளூக்குக்
கிடைக்கிற சலுகைகள்
பண்ணையாளும் டிராக்டரும்
வைத்திருக்கிறவர்களூக்கும்
வேண்டுமென்று கேட்டார்
விவசாய சங்கத் தலைவர்
தன் ஜாதிக்கு
பத்து சதவீதம்
இடஒதுக்கீடு கேட்டார்
ஜாதிசங்கத் தலைவர்
அரசாங்க ஊழியர்
வேலை செய்யாதபோது
நடவடிக்கை எடுக்காமல்
அழைத்துப் பேசவேண்டும்
என்றார் அரசாங்க ஊழியர்
படித்த புதுமைப்பெண்ணுக்கு
சிரமங்கள் இல்லாமல்
வீட்டுக்கருகிலேயே
வேலை வேண்டுமென்றார்
பெண்விடுதலைக்காரர்
கேள்வித்தாள் கடினமென்று
பாஸ் போடச்சொல்லிக்
கேட்டார் மாணவர் தலைவர்
வணிகவரியைக்
குறைக்கச் சொல்லிக்
கேட்டார் வணிகர்சங்கத் தலைவர்
தனக்கு
என்ன வேண்டுமென்று
யோசிக்க ஆரம்பித்தார்
அனைத்துக்கும் தலையாட்டின
புதிதாகப் பதவியேற்ற மந்திரி
எழுதப்பட்ட நாள்: மே 20, 2004.
முற்போக்கு
வேறு ஜாதியில்
கல்யாணம் செய்துகொண்டிருக்கிறேன்
என்றார் ஒருவர்
அந்த வாய்ப்பு எனக்கில்லை
ஆனால்
எனக்கு ஜாதிகள் இல்லை
என்றார் ஒருவர்
ஜாதிகளை ஒழிக்கமுடியாது
ஜாதிக்கொடுமைகளை ஒழிக்கவேண்டும்
என்றார் ஒருவர்
ஒடுக்கப்பட்ட ஜாதி
ஜாதி அடையாளத்துடன்தான்
குரல்கொடுக்க முடியும்
என்றார் ஒருவர்
மதங்கள் இல்லை
என்றார் ஒருவர்
என் மதத்தை நேசிக்கிறேன்
மற்ற மதங்களை மதிக்கிறேன்
என்றார் ஒருவர்
என் மதம் மோசம்
மதம் மாறிவிட்டேன்
என்றார் ஒருவர்
எல்லா மதத்துக்கும்
பொதுசட்டம் தேவை
என்றார் ஒருவர்
மதசுதந்திரத்தில்
அரசாங்கம் தலையிடலாமா
என்றார் ஒருவர்
மொழியுணர்வு முக்கியம்
என்றார் ஒருவர்
மொழியைத் தாண்டி
மனிதனைப் பார்க்கிறேன்
என்றார் ஒருவர்
என் மொழி சிறந்தது
மற்ற மொழிகளும் சிறந்தவை
என்றார் ஒருவர்
கடவுள் இல்லை
என்றார் ஒருவர்
கடவுள் இருக்கிறார்
என்றார் ஒருவர்
ஒன்றே கடவுள்
என்றார் ஒருவர்
கடவுள் இருக்கிறரா
என்று தெரியாது
வாழ்க்கை வலிக்கிறது
அதற்கு வழிபாருங்கள்
என்றார் ஒருவர்
பெண்ணுக்கு விடுதலை தேவை
என்றார் ஒருவர்
பெண்விடுதலை வந்துவிட்டது
என்றார் ஒருவர்
விடுதலை வந்தாலும்
ஆணின் துணை
பெண்ணுக்கு வேண்டும்
என்றார் ஒருவர்
பெண்ணின் துணை
ஆணுக்கும் வேண்டும்
என்றார் ஒருவர்
ஏழை பணக்காரன் இல்லாத
சோஷலிஸம் வேண்டும்
என்றார் ஒருவர்
திறமைக்கும் உழைப்புக்கும் ஏற்ற
உயர்வும் ஊதியமும் வேண்டும்
என்றார் ஒருவர்
அவரவர்
அவரவர் வழியிலும்
அவரவர் நம்பிக்கையிலும்
முற்போக்கானவர்களாகவே இருக்கிறார்கள்
எழுதப்பட்ட நாள்: மே 20, 2004
கல்யாணம் செய்துகொண்டிருக்கிறேன்
என்றார் ஒருவர்
அந்த வாய்ப்பு எனக்கில்லை
ஆனால்
எனக்கு ஜாதிகள் இல்லை
என்றார் ஒருவர்
ஜாதிகளை ஒழிக்கமுடியாது
ஜாதிக்கொடுமைகளை ஒழிக்கவேண்டும்
என்றார் ஒருவர்
ஒடுக்கப்பட்ட ஜாதி
ஜாதி அடையாளத்துடன்தான்
குரல்கொடுக்க முடியும்
என்றார் ஒருவர்
மதங்கள் இல்லை
என்றார் ஒருவர்
என் மதத்தை நேசிக்கிறேன்
மற்ற மதங்களை மதிக்கிறேன்
என்றார் ஒருவர்
என் மதம் மோசம்
மதம் மாறிவிட்டேன்
என்றார் ஒருவர்
எல்லா மதத்துக்கும்
பொதுசட்டம் தேவை
என்றார் ஒருவர்
மதசுதந்திரத்தில்
அரசாங்கம் தலையிடலாமா
என்றார் ஒருவர்
மொழியுணர்வு முக்கியம்
என்றார் ஒருவர்
மொழியைத் தாண்டி
மனிதனைப் பார்க்கிறேன்
என்றார் ஒருவர்
என் மொழி சிறந்தது
மற்ற மொழிகளும் சிறந்தவை
என்றார் ஒருவர்
கடவுள் இல்லை
என்றார் ஒருவர்
கடவுள் இருக்கிறார்
என்றார் ஒருவர்
ஒன்றே கடவுள்
என்றார் ஒருவர்
கடவுள் இருக்கிறரா
என்று தெரியாது
வாழ்க்கை வலிக்கிறது
அதற்கு வழிபாருங்கள்
என்றார் ஒருவர்
பெண்ணுக்கு விடுதலை தேவை
என்றார் ஒருவர்
பெண்விடுதலை வந்துவிட்டது
என்றார் ஒருவர்
விடுதலை வந்தாலும்
ஆணின் துணை
பெண்ணுக்கு வேண்டும்
என்றார் ஒருவர்
பெண்ணின் துணை
ஆணுக்கும் வேண்டும்
என்றார் ஒருவர்
ஏழை பணக்காரன் இல்லாத
சோஷலிஸம் வேண்டும்
என்றார் ஒருவர்
திறமைக்கும் உழைப்புக்கும் ஏற்ற
உயர்வும் ஊதியமும் வேண்டும்
என்றார் ஒருவர்
அவரவர்
அவரவர் வழியிலும்
அவரவர் நம்பிக்கையிலும்
முற்போக்கானவர்களாகவே இருக்கிறார்கள்
எழுதப்பட்ட நாள்: மே 20, 2004
Wednesday, May 19, 2004
ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் - 6
காலச்சுவடில் ராஜ் கௌதமன் நேர்காணல்:
காலச்சுவடு இதழுக்கு எழுத்தாளர் ராஜ் கௌதமன் அளித்த நேர்காணலை தமிழ்.சிபி.காம் இணையதளத்தில் வாசித்தேன். ராஜ் கௌதமனின் படைப்புகளைப் படிக்கும் வாய்ப்பு எனக்கு இதுவரை கிடைக்கவில்லை. ஆனால், அவரை மேற்கொண்டு படிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தை அந்த நேர்காணல் ஏற்படுத்தியது. விவாதத்தையும் எதிர்வினைகளையும் விமர்சனங்களையும் கிளப்புகிற கருத்துகள் வைக்கப்படும்போதுதான் மனித சிந்தனை முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. மனித சிந்தனை முன்னெடுத்துச் செல்லப்படும்போது மனிதவாழ்வு சிறப்படைகிறது. அந்தவிதத்தில் தலித் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களின் சிந்தனைகளும் கருத்தாக்கங்களும் உற்று கவனிக்கப்பட வேண்டும். இன்னமும் பரிபூரண விடுதலை அடையாத தலித் சமூகத்தை முன்னெடுத்துச் செல்ல தலித்துகளின் குரலையும் அவர்கள் தரப்பு சிந்தனைகளையும் கேட்க வேண்டும். இத்தகைய நேர்காணல்கள் எனக்குத் தலித்துகள், அவர்கள் எதிர்கொள்கிற பிரச்னைகளின் பன்முகத்தன்மை ஆகியவற்றை அவர்கள் பார்வையில் புரிந்து கொள்ள உதவுகின்றன. "எதிர்ப்பக்கம் இருப்பவற்றில் புனிதம், உயர்ந்தவை என்று சொல்லப்படுபவற்றைக் கட்டுடைப்பது என்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல் அந்தப் பக்கத்தில் தலித்துகளுக்குச் சாதகமாக எவை இருக்கின்றனவோ அவற்றைச் சரியாக இனம்கண்டு அதை முன்வைப்பதும் முக்கியமானதுதான்" என்றும், "நீங்கள் சொன்னது போன்ற படிப்பு, அது மாதிரியான முன்மாதிரிகள் போன்றவற்றுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதில்லை. காலச்சுவடில் வெளிவந்திருந்த அம்பேத்கர் பற்றிய கட்டுரையில்கூட பக்ஷி அதைக் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தார். அம்பேத்கரின் பிற விஷயங்களுக்குத் தரப்பட்ட முக்கியத்துவம் அளவிற்கு அவரது படிப்பு, கடுமையான உழைப்பு போன்றவற்றுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படவில்லை. கலகம் செய்வது போன்றவற்றுக்கே அதிக முக்கியத்துவம் தரப்பட்டது போல் இருக்கிறது" என்றும் என் சிந்தனையைத் தூண்டிய பல கருத்துகளை இந்த நேர்காணலில் ராஜ் கௌதமன் சொல்லியிருக்கிறார். (நன்றி: காலச்சுவடு, தமிழ்.சிபி.காம்)
சுஷ்மா சுவராஜ் செய்த அசிங்கம்:
சோனியா காந்தி பிரதமராகக் கூடாது என்று சொல்பவர்களின் தரப்பை என்னால் அங்கீகரிக்க முடியாவிட்டாலும் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள், எத்தகைய மனப்பான்மையை சுதேசி மனப்பான்மை என்று தவறாக உருவகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது இருக்கட்டும். சோனியாகாந்தி பிரதமர் பதவி வேண்டாம் என்றும் இப்போது சொல்லிவிட்டார். அதற்காக அவரை எல்லாரும் பாராட்டி விட்டனர். நானும் பாராட்டுகிறேன். நேரு குடும்பத்தினரின் சுயநலமற்ற தன்மையை மறுபடியும் நிரூபித்திருக்கிறார் சோனியாகாந்தி. உள்ளூரில் பிறந்துவிட்டு பதவிமோகம் எடுத்து அலைகிற சுதேசிகள் இவரிடம் பாடம் கற்றுக் கொள்ளலாம். ஆனாலும், ஜார்ஜ் பெர்ணாண்டஸ் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கூட சோனியாகாந்தி பிரதமர் பதவி வேண்டாம் என்று சொன்னதிலும் குறை காண ஆரம்பித்திருக்கிறார்கள். எமர்ஜென்ஸியை எதிர்த்தவர் என்றும், அப்பழுக்கற்ற நேர்மையாளர் என்றும் பெயர் பெற்ற ஜார்ஜ் பெர்ணாண்டஸ் அடுத்தடுத்த ஊழல்களில் தன் பெயரைக் கெடுத்துக் கொண்டது இருக்கட்டும். ஒரு அரசியல் புரோக்கராக தன்னை மனமுவந்து தாழ்த்திக் கொண்டு கட்சிகளிடம் பேரம் பேச விமானமெடுத்து ஓடியதும் இருக்கட்டும். அவரும் வாஜ்பாய் அத்வானி போன்ற மூத்த தலைவர்களும் கூட, சோனியாகாந்தி பிரதமரானால் தலையை மொட்டை அடித்துக் கொண்டு, வெள்ளைப் புடவை கட்டிக் கொள்வேன் என்றெல்லாம் உளறிய சுஷ்மா சுவராஜைப் பார்த்து உன் எதிர்ப்பைத் தெரிவிக்க வேறு நாகரீகமான வழிகள் இல்லையா என்று கேட்காதது மிகப்பெரிய அசிங்கம். அப்படியெல்லாம் சொல்லியதன் மூலம் சுஷ்மா சுவராஜ் தன்னை மட்டும் தாழ்த்திக் கொள்ளவில்லை; தன் கட்சியை மட்டும் தாழ்த்திக் கொள்ளவில்லை, பெண்களை மட்டும் தாழ்த்திக் கொள்ளவில்லை. அவற்றையெல்லாம் மீறி - மனித குணத்தையே தாழ்த்தி விட்டார் என்றே சொல்லுவேன். ஒருகாலத்தில் பா.ஜ.க.வின் ஆவேசமானக் குழந்தையாக இருந்த மகாஜன் போன்றவர்கள் இத்தேர்தல் முடிவின்போது பேசிய பேச்சில் இருந்த முதிர்ச்சி கண்டு மகிழ்ச்சியாக இருந்தது. சோனியாகாந்தி வெளிநாட்டவர் என்கிற பிரசாரம் எடுபடவில்லை என்று ஒத்துக் கொண்ட மகாஜனைப் பார்த்து அவர் கட்சியினர் கற்றுக் கொள்ள வேண்டும். வாஜ்பாய் கவிதை எழுதுவதைவிட முக்கியமானது, தன் கட்சித் தொண்டர்களை மனிதர்களாக வைத்திருப்பது.
கம்யூனிஸ்ட்டுகள் செய்கிற தவறு:
மத்தியில் அமையப் போகிற காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்திருப்பதன் மூலம் கம்யூனிஸ்ட்டுகள் மீண்டும் தவறிழைக்கிறார்கள் என்றே சொல்லுவேன். வலது கம்யூனிஸ்ட் கட்சி அரசில் பங்கேற்க விரும்பியதாகவும், இடது கம்யூனிஸ்ட் கட்சி விரும்பாததால், ஒருமித்த முடிவாக இரண்டுமே அரசில் பங்கேற்கப் போவதில்லை என்றும் செய்திகள் சொல்கின்றன. இதற்கு முன்னர் கம்யூனிஸ்ட்டுகள் செய்த தவறுகளையும், செய்யத் தவறியவற்றையும் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் போன்றோர் மிகவும் தாமதமாக இப்போது ஒத்துக் கொண்டு வருவதை அவர்களின் கட்டுரைகள் நேர்காணல்கள் ஆகியவற்றின் மூலம் இப்போது அறிய முடிகிறது. அதுபோல் - இந்த அரசாங்கத்தில் பங்கேற்காததன் தவறைக் கம்யூனிஸ்ட்டுகள் பின்னாடி உணர்ந்து வருந்தக் கூடும். வறட்டுத் தத்துவவாதிகளாகவும், வறட்டுப் பிடிவாதக்காரர்களாகவும் இருப்பது நம் கம்யூனிஸ்ட்டுகளுக்குப் புதிதில்லையே. எந்தக் காரணங்களுக்காகப் பங்கேற்கவில்லை என்பதைக் கம்யூனிஸ்ட்டுகள் வெளியே சொல்லியிருக்கிறார்களா என்று தெரியவில்லை. சொல்லியிருந்தால் அவற்றின் சாதக பாதகங்களை ஆராயலாம். மத்திய அரசில் பங்கேற்று ஆக்கபூர்வமாக ஒத்துழைத்துத் தங்கள் கொள்கைகளை முன்னெடுத்துச் சென்று, தங்களைப் பற்றிய ஒரு நல்ல பிம்பத்தை இந்தியா முழுவதுமும் ஏற்படுத்தக் கூடிய அற்புதமான வாய்ப்பை ஆட்சியில் பங்கேற்காததன் மூலம் கம்யூனிஸ்ட்டுகள் இழக்கிறார்கள். தி.மு.க. ஆட்சியில் பங்கேற்கும் என்று அறிவித்திருப்பது வரவேற்கத் தக்கது.
ஜெயலலிதாவின் அறிக்கை:
காட்சி ஒன்று. அமெரிக்காவில் கூடைப்பந்து பிரபலமான விளையாட்டுகளில் ஒன்று. அதை ஒரு தொழிலாகவே செய்கிறார்கள். அதற்கென்று நேஷனல் பாஸ்கட்பால் அசோசியேஷன் (NBA) என்ற புகழ்பெற்ற லீக் இருக்கிறது. மற்றும் பல சிறுசிறு லீகுகளும் உள்ளன. என்.பி.ஏ.வில் பல அணிகள் - வெவ்வேறு ஊர்களைச் சார்ந்தவை - இருக்கின்றன. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கிற லேக்கர்ஸ் என்ற அணி புகழ்பெற்றது. அதன் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துடைய விளையாட்டு வீரர்களில் கோபி பிரையண்ட் (Kobe Bryant) ஒருவர். அவர் சமீபத்தில் ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டார். விடுமுறைக்காகக் கொலராடோ மாநிலம் சென்றபோது அங்கே ஒரு இளவயது பெண்ணை அவர் அனுமதியின்றி பாலியன் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தினார் என்பது அவர் மீதான புகார். அதுபற்றிய விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இடையில் என்.பி.ஏ.வின் ரெகுலர் சீசன் போட்டிகள் முடிந்தன. ரெகுலர் சீசனில் என்.பி.ஏ.வின் 29 அணிகளும் தமக்குள் தலா 82 முறை விளையாடும். பின் அவற்றில் இருந்து முதல் 16 அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு (என்.பி.ஏ.வின் இரு முக்கிய பிரிவுகளிலிருந்து - கிழக்கு மற்றும் மேற்கு - தலா 8 அணிகள்) ப்ளேஆப்ஸ் (Playoffs) என்கிற யார் சாம்பியன் என்பதை நிர்ணயிக்கிற அடுத்த கட்ட ஆட்டங்கள் தொடங்கும். அப்படி இப்போது ப்ளேஆப்ஸ் நடந்து கொண்டிருக்கிறது. கோப் பிரையண்டின் லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் அணிக்கு ஆட்டம் இருக்கிற நாள்களில் அவருக்கு நீதிமன்றத்தில் ஆஜராகும்படியும் சிலமுறை நேர்ந்துவிட்டது. நீதிமன்றத்தில் அன்றைக்கு ஆஜராகிவிட்டுப் பின்னர் விமானம் பிடித்து வந்து, ஆட்டத்தில் கலந்து கொண்டு இரண்டுமுறைகள் அவர் மிகச்சிறப்பாக ஆடினார். உடனடியாகப் பத்திரிகைகள் அவரைப் பாராட்ட ஆரம்பித்துவிட்டன. பாருங்கள், எவ்வளவு சிரமத்திற்கிடையே எவ்வளவு நன்றாக ஆடுகிறார் என்றெல்லாம் எழுதித் தள்ளின. ஒரு சிலர் மட்டுமே "கோப் பிரையண்டை இதில் எதற்காகப் பாரட்ட வேண்டும் என்று தெரியவில்லை. இந்தச் சிக்கல் அவராகவே சென்று சிக்கிக் கொண்டது. அதில் அவர் சிக்கிக் கொண்டபின் வெளிவர போராடிக் கொண்டிருக்கிறார். அதனூடே நன்றாகவும் ஆடினார். அவர் எப்போதும் நன்றாக ஆடவேண்டும் என்பது அவரிடம் அனைவரும் எதிர்பார்க்கிற ஒன்றுதானே. அந்தச் சிக்கலில் அவர் சிக்கிக் கொண்ட தவறை அவரின் சிறப்பான ஆட்டம் ஈடுசெய்துவிட முடியாது" என்ற ரீதியில் எழுதினர்.
காட்சி இரண்டு: பாராளுமன்றத் தேர்தல்களில் அ.இ.அ.தி.மு.க. தமிழ்நாட்டில் அடைந்த தோல்விகளுக்குப் பின் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா பல நடவடிக்கைகளை அறிவித்திருக்கிறார். எதிர்கட்சித் தலைவர்கள், பத்திரிகைகள் மீது தொடர்ந்த வழக்குகளை விலக்கிக் கொள்வது, மதமாற்ற தடைச் சட்டத்தைத் திரும்பப் பெறுவது, அரசு ஊழியர்களின் பறிக்கப்பட்ட சலுகைகளைத் திரும்பித் தருவது, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தருவது ஆகியன அவற்றுள் சில. இதற்காகப் பத்திரிகைகளும் நண்பர்களும் தமிழக முதல்வரைப் பாராட்டக் கூடும். எனக்கென்னவோ தானாகச் சென்று சிக்கிக் கொண்ட சிக்கல்களிலிருந்து தமிழக முதல்வர் தன்னை விடுவித்துக் கொண்டிருப்பதற்கு உதவியதற்காக அவர் வாக்காளர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். வாக்காளர்களையே இதற்காகப் பாராட்ட வேண்டும் என்று தோன்றுகிறது. இவற்றையெல்லாம் அவரிடம் முதலிலேயே அவருக்கு ஓட்டு போட்ட வாக்காளர்கள் எதிர்பார்த்தனர். தமிழக முதல்வர் இப்படி நடவடிக்கைகளைத் திரும்ப பெற்றுக் கொண்டதைவிட முக்கியமானது, இத்தகைய தவறுகள் இனி நிகழாவண்ணம் பார்த்துக் கொள்வது என்பதை அவர் உணர வேண்டும்.
திண்ணை களஞ்சியம்:
திண்ணை களஞ்சியத்திலே தேடினால் சிலநேரங்களில் மாணிக்கங்கள் அகப்படக் கூடும். முக்கியமாக திண்ணை கவிதைகளை எத்தனை பேர் படிக்கிறார்கள் என்பது தெரியவில்லை. நிறைய கவிதைகள் பிரசுரமாவதால் நிறைய பேர் நிறைய நேரங்களில் கவிதைகளைப் பொறுமையுடன் படிப்பதில்லையோ என்று எனக்குத் தோன்றும். எனவே, திண்ணை கவிதைக் களஞ்சியத்துள் நுழைந்து அங்கிருக்கிற எனக்குப் பிடித்த கவிதைகளைப் பற்றி இந்தப் பகுதியில் பேசலாம் என்று நினைக்கிறேன். என் தேர்வு என் தனிமனித அறிவு மற்றும் ரசனையின் அடிப்படையிலானது. என்னால் குறிப்பிடப்படாத கவிதைகள் சிறப்பானவை அல்ல என்பது இதற்கு அர்த்தமல்ல. ஒரு விமர்சகனாக அல்லாமல், வாசகனாகவே இதைச் செய்ய முயல்கிறேன் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன். கவிதை தவிர மற்ற படைப்புகளிலும் இப்படிப் பிடித்தவற்றை எடுத்துக்காட்ட ஆசைதான். இன்ஷா அல்லாஹ். முதலில் கவிதைகளைப் பார்ப்போம்.
பசுவய்யா கவிதைகள் பக்கத்தில் வருத்தம் என்கிற தலைப்பின் கீழுள்ள இந்தக் கவிதையைப் பாருங்கள்:
வேட்டையாடத்தான் வந்தேன்
வேட்டைக்கலையின் சாகச நுட்பங்களை
தாய்ப்பாலில் உறிஞ்சத் தொடங்கினேன்
பின் வில் வித்தை
பின் வாள் வீச்சு
பின் குதிரை ஏற்றம்
பின் மற்போர்
நாளை நாளை என வேட்டை பின்னகர
ஆயத்தங்களில் கழிகிறது என் காலம்
திறந்து வைத்த கற்பூரம் போல்
ஆயுளின் கடைசித் தேசல் இப்போது
இனி ஆயத்தங்களைத் தின்று சாகும் என் முதுமை
பின்னும் உயிர்வாழும் கானல்
அவரவர் அறிவு, அனுபவம், ரசனை, திறன் ஆகியவற்றின் அடிப்படையில் பலவிதமான தளங்களில் இக்கவிதைக்குப் பொருள் கண்டுகொள்ள முடியும். இப்படிப்பட்ட பிரபஞ்சத்தன்மை கவிதைக்கு முக்கியமானது என்று நான் நம்புகிறேன். தனிப்பட்ட அனுபவத்தைச் சொல்வதுபோல தோற்றமளிக்கும் இந்தக் கவிதை அதனூடே பிரபஞ்சம் முழுமையும் உணருகிற ஒரு குணாதிசயத்தைக் கோடுபோட்டுக் காட்டிவிடுவது இக்கவிதையின் வெற்றி என்று நான் நம்புகிறேன்.
காலச்சுவடு இதழுக்கு எழுத்தாளர் ராஜ் கௌதமன் அளித்த நேர்காணலை தமிழ்.சிபி.காம் இணையதளத்தில் வாசித்தேன். ராஜ் கௌதமனின் படைப்புகளைப் படிக்கும் வாய்ப்பு எனக்கு இதுவரை கிடைக்கவில்லை. ஆனால், அவரை மேற்கொண்டு படிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தை அந்த நேர்காணல் ஏற்படுத்தியது. விவாதத்தையும் எதிர்வினைகளையும் விமர்சனங்களையும் கிளப்புகிற கருத்துகள் வைக்கப்படும்போதுதான் மனித சிந்தனை முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. மனித சிந்தனை முன்னெடுத்துச் செல்லப்படும்போது மனிதவாழ்வு சிறப்படைகிறது. அந்தவிதத்தில் தலித் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களின் சிந்தனைகளும் கருத்தாக்கங்களும் உற்று கவனிக்கப்பட வேண்டும். இன்னமும் பரிபூரண விடுதலை அடையாத தலித் சமூகத்தை முன்னெடுத்துச் செல்ல தலித்துகளின் குரலையும் அவர்கள் தரப்பு சிந்தனைகளையும் கேட்க வேண்டும். இத்தகைய நேர்காணல்கள் எனக்குத் தலித்துகள், அவர்கள் எதிர்கொள்கிற பிரச்னைகளின் பன்முகத்தன்மை ஆகியவற்றை அவர்கள் பார்வையில் புரிந்து கொள்ள உதவுகின்றன. "எதிர்ப்பக்கம் இருப்பவற்றில் புனிதம், உயர்ந்தவை என்று சொல்லப்படுபவற்றைக் கட்டுடைப்பது என்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல் அந்தப் பக்கத்தில் தலித்துகளுக்குச் சாதகமாக எவை இருக்கின்றனவோ அவற்றைச் சரியாக இனம்கண்டு அதை முன்வைப்பதும் முக்கியமானதுதான்" என்றும், "நீங்கள் சொன்னது போன்ற படிப்பு, அது மாதிரியான முன்மாதிரிகள் போன்றவற்றுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதில்லை. காலச்சுவடில் வெளிவந்திருந்த அம்பேத்கர் பற்றிய கட்டுரையில்கூட பக்ஷி அதைக் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தார். அம்பேத்கரின் பிற விஷயங்களுக்குத் தரப்பட்ட முக்கியத்துவம் அளவிற்கு அவரது படிப்பு, கடுமையான உழைப்பு போன்றவற்றுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படவில்லை. கலகம் செய்வது போன்றவற்றுக்கே அதிக முக்கியத்துவம் தரப்பட்டது போல் இருக்கிறது" என்றும் என் சிந்தனையைத் தூண்டிய பல கருத்துகளை இந்த நேர்காணலில் ராஜ் கௌதமன் சொல்லியிருக்கிறார். (நன்றி: காலச்சுவடு, தமிழ்.சிபி.காம்)
சுஷ்மா சுவராஜ் செய்த அசிங்கம்:
சோனியா காந்தி பிரதமராகக் கூடாது என்று சொல்பவர்களின் தரப்பை என்னால் அங்கீகரிக்க முடியாவிட்டாலும் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள், எத்தகைய மனப்பான்மையை சுதேசி மனப்பான்மை என்று தவறாக உருவகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது இருக்கட்டும். சோனியாகாந்தி பிரதமர் பதவி வேண்டாம் என்றும் இப்போது சொல்லிவிட்டார். அதற்காக அவரை எல்லாரும் பாராட்டி விட்டனர். நானும் பாராட்டுகிறேன். நேரு குடும்பத்தினரின் சுயநலமற்ற தன்மையை மறுபடியும் நிரூபித்திருக்கிறார் சோனியாகாந்தி. உள்ளூரில் பிறந்துவிட்டு பதவிமோகம் எடுத்து அலைகிற சுதேசிகள் இவரிடம் பாடம் கற்றுக் கொள்ளலாம். ஆனாலும், ஜார்ஜ் பெர்ணாண்டஸ் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கூட சோனியாகாந்தி பிரதமர் பதவி வேண்டாம் என்று சொன்னதிலும் குறை காண ஆரம்பித்திருக்கிறார்கள். எமர்ஜென்ஸியை எதிர்த்தவர் என்றும், அப்பழுக்கற்ற நேர்மையாளர் என்றும் பெயர் பெற்ற ஜார்ஜ் பெர்ணாண்டஸ் அடுத்தடுத்த ஊழல்களில் தன் பெயரைக் கெடுத்துக் கொண்டது இருக்கட்டும். ஒரு அரசியல் புரோக்கராக தன்னை மனமுவந்து தாழ்த்திக் கொண்டு கட்சிகளிடம் பேரம் பேச விமானமெடுத்து ஓடியதும் இருக்கட்டும். அவரும் வாஜ்பாய் அத்வானி போன்ற மூத்த தலைவர்களும் கூட, சோனியாகாந்தி பிரதமரானால் தலையை மொட்டை அடித்துக் கொண்டு, வெள்ளைப் புடவை கட்டிக் கொள்வேன் என்றெல்லாம் உளறிய சுஷ்மா சுவராஜைப் பார்த்து உன் எதிர்ப்பைத் தெரிவிக்க வேறு நாகரீகமான வழிகள் இல்லையா என்று கேட்காதது மிகப்பெரிய அசிங்கம். அப்படியெல்லாம் சொல்லியதன் மூலம் சுஷ்மா சுவராஜ் தன்னை மட்டும் தாழ்த்திக் கொள்ளவில்லை; தன் கட்சியை மட்டும் தாழ்த்திக் கொள்ளவில்லை, பெண்களை மட்டும் தாழ்த்திக் கொள்ளவில்லை. அவற்றையெல்லாம் மீறி - மனித குணத்தையே தாழ்த்தி விட்டார் என்றே சொல்லுவேன். ஒருகாலத்தில் பா.ஜ.க.வின் ஆவேசமானக் குழந்தையாக இருந்த மகாஜன் போன்றவர்கள் இத்தேர்தல் முடிவின்போது பேசிய பேச்சில் இருந்த முதிர்ச்சி கண்டு மகிழ்ச்சியாக இருந்தது. சோனியாகாந்தி வெளிநாட்டவர் என்கிற பிரசாரம் எடுபடவில்லை என்று ஒத்துக் கொண்ட மகாஜனைப் பார்த்து அவர் கட்சியினர் கற்றுக் கொள்ள வேண்டும். வாஜ்பாய் கவிதை எழுதுவதைவிட முக்கியமானது, தன் கட்சித் தொண்டர்களை மனிதர்களாக வைத்திருப்பது.
கம்யூனிஸ்ட்டுகள் செய்கிற தவறு:
மத்தியில் அமையப் போகிற காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்திருப்பதன் மூலம் கம்யூனிஸ்ட்டுகள் மீண்டும் தவறிழைக்கிறார்கள் என்றே சொல்லுவேன். வலது கம்யூனிஸ்ட் கட்சி அரசில் பங்கேற்க விரும்பியதாகவும், இடது கம்யூனிஸ்ட் கட்சி விரும்பாததால், ஒருமித்த முடிவாக இரண்டுமே அரசில் பங்கேற்கப் போவதில்லை என்றும் செய்திகள் சொல்கின்றன. இதற்கு முன்னர் கம்யூனிஸ்ட்டுகள் செய்த தவறுகளையும், செய்யத் தவறியவற்றையும் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் போன்றோர் மிகவும் தாமதமாக இப்போது ஒத்துக் கொண்டு வருவதை அவர்களின் கட்டுரைகள் நேர்காணல்கள் ஆகியவற்றின் மூலம் இப்போது அறிய முடிகிறது. அதுபோல் - இந்த அரசாங்கத்தில் பங்கேற்காததன் தவறைக் கம்யூனிஸ்ட்டுகள் பின்னாடி உணர்ந்து வருந்தக் கூடும். வறட்டுத் தத்துவவாதிகளாகவும், வறட்டுப் பிடிவாதக்காரர்களாகவும் இருப்பது நம் கம்யூனிஸ்ட்டுகளுக்குப் புதிதில்லையே. எந்தக் காரணங்களுக்காகப் பங்கேற்கவில்லை என்பதைக் கம்யூனிஸ்ட்டுகள் வெளியே சொல்லியிருக்கிறார்களா என்று தெரியவில்லை. சொல்லியிருந்தால் அவற்றின் சாதக பாதகங்களை ஆராயலாம். மத்திய அரசில் பங்கேற்று ஆக்கபூர்வமாக ஒத்துழைத்துத் தங்கள் கொள்கைகளை முன்னெடுத்துச் சென்று, தங்களைப் பற்றிய ஒரு நல்ல பிம்பத்தை இந்தியா முழுவதுமும் ஏற்படுத்தக் கூடிய அற்புதமான வாய்ப்பை ஆட்சியில் பங்கேற்காததன் மூலம் கம்யூனிஸ்ட்டுகள் இழக்கிறார்கள். தி.மு.க. ஆட்சியில் பங்கேற்கும் என்று அறிவித்திருப்பது வரவேற்கத் தக்கது.
ஜெயலலிதாவின் அறிக்கை:
காட்சி ஒன்று. அமெரிக்காவில் கூடைப்பந்து பிரபலமான விளையாட்டுகளில் ஒன்று. அதை ஒரு தொழிலாகவே செய்கிறார்கள். அதற்கென்று நேஷனல் பாஸ்கட்பால் அசோசியேஷன் (NBA) என்ற புகழ்பெற்ற லீக் இருக்கிறது. மற்றும் பல சிறுசிறு லீகுகளும் உள்ளன. என்.பி.ஏ.வில் பல அணிகள் - வெவ்வேறு ஊர்களைச் சார்ந்தவை - இருக்கின்றன. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கிற லேக்கர்ஸ் என்ற அணி புகழ்பெற்றது. அதன் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துடைய விளையாட்டு வீரர்களில் கோபி பிரையண்ட் (Kobe Bryant) ஒருவர். அவர் சமீபத்தில் ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டார். விடுமுறைக்காகக் கொலராடோ மாநிலம் சென்றபோது அங்கே ஒரு இளவயது பெண்ணை அவர் அனுமதியின்றி பாலியன் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தினார் என்பது அவர் மீதான புகார். அதுபற்றிய விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இடையில் என்.பி.ஏ.வின் ரெகுலர் சீசன் போட்டிகள் முடிந்தன. ரெகுலர் சீசனில் என்.பி.ஏ.வின் 29 அணிகளும் தமக்குள் தலா 82 முறை விளையாடும். பின் அவற்றில் இருந்து முதல் 16 அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு (என்.பி.ஏ.வின் இரு முக்கிய பிரிவுகளிலிருந்து - கிழக்கு மற்றும் மேற்கு - தலா 8 அணிகள்) ப்ளேஆப்ஸ் (Playoffs) என்கிற யார் சாம்பியன் என்பதை நிர்ணயிக்கிற அடுத்த கட்ட ஆட்டங்கள் தொடங்கும். அப்படி இப்போது ப்ளேஆப்ஸ் நடந்து கொண்டிருக்கிறது. கோப் பிரையண்டின் லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் அணிக்கு ஆட்டம் இருக்கிற நாள்களில் அவருக்கு நீதிமன்றத்தில் ஆஜராகும்படியும் சிலமுறை நேர்ந்துவிட்டது. நீதிமன்றத்தில் அன்றைக்கு ஆஜராகிவிட்டுப் பின்னர் விமானம் பிடித்து வந்து, ஆட்டத்தில் கலந்து கொண்டு இரண்டுமுறைகள் அவர் மிகச்சிறப்பாக ஆடினார். உடனடியாகப் பத்திரிகைகள் அவரைப் பாராட்ட ஆரம்பித்துவிட்டன. பாருங்கள், எவ்வளவு சிரமத்திற்கிடையே எவ்வளவு நன்றாக ஆடுகிறார் என்றெல்லாம் எழுதித் தள்ளின. ஒரு சிலர் மட்டுமே "கோப் பிரையண்டை இதில் எதற்காகப் பாரட்ட வேண்டும் என்று தெரியவில்லை. இந்தச் சிக்கல் அவராகவே சென்று சிக்கிக் கொண்டது. அதில் அவர் சிக்கிக் கொண்டபின் வெளிவர போராடிக் கொண்டிருக்கிறார். அதனூடே நன்றாகவும் ஆடினார். அவர் எப்போதும் நன்றாக ஆடவேண்டும் என்பது அவரிடம் அனைவரும் எதிர்பார்க்கிற ஒன்றுதானே. அந்தச் சிக்கலில் அவர் சிக்கிக் கொண்ட தவறை அவரின் சிறப்பான ஆட்டம் ஈடுசெய்துவிட முடியாது" என்ற ரீதியில் எழுதினர்.
காட்சி இரண்டு: பாராளுமன்றத் தேர்தல்களில் அ.இ.அ.தி.மு.க. தமிழ்நாட்டில் அடைந்த தோல்விகளுக்குப் பின் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா பல நடவடிக்கைகளை அறிவித்திருக்கிறார். எதிர்கட்சித் தலைவர்கள், பத்திரிகைகள் மீது தொடர்ந்த வழக்குகளை விலக்கிக் கொள்வது, மதமாற்ற தடைச் சட்டத்தைத் திரும்பப் பெறுவது, அரசு ஊழியர்களின் பறிக்கப்பட்ட சலுகைகளைத் திரும்பித் தருவது, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தருவது ஆகியன அவற்றுள் சில. இதற்காகப் பத்திரிகைகளும் நண்பர்களும் தமிழக முதல்வரைப் பாராட்டக் கூடும். எனக்கென்னவோ தானாகச் சென்று சிக்கிக் கொண்ட சிக்கல்களிலிருந்து தமிழக முதல்வர் தன்னை விடுவித்துக் கொண்டிருப்பதற்கு உதவியதற்காக அவர் வாக்காளர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். வாக்காளர்களையே இதற்காகப் பாராட்ட வேண்டும் என்று தோன்றுகிறது. இவற்றையெல்லாம் அவரிடம் முதலிலேயே அவருக்கு ஓட்டு போட்ட வாக்காளர்கள் எதிர்பார்த்தனர். தமிழக முதல்வர் இப்படி நடவடிக்கைகளைத் திரும்ப பெற்றுக் கொண்டதைவிட முக்கியமானது, இத்தகைய தவறுகள் இனி நிகழாவண்ணம் பார்த்துக் கொள்வது என்பதை அவர் உணர வேண்டும்.
திண்ணை களஞ்சியம்:
திண்ணை களஞ்சியத்திலே தேடினால் சிலநேரங்களில் மாணிக்கங்கள் அகப்படக் கூடும். முக்கியமாக திண்ணை கவிதைகளை எத்தனை பேர் படிக்கிறார்கள் என்பது தெரியவில்லை. நிறைய கவிதைகள் பிரசுரமாவதால் நிறைய பேர் நிறைய நேரங்களில் கவிதைகளைப் பொறுமையுடன் படிப்பதில்லையோ என்று எனக்குத் தோன்றும். எனவே, திண்ணை கவிதைக் களஞ்சியத்துள் நுழைந்து அங்கிருக்கிற எனக்குப் பிடித்த கவிதைகளைப் பற்றி இந்தப் பகுதியில் பேசலாம் என்று நினைக்கிறேன். என் தேர்வு என் தனிமனித அறிவு மற்றும் ரசனையின் அடிப்படையிலானது. என்னால் குறிப்பிடப்படாத கவிதைகள் சிறப்பானவை அல்ல என்பது இதற்கு அர்த்தமல்ல. ஒரு விமர்சகனாக அல்லாமல், வாசகனாகவே இதைச் செய்ய முயல்கிறேன் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன். கவிதை தவிர மற்ற படைப்புகளிலும் இப்படிப் பிடித்தவற்றை எடுத்துக்காட்ட ஆசைதான். இன்ஷா அல்லாஹ். முதலில் கவிதைகளைப் பார்ப்போம்.
பசுவய்யா கவிதைகள் பக்கத்தில் வருத்தம் என்கிற தலைப்பின் கீழுள்ள இந்தக் கவிதையைப் பாருங்கள்:
வேட்டையாடத்தான் வந்தேன்
வேட்டைக்கலையின் சாகச நுட்பங்களை
தாய்ப்பாலில் உறிஞ்சத் தொடங்கினேன்
பின் வில் வித்தை
பின் வாள் வீச்சு
பின் குதிரை ஏற்றம்
பின் மற்போர்
நாளை நாளை என வேட்டை பின்னகர
ஆயத்தங்களில் கழிகிறது என் காலம்
திறந்து வைத்த கற்பூரம் போல்
ஆயுளின் கடைசித் தேசல் இப்போது
இனி ஆயத்தங்களைத் தின்று சாகும் என் முதுமை
பின்னும் உயிர்வாழும் கானல்
அவரவர் அறிவு, அனுபவம், ரசனை, திறன் ஆகியவற்றின் அடிப்படையில் பலவிதமான தளங்களில் இக்கவிதைக்குப் பொருள் கண்டுகொள்ள முடியும். இப்படிப்பட்ட பிரபஞ்சத்தன்மை கவிதைக்கு முக்கியமானது என்று நான் நம்புகிறேன். தனிப்பட்ட அனுபவத்தைச் சொல்வதுபோல தோற்றமளிக்கும் இந்தக் கவிதை அதனூடே பிரபஞ்சம் முழுமையும் உணருகிற ஒரு குணாதிசயத்தைக் கோடுபோட்டுக் காட்டிவிடுவது இக்கவிதையின் வெற்றி என்று நான் நம்புகிறேன்.
Monday, May 17, 2004
இருவேறு
எழுதுவதற்குமுன்
எழுதவில்லையே
என்று மனபாரம்
எழுதும்போது
எப்படி வருமோ
என்று மனபாரம்
எழுதி முடித்தபின்
எப்படி எதிர்கொள்ளப்படுமோ
என்று மனபாரம்
எவ்வளவுபேர் பாராட்டினாலும்
திருப்தியடையாமல்
தூக்கத்தைக் கெடுத்துத்
தூண்டுகிற மனபாரம்
அடுத்தது எப்படி
வருமோ யென்று
இப்போதிருந்தே
அடைகாக்கிற மனபாரம்
கவனமாய் வீட்டுப்பாடம்
முடித்த மறுகணம்
விட்டுதறி விடுதலையாகி
மகிழ்வுடன்
விளையாட ஓடுகிறான்
குழந்தை.
எழுதப்பட்ட நாள்: மே 17, 2004
எழுதவில்லையே
என்று மனபாரம்
எழுதும்போது
எப்படி வருமோ
என்று மனபாரம்
எழுதி முடித்தபின்
எப்படி எதிர்கொள்ளப்படுமோ
என்று மனபாரம்
எவ்வளவுபேர் பாராட்டினாலும்
திருப்தியடையாமல்
தூக்கத்தைக் கெடுத்துத்
தூண்டுகிற மனபாரம்
அடுத்தது எப்படி
வருமோ யென்று
இப்போதிருந்தே
அடைகாக்கிற மனபாரம்
கவனமாய் வீட்டுப்பாடம்
முடித்த மறுகணம்
விட்டுதறி விடுதலையாகி
மகிழ்வுடன்
விளையாட ஓடுகிறான்
குழந்தை.
எழுதப்பட்ட நாள்: மே 17, 2004
Sunday, May 16, 2004
நதிப்புறக் காட்சி
கண்களை விழுங்கி
கரைகள் விரிந்து
நுரையுடன் சுழித்து
சங்கீத லயத்துடன்
முனகல்கள் இன்றி
நடக்கிறது புண்ணியநதி
முக்கி எழுபவரின்
பாவங்களைக் கழுவிச்
சுமப்பதறிந்த
வருத்தங்கள் இல்லாதபடி
கண்களை மூடிக்கொண்டு
மந்திரங்கள் உச்சரித்தபடி
முக்கியெழும் தந்தையின்
பாவங்கள் அறிந்த நதி
தந்தையைப் பார்த்தபடி
சிரத்தையாய்
அவர் செய்வதைச் செய்யும்
பாலகனின் பால்நெஞ்சத்தையும்
அறிந்திருக்க வேண்டுமென்று
வேண்டிநிற்கிறது மனம்
எழுதப்பட்ட நாள்: மே 16, 2004
கரைகள் விரிந்து
நுரையுடன் சுழித்து
சங்கீத லயத்துடன்
முனகல்கள் இன்றி
நடக்கிறது புண்ணியநதி
முக்கி எழுபவரின்
பாவங்களைக் கழுவிச்
சுமப்பதறிந்த
வருத்தங்கள் இல்லாதபடி
கண்களை மூடிக்கொண்டு
மந்திரங்கள் உச்சரித்தபடி
முக்கியெழும் தந்தையின்
பாவங்கள் அறிந்த நதி
தந்தையைப் பார்த்தபடி
சிரத்தையாய்
அவர் செய்வதைச் செய்யும்
பாலகனின் பால்நெஞ்சத்தையும்
அறிந்திருக்க வேண்டுமென்று
வேண்டிநிற்கிறது மனம்
எழுதப்பட்ட நாள்: மே 16, 2004
Friday, May 14, 2004
மஞ்சுளா நவநீதன் கட்டுரை - என் குறிப்புகள்
"அடுத்த பிரதமராக கலைஞர் கருணாநிதி வரவேண்டும்" என்று மஞ்சுளா நவநீதன் எழுதிய கட்டுரையைத் திண்ணையில் படித்தேன். ஜனநாயக முறைகள் ஏதிலும் மஞ்சுளாவுக்குக் கிஞ்சித்தும் நம்பிக்கையில்லை என்பதையும், சோனியாகாந்தியோ காங்கிரஸைச் சார்ந்தவர்களோ பிரதமராவதில் மஞ்சுளாவுக்கு விருப்பமில்லை என்பதையும் இக்கட்டுரையின் அடிநாதமாகக் கொள்ளலாம். பா.ஜ.க. போன்ற கட்சிகள் தோற்றுப் போனதில் இருக்கிற தனிப்பட்ட வருத்தத்தை இப்படிப்பட்ட "குட்டையைக் குழப்புகிற கட்டுரைகள்" எழுதித் தீர்த்துக் கொள்ள முடியும் என்று மஞ்சுளா விரும்பினால், திண்ணை அதைப் பிரசுரிப்பதில் தவறில்லை.
எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காதபோது, குடியரசுத் தலைவர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் உள்ளன. அவருக்கு ஆலோசனை சொல்ல அரசியல் சட்ட நிபுணர்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட வழிமுறைகளில் ஒன்று, தனிப்பெரும் கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பதும் அழைப்பதற்கு முன் ஆதரவு கட்சிகளின் கடிதங்கள் கேட்பதும். இத்தகைய ஜனநாயக மற்றும் தார்மீக முறைகள் எதிலும் மஞ்சுளா சொல்கிற வாதங்களை வைத்துப் பார்க்க முடியாது.
மஞ்சுளா சொல்கிறபடி பார்த்தால், காங்கிரஸ், பா.ஜ.க. இடது கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி என்று பல கட்சிகளைக் குடியரசு தலைவர் ஆட்சி அமைக்க அழைத்தபின் அவர்களால் முடியாத பின்னரே, தி.மு.க.வை அழைக்க வேண்டியிருக்கும். இது நடைமுறையில் சாத்தியமில்லாத எட்டாக் கனவு. காங்கிரஸீக்குப் பதில் பாஜக இதே அளவு சீட்டுகளை வென்றிருந்தால் மஞ்சுளா இதைச் சொல்லியிருப்பாரா என்பதை அவர்தான் சொல்ல வேண்டும்.
தி.மு.க. துணைப் பிரதமர் பதவிக்கோ முக்கியமான மந்திரிப் பதவிகளூக்கோ முயல வேண்டும் என்று மஞ்சுளா எழுதியிருந்தாலாவது மஞ்சுளாவுக்கு தி.மு.க.வின் மீதும் கருணாநிதியின் மீதும் அக்கறையிருக்கிறது எனலாம். ஆனால், சோனியா காந்தி பிரதமராகக் கூடாது என்கிற தன் உள்ளக்கிடக்கையை வெளிச்சொல்ல இயலாமல் - காங்கிரஸ் கூட்டணி கட்சிகள், கம்யூனிஸ்ட்டுகள், சோனியாகாந்தி பிரதமராவது பிடிக்காத சரத்பவார், முலாயம்சிங் என்று அனைவரும் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதில் இருக்கிற தார்மீக நியாயத்தை உணர்ந்திருக்கிற வேளையில் - தேச நலனைக் கூடக் கருத்தில் கொள்ளாமல் இப்படிப்பட்ட குழந்தைத்தனமான கணக்குகளை எடுத்துக் காட்டி, கருணாநிதியைப் பிரதமர் ஆகச் சொல்கிறார் மஞ்சுளா. இது குழப்பத்தை உண்டாக்க விரும்புகிற அவர் உள்ளக் கிடக்கையைக் காட்டுகிறது. தி.மு.க.வே தன் பிரசாரத்தில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஆட்சிக்காகவும், சோனியாகாந்தி பிரதமாரவதை எதிர்க்கவில்லை என்று சொல்லியும் வாக்கு கேட்டது மஞ்சுளாவுக்கு அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட்டது ஆச்சரியமில்லை.
சோனியாகாந்தி நரசிம்மராவுக்குக் கீழே பணிபுரிய விரும்பவில்லை என்றும், அதற்கு ஆணவம் காரணம் என்றும் சொல்கிறார்கள் என்று அடுத்த கதையை அவிழ்த்து விடுகிறார். 1991-ல் சோனியாகாந்தி விரும்பியிருந்தால் அவர் பிரதமராகி இருக்க முடியும் என்பதற்கு வரலாறு சாட்சி. தேடிவந்த கட்சித் தலைவர், அதனால் கிடைக்கக் கூடிய பிரதமர் பதவி ஆகியவற்றை வேண்டாம் என்று சொல்கிற பக்குவம் 1991ல் சோனியாகாந்திக்கு இருந்தது. அப்படி அரசியலில் ஆர்வம் இல்லாமல் இருந்த அவர், 1996ல் நரசிம்மராவின் தலைமையிலான காங்கிரஸின் தோல்விக்குப் பின்னர், காங்கிரஸ் பிழைக்குமோ பிழைக்காதோ என்று கடைசிப் படுக்கையில் இருந்தபோது, தன் குடும்பம் வளர்க்க உதவிய காங்கிரஸ் சிதைகிற காட்சியைக் காணப் பொறுக்காமல் அரசியலில் இறங்கினார். இதுவும் வரலாறு அறிந்தவர் அறிந்ததே. இதிலே, நரசிம்மராவ் சோனியாவை மந்திரி ஆகச் சொல்லி எங்கே கேட்டார், அவர் எங்கே மறுத்தார்? மஞ்சுளாவுக்குக் கற்பனை வளம் அதிகம்தான்.
மஞ்சுளா தொலைகாட்சிகளிலும் ஊடகங்களிலும் "Spin Master" வேலைக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், அத்தகைய வேலைகளில்கூட இத்தகைய வாதங்கள் எடுபடாது என்பதை உணர வேண்டும்.
எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காதபோது, குடியரசுத் தலைவர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் உள்ளன. அவருக்கு ஆலோசனை சொல்ல அரசியல் சட்ட நிபுணர்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட வழிமுறைகளில் ஒன்று, தனிப்பெரும் கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பதும் அழைப்பதற்கு முன் ஆதரவு கட்சிகளின் கடிதங்கள் கேட்பதும். இத்தகைய ஜனநாயக மற்றும் தார்மீக முறைகள் எதிலும் மஞ்சுளா சொல்கிற வாதங்களை வைத்துப் பார்க்க முடியாது.
மஞ்சுளா சொல்கிறபடி பார்த்தால், காங்கிரஸ், பா.ஜ.க. இடது கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி என்று பல கட்சிகளைக் குடியரசு தலைவர் ஆட்சி அமைக்க அழைத்தபின் அவர்களால் முடியாத பின்னரே, தி.மு.க.வை அழைக்க வேண்டியிருக்கும். இது நடைமுறையில் சாத்தியமில்லாத எட்டாக் கனவு. காங்கிரஸீக்குப் பதில் பாஜக இதே அளவு சீட்டுகளை வென்றிருந்தால் மஞ்சுளா இதைச் சொல்லியிருப்பாரா என்பதை அவர்தான் சொல்ல வேண்டும்.
தி.மு.க. துணைப் பிரதமர் பதவிக்கோ முக்கியமான மந்திரிப் பதவிகளூக்கோ முயல வேண்டும் என்று மஞ்சுளா எழுதியிருந்தாலாவது மஞ்சுளாவுக்கு தி.மு.க.வின் மீதும் கருணாநிதியின் மீதும் அக்கறையிருக்கிறது எனலாம். ஆனால், சோனியா காந்தி பிரதமராகக் கூடாது என்கிற தன் உள்ளக்கிடக்கையை வெளிச்சொல்ல இயலாமல் - காங்கிரஸ் கூட்டணி கட்சிகள், கம்யூனிஸ்ட்டுகள், சோனியாகாந்தி பிரதமராவது பிடிக்காத சரத்பவார், முலாயம்சிங் என்று அனைவரும் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதில் இருக்கிற தார்மீக நியாயத்தை உணர்ந்திருக்கிற வேளையில் - தேச நலனைக் கூடக் கருத்தில் கொள்ளாமல் இப்படிப்பட்ட குழந்தைத்தனமான கணக்குகளை எடுத்துக் காட்டி, கருணாநிதியைப் பிரதமர் ஆகச் சொல்கிறார் மஞ்சுளா. இது குழப்பத்தை உண்டாக்க விரும்புகிற அவர் உள்ளக் கிடக்கையைக் காட்டுகிறது. தி.மு.க.வே தன் பிரசாரத்தில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஆட்சிக்காகவும், சோனியாகாந்தி பிரதமாரவதை எதிர்க்கவில்லை என்று சொல்லியும் வாக்கு கேட்டது மஞ்சுளாவுக்கு அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட்டது ஆச்சரியமில்லை.
சோனியாகாந்தி நரசிம்மராவுக்குக் கீழே பணிபுரிய விரும்பவில்லை என்றும், அதற்கு ஆணவம் காரணம் என்றும் சொல்கிறார்கள் என்று அடுத்த கதையை அவிழ்த்து விடுகிறார். 1991-ல் சோனியாகாந்தி விரும்பியிருந்தால் அவர் பிரதமராகி இருக்க முடியும் என்பதற்கு வரலாறு சாட்சி. தேடிவந்த கட்சித் தலைவர், அதனால் கிடைக்கக் கூடிய பிரதமர் பதவி ஆகியவற்றை வேண்டாம் என்று சொல்கிற பக்குவம் 1991ல் சோனியாகாந்திக்கு இருந்தது. அப்படி அரசியலில் ஆர்வம் இல்லாமல் இருந்த அவர், 1996ல் நரசிம்மராவின் தலைமையிலான காங்கிரஸின் தோல்விக்குப் பின்னர், காங்கிரஸ் பிழைக்குமோ பிழைக்காதோ என்று கடைசிப் படுக்கையில் இருந்தபோது, தன் குடும்பம் வளர்க்க உதவிய காங்கிரஸ் சிதைகிற காட்சியைக் காணப் பொறுக்காமல் அரசியலில் இறங்கினார். இதுவும் வரலாறு அறிந்தவர் அறிந்ததே. இதிலே, நரசிம்மராவ் சோனியாவை மந்திரி ஆகச் சொல்லி எங்கே கேட்டார், அவர் எங்கே மறுத்தார்? மஞ்சுளாவுக்குக் கற்பனை வளம் அதிகம்தான்.
மஞ்சுளா தொலைகாட்சிகளிலும் ஊடகங்களிலும் "Spin Master" வேலைக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், அத்தகைய வேலைகளில்கூட இத்தகைய வாதங்கள் எடுபடாது என்பதை உணர வேண்டும்.
Thursday, May 13, 2004
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் - 2004
பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி இப்பாராளுமன்றத் தேர்தலில் சரிவைக் கண்டிருக்கிறது. பா.ஜ.க.வின் கொள்கைகளுக்கெதிரான கொள்கைகள் உடைய காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி, திமுக, சரத்பவாரின் நேஷனலிஸ்டிக் காங்கிரஸ் பார்ட்டி இன்னபிற ஆகியன வென்றிருக்கிற தொகுதிகளின் மொத்த எண்ணிக்கையை, பா.ஜ.க கூட்டணி வென்றிருக்கிற தொகுதிகளின் மொத்த எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, மக்கள் பா.ஜ.க கூட்டணிக்கெதிராக தெளிவாக வாக்களித்திருக்கிறார்கள் என்பதை அறியலாம்.
காங்கிரஸ் தலைமையில் மத்தியில் ஆட்சி அமையும் எனத் தெரிகிறது. சோனியா காந்தி பிரதமராகக் கூடும். அவர் வெளிநாட்டவர் என்கிற வாதம் இனிமேல் பா.ஜ.க தொண்டர்கள் அல்லது காங்கிரஸைப் பிடிக்காதவர்கள் நடுவில் மட்டுமே எடுபடக் கூடும். பொதுமக்களிடம் எடுபடுமா என்று தெரியவில்லை. ஏற்கனவே கூட இவ்வாதம் பொதுமக்களிடம் எடுபடாததாலேயே பா.ஜ.க இதுவரை தனியாக அறுதிப் பெரும்பான்மை பெற இயலாமல் இருந்தது. சொல்லப் போனால், 1999 தேர்தலில் பா.ஜ.க தனியாக வென்ற தொகுதிகளின் எண்ணிக்கைக்கும், அதற்கு முந்தைய தேர்தலில் பா.ஜ.க தனியாக வென்ற தொகுதிகளின் எண்ணிக்கைக்கும் அதிக வித்தியாசம் இல்லை எனலாம். கூட்டணிக் கட்சிகளின் வலிமையாலேயே 1999-ல் பா.ஜ.க. ஆட்சியமைத்தது. இப்போது அதேபோன்று காங்கிரஸ் ஆட்சி அமைக்கக் கூடும். இந்தியாவுக்கு கூட்டணி ஆட்சிதான் இன்றைய தேவை. அறுதிப் பெரும்பான்மை பெற்று நடத்தப்படும் தனிக்கட்சி ஆட்சிகளைவிட கூட்டணி ஆட்சி நல்ல விளைவுகளைத் தரும்.
சோனியா காந்தி ஒருமுறைப் பிரதமராகிவிட்டால், பின்னர் அவர் வெளிநாட்டவர் என்ற வாதம் அவரை அப்படிச் சொல்பவர்களிடமேகூட மதிப்பிழந்துவிடக் கூடும். என்னைப் பொறுத்தவரை சோனியாகாந்தி வெளிநாட்டவர் என்கிற கருத்து உப்புச் சப்பில்லாதது. சோனியா காந்தி இந்தியக் குடிமகள். அவர் கூட்டணிக்கு வாக்களித்தப் பொதுமக்களுக்கு அவர் பிரதமராவதில் ஆட்சேபணை இல்லை. எனவே, அவர் பிரதமராக வேண்டும். பின்னர், பிரதமராய் அவர் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லையென்றால், வாக்காளர்களுக்கு வேறுவழிகள் உள்ளன. அனுபவம் இல்லை என்று சோனியாகாந்தியைப் பற்றிச் சொல்கிறார்கள். அனுபவத்துடன் யாரும் பிறப்பதில்லை. அவர் திறமையான பிரதமரா என்பதைக் காலம் சொல்லும். சோனியா காந்தி இன்னொரு நரேந்திர மோடியாக இருக்க மாட்டார் என்பதால் அவர் பிரதமராவதை வரவேற்கிறேன்.
காங்கிரஸ் தனித்து ஆட்சி அமைக்காமல், கூட்டணி ஆட்சி அமைப்பது நாட்டுக்கு நல்லது. அந்தக் கூட்டணி அமைச்சரவையில் திமுக, பாமக, மதிமுக, சரத்பவாரின் கட்சி என்று காங்கிரஸ் கூட்டணி கட்சிகளூம், கம்யூனிஸ்ட்டுகள், சமாஜ்வாதி கட்சி என்று மதவாதத்துக்கு எதிரான கட்சிகளும் பங்கேற்க வேண்டும். இது பிரச்னைகளில் ஒத்த கருத்தை அடையவும், நாட்டின் ஸ்திரத்தன்மையைக் காக்கவும் உதவும். திமுக மத்திய அரசில் பங்கேற்காது என்று சொன்னதைக் கருணாநிதி மறுபரிசீலனை செய்ய வேண்டும். தி.மு.க. மத்திய அரசில் பங்கேற்பது தி.மு.க.வுக்கும் உதவிகரமாகவே அமையும் என்பதை அறியாதவர் அல்ல அவர். எந்த நேரத்தில் என்ன செய்வார் என்று சொல்ல முடியாத ஜெயலலிதாவின் பழிவாங்கும் நடவடிக்கைகளில் இருந்து தங்கள் கட்சியினரைக் காப்பாற்றிக் கொள்ள தி.மு.க. மத்திய அரசில் பங்கேற்பது உதவும். பா.ஜ.க. தோற்றிருந்தாலும் அதன் செல்வாக்கு கணிசமாக உள்ளது. எனவே, காங்கிரஸீம் அதன் கூட்டணி கட்சிகளும் அதைக் கருத்தில் கொண்டு, தங்களுக்குள் அடித்துக் கொள்ளாமல், ஊழல்களில் சிக்கிக் கொள்ளாமல், நாட்டு நலன், பொதுமக்களின் தேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு முக்கியப் பிரச்னைகளில் முடிவெடுக்க வேண்டும். இல்லையென்றால் பா.ஜ.க.வே பரவாயில்லை என்று மக்கள் நினைத்துவிடக் கூடும்.
சோனியா வெளிநாட்டவர், ராமர் கோவில் விவகாரம், போபர்ஸ் ஊழல், பரம்பரை ஆட்சி என்று உதவாத அரசியலை நடத்திக் கொண்டிருக்காமல், பா.ஜ.க. பொறுப்பான எதிர்கட்சியாக செயல்பட வேண்டும். பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள், ஜீவாதாரப் பிரச்னைகள் ஆகியவற்றுள் கவனம் செலுத்த வேண்டும். கம்ப்யூட்டர் முன்னே அமர்ந்து வியூகங்கள் வகுத்தாலோ பத்திரிகைகள் பாராட்டினாலோ வென்றுவிட முடியும் என்று தப்புக் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கக் கூடாது. அருண் ஜெட்லியும், பிரமோத் மகாஜனும் படித்தவர்களைக் கவர்ந்த அளவுக்குப் பாமரர்களைக் கவரவில்லை. அதற்குக் காரணம் - பாமரர்களைக் கணக்கில் கொள்ளாமல் - இந்தியா ஒளிர்கிறது என்கிற பிரமையில் பாமரனும் விழுந்துவிடுவான் என்று நினைத்ததே.
மாநிலத்தில் 50,638 கோடி கடனை வைத்துக் கொண்டு, விவசாயிகளின் தேவைகள், மக்களின் பிற பிரச்னைகள் ஆகியவற்றுக்குச் சமமாக நிதியும் கவனமும் ஒதுக்காமல், பொருளாதாரச் சீர்திருத்தங்களை மக்களுக்கேற்றவாறும் மக்களைப் பாதிக்காதவாறும் கொண்டுவராமல் செய்தித்தாள்களிலும் இணையத்திலும் தொழில்நுட்ப ஆட்சியாளர் என்று பெயர் வாங்க முனைபவர்களை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை அரசியல்வாதிகள் சந்திரபாபு நாயுடுக்கு ஏற்பட்ட தோல்வியிலிருந்து அறிந்து கொள்ள வேண்டும். இலவசமாக மின்சாரம் முதலியன தருவது சரியில்லை என்று படித்தோரில் சிலர் நினைக்கிறார்கள். ப.சிதம்பரம் நியூஜெர்ஸியில் பேசிய கூட்டம் ஒன்றில் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கூட விவசாயம் போன்றவற்றுக்கு அரசாங்கம் கொடுக்கிற சலுகைகள் முதலியவற்றை எடுத்துக் காட்டி, இந்தியா போன்ற நாடுகளின் விவசாயிகளூக்கு இத்தகைய சலுகைகள் எவ்வளவு அத்யாவசியமானவை என்று விளக்கியது நினைவுக்கு வருகிறது. இந்தியாவில் அரசாங்கம் தருகிற சலுகைகளின் அளவு ஆராயப்பட்டபின் குறைக்கப்படலாமே ஒழிய, அவற்றை முழுமையாக நீக்க வேண்டும் என்று சொல்வதை பொருளாதார நிபுணர்கள்கூட அங்கீகரிக்க மாட்டார்கள். இப்படிப்பட்ட மக்களின்பால் அக்கறை காட்டுகிற பொதுஅறிவுடையக் கொள்கைகள் நிறைந்த பொருளாதார சீர்திருத்தங்களை (Economic reforms with human face and common sense) வரப்போகும் ஆட்சி முன்னெடுத்துச் செல்லும் என்று நம்புவோம்.
தமிழ்நாட்டில் ஜெயலலிதா தோற்றிருக்கிறார். தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்பவராக இருந்தால், 1996 தேர்தல் தோல்விக்குப் பின்னரே அவர் அதைக் கற்றுக் கொண்டிருந்திருக்கலாம். ஆனால், அவர் இன்னமும் அதீதமான தன்னம்பிக்கை, தன்னைச் சுற்றியுள்ளவர்கள் சொல்வதைக் கேட்பது என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இப்படியே போனால் - அடுத்த தேர்தலில் தமிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.க. காணாமல் போய்விடும். கொள்கைகள் ஏதுமின்றித் தனிநபர் கவர்ச்சி மற்றும் வழிபாடு ஆகியவற்றின் அடிப்படையில் இயங்கும் அ.இ.அ.தி.மு.க போன்ற கட்சிகளுக்கு இத்தகைய அதிர்ச்சி வைத்தியங்கள் அவசியம் தேவை.
பா.ஜ.க. போன்ற கட்சிகளின் குறுகிய மதவாத நோக்கங்களால் இந்தியாவின் இறையாண்மைக்கும் அமைதிக்கும் மதச்சார்பின்மைக்கும் ஏற்படக் கூடிய நீண்டகாலப் பிரச்னைகள் ஆகியவற்றைக் கணக்கில்கொண்டு பா.ஜ.க.வுக்கு எதிரான கூட்டணியின் அவசியம் குறித்து போர்க்கால அடிப்படையில் குரல் கொடுத்து வந்த ஹர்கிஷண்சிங் சுர்ஜித் போன்ற தலைவர்களுக்கு - மதம், மொழி, இனம் ஆகியவற்றைக் கடந்து சகமனிதரை நேசிக்கிற ஒவ்வொரு இந்தியரும் சொல்கிற நன்றியாகவே இத்தேர்தல் முடிவுகளைப் பார்க்கலாம்.
இந்தியாவின் வாக்காளர்கள் அதிபுத்திசாலிகள் என்பதையும், கத்தியின்றி ரத்தமின்றி மாறுதல்களைக் கொண்டுவருவதில் ஜனநாயகத்துக்கு இணையில்லை என்பதையும் இந்தத் தேர்தல் நிரூபித்திருக்கிறது. யார் ஜெயித்தார்கள் என்பதைவிட - மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்கிற ஜனநாயகம் ஜெயித்திருக்கிறது. வாக்களித்துத் தங்கள் வலிமையைக் காட்டிய இந்தியாவின் கோடானுகோடி வாக்காளர்கள் பெருமைப்பட வேண்டிய விஷயம் இது.
காங்கிரஸ் தலைமையில் மத்தியில் ஆட்சி அமையும் எனத் தெரிகிறது. சோனியா காந்தி பிரதமராகக் கூடும். அவர் வெளிநாட்டவர் என்கிற வாதம் இனிமேல் பா.ஜ.க தொண்டர்கள் அல்லது காங்கிரஸைப் பிடிக்காதவர்கள் நடுவில் மட்டுமே எடுபடக் கூடும். பொதுமக்களிடம் எடுபடுமா என்று தெரியவில்லை. ஏற்கனவே கூட இவ்வாதம் பொதுமக்களிடம் எடுபடாததாலேயே பா.ஜ.க இதுவரை தனியாக அறுதிப் பெரும்பான்மை பெற இயலாமல் இருந்தது. சொல்லப் போனால், 1999 தேர்தலில் பா.ஜ.க தனியாக வென்ற தொகுதிகளின் எண்ணிக்கைக்கும், அதற்கு முந்தைய தேர்தலில் பா.ஜ.க தனியாக வென்ற தொகுதிகளின் எண்ணிக்கைக்கும் அதிக வித்தியாசம் இல்லை எனலாம். கூட்டணிக் கட்சிகளின் வலிமையாலேயே 1999-ல் பா.ஜ.க. ஆட்சியமைத்தது. இப்போது அதேபோன்று காங்கிரஸ் ஆட்சி அமைக்கக் கூடும். இந்தியாவுக்கு கூட்டணி ஆட்சிதான் இன்றைய தேவை. அறுதிப் பெரும்பான்மை பெற்று நடத்தப்படும் தனிக்கட்சி ஆட்சிகளைவிட கூட்டணி ஆட்சி நல்ல விளைவுகளைத் தரும்.
சோனியா காந்தி ஒருமுறைப் பிரதமராகிவிட்டால், பின்னர் அவர் வெளிநாட்டவர் என்ற வாதம் அவரை அப்படிச் சொல்பவர்களிடமேகூட மதிப்பிழந்துவிடக் கூடும். என்னைப் பொறுத்தவரை சோனியாகாந்தி வெளிநாட்டவர் என்கிற கருத்து உப்புச் சப்பில்லாதது. சோனியா காந்தி இந்தியக் குடிமகள். அவர் கூட்டணிக்கு வாக்களித்தப் பொதுமக்களுக்கு அவர் பிரதமராவதில் ஆட்சேபணை இல்லை. எனவே, அவர் பிரதமராக வேண்டும். பின்னர், பிரதமராய் அவர் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லையென்றால், வாக்காளர்களுக்கு வேறுவழிகள் உள்ளன. அனுபவம் இல்லை என்று சோனியாகாந்தியைப் பற்றிச் சொல்கிறார்கள். அனுபவத்துடன் யாரும் பிறப்பதில்லை. அவர் திறமையான பிரதமரா என்பதைக் காலம் சொல்லும். சோனியா காந்தி இன்னொரு நரேந்திர மோடியாக இருக்க மாட்டார் என்பதால் அவர் பிரதமராவதை வரவேற்கிறேன்.
காங்கிரஸ் தனித்து ஆட்சி அமைக்காமல், கூட்டணி ஆட்சி அமைப்பது நாட்டுக்கு நல்லது. அந்தக் கூட்டணி அமைச்சரவையில் திமுக, பாமக, மதிமுக, சரத்பவாரின் கட்சி என்று காங்கிரஸ் கூட்டணி கட்சிகளூம், கம்யூனிஸ்ட்டுகள், சமாஜ்வாதி கட்சி என்று மதவாதத்துக்கு எதிரான கட்சிகளும் பங்கேற்க வேண்டும். இது பிரச்னைகளில் ஒத்த கருத்தை அடையவும், நாட்டின் ஸ்திரத்தன்மையைக் காக்கவும் உதவும். திமுக மத்திய அரசில் பங்கேற்காது என்று சொன்னதைக் கருணாநிதி மறுபரிசீலனை செய்ய வேண்டும். தி.மு.க. மத்திய அரசில் பங்கேற்பது தி.மு.க.வுக்கும் உதவிகரமாகவே அமையும் என்பதை அறியாதவர் அல்ல அவர். எந்த நேரத்தில் என்ன செய்வார் என்று சொல்ல முடியாத ஜெயலலிதாவின் பழிவாங்கும் நடவடிக்கைகளில் இருந்து தங்கள் கட்சியினரைக் காப்பாற்றிக் கொள்ள தி.மு.க. மத்திய அரசில் பங்கேற்பது உதவும். பா.ஜ.க. தோற்றிருந்தாலும் அதன் செல்வாக்கு கணிசமாக உள்ளது. எனவே, காங்கிரஸீம் அதன் கூட்டணி கட்சிகளும் அதைக் கருத்தில் கொண்டு, தங்களுக்குள் அடித்துக் கொள்ளாமல், ஊழல்களில் சிக்கிக் கொள்ளாமல், நாட்டு நலன், பொதுமக்களின் தேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு முக்கியப் பிரச்னைகளில் முடிவெடுக்க வேண்டும். இல்லையென்றால் பா.ஜ.க.வே பரவாயில்லை என்று மக்கள் நினைத்துவிடக் கூடும்.
சோனியா வெளிநாட்டவர், ராமர் கோவில் விவகாரம், போபர்ஸ் ஊழல், பரம்பரை ஆட்சி என்று உதவாத அரசியலை நடத்திக் கொண்டிருக்காமல், பா.ஜ.க. பொறுப்பான எதிர்கட்சியாக செயல்பட வேண்டும். பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள், ஜீவாதாரப் பிரச்னைகள் ஆகியவற்றுள் கவனம் செலுத்த வேண்டும். கம்ப்யூட்டர் முன்னே அமர்ந்து வியூகங்கள் வகுத்தாலோ பத்திரிகைகள் பாராட்டினாலோ வென்றுவிட முடியும் என்று தப்புக் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கக் கூடாது. அருண் ஜெட்லியும், பிரமோத் மகாஜனும் படித்தவர்களைக் கவர்ந்த அளவுக்குப் பாமரர்களைக் கவரவில்லை. அதற்குக் காரணம் - பாமரர்களைக் கணக்கில் கொள்ளாமல் - இந்தியா ஒளிர்கிறது என்கிற பிரமையில் பாமரனும் விழுந்துவிடுவான் என்று நினைத்ததே.
மாநிலத்தில் 50,638 கோடி கடனை வைத்துக் கொண்டு, விவசாயிகளின் தேவைகள், மக்களின் பிற பிரச்னைகள் ஆகியவற்றுக்குச் சமமாக நிதியும் கவனமும் ஒதுக்காமல், பொருளாதாரச் சீர்திருத்தங்களை மக்களுக்கேற்றவாறும் மக்களைப் பாதிக்காதவாறும் கொண்டுவராமல் செய்தித்தாள்களிலும் இணையத்திலும் தொழில்நுட்ப ஆட்சியாளர் என்று பெயர் வாங்க முனைபவர்களை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை அரசியல்வாதிகள் சந்திரபாபு நாயுடுக்கு ஏற்பட்ட தோல்வியிலிருந்து அறிந்து கொள்ள வேண்டும். இலவசமாக மின்சாரம் முதலியன தருவது சரியில்லை என்று படித்தோரில் சிலர் நினைக்கிறார்கள். ப.சிதம்பரம் நியூஜெர்ஸியில் பேசிய கூட்டம் ஒன்றில் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கூட விவசாயம் போன்றவற்றுக்கு அரசாங்கம் கொடுக்கிற சலுகைகள் முதலியவற்றை எடுத்துக் காட்டி, இந்தியா போன்ற நாடுகளின் விவசாயிகளூக்கு இத்தகைய சலுகைகள் எவ்வளவு அத்யாவசியமானவை என்று விளக்கியது நினைவுக்கு வருகிறது. இந்தியாவில் அரசாங்கம் தருகிற சலுகைகளின் அளவு ஆராயப்பட்டபின் குறைக்கப்படலாமே ஒழிய, அவற்றை முழுமையாக நீக்க வேண்டும் என்று சொல்வதை பொருளாதார நிபுணர்கள்கூட அங்கீகரிக்க மாட்டார்கள். இப்படிப்பட்ட மக்களின்பால் அக்கறை காட்டுகிற பொதுஅறிவுடையக் கொள்கைகள் நிறைந்த பொருளாதார சீர்திருத்தங்களை (Economic reforms with human face and common sense) வரப்போகும் ஆட்சி முன்னெடுத்துச் செல்லும் என்று நம்புவோம்.
தமிழ்நாட்டில் ஜெயலலிதா தோற்றிருக்கிறார். தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்பவராக இருந்தால், 1996 தேர்தல் தோல்விக்குப் பின்னரே அவர் அதைக் கற்றுக் கொண்டிருந்திருக்கலாம். ஆனால், அவர் இன்னமும் அதீதமான தன்னம்பிக்கை, தன்னைச் சுற்றியுள்ளவர்கள் சொல்வதைக் கேட்பது என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இப்படியே போனால் - அடுத்த தேர்தலில் தமிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.க. காணாமல் போய்விடும். கொள்கைகள் ஏதுமின்றித் தனிநபர் கவர்ச்சி மற்றும் வழிபாடு ஆகியவற்றின் அடிப்படையில் இயங்கும் அ.இ.அ.தி.மு.க போன்ற கட்சிகளுக்கு இத்தகைய அதிர்ச்சி வைத்தியங்கள் அவசியம் தேவை.
பா.ஜ.க. போன்ற கட்சிகளின் குறுகிய மதவாத நோக்கங்களால் இந்தியாவின் இறையாண்மைக்கும் அமைதிக்கும் மதச்சார்பின்மைக்கும் ஏற்படக் கூடிய நீண்டகாலப் பிரச்னைகள் ஆகியவற்றைக் கணக்கில்கொண்டு பா.ஜ.க.வுக்கு எதிரான கூட்டணியின் அவசியம் குறித்து போர்க்கால அடிப்படையில் குரல் கொடுத்து வந்த ஹர்கிஷண்சிங் சுர்ஜித் போன்ற தலைவர்களுக்கு - மதம், மொழி, இனம் ஆகியவற்றைக் கடந்து சகமனிதரை நேசிக்கிற ஒவ்வொரு இந்தியரும் சொல்கிற நன்றியாகவே இத்தேர்தல் முடிவுகளைப் பார்க்கலாம்.
இந்தியாவின் வாக்காளர்கள் அதிபுத்திசாலிகள் என்பதையும், கத்தியின்றி ரத்தமின்றி மாறுதல்களைக் கொண்டுவருவதில் ஜனநாயகத்துக்கு இணையில்லை என்பதையும் இந்தத் தேர்தல் நிரூபித்திருக்கிறது. யார் ஜெயித்தார்கள் என்பதைவிட - மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்கிற ஜனநாயகம் ஜெயித்திருக்கிறது. வாக்களித்துத் தங்கள் வலிமையைக் காட்டிய இந்தியாவின் கோடானுகோடி வாக்காளர்கள் பெருமைப்பட வேண்டிய விஷயம் இது.
Sunday, May 09, 2004
நினைமின் மனனே! நினைமின் மனனே!
பட்டினத்தாரை misogynist எனலாம். காமத்தையும் பெண்களையும் ஒன்றாக உருவகப்படுத்திக் கொண்டு அவர் எழுதியுள்ளவை நவீனவாதிகளும் பெண்ணியவாதிகள் விரும்பக்கூடியதல்ல. காமத்தையும் பற்றையும் ஒழிக்க வேண்டும் என்ற கருத்தை வலியிறுத்திச் சொல்ல பெண்களையும் அவர்தம் உடலையும் இப்படிப் பழிக்கிறாரா என்ற கேள்வி பட்டினத்தாரைப் படித்தால் எழாமல் இருக்காது. ஆனால், காதலில் தோல்வியுற்றோரும், பெண்கள்பால் ஏதோ ஒரு காரணத்துக்காக வெறுப்பு காட்டுவோரும், சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்பதுபோல அவ்வப்போது மேற்கோள் காட்ட பட்டினத்தாரின் பட்டென்று பேசும் பாடல்கள் உதவக் கூடும். பெண்கள், காமம் பற்றிய அவர் கருத்துகளை ஒரு நேரத்தின் அல்லது ஒரு மனநிலையின் கணநேர வெளிப்பாடு என்றோ கலைஞர்களுக்கும் கவிஞர்களுக்கும் இருக்கிற சிலநேர பலவீனமென்றோ ஒதுக்கிவிட முடியாது. ஒரு obsession போல அவர் தொடர்ந்து அக்கருத்துகளை முன்வைப்பதற்கு ஏதுவான உள்ஒளி ஏதையும் அவர் கண்டிருக்க வேண்டும். மாதர் தோள் புணர்ந்தபோது மனிதவாழ்வு சிறக்குமே என்று உணர்ந்து பெண்களைப் பெருமைப்படுத்திய சிவவாக்கியருக்கு எதிரான கருத்துகளைக் கொண்டவர் பட்டினத்தார் எனலாம்.
ஆனால், பெண்களைப் பற்றிய அவர் பார்வையை விலக்கிவிட்டுப் பார்த்தால், பட்டினத்தார் சில இடங்களில் அற்புதமாகத் தெரிகிறார்.
பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும்;
தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும்;
பெருத்தன சிறுக்கும்; சிறுத்தன பெருக்கும்;
உணர்ந்தன மறக்கும்; மறந்தன உணரும்;
புணர்ந்தன பிரியும்; பிரிந்தன புணரும்;
அருந்தின மலமாம், புனைந்தன அழுக்காம்;
உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பாம்
என்றிவை அனைத்தும் உணர்ந்தனை
என்று பட்டினத்தார் பேசும்போது, இத்தகைய ஞானம் பெற்ற இவரா பெண்களைப் பற்றியும், காமத்தைப் பற்றியும், உடலைப் பற்றியும் எதிர்மறையாகவும், சிறுமைபேசும் தொனியிலும் எழுதியிருக்கிறார் என்கிற ஆச்சரியம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.
ஆனால், பெண்களைப் பற்றிய அவர் பார்வையை விலக்கிவிட்டுப் பார்த்தால், பட்டினத்தார் சில இடங்களில் அற்புதமாகத் தெரிகிறார்.
பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும்;
தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும்;
பெருத்தன சிறுக்கும்; சிறுத்தன பெருக்கும்;
உணர்ந்தன மறக்கும்; மறந்தன உணரும்;
புணர்ந்தன பிரியும்; பிரிந்தன புணரும்;
அருந்தின மலமாம், புனைந்தன அழுக்காம்;
உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பாம்
என்றிவை அனைத்தும் உணர்ந்தனை
என்று பட்டினத்தார் பேசும்போது, இத்தகைய ஞானம் பெற்ற இவரா பெண்களைப் பற்றியும், காமத்தைப் பற்றியும், உடலைப் பற்றியும் எதிர்மறையாகவும், சிறுமைபேசும் தொனியிலும் எழுதியிருக்கிறார் என்கிற ஆச்சரியம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.
எழுத்தாளர்களைப் பற்றிய குறும்படங்கள்
சாகித்திய அக்காதெமி எழுத்தாளர்களைப் பற்றிய விவரணப் படங்களைத் தயாரித்து வெளியிட்டு வருவது பாராட்டப்பட வேண்டிய விஷயம். ஒவ்வொன்றும் 30 நிமிடங்கள் ஓடும் விவரணப் படங்கள் ஜெயகாந்தன், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, பிரபஞ்சன் என்று பல எழுத்தாளர்களைப் பற்றி வெளிவந்துள்ளன. எழுத்தாளர்களுக்கு ஒரு சமூகம் திருப்பிக் கொடுக்க வேண்டிய மரியாதையின் ஓர் அடையாளமாகவும், எழுத்தாளர்களை விஷீவல் மீடியம் வழியே அவர்களின் வாசகர்களுக்குக் காட்டுகிற வரலாற்று ஆவணமாகவும் இப்படங்கள் அமைகின்றன.
ஏறக்குறைய நான்கு வருடங்களுக்கு முன் சா.கந்தசாமி இயக்கிய ஜெயகாந்தன் விவரணப் படத்தைப் பார்த்தேன். சமீபத்தில் அம்ஷன்குமார் இயக்கிய அசோகமித்திரனையும், ரவி சுப்ரமணியன் இயக்கிய இந்திரா பார்த்தசாரதி என்னும் நாடகக் கலைஞனையும் பார்க்க நேர்ந்தது. இவ்விரண்டுப் படங்களையும் பார்த்தபின் மீண்டும் ஒருமுறை ஜெயகாந்தன் விவரணப்படத்தையும் பார்க்க நேர்ந்தது. இம்மூன்றையும் இங்கே ஒப்பிடவோ மதிப்பிடவோ போவதில்லை. இம்மூன்றைப் பற்றியும் எனக்குத் தனித்தனியே கருத்துகள் உள்ளன என்பது இருக்கட்டும்.
எழுத்தாளர்களைப் பற்றிய விவரணப் படங்களைப் பற்றிய என் பொதுவான கருத்துகளை முன்வைப்பது மட்டுமே நான் இப்போது செய்யப்போவது.
எழுத்தாளர்களைப் பற்றிய விவரணப் படங்கள் பொதுவான அம்சங்களைக் கொண்டுள்ளன. எழுத்தாளரின் குழந்தைப் பருவம், அவர் படைப்புகளின் சில பகுதிகளை எழுத்தாளரோ பிறரோ வாசித்துக் காட்டுவது, எழுத்தாளரின் குடும்ப விவரங்கள், எழுத்தாளரே தன்னைப் பற்றிப் பேசுவது, தமிழின் பிற முக்கியமான படைப்பாளிகள் எழுத்தாளர் பற்றிய தன் கருத்துகளைச் சொல்வது ஆகியவை அவற்றுள் சில.
ஓர் எழுத்தாளரைப் பற்றியக் குறும்படத்தில் இவையெல்லாம் அவசியமே. ஆனாலும், நான் பார்த்த மூன்று படங்களுமே எனக்கு முழு திருப்தி அளிக்கவில்லை. இயக்குனர்கள் மூன்று பேருமே கலைஞர்கள். தங்களுக்கே உரித்தான வகையில் படத்தை அணுகியும் இயக்கியும் இருக்கிறார்கள். எனவே, என் திருப்தியின்மைக்கு என்ன காரணம் இருக்க முடியும் என்று யோசித்துப் பார்த்தால், இயக்குனர்களுக்குக் கிடைத்திருக்கிற சொற்ப நேரத்தைச் சொல்லத் தோன்றுகிறது. முப்பது நிமிடங்களுக்குள் ஓர் எழுத்தாளரின் ஆளுமையை, சமூகத்தில் அவர் படைப்புகளும் அவரும் ஏற்படுத்தியிருக்கிற பிம்பத்தை, சலனங்களை முழுமையாக வெளிக்கொண்டு வந்துவிட முடியாது.
எனவே, சாகித்திய அக்காதெமி இனிமேல் இப்படங்களுக்கான நேரத்தை குறைந்தபட்சம் ஒருமணி நேரமாக மாற்ற முன்வரவேண்டும். ஒருமணி நேரமாவது கிடைத்தால்தான் இயக்குனர்கள் ஓர் எழுத்தாளரின் பல்வேறு ஆளுமைகளில் சிலவற்றையாவது முழுமையாக வெளிக்கொணர முடியும். உதாரணமாக, இந்திரா பார்த்தசாரதி என்னும் நாடகக் கலைஞன் படம், அவரின் நாடகப் படைப்புகள், அதுசார்ந்த கருத்துகள் என்று முக்கால்வாசி நேரம் அதிலேயே சுற்றி வருகிறது. ஆனால், சிறுகதை, நாவல் ஆகியவற்றில் இ.பா செய்த சாதனைகளின் பக்கம் சரியாகக் கவனம் செலுத்த நேரம் இல்லாமல் போயிருக்கலாம். இ.பா. நாவலுக்காக சாகித்திய அக்காதெமி விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தலைப்பு நாடகத்தைப் பற்றியதாக இருக்கிறது என்பதால், இ.பா.வின் நாடகப் பங்களிப்பு பற்றியே இயக்குனர் கவனம் செலுத்தியிருக்கக் கூடும். இத்தகைய படங்களின் நோக்கம் முடிந்த அளவு ஓர் எழுத்தாளரின் எல்லாத் துறைகளையும் அவற்றில் அவர் செய்த பங்களிப்புகளையும் விவரமாக வெளிக்கொணர வேண்டியது அவசியம் என்று நான் நம்புகிறேன். அதற்கு இயக்குனருக்கு அதிக நேரம் தேவை. அது கொடுக்கப்படவும் வேண்டும். இங்கே இ.பா. பற்றிய படத்தை ஓர் உதாரணத்துக்காகவே எடுத்துக் கொண்டுள்ளேன். குறை சொல்வதற்காக அல்ல. இதையே மற்ற படங்களிலும் நான் உணர்ந்தேன் என்பதையும் சொல்ல வேண்டும். கொடுக்கப்பட்ட நேரத்தில் தாங்கள் சொல்ல விரும்பிய கருத்துகளைத் தாங்கள் சொல்ல விரும்பிய வண்ணம் இயக்குனர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்பதால் இது இயக்குனர்களின் குறையல்ல.
வாழ்நாள் முழுவதும் தம் எழுத்துகளால் தமிழ்ச் சமூகத்திடையே கருத்தாக்கங்களையும், எதிர்விளைவுகளையும், சலனங்களையும், மாற்றங்களையும், விவாதங்களையும் கொண்டுவந்த எழுத்தாளர்கள் பற்றி முப்பது நிமிடங்களில் சொல் என்று இயக்குனர்களைச் சொல்வது, அந்த எழுத்தாளருக்குப் பெருமை சேர்ப்பதாக அமையாது என்பது ஒருபக்கம் இருக்கட்டும். அத்தகைய முயற்சிகள் எவருக்கும் திருப்தியற்றவையாகவும், குறைபட்டுப் போனவையாகவும் உணரப்பட வாய்ப்புகளும் தருவதாக இருக்கும்.
எனவே, சாகித்திய அக்காதெமி இப்படங்களுக்கான நேரத்தை உயர்த்தி அதற்கேற்றவாறு உதவித்தொகையையும் உயர்த்துவது இன்றியமையாதது. சாகித்திய அக்காதெமியின் குழுவில் இருக்கிற தமிழ் எழுத்தாளர்கள் அதற்காக ஆவன செய்ய வேண்டும்.
ஏறக்குறைய நான்கு வருடங்களுக்கு முன் சா.கந்தசாமி இயக்கிய ஜெயகாந்தன் விவரணப் படத்தைப் பார்த்தேன். சமீபத்தில் அம்ஷன்குமார் இயக்கிய அசோகமித்திரனையும், ரவி சுப்ரமணியன் இயக்கிய இந்திரா பார்த்தசாரதி என்னும் நாடகக் கலைஞனையும் பார்க்க நேர்ந்தது. இவ்விரண்டுப் படங்களையும் பார்த்தபின் மீண்டும் ஒருமுறை ஜெயகாந்தன் விவரணப்படத்தையும் பார்க்க நேர்ந்தது. இம்மூன்றையும் இங்கே ஒப்பிடவோ மதிப்பிடவோ போவதில்லை. இம்மூன்றைப் பற்றியும் எனக்குத் தனித்தனியே கருத்துகள் உள்ளன என்பது இருக்கட்டும்.
எழுத்தாளர்களைப் பற்றிய விவரணப் படங்களைப் பற்றிய என் பொதுவான கருத்துகளை முன்வைப்பது மட்டுமே நான் இப்போது செய்யப்போவது.
எழுத்தாளர்களைப் பற்றிய விவரணப் படங்கள் பொதுவான அம்சங்களைக் கொண்டுள்ளன. எழுத்தாளரின் குழந்தைப் பருவம், அவர் படைப்புகளின் சில பகுதிகளை எழுத்தாளரோ பிறரோ வாசித்துக் காட்டுவது, எழுத்தாளரின் குடும்ப விவரங்கள், எழுத்தாளரே தன்னைப் பற்றிப் பேசுவது, தமிழின் பிற முக்கியமான படைப்பாளிகள் எழுத்தாளர் பற்றிய தன் கருத்துகளைச் சொல்வது ஆகியவை அவற்றுள் சில.
ஓர் எழுத்தாளரைப் பற்றியக் குறும்படத்தில் இவையெல்லாம் அவசியமே. ஆனாலும், நான் பார்த்த மூன்று படங்களுமே எனக்கு முழு திருப்தி அளிக்கவில்லை. இயக்குனர்கள் மூன்று பேருமே கலைஞர்கள். தங்களுக்கே உரித்தான வகையில் படத்தை அணுகியும் இயக்கியும் இருக்கிறார்கள். எனவே, என் திருப்தியின்மைக்கு என்ன காரணம் இருக்க முடியும் என்று யோசித்துப் பார்த்தால், இயக்குனர்களுக்குக் கிடைத்திருக்கிற சொற்ப நேரத்தைச் சொல்லத் தோன்றுகிறது. முப்பது நிமிடங்களுக்குள் ஓர் எழுத்தாளரின் ஆளுமையை, சமூகத்தில் அவர் படைப்புகளும் அவரும் ஏற்படுத்தியிருக்கிற பிம்பத்தை, சலனங்களை முழுமையாக வெளிக்கொண்டு வந்துவிட முடியாது.
எனவே, சாகித்திய அக்காதெமி இனிமேல் இப்படங்களுக்கான நேரத்தை குறைந்தபட்சம் ஒருமணி நேரமாக மாற்ற முன்வரவேண்டும். ஒருமணி நேரமாவது கிடைத்தால்தான் இயக்குனர்கள் ஓர் எழுத்தாளரின் பல்வேறு ஆளுமைகளில் சிலவற்றையாவது முழுமையாக வெளிக்கொணர முடியும். உதாரணமாக, இந்திரா பார்த்தசாரதி என்னும் நாடகக் கலைஞன் படம், அவரின் நாடகப் படைப்புகள், அதுசார்ந்த கருத்துகள் என்று முக்கால்வாசி நேரம் அதிலேயே சுற்றி வருகிறது. ஆனால், சிறுகதை, நாவல் ஆகியவற்றில் இ.பா செய்த சாதனைகளின் பக்கம் சரியாகக் கவனம் செலுத்த நேரம் இல்லாமல் போயிருக்கலாம். இ.பா. நாவலுக்காக சாகித்திய அக்காதெமி விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தலைப்பு நாடகத்தைப் பற்றியதாக இருக்கிறது என்பதால், இ.பா.வின் நாடகப் பங்களிப்பு பற்றியே இயக்குனர் கவனம் செலுத்தியிருக்கக் கூடும். இத்தகைய படங்களின் நோக்கம் முடிந்த அளவு ஓர் எழுத்தாளரின் எல்லாத் துறைகளையும் அவற்றில் அவர் செய்த பங்களிப்புகளையும் விவரமாக வெளிக்கொணர வேண்டியது அவசியம் என்று நான் நம்புகிறேன். அதற்கு இயக்குனருக்கு அதிக நேரம் தேவை. அது கொடுக்கப்படவும் வேண்டும். இங்கே இ.பா. பற்றிய படத்தை ஓர் உதாரணத்துக்காகவே எடுத்துக் கொண்டுள்ளேன். குறை சொல்வதற்காக அல்ல. இதையே மற்ற படங்களிலும் நான் உணர்ந்தேன் என்பதையும் சொல்ல வேண்டும். கொடுக்கப்பட்ட நேரத்தில் தாங்கள் சொல்ல விரும்பிய கருத்துகளைத் தாங்கள் சொல்ல விரும்பிய வண்ணம் இயக்குனர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்பதால் இது இயக்குனர்களின் குறையல்ல.
வாழ்நாள் முழுவதும் தம் எழுத்துகளால் தமிழ்ச் சமூகத்திடையே கருத்தாக்கங்களையும், எதிர்விளைவுகளையும், சலனங்களையும், மாற்றங்களையும், விவாதங்களையும் கொண்டுவந்த எழுத்தாளர்கள் பற்றி முப்பது நிமிடங்களில் சொல் என்று இயக்குனர்களைச் சொல்வது, அந்த எழுத்தாளருக்குப் பெருமை சேர்ப்பதாக அமையாது என்பது ஒருபக்கம் இருக்கட்டும். அத்தகைய முயற்சிகள் எவருக்கும் திருப்தியற்றவையாகவும், குறைபட்டுப் போனவையாகவும் உணரப்பட வாய்ப்புகளும் தருவதாக இருக்கும்.
எனவே, சாகித்திய அக்காதெமி இப்படங்களுக்கான நேரத்தை உயர்த்தி அதற்கேற்றவாறு உதவித்தொகையையும் உயர்த்துவது இன்றியமையாதது. சாகித்திய அக்காதெமியின் குழுவில் இருக்கிற தமிழ் எழுத்தாளர்கள் அதற்காக ஆவன செய்ய வேண்டும்.
Wednesday, May 05, 2004
திரு. கருணாநிதியின் சன் டிவி பதில்கள்
திரு.கருணாநிதி சன் டிவி மூலம் நேயர்கள் கேள்விகளுக்குச் சமீபத்தில் பதிலளித்தார். அப்போது அவருக்கு திரு.மாலன் உடன் இருந்து உதவினார். அப்போது மாலன் சொன்ன கருத்துகள் குறித்து விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. மாலன் இப்படிப் பேசலாமா என்று கேட்கப்படுகிறது. எதற்காகத் திரு.கருணாநிதி சொல்வதை விளக்குவதுபோல ஜெயலலிதாமீது காட்டமான விமர்சனம் வைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பப் படுகிறது.
ஏன் வைக்கக் கூடாதா என்று எனக்குத் தோன்றுகிறது. எனக்கு மாலன் செய்தது தவறில்லை என்றே படுகிறது. மாலனுக்கென்று தனியே அப்படிப்பட்ட கருத்துகள் இருக்கின்றன. அதை அவர் சொன்னார் என்றே நான் எடுத்துக் கொள்கிறேன். திரு. கருணாநிதியின் கருத்துகளும் மாலனின் கருத்துகளும் ஒத்துப் போவதாலேயே மாலனை விமர்சிப்பது சரியில்லை. தி.மு.க.வின் சில பல கொள்கைகளுடன் ஒத்துப் போகிற தனிப்பட்ட கருத்தாக்கங்கள் இருப்பதாலேயே மாலன் சன் டிவியில் பணிபுரியக் கூடும். அப்படி இருக்கக் கூடுமானால், அதில் தவறு இருப்பதாகவும் நான் நினைக்கவில்லை. ஒத்துபோகாத இடத்திலும் மனம் உடன்படாதக் கொள்கைகளிலும் யாரும் பணிபுரிய இயலாது என்று நான் நம்புகிறேன்.
நமது எம்ஜிஆரில் திமுகவைப் புகழ்ந்தோ முரசொலியில் அதிமுகவைப் புகழ்ந்தோ எதிர்பார்க்கக் கூடாது. ஆனால், அவற்றில் வருவன பற்றி விமர்சிக்கலாம். அப்படி, மாலன் ஏன் இப்படிச் சொன்னார் என்று கேட்பதைவிட, அவர் கருத்துகள் குறித்து யாருக்கேனும் எதிர்வினை இருந்தால் செய்வது நன்றாக இருக்கும். வரலாற்றை எடுத்துக் கொண்டால், அறிஞர்களும் கலைஞர்களும் தேவை ஏற்படும்போது அரசியலில் இறங்கியும் கருத்துகள் சொல்லியும் இருக்கிறார்கள். அப்படி மாலனும் அரசியல் கருத்துகளைச் சொல்வதாக எடுத்துக் கொண்டு, அவர் கருத்து பற்றிய எண்ணங்களை வேண்டுமானால் சொல்லலாம். எழுத்தாளர்களூம் அறிஞர்களும் இப்படி அரசியலில் அதிக அளவு பங்கெடுத்துக் கொள்வது சமுதாயத்துக்கு நல்லது.
மாறன் மறைவிற்குப் பின் திமுகவில் நவீன மற்றும் அறிவுபூர்வமான சிந்தனையில் விழுந்திருக்கிற இடைவெளியை, மாலன் போன்றவர்கள் நிரப்ப முடியும். திமுகவின் உதவாதக் கொள்கைகளை மிதப்படுத்தி, காலத்துக்கேற்றவாறு ஓரளவுக்கு மாற்றியமைத்து, அதன் குறிப்பிடத்தக்க நவீனக் கொள்கை மாறுதல்களுக்கு அடித்தளமிட்டவர் மாறன் என்று நான் நம்புகிறேன். மாலன் போன்ற எழுத்தாளர்கள் தங்கள் ஆலோசனைகளாலும் உலகளாவியப் பார்வையாலும் வாசிப்பு அனுபவத்தால் பெற்றிருக்கிற பரந்தபட்ட மனோபாவத்தாலும் அவர் விரும்புகிற கட்சிக்கு ஆக்கபூர்வமான பங்களிப்பைச் செய்ய இயலும்.
உதாரணமாக, அருந்ததிராய் போன்ற எழுத்தாளர்கள் எவ்வளவுதான் பொடாவை எதிர்த்து ஆரம்பம் முதலே எழுதி வந்தாலும், திமுக, மதிமுக போன்ற கட்சிகள் பொடா சட்டம் கொண்டு வரப்பட்ட போது ஆதரித்தன. பின்னர், அந்தச் சட்டத்தாலேயே வை.கோபால்சாமி பாதிக்கப்பட்ட பின்னரே, அதற்கு எதிராகக் குரல் கொடுத்தன. எழுத்தாளர்களின் ஆலோசனைகள் கேட்கப்பட்டால் இத்தகைய தவறுகளைக் கட்சிகள் களைந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். அதற்கு மாலன் போன்றவர்கள் உதவ முடியும்.
மற்றபடிக்கு, சன் டிவியில் கருணாநிதி பொறுமையாகவும் நிதானமாகவும் முதிர்ச்சியுடனும் பதிலளித்தார். பாராளுமன்றத் தேர்தலில் வென்றதும் அதையே தொடர்வார் என்று எதிர்பார்ப்போம். அமங்கலமான வார்த்தை கூடாது என்றும், ஜெயலலிதாவின் தன்னம்பிக்கை பிடித்திருப்பதாக என்றும் கருணாநிதி பேசியது மகிழ்ச்சி அளித்தது. அவர் கட்சியின் சில பேச்சாளர்களும் அதைப் பின்பற்றி ஒரு முன்மாதிரியாகத் தங்கள் கட்சி திகழ உதவ வேண்டும்.
பொதுமக்களின் கேள்விகளுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இப்படிப் பதில் சொல்கிற நிகழ்ச்சிகள் வரவேற்கப்பட வேண்டும். பிற நாடுகளிலும் மாநிலங்களிலும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ராயர் காப்பி கிளப் யாஹீ குழுமத்தில் சில மாதங்களுக்கு முன் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் பிற இடங்களில் நடப்பது பற்றி எழுதப்பட்டிருந்ததைப் படித்த ஞாபகம். இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்துகிற ஆலோசனையையே கூட மாலன் கொடுத்திருக்கலாம். திரு. கருணாநிதியைப் பின்பற்றி ஜெயலலிதா மற்றும் பிற தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இப்படிப் பொதுமக்களின் கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்க முன்வர வேண்டும்.
ஏன் வைக்கக் கூடாதா என்று எனக்குத் தோன்றுகிறது. எனக்கு மாலன் செய்தது தவறில்லை என்றே படுகிறது. மாலனுக்கென்று தனியே அப்படிப்பட்ட கருத்துகள் இருக்கின்றன. அதை அவர் சொன்னார் என்றே நான் எடுத்துக் கொள்கிறேன். திரு. கருணாநிதியின் கருத்துகளும் மாலனின் கருத்துகளும் ஒத்துப் போவதாலேயே மாலனை விமர்சிப்பது சரியில்லை. தி.மு.க.வின் சில பல கொள்கைகளுடன் ஒத்துப் போகிற தனிப்பட்ட கருத்தாக்கங்கள் இருப்பதாலேயே மாலன் சன் டிவியில் பணிபுரியக் கூடும். அப்படி இருக்கக் கூடுமானால், அதில் தவறு இருப்பதாகவும் நான் நினைக்கவில்லை. ஒத்துபோகாத இடத்திலும் மனம் உடன்படாதக் கொள்கைகளிலும் யாரும் பணிபுரிய இயலாது என்று நான் நம்புகிறேன்.
நமது எம்ஜிஆரில் திமுகவைப் புகழ்ந்தோ முரசொலியில் அதிமுகவைப் புகழ்ந்தோ எதிர்பார்க்கக் கூடாது. ஆனால், அவற்றில் வருவன பற்றி விமர்சிக்கலாம். அப்படி, மாலன் ஏன் இப்படிச் சொன்னார் என்று கேட்பதைவிட, அவர் கருத்துகள் குறித்து யாருக்கேனும் எதிர்வினை இருந்தால் செய்வது நன்றாக இருக்கும். வரலாற்றை எடுத்துக் கொண்டால், அறிஞர்களும் கலைஞர்களும் தேவை ஏற்படும்போது அரசியலில் இறங்கியும் கருத்துகள் சொல்லியும் இருக்கிறார்கள். அப்படி மாலனும் அரசியல் கருத்துகளைச் சொல்வதாக எடுத்துக் கொண்டு, அவர் கருத்து பற்றிய எண்ணங்களை வேண்டுமானால் சொல்லலாம். எழுத்தாளர்களூம் அறிஞர்களும் இப்படி அரசியலில் அதிக அளவு பங்கெடுத்துக் கொள்வது சமுதாயத்துக்கு நல்லது.
மாறன் மறைவிற்குப் பின் திமுகவில் நவீன மற்றும் அறிவுபூர்வமான சிந்தனையில் விழுந்திருக்கிற இடைவெளியை, மாலன் போன்றவர்கள் நிரப்ப முடியும். திமுகவின் உதவாதக் கொள்கைகளை மிதப்படுத்தி, காலத்துக்கேற்றவாறு ஓரளவுக்கு மாற்றியமைத்து, அதன் குறிப்பிடத்தக்க நவீனக் கொள்கை மாறுதல்களுக்கு அடித்தளமிட்டவர் மாறன் என்று நான் நம்புகிறேன். மாலன் போன்ற எழுத்தாளர்கள் தங்கள் ஆலோசனைகளாலும் உலகளாவியப் பார்வையாலும் வாசிப்பு அனுபவத்தால் பெற்றிருக்கிற பரந்தபட்ட மனோபாவத்தாலும் அவர் விரும்புகிற கட்சிக்கு ஆக்கபூர்வமான பங்களிப்பைச் செய்ய இயலும்.
உதாரணமாக, அருந்ததிராய் போன்ற எழுத்தாளர்கள் எவ்வளவுதான் பொடாவை எதிர்த்து ஆரம்பம் முதலே எழுதி வந்தாலும், திமுக, மதிமுக போன்ற கட்சிகள் பொடா சட்டம் கொண்டு வரப்பட்ட போது ஆதரித்தன. பின்னர், அந்தச் சட்டத்தாலேயே வை.கோபால்சாமி பாதிக்கப்பட்ட பின்னரே, அதற்கு எதிராகக் குரல் கொடுத்தன. எழுத்தாளர்களின் ஆலோசனைகள் கேட்கப்பட்டால் இத்தகைய தவறுகளைக் கட்சிகள் களைந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். அதற்கு மாலன் போன்றவர்கள் உதவ முடியும்.
மற்றபடிக்கு, சன் டிவியில் கருணாநிதி பொறுமையாகவும் நிதானமாகவும் முதிர்ச்சியுடனும் பதிலளித்தார். பாராளுமன்றத் தேர்தலில் வென்றதும் அதையே தொடர்வார் என்று எதிர்பார்ப்போம். அமங்கலமான வார்த்தை கூடாது என்றும், ஜெயலலிதாவின் தன்னம்பிக்கை பிடித்திருப்பதாக என்றும் கருணாநிதி பேசியது மகிழ்ச்சி அளித்தது. அவர் கட்சியின் சில பேச்சாளர்களும் அதைப் பின்பற்றி ஒரு முன்மாதிரியாகத் தங்கள் கட்சி திகழ உதவ வேண்டும்.
பொதுமக்களின் கேள்விகளுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இப்படிப் பதில் சொல்கிற நிகழ்ச்சிகள் வரவேற்கப்பட வேண்டும். பிற நாடுகளிலும் மாநிலங்களிலும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ராயர் காப்பி கிளப் யாஹீ குழுமத்தில் சில மாதங்களுக்கு முன் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் பிற இடங்களில் நடப்பது பற்றி எழுதப்பட்டிருந்ததைப் படித்த ஞாபகம். இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்துகிற ஆலோசனையையே கூட மாலன் கொடுத்திருக்கலாம். திரு. கருணாநிதியைப் பின்பற்றி ஜெயலலிதா மற்றும் பிற தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இப்படிப் பொதுமக்களின் கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்க முன்வர வேண்டும்.
Tuesday, May 04, 2004
பாரதியின் வேல்ஸ் இளவரசருக்கு வரவேற்பு
நண்பர் சுந்தரவடிவேல் பாரதியார் "வேல்ஸ் இளவரசருக்கு வரவேற்பு" பாடியது ஏன் என்று சில நாள்களுக்கு முன் என் பதிவு ஒன்றின் கருத்துகள் பகுதியில் கேட்டிருந்தார். தேடிப் பார்த்துச் சொல்கிறேன் என்று சொல்லியிருந்தேன்.
சீனி.விசுவநாதன் பதிப்பித்த காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் - முதல் தொகுப்பிலே விவரங்கள் உள்ளன. அவையாவன:
நவம்பர் 1905-ல் "சக்ரவர்த்தினி" இதழில் பாரதியார் "வேல்ஸ் இளவரசரும் இளவரசியாரும்" என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதிலே இவ்வாறு கூறுகிறார்: "எதிர்காலத்தில் இந்தியாவின் சக்ரவர்த்தியாகப் பட்டம் வகிக்கப் போகின்ற இந்த இளவரசர் இந்த தேச முழுவதிலும் யாத்திரை புரிந்து, இத்தேசத்தைப் பற்றிய விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டுமென்ற சிறந்த எண்ணத்துடன் வந்திருக்கின்றா ராதலால், அன்றைய தினம் எமது பாரத மாதா (இந்திய நாடு) தனக்கேற்பட்டிருக்கும் பல துன்பங்களையும் சிறிது மறந்து, மந்தஹாஸம் பூண்டு, இளவரசருக்கும் அவர் மனைவிக்கும் நல்வரவு கூறினாள்."
பதிப்பாசிரியர் குறிப்பாக இக்கட்டுரைக்குப் பின்னர் சீனி.விசுவநாதன் பின்வருமாறு எழுதுகிறார்:
"வேல்ஸ் இளவரசர் வருகையால் இந்தியாவிற்கு ஏதேனும் ஒருவகையில் நல்லது நடக்கும் என்று, இந்திய நாட்டுத் தலைவர்களில் ஒருசிலரும், காங்கிரஸ் ஜன சபையாரும் கருதினர்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், அதுபோது செல்வாக்குள்ள பத்திரிகையாளராகவும், சுதேசியச் சிந்தனைகளில் ஊறித் திளைத்தவராகவும் திகழ்ந்தவர் திரு.ஜி.சுப்பிரமணிய ஐயர்தாம்.
ஜி.சுப்பிரமணிய ஐயரும், அவர்தம் 'சுதேச மித்திரன்' பத்திரிகையும் வேல்ஸ் இளவரசரின் இந்திய விஜயம் பயன்தரும் என நம்பியதால், இளவரசருக்கு உபசரணை செய்ய முன்வந்ததில் யாரும் குற்றம் காணவில்லை.
பாரதியும் அச்சமயம் 'சுதேச மித்திரன்' தினப்பத்திரிகையில் துணை ஆசிரியராகவும், 'சக்ரவர்த்தினி' மாதப் பத்திரிகையில் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார்.
மற்ற தேசியத் தலைவர்களைப் போலவே பாரதியும் இந்தியர் தம் மன வருத்தங்களை மறந்து வேல்ஸ் இளவரசரை வரவேற்பதிலே தவறேதும் கிடையாது என்றே கருதினார்.
கருதிய அளவில் பாரதி வேல்ஸ் தம்பதியருக்கு நல்வரவு கூறினார்; அதுவும் பாரதமாதாவே தனக்கு ஏற்பட்டிருக்கும் பல துன்பங்களைச் சிறிது மறந்து மகிழ்ச்சியுடன் நல்வரவு கூறினாள் என்று எழுதியது பாரதியின் எழுதுகோல்.
வரவேற்பு உபசரணைகளையும், வாண வேடிக்கை வீண்செலவுகளையும் குறைத்துக் கொண்டு நிரந்தரமாகப் பெண்களுக்கென ஓர் பள்ளி சென்னை நகரிலே ஏற்படவேண்டும் என்ற கருத்தை அழுத்தமாக வலியுறுத்தினார் பாரதி என்பதைக் இக்கட்டுரை மூலம் அறியலாம்."
1906 ஜனவரி 'சக்ரவர்த்தினி' இதழிலும் "சென்னையில் ராஜ தம்பதிகள் வரவு" என்ற தலைப்பில் பாரதியார் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். நவம்பர் 1905-ல் இதழில் பாரதி எழுதியக் கட்டுரையுடன் தொடர்புப் படுத்தியே இக்கட்டுரையையும் அணுக வேண்டும் என்று பதிப்பாசிரியர் சீனி.விசுவநாதன் எழுதியிருக்கிறார்.
பின்னர் 29-01-1906 அன்று "சுதேச மித்திரனில்" - "வேல்ஸ் இளவரசருக்குப் பரத கண்டத்தாய் நல்வரவு கூறுதல்" என்கிற பாரதியின் கவிதை பிரசுரமாயிற்று.
இது குறித்து சீனி.விசுவநாதன் பின்வருமாறு எழுதுகிறார்:
"வேல்ஸ் இளவரசர் வருகையை யொட்டிப் பற்பலர் இனிய பாடல்களை இயற்றி மகிழ்ந்தனர். 'சக்ரவர்த்தினி' பத்திரிகையில் வெளியிடப் பூவை கலியாண சுந்தர முதலியார், பண்டித வெங்கட்ட ராமையங்கார், பண்டித அசலாம்பிகை அம்மையார் போன்றோர் செய்யுள்களை எழுதி அனுப்பியும் வைத்திருந்தனர்.
ஆனால், பெண்மணி ஒருவர் எழுதிய பாடலை பெண்பாலாருக்கான பத்திரிகையில் பிரசுரிக்க வேண்டும் என்கிற காரணத்தால், பண்டித அசலாம்பிகை அம்மையின் பாடலைச் சக்ரவர்த்தினியில் பிரசுரம் செய்தார் பாரதி.
தம்மால் எழுதப்பட்ட பாடலைப் பாரதி "சுதேச மித்திரன்" பத்திரிகையில் பதிப்பிக்கச் செய்தார்."
மேற்கண்டவற்றிலிருந்து "தனக்கு ஏற்பட்ட துன்பங்களையெல்லாம் மறந்து, ராஜ தம்பதிகளை வரவேற்கும் பான்மையில் தன் பாடலை பாரதி எழுதியதையும், பாரத மாதாவே தமக்கிட்ட ஆணையாகக் கொண்டு பாடலைப் புனைந்து, பத்திரிகையிலே பாரதி பதிப்பித்து மகிழ்ந்ததையும் அறிய முடியும்" என்று சீனி.விசுவநாதன் நிறுவுகிறார்.
நன்றி: கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் - முதல் தொகுதி - பதிப்பாசிரியர்: சீனி. விசுவநாதன் - 2, மாடல் ஹவுஸ் லேன், சி.ஐ.டி. நகர், சென்னை - 600 035.
சீனி.விசுவநாதன் பதிப்பித்த காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் - முதல் தொகுப்பிலே விவரங்கள் உள்ளன. அவையாவன:
நவம்பர் 1905-ல் "சக்ரவர்த்தினி" இதழில் பாரதியார் "வேல்ஸ் இளவரசரும் இளவரசியாரும்" என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதிலே இவ்வாறு கூறுகிறார்: "எதிர்காலத்தில் இந்தியாவின் சக்ரவர்த்தியாகப் பட்டம் வகிக்கப் போகின்ற இந்த இளவரசர் இந்த தேச முழுவதிலும் யாத்திரை புரிந்து, இத்தேசத்தைப் பற்றிய விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டுமென்ற சிறந்த எண்ணத்துடன் வந்திருக்கின்றா ராதலால், அன்றைய தினம் எமது பாரத மாதா (இந்திய நாடு) தனக்கேற்பட்டிருக்கும் பல துன்பங்களையும் சிறிது மறந்து, மந்தஹாஸம் பூண்டு, இளவரசருக்கும் அவர் மனைவிக்கும் நல்வரவு கூறினாள்."
பதிப்பாசிரியர் குறிப்பாக இக்கட்டுரைக்குப் பின்னர் சீனி.விசுவநாதன் பின்வருமாறு எழுதுகிறார்:
"வேல்ஸ் இளவரசர் வருகையால் இந்தியாவிற்கு ஏதேனும் ஒருவகையில் நல்லது நடக்கும் என்று, இந்திய நாட்டுத் தலைவர்களில் ஒருசிலரும், காங்கிரஸ் ஜன சபையாரும் கருதினர்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், அதுபோது செல்வாக்குள்ள பத்திரிகையாளராகவும், சுதேசியச் சிந்தனைகளில் ஊறித் திளைத்தவராகவும் திகழ்ந்தவர் திரு.ஜி.சுப்பிரமணிய ஐயர்தாம்.
ஜி.சுப்பிரமணிய ஐயரும், அவர்தம் 'சுதேச மித்திரன்' பத்திரிகையும் வேல்ஸ் இளவரசரின் இந்திய விஜயம் பயன்தரும் என நம்பியதால், இளவரசருக்கு உபசரணை செய்ய முன்வந்ததில் யாரும் குற்றம் காணவில்லை.
பாரதியும் அச்சமயம் 'சுதேச மித்திரன்' தினப்பத்திரிகையில் துணை ஆசிரியராகவும், 'சக்ரவர்த்தினி' மாதப் பத்திரிகையில் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார்.
மற்ற தேசியத் தலைவர்களைப் போலவே பாரதியும் இந்தியர் தம் மன வருத்தங்களை மறந்து வேல்ஸ் இளவரசரை வரவேற்பதிலே தவறேதும் கிடையாது என்றே கருதினார்.
கருதிய அளவில் பாரதி வேல்ஸ் தம்பதியருக்கு நல்வரவு கூறினார்; அதுவும் பாரதமாதாவே தனக்கு ஏற்பட்டிருக்கும் பல துன்பங்களைச் சிறிது மறந்து மகிழ்ச்சியுடன் நல்வரவு கூறினாள் என்று எழுதியது பாரதியின் எழுதுகோல்.
வரவேற்பு உபசரணைகளையும், வாண வேடிக்கை வீண்செலவுகளையும் குறைத்துக் கொண்டு நிரந்தரமாகப் பெண்களுக்கென ஓர் பள்ளி சென்னை நகரிலே ஏற்படவேண்டும் என்ற கருத்தை அழுத்தமாக வலியுறுத்தினார் பாரதி என்பதைக் இக்கட்டுரை மூலம் அறியலாம்."
1906 ஜனவரி 'சக்ரவர்த்தினி' இதழிலும் "சென்னையில் ராஜ தம்பதிகள் வரவு" என்ற தலைப்பில் பாரதியார் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். நவம்பர் 1905-ல் இதழில் பாரதி எழுதியக் கட்டுரையுடன் தொடர்புப் படுத்தியே இக்கட்டுரையையும் அணுக வேண்டும் என்று பதிப்பாசிரியர் சீனி.விசுவநாதன் எழுதியிருக்கிறார்.
பின்னர் 29-01-1906 அன்று "சுதேச மித்திரனில்" - "வேல்ஸ் இளவரசருக்குப் பரத கண்டத்தாய் நல்வரவு கூறுதல்" என்கிற பாரதியின் கவிதை பிரசுரமாயிற்று.
இது குறித்து சீனி.விசுவநாதன் பின்வருமாறு எழுதுகிறார்:
"வேல்ஸ் இளவரசர் வருகையை யொட்டிப் பற்பலர் இனிய பாடல்களை இயற்றி மகிழ்ந்தனர். 'சக்ரவர்த்தினி' பத்திரிகையில் வெளியிடப் பூவை கலியாண சுந்தர முதலியார், பண்டித வெங்கட்ட ராமையங்கார், பண்டித அசலாம்பிகை அம்மையார் போன்றோர் செய்யுள்களை எழுதி அனுப்பியும் வைத்திருந்தனர்.
ஆனால், பெண்மணி ஒருவர் எழுதிய பாடலை பெண்பாலாருக்கான பத்திரிகையில் பிரசுரிக்க வேண்டும் என்கிற காரணத்தால், பண்டித அசலாம்பிகை அம்மையின் பாடலைச் சக்ரவர்த்தினியில் பிரசுரம் செய்தார் பாரதி.
தம்மால் எழுதப்பட்ட பாடலைப் பாரதி "சுதேச மித்திரன்" பத்திரிகையில் பதிப்பிக்கச் செய்தார்."
மேற்கண்டவற்றிலிருந்து "தனக்கு ஏற்பட்ட துன்பங்களையெல்லாம் மறந்து, ராஜ தம்பதிகளை வரவேற்கும் பான்மையில் தன் பாடலை பாரதி எழுதியதையும், பாரத மாதாவே தமக்கிட்ட ஆணையாகக் கொண்டு பாடலைப் புனைந்து, பத்திரிகையிலே பாரதி பதிப்பித்து மகிழ்ந்ததையும் அறிய முடியும்" என்று சீனி.விசுவநாதன் நிறுவுகிறார்.
நன்றி: கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் - முதல் தொகுதி - பதிப்பாசிரியர்: சீனி. விசுவநாதன் - 2, மாடல் ஹவுஸ் லேன், சி.ஐ.டி. நகர், சென்னை - 600 035.
ரவி ஸ்ரீனிவாஸீக்கு...
ரவி ஸ்ரீனிவாஸ், என் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளுக்கு நன்றி - அவற்றுடன் நான் முரண்படுகிறேன் என்றபோதினும். ஆனாலும், உங்கள் கமெண்ட்டில் ஒரு பிழை இருக்கிறது. காடு நாவலைப் படிக்காமலேயே அதை விமர்சித்துக் காட்டமாகத் தாங்கள் எழுதியதுபோல (இதைத்தான் கருத்துச் சுதந்திரம் என்று சொல்கிறீர்களா என்று தெரியவில்லை!), உண்மை தெரியாமல் என் மீது குற்றம் சுமத்தியிருக்கிறீர்கள். நான் என்றைக்கும் மரத்தடி யாஹீ குழுமத்தில் மாடரேட்டராகவோ ஓனராகவோ இருந்ததில்லை. இன்றுவரை உறுப்பினர்தான். எனவே, உண்மைகளைச் சரிபார்த்த பின் குற்றச்சாட்டுகளை வீசுங்கள். இல்லையென்றால், நீங்கள் மற்றவர்களை காமெடியன் என்று எழுதுவது போய், மற்றவர்கள் உங்களை எழுதிவிடக் கூடும்.
கருத்துச் சுதந்திரத்துக்கு என் தனிப்பட்ட வாழ்விலும் பொதுவாழ்விலும் நான் எவ்வளவு முக்கியத்துவம் தருகிறேன் என்பதற்கு என் எழுத்தும் செயல்களூமே சாட்சி. ஓர் எழுத்தாளரைப் பிடிக்கவில்லை என்பதற்காக, அவர் எழுதுவதையெல்லாம் துரத்தி துரத்தி அடித்து என் தனிப்பட்ட வெறுப்பை நான் காட்டிக் கொள்வதில்லை. மரத்தடி யாஹீ குழுமத்தில் நானும் ஒருங்கிணைப்பாளராக இருக்கிற Ask the Author நிகழ்ச்சியில் இதுவரை மூன்று பேர் பங்கு பெற்றிருக்கிறார்கள். ஜெயமோகனை விட்டுவிடுவோம். அவர் சொல்வதையே நான் சொல்கிறேன் என்று நீங்கள் கண்டுபிடித்திருக்கிறபடியால். மற்றபடிக்கு மனுஷ்ய புத்திரன் மற்றும் ஞாநி ஆகியோரின் இலக்கிய அரசியல் கோட்பாடுகளுடன் நான் கடுமையாக முரண்படும் இடங்கள் உண்டு. பெரியார் பற்றிய உயர்ந்த மதிப்பீடு வைத்திருப்பவர் ஞாநி. பெரியார் மீது எனக்கு விமர்சனங்கள் உண்டு. சுந்தர ராமசாமியின் இலக்கியக் கொள்கையின் பெரும்பகுதியை மனுஷ்ய புத்திரன் ஏற்றுக் கொள்கிறார். அதிலே எனக்குக் கேள்விகளும் உடன்படாத இடங்களும் நிறைய இருக்கின்றன. ஆனாலும், அவர்களை மரத்தடிக்கு விருந்தினர்களாக அழைத்து வந்து தங்கள் கருத்துகளைச் சொல்ல வைத்திருக்கிறேன். மரத்தடியிலும் உறுப்பினர் யாரும் எதைப் பற்றியும் பேசக் கூடாது என்று நான் சொன்னதில்லை. எனக்குப் பிடிக்காத எத்தனையோ விஷயங்கள் நான் உறுப்பினராக இருக்கிற குழுக்களிலும், வாசிக்கிற பத்திரிகைகளிலும் நடக்கின்றன. அதற்காக யாரையும் கருத்துச் சுதந்திரத்தை நிரூபி என்று கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்கவில்லை.
எனக்குப் பிடித்தவர்கள் என்றால் ஜெயகாந்தன் எழுத்துகளை மட்டுமே இணையத்தில் தட்டச்சு செய்து போட்டிருக்க வேண்டும். ஆனால், உங்கள் நண்பரும் நான் முழுதும் உடன்படாவிட்டாலும் பெரிதும் மதிக்கிற - தத்துவக் கோட்பாடுகள் குறித்து எனதுப் புரிதலுக்குத் தன் நூல்கள் மூலம் உதவிய கோவை ஞானியிலிருந்து, கனிமொழி கருணாநிதி படைப்புகள் வரைச் சொந்தமாகத் தட்டச்சு செய்து இணையத்தில் பிறர் பார்வைக்கு வைத்திருக்கிறேன். திண்ணை நண்பர் ராஜாராம் கூட பெரியாரைத் தமிழ்நாட்டின் தாமஸ் பெய்ன் என்று நினைப்பவர். அவருடனும் எனக்கு அது குறித்து கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆயினும், அவற்றைமீறி அவரும் நண்பரே.
ஒரு கொள்கைமீதோ தனிமனிதர்மீதோ ஆக்கபூர்வமான விமர்சனங்கள் வைப்பதை நான் விரும்புகிறேன். ஒரு வறட்டுத் தத்துவவாதியாகப், புத்தகப் புழுவாக என் அறிவையும் வாசிப்பையும் பிறர் மீது ஏற்றிப் பார்த்து எவரையும் எள்ளி நகையாடுவதில் எனக்கு விருப்பமில்லை. அதுதான் கருத்துச் சுதந்திரம் என்று தாங்கள் நினைப்பீர்களேயானால், உங்களுக்கு மேன்மைகள் உண்டாகப் பிரார்த்திக்கிறேன்.
நீங்கள் கருத்துச் சுதந்திரத்தை மதிக்காதவர் என்று உங்களைப் பற்றி ஒன்றும் அறியாமல் என்னால் உங்களைப் போல் குற்றம் சாட்டிவிடமுடியாது. ஆனால், கருத்துச் சுதந்திரத்தை மதிக்கவும் போற்றவும் என்னவெல்லாம் செய்திருக்கிறீர்கள் என்று சொல்லுங்களேன். தெரிந்து கொள்கிறேன். உங்கள் திண்ணை கட்டுரைகளும், ஜெயமோகன் மீது நீங்கள் காட்டுகிற தனிப்பட்ட துவேஷமும், கருத்துச் சுதந்திரம் பற்றி நீங்கள் என்னவெல்லாம் செய்திருக்கிறீர்கள் என்பதை அறியத் தூண்டுகிறது.
அப்புறம் - பா.ஜ.க. தீண்டத்தகாத கட்சியில்லை என்று ஜெயமோகனுக்கு முன் கம்யூனிஸ்ட் குடும்பத்திலிருந்து வந்த நண்பர் ரங்கராஜன் குமாரமங்கலம்தான் முதலில் சொன்னார். மேலும் - பா.ஜ.க.வுடன் கூட்டு வைத்துக் கொள்வதில் தவறில்லை என்று ஜெயலலிதாவுக்கு முதலில் ஆலோசனை சொன்னவர் வை.கோபால்சாமி. பின்னர் கருணாநிதியும் கூட்டு வைத்துக் கொண்டார் என்பதும் உண்மை. ஜெயமோகன் மீது இருக்கிற வெறுப்பில், மற்றவர்க்குச் சேர வேண்டிய பெயரை எல்லாம் அவர்க்குக் கொடுத்து வருகிறீர்களோ என்று தோன்றுகிறது.
நன்றி!.
பி.கு: கமெண்ட்டில் இதை முழுமையாகப் போடும் வசதி இல்லாததால், இங்கே கட்டுரையாக இடுகிறேன்.
கருத்துச் சுதந்திரத்துக்கு என் தனிப்பட்ட வாழ்விலும் பொதுவாழ்விலும் நான் எவ்வளவு முக்கியத்துவம் தருகிறேன் என்பதற்கு என் எழுத்தும் செயல்களூமே சாட்சி. ஓர் எழுத்தாளரைப் பிடிக்கவில்லை என்பதற்காக, அவர் எழுதுவதையெல்லாம் துரத்தி துரத்தி அடித்து என் தனிப்பட்ட வெறுப்பை நான் காட்டிக் கொள்வதில்லை. மரத்தடி யாஹீ குழுமத்தில் நானும் ஒருங்கிணைப்பாளராக இருக்கிற Ask the Author நிகழ்ச்சியில் இதுவரை மூன்று பேர் பங்கு பெற்றிருக்கிறார்கள். ஜெயமோகனை விட்டுவிடுவோம். அவர் சொல்வதையே நான் சொல்கிறேன் என்று நீங்கள் கண்டுபிடித்திருக்கிறபடியால். மற்றபடிக்கு மனுஷ்ய புத்திரன் மற்றும் ஞாநி ஆகியோரின் இலக்கிய அரசியல் கோட்பாடுகளுடன் நான் கடுமையாக முரண்படும் இடங்கள் உண்டு. பெரியார் பற்றிய உயர்ந்த மதிப்பீடு வைத்திருப்பவர் ஞாநி. பெரியார் மீது எனக்கு விமர்சனங்கள் உண்டு. சுந்தர ராமசாமியின் இலக்கியக் கொள்கையின் பெரும்பகுதியை மனுஷ்ய புத்திரன் ஏற்றுக் கொள்கிறார். அதிலே எனக்குக் கேள்விகளும் உடன்படாத இடங்களும் நிறைய இருக்கின்றன. ஆனாலும், அவர்களை மரத்தடிக்கு விருந்தினர்களாக அழைத்து வந்து தங்கள் கருத்துகளைச் சொல்ல வைத்திருக்கிறேன். மரத்தடியிலும் உறுப்பினர் யாரும் எதைப் பற்றியும் பேசக் கூடாது என்று நான் சொன்னதில்லை. எனக்குப் பிடிக்காத எத்தனையோ விஷயங்கள் நான் உறுப்பினராக இருக்கிற குழுக்களிலும், வாசிக்கிற பத்திரிகைகளிலும் நடக்கின்றன. அதற்காக யாரையும் கருத்துச் சுதந்திரத்தை நிரூபி என்று கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்கவில்லை.
எனக்குப் பிடித்தவர்கள் என்றால் ஜெயகாந்தன் எழுத்துகளை மட்டுமே இணையத்தில் தட்டச்சு செய்து போட்டிருக்க வேண்டும். ஆனால், உங்கள் நண்பரும் நான் முழுதும் உடன்படாவிட்டாலும் பெரிதும் மதிக்கிற - தத்துவக் கோட்பாடுகள் குறித்து எனதுப் புரிதலுக்குத் தன் நூல்கள் மூலம் உதவிய கோவை ஞானியிலிருந்து, கனிமொழி கருணாநிதி படைப்புகள் வரைச் சொந்தமாகத் தட்டச்சு செய்து இணையத்தில் பிறர் பார்வைக்கு வைத்திருக்கிறேன். திண்ணை நண்பர் ராஜாராம் கூட பெரியாரைத் தமிழ்நாட்டின் தாமஸ் பெய்ன் என்று நினைப்பவர். அவருடனும் எனக்கு அது குறித்து கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆயினும், அவற்றைமீறி அவரும் நண்பரே.
ஒரு கொள்கைமீதோ தனிமனிதர்மீதோ ஆக்கபூர்வமான விமர்சனங்கள் வைப்பதை நான் விரும்புகிறேன். ஒரு வறட்டுத் தத்துவவாதியாகப், புத்தகப் புழுவாக என் அறிவையும் வாசிப்பையும் பிறர் மீது ஏற்றிப் பார்த்து எவரையும் எள்ளி நகையாடுவதில் எனக்கு விருப்பமில்லை. அதுதான் கருத்துச் சுதந்திரம் என்று தாங்கள் நினைப்பீர்களேயானால், உங்களுக்கு மேன்மைகள் உண்டாகப் பிரார்த்திக்கிறேன்.
நீங்கள் கருத்துச் சுதந்திரத்தை மதிக்காதவர் என்று உங்களைப் பற்றி ஒன்றும் அறியாமல் என்னால் உங்களைப் போல் குற்றம் சாட்டிவிடமுடியாது. ஆனால், கருத்துச் சுதந்திரத்தை மதிக்கவும் போற்றவும் என்னவெல்லாம் செய்திருக்கிறீர்கள் என்று சொல்லுங்களேன். தெரிந்து கொள்கிறேன். உங்கள் திண்ணை கட்டுரைகளும், ஜெயமோகன் மீது நீங்கள் காட்டுகிற தனிப்பட்ட துவேஷமும், கருத்துச் சுதந்திரம் பற்றி நீங்கள் என்னவெல்லாம் செய்திருக்கிறீர்கள் என்பதை அறியத் தூண்டுகிறது.
அப்புறம் - பா.ஜ.க. தீண்டத்தகாத கட்சியில்லை என்று ஜெயமோகனுக்கு முன் கம்யூனிஸ்ட் குடும்பத்திலிருந்து வந்த நண்பர் ரங்கராஜன் குமாரமங்கலம்தான் முதலில் சொன்னார். மேலும் - பா.ஜ.க.வுடன் கூட்டு வைத்துக் கொள்வதில் தவறில்லை என்று ஜெயலலிதாவுக்கு முதலில் ஆலோசனை சொன்னவர் வை.கோபால்சாமி. பின்னர் கருணாநிதியும் கூட்டு வைத்துக் கொண்டார் என்பதும் உண்மை. ஜெயமோகன் மீது இருக்கிற வெறுப்பில், மற்றவர்க்குச் சேர வேண்டிய பெயரை எல்லாம் அவர்க்குக் கொடுத்து வருகிறீர்களோ என்று தோன்றுகிறது.
நன்றி!.
பி.கு: கமெண்ட்டில் இதை முழுமையாகப் போடும் வசதி இல்லாததால், இங்கே கட்டுரையாக இடுகிறேன்.
Monday, May 03, 2004
தீண்டத்தகாதவை என்று ஏதுமில்லை!
என்னைப் பொறுத்தவரை தீண்டத்தகாத மனிதர் என்று எவரும் இல்லை. தீண்டத்தகாத கருத்து என்றும் எதுவும் இல்லை. தீண்டத்தகாத கட்சிகள் என்றும் எதுவும் இல்லை. திராவிட இயக்கங்கள் தலையெடுக்கத் தொடங்கிய காலத்தில் அவை பொருட்படுத்தத் தகாதவை, அவற்றின் கொள்கைகளின் பலவீனத்தில் அவை வீழ்ந்துவிடும் என்று காங்கிரஸீம் கம்யூனிஸ்ட்டுகளும் காட்டிய அலட்சியத்தின் பலனை இன்றளவும் அனுபவித்து வருகிறோம். திராவிட இயக்கங்களின் கருத்துகளுக்கு உடனுக்கு உடன், பதிலுக்கு பதில் காங்கிரஸீம் கம்யூனிஸ்ட்டுகளும் பதில் சொல்லியிருப்பார்களேயானால், தமிழின் நிஜமான தொன்மையும் சிறப்பும் உணராது அடுக்கு மொழி போதுமென்று திராவிட இயக்கங்கள் ஆட்சியைப் பிடித்திருக்காது.
இதே தவறைத்தான் பாரதிய ஜனதா கட்சி விஷயத்திலும் பல கட்சிகள் செய்தன. அதை மதவாதக் கட்சியென்றும் தீண்டத்தகாத கட்சியென்றும் ஒதுக்கி வைத்தன. மனித நாகரீகத்தை எடுத்துக் கொண்டால், கிரேக்க நாகரீகத்தில் இருந்து சிந்து சமவெளி நாகரீகம் வரை மக்கள் மதங்களால் பிணைக்கப்பட்டும் ஆளுமைக்குள்ளாக்கப்பட்டும் இருக்கிறார்கள். அந்த மதத்தை மக்களின் வாழ்வில் இருந்து தூர எறிந்து விடுவது இயலாத காரியம். ஆனால், அந்த மதம் குறித்துத் தெளிவான புரிதலையும் சிந்தனையையும் மக்கள் மனதில் விதைக்க முடியும். ஆனால், மதவாதத்தை எதிர்க்கிற எந்தக் கட்சியும் இந்தியாவில் இதை சிரத்தையுடன் செய்யவில்லை. அந்த மதத்தை - உணர்வுபூர்வமாக அற்ப லாபங்களுக்குப் பாரதிய ஜனதா கட்சியும் அதன் தோழமை இயக்கங்களும் பயன்படுத்திக் கொள்வதை - எட்ட நின்று வேடிக்கை பார்த்ததாலேயே அவ்வியக்கங்கள் இன்று செழித்து வளர்ந்திருக்கின்றன. மதத்தின் பெருமை என்று இக்கட்சிகள் சிறுமை பேசித் திரிந்தபோது காங்கிரஸீம் கம்யூனிஸ்ட்டுகளும் இன்னபிற கட்சிகளும் "உண்மையான இந்து மதம் என்பது என்ன? அம்மதத்தின் சிறப்புகளும் பலவீனங்களும் என்ன? இந்து மதம் என்பது ஒரு வழிபாட்டு முறையா அல்லது வாழ்க்கை முறையா?" என்பது போன்ற கேள்விகளை எழுப்பி அவற்றை விளக்கி, பா.ஜ.க.வுக்கு உடனுக்கு உடன் பதிலளித்து வந்திருந்தால், பா.ஜ.க இந்த அளவு வென்றிருக்காது. ஆனால், இந்து என்ற சொல்லைக் கேட்டதுமே மதவாதம் என்கிற அலர்ஜி கொண்டு ஒதுக்குபவர்களாகப் பிற கட்சிகள் இருந்ததாலேயே, பா.ஜ.க இரண்டு எம்.பி. சீட்டிலிருந்து அடுத்த தேர்தலில் எண்பதுக்கும் மேலான சீட்டுகளை வெல்கிற கட்சியாக வளர முடிந்தது. பின்னர் ஆட்சியையும் பிடிக்க முடிந்தது. பா.ஜ.க.வுக்குப் பதிலாக கீதையின் உண்மையான சாரத்தையும், இந்து மதத்தின் பல்வேறு தரிசன மரபுகளையும், பௌத்தம், சமணம் ஆகியவற்றை எவ்வாறு இந்து மதம் வரவேற்று தன் பிரிவாக உள்வாங்கிக் கொண்டது என்பதையும் பிற கட்சி அரசியல்வாதிகள் விளக்கியிருந்தால், நாட்டில் பிற மதங்களால் இந்து மதத்துக்கு ஆபத்து என்கிற குறுகியவாதம் தலைதூக்கி இருக்காது. விவேகானந்தர், ராமகிருஷ்ணர், சிவவாக்கியர், நாராயண குரு என்று எத்தனையோ மகான்களின் மொழிகளின் மூலம் மதம் குறித்து மக்களிடையே ஒரு தெளிவை ஏற்படுத்தி இருந்தாலே, இன்றைக்கு இந்துத்துவாவுக்கு எதிராக அணி சேருங்கள் என்று கெஞ்சிக் கொண்டிருக்க வேண்டாம். இப்போதும்கூட, யாரும் பா.ஜ.க.வுக்கு அதன் மதரீதியான கொள்கைகளுக்கு மக்களின் மத நம்பிக்கைகளைப் பயன்படுத்தியே அளிக்கக் கூடிய பதிலை அளிப்பதில்லை என்பது நிஜம்.
கம்யூனிஸ்ட்டுகளும் செக்குலர் நண்பர்களும் இந்தத் தவறை மட்டுமா செய்தார்கள்? இந்து மதத்தின் தொன்மையான சிறப்புகளையும் அது எப்படி பா.ஜ.க. சொல்கிற இந்து மதமில்லை என்று விளக்க முயன்றவர்களையும், இந்துத்துவா முத்திரை குத்தியும், மதவாதி என்று அழைத்தும் மகிழ்ந்தார்கள். இவர்கள் செய்ய மறந்த காரியத்தை இன்னொருவர் செய்வதும் இவர்களுக்குப் பொறுக்கவில்லை.
திராவிட இயக்கங்களின் முரட்டுத்தனமான பகுத்தறிவற்ற கடவுள் மறுப்பை எதிர்க்கிறாரா? அவர் இந்துத்துவா. பா.ஜ.க. சொல்கிற மதமில்லை இந்துமதம் என்று அதன் தொன்மையான வரலாற்றையோ சிறப்பையோ மதநல்லிணக்க மரபையோ சொல்ல விழைகிறாரா? அவர் இந்துத்துவா. இப்படிச் சொல்பவர்கள் யாரும் திரும்பி தன் முதுகையும் அதிலே தாங்கள் சுமந்து நிற்கிற மொழிவாதம், இனவாதம் மற்றும் பயங்கரவாதம் உள்ளிட்ட பலக் கறைகளையும் பார்த்துக் கொள்ள விரும்புவதில்லை. மதம், மொழி, இனம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டுக் கவலைப்பட வேண்டிய விஷயம் மனிதம் என்பதை மதம், மொழி, இனம் ஆகியவற்றின் வரலாற்றைக் கொண்டே சிறப்பாக விளக்க முடியும் என்பதை அறியாதவர்கள் இவர்கள்.
என் கேள்வி அடிப்படையானது. சரி, அவர் இந்துத்துவாவா? இருக்கட்டுமே. பிறர் பயங்கரவாதத்தையே துணிந்து ஆதரிக்கும்போது, பின்னர் பயங்கரவாதமாக பரிணமளிக்கப் போகிற மதவாதத்தை அவர் ஆதரிக்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாமே. இந்துத்துவாவா பயங்கரவாதியா என்று முடிவு செய்ய வேண்டியது அவர்தானே. நாம் இல்லையே. எனவே, அவர் என்னவாக வேண்டுமானால் இருக்கட்டும். அவர் எதுவாக இருந்தாலும் நமக்கு இருப்பதைப் போலவே விஷயங்களில் மூக்கை நுழைத்துத் தன் கருத்தைச் சொல்கிற உரிமை அவருக்கும் இருக்கிறதல்லவா? ஒருவரின் விருப்பு வெறுப்புக்காக அவர் சொல்கிற கருத்தைப் புறந்தள்ளுவது அறியாமை அல்லவா? அதனால், அவர் சொல்கிற கருத்தைக் கேட்போம். பின்னர், அவர் கருத்து எவ்வளவு தவறானது என்கிற வாதத்தை எடுத்து வைப்போம் என்று யாரும் நினைப்பதில்லை. எனக்குப் பிடிக்காததைப் பேசுகிறாயா, நீ இந்துத்துவா, நீ தமிழ்த் துரோகி. இதைத்தான் நாம் பார்க்கிறோம். இதனால் என்ன ஆகிறது என்றால் எதை எதிர்ப்பதாக நினைத்து அந்த நபரை நாம் தாக்குகிறோமோ, அது வளரத் துணைபோய் விடுகிறோம். பாரதிய ஜனதா விஷயத்தில் இதுதான் நடந்தது.
இதில் சமீபகாலமாக வேடிக்கை என்னவென்றால், பத்திரிகைகளுக்கும் மனிதர்களுக்கும் ஒவ்வொருவரும் "எதிர்பார்ப்புகள்" பட்டியல் வைத்திருக்கிறோம். நம் விருப்பத்திற்கிணங்கவும், நாம் எதிர்பார்க்கும்படியும் பத்திரிகைகளும் மனிதர்களும் இயங்கவில்லை என்றால் போட்டுத் தாக்க வேண்டியது. எதை எழுதுவது, எதை எழுதாமல் இருப்பது என்பது ஒவ்வொருவரின் சுதந்திரமும் ஆகும். அவரவர்க்கு அரித்தால் அவரவர்தான் சொறிந்து கொள்ள வேண்டும். அவர்கள் சார்பாக நாம் சொறிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது போன்றது பிறர் விருப்பப்படுகிற விஷயங்களை மட்டும் எழுதினால்தான் நேர்மை என்று சொல்வது.
எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் இருக்கிறார். நல்ல எழுத்தாளர் என்று அவரைச் சொல்கிறார்கள். தான் எடுத்துக் கொண்ட விஷயத்தைப் பற்றி நான்கு வாக்கியங்களாவது, தடம் புரளாது, அடுத்தவர் பற்றிய தன் வெறுப்புகளைக் கொட்டாது எழுதுவாரா என்று நானும் பார்த்துக் கொண்டேயிருக்கிறேன். ஊஹீம். அவ்வளவு சீக்கிரம் பிறப்புரிமையை விட்டுவிட முடியுமா என்று ஆப்பிளைப் பற்றிப் பேசப் போனால் ஆரஞ்சைப் பற்றி எழுதிக் கொண்டிருப்பார். ஆரஞ்சைப் பற்றிப் பேசப் போனால், திராட்சை பற்றி எழுதிக் கொண்டிருப்பார். அதனால்தான், இவரை நல்ல எழுத்தாளர் என்று சொல்கிறார்களா என்று தெரியவில்லை. விவாதத்தில் வைக்கப்படும் கருத்துகளுக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல், சொல்பவரின் குலம், கோத்திரம் என்று பார்த்துக் கொண்டிருப்பார். ஒரு விஷயத்தை இவரை விடத் தவறாகவும் காரணமற்ற எதிர்மறை உணர்வோடும் யாரும் அணுகிவிட முடியாது என்று என்னை இன்றளவும் நம்பவைத்துக் கொண்டிருக்கிறார். இப்படியெல்லாம் கூட Twisted ஆக மனிதர்கள் சிந்திக்கக் கூடும் என்று எனக்குக் கற்றுத் தந்தவர் அவர்.
அடுத்தப் பெரிய நகைச்சுவை. நீங்கள் உங்கள் கருத்துக்கு ஒவ்வாத அல்லது மற்றவர் கருத்துக்கு ஒவ்வாத ஒருவருடன் நட்பு பாராட்டி விடக் கூடாது. அப்படி இருந்து விட்டால் அவ்வளவுதான். மற்றவர் கருத்துதான் உங்கள் கருத்தும் என்று தீர்க்க தரிசனமாய்ச் சொல்ல சிலர் தயாராய் இருக்கிறார்கள். என் நண்பர் ஒருவர் அடிக்கடி வருந்துவார். அவர் நாட்டைக் கேட்டதுமே ஒரு குறிப்பிட்ட இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று சிலர் நினைத்து விடுகிறார்களே என்று. அதைப் போல்தான் இருக்கிறது. கருத்து வேறுபாடுகளை மீறி நட்புப் பாராட்டுவதையும் பார்த்து மனம் பொறுக்காமல் முத்திரை குத்துபவர்கள் இருக்கிறார்கள் என்பதும். ஒரு பயங்கரவாத இயக்கத்தை ஆதரிக்காவிட்டால் ஒரு குறிப்பிட்ட தமிழருக்கு எதிரானவர் என்கிற பிம்பம் கட்டமைக்கப்படுவதையும் இதிலே சேர்த்துக் கொள்ளலாம்.
"... அப்போது நான் வாழ்ந்த வாழ்க்கையிலே நான் இந்த ஜாதீய முறைப்படி நான் தாக்கப்படவில்லை. நான் தாக்கப்படாமல் இருக்கக் கூடிய ஒரு நிலையில் நான் தாக்கப்படுகிறேன் என்று சொல்லிக் குரலிடுவது சரியில்லை."
"... என்னுடைய அம்மா அப்பா அனுபவித்தத் துயர்களையாவது நீ எழுதியிருக்கலாம்; ஆனால் நீ அதைக் கூட மறந்துவிட்டாய் என்று சொல்கிறீர்கள்? ஏன் என்மீது அதைத் திணிக்கிறீர்கள்? ஒரு படைப்பாளி என்ற அளவில், will your not give me the freedom to choose what I want to write?"
"... வன்னியிலே நடக்கிற போராட்டத்தை நான் என் படைப்பிலே கொண்டுவரவில்லை. அதிலிருந்து விலகி ஓடிய மனிதன் என்று கூட இப்போது வன்னியில் வாழ்கிற போராளிகளும் எழுத்தாளர்களும் சொல்லலாம். சொல்வது நியாயம். ஆனால், என்னைப் பொறுத்த மட்டில் என் அனுபவத்திற்கு அன்னியமானதை நான் எப்போதும் எழுத மாட்டேன். இதை நான் நெடுகச் சொல்லி வந்திருக்கிறேன்."
மேற்கண்ட வாசகங்கள், பிரபல இலங்கை எழுத்தாளர் எஸ்.பொன்னுதுரை, திசைகள் இணைய இதழுக்கு அளித்த நேர்முகத்தில் சொல்லியவை. வேறு யாரேனும் இதையே சொல்லியிருந்தால் அவர்க்கு இந்துத்துவா பட்டமும், தமிழ்த் துரோகி பட்டமும் கொடுக்கத் தயாராய் ஒரு கூட்டம் நிற்கலாம். எஸ்.பொ. சொல்லியிருப்பதால் அவர் கருத்தின் நியாயத்தை உணர்பவர்கள், அதே நியாயத்தை மற்றவர்களுக்கும் தருவார்கள் என்று நம்புவோம்.
மாற்றுக் கருத்துகளை மதிக்காமல் மற்றவர்கள் பால் வெறுப்பை வளர்ப்போர் ஒரு சூழலின் சுமூகத்திற்கு எதிரானவர்கள். யாரும் யாரையும் திருத்திவிட முடியாது. கருத்துகளை எவ்வளவு உணர்வுபூர்வமாகவும் ஆவேசமாகவும் வைக்கிறோமோ அந்த அளவுக்கு முக்கியமானது, கருத்து மோதல்களைத் தனிப்பட்ட விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் இருப்பது. அப்படிப்பட்ட இடத்தில், அடுத்தவர் சொல்கிற கருத்தைக் கூட பொறுமையாக கருத்து ரீதியாக மறுத்து சொல்ல முடியும். அப்படிச் செய்யாதவர்கள், மாற்றுக் கருத்தை விட வார்த்தை வன்முறையில் நம்பிக்கை உடையவர்கள். தர்க்கத்தின் மூலமும் வரலாற்றை மேற்கோள் காட்டுவதன் மூலமோ நாம் அபிமானம் கொண்டுள்ள கருத்தாக்கம் வெல்ல இயலாது என்று உணர்ந்தவர்கள். அதை மறைக்க வார்த்தைகளை வாரி இறைப்பவர்கள். இவர்களுக்கும் மதவாதம் பேசுபவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஏனெனில் இருவருமே பொறுமையற்றவர்கள், அடுத்தவர் கருத்தை மதிக்கத் தெரியாதவர்கள். இவர்கள் ஜனநாயகம் என்று வாய்கிழியப் பேசினாலும், ஜனநாயகத்தின் எதிரிகள். தம் வீட்டில் தன் குடும்பத்தினரிடமும் உறவினரிடமும்கூட இவர்கள் இப்படிப்பட்ட வெறுப்பை தேவைப்பட்டால் வளர்த்துக் கொள்வார்கள். நமக்கு இன்றைய தேவை, பல்வேறு கருத்தாக்கங்களும் ஒன்றுடன் ஒன்று கலந்து, ஆரோக்கியமாக விவாதித்து, அறம் சார்ந்தும் வாழ்வின் சிறப்பியல் நோக்கு சார்ந்தும் விழுமியங்களை முன்னெடுத்துச் செல்லும் ஆரோக்கியமான சுற்றமும் நட்புமே தவிர, வெறுப்பை வளர்க்கிற வெட்டிப் பேச்சுகள் இல்லை. எனவே, இத்தகைய சூழலைக் கெடுப்பவரைக் எதிர்கொண்டு அவர்களின் முகத்திரையைக் கிழிப்பது மட்டுமே நமது கடமையாக இருக்க வேண்டும். இல்லையென்றால், திராவிட இயக்கங்கள், பா.ஜ.க ஆகியவற்றின் விஷயத்தில் செய்யப்பட்ட தவறுகளே திரும்பவும் நிகழும்.
இதே தவறைத்தான் பாரதிய ஜனதா கட்சி விஷயத்திலும் பல கட்சிகள் செய்தன. அதை மதவாதக் கட்சியென்றும் தீண்டத்தகாத கட்சியென்றும் ஒதுக்கி வைத்தன. மனித நாகரீகத்தை எடுத்துக் கொண்டால், கிரேக்க நாகரீகத்தில் இருந்து சிந்து சமவெளி நாகரீகம் வரை மக்கள் மதங்களால் பிணைக்கப்பட்டும் ஆளுமைக்குள்ளாக்கப்பட்டும் இருக்கிறார்கள். அந்த மதத்தை மக்களின் வாழ்வில் இருந்து தூர எறிந்து விடுவது இயலாத காரியம். ஆனால், அந்த மதம் குறித்துத் தெளிவான புரிதலையும் சிந்தனையையும் மக்கள் மனதில் விதைக்க முடியும். ஆனால், மதவாதத்தை எதிர்க்கிற எந்தக் கட்சியும் இந்தியாவில் இதை சிரத்தையுடன் செய்யவில்லை. அந்த மதத்தை - உணர்வுபூர்வமாக அற்ப லாபங்களுக்குப் பாரதிய ஜனதா கட்சியும் அதன் தோழமை இயக்கங்களும் பயன்படுத்திக் கொள்வதை - எட்ட நின்று வேடிக்கை பார்த்ததாலேயே அவ்வியக்கங்கள் இன்று செழித்து வளர்ந்திருக்கின்றன. மதத்தின் பெருமை என்று இக்கட்சிகள் சிறுமை பேசித் திரிந்தபோது காங்கிரஸீம் கம்யூனிஸ்ட்டுகளும் இன்னபிற கட்சிகளும் "உண்மையான இந்து மதம் என்பது என்ன? அம்மதத்தின் சிறப்புகளும் பலவீனங்களும் என்ன? இந்து மதம் என்பது ஒரு வழிபாட்டு முறையா அல்லது வாழ்க்கை முறையா?" என்பது போன்ற கேள்விகளை எழுப்பி அவற்றை விளக்கி, பா.ஜ.க.வுக்கு உடனுக்கு உடன் பதிலளித்து வந்திருந்தால், பா.ஜ.க இந்த அளவு வென்றிருக்காது. ஆனால், இந்து என்ற சொல்லைக் கேட்டதுமே மதவாதம் என்கிற அலர்ஜி கொண்டு ஒதுக்குபவர்களாகப் பிற கட்சிகள் இருந்ததாலேயே, பா.ஜ.க இரண்டு எம்.பி. சீட்டிலிருந்து அடுத்த தேர்தலில் எண்பதுக்கும் மேலான சீட்டுகளை வெல்கிற கட்சியாக வளர முடிந்தது. பின்னர் ஆட்சியையும் பிடிக்க முடிந்தது. பா.ஜ.க.வுக்குப் பதிலாக கீதையின் உண்மையான சாரத்தையும், இந்து மதத்தின் பல்வேறு தரிசன மரபுகளையும், பௌத்தம், சமணம் ஆகியவற்றை எவ்வாறு இந்து மதம் வரவேற்று தன் பிரிவாக உள்வாங்கிக் கொண்டது என்பதையும் பிற கட்சி அரசியல்வாதிகள் விளக்கியிருந்தால், நாட்டில் பிற மதங்களால் இந்து மதத்துக்கு ஆபத்து என்கிற குறுகியவாதம் தலைதூக்கி இருக்காது. விவேகானந்தர், ராமகிருஷ்ணர், சிவவாக்கியர், நாராயண குரு என்று எத்தனையோ மகான்களின் மொழிகளின் மூலம் மதம் குறித்து மக்களிடையே ஒரு தெளிவை ஏற்படுத்தி இருந்தாலே, இன்றைக்கு இந்துத்துவாவுக்கு எதிராக அணி சேருங்கள் என்று கெஞ்சிக் கொண்டிருக்க வேண்டாம். இப்போதும்கூட, யாரும் பா.ஜ.க.வுக்கு அதன் மதரீதியான கொள்கைகளுக்கு மக்களின் மத நம்பிக்கைகளைப் பயன்படுத்தியே அளிக்கக் கூடிய பதிலை அளிப்பதில்லை என்பது நிஜம்.
கம்யூனிஸ்ட்டுகளும் செக்குலர் நண்பர்களும் இந்தத் தவறை மட்டுமா செய்தார்கள்? இந்து மதத்தின் தொன்மையான சிறப்புகளையும் அது எப்படி பா.ஜ.க. சொல்கிற இந்து மதமில்லை என்று விளக்க முயன்றவர்களையும், இந்துத்துவா முத்திரை குத்தியும், மதவாதி என்று அழைத்தும் மகிழ்ந்தார்கள். இவர்கள் செய்ய மறந்த காரியத்தை இன்னொருவர் செய்வதும் இவர்களுக்குப் பொறுக்கவில்லை.
திராவிட இயக்கங்களின் முரட்டுத்தனமான பகுத்தறிவற்ற கடவுள் மறுப்பை எதிர்க்கிறாரா? அவர் இந்துத்துவா. பா.ஜ.க. சொல்கிற மதமில்லை இந்துமதம் என்று அதன் தொன்மையான வரலாற்றையோ சிறப்பையோ மதநல்லிணக்க மரபையோ சொல்ல விழைகிறாரா? அவர் இந்துத்துவா. இப்படிச் சொல்பவர்கள் யாரும் திரும்பி தன் முதுகையும் அதிலே தாங்கள் சுமந்து நிற்கிற மொழிவாதம், இனவாதம் மற்றும் பயங்கரவாதம் உள்ளிட்ட பலக் கறைகளையும் பார்த்துக் கொள்ள விரும்புவதில்லை. மதம், மொழி, இனம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டுக் கவலைப்பட வேண்டிய விஷயம் மனிதம் என்பதை மதம், மொழி, இனம் ஆகியவற்றின் வரலாற்றைக் கொண்டே சிறப்பாக விளக்க முடியும் என்பதை அறியாதவர்கள் இவர்கள்.
என் கேள்வி அடிப்படையானது. சரி, அவர் இந்துத்துவாவா? இருக்கட்டுமே. பிறர் பயங்கரவாதத்தையே துணிந்து ஆதரிக்கும்போது, பின்னர் பயங்கரவாதமாக பரிணமளிக்கப் போகிற மதவாதத்தை அவர் ஆதரிக்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாமே. இந்துத்துவாவா பயங்கரவாதியா என்று முடிவு செய்ய வேண்டியது அவர்தானே. நாம் இல்லையே. எனவே, அவர் என்னவாக வேண்டுமானால் இருக்கட்டும். அவர் எதுவாக இருந்தாலும் நமக்கு இருப்பதைப் போலவே விஷயங்களில் மூக்கை நுழைத்துத் தன் கருத்தைச் சொல்கிற உரிமை அவருக்கும் இருக்கிறதல்லவா? ஒருவரின் விருப்பு வெறுப்புக்காக அவர் சொல்கிற கருத்தைப் புறந்தள்ளுவது அறியாமை அல்லவா? அதனால், அவர் சொல்கிற கருத்தைக் கேட்போம். பின்னர், அவர் கருத்து எவ்வளவு தவறானது என்கிற வாதத்தை எடுத்து வைப்போம் என்று யாரும் நினைப்பதில்லை. எனக்குப் பிடிக்காததைப் பேசுகிறாயா, நீ இந்துத்துவா, நீ தமிழ்த் துரோகி. இதைத்தான் நாம் பார்க்கிறோம். இதனால் என்ன ஆகிறது என்றால் எதை எதிர்ப்பதாக நினைத்து அந்த நபரை நாம் தாக்குகிறோமோ, அது வளரத் துணைபோய் விடுகிறோம். பாரதிய ஜனதா விஷயத்தில் இதுதான் நடந்தது.
இதில் சமீபகாலமாக வேடிக்கை என்னவென்றால், பத்திரிகைகளுக்கும் மனிதர்களுக்கும் ஒவ்வொருவரும் "எதிர்பார்ப்புகள்" பட்டியல் வைத்திருக்கிறோம். நம் விருப்பத்திற்கிணங்கவும், நாம் எதிர்பார்க்கும்படியும் பத்திரிகைகளும் மனிதர்களும் இயங்கவில்லை என்றால் போட்டுத் தாக்க வேண்டியது. எதை எழுதுவது, எதை எழுதாமல் இருப்பது என்பது ஒவ்வொருவரின் சுதந்திரமும் ஆகும். அவரவர்க்கு அரித்தால் அவரவர்தான் சொறிந்து கொள்ள வேண்டும். அவர்கள் சார்பாக நாம் சொறிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது போன்றது பிறர் விருப்பப்படுகிற விஷயங்களை மட்டும் எழுதினால்தான் நேர்மை என்று சொல்வது.
எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் இருக்கிறார். நல்ல எழுத்தாளர் என்று அவரைச் சொல்கிறார்கள். தான் எடுத்துக் கொண்ட விஷயத்தைப் பற்றி நான்கு வாக்கியங்களாவது, தடம் புரளாது, அடுத்தவர் பற்றிய தன் வெறுப்புகளைக் கொட்டாது எழுதுவாரா என்று நானும் பார்த்துக் கொண்டேயிருக்கிறேன். ஊஹீம். அவ்வளவு சீக்கிரம் பிறப்புரிமையை விட்டுவிட முடியுமா என்று ஆப்பிளைப் பற்றிப் பேசப் போனால் ஆரஞ்சைப் பற்றி எழுதிக் கொண்டிருப்பார். ஆரஞ்சைப் பற்றிப் பேசப் போனால், திராட்சை பற்றி எழுதிக் கொண்டிருப்பார். அதனால்தான், இவரை நல்ல எழுத்தாளர் என்று சொல்கிறார்களா என்று தெரியவில்லை. விவாதத்தில் வைக்கப்படும் கருத்துகளுக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல், சொல்பவரின் குலம், கோத்திரம் என்று பார்த்துக் கொண்டிருப்பார். ஒரு விஷயத்தை இவரை விடத் தவறாகவும் காரணமற்ற எதிர்மறை உணர்வோடும் யாரும் அணுகிவிட முடியாது என்று என்னை இன்றளவும் நம்பவைத்துக் கொண்டிருக்கிறார். இப்படியெல்லாம் கூட Twisted ஆக மனிதர்கள் சிந்திக்கக் கூடும் என்று எனக்குக் கற்றுத் தந்தவர் அவர்.
அடுத்தப் பெரிய நகைச்சுவை. நீங்கள் உங்கள் கருத்துக்கு ஒவ்வாத அல்லது மற்றவர் கருத்துக்கு ஒவ்வாத ஒருவருடன் நட்பு பாராட்டி விடக் கூடாது. அப்படி இருந்து விட்டால் அவ்வளவுதான். மற்றவர் கருத்துதான் உங்கள் கருத்தும் என்று தீர்க்க தரிசனமாய்ச் சொல்ல சிலர் தயாராய் இருக்கிறார்கள். என் நண்பர் ஒருவர் அடிக்கடி வருந்துவார். அவர் நாட்டைக் கேட்டதுமே ஒரு குறிப்பிட்ட இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று சிலர் நினைத்து விடுகிறார்களே என்று. அதைப் போல்தான் இருக்கிறது. கருத்து வேறுபாடுகளை மீறி நட்புப் பாராட்டுவதையும் பார்த்து மனம் பொறுக்காமல் முத்திரை குத்துபவர்கள் இருக்கிறார்கள் என்பதும். ஒரு பயங்கரவாத இயக்கத்தை ஆதரிக்காவிட்டால் ஒரு குறிப்பிட்ட தமிழருக்கு எதிரானவர் என்கிற பிம்பம் கட்டமைக்கப்படுவதையும் இதிலே சேர்த்துக் கொள்ளலாம்.
"... அப்போது நான் வாழ்ந்த வாழ்க்கையிலே நான் இந்த ஜாதீய முறைப்படி நான் தாக்கப்படவில்லை. நான் தாக்கப்படாமல் இருக்கக் கூடிய ஒரு நிலையில் நான் தாக்கப்படுகிறேன் என்று சொல்லிக் குரலிடுவது சரியில்லை."
"... என்னுடைய அம்மா அப்பா அனுபவித்தத் துயர்களையாவது நீ எழுதியிருக்கலாம்; ஆனால் நீ அதைக் கூட மறந்துவிட்டாய் என்று சொல்கிறீர்கள்? ஏன் என்மீது அதைத் திணிக்கிறீர்கள்? ஒரு படைப்பாளி என்ற அளவில், will your not give me the freedom to choose what I want to write?"
"... வன்னியிலே நடக்கிற போராட்டத்தை நான் என் படைப்பிலே கொண்டுவரவில்லை. அதிலிருந்து விலகி ஓடிய மனிதன் என்று கூட இப்போது வன்னியில் வாழ்கிற போராளிகளும் எழுத்தாளர்களும் சொல்லலாம். சொல்வது நியாயம். ஆனால், என்னைப் பொறுத்த மட்டில் என் அனுபவத்திற்கு அன்னியமானதை நான் எப்போதும் எழுத மாட்டேன். இதை நான் நெடுகச் சொல்லி வந்திருக்கிறேன்."
மேற்கண்ட வாசகங்கள், பிரபல இலங்கை எழுத்தாளர் எஸ்.பொன்னுதுரை, திசைகள் இணைய இதழுக்கு அளித்த நேர்முகத்தில் சொல்லியவை. வேறு யாரேனும் இதையே சொல்லியிருந்தால் அவர்க்கு இந்துத்துவா பட்டமும், தமிழ்த் துரோகி பட்டமும் கொடுக்கத் தயாராய் ஒரு கூட்டம் நிற்கலாம். எஸ்.பொ. சொல்லியிருப்பதால் அவர் கருத்தின் நியாயத்தை உணர்பவர்கள், அதே நியாயத்தை மற்றவர்களுக்கும் தருவார்கள் என்று நம்புவோம்.
மாற்றுக் கருத்துகளை மதிக்காமல் மற்றவர்கள் பால் வெறுப்பை வளர்ப்போர் ஒரு சூழலின் சுமூகத்திற்கு எதிரானவர்கள். யாரும் யாரையும் திருத்திவிட முடியாது. கருத்துகளை எவ்வளவு உணர்வுபூர்வமாகவும் ஆவேசமாகவும் வைக்கிறோமோ அந்த அளவுக்கு முக்கியமானது, கருத்து மோதல்களைத் தனிப்பட்ட விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் இருப்பது. அப்படிப்பட்ட இடத்தில், அடுத்தவர் சொல்கிற கருத்தைக் கூட பொறுமையாக கருத்து ரீதியாக மறுத்து சொல்ல முடியும். அப்படிச் செய்யாதவர்கள், மாற்றுக் கருத்தை விட வார்த்தை வன்முறையில் நம்பிக்கை உடையவர்கள். தர்க்கத்தின் மூலமும் வரலாற்றை மேற்கோள் காட்டுவதன் மூலமோ நாம் அபிமானம் கொண்டுள்ள கருத்தாக்கம் வெல்ல இயலாது என்று உணர்ந்தவர்கள். அதை மறைக்க வார்த்தைகளை வாரி இறைப்பவர்கள். இவர்களுக்கும் மதவாதம் பேசுபவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஏனெனில் இருவருமே பொறுமையற்றவர்கள், அடுத்தவர் கருத்தை மதிக்கத் தெரியாதவர்கள். இவர்கள் ஜனநாயகம் என்று வாய்கிழியப் பேசினாலும், ஜனநாயகத்தின் எதிரிகள். தம் வீட்டில் தன் குடும்பத்தினரிடமும் உறவினரிடமும்கூட இவர்கள் இப்படிப்பட்ட வெறுப்பை தேவைப்பட்டால் வளர்த்துக் கொள்வார்கள். நமக்கு இன்றைய தேவை, பல்வேறு கருத்தாக்கங்களும் ஒன்றுடன் ஒன்று கலந்து, ஆரோக்கியமாக விவாதித்து, அறம் சார்ந்தும் வாழ்வின் சிறப்பியல் நோக்கு சார்ந்தும் விழுமியங்களை முன்னெடுத்துச் செல்லும் ஆரோக்கியமான சுற்றமும் நட்புமே தவிர, வெறுப்பை வளர்க்கிற வெட்டிப் பேச்சுகள் இல்லை. எனவே, இத்தகைய சூழலைக் கெடுப்பவரைக் எதிர்கொண்டு அவர்களின் முகத்திரையைக் கிழிப்பது மட்டுமே நமது கடமையாக இருக்க வேண்டும். இல்லையென்றால், திராவிட இயக்கங்கள், பா.ஜ.க ஆகியவற்றின் விஷயத்தில் செய்யப்பட்ட தவறுகளே திரும்பவும் நிகழும்.
Friday, April 30, 2004
பெருகிப் பாய்ந்தோடும் நகைச்சுவை தீட்சண்யம்
ஆபிதின் எழுத்துகளை அறிவதற்கு முன் அவர் பெயர் தெரியவந்து மனதில் தங்கிப் போனதுக்கு சாரு நிவேதிதாவுக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர் எழுத்துகளைச் சாரு அவர் அனுமதியின்றித் தன் பெயரில் வெளியிட்டுக் கொண்டார் என்கிற விஷயம் புகைந்து கொண்டிருந்தபோது - அதன் மூலம் - ஆபிதின் அறிமுகமானார். அது தொடர்பான ஆவணங்களிலும், கடிதங்களிலும் ஆபிதினைப் படித்ததே அவர் எழுத்துகளுடனான என் முதல் அறிமுகம். தன் எழுத்துகள் திருடப்பட்டுவிட்ட வேதனையில் இருக்கிற ஒருவரிடம்கூட நகைச்சுவை இயல்பாகவும் கட்டற்றும் பிரவகிக்க முடியும் என்று அவர் கடிதங்களும் அதில் தென்பட்ட சுய எள்ளலும் உணர்த்தின.
அதற்கப்புறம் ஆபிதின் எழுத்துகளைப் படிக்கவும் நண்பராகச் சிலகாலமாக அறியவும் திண்ணை உதவியது. ஆபிதினின் நகைச்சுவை ரெடிமேட் ஜோக்குகள் நகைச்சுவையோ, வார்த்தை விளையாட்டு நகைச்சுவையோ, எல்லைகள் பார்த்துப் பார்த்துப் பிரிக்கப்பட்டு நேரம் எடுத்துக் கொண்டு அழகாகத் தைக்கப்பட்ட வண்ணத்துணி போன்ற நகாசு வேலை நகைச்சுவையோ இல்லை. இவர் நகைச்சுவை எந்த வரையறைகளூக்கும் உட்படாத ஓர் ஒரிஜினல் நகைச்சுவை. பெருகிப் பாயும் காட்டாற்று வெள்ளம் போன்ற தன்னிச்சையான நகைச்சுவை அது. எந்த விருப்புக்கும் வெறுப்புக்கும் அது கட்டுப்பட்டு நிற்பதில்லை. அந்த வெள்ளத்தில் தன்னையே கூட மூழ்கடித்துக் கொண்டு - சுய எள்ளல் - செய்து கொள்ள ஆபிதின் தவறுவதில்லை. இப்படி யார் மீதும் கருணை காட்டாமல், உள்ளன்று வைத்துப் புறமொன்று பேசாமல் - வந்ததைப் போட்டுத் தாக்குவதாலேயே அவர் நகைச்சுவை வீரியம் பெற்று வித்தியாசமாக எழுந்து நிற்கிறது. ஆனால் - தமிழில் பெரும்பாலான வாசகர்களுக்கு ஆபிதின் யாரென்று தெரியாமல் இருக்கக் கூடும். அதுதான் இங்கே நிதர்சனம் என்பதால் அதைப் பற்றிப் புலம்பி ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை.
சமீபத்தில் எனக்கு எழுதிய மடலொன்றில் அவர் குறிப்பிட்டிருந்தார். "சிவகுமார், எங்கே நீங்கள் எழுதுவதேயில்லை. மரத்தடியில் பிசியாகி விட்டீர்களா? வேறு பெயரில் எழுதுகிறீர்களா? பெயர் ஆபிதின் இல்லையே" என்று. தன் வாழ்வின் சோக நிகழ்ச்சியொன்றோடு இப்படி இயல்பாய் நகைச்சுவையைப் பிணைத்து எழுதுகிற ஆற்றல் எல்லாருக்கும் வந்துவிடாது. சுய எள்ளல் என்கிற பெயரில் தன்னையோ தான் சார்ந்தவர்களையோ தாழ்த்திக் கொள்ளாத ஆனால் அறிவுக் கூர்மையும் நையாண்டியும் மிகுந்த ஸ்டைல் ஆபிதினுடையது.
இந்தியாவில் - முக்கியமாகத் தமிழில் - தம் மதம் குறித்த கடுமையான விமர்சனத்தை முன்வைக்கத் தவறாத இந்துக்கள் நிறைய இருக்கிறார்கள். இதற்கு நிறைய உதாரணங்கள் காட்ட முடியும். பெரும்பான்மையான சமூகத்தைச் சார்ந்தவர்களாக அவர்கள் இருப்பதால் - அத்தகைய விமர்சனங்களையும் யாரும் எதிர்மறையாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால், சிறுபான்மை சமூகத்தினரிடையே தம் மதத்தின் மூடப் பழக்கங்கள், குறைகள் குறித்துப் பெரிதாக விமர்சனங்கள் வருவதில்லை. வந்தாலும் அவற்றை இந்து மதத்தை இந்துக்கள் விமர்சிப்பது போல் பிற மதத்தவர்கள் தங்கள் மதத்தை அதிக எண்ணிக்கையில் விமர்சிப்பதில்லை. இதற்குப் பல காரணங்கள் இருக்கக் கூடும். முக்கியக் காரணம் - சிறுபான்மை சமூகத்தினராய் அவர்கள் ஏற்கனவே பாதுகாப்பற்று உணரக் கூடும். இச்சூழ்நிலையில் தம் மதத்தின் குறைகளைத் தானே பட்டியலிட்டால் மற்றவர்களுக்கு அது வாய்க்கரிசி போட்டதாக ஆகிவிடக் கூடும் என்று அமைதி காக்கலாம். அல்லது பிற காரணங்களும் இருக்கக் கூடும். அவற்றுள் போவதோ அவற்றை ஆராய்வதோ அப்படி இருப்பது சரியா தவறா என்று சொல்வதோ என் நோக்கமில்லை. ஆனால், அப்படி சிறுபான்மை மதத்தைச் சார்ந்தவராக இருப்பினும் தாட்சண்யம் காட்டாமல் தம் மதத்தின், தன் சமூகத்தின் குறைகளைச் சொல்பவர்களும் ஒத்துக் கொள்பவர்களும் பாராட்டத் தக்கவர்கள். அவர்களின் அறிவொழுக்கம் (Intellectual Honesty) தலை வணங்கத் தக்கது. அத்தகைய அறிவொழுக்கம் நிரம்பியவர் ஆபிதின் என்பதை அவர் எழுத்துகளின் மூலம் ஒருவர் அறிந்து கொள்ள முடியும்.
ஆபிதின் நாத்திகவாதி இல்லை. இறை நம்பிக்கை உடையவர். பிரார்த்தனைகளுடன் - அன்பு செலுத்துதலும் சுயவிமர்சனங்களுமே நிறைவான வாழ்க்கைக்கு வழிகோலும் என்று உணர்ந்தவர். எனக்கு எழுதிய மடலொன்றில் அவர் குறிப்பிட்டிருந்த பின்வரும் வாசகங்கள் இன்னும் மனதில் நிற்கின்றன. "இறைநம்பிக்கைக் கொண்ட என்னைப் பொறுத்தவரை மனிதன்தான் முக்கியமானவன். இறைநம்பிக்கையும் எப்படி என்றால் அது ஒரு நல்ல குட்டிச்சுவர்; விடைதெரியாத ஆயிரம் கேள்விகளுக்கு நாம் தயாரித்த மாயாஜால பதில்கள். அவ்வளவுதான். அத்தனையும் கைவிட்டுப் போனபிறகு நாம் சாய்ந்து கொள்ள உதவுகிற இந்தத் தூண்களில் அவனவன் மாறிமாறி காறித்துப்பும்போது கவலை வருவதில் ஏதோ எழுதுகிறேன். இதில் என் சமூகத்தை விமர்சிக்கிறேன் என்றால் மற்ற சமூகத்தவர்களை விமர்சிக்க எனக்கு அருகதையில்லை என்றுதான்." இது, இதுதான் ஆபீதின்.
ஆபிதின் கதைகள் கரடுமுரடானவை போலத் தோன்றினாலும் அதனுள் ஊடுருவும் மனிதநேயத்தையும் வாழ்வின் நிதர்சனத்தையும் ஒருவர் அறிந்து கொள்ள முடியும். அவர் நகைச்சுவையின் அடியாழத்தில் விமர்சனங்கள் இருக்கும். ஆனால், எவர் மீதும் வெறுப்பு இருக்காது. எந்த நேரத்தில் வரும் என்று எதிர்பார்க்காத இடங்களில் எல்லாம் வெடித்து நம்மை திடுக்குறச் செய்துப் பின் மகிழ வைக்கும் நகைச்சுவை அவருடையது. சூபியிஸத்தை சூப் குடிப்பதுடன் முடிச்சுப் போட்டி சிரிக்கவைக்க அவரைத் தவிர யாரால் முடியும். அவர் கதைகள் பெரும்பாலும் சுயசரிதை பாணியிலும், தன்மையிலும் (First Person narration) அமைந்துள்ளன. இது தேர்ந்த வாசகருக்குக் குறையாகத் தெரியாவண்ணம் உள்ளடக்கம் மூலமும் வரிக்கு வரி நகைச்சுவை மூலமும் ஈடு செய்துவிடுபவர் ஆபிதின். அவர் எழுத்துகளில் வலிந்து திணிக்கப்பட்டவை என்றும் எதையும் சுலபமாகக் காட்டிவிட முடியாது. அவ்வளவு வேகமும் இயல்புமானது அது.
அவர் எழுத்துகளில் வெகுளித்தனம் நிறைந்த உண்மைகள் விரியும். ஆனால், அது முற்றும் உணர்ந்த ஞானிகளின் வெகுளித்தனம் போன்றது. தெரிந்தும் தெரியாததுபோல நடிக்கிற பாசாங்கில்லை அது. மனிதர்கள் இப்படித்தான் என்பதை உணர்ந்த சூட்சுமம் அது. இன்றைக்கு எழுத்தாளனாக அங்கீகரிக்கப்பட ஓர் எழுத்தாளன் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை ஆபிதின் அறிந்து வைத்திருக்கிறார். ஆனால், அவற்றையெல்லாம் செய்து கிடைக்கிற அங்கீகாரம் வேண்டாமென்று சும்மா இருப்பதாலேயே அவர் என் மதிப்பில் இன்னும் உயர்ந்து நிற்கிறார்.
அவர் நகைச்சுவையினூடே தெரிந்த கலகக்குரல் என்னை முதலில் கவர்ந்தது. அதைப் பாராட்டி எழுதியபோது - தன் கலகம் செத்துவிட்டதாகவும் வல்லூறுகள் வட்டமிடும் வாழ்க்கையாக ஊர் ஆகிவிட்டதாகவும் அவர் எழுதியிருந்த நேர்மை எனக்குப் பிடித்துப் போனது.
ஆபிதின் போன்ற குரல்கள் எல்லா மொழியிலும், எல்லா சமூகத்திலும், எல்லா மதத்திலும் தேவை. அந்தக் குரல்கள் நம்மை நாமே அறிந்து கொள்ளவும் திருத்திக் கொள்ளவும் உதவும். ஆபிதினை இன்ன சமூகத்தைச் சார்ந்தவர் என்று கொள்வதும்கூட ஓர் அடையாளத்துக்குத்தான். அவர் மனித குலத்துக்கான எழுத்தாளர். ஆபிதின் போன்றோர் தொடர்ந்து எழுத வேண்டும். பயமற்ற குரல்கள் எழவும் தொடரவும் அவை உதவும்.
அதற்கப்புறம் ஆபிதின் எழுத்துகளைப் படிக்கவும் நண்பராகச் சிலகாலமாக அறியவும் திண்ணை உதவியது. ஆபிதினின் நகைச்சுவை ரெடிமேட் ஜோக்குகள் நகைச்சுவையோ, வார்த்தை விளையாட்டு நகைச்சுவையோ, எல்லைகள் பார்த்துப் பார்த்துப் பிரிக்கப்பட்டு நேரம் எடுத்துக் கொண்டு அழகாகத் தைக்கப்பட்ட வண்ணத்துணி போன்ற நகாசு வேலை நகைச்சுவையோ இல்லை. இவர் நகைச்சுவை எந்த வரையறைகளூக்கும் உட்படாத ஓர் ஒரிஜினல் நகைச்சுவை. பெருகிப் பாயும் காட்டாற்று வெள்ளம் போன்ற தன்னிச்சையான நகைச்சுவை அது. எந்த விருப்புக்கும் வெறுப்புக்கும் அது கட்டுப்பட்டு நிற்பதில்லை. அந்த வெள்ளத்தில் தன்னையே கூட மூழ்கடித்துக் கொண்டு - சுய எள்ளல் - செய்து கொள்ள ஆபிதின் தவறுவதில்லை. இப்படி யார் மீதும் கருணை காட்டாமல், உள்ளன்று வைத்துப் புறமொன்று பேசாமல் - வந்ததைப் போட்டுத் தாக்குவதாலேயே அவர் நகைச்சுவை வீரியம் பெற்று வித்தியாசமாக எழுந்து நிற்கிறது. ஆனால் - தமிழில் பெரும்பாலான வாசகர்களுக்கு ஆபிதின் யாரென்று தெரியாமல் இருக்கக் கூடும். அதுதான் இங்கே நிதர்சனம் என்பதால் அதைப் பற்றிப் புலம்பி ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை.
சமீபத்தில் எனக்கு எழுதிய மடலொன்றில் அவர் குறிப்பிட்டிருந்தார். "சிவகுமார், எங்கே நீங்கள் எழுதுவதேயில்லை. மரத்தடியில் பிசியாகி விட்டீர்களா? வேறு பெயரில் எழுதுகிறீர்களா? பெயர் ஆபிதின் இல்லையே" என்று. தன் வாழ்வின் சோக நிகழ்ச்சியொன்றோடு இப்படி இயல்பாய் நகைச்சுவையைப் பிணைத்து எழுதுகிற ஆற்றல் எல்லாருக்கும் வந்துவிடாது. சுய எள்ளல் என்கிற பெயரில் தன்னையோ தான் சார்ந்தவர்களையோ தாழ்த்திக் கொள்ளாத ஆனால் அறிவுக் கூர்மையும் நையாண்டியும் மிகுந்த ஸ்டைல் ஆபிதினுடையது.
இந்தியாவில் - முக்கியமாகத் தமிழில் - தம் மதம் குறித்த கடுமையான விமர்சனத்தை முன்வைக்கத் தவறாத இந்துக்கள் நிறைய இருக்கிறார்கள். இதற்கு நிறைய உதாரணங்கள் காட்ட முடியும். பெரும்பான்மையான சமூகத்தைச் சார்ந்தவர்களாக அவர்கள் இருப்பதால் - அத்தகைய விமர்சனங்களையும் யாரும் எதிர்மறையாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால், சிறுபான்மை சமூகத்தினரிடையே தம் மதத்தின் மூடப் பழக்கங்கள், குறைகள் குறித்துப் பெரிதாக விமர்சனங்கள் வருவதில்லை. வந்தாலும் அவற்றை இந்து மதத்தை இந்துக்கள் விமர்சிப்பது போல் பிற மதத்தவர்கள் தங்கள் மதத்தை அதிக எண்ணிக்கையில் விமர்சிப்பதில்லை. இதற்குப் பல காரணங்கள் இருக்கக் கூடும். முக்கியக் காரணம் - சிறுபான்மை சமூகத்தினராய் அவர்கள் ஏற்கனவே பாதுகாப்பற்று உணரக் கூடும். இச்சூழ்நிலையில் தம் மதத்தின் குறைகளைத் தானே பட்டியலிட்டால் மற்றவர்களுக்கு அது வாய்க்கரிசி போட்டதாக ஆகிவிடக் கூடும் என்று அமைதி காக்கலாம். அல்லது பிற காரணங்களும் இருக்கக் கூடும். அவற்றுள் போவதோ அவற்றை ஆராய்வதோ அப்படி இருப்பது சரியா தவறா என்று சொல்வதோ என் நோக்கமில்லை. ஆனால், அப்படி சிறுபான்மை மதத்தைச் சார்ந்தவராக இருப்பினும் தாட்சண்யம் காட்டாமல் தம் மதத்தின், தன் சமூகத்தின் குறைகளைச் சொல்பவர்களும் ஒத்துக் கொள்பவர்களும் பாராட்டத் தக்கவர்கள். அவர்களின் அறிவொழுக்கம் (Intellectual Honesty) தலை வணங்கத் தக்கது. அத்தகைய அறிவொழுக்கம் நிரம்பியவர் ஆபிதின் என்பதை அவர் எழுத்துகளின் மூலம் ஒருவர் அறிந்து கொள்ள முடியும்.
ஆபிதின் நாத்திகவாதி இல்லை. இறை நம்பிக்கை உடையவர். பிரார்த்தனைகளுடன் - அன்பு செலுத்துதலும் சுயவிமர்சனங்களுமே நிறைவான வாழ்க்கைக்கு வழிகோலும் என்று உணர்ந்தவர். எனக்கு எழுதிய மடலொன்றில் அவர் குறிப்பிட்டிருந்த பின்வரும் வாசகங்கள் இன்னும் மனதில் நிற்கின்றன. "இறைநம்பிக்கைக் கொண்ட என்னைப் பொறுத்தவரை மனிதன்தான் முக்கியமானவன். இறைநம்பிக்கையும் எப்படி என்றால் அது ஒரு நல்ல குட்டிச்சுவர்; விடைதெரியாத ஆயிரம் கேள்விகளுக்கு நாம் தயாரித்த மாயாஜால பதில்கள். அவ்வளவுதான். அத்தனையும் கைவிட்டுப் போனபிறகு நாம் சாய்ந்து கொள்ள உதவுகிற இந்தத் தூண்களில் அவனவன் மாறிமாறி காறித்துப்பும்போது கவலை வருவதில் ஏதோ எழுதுகிறேன். இதில் என் சமூகத்தை விமர்சிக்கிறேன் என்றால் மற்ற சமூகத்தவர்களை விமர்சிக்க எனக்கு அருகதையில்லை என்றுதான்." இது, இதுதான் ஆபீதின்.
ஆபிதின் கதைகள் கரடுமுரடானவை போலத் தோன்றினாலும் அதனுள் ஊடுருவும் மனிதநேயத்தையும் வாழ்வின் நிதர்சனத்தையும் ஒருவர் அறிந்து கொள்ள முடியும். அவர் நகைச்சுவையின் அடியாழத்தில் விமர்சனங்கள் இருக்கும். ஆனால், எவர் மீதும் வெறுப்பு இருக்காது. எந்த நேரத்தில் வரும் என்று எதிர்பார்க்காத இடங்களில் எல்லாம் வெடித்து நம்மை திடுக்குறச் செய்துப் பின் மகிழ வைக்கும் நகைச்சுவை அவருடையது. சூபியிஸத்தை சூப் குடிப்பதுடன் முடிச்சுப் போட்டி சிரிக்கவைக்க அவரைத் தவிர யாரால் முடியும். அவர் கதைகள் பெரும்பாலும் சுயசரிதை பாணியிலும், தன்மையிலும் (First Person narration) அமைந்துள்ளன. இது தேர்ந்த வாசகருக்குக் குறையாகத் தெரியாவண்ணம் உள்ளடக்கம் மூலமும் வரிக்கு வரி நகைச்சுவை மூலமும் ஈடு செய்துவிடுபவர் ஆபிதின். அவர் எழுத்துகளில் வலிந்து திணிக்கப்பட்டவை என்றும் எதையும் சுலபமாகக் காட்டிவிட முடியாது. அவ்வளவு வேகமும் இயல்புமானது அது.
அவர் எழுத்துகளில் வெகுளித்தனம் நிறைந்த உண்மைகள் விரியும். ஆனால், அது முற்றும் உணர்ந்த ஞானிகளின் வெகுளித்தனம் போன்றது. தெரிந்தும் தெரியாததுபோல நடிக்கிற பாசாங்கில்லை அது. மனிதர்கள் இப்படித்தான் என்பதை உணர்ந்த சூட்சுமம் அது. இன்றைக்கு எழுத்தாளனாக அங்கீகரிக்கப்பட ஓர் எழுத்தாளன் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை ஆபிதின் அறிந்து வைத்திருக்கிறார். ஆனால், அவற்றையெல்லாம் செய்து கிடைக்கிற அங்கீகாரம் வேண்டாமென்று சும்மா இருப்பதாலேயே அவர் என் மதிப்பில் இன்னும் உயர்ந்து நிற்கிறார்.
அவர் நகைச்சுவையினூடே தெரிந்த கலகக்குரல் என்னை முதலில் கவர்ந்தது. அதைப் பாராட்டி எழுதியபோது - தன் கலகம் செத்துவிட்டதாகவும் வல்லூறுகள் வட்டமிடும் வாழ்க்கையாக ஊர் ஆகிவிட்டதாகவும் அவர் எழுதியிருந்த நேர்மை எனக்குப் பிடித்துப் போனது.
ஆபிதின் போன்ற குரல்கள் எல்லா மொழியிலும், எல்லா சமூகத்திலும், எல்லா மதத்திலும் தேவை. அந்தக் குரல்கள் நம்மை நாமே அறிந்து கொள்ளவும் திருத்திக் கொள்ளவும் உதவும். ஆபிதினை இன்ன சமூகத்தைச் சார்ந்தவர் என்று கொள்வதும்கூட ஓர் அடையாளத்துக்குத்தான். அவர் மனித குலத்துக்கான எழுத்தாளர். ஆபிதின் போன்றோர் தொடர்ந்து எழுத வேண்டும். பயமற்ற குரல்கள் எழவும் தொடரவும் அவை உதவும்.
ராணுவ அத்துமீறல்கள்
எந்த ராணுவமும் நல்ல ராணுவம் அல்ல - No army is good army - என்று சொல்வார்கள். ஆதிக்கம் செலுத்துகிற அல்லது அதிகாரம் கொண்ட ராணுவம் செய்கிற அத்துமீறல்கள், கொடுமைகள் ஆகியவை குறித்துத் தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருப்பது இந்த நிஜத்தை உணர்த்தும். ஈராக் சிறைச்சாலையில் கைதிகள் நடத்தப்பட்ட விதம் குறித்து CBS தொலைகாட்சி தன் 60 Minutes நிகழ்ச்சியில் காட்டிய புகைப்படங்கள் ஈராக்கில் அதிகாரம் செலுத்துகிற அமெரிக்கர்களையும் ஆங்கிலேயர்களையும் மட்டுமின்றி அனைவரையும் அதிர்ச்சிக் குள்ளாக்கியுள்ளன. தவறு செய்த ராணுவ வீரர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. இது ஜனநாயகத்தின் சிறப்பாகும். மேலும் இத்தகைய குற்றங்கள் நிகழாமல் நடவடிக்கைகள் தடுக்குமோ தடுக்காதோ ஆனால் ஜனநாயகத்தில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்கள், தண்டிக்கப்படுவார்கள் என்பதற்கு உதாரணமாக ராணுவ வீரர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் அமையும்.
சமீபத்தில் இணையத்தில் நடந்த விவாதங்களின்போது இந்தியாவில் மனித உரிமை மீறப்படவில்லையா என்கிற கேள்வி எழுப்பப்பட்டு அதன் அடிப்படையில் பயங்கரவாதக் குழுக்கள் செய்கிற அத்துமீறல்கள் படுகொலைகள் ஆகியவற்றை விடுதலைக்காக என்கிற நோக்கத்துக்காகப் பொறுத்துக் கொள்ளலாம் என்று "அறிவுபூர்வமான" வாதங்கள் வைக்கப்பட்டன. இலங்கையில் இந்திய அமைதிகாக்கும் படை அட்டூழியங்கள் செய்யவில்லையா என்றும் கேள்வி எழுப்பப் பட்டது. குஜராத்தில் நடந்தது தெரியாதா என்றும் கேட்டார்கள். எந்த நாட்டின் அரசாங்கமும் ராணுவமும் செய்கிற அட்டூழியங்களைப் பத்திரிகைகள் தைரியமாக அம்பலப்படுத்த இயலும். பாதிக்கப்பட்டவர்களும் நீதி தேடிக் கொள்ளும் வழிகள் உள்ளன. நீதியும் பரிகாரமும் தேட உதவ சட்டங்கள் இருக்கின்றன. உள்ளூர் நீதிமன்றத்திலிருந்து சர்வதேச நீதிமன்றம் வரையும் மிலிட்டிரி டிரிபியூனல்வரையும் பல மார்க்கங்கள் மூலம் நடவடிக்கை எடுக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் பின் லேடனோ மற்றும் விடுதலைக்காகக் கஞ்சாவும் போதைப் பொருளூம் கடத்துகிற, தற்கொலைப் படைகள் நிறுவி அப்பாவி மனிதரைக் கொல்கிற இயக்கங்களும் செய்கிற அத்துமீறல்களையும் அரசியல் படுகொலைகளையும் எதிர்த்து எந்தக் கேள்வியையும் யாரும் கேட்க இயலாது; எந்த நீதியையும் பெற்றுவிட இயலாது. இதை நம்மில் பலர் அறிந்திருந்தும் அறியாதவர்போல் அபிமானத்தாலோ கட்டாயத்தாலோ கண்மூடித்தனமாகவோ நடிக்கிறோம்.
இலங்கையில் இந்திய அமைதி காக்கும்படை அத்துமீறல்களில் ஈடுபட்டிருக்க கூடும் என்பதில் சந்தேகமில்லை. எல்லா ராணுவங்களைப் போலவும் இந்திய ராணுவமும் ராணுவம் தானே. இந்திய அமைதி காக்கும்படையின் அத்துமீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் பரிகாரமும் நிச்சயம் சட்டபூர்வமான வழிகள் மூலம் கிடைக்க வேண்டும். அதற்காக எந்த அளவுக்கு முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்று தெரியவில்லை. ஆனால், அப்படிப்பட்ட அத்துமீறல்கள் நடந்தன என்று அடிக்கடிச் சொல்பவர்கள் - அவை குறித்து ஏதும் சட்டரீதியான புகார்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றனவா, அத்தகைய புகார்கள் என்ன ஆயின என்பதைப் பற்றி ஏதும் சொல்வதில்லை. புகார்கள் கொடுக்கப்பட்டிருந்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லையென்றால், அது கண்டிக்கப்படத்தக்கது. ஆனால், புகார்கள் ஏதும் கொடுக்காமல் அல்லது பத்திரிகைகளில் ஆதாரபூர்வமான செய்திகள் வெளிவராமல் வெறுமனே இந்திய அமைதி காக்கும்படை அத்துமீறலில் ஈடுபட்டது என்று சொல்வது அதன் உண்மையை மற்றவர்கள் சந்தேகிக்க வழிவகுத்துவிடக் கூடும். இதை எழுதியதன் மூலம் இந்திய ராணுவம் புனிதமானது என்று நான் சொல்ல வரவில்லை. எந்த ராணுவமும் செய்த அட்டூழியங்களுக்குப் பதிலாகக் கூட பயங்கரவாத இயக்கங்களையோ அவற்றின் செயல்பாடுகளையோ விடுதலை என்ற பெயரால் கூட ஆதரிக்க இயலாது என்பதே என் நிலை.
உதாரணமாக, ராஜீவ் காந்தி கொலை போன்ற ஒரு படுகொலை மேலைநாடுகளில் நிகழ்த்தப்பட்டிருந்தால் - அதற்குக் காரணமான இயக்கம் ராணுவரீதியான பதிலடியால் வேரறுக்கப்பட்டிருக்கும். தன்னுடைய குடிமக்கள் பயங்கரவாதத்தால் கொல்லப்பட்டாலே நாடுகள் ராணுவ ரீதியான பதிலடிகள் தருவது வழக்கமாகிப் போய்விட்டன. இஸ்ரேலும் அமெரிக்காவும் அதைத்தான் செய்கின்றன. காரணமான இயக்கங்களின் நோக்கங்கள் புனிதமானவையா என்றெல்லாம் யாரும் பார்ப்பதில்லை. விடுதலையை பயங்கரவாத்தின் வழியாகவும் வன்முறை வழியாகவும் யாரும் ஆதரிப்பதில்லை. பாலஸ்தீனத்திலிருந்து, ஆப்கன்கானிஸ்தான், ஈராக் வரை ராணுவ பதிலடிகளையே மக்கள் பார்த்து வருகிறார்கள். சிலநேரங்களில் இவை அவசியமானதாகவும் ஆகிவிடுகிறது. ஆனால், இலங்கைத் தமிழர்கள் நல்வாழ்வின்பால் இந்தியாவுக்கு இருக்கிற அக்கறையின் காரணத்தினாலும் கூடவே, ராஜீவ் காந்தி படுகொலைக்கு இந்தியா ராணுவ ரீதியான பதிலடி தராமல் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டது என்று அனைவரும் அறிவர். இதுதான் ஜனநாயகத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் உள்ள வித்தியாசம் என்று நான் நம்புகிறேன். ஜனநாயகத்தின் குறைபாடுகளைக் கண்டறிய முடியும்; களைந்து கொள்ள முடியும். பயங்கரவாதமோ தன் குறைபாடுகளை மறைத்துக் கொள்ளவும் குறுகிய நோக்கங்களுக்காகவும் மற்றவரைக் களையெடுக்கும்.
ஈராக் சிறையில் வாடுபவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் மனிதாபிமானம் உள்ளவர் செய்யக் கூடியதல்ல. அமெரிக்காவும் உலகமும் ஏற்றுக் கொண்டிருக்கிற சட்டங்களின் வழியாக தவறிழைத்தவர்கள் வெளிக்கொணரப்பட்டதும், தண்டிக்கப்படுவார்கள் என்று நம்பப்படுவதுமே ஜனநாயகத்தின் சிறப்பு என்று மேற்கண்ட உதாரணத்தால் என்னால் விளங்கிக் கொள்ள முடிகிறது.
மேலும் CBS TV இந்நிகழ்ச்சியை ஒளிபரப்புவதற்கு முன்னர் - அது பற்றி அமெரிக்க அரசாங்கத்துக்குத் தெரிவித்ததாகவும் - ஈராக்கில் தற்போது நிகழ்ந்து வரும் கடுமையான சண்டைகளால் - இதைச் சற்றுத் தாமதமாக ஒளிபரப்பும்படி அமெரிக்க அரசாங்கம் கேட்டுக் கொண்டதற்கிணங்க - இருவாரங்கள் தாமதமாக இந்நிகழ்ச்சி ஒளிபரப்பப் பட்டிருக்கிறது என்றும் அறிகிறோம். தன் நாட்டின் ராணுவம் செய்த அத்துமீறல்களையும் கூட ஒளிபரப்ப வேண்டாம் என்று தடுக்கிற அதிகாரம் கையிலிருந்தும் அதைப் பயன்படுத்தாமல் அனுமதித்ததும் ஜனநாயகத்தின் ஓர் அம்சமே. இதையே பின் லேடனும் அல்லது விடுதலைக்காகப் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுகிற பிற இயக்கங்களூம் செய்திருப்பார்களா என்ற கேள்விக்கான பதில் நாமறிந்ததே.
எதற்காக இந்நிகழ்ச்சியை ஒளிபரப்பும் முன் அமெரிக்க அரசாங்கத்திடம் CBS தொலைகாட்சி தகவல் சொல்லியது என்பது என் கேள்வி. இத்தகவல் சொல்லப்பட்டது நாகரீகத்துக்காகவா (Courtesy) அல்லது அப்படி ஏதும் சட்டரீதியான நிர்ப்பந்தம் தொலைகாட்சிகளூக்கு இருக்கிறதா என்றும் தெரியவில்லை.
இந்திய அமைதிகாக்கும் படை செய்த அட்டூழியங்கள் குறித்து வருந்துகிற நண்பர்கள் (வருந்த வேண்டிய விஷயம்தான் அது) - மற்றவர்கள் வருந்துவதில்லை என்று குற்றம் சொல்கிற நண்பர்கள் - ஈராக் கைதிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை எதிர்த்து வலிமையாகக் குரல் கொடுத்து தங்கள் நடுநிலைமையைப் பறை சாற்றுவார்கள் என்று நம்புகிறேன்.
சமீபத்தில் இணையத்தில் நடந்த விவாதங்களின்போது இந்தியாவில் மனித உரிமை மீறப்படவில்லையா என்கிற கேள்வி எழுப்பப்பட்டு அதன் அடிப்படையில் பயங்கரவாதக் குழுக்கள் செய்கிற அத்துமீறல்கள் படுகொலைகள் ஆகியவற்றை விடுதலைக்காக என்கிற நோக்கத்துக்காகப் பொறுத்துக் கொள்ளலாம் என்று "அறிவுபூர்வமான" வாதங்கள் வைக்கப்பட்டன. இலங்கையில் இந்திய அமைதிகாக்கும் படை அட்டூழியங்கள் செய்யவில்லையா என்றும் கேள்வி எழுப்பப் பட்டது. குஜராத்தில் நடந்தது தெரியாதா என்றும் கேட்டார்கள். எந்த நாட்டின் அரசாங்கமும் ராணுவமும் செய்கிற அட்டூழியங்களைப் பத்திரிகைகள் தைரியமாக அம்பலப்படுத்த இயலும். பாதிக்கப்பட்டவர்களும் நீதி தேடிக் கொள்ளும் வழிகள் உள்ளன. நீதியும் பரிகாரமும் தேட உதவ சட்டங்கள் இருக்கின்றன. உள்ளூர் நீதிமன்றத்திலிருந்து சர்வதேச நீதிமன்றம் வரையும் மிலிட்டிரி டிரிபியூனல்வரையும் பல மார்க்கங்கள் மூலம் நடவடிக்கை எடுக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் பின் லேடனோ மற்றும் விடுதலைக்காகக் கஞ்சாவும் போதைப் பொருளூம் கடத்துகிற, தற்கொலைப் படைகள் நிறுவி அப்பாவி மனிதரைக் கொல்கிற இயக்கங்களும் செய்கிற அத்துமீறல்களையும் அரசியல் படுகொலைகளையும் எதிர்த்து எந்தக் கேள்வியையும் யாரும் கேட்க இயலாது; எந்த நீதியையும் பெற்றுவிட இயலாது. இதை நம்மில் பலர் அறிந்திருந்தும் அறியாதவர்போல் அபிமானத்தாலோ கட்டாயத்தாலோ கண்மூடித்தனமாகவோ நடிக்கிறோம்.
இலங்கையில் இந்திய அமைதி காக்கும்படை அத்துமீறல்களில் ஈடுபட்டிருக்க கூடும் என்பதில் சந்தேகமில்லை. எல்லா ராணுவங்களைப் போலவும் இந்திய ராணுவமும் ராணுவம் தானே. இந்திய அமைதி காக்கும்படையின் அத்துமீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் பரிகாரமும் நிச்சயம் சட்டபூர்வமான வழிகள் மூலம் கிடைக்க வேண்டும். அதற்காக எந்த அளவுக்கு முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்று தெரியவில்லை. ஆனால், அப்படிப்பட்ட அத்துமீறல்கள் நடந்தன என்று அடிக்கடிச் சொல்பவர்கள் - அவை குறித்து ஏதும் சட்டரீதியான புகார்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றனவா, அத்தகைய புகார்கள் என்ன ஆயின என்பதைப் பற்றி ஏதும் சொல்வதில்லை. புகார்கள் கொடுக்கப்பட்டிருந்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லையென்றால், அது கண்டிக்கப்படத்தக்கது. ஆனால், புகார்கள் ஏதும் கொடுக்காமல் அல்லது பத்திரிகைகளில் ஆதாரபூர்வமான செய்திகள் வெளிவராமல் வெறுமனே இந்திய அமைதி காக்கும்படை அத்துமீறலில் ஈடுபட்டது என்று சொல்வது அதன் உண்மையை மற்றவர்கள் சந்தேகிக்க வழிவகுத்துவிடக் கூடும். இதை எழுதியதன் மூலம் இந்திய ராணுவம் புனிதமானது என்று நான் சொல்ல வரவில்லை. எந்த ராணுவமும் செய்த அட்டூழியங்களுக்குப் பதிலாகக் கூட பயங்கரவாத இயக்கங்களையோ அவற்றின் செயல்பாடுகளையோ விடுதலை என்ற பெயரால் கூட ஆதரிக்க இயலாது என்பதே என் நிலை.
உதாரணமாக, ராஜீவ் காந்தி கொலை போன்ற ஒரு படுகொலை மேலைநாடுகளில் நிகழ்த்தப்பட்டிருந்தால் - அதற்குக் காரணமான இயக்கம் ராணுவரீதியான பதிலடியால் வேரறுக்கப்பட்டிருக்கும். தன்னுடைய குடிமக்கள் பயங்கரவாதத்தால் கொல்லப்பட்டாலே நாடுகள் ராணுவ ரீதியான பதிலடிகள் தருவது வழக்கமாகிப் போய்விட்டன. இஸ்ரேலும் அமெரிக்காவும் அதைத்தான் செய்கின்றன. காரணமான இயக்கங்களின் நோக்கங்கள் புனிதமானவையா என்றெல்லாம் யாரும் பார்ப்பதில்லை. விடுதலையை பயங்கரவாத்தின் வழியாகவும் வன்முறை வழியாகவும் யாரும் ஆதரிப்பதில்லை. பாலஸ்தீனத்திலிருந்து, ஆப்கன்கானிஸ்தான், ஈராக் வரை ராணுவ பதிலடிகளையே மக்கள் பார்த்து வருகிறார்கள். சிலநேரங்களில் இவை அவசியமானதாகவும் ஆகிவிடுகிறது. ஆனால், இலங்கைத் தமிழர்கள் நல்வாழ்வின்பால் இந்தியாவுக்கு இருக்கிற அக்கறையின் காரணத்தினாலும் கூடவே, ராஜீவ் காந்தி படுகொலைக்கு இந்தியா ராணுவ ரீதியான பதிலடி தராமல் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டது என்று அனைவரும் அறிவர். இதுதான் ஜனநாயகத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் உள்ள வித்தியாசம் என்று நான் நம்புகிறேன். ஜனநாயகத்தின் குறைபாடுகளைக் கண்டறிய முடியும்; களைந்து கொள்ள முடியும். பயங்கரவாதமோ தன் குறைபாடுகளை மறைத்துக் கொள்ளவும் குறுகிய நோக்கங்களுக்காகவும் மற்றவரைக் களையெடுக்கும்.
ஈராக் சிறையில் வாடுபவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் மனிதாபிமானம் உள்ளவர் செய்யக் கூடியதல்ல. அமெரிக்காவும் உலகமும் ஏற்றுக் கொண்டிருக்கிற சட்டங்களின் வழியாக தவறிழைத்தவர்கள் வெளிக்கொணரப்பட்டதும், தண்டிக்கப்படுவார்கள் என்று நம்பப்படுவதுமே ஜனநாயகத்தின் சிறப்பு என்று மேற்கண்ட உதாரணத்தால் என்னால் விளங்கிக் கொள்ள முடிகிறது.
மேலும் CBS TV இந்நிகழ்ச்சியை ஒளிபரப்புவதற்கு முன்னர் - அது பற்றி அமெரிக்க அரசாங்கத்துக்குத் தெரிவித்ததாகவும் - ஈராக்கில் தற்போது நிகழ்ந்து வரும் கடுமையான சண்டைகளால் - இதைச் சற்றுத் தாமதமாக ஒளிபரப்பும்படி அமெரிக்க அரசாங்கம் கேட்டுக் கொண்டதற்கிணங்க - இருவாரங்கள் தாமதமாக இந்நிகழ்ச்சி ஒளிபரப்பப் பட்டிருக்கிறது என்றும் அறிகிறோம். தன் நாட்டின் ராணுவம் செய்த அத்துமீறல்களையும் கூட ஒளிபரப்ப வேண்டாம் என்று தடுக்கிற அதிகாரம் கையிலிருந்தும் அதைப் பயன்படுத்தாமல் அனுமதித்ததும் ஜனநாயகத்தின் ஓர் அம்சமே. இதையே பின் லேடனும் அல்லது விடுதலைக்காகப் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுகிற பிற இயக்கங்களூம் செய்திருப்பார்களா என்ற கேள்விக்கான பதில் நாமறிந்ததே.
எதற்காக இந்நிகழ்ச்சியை ஒளிபரப்பும் முன் அமெரிக்க அரசாங்கத்திடம் CBS தொலைகாட்சி தகவல் சொல்லியது என்பது என் கேள்வி. இத்தகவல் சொல்லப்பட்டது நாகரீகத்துக்காகவா (Courtesy) அல்லது அப்படி ஏதும் சட்டரீதியான நிர்ப்பந்தம் தொலைகாட்சிகளூக்கு இருக்கிறதா என்றும் தெரியவில்லை.
இந்திய அமைதிகாக்கும் படை செய்த அட்டூழியங்கள் குறித்து வருந்துகிற நண்பர்கள் (வருந்த வேண்டிய விஷயம்தான் அது) - மற்றவர்கள் வருந்துவதில்லை என்று குற்றம் சொல்கிற நண்பர்கள் - ஈராக் கைதிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை எதிர்த்து வலிமையாகக் குரல் கொடுத்து தங்கள் நடுநிலைமையைப் பறை சாற்றுவார்கள் என்று நம்புகிறேன்.
Thursday, April 29, 2004
விடுப்பு விண்ணப்பம்
வசந்தகாலத்தில் வருகிற ஒவ்வாமைக்கு (Spring time allergies) என்னை அதிகம் பிடித்துப் போய் விட்டதால் - எரிகிற கண்களை தேய்த்துக் கொண்டும், மூக்கை உறிஞ்சிக் கொண்டும், தொண்டையைக் கனைத்துக் கொண்டும், மூக்கடைத்துக் கொண்டும் - கனமழை பெய்து Pollenஐ அடித்துக் கொண்டு போகக் கடவது என்று வேண்டிக் கொண்டும் - இருக்கிறேன். எனவே, தினமும் வலைப்பதியாமல் வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு முறை பதிவது என்று தற்காலிகமாக முடிவு.
Sunday, April 25, 2004
பார்ன்ஸ் & நோபள் பரவசம்
என் குழந்தைகளின் ஆர்வத்திற்கிணங்க நான் இப்போது அடிக்கடி செல்கிற இடம் பார்ன்ஸ் & நோபள் (Barnes & Noble) புத்தகக் கடை. இங்கே புத்தகக் கடைகள் இன்னுமோர் நூல் நிலையமாக (library) செயல்பட்டு உதவி புரிகின்றன. கடைக்குள் சென்று உங்களுக்குப் பிடித்தப் புத்தகத்தைத் தேடி எடுத்து -எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை என்றால் தேடி எடுத்துத் தந்து உதவுகிறார்கள் - எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அங்கேயே படித்துவிட்டு வரலாம். நேற்றுப் புதிதாய் வந்த புத்தகத்திலிருந்து எந்தப் புத்தகத்தை/சஞ்சிகையை வேண்டுமானாலும் இப்படிப் படிக்கலாம். குறிப்புகள் எடுத்துக் கொள்ளலாம். மாணவர்களும் ஆய்வாளர்களும் நோட்டுப் புத்தகத்துடனும் லாப் டாப் கம்ப்யூட்டர்களுடனும் உட்கார்ந்து மும்முரமாய்ப் படித்துக் கொண்டிருப்பதை எந்நேரமும் காணலாம். எந்தத் துறையிலும் புதிதாக வந்திருக்கிற புத்தகங்கள் பொது நூல் நிலையங்களுக்கு வர சில நாள்கள், வாரங்கள் ஆகும். ஆனால், அத்தகைய புத்தகங்களைக் கூட இங்கே அமர்ந்து இலவசமாகப் படிக்க இயலும் என்பதால் இது நூல் நிலையத்தைவிட சிறந்தது.
உள்ளேயே காபி மற்றும் ஸ்நாக்ஸ் சாப்பிட மிகவும் பிரபலமான Starbucks காபிக் கடை இருக்கிறது. காபியையும் ஸ்நாக்ஸையும் படிக்கிற இடத்திற்கே எடுத்துச் சென்றும் சாப்பிடலாம். குழந்தைகளுக்கென்று தனிப் பிரிவும் இருக்கிறது. அங்கே குழந்தைகள் அமர்ந்து படிக்கலாம். பெற்றோர்களும் குழந்தைகளுக்குப் படித்துக் காட்டலாம். இந்தப் புத்தகக் கடையில் உறுப்பினர் ஆனால், வாங்குகிற புத்தகங்களில் பத்து சதவீதம் கழிவும், காபி கடையில் வாங்குகிற பதார்த்தங்களுக்குப் பத்து சதவீதம் கழிவும் உண்டு. மேலும் அவ்வப்போது சிறப்புச் சலுகைகளும் உண்டு. உறுப்பினர் கட்டணம் என்று வருடத்திற்கு 25 டாலர்கள் வசூலிக்கிறார்கள். உறுப்பினர் அல்லாதவரும் தாராளமாக எந்தப் புத்தகத்தை வேண்டுமானாலும் எடுத்துப் படிக்கலாம். அதிலே பேதங்கள் ஏதுமில்லை. வசந்த கோடைக்காலங்களில் ஏழுநாள்களும் காலை 9 மணிமுதல் இரவு 11 மணிவரை திறந்திருக்கிறார்கள். குளிர்காலத்தில் சற்று சீக்கிரம் மூடிவிடுகிறார்கள். எவ்வளவு நேரம் கடை திறந்திருக்கும் என்கிற விவரம் ஊருக்கு ஊர் மாறுபடும் என்று நம்புகிறேன். தேவையானப் புத்தகங்களைத் தேடி எடுத்துத் தரவும், படித்துவிட்டு வைத்துவிடுகிற புத்தகங்களை எடுத்து மீண்டும் அடுக்கவும் முகம் சுளிக்காத பணியாளர்கள் இருக்கிறார்கள். நடக்க ஆரம்பித்திருக்கிற கைக்குழந்தைக்குப் படித்துக் காட்டுகிற புத்தகத்திலிருந்து எல்லா வயதினருக்குமான புத்தகங்களும் சஞ்சிகைகளும், எல்லாத் துறையினருக்குமான புத்தகங்களும் சஞ்சிகைகளும் துறைவாரியாகப் பெயர் போட்டு அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். புத்தகங்கள் மட்டுமில்லாமல் ஆடியோ கேசட்டுகள், சிடிக்கள் முதலியவையும் கிடைக்கும்.
அடிக்கடி குழந்தைகளுக்கு வாசித்தல் மற்றும் இலக்கியம் தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். கடந்த வெள்ளியன்று இரவு கூட "Indo American Poetic Society" சார்பில் தேசியக் கவிதை மாதம் எங்களுக்கு அருகிலிருந்த ஒரு பார்ன்ஸ் & நோபள் புத்தகக் கடையில் கொண்டாடப்பட்டது. "சர்வபாஷா சரஸ்வதி" என்று ஹிந்தியில் எழுதிய வாசகத்தினை மேடையில் வைத்து, சரஸ்வதி தேவியும் நியூயார்க் சுதந்திரத் தேவி சிலையும் இருக்கிற புகைப்படத்துக்கு மாலை போட்டு மரியாதை செய்து அவரவர் மொழியில் கவிதை வாசித்தார்கள். குஜராத்தில் இருந்து வந்திருந்த ஒரு நகைச்சுவை எழுத்தாளர் சிறப்புரையாற்றினார்; அவர் கவிதையை வாசித்தும் காட்டினார். கவிஞர்கள் தம் கவிதைகளை எந்த இந்திய மொழியில் அல்லது ஆங்கிலத்தில் வேண்டுமானாலும் வாசிக்கலாம் என்று சொன்னார்கள். வந்தவர்கள் பெரும்பாலும் குஜராத்திக் கவிதைகளையும் அவற்றின் ஆங்கில மொழியாக்கங்களையும் வாசித்தார்கள். நானும் ஆசாரகீனனும் அடுத்தமுறை வரும்போது தமிழை அறிமுகப்படுத்தி AK ராமானுஜத்தின் Hyms for the Drowning-ல் இருந்து சில கவிதைகளையோ அல்லது ஞானக்கூத்தன் போன்ற கவிஞர்களின் சில கவிதைகளை மொழிபெயர்த்தோ, வாசிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
இந்தப் புத்தகக் கடையினுள் நுழைந்து அங்கிருக்கிறப் புத்தகங்களைப் பார்க்கிற பரவசத்துக்கும் ஆனந்தத்துக்கும் எல்லையில்லை. பரவசத்துடன் நமக்குள் இனம்புரியாத எளிமையும் ஊடுருவும். நயாகரா நீர் வீழ்ச்சியின் பிரம்மாண்டத்தையும் சத்தத்தையும் அருகில் நின்றுப் பார்த்துக் கேட்ட போதும், அட்லாண்டிக் மகாசமுத்திரத்தின் நடுவில் கையில் தூண்டிலைப் பிடித்துக் கொண்டு நின்று ஆழ்கடலின் அமைதியை உள்வாங்கிக் கொண்ட போதும் என்னுள் நான் கண்டுகொண்ட பரவசமும் எளிமையும் அவை. எத்தனை வகைகள், எவ்வளவு புத்தகங்கள். இன்னும் படிக்க வேண்டியதும் கற்க வேண்டியதும் எவ்வளவு எவ்வளவு!
வாரவிடுமுறை வந்துவிட்டாலே இப்போதெல்லாம் குழந்தைகள் பார்ன்ஸ் & நோபள் என்று ராகமாகப் பாடிக் கேட்க ஆரம்பித்து விடுகிறார்கள். அதனால் பெரும்பாலும் வார விடுமுறையின் ஒரு நாளில் பாதியையாவது இங்கே பயனுள்ள முறையில் செலவிடுகிறோம். குடும்பமே சேர்ந்து படிப்பதும் ஒரு வித்தியாசமான அனுபவம்தான்.
அமெரிக்காவை முதலாளித்துவ நாடு என்றும் மோசமான நாடு என்றும் சொல்கிறார்கள். இருக்கலாம். ஆனாலும், இங்கேயும் எவ்வளவோ நல்ல விஷயங்கள் உள்ளன. இந்தப் புத்தகக் கடை நடத்துபவர்கள் இலவசமாக அனைவரையும் படிக்க அனுமதிப்பதால், புத்தகம் வியாபாரமாகாமல் தேங்கி விடும் என்று நினைக்காமல், யார் வேண்டுமானாலும் எந்தப் புத்தகத்தை/சஞ்சிகையை வேண்டுமானாலும் எடுத்து எவ்வளவு நேரமானாலும் படிக்கலாம் என்று அனுமதித்திருப்பது முதலாளித்துவ தொழில்முனைவோரின் சிறப்பே.
உதாரணமாக, என்னையே எடுத்துக் கொண்டால் - நான் இங்கே ஆண்டு உறுப்பினன். இங்கே இலவசமாகப் படிக்கக் கிடைப்பதனால் உண்டாகியிருக்கிற அபிமானத்தால் என் புத்தகங்களை முடிந்தவரை இங்கேயே வாங்குகிறேன் - சில நேரங்களில் ஓரிரு டாலர்கள் போட்டியாளர்களை விட விலை அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை என்று உவந்து தருகிறேன். கெண்டையைப் போட்டு விறால் மீன் (நண்பர் ராஜா, அவர்கள் ஊர்ப் பக்கம் கொடுவா மீன் என்று சொல்வார்கள் என்கிறார்) பிடிப்பது என்று எங்கள் ஊர்ப் பக்கம் சொல்வார்கள். அந்த மாதிரி, தன் புத்தகங்களையும் சஞ்சிகைகளையும் அனைவரையும் இலவசமாகப் படிக்க அழைத்து இத்தகைய வியாபாரங்கள் வெற்றிகரமாகச் செயல்படுகின்றன.
இந்த வாசிப்பு அனுபவத்தை நண்பர்களுடனும் செய்யலாம். என்ன படிக்கிறோம் என்று நமக்குள் விவாதித்துக் கொள்ள இயலும். பெரும்பாலான நேரங்களில் நண்பர் ஆசாரகீனனும் நானும் அருகருகே அமர்ந்து படித்தும் பேசியும் கொண்டிருப்பது நல்ல அனுபவம். எந்தப் புத்தகம் எப்படி என்று பரஸ்பரம் உடனடியாகப் பகிர்ந்து கொள்ளவும் உதவுகிறது. ஆசாரகீனன் அவர் தொழில் சார்ந்த ஒரு புத்தகம், அவர் ஆர்வம் சார்ந்த ஒரு புத்தகம் என்று மாற்றி மாற்றிப் படிப்பார். எனக்குத் தொழில் புரியும் இடத்தை விட்டு நீங்கியதுமே தொழில் மறந்துவிடும். அடுத்த முறை வேலைக்கான நேர்முகத் தேர்வுக்குத் தேவையென்றால் மட்டுமே தொழில் சார்ந்த புத்தகங்கள் பக்கம் பார்வை செலுத்துவேன். மற்ற நேரங்களில் ஆர்வம் சார்ந்த புத்தகங்கள்தான். ஒவ்வொரு முறையும் அந்தக் கடையை விட்டு வெளியே வரும்போதும் குழந்தைகள் தாங்கள் படித்தப் புத்தகங்கள் அல்லது பக்கங்களின் எண்ணிக்கையை உற்சாகமாகச் சொல்லும்போது என் மனமும் எவ்வளவு படித்தோம் என்று அசைபோட்டுக் கொள்ளும். அப்போது கிடைக்கிற மனதிருப்தி அபரிதமானது.
தற்போது படித்துக் கொண்டிருக்கிற புத்தகம் Dan Brown எழுதிய The Da Vinci Code. ஏறக்குறைய 450 பக்கங்கள். இந்தப் புத்தகத்தின் வரலாற்றுப் பின்புலம் எனக்கு மிகவும் ஆர்வமளிக்கிறது. கத்தோலிக்கர்களைப் பற்றியும், போப்பைப் பற்றியுமான எதிர்மறையான வரலாற்றுத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட புத்தகம் இது. அடிப்படையில் வரலாற்றுப் புன்புலத்துடன் கூடிய திரில்லர்தான். இரண்டு முறை சென்று அங்கேயே படித்தும் 150 பக்கங்கள் வரை மட்டுமே படிக்க முடிந்தது. நான் மிகவும் மெதுவாகப் படிப்பவன். எனவே, புத்தகத்தை வாங்கி விட்டேன். படித்து முடித்ததும் எழுதுகிறேன். இந்த மாதிரி ஒரு புத்தகத்தை இந்து மதம் குறித்தோ, தமிழ்ச் சைவர்கள் சமணர்களைக் கழுவேற்றியது குறித்தோ எழுத இயலுமா என்பது படிக்கும்போதே என் மனதுள் ஓடிக் கொண்டிருக்கிற கேள்வி. சுஜாதாவின் கதை மாந்தர் ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சார்ந்தவர் என்கிற பொருள்பட்டதுமே, எதிர்ப்புகள் தெரிவித்து அந்தக் கதையை மேலும் தொடர விடாமல் நிறுத்திய சமூகம் தமிழ்ச் சமூகம் என்பதும் நினைவுக்கு வருகிறது. உணர்வுவயப்படாமல் விஷயங்களை எதிர்கொள்வதிலும் ஏற்றுக் கொள்வதிலும் இந்தியர்களும் தமிழர்களும் கடக்க வேண்டிய தொலைவு அதிகம்தான்.
உள்ளேயே காபி மற்றும் ஸ்நாக்ஸ் சாப்பிட மிகவும் பிரபலமான Starbucks காபிக் கடை இருக்கிறது. காபியையும் ஸ்நாக்ஸையும் படிக்கிற இடத்திற்கே எடுத்துச் சென்றும் சாப்பிடலாம். குழந்தைகளுக்கென்று தனிப் பிரிவும் இருக்கிறது. அங்கே குழந்தைகள் அமர்ந்து படிக்கலாம். பெற்றோர்களும் குழந்தைகளுக்குப் படித்துக் காட்டலாம். இந்தப் புத்தகக் கடையில் உறுப்பினர் ஆனால், வாங்குகிற புத்தகங்களில் பத்து சதவீதம் கழிவும், காபி கடையில் வாங்குகிற பதார்த்தங்களுக்குப் பத்து சதவீதம் கழிவும் உண்டு. மேலும் அவ்வப்போது சிறப்புச் சலுகைகளும் உண்டு. உறுப்பினர் கட்டணம் என்று வருடத்திற்கு 25 டாலர்கள் வசூலிக்கிறார்கள். உறுப்பினர் அல்லாதவரும் தாராளமாக எந்தப் புத்தகத்தை வேண்டுமானாலும் எடுத்துப் படிக்கலாம். அதிலே பேதங்கள் ஏதுமில்லை. வசந்த கோடைக்காலங்களில் ஏழுநாள்களும் காலை 9 மணிமுதல் இரவு 11 மணிவரை திறந்திருக்கிறார்கள். குளிர்காலத்தில் சற்று சீக்கிரம் மூடிவிடுகிறார்கள். எவ்வளவு நேரம் கடை திறந்திருக்கும் என்கிற விவரம் ஊருக்கு ஊர் மாறுபடும் என்று நம்புகிறேன். தேவையானப் புத்தகங்களைத் தேடி எடுத்துத் தரவும், படித்துவிட்டு வைத்துவிடுகிற புத்தகங்களை எடுத்து மீண்டும் அடுக்கவும் முகம் சுளிக்காத பணியாளர்கள் இருக்கிறார்கள். நடக்க ஆரம்பித்திருக்கிற கைக்குழந்தைக்குப் படித்துக் காட்டுகிற புத்தகத்திலிருந்து எல்லா வயதினருக்குமான புத்தகங்களும் சஞ்சிகைகளும், எல்லாத் துறையினருக்குமான புத்தகங்களும் சஞ்சிகைகளும் துறைவாரியாகப் பெயர் போட்டு அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். புத்தகங்கள் மட்டுமில்லாமல் ஆடியோ கேசட்டுகள், சிடிக்கள் முதலியவையும் கிடைக்கும்.
அடிக்கடி குழந்தைகளுக்கு வாசித்தல் மற்றும் இலக்கியம் தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். கடந்த வெள்ளியன்று இரவு கூட "Indo American Poetic Society" சார்பில் தேசியக் கவிதை மாதம் எங்களுக்கு அருகிலிருந்த ஒரு பார்ன்ஸ் & நோபள் புத்தகக் கடையில் கொண்டாடப்பட்டது. "சர்வபாஷா சரஸ்வதி" என்று ஹிந்தியில் எழுதிய வாசகத்தினை மேடையில் வைத்து, சரஸ்வதி தேவியும் நியூயார்க் சுதந்திரத் தேவி சிலையும் இருக்கிற புகைப்படத்துக்கு மாலை போட்டு மரியாதை செய்து அவரவர் மொழியில் கவிதை வாசித்தார்கள். குஜராத்தில் இருந்து வந்திருந்த ஒரு நகைச்சுவை எழுத்தாளர் சிறப்புரையாற்றினார்; அவர் கவிதையை வாசித்தும் காட்டினார். கவிஞர்கள் தம் கவிதைகளை எந்த இந்திய மொழியில் அல்லது ஆங்கிலத்தில் வேண்டுமானாலும் வாசிக்கலாம் என்று சொன்னார்கள். வந்தவர்கள் பெரும்பாலும் குஜராத்திக் கவிதைகளையும் அவற்றின் ஆங்கில மொழியாக்கங்களையும் வாசித்தார்கள். நானும் ஆசாரகீனனும் அடுத்தமுறை வரும்போது தமிழை அறிமுகப்படுத்தி AK ராமானுஜத்தின் Hyms for the Drowning-ல் இருந்து சில கவிதைகளையோ அல்லது ஞானக்கூத்தன் போன்ற கவிஞர்களின் சில கவிதைகளை மொழிபெயர்த்தோ, வாசிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
இந்தப் புத்தகக் கடையினுள் நுழைந்து அங்கிருக்கிறப் புத்தகங்களைப் பார்க்கிற பரவசத்துக்கும் ஆனந்தத்துக்கும் எல்லையில்லை. பரவசத்துடன் நமக்குள் இனம்புரியாத எளிமையும் ஊடுருவும். நயாகரா நீர் வீழ்ச்சியின் பிரம்மாண்டத்தையும் சத்தத்தையும் அருகில் நின்றுப் பார்த்துக் கேட்ட போதும், அட்லாண்டிக் மகாசமுத்திரத்தின் நடுவில் கையில் தூண்டிலைப் பிடித்துக் கொண்டு நின்று ஆழ்கடலின் அமைதியை உள்வாங்கிக் கொண்ட போதும் என்னுள் நான் கண்டுகொண்ட பரவசமும் எளிமையும் அவை. எத்தனை வகைகள், எவ்வளவு புத்தகங்கள். இன்னும் படிக்க வேண்டியதும் கற்க வேண்டியதும் எவ்வளவு எவ்வளவு!
வாரவிடுமுறை வந்துவிட்டாலே இப்போதெல்லாம் குழந்தைகள் பார்ன்ஸ் & நோபள் என்று ராகமாகப் பாடிக் கேட்க ஆரம்பித்து விடுகிறார்கள். அதனால் பெரும்பாலும் வார விடுமுறையின் ஒரு நாளில் பாதியையாவது இங்கே பயனுள்ள முறையில் செலவிடுகிறோம். குடும்பமே சேர்ந்து படிப்பதும் ஒரு வித்தியாசமான அனுபவம்தான்.
அமெரிக்காவை முதலாளித்துவ நாடு என்றும் மோசமான நாடு என்றும் சொல்கிறார்கள். இருக்கலாம். ஆனாலும், இங்கேயும் எவ்வளவோ நல்ல விஷயங்கள் உள்ளன. இந்தப் புத்தகக் கடை நடத்துபவர்கள் இலவசமாக அனைவரையும் படிக்க அனுமதிப்பதால், புத்தகம் வியாபாரமாகாமல் தேங்கி விடும் என்று நினைக்காமல், யார் வேண்டுமானாலும் எந்தப் புத்தகத்தை/சஞ்சிகையை வேண்டுமானாலும் எடுத்து எவ்வளவு நேரமானாலும் படிக்கலாம் என்று அனுமதித்திருப்பது முதலாளித்துவ தொழில்முனைவோரின் சிறப்பே.
உதாரணமாக, என்னையே எடுத்துக் கொண்டால் - நான் இங்கே ஆண்டு உறுப்பினன். இங்கே இலவசமாகப் படிக்கக் கிடைப்பதனால் உண்டாகியிருக்கிற அபிமானத்தால் என் புத்தகங்களை முடிந்தவரை இங்கேயே வாங்குகிறேன் - சில நேரங்களில் ஓரிரு டாலர்கள் போட்டியாளர்களை விட விலை அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை என்று உவந்து தருகிறேன். கெண்டையைப் போட்டு விறால் மீன் (நண்பர் ராஜா, அவர்கள் ஊர்ப் பக்கம் கொடுவா மீன் என்று சொல்வார்கள் என்கிறார்) பிடிப்பது என்று எங்கள் ஊர்ப் பக்கம் சொல்வார்கள். அந்த மாதிரி, தன் புத்தகங்களையும் சஞ்சிகைகளையும் அனைவரையும் இலவசமாகப் படிக்க அழைத்து இத்தகைய வியாபாரங்கள் வெற்றிகரமாகச் செயல்படுகின்றன.
இந்த வாசிப்பு அனுபவத்தை நண்பர்களுடனும் செய்யலாம். என்ன படிக்கிறோம் என்று நமக்குள் விவாதித்துக் கொள்ள இயலும். பெரும்பாலான நேரங்களில் நண்பர் ஆசாரகீனனும் நானும் அருகருகே அமர்ந்து படித்தும் பேசியும் கொண்டிருப்பது நல்ல அனுபவம். எந்தப் புத்தகம் எப்படி என்று பரஸ்பரம் உடனடியாகப் பகிர்ந்து கொள்ளவும் உதவுகிறது. ஆசாரகீனன் அவர் தொழில் சார்ந்த ஒரு புத்தகம், அவர் ஆர்வம் சார்ந்த ஒரு புத்தகம் என்று மாற்றி மாற்றிப் படிப்பார். எனக்குத் தொழில் புரியும் இடத்தை விட்டு நீங்கியதுமே தொழில் மறந்துவிடும். அடுத்த முறை வேலைக்கான நேர்முகத் தேர்வுக்குத் தேவையென்றால் மட்டுமே தொழில் சார்ந்த புத்தகங்கள் பக்கம் பார்வை செலுத்துவேன். மற்ற நேரங்களில் ஆர்வம் சார்ந்த புத்தகங்கள்தான். ஒவ்வொரு முறையும் அந்தக் கடையை விட்டு வெளியே வரும்போதும் குழந்தைகள் தாங்கள் படித்தப் புத்தகங்கள் அல்லது பக்கங்களின் எண்ணிக்கையை உற்சாகமாகச் சொல்லும்போது என் மனமும் எவ்வளவு படித்தோம் என்று அசைபோட்டுக் கொள்ளும். அப்போது கிடைக்கிற மனதிருப்தி அபரிதமானது.
தற்போது படித்துக் கொண்டிருக்கிற புத்தகம் Dan Brown எழுதிய The Da Vinci Code. ஏறக்குறைய 450 பக்கங்கள். இந்தப் புத்தகத்தின் வரலாற்றுப் பின்புலம் எனக்கு மிகவும் ஆர்வமளிக்கிறது. கத்தோலிக்கர்களைப் பற்றியும், போப்பைப் பற்றியுமான எதிர்மறையான வரலாற்றுத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட புத்தகம் இது. அடிப்படையில் வரலாற்றுப் புன்புலத்துடன் கூடிய திரில்லர்தான். இரண்டு முறை சென்று அங்கேயே படித்தும் 150 பக்கங்கள் வரை மட்டுமே படிக்க முடிந்தது. நான் மிகவும் மெதுவாகப் படிப்பவன். எனவே, புத்தகத்தை வாங்கி விட்டேன். படித்து முடித்ததும் எழுதுகிறேன். இந்த மாதிரி ஒரு புத்தகத்தை இந்து மதம் குறித்தோ, தமிழ்ச் சைவர்கள் சமணர்களைக் கழுவேற்றியது குறித்தோ எழுத இயலுமா என்பது படிக்கும்போதே என் மனதுள் ஓடிக் கொண்டிருக்கிற கேள்வி. சுஜாதாவின் கதை மாந்தர் ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சார்ந்தவர் என்கிற பொருள்பட்டதுமே, எதிர்ப்புகள் தெரிவித்து அந்தக் கதையை மேலும் தொடர விடாமல் நிறுத்திய சமூகம் தமிழ்ச் சமூகம் என்பதும் நினைவுக்கு வருகிறது. உணர்வுவயப்படாமல் விஷயங்களை எதிர்கொள்வதிலும் ஏற்றுக் கொள்வதிலும் இந்தியர்களும் தமிழர்களும் கடக்க வேண்டிய தொலைவு அதிகம்தான்.
தொல்லைகாட்சித் தொடர்கள்
தமிழ்த் தொலைகாட்சிகளின் மெகாசீரியல்கள் தமிழர்களின் ஆயுளை விழுங்கிக் கொண்டிருக்கின்றன எனலாம். சன் டிவியில் சீரியல்கள் பக்கமே எங்கள் வீட்டில் யாரும் போவதில்லை. வேறு சில நிகழ்ச்சிகளை என் குடும்பத்தினரும் நானும் தொடர்ந்து இல்லாமல் அவ்வப்போது பார்ப்பதுண்டு. ஆனாலும், தமிழ் தொலைகாட்சித் தொடர்கள் இங்கும் பிரபலம்தான். அதைப் பார்த்துவிட்டுத் தூங்கப் போகிறவர்களையும், பார்க்க முடியாவிட்டால் ரெகார்ட் செய்து பின்னர் பார்ப்பவர்களையும் நான் அறிவேன். தமிழர்கள் சந்திக்கிற இடங்களில் பேசப்படுகிற விஷயங்களில் தமிழ்த் தொலைகாட்சித் தொடர்களும் ஒன்று. பீட்ஸாவும் அமெரிக்க கலாசாரமும் தமிழ்நாட்டைக் கலக்கிக் கொண்டிருக்கிறது என்பதற்குப் பதிலாக தமிழ்த் தொலைகாட்சி அமெரிக்காவில் மெகாசீரியல்களைப் பரப்பிப் பழிதீர்த்துக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். எப்போதாவது சேனல்களை மாற்றும்போதோ என்னதான் நடக்கிறது என்று பார்க்கலாம் என்று சில நிமிடங்கள் பார்க்கும்போதோ கிடைக்கிற தொலைகாட்சித் தொடர்கள் படு திராபையாக உள்ளன. நடிப்பு, செட், கதை, வசனம், இயக்கம் அனைத்தும் மேடை நாடகங்களின் தொனியிலும், அரைவேக்காட்டுத்தனமாகவும் இருக்கின்றன. பக்தி மணம் கமழவிட்டு பார்ப்பவரை சாமியாட வைக்கிற சீரியல்கள் இன்னமும் வருகின்றன. மணல் பரப்பில் தொலைந்துபோன குண்டுமணி போல ஓரிரண்டு நல்ல அல்லது சுமாரான தொடர்களும் இருக்கக் கூடும். என்னுடைய அதிர்ஷ்டம் என் பார்வையில் அவை இதுவரை சிக்கவில்லை.
சில பிற இந்திய மொழித் தொலைகாட்சிகள் அமெரிக்காவில் வாழ்கிற அம்மொழி பேசுபவர்க்கென்று தனியே நிகழ்ச்சிகளைத் தயாரித்து ஒளிபரப்புகின்றன. சன் டிவி இதுவரை தமிழ்நாட்டில் ஒளிபரப்பும் நிகழ்ச்சிகளையே அப்படியே தருகிறது. இது இங்கே இருக்கிற தமிழர்களுக்குப் பெரிய குறையாக இன்னும் தெரியவில்லை எனலாம். சினிமா தொடர்பான ஒளிபரப்புகள் அல்லது மெகாசீரியல்கள் இரண்டும் இருக்கும் போது வேறு என்ன வித்தியாசமாக வேண்டும் தமிழர்களுக்கு. இடையிடையே சில நல்ல நிகழ்ச்சிகளும் வருகின்றன. எல்லாமே மோசமாக எங்கும் இருந்துவிட முடியாது அல்லவா?
தொலைகாட்சித் தொடர்களைப் பார்க்கும்போது - அமெரிக்கத் தொலைகாட்சித் தொடர்களில் இருந்து நம்மவர்கள் கற்றுக் கொள்வதற்கு நிறையவே இருக்கிறது என்று தோன்றுகிறது. கதை மாந்தரை அமெரிக்காவில் படிப்பவர்கள், பணிபுரிபவர்கள் என்று காட்டுவதில் மட்டுமே திருப்தியடைந்து விடுகிறார்கள் நம் திரைப்பட மற்றும் தொடர் இயக்குனர்கள். பீட்ஸா, ஷாப்பிங் மால், அமெரிக்க பிராண்ட் உடைகள், இன்னபிற அமெரிக்க நவநாகரீகங்கள் என்று அமெரிக்கர்களாய் வாழ விரும்புகிற தமிழ்ச் சமூகம் (இதில் என்னைப் பொருத்தவரை தவறேதுமில்லை!) இங்கே இருக்கிற sitcom-களிலிருந்து உருப்படியாகக் கற்றுக் கொண்டு தொலைகாட்சித் தொடர்களின் தரத்தை உயர்த்தலாம்.
1970க்குப் பிறகு அமெரிக்கத் தொலைகாட்சித் தொடர்களில் எதிர்பார்க்கப்படுவன என்று ஒரு பட்டியலைப் படித்தேன். அவை, 1. தொடர்கள் நகைச்சுவை நிரம்பியவாக மட்டும் இல்லாமல், கருத்தளவில் முக்கியமானவையாகவும் இருக்க வேண்டும். 2. சர்ச்சைக்குரிய பொருளைப் பற்றிப் பேச வேண்டும். 3. சமூக முன்னேற்றத்தை - வாழ்க்கையில், கலாசாரத்தில், நாகரீகத்தில், மதிப்பீடுகளில், பொருளாதாரத்தில், அரசியலில் என்று பலவகையான நடைமுறை சமூகப் போக்குகளை - ஆவணப்படுத்துவதாக இருக்க வேண்டும். 4. அவற்றில் அங்கதம் (sattire) இருக்க வேண்டும். 5. அவற்றிற்கு ஒரு நோக்கம் (mission) இருக்க வேண்டும் - எதைப் பற்றியாவது அவை பேச வேண்டும் - அல்லது எதைப்பற்றியும் பேசப்போவதில்லை என்கிற ஒன்றைப் பற்றியாவது பேச வேண்டும் - Seinfeld போல.
அமெரிக்கத் தொலைகாட்சித் தொடர்களில் எதிர்பார்க்கப்படுகிற விஷயங்களை தொலைகாட்சிகளும் அவற்றின் தொடர் இயக்குனர்களும் இந்த அளவிற்கு அறிந்து வைத்திருந்தது படிக்கும்போது ஆச்சரியமளிக்கவில்லை. பார்ப்பவர்களை ஓ போட்டு ரசிக்க வைத்து பணம் பண்ணுகிற நேர்த்தியான வழிகளை அமெரிக்கத் தொழில்முனைவோர்க்கு யாரும் சொல்லித்தர வேண்டியதில்லை. தமிழ் தொலைகாட்சித் தொடர்களுக்கு இந்த மாதிரி ஏதும் பொதுவான கூறுகள் இருக்கின்றனவா அல்லது இருக்க வேண்டும் என்று முயற்சிகள் எடுக்கப்படுகின்றனவா என்பதை சம்பந்தப்பட்டவர்கள் ஆராய வேண்டும். இல்லையென்றால், குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டு "உலகத் தொலைகாட்சிகளில் முதன்முறையாக" என்று கத்திக் கொண்டு, நம்மை நாமே தட்டிப் பாராட்டிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.
சில பிற இந்திய மொழித் தொலைகாட்சிகள் அமெரிக்காவில் வாழ்கிற அம்மொழி பேசுபவர்க்கென்று தனியே நிகழ்ச்சிகளைத் தயாரித்து ஒளிபரப்புகின்றன. சன் டிவி இதுவரை தமிழ்நாட்டில் ஒளிபரப்பும் நிகழ்ச்சிகளையே அப்படியே தருகிறது. இது இங்கே இருக்கிற தமிழர்களுக்குப் பெரிய குறையாக இன்னும் தெரியவில்லை எனலாம். சினிமா தொடர்பான ஒளிபரப்புகள் அல்லது மெகாசீரியல்கள் இரண்டும் இருக்கும் போது வேறு என்ன வித்தியாசமாக வேண்டும் தமிழர்களுக்கு. இடையிடையே சில நல்ல நிகழ்ச்சிகளும் வருகின்றன. எல்லாமே மோசமாக எங்கும் இருந்துவிட முடியாது அல்லவா?
தொலைகாட்சித் தொடர்களைப் பார்க்கும்போது - அமெரிக்கத் தொலைகாட்சித் தொடர்களில் இருந்து நம்மவர்கள் கற்றுக் கொள்வதற்கு நிறையவே இருக்கிறது என்று தோன்றுகிறது. கதை மாந்தரை அமெரிக்காவில் படிப்பவர்கள், பணிபுரிபவர்கள் என்று காட்டுவதில் மட்டுமே திருப்தியடைந்து விடுகிறார்கள் நம் திரைப்பட மற்றும் தொடர் இயக்குனர்கள். பீட்ஸா, ஷாப்பிங் மால், அமெரிக்க பிராண்ட் உடைகள், இன்னபிற அமெரிக்க நவநாகரீகங்கள் என்று அமெரிக்கர்களாய் வாழ விரும்புகிற தமிழ்ச் சமூகம் (இதில் என்னைப் பொருத்தவரை தவறேதுமில்லை!) இங்கே இருக்கிற sitcom-களிலிருந்து உருப்படியாகக் கற்றுக் கொண்டு தொலைகாட்சித் தொடர்களின் தரத்தை உயர்த்தலாம்.
1970க்குப் பிறகு அமெரிக்கத் தொலைகாட்சித் தொடர்களில் எதிர்பார்க்கப்படுவன என்று ஒரு பட்டியலைப் படித்தேன். அவை, 1. தொடர்கள் நகைச்சுவை நிரம்பியவாக மட்டும் இல்லாமல், கருத்தளவில் முக்கியமானவையாகவும் இருக்க வேண்டும். 2. சர்ச்சைக்குரிய பொருளைப் பற்றிப் பேச வேண்டும். 3. சமூக முன்னேற்றத்தை - வாழ்க்கையில், கலாசாரத்தில், நாகரீகத்தில், மதிப்பீடுகளில், பொருளாதாரத்தில், அரசியலில் என்று பலவகையான நடைமுறை சமூகப் போக்குகளை - ஆவணப்படுத்துவதாக இருக்க வேண்டும். 4. அவற்றில் அங்கதம் (sattire) இருக்க வேண்டும். 5. அவற்றிற்கு ஒரு நோக்கம் (mission) இருக்க வேண்டும் - எதைப் பற்றியாவது அவை பேச வேண்டும் - அல்லது எதைப்பற்றியும் பேசப்போவதில்லை என்கிற ஒன்றைப் பற்றியாவது பேச வேண்டும் - Seinfeld போல.
அமெரிக்கத் தொலைகாட்சித் தொடர்களில் எதிர்பார்க்கப்படுகிற விஷயங்களை தொலைகாட்சிகளும் அவற்றின் தொடர் இயக்குனர்களும் இந்த அளவிற்கு அறிந்து வைத்திருந்தது படிக்கும்போது ஆச்சரியமளிக்கவில்லை. பார்ப்பவர்களை ஓ போட்டு ரசிக்க வைத்து பணம் பண்ணுகிற நேர்த்தியான வழிகளை அமெரிக்கத் தொழில்முனைவோர்க்கு யாரும் சொல்லித்தர வேண்டியதில்லை. தமிழ் தொலைகாட்சித் தொடர்களுக்கு இந்த மாதிரி ஏதும் பொதுவான கூறுகள் இருக்கின்றனவா அல்லது இருக்க வேண்டும் என்று முயற்சிகள் எடுக்கப்படுகின்றனவா என்பதை சம்பந்தப்பட்டவர்கள் ஆராய வேண்டும். இல்லையென்றால், குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டு "உலகத் தொலைகாட்சிகளில் முதன்முறையாக" என்று கத்திக் கொண்டு, நம்மை நாமே தட்டிப் பாராட்டிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.
Subscribe to:
Posts (Atom)